புதன், 21 டிசம்பர், 2022

செஞ்சி அருகே சம்பா சாகுபடிக்கு தயாராக இருந்த 1200 ஏக்கர் பொன்னி நெல் நெற்பயிர்கள் கடும் பனிப்பொழிவு காரணமாக பூச்சி தாக்குதல் - அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் ஆய்வு ..!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் கெங்கவரம் கிராமத்தில் சுமார் 1200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள சீரக சம்பா மற்றும் பொன்னி நெல் நெற்பயிர்கள் சாகுபடிக்கு தயாராக இருந்தன. இந்த நிலையில் நெற்பயிர்கள் அனைத்தும் கடும் பனிப்பொழிவு காரணமாக திடீர் பூச்சி கொல்லி நோய் தாக்கி பயிர்சேதம் அடைந்தன. இந்த நிலையில் கெங்கவரம் கிராமத்தில் சாகுபடிக்கு தயாராக இருந்த 1200 நெற்பயிர்களில் பூச்சுதாக்கியதை இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில், சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் விவசாய விளைநிலங்களுக்கு சென்று நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்,
பின்னர், பூச்சிக்கொல்லி மருந்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேளாண்துறை அலுவலரிடம், இது குறித்து கேட்டு அறிந்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார், தொடர்ந்து விவசாயிகள் குறைகளைக் கேட்டறிந்து தமிழக அரசின் சார்பில் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இந்த ஆய்வின்போது வேளாண் துறை அதிகாரிகள், வட்டாட்சியர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: