Erode லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Erode லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 23 ஜூன், 2025

கொடுமுடி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என சங்கு ஊதும் போராட்டம்..!

கொடுமுடி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என சங்கு ஊதும் போராட்டம்..!


வெளி மாநில பக்தர்கள் வருகை புரிவதால் கொடுமுடி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என காங்கிரஸார் சங்கு ஊதும் போராட்டம்..!

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக நடைபெற்ற அரசியலமைப்பை காப்போம் எனும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப் பெருந்தகையிடம், வருகின்ற 30/06/2025 அன்று ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக நடைபெறும் ஈரோடு ரயில் நிலைய நிர்வாகத்தை கண்டித்து, சங்கு ஊதும் போராட்டம் நடைபெறும் என முன்னாள் தென்னக ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினரும் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவரான கே. என்.பாஷா ஈரோடு மாவட்ட காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் ம. முகமது அர்சத், ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி ராஜன் ஆகியோர் கோரிக்கை மனுவாக வழங்கினர்.

அதில், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி.ராபர்ட் ப்ரூஸ் அவர்களிடம், இந்த நடைபெறும் ஆர்ப்பாட்டக் கோரிக்கையை கொடுத்தபோது அவர் படித்துப் பார்த்தபின் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கொடுமுடி மிகவும் புகழ் பெற்ற ஆன்மீக சிறப்பு வாய்ந்த ஊராகும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி  மகுடேஸ்வரர் ஆலயத்திற்கும் காவிரி ஆற்றங்கரைக்கும் பல வெளி மாநில பக்தர்கள் வருகை புரிவதால் கொடுமுடி ரயில் நிலையத்தில் அனைத்து  ரயில்கள் நின்று சென்றன, 2021 கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் கொடுமுடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வரும் பாராளுமன்ற கூட்டர் தொடரில்  குரல் கொடுப்பேன் என்பதுடன்,


ஒருவேளை ரயில்வே துறை இந்த கோரிக்கையை நிறைவேற்றமல் மெத்தன போக்கில் இருந்தால் ஈரோடு மாவட்டம் கொடுமுடி மக்களோடு, காங்கிரசார் சேர்ந்து நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்வேன் என்றார்.

ஞாயிறு, 22 ஜூன், 2025

திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கேட்கப்படும் - மதிமுக மாநில பொதுக்குழுவில் தீர்மானம்

திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கேட்கப்படும் - மதிமுக மாநில பொதுக்குழுவில் தீர்மானம்


அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டப்பேரவை தேர்தலில், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கு ஏதுவாக கூடுதல் தொகுதிகளைக் கூட்டணியில் பெற்று போட்டியிட வேண்டும் என மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

மதிமுகவின் 31 -வது மாநில பொதுக்குழுக் கூட்டம், கட்சியின் அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூன்ராஜ் தலைமையில் ஈரோட்டில் இன்று (ஜூன் 22) காலை நடந்தது. கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சி.ஏ.சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா, ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் நா.முருகன், ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் மு.கோபால், மேற்கு மாவட்ட செயலாளர் கே.கேபாஸ்பரன், கிழக்கு மாவட்ட செயலாளர் சோ. வீரக்குமாரன், இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் தமிழீழ சோமு ( எ ) லோ.சோமசுந்தரம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

**திராவிட இயக்கத்துக்கு எதிரான பகை சக்திகள் தமிழ்நாட்டைக் கைப்பற்ற முனைந்து வரும் சூழலில், தேர்தல் கூட்டணி தொடர்பாக, 2017 -ம் ஆண்டிலிருந்து எடுத்த முடிவை, எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் மதிமுக தொடர்ந்து கடைபிடிக்கும், 

* *இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக திகழும் தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு ஆளுமை திறனோடு வழிநடத்தும் திராவிட மாடல் அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக்களைத் தெரிவிப்பதுடன், 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று நல்லாட்சி தொடரும்.


