Erode லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Erode லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 13 ஜூன், 2025

மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் அலை மோதிய விவசாயிகள் பொதுமக்கள் கூட்டம்..!

மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் அலை மோதிய விவசாயிகள் பொதுமக்கள் கூட்டம்..!


மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் அலை மோதிய விவசாயிகள் பொதுமக்கள் கூட்டம்..!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கசாவடி அருகே வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை நேற்று முன்தினம்  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

இந்த கண்காட்சியானது வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, சர்க்கரைத்துறை, வேளாண் பொறியியல் துறை என 13 தலைப்புகளின் கீழ் 218 அரங்குகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 
இந்நிலையில், 3-வது நாள் மற்றும் நிறைவு நாளான இன்று கண்காட்சி காலை 8 மணிக்கு தொடங்கியது. 

இதில், காலை முதலே ஈரோடு மாவட்டம் மட்டும் அல்லாது கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர், சேலம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருச்சி போன்ற தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் அவர்களது குடும்பத்தினருடனும் வந்து ஆர்வமுடன் பார்வையிட்டனர். 
இதுதவிர வேளாண் கல்லூரி மாணவ-, மாணவிகள், பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் திரளாக வந்து கண்காட்சியினை பார்வையிட்டனர். 

முகப்பில் நவீன முறையில் சோளப்பயிர் சாகுபடி, விதவிதமான நெல் விதைகளுடன் சாகுபடி தொழில் நுட்ப காட்சி திடல், நகர்த்தி வைத்து கொள்ளும் வகையிலான மாட்டு பட்டி, கரும்பை வெட்டி, கட்டாக்கி லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றும் இயந்திரம், வேலையாட்கள் பற்றாக்குறையை சமாளிக்கும் பல்வேறு நவீன இயந்திரங்களை பார்வையிட்டதுடன், செயல்பாடுகளை விவசாயிகளும், பொதுமக்களும் வேளாண் துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.


நெல், மஞ்சள், வாழை, முருங்கை உட்பட பல்வேறு பயிர்களில் குறைந்த நாட்களில் அதிக மகசூல் பெறும் ரகங்களை காட்சிப்படுத்தியதுடன், விதைகளையும் விற்பனை செய்தனர். 


பட்டன் காளான், சிப்பி களான் என காளான் வளர்ப்பு, பெர்ரி, புளூபெர்ரி பசுமை கூடில் உற்பத்தி, சின்ன வெங்காயம், பெரிய வெங்காய உற்பத்தி உயர்வுக்கான தொழில்நுட்ப விளக்க திடல், தென்னை மரம், நீரா பான உற்பத்தி என 60க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் அவர்களது உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தி இருந்தனர். 


இயற்கை மற்றும் பழங்களில் உருவாக்கப்பட்ட ஐஸ்கிரீம், நீரா, டின்களில் இளநீர், கரும்பு சாறு போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்து வருவது குறித்தும் காட்சிப்படுத்தினர். 


வேளாண் கண்காட்சியின் ஒவ்வொரு அரங்கிலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய விளக்கம் அளித்து, அதற்கான துண்டு பிரசுரங்களையும் அலுவலர்கள் வழங்கினர். இதில், பாரம்பரிய நெல், மஞ்சள் பயிர்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த அரங்கும், காளாண் வளர்ப்பு கூடில், பசுமை குடிலில் புளூ பெர்ரி வளர்ப்பு, முருங்கையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்திக்கான அரங்குகள் விவசாயிகளின் கவனத்தை ஈர்த்தது. 


மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி இன்று மாலை 7 மணியுடன் நிறைவு பெறுவதால், விவசாயிகள், பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் ஏராளமான போலீசார், தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

செவ்வாய், 10 ஜூன், 2025

ஈரோடு பெருந்துறையில் இன்று மண்டல அளவிலான விவசாய கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

ஈரோடு பெருந்துறையில் இன்று மண்டல அளவிலான விவசாய கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்


ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே, மண்டல அளவிலான விவசாய கண்காட்சி மற்றும் கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 11) தொடங்கி வைக்கிறார்.


சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் திரு. ஸ்டாலின், திருப்பூரில் நடைபெறும் கட்சி நிர்வாகியின் குடும்ப வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பின்னர் பெருந்துறைக்குச் செல்வார். மதியம் 12.30 மணிக்கு கண்காட்சியைத் தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, கூட்டத்தில் உரையாற்றுவார்.

