Tamilnadu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Tamilnadu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 28 பிப்ரவரி, 2024

தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தல்: ஆடியோ - வீடியோவில் உண்மையில்லை...!

தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தல்: ஆடியோ - வீடியோவில் உண்மையில்லை...!

🚨POLICE CHECK🚨

🔍  தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தல் வீடியோ உண்மையில்லை...

தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தல் என பரப்பப்படும் இந்த வீடியோக்கள் உண்மையில்லை தமிழக அரசு உண்மை சரிபார்ப்பு குழு அறிவிப்பு

தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தல் என பரப்பப்படும் இந்த வீடியோக்களை நம்பவோ, பரப்பவோ வேண்டாம் என 'உண்மை சரிபார்ப்புக் குழு' வீடியோ வெளியிட்டுள்ளது

மேலும் தவறான தகவல்களைப் பரப்புவது குற்றச் செயலாகும் எனவும் கேட்டுகொள்கின்றது.

தற்போது வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ ஒன்று குழந்தைகளை கடத்தி உறுப்புகளை விற்கின்றார்கள் என சில வீடியோக்களின் தொகுப்பை ஒன்றினைத்து பரப்பி வருகின்றார்கள்

ஆனால் அந்த வீடியோக்கள் பல்வேறு காலகட்டத்தில் பல நாட்டில் இருந்தும் வெளிமாநிலங்களில் விபத்துகளின் நடந்த சில வீடியோக்கள் ஆகும்.

எனவே யாரும் அதனை நம்பவேண்டாம் என தமிழக அரசின் உண்மை சரிபார்க்கும் குழு வீடியோ வெளியிட்டுள்ளது.

🔍 தமிழக அரசு உண்மை சரிபார்ப்பு குழு அறிவிப்பு.

மேலும் இது சம்மந்தமாக தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்.. சமீப காலமாக சில நபர்கள். குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொலிகள் சமூக வலைதளங்களில் வேமாக பரவி வருவதை காண முடிகிறது. 

இதுபோன்ற காணொலிகள் மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்க வேண்டுமென்ற பிரதான எண்ணத்துடனும், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்துடனும் பரப்பப்பட்டு வருகின்றன என்பதினை சென்னை பெருநகர காவல் உறுதிபட தெரிவித்து கொள்கிறது.

இதுபோன்ற போலியான செய்திகளை கேட்டோ, காணொலிகளை பார்த்தோ பொதுமக்கள் துளியும் அச்சப்படவோ, பதற்றமடையவோ தேவையில்லை என்று சென்னை பெருநகர காவல் துறை பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது. பொதுமக்களுக்கு இதுசம்பந்தமாக ஏதாவது சந்தேகம் இருப்பின் அல்லது உதவி தேவைப்பட்டால் சென்னை பெருநகர காவல் துறை உதவி எண் 100 அல்லது 112 கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இதுபோன்ற பொய்யான செய்திகளை பரப்புவோர் உடனடியாக இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், மீறினால் அத்தகையோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை பெருநகர காவல் துறை எச்சரிக்கிறது.

செவ்வாய், 16 ஜனவரி, 2024

புதன், 20 டிசம்பர், 2023

அமைச்சர் பதவியை இழக்கிறார் பொன்முடி?: அடுத்த மூவ் என்ன?

அமைச்சர் பதவியை இழக்கிறார் பொன்முடி?: அடுத்த மூவ் என்ன?

சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து அவர் எம்எல்ஏ பதவியை இழந்துவிட்டதாக சட்டசபை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேல்முறையீடு செய்து இந்த தீர்ப்புக்கு தடை பெற்றால் மட்டுமே அவர் பதவியில் தொடர முடியும்.

கடந்த 2006-11ல் திமுக ஆட்சியின் போது, உயர்கல்வி மற்றும் கனிமவள அமைச்சராக பொன்முடி இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011ல் வழக்கு தொடரப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தீர்ப்பில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், இந்த வழக்கில் பொன்முடி, விசாலாட்சி இருவரும் குற்றவாளி என தீர்ப்பளித்தது.
அவர்களுக்கான தண்டனை விபரங்களை நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று (டிச.,21) அறிவித்தார்.

தீர்ப்பின் முழு விவரம்: பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும். மேல்முறையீடு செய்வதற்காக இந்த சிறை தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி அறிவித்தார். தண்டனையை குறைக்க வேண்டும் என விசாலாட்சி கோரிக்கை விடுத்த நிலையில், உச்சநீதிமன்றத்தை அணுகுமாறு நீதிபதி அறிவுறுத்தினார். மேலும் 30 நாட்கள் அவகாசம் முடிந்ததும் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராக வேண்டும். என்றும் உத்தரவிடப்பட்டது.

குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, தற்போது தண்டனையும் அறிவிக்கப்பட்டதால், பொன்முடி திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏ பதவியை இழந்துவிட்டதாக என சட்டசபை அதிகாரிகள் அறிவிப்பர். மேல்முறையீடு செய்து குற்றவாளி என்ற தீர்ப்புக்கு தடை பெற்றால் மட்டுமே பதவியில் தொடர முடியும். அதுவரை அவர் பதவியில் இருக்க முடியாது.