**மதிமுக உதயமானது முதல் 8 தேர்தல்களைச் சந்தித்துள்ளது. 1997 -ம் ஆண்டு முதல் 2010 வரையில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக திகழ்ந்தது. எனவே, 2026 சட்டப்பேரவை தேர்தலில் மதிமுக தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கு ஏதுவாக கூடுதல் தொகுதிகளைக் கூட்டணியில் பெற்று போட்டியிட வேண்டும்.

* *அண்ணா பிறந்தநாள் விழாவை ஒட்டி, செப்-15-ல் திருச்சியில் மாநாடு நடத்தப்படும்.

**கட்சியின் சார்பு அணி நிர்வாகிகளுக்கு மண்டல வாரியாக திராவிட பயிலரங்கம் நடத்தப்படும்.

**தமிழ் மக்களின் தாய்மடியான கீழடியை கருவறுக்க மத்திய பாஜக அரசு அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறது. பல்வேறு சதிகளின் மூலமாக தமிழ் மொழியையும், தமிழரின் தொன்மை வரலாற்றையும் இருட்டடிப்பு செய்ய முயலும் பாசிச சக்திகளை முறியடிக்க வேண்டியது தமிழ் மக்களின் கடமை ஆகும்,


* *டெல்லியில் குடியிருப்புகளை இழந்த தமிழர்களுக்கு உரிய நியாயம் கிடைத்திடும் வகையில், தமிழக அரசு செய்ய வேண்டும்.

**கல்வித்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருந்து வருகிறது. இச்சூழலில் தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தை முடக்கி வைக்கும் வகையில் இத்திட்டத்துக்காக மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ. 617 கோடியை விடுவிக்காமல் அடாவடியாக செயல்படுவது கடும் கண்டனத்துக்குரியது, இந்த நிலையில், தமிழ்நாடு அரசு முழு நிதி ஒதுக்கீடும் செய்து மாணவர்களின் கல்வி நலனை பாதுகாக்க வேண்டும்.

**வக்ஃப் திருத்த சட்டத்தையும் திரும்பப் பெறுவதற்கு ஜனநாயக முற்போக்கு சக்திகள் இணைந்து போராட வேண்டும்.


**பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம் செய்யப்படும் விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

**அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக கட்டமைப்புகளை மேம்படுத்தி ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களின் கல்வி நலனை பேணி பாதுகாக்க வேண்டும்.

* *மருத்துவ காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். அரசு மருத்துவமனைகளை மேலும் தரம் உயர்த்தி, அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்.

**இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு சுதந்திரமான பன்னாட்டு நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டு, இனப்படுகொலைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

**விவசாயிகளுக்கு கடன் வழங்க கூட்டுறவுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை திரும்பப்பெற வேண்டும்.

**விவசாய நிலங்களில் வனவிலங்குகளால் ஏற்படும் சேதத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

**பவானி நதி மாசடையாமல் காப்பாற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

**பாண்டியாறு - மாயாறு இணைப்புத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 28 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

வெள்ளி, 20 ஜூன், 2025

தமிழகத்தில் இலவச வேட்டி சேலை உற்பத்திக்கான நூல்களை வழங்காதததால் வேலை வாய்ப்பின்றி காத்திருப்பதாக தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு வேதனை

தமிழகத்தில் இலவச வேட்டி சேலை உற்பத்திக்கான நூல்களை வழங்காதததால் வேலை வாய்ப்பின்றி காத்திருப்பதாக தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு வேதனை


தமிழகத்தில் இலவச வேட்டி சேலை உற்பத்திக்கான ஆணை வெளியிட்டு இரு மாதங்கள் கடந்தும் உற்பத்திக்கான நூல்களை வழங்காதததால் விசைத்தறி உரிமையாளர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் காத்திருப்பதாக விசைத்தறி உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்


தமிழகத்தில் விசைத்தறி உரிமையாளர்கள்,தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்காக நியாயவிலைக் கடைகள் மூலம் அரசின் இலவச வேட்டி சேலை வழங்கப்படுகிறது.இதற்காக ஆண்டுதோறும் இலவச வேட்டி சேலை உற்பத்திக்கான ஆணை வழங்கப்பட்டு வருகிறது.இதனை தொடர்ந்து இந்த ஆண்டு முதல் முறையாக 680கோடி ரூபாய் மதிப்பீட்டில் இலவச வேட்டி சேலை உற்பத்திக்கான ஆணை முன்கூட்டியே வழங்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இலவச வேட்டி சேலை உற்பத்திக்கான நூல்கள் உடனடியாக வழங்கப்படும் என விசைத்தறி உரிமையாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இரு மாதங்கள் கடந்தும் இதுவரை இலவச வேட்டி சேலைக்கான உற்பத்திக்கான (பாவு,ஊடை)நூல்களை அரசு இதுவரை வழங்காதததால் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழக்கும் சூழல் இருப்பதாக விசைத்தறி உரிமையாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.இது தொடர்பாக தமிழ்நாடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் சுரேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.,

அப்போது பேசுகையில்...

அவர் கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு விலையில்லா வேட்டி சேலை உற்பத்தி தூங்குவதற்கான அரசாணை காலதாமதமாக வந்ததால் கடந்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் இலவச வேட்டி சாலை உற்பத்தியை முடிக்க முடியாத நிலை ஏற்பட்ட நிலையில் அரசு அதில் 32 லட்சம் சேவைகளும் 31 லட்சம் வேஷ்டிகளும் இருப்பு வைத்துக்கொண்டு இந்தாண்டு ஒரு கோடியே 77 லட்சம் வேஷ்டி சேலைகளில் கடந்த வருட இருப்பை தவிர்த்து இந்த ஆண்டு ஒரு கோடியே 42 லட்சம் வேஷ்டி மற்றும் சேலைகள் உற்பத்தி செய்வதற்காக இலக்கு நிர்ணயத்துள்ளது, மேலும்  கைத்தறி மற்றும் பெடல் தரிகளுக்கான மொத்த ஆர்டரில் இருந்து கழிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது அரசு இந்த நடவடிக்கை மூலம் நெசவாளர்களுக்கு இரண்டு மாத கால இலவச வேட்டி சேலை உற்பத்தியில் வேலை வாய்ப்பு இல்லாத நிலை உருவாகும் என்பதால் அரசு ஒரு கோடியே 77லட்சம் இலவச வேட்டி சேலை உற்பத்திக்கான ஆணையும் உற்பத்திக்கான நூல்களையும் உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளதாக மாநிலத் தலைவர் எல்.கே.எம் சுரேஷ் தெரிவித்தார்.


பேட்டியின் போது மாநிலச் செயலாளர் இரா.வேலுமணி, மாநில பொருளாளர் கே.பாலசுப்பிரமணியம், ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட தமிழ்நாடு விசைத்தறி  சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

வெள்ளி, 13 ஜூன், 2025

மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் அலை மோதிய விவசாயிகள் பொதுமக்கள் கூட்டம்..!

மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் அலை மோதிய விவசாயிகள் பொதுமக்கள் கூட்டம்..!


மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் அலை மோதிய விவசாயிகள் பொதுமக்கள் கூட்டம்..!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கசாவடி அருகே வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை நேற்று முன்தினம்  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

இந்த கண்காட்சியானது வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, சர்க்கரைத்துறை, வேளாண் பொறியியல் துறை என 13 தலைப்புகளின் கீழ் 218 அரங்குகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 
இந்நிலையில், 3-வது நாள் மற்றும் நிறைவு நாளான இன்று கண்காட்சி காலை 8 மணிக்கு தொடங்கியது. 

இதில், காலை முதலே ஈரோடு மாவட்டம் மட்டும் அல்லாது கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர், சேலம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருச்சி போன்ற தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் அவர்களது குடும்பத்தினருடனும் வந்து ஆர்வமுடன் பார்வையிட்டனர். 
இதுதவிர வேளாண் கல்லூரி மாணவ-, மாணவிகள், பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் திரளாக வந்து கண்காட்சியினை பார்வையிட்டனர். 

