Erode லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Erode லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 21 செப்டம்பர், 2025

🏛️ ஈரோடு சட்டக் கல்லூரியில் தேசிய மாதிரி நீதிமன்ற போட்டி – லூமினா 2025 நிறைவு விழா

🏛️ ஈரோடு சட்டக் கல்லூரியில் தேசிய மாதிரி நீதிமன்ற போட்டி – லூமினா 2025 நிறைவு விழா


🏛️ ஈரோடு சட்டக் கல்லூரியில் தேசிய மாதிரி நீதிமன்ற போட்டி – லூமினா 2025 சிறப்பான நிறைவு விழா

ஈரோடு அரசு சட்டக் கல்லூரியில் தேசிய அளவிலான மாதிரி நீதிமன்ற (Moot Court) போட்டிகள் இரு நாட்கள் சிறப்பாக நடைபெற்றன.
சுற்றுச்சூழல் சட்டம் குறித்த இந்த போட்டி “லூமினா 2025” என்ற தலைப்பில் கல்லூரித் தலைவர் சிந்து ரவிச்சந்திரன் தலைமையில் அமைக்கப்பட்டது.

இந்தியா முழுவதிலுமிருந்து 24 கல்லூரிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்று தங்கள் சட்ட அறிவு, வாத திறன், வழக்கு நடத்தும் திறன் ஆகியவற்றை வெளிப்படுத்தினர்.


🌟 சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்பு 

போட்டியின் நிறைவு விழாவுக்கு சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஏ. நக்கீரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தினார்.
அவருடன் சென்னை நீதிபதி ரிஹானா பேகம், கோவை நீதிபதி ஷர்மிளா, ஈரோடு நீதிபதிகள் இளவரசி, ராஜ்குமார், ரத்தினசாமி உள்ளிட்ட நீதிபதிகள் பங்கேற்று போட்டிகளை மதிப்பீடு செய்தனர்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சக்திவேல், அன்பரசி மற்றும் அரசு சட்டக் கல்லூரி பேராசிரியர்கள் கருப்புசாமி, முஹம்மது ரஃபீக், முஹம்மது அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்தனர்.


🏆 வெற்றி பெற்ற அணிகள்
இறுதிப் போட்டியில் உற்சாகமான தருணங்கள் நிகழ்ந்தன.

முதல் இடம் : திருச்சி தனலட்சுமி அரசு சட்டக் கல்லூரி – பிரம்மாண்டமான சுழற்கோப்பை, ரூ.18,000 ரொக்கப் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

இரண்டாம் இடம் : சென்னை சத்தியபாமா சட்டக் கல்லூரி – சுழற்கோப்பை, ரூ.10,000 ரொக்கப் பரிசு, சான்றிதழ் பெற்றது, மேலும் சிறப்பாக தனித்திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு சுழற்கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

 மாணவர்களின் பெருமை தருணம்

விருதுகள் வழங்கும் நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் தங்களது மகிழ்ச்சியை நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினர். சட்ட அறிவும், நீதிமன்ற நடைமுறைகளும் வளர்க்கும் வகையில் இந்த போட்டிகள் மாணவர்களுக்கு முக்கியமான அனுபவம் அளித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

✨ நீதிபதிகளின் பாராட்டு

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் பேசுகையில், “சட்டம் என்பது சமூக மாற்றத்துக்கான சக்திவாய்ந்த கருவி, இளைய தலைமுறை இந்தப் போட்டிகள் மூலம் சட்டத் திறனை வளர்த்துக் கொண்டு நீதிக்கான அர்ப்பணிப்புடன் சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும்” என்று மாணவர்களை வாழ்த்தினார்.

📌 இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் என். முகமது அக்பர் அலி, துணைத் தலைவர் காயத்ரி ரவிச்சந்திரன், இணைச் செயலாளர் அருண் பாலாஜி, சாய் சிந்து செவிலியர் கல்லூரி துணைத் தலைவர் கிஷோர் ரவிச்சந்திரன், இணைச் செயலாளர் சாருரூபா கிஷோர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று விழாவை சிறப்பித்ததுடன், வெற்றிவாக சூடிய மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்

இந்தப் போட்டிகள் மூலம் மாணவர்கள் சட்ட அறிவை மேம்படுத்தி, நீதிமன்ற நடைமுறைகளில் நேரடி அனுபவத்தை பெற்றனர். ஈரோடு சட்டக் கல்லூரி நடத்திய லூமினா 2025 தேசிய மாதிரி நீதிமன்ற போட்டி சட்டக் கல்விக்கு புதிய உயரத்தைச் சேர்த்த முக்கிய நிகழ்வாக நினைவில் நிற்கிறது.

வியாழன், 18 செப்டம்பர், 2025

நமது பாரத பிரதமர் தற்போதுள்ள பொருளாதார நிலையை எதிர்கொள்ள தற்சார்பு பொருளாதாரத்தை வலியுறுத்தி உள்ளார் - என்.டி ராமராவ் மகள் புரந்தேஸ்வரி பேச்சு

நமது பாரத பிரதமர் தற்போதுள்ள பொருளாதார நிலையை எதிர்கொள்ள தற்சார்பு பொருளாதாரத்தை வலியுறுத்தி உள்ளார் - என்.டி ராமராவ் மகள் புரந்தேஸ்வரி பேச்சு


ஈரோட்டில் சார்பில் தற்சார்பு பாரதம் குறித்த கருத்தரங்கத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாஜக நிர்வாகிகள் பங்கேற்பு

தமிழக பாஜக சார்பில் தற்சார்பு பாரதம்என்ற தலைப்பின் கீழ் மாநில அளவிலான கருத்தரங்கம் ஈரோடு ஆலயமணி மஹாலில் நடைபெற்றது. 


இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சர், முன்னாள் ஆந்திர மாநில பாஜக தலைவர் மற்றும் முன்னாள் ஆந்திர முதல்வர் என்டி ராமராவ் மகள் புரந்தேஸ்வரி சிறப்பு அழைப்பாளாராக பங்கேற்றார்,

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய பூரந்தேஸ்வரி...

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நமது நாட்டின் பொருட்கள் அமெரிக்காவில் இறக்குமதி ஆவதை தடுக்க 50 சதவீத இறக்குமதி வரி விதித்துள்ளார். இது நமது பொருளாதாரத்தை பாதிக்கும் என்று நான் கூற விரும்பவில்லை, முன்பு கூட உலக அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டபோது பாரதம் அதை வெற்றிகரமாக சந்தித்தது. அதே நிலைதான் தற்பொழுதும் உள்ளது. 

எனினும் இந்த நிலைமையை எதிர்கொள்ள நமது பாரத பிரதமர் தற்சார்பு பொருளாதாரத்தை வலியுறுத்தி உள்ளார். இதற்காக வரும் செப்டம்பர் 15 முதல் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினமான டிசம்பர் 25 வரை தற்சார்பு பொருளாதாரம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் படி அவர் பணித்துள்ளார். 

அதற்காகத்தான் இந்த மாநில அளவிலான கருத்தரங்கம் அனைத்து மாநிலங்களிலும் தற்போது நடந்து வருகிறது. இதன் முக்கிய நோக்கம் நமது நாட்டு மக்களுக்கு வேண்டிய பொருட்களை நாமே உற்பத்தி செய்து சுய சார்பு நிலையை நாம் அடைய வேண்டும் என்பதாகும். 


இதற்காகத்தான் மேக் இன் இந்தியா திட்டத்தையும் அவர் துவக்கினார். உதாரணத்துக்கு கூற வேண்டுமானால் பெப்சி கோக் போன்ற வெளிநாட்டு பானங்களை முற்றிலும் நாம் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக நமது நாட்டிலேயே உருவாக்கப்படும் நுங்கு மற்றும்  பழச்சாறை நமது வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு அளிக்கலாம். 

இதேபோன்றுதான் இறக்குமதியாகும் பொருட்களுக்கு மாற்றாக நாம் நமது தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நமது உள்நாட்டு பொருட்களைக் கொண்டு தயாரிக்கும் பொருட்களை பயன்படுத்த வேண்டும். அப்படி செய்தால் நமது நாட்டின் பொருளாதாரம் மேலும் வளர்ச்சி அடையும்.  

தற்சார்பு பொருளாதார நிலை ஏற்படும். இதை வலியுறுத்தவே இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது. மாநில அளவிலான நிர்வாகிகள் பலரும் இங்கு வந்துள்ளனர். அவர்கள் இந்த பிரச்சாரத்தை மாநிலம் முழுவதும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்த பிரச்சாரத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக நாட்டில் திகழ வேண்டும் என்பது எனது விருப்பமாகும் என பேசினார். 

இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சிகே சரஸ்வதி, தேசிய செயற்குழு உறுப்பினர் எம்.பி பழனிச்சாமி, மாவட்ட தலைவர் எஸ்.எம் செந்தில், மாவட்ட பொருளாளர் சுதர்சன், மாவட்ட பொதுச்செயலாளர் சிவசங்கரன், புனிதம் ஐயப்பன், ராயல் சரவணன் அமைப்புசாரா தொழிலாளர்கள் பிரிவின் மாநில இணை அமைப்பாளர் அக்னி ராஜேஷ், பி என் ஆர் நடராஜ்,  உட்பட பலர் பங்கேற்றனர்.

திங்கள், 15 செப்டம்பர், 2025

அன்புமணி தலைமையிலான பாமகவுக்கே தேர்தல் ஆணையம் அங்கீகாரம் - ஈரோட்டில் பாமகவினர் உற்சாக கொண்டாட்டம் ..!

அன்புமணி தலைமையிலான பாமகவுக்கே தேர்தல் ஆணையம் அங்கீகாரம் - ஈரோட்டில் பாமகவினர் உற்சாக கொண்டாட்டம் ..!


கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி அன்புமணி தலைமையில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் கடிதமும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டன.

அந்த தீர்மானங்களை அடிப்படையாக கொண்டு, பாமக தலைவராக மருத்துவர் அன்புமணி ராமதாசின் பதவிக்காலத்தை 2026 ஆகஸ்ட் மாதம் வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.

இந்த முடிவை வரவேற்று, ஈரோடு மாநகர் மாவட்ட பாமக சார்பில் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். ராஜ் தலைமையில் மத்திய பேருந்து நிலையத்தில் பட்டாசுகள் வெடித்தும், பேருந்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.

வியாழன், 28 ஆகஸ்ட், 2025

ஈரோடு மத்திய மாவட்ட திமுகவில் தொடர்ந்து இணையும் மாற்று கட்சியினர் - திமுக தொண்டர்கள் உற்சாகம்

ஈரோடு மத்திய மாவட்ட திமுகவில் தொடர்ந்து இணையும் மாற்று கட்சியினர் - திமுக தொண்டர்கள் உற்சாகம்


மத்திய மாவட்ட திமுகவில் மாற்றுக் கட்சியினர் பெருமளவில் இணைந்து வருவதால் தொண்டர்கள் மத்தியில் உற்சாகம்..!

ஈரோடு மத்திய மாவட்டம், பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சியை சேர்ந்த பல்வேறு மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர்.

முன்னாள் அமைச்சரும், மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளருமான தோப்பு என்.டி. வெங்கடாசலம் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாஜக ஒன்றிய தலைவர் அருணா சிவப்பிரகாஷ் தலைமையில், அகில இந்திய நாடார் மக்கள் பேரவை மாநில அமைப்பு செயலாளர் மகாராஜா, சமத்துவ மக்கள் கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர் சபீர், பாஜக நகர துணைத் தலைவர் பாண்டியன் உள்ளிட்டோர் தங்களது ஆதரவாளர்களுடன் இன்று திமுகவில் இணைந்தனர், 

மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களை திமுக துண்டு அணிவித்து வரவேற்றார்,


இவ்விழாவில் பெருந்துறை பேரூராட்சி தலைவர் ஓ.சி.வி. ராஜேந்திரன், கருமாண்டி செல்லிபாளையம் பேரூர் செயலாளர் மூர்த்தி, முன்னாள் இயக்குநர் நாகராஜன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்று புதிதாக இணைந்தவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.


பெருந்துறை மற்றும் பவானி பகுதிகளில் திமுக வலுசேர்க்கும் விதமாக நடைபெறும் இவ்வகை தொடர்ச்சியான இணைவுகள், கட்சித் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025

பாரத பிரதமருக்கு தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு வரவேற்பு..!

பாரத பிரதமருக்கு தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு வரவேற்பு..!


தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக மாநிலத் தலைவர் எல்.கே.எம் சுரேஷ் வெளியிட்ட செய்தி குறிப்பில் ....

தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக, விசைத்தறி தொழில்  மூலம், 6 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் வாயிலாக, நேரடியாகவும், மறைமுகமாகவும், 20 லட்சத்துக்கு மேற்பட்ட நெசவாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்,

ஒரு நெசவாளருக்கு நான்கு முதல் ஐந்து குடும்ப உறுப்பினர்கள் என்று வைத்துக் கொண்டால் தமிழகத்தில் ஒரு கோடிக்கு மேற்பட்ட மக்கள் தொகைக்கு வாழ்வாதாரமும்  வேலை வாய்ப்பும் பெற்று வருகின்றனர்,

இந்தியாவில் மொத்தம் 25 லட்சம் விசைத்தறிகள் மூலம் 70 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்,

இந்த விசைத்தறி தொழில்  நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது தற்போது விசைத்தறிகளை பழைய இரும்புக்கு உடைத்து விற்கக்கூடிய அவலமான சூழ்நிலையை கடந்து வருகிறது,

இந்நிலையில், இன்று 15.8.2025 சுதந்திர தினத்தன்று உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜிஎஸ்டி வரிவிதிப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு, வரிகளை குறைப்பதற்கான செயல்பாடுகள் செய்வதாக தெரிவித்ததற்கு முதல் கண் எங்களது தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்வதுடன்,

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தியபோது, செயற்கை இழை நூலான ரயான் பாலிஸ்டர் சிந்தடிக் நூலுக்கு, 18 % ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு இருந்த நிலையில், விசைத்தறி சங்கங்கள் வாயிலாக அதனை குறைக்க கோரிக்கை வைத்த பொழுது, 12% குறைத்து கொடுக்கப்பட்டது. 

இதன் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட செயற்கை இழை விஸ்கோஸ் சிந்தடிக் துணிகளை விற்பனை செய்யும்போது 5% விற்பனை வரி போட்டு விற்பனை செய்யும்போது, மீதமுள்ள 7%ம் உள்ளீட்டு வரி இருப்பாக (input credit balance) வரும் தொகையை நாங்கள் மீண்டும் பெறுவதற்கு  நூல் கொள்முதல் செய்த நாளிலிருந்து மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு மேல் ஆவதால், எங்கள் தொழில் முதலீடுகள் அனைத்தும் வரி இருப்பாக மாறிவிடுகிறது,

இதனால் விசைத்தறியாளர்கள் நூல் கொள்முதல் செய்வதற்கு அதிகப்படியான கடன் பெறுவதற்கான சூழல் ஏற்படுவதையும், அதற்காக வட்டி கட்டுவதால் தொழில் நஷ்டம் அடைவதை தவிர்ப்பதற்கு, செயற்கை இழை விஸ்கோஸ் மற்றும் சிந்தடிக் நூலுக்கு 12 சதவீதத்திலிருந்து 5% ஆக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
ஈரோடு ஆடி வெள்ளியையொட்டி இந்து சமய அறநிலையத்துறையின் இலவச ஆன்மிக பயணம்

ஈரோடு ஆடி வெள்ளியையொட்டி இந்து சமய அறநிலையத்துறையின் இலவச ஆன்மிக பயணம்


ஈரோடு அருள்மிகு .ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலில் இருந்து 3வது ஆடி வெள்ளியையொட்டி ஆன்மிக பயணம் இன்று அழைத்துச் செல்லப்பட்டனர்

ஆடி மாதத்தை ஒட்டி ஈரோடு
மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களுக்கு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், இலவச ஆன்மிக சுற்றுலா அறிவிக்கப்பட்டது.

இதன்படி, ஈரோடு அருள்மிகு .ஸ்ரீ  பெரிய மாரியம்மன் கோவிலில் இருந்து 3வது ஆடி வெள்ளியையொட்டி ஆன்மிக பயணம் இன்று அழைத்துச் செல்லப்பட்டனர்,

பக்தர்கள் பயணிக்கும் 4 சுற்றுலா வேன்களை ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் மதன்குமார் தலைமையில், அறங்காவலர் குழு நிர்வாகிகள் மாதேஸ்வரன், ரவிச்சந்திரன், கதிர், சண்முகவடிவு, கீதா மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்று துவக்கி வைத்தனர்.    

ஆன்மீக சுற்றுலா செல்லும் பக்தர்களுக்கு பக்தர்களுக்கு குடிநீர், காலை சிற்றுண்டி அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. 

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், பண்ணாரி மாரியம்மன், அந்தியூர் பத்ரகாளியம்மன், பவானி செல்லாண்டியம்மன் கோவில்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர், மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதுகுறித்து அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் மதன்குமார் கூறுகையில் ... ஆடி மாத வெள்ளிகிழமைகளில், இந்த ஒருநாள் ஆன்மிக சுற்றுலா நடக்கும்,  பக்தர்கள் இந்து மதத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும், 60 முதல் 70 வயதிற்கு உட்பட்டவர்கள் வயது சான்றிதழ், மருத்துவ சான்றிதழ், ஆதார் கார்டு, ஆண்டு வருமானம் 2,00,000 ரூபாய்க்கு மிகாமல் இருப்பதற்கான வருமான சான்றுடன் கூடிய விண்ணப்பத்தை, ஈரோட்டில் காந்திஜி சாலையில் உள்ள அறநிலைய துறை இணை ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. இன்று நான்கு வேன்களில், 72 பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்,

இதேபோல், ஒவ்வொரு ஆண்டும்  ஆடி மாத வெள்ளி கிழமைகளில் ஆன்மிக பயணம் அழைத்து செல்லப்படுவர்கள் என தெரிவித்தார்.

சனி, 9 ஆகஸ்ட், 2025

வெள்ளக்கோவில் - சங்ககிரி வரை நான்கு வழி சாலை திட்டம் மக்களுக்கு எந்தவித பாதிப்பின்றி செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உறுதி என பாஜகவின் ஈரோடு மாவட்ட தலைவர் எஸ்.எம் செந்தில் பேட்டி

வெள்ளக்கோவில் - சங்ககிரி வரை நான்கு வழி சாலை திட்டம் மக்களுக்கு எந்தவித பாதிப்பின்றி செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உறுதி என பாஜகவின் ஈரோடு மாவட்ட தலைவர் எஸ்.எம் செந்தில் பேட்டி


ஈரோடு பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில், பாஜக மாவட்ட தலைவர் எஸ்.எம் செந்தில் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.கே சரஸ்வதி,  பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி எம்.பி, முன்னாள் மாவட்ட தலைவர் வேதாந்தம் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, மாவட்டத் தலைவர் எஸ்.எம் செந்தில் செய்தியாளர்களை சந்தித்தார்....

வெள்ளகோவில் முதல் சங்ககிரி வரை புதிதாக போடப்படுகிறது நான்கு வழி சாலைக்கு நிலம் ஆர்ஜிதம் செய்யப்படுவதாக திருப்பூர் மாவட்டத்திலிருந்து அறிக்கை வெளியாகி இருந்தது,

அதேபோல் ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இந்த நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக நிலம் எடுப்பதாக பொதுமக்கள், விவசாயிகள் எங்களிடம் கோரிக்கை விடுத்தனர்,  

மக்களின் கோரிக்கையைடுத்து டெல்லி சென்று மத்திய தரை மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து, மக்களின் கோரிக்கைகளை கொடுத்துள்ளோம், அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய அமைச்சர் அவர்கள், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நான்கு வழி சாலை பணியை மேற்கொள்ள மாட்டோம் என உறுதியளித்துள்ளார், 

மேலும், சாலையை சீரமைப்பதற்கான 2000 கோடி ரூபாய் செலவில், பாரத பிரதமர் பாரத் மகா திட்டத்தின் கீழ் இப்பணிகளை மேற்கொள்வதாக கூறியிருந்தார்கள், பொதுமக்களின் தேவைக்கும், நாட்டு மக்களின் நன்மைக்கும் இந்த சாலை தேவை தேவைப்படுகிறது என்பதையும் மத்திய அமைச்சர் கூறினார்,


இந்த சாலை பணிகளில், மொடக்குறிச்சி தொகுதியை பொருத்தவரை வணிக நிறுவனங்கள் வீடுகள் என அதிகளவில் பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தினால், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி கே சரஸ்வதி அவர்கள் கேட்டு கேட்டுக்கொண்டதின் அடிப்படையில், மக்களின் நலனுக்காக நாங்கள் டெல்லி சென்று கோரிக்கை விடுத்திருக்கிறோம், இதற்கு மத்திய அமைச்சர் இசைவு தெரிவித்துள்ளார், 

மத்திய இணை அமைச்சர் எல் முருகன் இன்னும் பத்து நாட்களுக்குள் ஈரோடு வந்து இந்த சாலை பணிகள் குறித்து ஆய்வு செய்து அதற்கான அறிக்கையும் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார், 


வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி தேசிய ஒற்றுமையையும் தேசப்பற்றையும் வலியுறுத்தும் விதமாக அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றி வைத்து, அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து தேசிய விழிப்புணர்வு பேரணையையும் நடத்த இருக்கிறோம், 

அதேபோல் பவானி ஆற்றில் குறுக்கே கட்டப்பட்ட மேம்பாலத்தின் மணல் தீட்டுக்களை அகற்ற வலியுறுத்தியிருந்தோம் தமிழக பொதுப்பணித்துறை இந்த விஷயத்தில் மிகவும் மெத்தனமாக செயல்படுகிறது எனவும் குற்றம் சாட்டினார்.

வியாழன், 7 ஆகஸ்ட், 2025

ஈரோட்டில் வருகின்ற 11ந்தேதி மின் தடை | முழு விபரம்

ஈரோட்டில் வருகின்ற 11ந்தேதி மின் தடை | முழு விபரம்


ஈரோடு மாவட்டத்தில் வருகின்ற ( ஆகஸ்ட் ) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

சூரியம்பாளையம் மற்றும் மேட்டுக்கடை ஆகியதுணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற 11ந்தேதி நடக்கிறது, அதனால் கீழ்கண்ட பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

சித்தோடு, ராயபாளையம், சுண்ணாம்பு ஓடை, அமராவதி நகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், பெருமாள்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிளம்பரப்பு, செல்லப்பம்பாளையம், மாமரத்துப்பாளையம், தயிர்பாளையம், கொங்கம்பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம், சேமூர், சொட்டையம்பாளையம், 


பி.பி.அக்ரஹாரம், மரவபாளையம், சி.எம்.நகர், கே.ஆர்.குளம், காவிரிநகர், பாலாஜி நகர், எஸ்.எஸ்.டி.நகர், வேலன் நகர், ஊத்துக்காடு, பெரியபுலியூர், சேவக்கவுண்டனூர், மேல்திண்டல், கீழ்திண்டல், சக்திநகர், செல்வம்நகர், வீரப்பம்பாளையம், நஞ்சனாபுரம், செங்கோடம்பாளையம், வள் ளிபுரத்தான்பாளையம், வேப்பம்பாளையம், பவளத்தாம்பா ளையம், மாருதிநகர், வித்யாநகர், வில்லரசம்பட்டி, நால் ரோடு, மூலக்கரை, மேட்டுக்கடை, புங்கம்பாடி, 

நத்தக்காட்டுப்பாளையம், இளையகவுண்டன்பாளையம், எம்.ஜி.ஆர். நகர், கதிரம்பட்டி, வண்ணான்காட்டுவலசு, 

நசியனூர் - ஈரோடு ரோடு, தொட்டிபாளையம், ராயபாளையம், சிந்தன்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது,

இந்த தகவலை ஈரோடு மின் பகிர்மான வட்ட நகரிய செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 20 ஜூலை, 2025

விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்ட எஸ்டிபிஐ கட்சியினருக்கு பாராட்டுக்கள்..!

விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்ட எஸ்டிபிஐ கட்சியினருக்கு பாராட்டுக்கள்..!


ஈரோடு மாவட்டம், கோபி அருகே சாலை விபத்தில் சிக்கி தவித்த இளைஞரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த எஸ்டிபிஐ கட்சியினர்..!

ஈரோடு - சத்தியமங்கலம் செல்லும் சாலையில் வெள்ளாளபாளையம் பிரிவு அருகே நேற்று மாலை ( 20.07.2025 ) இருசக்கர வாகனத்தில் வந்த கார்த்திக். வயது 27 என்ற இளைஞர் தீடீர் விபத்து ஏற்பட்டு  சுயநினைவின்றி மயக்க நிலையில் இருந்துள்ளார்,

இந்நிலையில், அந்த வழியாக வந்த கோபி தொகுதி செயலாளர் s. சர்ஜித் ரகுமான், நகர செயலாளர் M.கோபி யாசின், நகர செயற்குழு உறுப்பினர் 
M.முகம்மது யாசர் ஆகிய எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள், அந்த இளைஞரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்து உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டனர், 


விபத்தில் சிக்கிய கார்த்திக்-கின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததுடன், கோபிசெட்டிபாளையம் காவல்துறையினரின் முன்னிலையில் விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனத்தையும் ஒப்படைத்துள்ளதாக எஸ்.டி.பி கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்,

மனிதநேயத்துடன் உயிர் காக்கும் இந்த உதவியை செய்த எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.
விசைத்தறி தொழிலாளர்கள் கிட்னியை விற்கும் அவல நிலையை போக்க "மஞ்சள் பை" திட்டம்..!

