செவ்வாய், 21 மார்ச், 2023

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை - இன்னும் 2 நாட்களில் வீடு திரும்புவார்


ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் .வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ.வுக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் கொரோனா தொற்றும் ஏற்பட்டது.இதனால் தனிமைப்படுத்தப்பட்டு தனிவார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தொற்றில் இருந்து அவர் மீண்டு விட்டதாக கூறப்படுகிறது.

நேற்று பிற்பகலில் திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் எக்கோ பரிசோதனை செய்யப்பட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்துள்ளார்கள். இதை தொடர்ந்து இரவில் உடல் நிலை சீரானது.

ஏற்கனவே அவருக்கு சுவாச பிரச்சினை இருப்பதால் சில நேரங்களில் செயற்கை  ஆக்சிஜன் சுவாசம் தேவைப்படுவதாக கூறப்படுகிறது, உடல் நலம் தேறி வருவதால் விரைவில் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட உள்ளார்.

அதன் பிறகு 2 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

தற்போது ஈரோடு எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அளித்த பேட்டி...👇👇👇👇👇👇👇
https://youtube.com/shorts/cP3Ts7OL05I?feature=share

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: