விஜயமங்கலம் 110/33-11 KV துணை மின் நிலையத்தில் வருகின்ற 23.12.2025 செவ்வாய்க்கிழமையன்று மேற்கொள்ள மாதாந்திர பராமரிப்பு பணி வேண்டியுள்ளதாலும் 110/33-11KV விஜயமங்கலம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட பெரியவீரசங்கிலி, சின்னவீரசங்கிலி, கைக்கோல பாளையம், வடமலை கவுண்டன்பாளையம், பச்சாக்கவுண்டன்பாளையம், கரட்டூர் மற்றும் கினிப்பாளையம், கிரேநகர். பாப்பம்பாளையம் ஆகிய அனைத்து பகுதிகளிலும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்கிற விபரத்தினை பொதுமக்கள் நலன் கருதி வெளியிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Erode லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Erode லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 22 டிசம்பர், 2025
ஞாயிறு, 21 டிசம்பர், 2025
*கோபி பகுதி மின்தடை அறிவிப்பு*
*கோபி பகுதி மின்தடை அறிவிப்பு*
நாள்: 22-12-2025
கிழமை: திங்கள்
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
கூகலுார், ஒத்தக்குதிரை, எஸ்.கணபதிபாளையம், கவுண்டன்புதூர், கருங்கரடு, தண்ணீர்பந்தல்பாளையம், புதுக்கரைப்புதுார், பொன்னாச்சிபுதுார், தாழைகொம்புதூர், பொலவக்காளிபாளையம், தாசம்பாளையம், பொம்மநாயக்கன்பாளையம், சக்கரைபாளையம், சாணார்பாளையம், மேவாணி, சென்னிமலைகவுண்டன்புதூர், குச்சலூர், சவண்டப்பூர் ஆண்டிகாடு, பெருமுகை, வரப்பள்ளம் மற்றும் கே.மேட்டுப்பாளையம்.
ஆகிய பகுதிகளில் மாதம் பராமரிப்பு காரணமாக மின் வினியோகம் தடை
*தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் கோபி*
சனி, 20 டிசம்பர், 2025
CMAI ஆடை ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர் சங்கம் சார்பில், நம் ஈரோட்டில் செயல்பட்டு வரும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டவர்களுக்காக மும்பை நகரில் ஒரு பெரிய நெசவுக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.
CMAI ஆடை ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர் சங்கம் சார்பில், நம் ஈரோட்டில் செயல்பட்டு வரும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டவர்களுக்காக மும்பை நகரில் ஒரு பெரிய நெசவுக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கண்காட்சியின் சிறப்பு என்னவென்றால்,
வெளிநாடுகளில் இருந்து பத்து நாடுகளைச் சேர்ந்த நேரடி வாங்குநர்கள், இதில் பங்கேற்க உள்ளனர்.
அதோடு, இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 320 வாங்குநர்களை அழைத்து வந்து,கண்காட்சி அரங்குகளில் நேரடியாக சந்தித்து வணிகஉரையாடல் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
இதன் மூலம்,நம் தமிழ்நாட்டில் குறிப்பாக ஈரோடு மற்றும் திருப்பூர் பகுதிகளில் உள்ள அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறோம், இது அனைவருக்கும் பயன் அளிக்கும் வாய்ப்பாகும்.
CMAI என்பது 65 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்திய ஆடை உற்பத்தியாளர்களின் சங்கமாகும்.
இந்திய அளவில் ஆடை உற்பத்தியாளர்களுக்கான மிகப்பெரிய சங்கங்களில் இதுவும் ஒன்று, இதன் முக்கிய நோக்கம், நேரடி உற்பத்தியாளர்களும் தொழில்துறை குழுமங்களும் இதில் பங்கேற்பதுதான், இந்த வர்த்தகக் கண்காட்சி மூலம், முழு தொழில்துறை அமைப்பிற்கும் பயன் கிடைக்கும், துணி வழங்குநர்களுக்கும் ஆடை உற்பத்தியாளர்களுக்கும் சமமான நன்மை ஏற்படும் என தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் ( ஈரோடு டிஸ்ட்ரிக்ட் சேம்பர் ஆப் காமர்ஸ் & இன்ட்ரஸ்ட்ரி )
ஈரோடு மாவட்ட தொழில் வர்த்தக சபையின் தலைவர் வி.பி.சுப்பிரமணியம், செயலாளர் பிரேம் நாராயணன், ( எக்ஸிக்யூடிவ் பிரசிடெண்ட் ) செயல் தலைவர் வி.டி கருணாநிதி, டெக்ஸ்வேலி நிர்வாக இயக்குனர் குமார், ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர் சிவனந்தன், FATIA தலைவர் வி.கே ராஜமாணிக்கம், ரவிச்சந்திரன்,
CMAI பொதுச்செயலாளரும், பேப் ஷோ சேர்மன் நவீன், CMAI சேர்மன் வெண்டர் ஆனந்த் உட்பட ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் என ஜவுளி வர்த்தகர்கள் பங்கேற்றனர்.