தோட்டக்கலை மற்றும் தோட்டப் பயிர்கள் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரண்டு நாள் நிகழ்வில் 10 மாவட்டங்களைச் சேர்ந்த அரசுத் துறைகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்பார்கள். கண்காட்சியில் நவீன மற்றும் பாரம்பரிய விதைகள், பழச் செடிகள், தட்டு நாற்றுகள், பதப்படுத்தப்பட்ட விவசாய பொருட்கள், உரங்கள், பயிர் பாதுகாப்பு ரசாயனங்கள், நவீன விவசாய இயந்திரங்கள் மற்றும் நுண்ணீர் பாசன உபகரணங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் அதிகாரிகள் மற்றும் கட்சியினர் செய்துள்ளனர்.

இதில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி சந்திரகுமார், திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் தோப்பு வெங்கடாசலம், தெற்கு மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், செல்லப்பொன்னி, பொதுக்குழு உறுப்பினர் குமாரசாமி, மணிராசு, பகுதி செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர் கேபி சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்று முழு வீச்சில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

திங்கள், 9 ஜூன், 2025

பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி அமைச்சர் சு.முத்துசாமயிடம் பரபரப்பு மனு .!!

பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி அமைச்சர் சு.முத்துசாமயிடம் பரபரப்பு மனு .!!


பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி ஈரோடு மாவட்ட அனைத்துக் கட்சிகளின் அரசியல் நிர்வாகிகளும், மண்டல ஜமாத்துல் உலமா சபை நிர்வாகிகள் திரண்டு தமிழ்நாடு வீட்டு வசதி துறை மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் சு முத்துசாமி அவர்களிடம் மனு வழங்கினர்.

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை ஈரோடு மண்டல  சபையில் உள்ள இமாம்களிடம் ஜுபைர் அகமது, நிசார் முகமது மற்றும்  ஆகிய இருவரும் 2021-2022 ஆகிய ஆண்டுகளில் அறிமுமாகி பழைய இரும்பு வியாபாரம், ரியல் எஸ்டேட், நான்கு சக்கர வாகனங்கள் ஆகிய தொழில்களில் முதலீடு செய்து வியாபாரம் செய்து வருகிறோம் என்றும் அதில் நீங்களும் முதலீடு செய்தால் நல்ல லாபம் தருகிறோம் என்று ஆசை வார்த்தைகளை கூறி சுமார் 2 கோடியே 75 லட்சம் ரூபாய்களை பெற்றுக் கொண்டு பின்னர் பணத்தை திருப்பி கேட்டால் கொடுக்காமல் அலைக்கழித்து ஏமாற்றியுள்ளனர்.

அது மட்டுமின்றி  மேற்படி இருவரும் எங்களுடைய ஆலிம் பெருமக்களையும் அவர்களது குடும்பத்தார்களையும் பல்வேறு வகையில் அச்சுறுத்தும் விதமாக மிரட்டல் விடுத்து வருகின்றார்கள் என்றும் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அனைத்து கட்சியின் சார்பாகவும் மனு வழங்கினோம் என தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், 3 ஜூன், 2025

இன்று 102வது பிறந்தநாள் விழா | ஈரோட்டில் கருணாநிதி சிலைக்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை | நலத்திட்ட உதவிகளும் வழங்கினர்

இன்று 102வது பிறந்தநாள் விழா | ஈரோட்டில் கருணாநிதி சிலைக்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை | நலத்திட்ட உதவிகளும் வழங்கினர்


இன்று 102 - வது பிறந்தநாள் விழா - ஈரோட்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலைக்கு அமைச்சர் முத்துசாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை - நலத்திட்ட உதவிகளும் வழங்கினர்...

தி.மு.க.வின் முன்னாள் தலைவரும், முன்னாள் முதல் - அமைச்சருமான மறைந்த கருணாநிதியின் 102 -வது பிறந்தநாள் விழா இன்று தி.மு.க.வினரால் செம்மொழி நாளாக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை ஒட்டி தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்தும், நலத்திட்ட உதவிகளும் வழங்கினர்.

ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான முத்துசாமி தலைமையில் ஈரோடு பெரியார் நகரில் உள்ள முகாம் அலுவலகத்திலும், மணல்மேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திலும் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள கருணாநிதி சிலைக்கு அமைச்சர் முத்துசாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சந்திரகுமார் எம்.எல்.ஏ, மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், மண்டல தலைவர் பி.கே. பழனிச்சாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம், மாநகரத் துணைத் தலைவர் சந்திரசேகரன், பகுதி செயலாளர் கோட்டை ராமச்சந்திரன், அக்னி சந்துரு, கவுன்சிலர்கள் கீதாஞ்சலி செந்தில்குமார், வக்கீல் ரமேஷ் குமார், நிர்வாகி கேபிள் செந்தில் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.