முகப்பில் நவீன முறையில் சோளப்பயிர் சாகுபடி, விதவிதமான நெல் விதைகளுடன் சாகுபடி தொழில் நுட்ப காட்சி திடல், நகர்த்தி வைத்து கொள்ளும் வகையிலான மாட்டு பட்டி, கரும்பை வெட்டி, கட்டாக்கி லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றும் இயந்திரம், வேலையாட்கள் பற்றாக்குறையை சமாளிக்கும் பல்வேறு நவீன இயந்திரங்களை பார்வையிட்டதுடன், செயல்பாடுகளை விவசாயிகளும், பொதுமக்களும் வேளாண் துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.


நெல், மஞ்சள், வாழை, முருங்கை உட்பட பல்வேறு பயிர்களில் குறைந்த நாட்களில் அதிக மகசூல் பெறும் ரகங்களை காட்சிப்படுத்தியதுடன், விதைகளையும் விற்பனை செய்தனர். 


பட்டன் காளான், சிப்பி களான் என காளான் வளர்ப்பு, பெர்ரி, புளூபெர்ரி பசுமை கூடில் உற்பத்தி, சின்ன வெங்காயம், பெரிய வெங்காய உற்பத்தி உயர்வுக்கான தொழில்நுட்ப விளக்க திடல், தென்னை மரம், நீரா பான உற்பத்தி என 60க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் அவர்களது உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தி இருந்தனர். 


இயற்கை மற்றும் பழங்களில் உருவாக்கப்பட்ட ஐஸ்கிரீம், நீரா, டின்களில் இளநீர், கரும்பு சாறு போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்து வருவது குறித்தும் காட்சிப்படுத்தினர். 


வேளாண் கண்காட்சியின் ஒவ்வொரு அரங்கிலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய விளக்கம் அளித்து, அதற்கான துண்டு பிரசுரங்களையும் அலுவலர்கள் வழங்கினர். இதில், பாரம்பரிய நெல், மஞ்சள் பயிர்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த அரங்கும், காளாண் வளர்ப்பு கூடில், பசுமை குடிலில் புளூ பெர்ரி வளர்ப்பு, முருங்கையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்திக்கான அரங்குகள் விவசாயிகளின் கவனத்தை ஈர்த்தது. 


மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி இன்று மாலை 7 மணியுடன் நிறைவு பெறுவதால், விவசாயிகள், பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் ஏராளமான போலீசார், தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

செவ்வாய், 10 ஜூன், 2025

ஈரோடு பெருந்துறையில் இன்று மண்டல அளவிலான விவசாய கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

ஈரோடு பெருந்துறையில் இன்று மண்டல அளவிலான விவசாய கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்


ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே, மண்டல அளவிலான விவசாய கண்காட்சி மற்றும் கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 11) தொடங்கி வைக்கிறார்.


சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் திரு. ஸ்டாலின், திருப்பூரில் நடைபெறும் கட்சி நிர்வாகியின் குடும்ப வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பின்னர் பெருந்துறைக்குச் செல்வார். மதியம் 12.30 மணிக்கு கண்காட்சியைத் தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, கூட்டத்தில் உரையாற்றுவார்.

தோட்டக்கலை மற்றும் தோட்டப் பயிர்கள் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரண்டு நாள் நிகழ்வில் 10 மாவட்டங்களைச் சேர்ந்த அரசுத் துறைகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்பார்கள். கண்காட்சியில் நவீன மற்றும் பாரம்பரிய விதைகள், பழச் செடிகள், தட்டு நாற்றுகள், பதப்படுத்தப்பட்ட விவசாய பொருட்கள், உரங்கள், பயிர் பாதுகாப்பு ரசாயனங்கள், நவீன விவசாய இயந்திரங்கள் மற்றும் நுண்ணீர் பாசன உபகரணங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் அதிகாரிகள் மற்றும் கட்சியினர் செய்துள்ளனர்.

இதில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி சந்திரகுமார், திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் தோப்பு வெங்கடாசலம், தெற்கு மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், செல்லப்பொன்னி, பொதுக்குழு உறுப்பினர் குமாரசாமி, மணிராசு, பகுதி செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர் கேபி சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்று முழு வீச்சில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

திங்கள், 9 ஜூன், 2025

பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி அமைச்சர் சு.முத்துசாமயிடம் பரபரப்பு மனு .!!

பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி அமைச்சர் சு.முத்துசாமயிடம் பரபரப்பு மனு .!!


பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி ஈரோடு மாவட்ட அனைத்துக் கட்சிகளின் அரசியல் நிர்வாகிகளும், மண்டல ஜமாத்துல் உலமா சபை நிர்வாகிகள் திரண்டு தமிழ்நாடு வீட்டு வசதி துறை மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் சு முத்துசாமி அவர்களிடம் மனு வழங்கினர்.

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை ஈரோடு மண்டல  சபையில் உள்ள இமாம்களிடம் ஜுபைர் அகமது, நிசார் முகமது மற்றும்  ஆகிய இருவரும் 2021-2022 ஆகிய ஆண்டுகளில் அறிமுமாகி பழைய இரும்பு வியாபாரம், ரியல் எஸ்டேட், நான்கு சக்கர வாகனங்கள் ஆகிய தொழில்களில் முதலீடு செய்து வியாபாரம் செய்து வருகிறோம் என்றும் அதில் நீங்களும் முதலீடு செய்தால் நல்ல லாபம் தருகிறோம் என்று ஆசை வார்த்தைகளை கூறி சுமார் 2 கோடியே 75 லட்சம் ரூபாய்களை பெற்றுக் கொண்டு பின்னர் பணத்தை திருப்பி கேட்டால் கொடுக்காமல் அலைக்கழித்து ஏமாற்றியுள்ளனர்.

அது மட்டுமின்றி  மேற்படி இருவரும் எங்களுடைய ஆலிம் பெருமக்களையும் அவர்களது குடும்பத்தார்களையும் பல்வேறு வகையில் அச்சுறுத்தும் விதமாக மிரட்டல் விடுத்து வருகின்றார்கள் என்றும் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அனைத்து கட்சியின் சார்பாகவும் மனு வழங்கினோம் என தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், 3 ஜூன், 2025

இன்று 102வது பிறந்தநாள் விழா | ஈரோட்டில் கருணாநிதி சிலைக்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை | நலத்திட்ட உதவிகளும் வழங்கினர்

இன்று 102வது பிறந்தநாள் விழா | ஈரோட்டில் கருணாநிதி சிலைக்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை | நலத்திட்ட உதவிகளும் வழங்கினர்


இன்று 102 - வது பிறந்தநாள் விழா - ஈரோட்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலைக்கு அமைச்சர் முத்துசாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை - நலத்திட்ட உதவிகளும் வழங்கினர்...

தி.மு.க.வின் முன்னாள் தலைவரும், முன்னாள் முதல் - அமைச்சருமான மறைந்த கருணாநிதியின் 102 -வது பிறந்தநாள் விழா இன்று தி.மு.க.வினரால் செம்மொழி நாளாக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை ஒட்டி தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்தும், நலத்திட்ட உதவிகளும் வழங்கினர்.

ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான முத்துசாமி தலைமையில் ஈரோடு பெரியார் நகரில் உள்ள முகாம் அலுவலகத்திலும், மணல்மேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திலும் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள கருணாநிதி சிலைக்கு அமைச்சர் முத்துசாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சந்திரகுமார் எம்.எல்.ஏ, மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், மண்டல தலைவர் பி.கே. பழனிச்சாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம், மாநகரத் துணைத் தலைவர் சந்திரசேகரன், பகுதி செயலாளர் கோட்டை ராமச்சந்திரன், அக்னி சந்துரு, கவுன்சிலர்கள் கீதாஞ்சலி செந்தில்குமார், வக்கீல் ரமேஷ் குமார், நிர்வாகி கேபிள் செந்தில் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.