CMI துணிக்காட்சி, மும்பை நகரில், ஏப்ரல் மாதம் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
காரமடையில் சர்வதேச மனித உரிமைகள் தின விழா
காரமடையில் சர்வதேச மனித உரிமைகள் தின விழா
மனித உரிமைகள் காப்பாளர்கள் சார்பாக 78 ஆம் ஆண்டு சர்வதேச மனித உரிமைகள் தின விழா காரமடை நகராட்சி அலுவலகம் முன்பு ஈரோடு மாவட்ட தலைவர் ரசூல் மொய்தீன் தலைமையில் நடை பெற்றது.
சிறப்பு விருந்தினராக தேசிய தலைவர் சின்னராஜ் ராமசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில், தேசிய செயலாளர் செந்தில்குமார் தமிழ்நாடு மாநில தலைவர் அந்தோணி ராஜ், தமிழ்நாடு மாநில மகளிர் அணி தலைவி லோகநாயகி, தமிழ்நாடு மாநில மகளிர் அணி செயலாளர் மகேஸ்வரி, கோவை மாவட்ட அமைப்பாளர் இப்ராஹிம் பாஷா, கோவை வடக்கு மாவட்ட தலைவர் மோகனசுந்தரம், கோவை மாவட்ட அமைப்புச்செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் மனித உரிமைகள் குறித்து சிறப்புரையாற்றினர். முடிவில் கோவை மாவட்ட செயலாளர் நண்பரசன் நன்றி கூறினார்.
ஈரோட்டில் த.மா.கா.வுடன் காமராஜர் மக்கள் கட்சியை இணைக்கும் விழா - ஜி.கே.வாசன் எம்.பி. முன்னிலை நடந்தது.
*ஈரோட்டில் த.மா.கா.வுடன் காமராஜர் மக்கள் கட்சியை இணைக்கும் விழா - ஜி.கே.வாசன் எம்.பி. முன்னிலை நடந்தது.*
**************************
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் காமராஜர் மக்கள் கட்சியை இணைக்கும் விழா ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. விழாவுக்கு த.மா.கா.தலைவர் .ஜி.கே வாசன் எம்.பி தலைமை தாங்கினார்.
மாநில பொதுச்செயலாளர் யுவராஜா, துணைத் தலைவர் விடியல் சேகர், மாவட்ட தலைவர்கள் விஜயகுமார், சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் தலைமையில் அந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் ஜி. கே.வாசன் முன்னிலையில் த.மா.கா.வில் இணைத்து கொண்டனர்.
நிகழ்ச்சியை ஒட்டி ஈரோடு மாநகர் முழுவதும் கட்சிக்கொடி தோரணைகள் கட்டப்பட்டிருந்தன. விழா நடைபெறும் இடத்திற்கு தமிழக முழுவதும் இருந்து கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். குறிப்பாக கொங்கு மண்டல நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மா பழ வாழை எனத் தொண்டர்கள் கொண்டு வந்து அன்பளிப்பாக வழங்கினர்.
காமராஜர் மற்றும் மூப்பனார் ஆகியோர் படத்திற்கு ஜிகே வாசன் எம்பி, தமிழருவி மணியன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாநில துணைத்தலைவர் விடியல் சேகர், மாநில பொதுச்செயலாளர் யுவராஜா, மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் ஆகியோர் வரவேற்று பேசினர்.
தமிழகம் முழுவதும் வந்திருந்த நிர்வாகிகள் அவர்கள் பாரம்பரிய படி நினைவு பரிசுகளை வழங்கினர்.
விழாவில் இளைஞர் சங்க நிர்வாகி ரமேஷ், பொருளாளர் ராமன், பிரகாஷ் ஜெயின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செவ்வாய், 16 டிசம்பர், 2025
ஈரோடு தாலுக்கா காவல் நிலையம் - சட்டவிரோதமாக கஞ்சா செடி வளர்த்தியநபர் கைது
ஈரோடு தாலுக்கா காவல் நிலையம் - சட்டவிரோதமாக கஞ்சா செடி வளர்த்திய
நபர் கைது
ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.A.சுஜாதா அவர்களின் நேரடி மேற்பார்வையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று 16.12.2025 ம் தேதி மாலை ஈரோடு தாலுக்கா காவல் நிலையத்திற்குட்பட்ட தெற்கு பள்ளம், வன்னியர் காலனியில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஈரோடு தாலுக்கா காவல் நிலைய போலீசார் மேற்படி வன்னியர் காலனியில் உள்ள மினியப்பன் என்பவரின் மகன் சிவலிங்கம்(49) என்பவருக்கு சொந்தமான உபயோகப்படுத்தப்படாத வீட்டின் பின்புறம் அதே பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் மாரிமுத்து (எ) பாம்புகாரர் ரமேஷ்(64) என்பவருடன் சேர்ந்து சட்ட விரோதமாக 3 கஞ்சா செடிகளை (1/2 அடியில் 2 செடிகள் மற்றும் 3 அடியில் 1 செடி எடை 300 கிராம்) வளர்த்து வந்தது தெரியவந்தது. மேலும் அவ்விடத்திலிருந்த மேற்படி சிவலிங்கம் மற்றும் மாரிமுத்து (எ) பாம்புகாரர் ரமேஷ் ஆகியோரை பிடித்து விசாரித்தும், அவர்களுக்கு சொந்தமான அவ்விடத்தில் நிறுத்தப்பட்டிருந்த Hero Pleasure TN 56 MM 5091 மற்றும் Honda Activa TN 56 P1026 ஆகிய இரண்டு இருசக்கர வாகனங்களிலும் சோதனை செய்த போது அதிலிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தலா 100 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததை பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்த கஞ்சா, கஞ்சா செடிகள், இருசக்கர வாகனங்களை மற்றும் எதிரிகளை நிலையம் கொண்டுவரப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரிகள் இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
திங்கள், 15 டிசம்பர், 2025
*கோபி பகுதி மின்தடை அறிவிப்பு*
*கோபி பகுதி மின்தடை அறிவிப்பு*
நாள்: 17-12-2025
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
கெட்டிசெவியூர்,சிறுவலுார், ஆயிபாளையம்,சுள்ளிக்காடு, பூச்சநாயக்கன்பாளையம், தண்ணீர்பந்தல்பாளையம், லட்சுமாய்புதுார், நீலாம்பாளையம், வாக்கரைபுதூர், செஞ்சிலாபாளையம், தோரணவாவி, நல்லக்காபாளையம், வடக்குபாளையம்,
ராசாகவுண்டம்பாளையம்,செரகோயில்,மற்றும் பள்ளக்காடு
ஆகிய பகுதிகளில் மாதம் பராமரிப்பு காரணமாக மின் வினியோகம் தடை
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் கோபி
சனி, 29 நவம்பர், 2025
ஈரோடு மாவட்டம், நசியனுார், பாரதி கல்வி நிலையத்தில் இன்று (29.11.2025) மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு திட்ட மருத்துவ முகாமினை பார்வையிட்டு 9 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஈரோடு மாவட்டம், நசியனுார், பாரதி கல்வி நிலையத்தில் இன்று (29.11.2025) மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு திட்ட மருத்துவ முகாமினை பார்வையிட்டு 9 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் 02.08.2025 அன்று துவக்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இத்திட்டத்தினால் எண்ணற்ற பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர். அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 17-வது மருத்துவ முகாம் இன்று 29.11.2025 நசியனுார், பாரதி கல்வி நிலையத்தில் நடைபெற்று வருகிறது. இம்மருத்துவ முகாமில் 17 சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளிக்க வருகிறார்கள், இம்முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் கண் பரிசோதனை, பல் சிகிச்சை, ரத்தப்பரிசோதனை, ECG, X-RAY பரிசோதனைகளும் கூடுதலாக பெண்களுக்கு கர்பப்பைவாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் பரிசோதனைகளும் செய்யப்பட உள்ளது.
மருத்துவர்கள் பரிசோதனை செய்து தேவையான மருந்து மாத்திரைகள் வழங்குவார்கள் மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு சிறப்பு மருத்துவர்களை கொண்டு பரிசோதனை செய்து ECHO போன்ற உயர் பரிசோதனைகளும் செய்யப்படும். உயர் சிகிச்சை தேவைப்படுவோர் பரிந்துரை செய்யப்படுவார்கள். மேலும் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு அட்டை மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கான அட்டையும் வழங்கப்பட உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 16 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளது இந்த முகாம்களில் 23,807 பயனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் உயர் சிறப்பு சிகிச்சை வழங்கப்பட்டது. 14,082 பேருக்கு ECG-ம் 16,970 பேருக்கு ஆய்வக பரிசோதனையும் 1607 பேருக்கு X-RAYம், 1348 பேருக்கு Scan-ம், 1807 பேருக்கு ECHO-ம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை 618 பேருக்கும், மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் 974 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் நடைபெற்ற மருத்துவ முகாமில், மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள், 5 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், 2 நபருக்கு காப்பீட்டுத்திட்ட அடையாள அட்டை, 2 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளும், என மொத்தம் 9 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இம்முகாமில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.சி.சந்திரகுமார், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் திரு.வே.செல்வராஜ், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.அருணா, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வெள்ளி, 28 நவம்பர், 2025
ஈரோடு மாவட்டம், சித்தோடு அரசினர் பொறியியல் கல்லுாரி, கோபி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இன்று (28.11.2025) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள் சட்டமன்ற தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம், சித்தோடு அரசினர் பொறியியல் கல்லுாரி, கோபி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இன்று (28.11.2025) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள் சட்டமன்ற தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் 2026-ஐ முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து இன்று (28.11.2025) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி இஆப., அவர்கள், சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் ஈரோடு (மேற்கு), ஈரோடு (கிழக்கு), மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும், கோபி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கோபிச்செட்டிபாளையம் மற்றும் பவானிசாகர் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும், வாக்கு எண்ணும் மையம் அமைப்பதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் குறித்தும் வாக்குப் பெட்டிகள் இருப்பறை, வாக்கு எண்ணும் மையத்தில் அலுவலர்களுக்கான அறை வசதி, தேர்தல் முகவர்களுக்கு தேவையான அறை வசதிகள் குறித்தும் மற்றும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்சாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து குறித்தும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கரட்டூர் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அலுவலகம் முன்பு வைத்திருந்த பிளக்ஸ் போர்டு புதிதாக மாற்றம்...
*ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கரட்டூர் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அலுவலகம் முன்பு வைத்திருந்த பிளக்ஸ் போர்டு புதிதாக மாற்றம்...*
முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா படங்களுடன் தமிழக வெற்றிக்காக பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது,
கடந்த நவம்பர் 1 ஆம் தேதி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதற்கு பிறகு காலை செய்தியாளர்கள் சந்திப்பிற்கு முன்பு கரட்டூர் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அலுவலகம் முன்பு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படத்தை மறைத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் ஒட்டப்பட்டிருந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பிற்கு பின் முழுவதுமாக பிளக்ஸ் போர்டு மாற்றப்பட்டுள்ளது.
அன்று காலையில் வைத்திருந்த பிளக்ஸ் போர்டில் அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அலுவலகம் என்ற வாசகங்கள் இருந்த நிலையில் மதியம் புதிதாக வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் என குறிப்பிடப்பட்டுள்ளது,
புதிதாக வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டில் அண்ணா, முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா படங்கள் மட்டும் இடம்பெற்றிருந்தன, இந்த நிலையில் நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து நேற்று தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தமிழக வெற்றிக்கான கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு அதேபோல கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டு இருந்தன
இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் கரட்டூர் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டு முழுமையாக மாற்றப்பட்டுள்ளது
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த பிறகு முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையனின் அலுவலகம் முன்பு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் புகைப்படத்துடன் முன்னாள் முதல்வர்கள் எம் ஜி ஆர் ஜெயலலிதா ஆகியோரின் படங்களும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது,
ஈரோடு மாவட்டத்தில், 19.97 லட்சம் வாக்காளர்களில், 14 லட்சம் படிவங்கள் திரும்ப பெறப்பட்டதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கந்தசாமி தெரிவித்தார்...
*ஈரோடு மாவட்டத்தில், 19.97 லட்சம் வாக்காளர்களில், 14 லட்சம் படிவங்கள் திரும்ப பெறப்பட்டதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கந்தசாமி தெரிவித்தார்...*
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சித் தலைவர் ச.கந்தசாமி, நிருபர்களிடம்...
கடந்த, 4 முதல் எஸ்.ஐ.ஆர்., படிவம் வழங்கப்பட்டு டிச., 4 வரை திரும்ப பெறப்படும். வரும், 30க்குள் படிவங்களை பெற்று, பதிவேற்றப்பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்படுகிறது. இம்மாவட்டத்தில், 19.97 லட்சம் வாக்காளர்களில், 1 சதவீதம் தவிர மற்றவர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டுவிட்டன. அப்படிவங்களும் இரு தினங்களில் வழங்கப்பட்டுவிடும். இதுவரை, 14 லட்சம் படிவங்கள் பூர்த்தி செய்து திரும்ப பெறப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 1,946 படிவங்கள் ஆன்லைனில் நிரப்பி அனுப்பி உள்ளனர்.
பெறப்பட்ட, 73 சதவீத படிவங்களில் கடந்த, 2002 வாக்காளர் விபரத்துடன் பூர்த்தி செய்த அல்லது பி.எல்.ஓ.,க்களால் உறுதி செய்த, 25 சதவீத வாக்காளர் (4.95 லட்சம்) விபரம் பதிவேற்றி, உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களது உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள் என, 26 சதவீதம் (5.22 லட்சம்) பேர் படிவமும் உறுதி செய்து, 51 சதவீத படிவங்கள் இடம் பெறும்.
‘ஆள் இல்லை, இடமாற்றம், இறந்துவிட்டார்’ என்ற, 3 இனங்களில், 58,875 படிவங்கள் (2.95 சதவீதம்) உள்ளன. ‘நோ மேட்ச்’ என்ற இனங்களில் கடந்த, 2002 வாக்காளர் பட்டியல் விபரம், உறவினர் வாக்காளர் பட்டியல் இணைப்பு விபரம் வழங்காதவர்களை நீக்கம் செய்யவில்லை.
டிச., 4க்குள் பெறப்படும் அனைத்து படிவங்களும் பதிவேற்றம் செய்து, டிச., 9 ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதன் இடம் பெற்றவர்கள் தவிர, இடம் பெறாதவர்களுக்கு ஆவணங்கள் மூலம் மீண்டும் வாக்காளராக படிவம் வழங்கி திரும்ப பெறப்படும்.
அதுபோல, 18 வயது பூர்த்தியான புதிய வாக்காளரும் படிவம்–6ஐ வழங்கி இணையலாம். இவ்வாறானவர்கள் தங்களது ஆவணங்களை வழங்கி, அதன் மூலம் பிப்., 7 ல் வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவர்.
இடம் பெயர்ந்தோர், விடுபட்டோர், தாங்கள் வசிக்கும் பகுதியில் உரிய படிவங்களை வழங்கி, ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்கலாம்.
படிவம் பூர்த்தி செய்வதில் சந்தேகத்துக்கு அந்தந்த பகுதி பி.எல்.ஓ.,க்கள், உதவி மையங்கள், ெஹல்ப் டெஸ்க், தேர்தல் ஆணைய இணைய தளம் மூலம் தீர்வு பெறலாம்.
பீகார் உட்பட பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்களாக இருந்தாலும், இங்கு வெகு காலமாக இருந்து, படிவத்தில் கேட்கப்பட்ட விபரம் சரியாக இருந்தால் சேர்க்கப்படுவர் என தெரிவித்தார்.
டி.ஆர்.ஓ., சாந்தகுமார், தேர்தல் பிரிவு தாசில்தார் சங்கர்கணேஷ், மாவட்ட ஆட்சித் தலைவர் நேர்முக உதவியாளர் (பொது) முகமது குதுரத்துல்லா ஆகியோர் உடனிருந்தார்.
ஈரோட்டில் கண்ணாடி கடை உரிமையாளரின் வங்கி கணக்கில் இருந்து 1.10 கோடி ரூபாய் வரை சுருட்டிய ஊழியரான உத்திரபிரதேசத்தை சேர்ந்த வாலிபரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்...
ஈரோடு :
*ஈரோட்டில் கண்ணாடி கடை உரிமையாளரின் வங்கி கணக்கில் இருந்து 1.10 கோடி ரூபாய் வரை சுருட்டிய ஊழியரான உத்திரபிரதேசத்தை சேர்ந்த வாலிபரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்...*
உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் முகிம்கான் (45). இவர், ஈரோடு பார்க் சாலையில் முகிம் கிளாஸ் ஹவுஸ் என்ற பெயரில் கண்ணாடி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் உத்திரபிரதேசத்தை சேர்ந்த சதாம்கான் மகன் ஆதில்கான் (35) என்பவர் கணக்காளராகவும், சூப்பர்வைசராகவும் வேலை பார்த்து வந்தார். ஆதில்கான் நன்றாக வேலை பார்த்ததால், அவருக்கு கடையின் வங்கி கணக்கையும், சொந்த வங்கி கணக்கின் வரவு செலவுகளை மேற்பார்வையிடும் பணியை முகிம்கான் வழங்கியிருந்தார்.
மேலும், கடையின் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது, கொள்முதல் செய்யும் பொருட்களுக்கு பணம் அனுப்புவது போன்ற பணிகளையும் ஆதில்கான் மேற்பார்வையிட்டு வந்தார்.
இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு மன் ஆதில்கான் வேலைக்கு வராமல் தலைமறைவானார்.
இந்நிலையில், முகிம்கான் கடந்த அக்டோபர் மாதம் அவரது வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது, பல லட்சம் ரூபாய் வெவ்வேறு வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதும், அவரது காசோலையில் அவர் கையெழுத்து இல்லாமலேயே லட்ச கணக்கான ரூபாய் ஆதில்கான் வங்கி கணக்கிற்கு மோசடியாக பரிமாற்றம் செய்ததையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
தொடர்ந்து ஆதில்கானை தேடியும் கிடைக்காததால், இதுகுறித்து ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவில் கடந்த அக்டோபர் மாதம் புகார் அளித்தார்.
இதன்பேரில், போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கடையின் உரிமையாளரான முகிம்கான் வங்கி கணக்கின் செயலி மூலமும், காசோலையில் போலியாக கையெழுத்திட்டும் ரூ.1.10 கோடி வரை ஏமாற்றி, ஆதில்கான் அவரது சொந்த வங்கி கணக்கிற்கும், அவரது உறவினர்கள் வங்கி கணக்கிற்கும் பண பரிமாற்றம் செய்து மோசடி செய்திருப்பது உறுதி செய்தனர்.
இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில், எஸ்ஐ ஜாஸ்மின், ஆதில்கான் மீது வழக்கு பதிவு செய்து, போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், ஆதில்கான் உத்திரபிரதேசத்தில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு தப்பி சென்று, தலைமறைவாக இருப்பது கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து நேற்று கடலூர் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஆதில்கானை கைது செய்து, முறைகேடாக வங்கி கணக்கில் பரிமாற்றம் செய்த பணம் குறித்தும், அதில் வாங்கப்பட்ட சொத்துக்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொலை..
*ஈரோட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு மூதாட்டி அணிந்திருந்த ஐந்து சவரன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபரை தற்போது காவல்துறையினர் கோயம்புத்தூரில் வைத்து பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது*
ஈரோடு மாவட்டம் சூலை எல் வி ஆர் காலனி சேர்ந்தவர் கமலா இவரது கணவர் மணிகண்டன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக உயிரிழந்த நிலையில் தற்போது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்
இவரது மகன் மகேந்திர சேனாதிபதி பாண்டிச்சேரியில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்
இந்த நிலையில் தினந்தோறும் தாயாருக்கு தொலைபேசி மூலம் பேசி வந்த மகன் மகேந்திர சேனாதிபதி சம்பவத்தன்று வெகு நேரம் தொலைபேசியில் தாயாரை அனைத்தும் தொலைபேசி எடுக்காவிட்டதால் சந்தேகம் அடைந்து அக்கம்பக்கத்தினரிடம் தகவல் கொடுத்து தாயார் சென்று பார்த்து சொல்லி உள்ளார்
இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் ஒன்று சேர்ந்து கமலா வாசித்து வந்த வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டின் முன் பகுதியில் கொடூரமான முறையில் கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கலந்துள்ளார்
பின்பு இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் மகன் மகேந்திர சேனாதிபதிக்கும், வீரப்பன் சத்திரம் காவல் நிலைய போலீசருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்
தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் கமலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து குற்றவாளியை 05 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ராமர் என்பவர் அதே பகுதியில் தங்கியிருந்து மார்க்கெட்டிங் வேலை செய்து வந்ததாகவும், பல நாட்களாக மூதாட்டி கமலா வீட்டில் தனியாக வசித்து வந்ததை நோட்டமிட்டு வந்ததாக கூறப்படுகிறது
தனியாக வசித்து வருவதை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட ராமர் கமலா வீட்டினுள் சென்று கமலாவின் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்து கமலா அணிந்திருந்த 5 சவர நகையை கொள்ளையடித்துக் கொண்டு கமலாவின் தொலைபேசியின் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்
இது தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர தேடுதல் பணியில் கமலாவின் தொலைபேசி எண் கடைசியாக சுவிட்ச் ஆப் செய்த லொகேஷனை வைத்து இந்த சம்பவத்திற்கு தொடர்புடையதாக கூறும் ராமர் என்ற நபரை போலீசார் கோயம்புத்தூரில் வைத்து மடக்கி பிடித்துள்ளனர்
உன் வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை கொடூரமான முறையில் கொலை செய்து அணிந்திருந்த தங்க நகையை கொள்ளையடித்து சென்ற நபரை காவல்துறையினர் கோயம்புத்தூரில் வைத்து மடக்கி பிடித்த சம்பவம் தற்போது பெருவாம் பரபரப்பு ஏற்படுகிறது..
பெருந்துறை மேற்கு ஒன்றியத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுகவில் இணைந்தனர்..!
பெருந்துறை மேற்கு ஒன்றியத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுகவில் இணைந்தனர்..!
முன்னாள் அமைச்சரும் ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் தோப்பு எண்.டி. வெங்கடாச்சலம் முன்னிலையில், தமிழக முதலவர் மு.க. ஸ்டாலினின் நல்லாட்சிக்கு வலுசேர்க்கும் வகையில் இளைஞர்கள் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்
சோலி பிரகாஷ் ஏற்பாட்டில், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தீபக் டெண்டுல்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஒன்றிய மற்றும் பேரூர் கழகச் செயலாளர்கள், கழக இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
செவ்வாய், 25 நவம்பர், 2025
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பயணமாக ஈரோட்டுக்கு இன்று வருகிறார்.
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பயணமாக ஈரோட்டுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) வருகிறார். இதற்காக சென் னையில் இருந்து இன்று விமானத்தில் புறப்பட்டு கோவை செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மாலை 6.30 மணிக்கு ஈரோடு புறப்படுகிறார்.
ஈரோடு மாவட்ட எல்லையான விஜயமங்கலம் சுங்கச் சாவடி அருகே ஈரோடு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இது போல் பெருந்துறை மற்றும் ஈரோடு மேட்டுக்கடை பகுதி களில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிர மாண்ட வரவேற்பு அளிக் கப்படுகிறது. இவ்வாறு வழி நெடுகிலும் ஈரோடு தெற்கு, ஈரோடு மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க.வினர் வரவேற்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
அதன்பின்னர் இரவு 8.30 மணிக்கு ஈரோடு காலிங்கரா யன் விருந்தினர் மாளிகைக்கு வந்துசேருகிறார். அங்கு இரவு தங்கி ஓய்வு எடுக்கிறார்.
ரூ.605 கோடியில் திட்டங்கள்
காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் இருந்து நாளை (புதன்கிழமை) காலை 9.15 மணிக்கு புறப்படும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருந்துறை ரோடு, ரிங் ரோடு, பூந்துறை ரோடு வழி யாக ஜெயராமபுரம் செல்கி றார். காலை 10 மணிக்கு அங்கு புதிதாக அமைக்கப் பட்டுள்ள பொல்லான் உரு வச்சிலையை திறந்து வைத்து, அரங்கையும் திறந்து வைக்கிறார். அங்கிருந்து ஓடாநிலை. செல்லும் அவர், காலை 10.20. மணிக்கு தீரன் சின்னமலை நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.
அங்கிருந்து புறப்படும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் காலை 10.45 மணிக்கு சோலாரில் புதிய பஸ்நிலைய வளாகத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். விழாவுக்கு தலைமை தாங்கி, ஈரோடு மாவட்டத்தில் முடிவுற்றதிட் லு டப்பணிகள், புதிய திட்டங் கள் என ரூ.605 கோடி மதிப் பிலான வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைக் கிறார்.
நலத்திட்ட உதவிகள்
விழாவில் பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் 1 லட்சத்து 84ஆயிரத்து 491பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். காலை 11.45 மணிக்கு அரசு விழா முடிந்து அங்கிருந்து புறப்பட்டு ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் மாளிகைக்கு வருகிறார்.
நலத்திட்ட உதவிகள்
விழாவில் பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் 1 லட்சத்து 84 ஆயிரத்து 491பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். காலை 11.45 மணிக்கு அரசு விழா முடிந்து அங்கிருந்து புறப்பட்டு ஈரோடு காலிங்கராயன் விருந் தினர் மாளிகைக்கு வருகிறார். அங்கு மதிய உணவு சாப்பி டும் முதல்-அமைச்சர் மாலை வரை ஓய்வெடுக்கிறார்.
மாலை 4.45 மணிக்கு காலிங்கராயன் மாளிகையில் இருந்து புறப்பட்டு சித்தோடு ஆவின் வளாகத்தில் அமைக் - கப்பட்டுள்ள முன்னாள் எம். பி.யும் கூட்டுறவு பால் பண்ணை நிறுவனருமான எஸ்.கே.பரமசிவம் உருவச்சி லையை மாலை 5.30 மணிக்கு திறந்து வைக்கிறார். பின்னர் சித்தோட்டில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்கும் அவர் மாலை 6.20 மணிக்கு கோவை புறப்பட்டு செல்கிறார். இரவு கோவை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை சென்று சேருகிறார்.
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு வரு கையை முன்னிட்டு அவர் வந்து செல்லும் வழி நெடுகி லும் தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டுள்ளன.
பாதுகாப்பு பணியில் 3,100 போலீசார்
ஞாயிறு, 23 நவம்பர், 2025
14-ஆம் ஆண்டு தலைசிறந்த ஆசிரியர் விருது விழா
14-ஆம் ஆண்டு தலைசிறந்த ஆசிரியர் விருது விழா – ஈரோடு
JCI ஈரோடு எக்ஸெல், ஈரோடு எக்ஸெல் பதிப்பகம் மற்றும் வேளாளர் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி ஆகிய மூன்று அமைப்புகள் இணைந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் தலைசிறந்த ஆசிரியர்களுக்கான 14-வது ஆண்டு விருது வழங்கும் விழா இன்று திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி கஸ்தூரீபா கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் இந்திய உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மற்றும் கேரள மாநில முன்னாள் ஆளுநர் நீதியரசர் P. சதாசிவம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 324 ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
விழாவில் வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் மற்றும் தாளாளர் சந்திரசேகர், டிரஸ்டி யுவராஜா மற்றும் பொறியியல் கல்லூரி முதல்வர் ஜெயராமன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் பற்றிய 10,000-க்கும் மேற்பட்ட தகவல்களை கொண்ட JCI Excell Yellow Pages 2025 புத்தகத்தை நீதியரசர் P. சதாசிவம் வெளியிட்டார்.
விழா ஏற்பாடுகளை ஈரோடு எக்ஸெல் பதிப்பக CEO முருகானந்தம், JCI ஈரோடு எக்ஸெல் தலைவர் நம்பி ஆரூரன், எக்ஸெல் எடுகாம் இயக்குநர் ராஜேந்திர பிரசாத், உதவித்தலைவர் பிரபாகரன், Women Empowerment Cell மற்றும் JCI உறுப்பினர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.
வியாழன், 20 நவம்பர், 2025
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் லஞ்ச வீடியோ பரபரப்பு...!
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் லஞ்ச வீடியோ பரபரப்பு — பிட்னஸ் சர்டிபிகேட்டுக்கு மாணவிகளின் பெற்றோரிடம் பணம் கோரப்பட்டதாக குற்றச்சாட்டு..!
ஈரோட்டையை சேர்ந்த இரண்டு என்.சி.சி. மாணவிகள் உடல் தகுதி சான்றிதழ் (பிட்னஸ் சர்டிபிகேட்) பெறுவதற்காக நேற்று அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது. தேவையான சோதனைகளுக்காக அவர்கள் கண் பரிசோதனை மையத்துக்கு செல்ல, அங்கு பணியாற்றிய ஜி.எச். ஊழியர் ஒருவர் அவர்களிடம் தொடர்பு கொண்டதாக தகவல்
அப்போது அந்த ஊழியர், மருத்துவ சான்றிதழில் டாக்டரின் கையெழுத்து பெற வேண்டுமெனில் பணம் கொடுக்க வேண்டும் என்று இரு மாணவிகளின் பெற்றோரிடம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து சான்றிதழைப் பெறும் நோக்கத்தில், பெற்றோர் லஞ்சம் வழங்கும் காட்சி வீடியோவாக பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வருகிறது
இவ்வீடியோ வெளிவந்ததை அடுத்து, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது
“லஞ்சம் வாங்கிய அந்த ஊழியர் மட்டுமல்ல, இதில் தொடர்புடைய டாக்டர்மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்
அரசு மருத்துவமனைக்குள்ளேயே இப்படிப்பட்ட சம்பவம் நடந்து இருப்பது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
ஈரோட்டில் இந்த விடியம் தற்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி, மருத்துவமனை நிர்வாகத்தையும் பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
பவானி குட்டி.
புதன், 19 நவம்பர், 2025
ஈரோடு மாவட்டத்தில் தடகளப் போட்டிகள் - வீரர் வீராங்கனைகளுக்கு அழைப்பு..!
பவானி குட்டி
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற உள்ள தடகள போட்டியில் பங்கேற்க வீராங்கனையருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய தடகள சங்கம், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து 14, 16 வயதுக்குட்பட்ட வீராங்கனையரின் திறமையை கண்டறிந்து, சர்வதேச மற்றும் ஒலிம்பிக் போட்டிக்கு தயார்படுத்தும் வகையில் 'அஸ்மிதா லிக்' எனப்படும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நாடு முழுதும் நடத்து வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட தடகள சங்கம் சார்பில், மாவட்ட தடகள் சாம்பியன்ஷிப் போட்டி, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சாரதா டெக்னோ பள்ளியின் திடலில் வரும் 21ம் தேதி நடக்க உள்ளது
இதில் மாவட்டத்தில் உள்ள 14, 16 வயதுக்குட்பட்ட வீராங்கனையர் பங்கேற்கலாம். இதுகுறித்து ஈரோடு தடகள சங்க செயலாளர் கோவிந்தராஜூ கூறியதாவது
தடகள வீரங்கனையரின் திறமையை, 'அஸ்மீதா லீக்' எனப்படும் திட்டத்தின் வாயிலாக கண்டறிந்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய தடகள சங்கம் வழங்க முன்வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது
ஒவ்வொரு மாவட்டத்திலும் இளம் வீராங்கனையர், ஒலிம்பிக் கனவுகளுடன் செல்ல பாதை தெரியாமல் சிரமப்பட்டு வரும் நிலையில், இத்திட்டம் அவர்களின் கனவுக்கு பாதை அமைத்து கொடுக்கும்
ஈரோடு மாவட்டத்தில், வரும் 21ம் தேதி இப்போட்டி துவங்கவுள்ளது இதில் 14, 16 வயதுக்கு உட்பட்ட தடகள வீராங்கனையர் பங்கேற்று, தங்கள் திறமையை உலகிற்கு காட்ட வேண்டும்.
ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக் குடம் ஊர்வலம்..!
பவானி குட்டி
ஈரோடு மாவட்டம் பவானி சக்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கூடுதுறையில் தீர்த்தக்குடம் எடுக்க பக்தர்கள் திரளாக வந்தனர்
பவானி அருள்மிகு சக்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்களின் ஆன்மிக உற்சாகம் பெருகியுள்ளது. அதனை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பவானி நகரை அண்மித்த கூடுதுறை நோக்கி தீர்த்தம் எடுக்க திரண்டனர்.
விடியற்காலத்திலிருந்து தொடங்கிய பக்தர்களின் வருகை, மதியம் வரை தொடர்ந்தது. குடும்பம் தோறும் தீர்த்தக்குடங்களை ஏந்தியபடி நீராடி, தேவாரப் பாடல்கள் ஒலிக்க, ஆன்மிக சூழல் நிலவியது. பல இடங்களில் பக்தர்கள் வருகையை ஒழுங்குபடுத்த போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஆலயத்துக்குள் பணிகள் விரைவாக நடைபெற்று வரும் நிலையில், இந்த தீர்த்தக்குடம் எடுக்கும் நிகழ்வின் மூலம் பக்தர்களின் அன்பும், பக்தியும் வெளிப்பட்டது. வரவிருக்கும் கும்பாபிஷேக நாளில் பல ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் தொண்டு அமைப்புகள், பக்தர்களுக்கான குடிநீர், மருத்துவ உதவி, ஓய்வு முகாம்கள் என வசதிகளை ஏற்படுத்தியிருந்தன. பெண்கள், சிறார்களும் பெருமளவில் கலந்து கொண்டு பக்தி நிரம்பிய தோற்றம் ஏற்படுத்தினர்.
சக்தி விநாயகர் பெருமானின் அருளைப் பெற அனைவரும் ஒருமித்தமாக பிரார்த்தனை செய்தனர்.
பவானி அருகே குடிசை வீட்டில் தீ விபத்து..!
பவானி அருகே குடிசை வீட்டில் தீ விபத்து..!
பவானி குட்டி
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஜம்பை நல்லிபாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி (45) இவர் கூலித் தொழிலாளி ஆவார். இவர் வேலைக்கு சென்று விட் டார். வீட்டில் இருந்த இவருடைய தாயார் சமையல் செய்வ தற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது திடீரென தீப்பிடித்து குடிசையில் பரவியது.
மூர்த்தியின் தாயார் வெளியே ஓடி வந்தார். இது குறித்து பவானி தீயணைப்பு துறை நிலை அலுவலர் பழனிச்சாமி தலைமையில் சென்றனர். அந்த குடிசைக்கு தண்ணீரை பீச்சடித்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். வீட்டில் இருந்த 2 பவுன் நகை பணம் தீயில் எரிந்து நாசமானது. கியாஸ் கசிவு காரணமாக இந்த விபத்து என்பதை இருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.