பொதுவாக 2 ஆண்டு சிறை என தீர்ப்பளிக்கப்பட்டால், அவர் எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை இழந்துவிடுவார்.

குற்றவாளி என அறிவிக்கப்பட்டதற்கு தடை பெற்றால் மட்டுமே பதவியில் தொடர முடியும்.

தீர்ப்பில் 3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டதால், அவர்கள் உச்சநீதிமன்றத்தில் தான் ஜாமின் பெற முடியும்.

இதற்காகவே, இருவருக்கும் மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால் தற்போதைக்கு அவர் சிறைக்கு செல்ல வேண்டியதில்லை.

சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் விரைவில் மேல்முறையீடு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

#ChennaiHC #MinisterPonmudi #Tirukkoyilur #DVAC
BREAKING NEWS | சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை - 50 லட்சம் ரூபாய் அபராதம் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

BREAKING NEWS | சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை - 50 லட்சம் ரூபாய் அபராதம் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு


BREAKING NEWS | சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை - 50 லட்சம் ரூபாய் அபராதம் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!

#அன்று ஜெ., இன்று பொன்முடி..! MLA பதவியும் பறிப்பு... காலியாகிறது திருக்கோவிலூர் தொகுதி..!

BREAKING NEWS | சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை - 50 லட்சம் ரூபாய் அபராதம் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!

அமைச்சர் பதவியை இழக்கிறார் பொன்முடி?: அடுத்த மூவ் என்ன? _________________________

சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து அவர் எம்எல்ஏ பதவியை இழந்துவிட்டதாக சட்டசபை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேல்முறையீடு செய்து இந்த தீர்ப்புக்கு தடை பெற்றால் மட்டுமே அவர் பதவியில் தொடர முடியும்.

கடந்த 2006-11ல் திமுக ஆட்சியின் போது, உயர்கல்வி மற்றும் கனிமவள அமைச்சராக பொன்முடி இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011ல் வழக்கு தொடரப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தீர்ப்பில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், இந்த வழக்கில் பொன்முடி, விசாலாட்சி இருவரும் குற்றவாளி என தீர்ப்பளித்தது.
அவர்களுக்கான தண்டனை விபரங்களை நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று (டிச.,21) அறிவித்தார்.

தீர்ப்பின் முழு விவரம்: பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும். மேல்முறையீடு செய்வதற்காக இந்த சிறை தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி அறிவித்தார். தண்டனையை குறைக்க வேண்டும் என விசாலாட்சி கோரிக்கை விடுத்த நிலையில், உச்சநீதிமன்றத்தை அணுகுமாறு நீதிபதி அறிவுறுத்தினார். மேலும் 30 நாட்கள் அவகாசம் முடிந்ததும் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராக வேண்டும். என்றும் உத்தரவிடப்பட்டது.

குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, தற்போது தண்டனையும் அறிவிக்கப்பட்டதால், பொன்முடி திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏ பதவியை இழந்துவிட்டதாக என சட்டசபை அதிகாரிகள் அறிவிப்பர். மேல்முறையீடு செய்து குற்றவாளி என்ற தீர்ப்புக்கு தடை பெற்றால் மட்டுமே பதவியில் தொடர முடியும். அதுவரை அவர் பதவியில் இருக்க முடியாது.

பொதுவாக 2 ஆண்டு சிறை என தீர்ப்பளிக்கப்பட்டால், அவர் எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை இழந்துவிடுவார்.

குற்றவாளி என அறிவிக்கப்பட்டதற்கு தடை பெற்றால் மட்டுமே பதவியில் தொடர முடியும்.

தீர்ப்பில் 3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டதால், அவர்கள் உச்சநீதிமன்றத்தில் தான் ஜாமின் பெற முடியும்.

இதற்காகவே, இருவருக்கும் மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால் தற்போதைக்கு அவர் சிறைக்கு செல்ல வேண்டியதில்லை.

சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் விரைவில் மேல்முறையீடு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

#ChennaiHC #MinisterPonmudi #Tirukkoyilur #DVAC

புதன், 13 டிசம்பர், 2023

கீழ்பவானி கால்வாயில் கான்க்ரீட் திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆயிரக்கணக்கான விவசாயிகள் நடைபயணம் : ஆட்சியரிடம் மனு

கீழ்பவானி கால்வாயில் கான்க்ரீட் திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆயிரக்கணக்கான விவசாயிகள் நடைபயணம் : ஆட்சியரிடம் மனு

கீழ்பவானி வாய்க்காலில் கான்க்ரீட் போடும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, ஆயிரக்கணக்கான விவசாயிகள் நடைபயணம் மேற்கொண்டு ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஈரோடு மாநகரத்தில் பரபரப்பு..!

ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்கள், கீழ் பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில், கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் போடும் திட்டத்தை ரத்து செய்ய கோரி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபயணம் மேற்கொண்டனர்.

ஈரோடு சங்கு நகர் பிரிவிலிருந்து, துவங்கிய நடைபயண நிகழ்ச்சிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு எம்எல்ஏவுமான ஈஸ்வரன் தலைமை வகித்தார்.


நடைபயணம் : ஈரோடு சங்கு நகர் பிரிவிலிருந்து துவங்கி பெருந்துறை சாலை, வழியாக சுமார் 3 கிமீ தூரம் பழையபாளையம், குமலன் குட்டை உள்ளிட்ட பகுதிகளை கடந்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை வந்தடைந்தது. அங்கு, கீழ்பவானி கால்வாயில் கான்க்ரீட் திட்டத்தை ரத்து செய்யக் கோரி கோஷம் எழுப்பினர்.

இதில், கீழ்பவானி பாசன விவசாயிகள் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி, கீழ்பவானி பாசன சபை பிரிவின் தலைவர் செங்கோட்டையன், தமிழ்நாடு சிறு மற்று குறு விவசாயிகள் சங்கம் தலைவர் சுதந்திர ராசு, பாஜக விவசாய அணி மாநில தலைவர் நாகராஜன், இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மற்றும் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்று, கீழ்பவானி கான்க்ரீட் திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.

செவ்வாய், 12 டிசம்பர், 2023

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா..! நலத்திட்ட உதவிகள் வழங்கி நலத்திட்ட நாளாக கொண்டாடிய  ரசிகர்கள்...!

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா..! நலத்திட்ட உதவிகள் வழங்கி நலத்திட்ட நாளாக கொண்டாடிய ரசிகர்கள்...!


நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா...! முதியவர்களுக்கு உணவளித்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கி நலத்திட்ட நாளாக கொண்டாடிய ரசிகர்கள்...!

Erode Rajinikanth’s Birthday Celebration |ரஜினி ரசிகர்கள் முதியோர்கள் இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு உணவளித்தும், ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி நலத்திட்ட நாளாக கொண்டாட்டம்..!

இந்திய சினிமாவில் வசூல் ஜாம்பவனாக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த், இன்று ( டிசம்பர் 12 ) தனது 73 - வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார், இவரின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள்  மன்றம் சார்பில் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் செய்தும், கோயில்களில் வழிபாடு செய்தும், கேக் வெட்டியும் ரசிகர்கள் ரஜினியின் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் ஈரோடு  மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற செயலாளர் M. சாம்ராஜ் தலைமையில், சூரம்பட்டி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது, சென்னிமலை சாலையில் உள்ள NL கருணை இல்லத்தில் முதியோர்களுக்கு  உணவு வழங்கி, கேக் வெட்டி, பட்டாசு வெடித்தும் கொண்டாடினர், 


இதனை தொடர்ந்து கொண்டாட்டத்தில், மாநகர செயலாளர் ராஜா(எ) மோகன் ராஜ், 1ஆம் மண்டலம் பட்டா ராம் குமார், மதிவாணன், 4 மண்டல செயலாளர் முத்துகுமார், ஜீவா மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

இன்றைய தினம் எங்களுக்கு இரட்டடிப்பு மகிழ்ச்சியை தலைவர் தந்துள்ளார் என உற்சாக மிகுதியுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரஜினி ரசிகர்கள்..!

கொண்டாட்டங்களை தொடர்ந்து ஸபா நியூஸ் தமிழுக்கு பிரத்யேக  பேட்டியளித்த ரஜினி ரசிகர்கள் ...

தலைவரின் பிறந்த நாளை இன்று நாள் முழுவதும் அதிகாலை முதல் இரவு வரை வெகு விமர்சையாக தீபாவளியைப் போல் கொண்டாடி வருகிறோம், இதனை நலத்திட்ட நாளாகவும் கொண்டாடுகிறோம், அந்த வகையில் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக ஏழை, எளியோர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை அளித்து வருவதும், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் ஆண்டுதோறும் ரத்த தானம் செய்வது, இன்று நாள் முழுவதுமே முதியவர்களுக்கு  உணவளிப்பது உள்ளிட்டவை வழங்கி வருகிறோம்,

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள லால் சலாம் படத்தினையும், 170 படத்தின் டீசர் வெளியாக உள்ள நிலையில், லால் சலாம் திரைப்படத்தையும், 170 படத்தின்  டீசரையும் மிகுந்த உற்சாகத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கிறோம், இன்றைய தினம் எங்களுக்கு இரட்டடிப்பு மகிழ்ச்சியை தலைவர் தந்துள்ளார் என உற்சாக மிகுதியுடன் மகிழ்ச்சிபட தெரிவித்த ரசிகர்கள்..!

ஞாயிறு, 3 டிசம்பர், 2023

சூறாவளி காற்றோடு இரவு வரை கன மழை நீடிக்கும்.! சென்னை மக்களுக்கு ஷாக் கொடுத்த வானிலை ஆய்வு மையம்

சூறாவளி காற்றோடு இரவு வரை கன மழை நீடிக்கும்.! சென்னை மக்களுக்கு ஷாக் கொடுத்த வானிலை ஆய்வு மையம்


வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சென்னைக்கு அருகே 110 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள நிலையில் இந்த புயலின் காரணமாக இன்று இரவு வரை பலத்த சூறாவளி காற்றோடு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக நேற்று தொடங்கிய மழையானது தொடர்ந்து நீடித்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது மின்சார ரயில் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து முடங்கியுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களை சுற்றி தண்ணீர் தேங்கி உள்ளதால் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் பயணிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது மேலும் பல இடங்களில் 4அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி இருப்பதால் சாலைப்போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. புயலின் காரணமாக பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் பல இடங்களில் மரங்கள் முறிந்து கீழே விழுந்து உள்ளது. மின் கம்பங்களும் பேனர்களும் காற்றினால் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதனிடைய புயல் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தென்மண்டல தலைவர் பால சந்திரன் கூறுகையில், மிக்ஜாம் புயல் சென்னைக்கு கிழக்கே வட கிழக்கு 110 கிலோமீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டு வருகிறது. இது தொடர்ந்து வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலு பெறக்கூடும். பின்னர் வட தமிழகம் தெற்கு ஆந்திராவை நோக்கி நாளை முற்பகல் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையை கடக்க கூடும். இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதியில் இன்று இரவு வரை காற்றோடு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

சனி, 4 நவம்பர், 2023

சிக்னல் கேப்பில் தத்ரூப மௌன நாடகம் - சாலையில் பயணிப்போரின் கவனத்தை ஈர்த்த கீதாஞ்சலி பள்ளி மாணவ மாணவிகள் ...!

சிக்னல் கேப்பில் தத்ரூப மௌன நாடகம் - சாலையில் பயணிப்போரின் கவனத்தை ஈர்த்த கீதாஞ்சலி பள்ளி மாணவ மாணவிகள் ...!

சிக்னல் கேப்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவ மாணவிகளின் தத்ரூப மௌன நாடகம் - சாலையில் பயணிப்போர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது ..!

ஈரோடு, திண்டல் கீதாஞ்சலி பள்ளி மாணவ, மாணவியரின் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஈரோட்டின் மையப்பகுதிகளான ஆட்சியர் அலுவலகம், பன்னீர் செல்வம் பூங்கா மற்றும் காளை மாடுசிலை ஆகிய பகுதிகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் நடைபெற்றது. 

கீதாஞ்சலி பள்ளியின் முதல்வர்  சுப்புலட்சுமி தலைமை தாங்கி விழிப்புணர்வு மௌன நாடகத்தை தொடங்கி வைத்தார், அப்பொழுது, தங்கள் வருகைக்காக காத்திருப்பவர்கள் முன்னால், மௌன நாடகம் (MIME) மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பறை முழங்க இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் மூன்று பேர் பயணித்து விபத்தில் சிக்கி உயிர் இழக்கும் நிலை, மது போதையில் இருசக்கர வாகனத்தை இயக்கி இருசக்கர வாகன ஓட்டிகள் பாதிக்கப்படும் நிலை, இதனால் ஏற்படும் உயிர் சேதம், பொருள் சேதம், பாதிப்பு உள்ளிட்டவைகளை தத்ரூபமாக மௌன நாடகம் மூலம் அரங்கேற்றினர்,  


ஈரோட்டின் மையப்பகுதிகளில் தனியார் பள்ளி மாணவ, மாணவியரின் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு மெளன நாடகம் - ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு பூங்கொத்து கொடுத்து உற்சாகப்படுத்திய மாணவிகள் ...!

மேலும், சாலைவிதிகைளைப் பயன்படுத்தி, சீட்பெல்ட் அணிந்தும், ஹெல்மெட் அணிந்தும் வந்த வாகன ஓட்டுகளுக்கு பூங்கொத்து வழங்கி ஊக்குவித்தனர், விதிகளை மீறியவர்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சிறிய வடிவிலான ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டன. இதில் 50 தனியார் மாணவ மாணவியர் மற்றும் 20 ஆசிரிய/ஆசிரியைகள் பங்கேற்றனர்.

செவ்வாய், 17 அக்டோபர், 2023

ஈரோடு மாவட்டத்தில் லியோ பட காட்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்த ஆட்சியர்..!

ஈரோடு மாவட்டத்தில் லியோ பட காட்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்த ஆட்சியர்..!


ஒரு நாளுக்கு 5 காட்சிகள் மட்டும் லியோ படம் திரையிட வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்...

அக்டோபர் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை, லியோ திரைப்படத்திற்கு ஒரு நாளுக்கு 5 காட்சிகள் மட்டும் திரையிட வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா செவ்வாய்க்கிழமை (இன்று) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ...

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் "லியோ" திரைப்படத்திற்கான ஒரு சிறப்புக் காட்சியை அக்டோபர் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை (அதாவது ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள்) தொடக்க காட்சி காலை 9 மணிக்கும் கடைசி காட்சியாக காலை 1.30 மணியளவில் முடிவடையும் வகையில் திரையிடப்பட வேண்டும்.

