வெள்ளி, 26 ஜூலை, 2024
கோபி அருகே ஜெராக்ஸ் மிஷினில் கள்ளநோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்ட 4 பேர் கைது
பவானியில் மனமகிழ் மன்றம் பெயரில் சூதாட்ட கிளப்: திமுக நிர்வாகி மீது வழக்குப் பதிவு
ஈரோட்டில் ஆம்னி காரில் 750 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
ஈரோடு மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
ஈரோட்டில் சுற்றுலா வேன் தீப்பிடித்து எரிந்து சேதம்
கால்நடை மருத்துவ ஆம்புலன்சில் பணி: ஈரோட்டில் நாளை (27ம் தேதி) நேர்காணல்
வியாழன், 25 ஜூலை, 2024
கோபி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்
ஈரோட்டில் மின்சார கட்டண உயர்வைக் கண்டித்து தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்
கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணி 70 சதவீதம் முடிவு: அமைச்சர் முத்துசாமி
புதன், 24 ஜூலை, 2024
சென்னிமலை முருகன் கோயிலில் ரூ.7.53 கோடியில் மேம்பாட்டு பணி துவக்கி வைத்த முதல்வர்
மத்திய பட்ஜெட்: கண்துடைப்பு பட்ஜெட் முன்னாள் தென்னக ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் பாஷா
சத்தியில் மக்களுடன் முதல்வர் குறைதீர் முகாமினை துவக்கி வைத்த ஆட்சியர்
அந்தியூர் குருநாதசுவாமி கோயில் ஆடித்தேர் திருவிழா கொடியேற்றம்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே புதுப்பாளையத்தில் புகழ்பெற்ற குருநாதசுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் நடப்பாண்டு ஆடித்தேர் திருவிழா, கடந்த 17ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து, இன்று (24ம் தேதி) காலை 11 மணிக்கு புதுப்பாளையம் மடப்பள்ளியில் இருந்து, பெருமாள் சுவாமி, காமாட்சியம்மன், குருநாதசுவாமிகளின் வெள்ளிக் கவசம் மற்றும் பூஜைப் பொருட்கள் அடங்கிய மூங்கில் பெட்டகத்தை சுமந்து வனக் கோயிலுக்கு பக்தர்கள் எடுத்துச் சென்றனர்.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட, 60 அடி உயர மூங்கில் கம்பத்தில் கொடி கட்டி, சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர், பக்தர்கள் அனைவரும் சேர்ந்து கொடிக் கம்பத்தை நிலை நிறுத்தினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து, வரும் 31ம் தேதி முதல் வன பூஜை நடைபெற உள்ளது. இதனையடுத்து, அடுத்த மாதம் ஆகஸ்ட் 7ம் தேதி தேர்த்திருவிழாவுடன், தென்னிந்திய அளவில் பிரசித்தி பெற்ற கால்நடை சந்தை தொடங்கி, 10ம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும், இதில் பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெறும்.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (25ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள்
செவ்வாய், 23 ஜூலை, 2024
ஈரோட்டில் இலவச கம்ப்யூட்டர் டேலி பயிற்சி: ஆகஸ்ட் 1ம் தேதி தொடக்கம்
ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 683 மனுக்கள்
மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டு கலைந்திடுவதற்காக வருவாய் கோட்ட அளவில் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையிலும் மற்றும் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டு கலைந்திடுவதற்கு இன்று (23ம் தேதி) ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச வீட்டுமனை பட்டா, வீடு, பேட்டரியால் இயங்கும் இரு சக்கர வாகனம், தொழில் துவங்க கடனுதவி, இ-சேவை மையம் துவங்க, மாற்றுத்திறனாளி உபகரணங்கள், பெட்ரோல் ஸ்கூட்டர், பராமரிப்பு உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட 683 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றார்.
தொடர்ந்து, பெறப்பட்ட மனுக்களை தொடர்புடைய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகள் ஆகியவை குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கமாக எடுத்துரைத்தார்.
இக்கூட்டத்தில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம்குமார் (பொ), இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.அம்பிகா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.