தமிழ்நாடு சினிமா (ஒழுங்குமுறை) விதிகள், 1957 விதிகளின்படி 14ஏ படிவம் "சி" உரிமத்தின் நிபந்தனையின்படி புதிய திரைப்படம் வெளியிடும் நிகழ்ச்சியின் போது, திரையரங்க உரிமையாளர்கள் முறையான போக்குவரத்து மற்றும் பார்க்கிங் வசதி செய்ய வேண்டும். திரையரங்குகளில் கூடுதல் காட்சி நடத்தப்படும் நேர்வில் சுகாதார குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏதும் ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

திரைப்படம் காண்போரின் போக்குவரத்து உள்வருதல், வெளியேறுதல் வாகனம் நிறுத்துதல் மற்றும் இயக்குதல் பாதிக்கப்படாத வகையிலும், காவல் துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பெறுவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும். மக்கள் மற்றும் பார்வையாளர்கள் சிரமமின்றி உள்ளே வரவும், சிரமமின்றி வெளியேறவும் இருக்கைகள் மற்றும் திரையரங்க வளாகத்தினை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.

திரையரங்குகளை சுகாதாரமாக பராமரிக்க போதுமான கால இடைவெளியுடன், உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிறப்பு காட்சி நடத்தப்பட வேண்டும். அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக நுழைவுக்கட்டணங்கள், வாகன நிறுத்தக்கட்டணம் வசூலிக்கக்கூடாது. திரையரங்குகள், மேற்படி விதிமுறைகளை மீறினால் தொலைபேசி எண் 0424-2260211 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 15 அக்டோபர், 2023

ஈரோடு ஆசனூர் சாலையில் சண்டையிட்ட காட்டுப் பன்றிகள்..!

ஈரோடு ஆசனூர் சாலையில் சண்டையிட்ட காட்டுப் பன்றிகள்..!

சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே காரப்பள்ளம் சோதனைச் சாவடியில் காட்டுப் பன்றிகள் சண்டையிட்ட காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என். பாளையம், கடம்பூர், தலமலை, விளாமுண்டி, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி, ஜீரஹள்ளி ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன. 1,411 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி, மான், செந்நாய், கழுதைப்புலி உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன.

இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் கர்நாடகா மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இச்சாலையில், ஆசனூர் அடுத்த காரப்பள்ளம் சோதனைச்சாவடி பகுதியில் வனப்பகுதியில் இருந்து உணவுக்காக வெளியே வரும் காட்டுப்பன்றிகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரிகின்றன.

இந்நிலையில், நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டுப் பன்றிகள் காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே நடமாடியது. பின்னர், இரண்டு காட்டுப் பன்றிகளும் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டு வனப்பகுதிக்குள் சென்றது. இக்காட்சியானது, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெள்ளி, 29 செப்டம்பர், 2023

🛑🅱️REAKING NEWS | வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீதான வன்முறை - பாலியல் வன்கொடுமை வழக்கில், 215 பேர் குற்றவாளிகள் என சென்னை உயர் நீதிமன்றம் உறுதி

🛑🅱️REAKING NEWS | வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீதான வன்முறை - பாலியல் வன்கொடுமை வழக்கில், 215 பேர் குற்றவாளிகள் என சென்னை உயர் நீதிமன்றம் உறுதி

🛑🅱️REAKING NEWS

 🛑▶️வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில், 215 பேர் குற்றவாளிகள் என தருமபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

▶️ பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு உடனடியாக ₹10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவு.*
▶️ பாதிக்கப்பட்டவர்கள் இறந்து விட்டால் அவர்கள் குடும்பத்திற்க்கு இழப்பீரு வழங்க வேண்டும்.. குற்றம் புரிந்தவர்களிடம் ₹5 லட்சம் வசூலிக்க வேண்டும் - நீதிபதி 

▶️ அப்போதைய எஸ்.பி, மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - நீதிபதி

▶️ பாதிக்கப்பட்ட அல்லது அவர்களது குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும்  - நீதிபதி

▶️ குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில், உயிருடன் இருந்த 215 பேர் குற்றவாளிகள் என கடந்த 2011ம் ஆண்டு தருமபுரி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது

▶️12 பேருக்கு 10 ஆண்டு சிறை, 5 பேருக்கு 7 ஆண்டு சிறை, மற்றவர்களுக்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை .

▶️தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்தது.

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0DcPbnHGABBAn6pJkJ2N7haZZaJDMgVuzbwCd27X8MPbRaErniNukudgZXpJsn2JPl&id=100076155674482&mibextid=2JQ9oc

வெள்ளி, 7 ஜூலை, 2023

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் 1,000/- எப்படி விண்ணப்பிக்கலாம் ஆதார் குடும்ப அட்டை இல்லை என்றால் How to apply for magalir urimai thogai 1000 scheme

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் 1,000/- எப்படி விண்ணப்பிக்கலாம் ஆதார் குடும்ப அட்டை இல்லை என்றால் How to apply for magalir urimai thogai 1000 scheme


குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் 1,000/- எப்படி விண்ணப்பிக்கலாம் ஆதார் குடும்ப அட்டை இல்லை என்றால் How to apply for magalir urimai thogai 1000 scheme

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் 1,000/- எப்படி விண்ணப்பிக்கலாம் ஆதார் குடும்ப அட்டை இல்லை என்றால் எப்படி விண்ணப்பம் செய்ய வேண்டும்..!

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000/- ரூபாய் வழங்க திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்தநாள் 15 ஆம் தேதி முதல் மிகப் பிரமாண்டமாக தொடங்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இதற்கான விண்ணப்பபடிவங்கள் எப்படி பெறப்படும் என்பது குறித்த முக்கிய அறிவிப்பை திரு. மு க ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு உதவும் வகையில் மாதம் தோறும் 1,000/- ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

திமுக ஆட்சி அமைந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இந்த திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை.

எதிர்க்கட்சிகளும் கூட இது குறித்து பல்வேறு வகையான கேள்விகளை தொடர்ந்து கேட்டு வருகிறார்கள்.

இந்த சூழலில் தான் இந்த ஆண்டு பட்ஜெட்டில் மகளிர் 1,000/- ரூபாய் என்பது வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பை நிதியமைச்சர் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தொடர்ந்து பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பல்வேறு சர்ச்சைகள் இருக்கிறது இந்த சூழலில் மாவட்ட ஆட்சியர்களுடன் நடந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல் ஸ்டாலின்.

பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000/- ரூபாய் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது என்றும்.

அப்போது முதல் மாத குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000/- ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார் இதற்கு முத்தமிழ் அறிஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும்.

இந்த திட்டத்திற்கு கடந்த பட்ஜெட்டில் 7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே அந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் இன்று இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஒவ்வொரு துறையின் பங்களிப்பு குறித்தும் மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்புகள் குறித்தும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உரிய கால கணக்கெடுப்புக்குள் இதற்கான அனைத்து பணிகளும் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் இத்தனை பெரிய திட்டம் கொண்டுவரப்படுகிறது இதுவே முதல் முறை இதை சிறப்பாக செயல்படுத்த மாவட்ட தலைவர்கள் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த திட்டம் அண்ணாவின் பிறந்தநாள் செப்டம்பர் 15ஆம் தேதி செயல்படுத்தப்படுகிறது.

அதற்கு இன்னும் சில மாதங்களை இருப்பதால் இப்போது வேகமாக செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும் குறித்த தகவல்கள்

1.5 கோடி விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கிறோம் விண்ணப்பங்களை பெற ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.

ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்கவும் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் சாலைகளில் குடியிருப்போர்,பழங்குடியினர்,தூய்மை பணியாளர்கள், ஆதரவற்றோர்,இதில் பயனடைவதை உறுதி செய்ய வேண்டும்.

இவர்களிடம் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, இல்லை என்றாலும் அதை பெறுவதற்கு இந்த திட்டம் கிடைக்கவும் உதவி செய்ய வேண்டும்.

தலைமை செயலாளர் தலைமையில் மாநில அளவில் இந்த திட்டத்தை கண்காணித்து ஒருங்கிணைக்க ஏற்படுத்தப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு குழு இதற்கான பணிகளை செய்யும்.

இதன் மூலம் மாநிலத்தில் இருக்கும் பெண்களின் நிதி நிலை மாறும் என அவர் தெரிவித்தார்.

இந்த திட்டம் சுமார் 1 கோடி மக்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்படும் என்பது உண்மையான விஷயம் இந்த திட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு எப்படி பணம் வழங்கப்படும்.

வங்கிக் கணக்கு மூலமாகவா அல்லது நேரடியாக வழங்கப்படும் குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை.

எப்பொழுது ரேஷன் கடைகளில் இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்பது குறித்தும் வெளியிடப்படவில்லை.

வியாழன், 6 ஏப்ரல், 2023

பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் 90% பத்திரிக்கையாளர்கள் உறுப்பினராக சேர முடியாத நிலை - முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக எம்எல்ஏ கோரிக்கை..!

பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் 90% பத்திரிக்கையாளர்கள் உறுப்பினராக சேர முடியாத நிலை - முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக எம்எல்ஏ கோரிக்கை..!

பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் 90 சதவீத பத்திரிக்கையாளர்கள் உறுப்பினராக சேர முடியாத நிலை இருப்பதாகவும், இதில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கேட்டுக்கொண்டு உள்ளார். 

பத்திரிகையாளர்களுக்கு வீட்டு வரியை ரத்து செய்வதுடன் அவர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.


வெள்ளி, 31 மார்ச், 2023

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்..!

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்..!

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்..!

தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று முதல் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது;  (இன்று) முதல் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் உள்பட அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம். மருத்துவர்கள், பணியாளர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.

பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லை. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும். கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து உலகம் முழுவதும் தாண்டவம் ஆடுகிறது" என்றார்.

வியாழன், 23 மார்ச், 2023

எனது தந்தையாரின் இறுதிச் சடங்குகள் குடும்ப நிகழ்வாகவே இருக்க விரும்புகிறோம் - நடிகர் அஜீத்குமார் வேண்டுகோள்

எனது தந்தையாரின் இறுதிச் சடங்குகள் குடும்ப நிகழ்வாகவே இருக்க விரும்புகிறோம் - நடிகர் அஜீத்குமார் வேண்டுகோள்


சென்னை: 
நடிகர் அஜீத்குமாரின் தந்தை சுப்ரமணியம் (84) உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். மறைந்த சுப்பிரமணியத்தின் உடல் இன்று சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், எனது தந்தையாரின் இறுதிச் சடங்குகள் குடும்ப நிகழ்வாகவே இருக்க விரும்புகிறோம் என்று நடிகர் அஜீத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். குடும்பத்தினருடன் இறுதிச் சடங்குகளை தனிப்பட்ட முறையில் செய்ய ஒத்துழைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதன், 22 மார்ச், 2023

தமிழகத்தில் வரும் 24 ம் தேதி முதல் ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப்படும் என அரசு தலைமை ஹாஜி தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் வரும் 24 ம் தேதி முதல் ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப்படும் என அரசு தலைமை ஹாஜி தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் வரும் 24 ம் தேதி முதல் ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப்படும் என அரசு தலைமை ஹாஜி தெரிவித்து உள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி முப்தி காஜி டாக்டர் சலாஹூத்தின் முகம்மது அய்யூப் வெளியி்ட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: இன்று (22 ம் தேதி)சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் ரமலான் பிறை காணப்படவில்லை, 24 ம்தேதி ரமலான் மாத முதல் பிறை என ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. இதனையடுத்து ரம்ஜான் நோன்பு வரும் 24 ம் தேதி முதல் துவங்கும் என தெரிவித்து உள்ளார்.

செவ்வாய், 21 மார்ச், 2023

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர்  ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை - இன்னும் 2 நாட்களில் வீடு திரும்புவார்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை - இன்னும் 2 நாட்களில் வீடு திரும்புவார்


ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் .வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ.வுக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் கொரோனா தொற்றும் ஏற்பட்டது.இதனால் தனிமைப்படுத்தப்பட்டு தனிவார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தொற்றில் இருந்து அவர் மீண்டு விட்டதாக கூறப்படுகிறது.

நேற்று பிற்பகலில் திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் எக்கோ பரிசோதனை செய்யப்பட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்துள்ளார்கள். இதை தொடர்ந்து இரவில் உடல் நிலை சீரானது.

ஏற்கனவே அவருக்கு சுவாச பிரச்சினை இருப்பதால் சில நேரங்களில் செயற்கை  ஆக்சிஜன் சுவாசம் தேவைப்படுவதாக கூறப்படுகிறது, உடல் நலம் தேறி வருவதால் விரைவில் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட உள்ளார்.

அதன் பிறகு 2 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

தற்போது ஈரோடு எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அளித்த பேட்டி...👇👇👇👇👇👇👇
https://youtube.com/shorts/cP3Ts7OL05I?feature=share

சனி, 18 மார்ச், 2023

பெருந்துறை அருகே தொடர்ச்சியாக நடைபெற்ற குற்றச் சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீசார் உள்பட நால்வர் கைது

பெருந்துறை அருகே தொடர்ச்சியாக நடைபெற்ற குற்றச் சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீசார் உள்பட நால்வர் கைது


பெருந்துறை அருகே தொடர்ச்சியாக நடைபெற்று வந்த குற்றச் செயல்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீசார் உள்பட நால்வரை கைது செய்த காவல்துறையினர்,அவர்களை சிறையில் அடைத்தனர்..!

அதிகரித்த குற்றச் செயல்கள்... தேடுதல் பணியில் தனிப்படை..!

பெருந்துறை - சித்தோடு அவிநாசி பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டது அம்பலம் ... 4 பேரிடமிருந்து 6 1/2 சவரன் தங்க நகை, பட்டாகத்தி அறிவாள் உள்ளிட்டகளை பறிமுதல் செய்து போலிசார் விசாரணை...

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2021ஆம் ஆண்டு பல்வேறு குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளது என பெருந்துறை காவல் நிலை தெற்கு தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தது

இதனையடுத்து, ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் அறிவுறுத்தலின் பேரில், பெருந்துறை ஆய்வாளர் மசுதா பேகம், தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் பெருந்துறையில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதாக செந்தில்குமார் என்ற கார்த்திக் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், பல்வேறு குற்றச் செயல்களில் இவருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

காவலரின் செல்போனில் செந்தில்குமாரின் எண்.. திடீர் ட்விஸ்ட்..!

பெருந்துறையில் காவலர் ராஜீவ்காந்தி என்பவர் நடத்தி வரும் மளிகை கடையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சிலர் தங்கி இருப்பதாக, ஆய்வாளர் மசுதா பேகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து ராஜீவ்காந்தியின் செல்போனை போலீசார் சோதனை செய்துள்ளனர்.

இதில், இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு சிறை சென்ற செந்தில்குமாரை விசாரணை செய்த காவலர்களில் ஒருவரான ராஜீவ்காந்தி, செந்தில்குமாருடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு மாட்டிக் கொள்ளாமல் திருடுவது எப்படி என்று தெரிவித்ததோடு, சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் சந்திக்குமாறும் கூறியுள்ளார். இதற்கிடையில் காவலர் ராஜீவ்காந்தி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

காவலரின் வழிகாட்டுதலில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள்...

இதனையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில்குமார், காவலர் ராஜீவ்காந்தியை சந்தித்துள்ளார். இதையடுத்து ராஜீவ்காந்தி தனது மளிகை கடையில் செந்தில்குமார், பாலசுப்பிரமணியன், கருப்புசாமி மற்றும் சிலரை தங்கவைத்து பெருந்துறை, பெருமாநல்லூர் மற்றும் சித்தோடு பகுதியில் கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையில் ஈடுபடுவதற்கு முன்பு சிசிடிவி கேமரா இல்லாத பகுதிகள், காவலர்கள் ரோந்து இல்லாத இடங்கள் ஆகியவற்றை அவர்களுக்கு காண்பித்து அழைத்துச் சென்றதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து காவலர் ராஜீவ்காந்தி, பாலசுப்பிரமணியன் மற்றும் கருப்பசாமி ஆகிய மூவரையும் கைது செய்த பெருந்துறை போலீசார், கோபிசெட்டிப்பாளையம் சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஆறரை பவுன் தங்க நகைகள், கொள்ளைக்கு பயன்படுத்திய கார், 2 பட்டாக்கத்தி அருவாள், ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய செல்வகுமார் மற்றும் பாலமுருகன் ஆகியோர் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நிலையில், செந்தில்குமாரை தேடி வந்த நிலையில், சித்தோடு காவல்துறையினர் கைது செய்தனர்.

வியாழன், 16 மார்ச், 2023

ஆன்லைன் சூதாட்டத்தில் உயிரிழந்தவர்களின் சாம்பலை தபால் மூலம் ஆளுநருக்கு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது..!

ஆன்லைன் சூதாட்டத்தில் உயிரிழந்தவர்களின் சாம்பலை தபால் மூலம் ஆளுநருக்கு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது..!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய கோரி பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆன்லைன் விளையாட்டு காரணமாக தமிழகத்தில் சிலர் உயிரிழந்து உள்ளனர். 

தமிழக அரசு சார்பிலும் சட்டமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் என்.ஆர் ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்நிலையில், ஈரோடு மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்டவர்களின் சாம்பல்களை தமிழக ஆளுநருக்கு தபால் மூலம் அனுப்பும் போராட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். 


ஈரோடு தலைமை தபால் நிலையம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தபோதிலும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொறுப்பாளர் ஜனனி, தனியாக சென்று தைரியமாக ஆளுநருக்கு சாம்பலை அனுப்பி தனது உணர்வை வெளிப்படுத்தினார்...

எனினும் இன்று காளைமாட்டு சிலை அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரகுருபரன் தலைமையில், நிர்வாகிகள் திரண்டு வந்து ஆன்லைன் விளையாட்டு கண்டித்தும் தடை செய்ய போறியும் கோசம் எழுப்பினர். ஆன்லைன் விளையாட்டில் இறந்தவர்களின் சாம்பல்களை ஒரு தபால் கவரில் அள்ளிப்போட்டு, அதனை தபால் மூலம் அனுப்புவதற்காக ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்திற்கு ஊர்வலமாக செல்ல முயன்றனர். 

அப்போது டவுன் டிஎஸ்பி ஆறுமுகம் தலைமையில், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டு வேன் மூலம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

திங்கள், 13 மார்ச், 2023

ஈரோட்டில் வடமாநில தொழிலாளியின் காதில் இருசக்கர சாவியால் குத்தியும், காலில் கல்லை தூக்கி போட்டு தாக்கி செல்போன் - பணத்தை பறித்த 7 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்

ஈரோட்டில் வடமாநில தொழிலாளியின் காதில் இருசக்கர சாவியால் குத்தியும், காலில் கல்லை தூக்கி போட்டு தாக்கி செல்போன் - பணத்தை பறித்த 7 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்


உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தீர்த்தராஜின் மகன் சைலேந்தர் (28) என்பவர் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் தங்கியிருந்து பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவர் ஈரோடு சத்திரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மது குடிப்பதற்காக சென்றார். அப்போது 7 பேர் அங்கு வந்தார்கள், அவர்கள் சைலேந்தரிடம் பணம் கேட்டு மிரட்டினார்கள். ஆனால் அவர் பணம் கொடுக்கவில்லை, இதனால் அவர்கள் சைலேந்தரின் காதில் இருசக்கர சாவியால் குத்தியும், காலில் கல்லை தூக்கி போட்டும் தாக்கினார்கள். 


அதன்பிறகு அவரிடம் இருந்து ஒரு செல்போன், 2 ஏ.டி.எம். கார்டுகள், ரூ.620-ஐ பறித்து கொண்டு 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். இதில் காயம் அடைந்த சைலேந்தர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள், விசாரணையில் சைலேந்தரை தாக்கியது, ஈரோடு பெரியவலசு பகுதியை சேர்ந்த மதன்குமார் ( 26), காரைவாய்க்கால் ரோடு பகுதியை சேர்ந்த சபரி (28), கருங்கல்பாளையத்தை சேர்ந்த கண்ணன் (31), அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (27), சக்தி வேல் (26), நஷீர் (23), சாகுல் ஹமீத் ( 23) ஆகியோர் என்பது தெரியவந்தது, இதைத்தொடர்ந்து அவர்கள் 7 பேரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.