விசைத்தறி தொழிலாளர்கள் கிட்னியை விற்கும் அவல நிலையை போக்க "மஞ்சள் பை" திட்டம்..!


விசைத்தறி தொழிலாளர்கள் கிட்னியை விற்கும் அவல நிலையை போக்க "மஞ்சள் பை" உற்பத்தி திட்டத்தை விசைத்தறிகள் மூலம் செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டுகோள் ..!

தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயலாளர் வேலுச்சாமி செய்தி குறிப்பில் ...


தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்த படியாக,
இன்னும் சொல்லப்போனால், விவசாயத்துக்கு ஈடாக வேலைவாய்ப்பு வழங்கி வருவது நெசவுத் தொழில், இந்த நெசவுத் தொழிலில், விசைத்தறிகள் வாயிலாக, 20 லட்சத்துக்கு மேற்பட்ட நெசவாளர்களுக்கு நேரடியாகவும் 10 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்,

ஒரு நெசவாளிக்கு குடும்ப உறுப்பினர்கள் நான்கு முதல் ஐந்து என்று கணக்கிட்டால் தமிழகத்தின் ஆறு கோடி மக்கள் தொகையிள் 
ஒரு கோடிக்கு மேற்பட்ட மக்கள் தொகைக்கு நேரடியாகவும் 50 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகைக்கு மறைமுகமாகவும் வாழ்வாதாரம் வழங்கி வரும் இந்த விசைத்தறி தொழில், 


கொரோனா காலகட்டத்தில் இருந்து தற்பொழுது வரை அழிவின் பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதாலும், உலக பொருளாதாரத்தின் மந்த நிலை காரணங்களாலும், நாடா இல்லா நவீனமயமாக்கப்பட்ட தறிகளின் மூலம், குறைந்த நபர்களை வைத்து, அதிக உற்பத்தியை மேற்கொள்வதனால், ஏற்படும் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம், விசைத்தறி தொழிலை செய்பவர்களுக்கு ஏற்படும் தொழில் நஷ்டம், உள்ளிட்ட காரணங்களால், விசைத்தறிகளை பழைய இரும்புக்கு உடைத்து விற்கும் அவல சூழ்நிலைக்கு இந்த இரண்டு வருட காலமாக தள்ளப்பட்டு இருப்பதாலும்,

விசைத்தறி உரிமையாளர்களுக்கு உரிய லாபமும் கிடைக்காமல், நஷ்டம் அடைவதாலும், விசைத்தறி தொழிலாளர்களுக்கு, முழு வேலை வாய்ப்பு கிடைக்காமல், ஊதிய இழப்பு ஏற்படுவதால் குடும்பம் நடத்த கூட இயலாமல், குடும்பச் சுமையை சரி செய்வதற்காக, வாங்கிய கடன்களை அடைப்பதற்காக, உடம்பின் மிக முக்கிய உறுப்பாக கருதப்படும் கிட்னியை விற்கும் அவலம், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் நடந்திருப்பது, விசைத்தறி தொழில் எந்த அளவுக்கு வீழ்ச்சி அடைந்து இருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று. 

இதன் தாக்கம் மேலும் அதிகரிக்காமல் இருக்க வேண்டுமானால், விசைத்தறியாளர்களுக்கு, விசைத்தறி நெசவாளர்களுக்கு முழு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்ய வேண்டிய கடமை, மத்திய மாநில அரசுகளுக்கு உண்டு என்பதை உணர்ந்து, போர்க்கால அடிப்படையில், இந்த குற்றங்கள் மேலும் நடக்காமல் இருப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன்,

விசைத்தறி தொழிலை மேம்படுத்துவதற்காகவும்,  விசைத்தறிகளுக்கான தனி ரக ஒதுக்கீடு சட்டம், அரசு துறையில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்குமான சீருடைகளை, விசைத்தறிகளும் உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள், சுற்றுச்சூழலை காப்பதற்கு மஞ்சள் பைத்திட்டம், விசைத்தறிக்கூடங்களுக்கு தேவைப்படும் மின் உற்பத்தியை, விசைத்தறிக்கூடங்களிலே, உற்பத்தி செய்வதற்கான நெட் மீட்டர் வசதியுடன் கூடிய, சோலார் பேனர்களை நிறுவுவதற்கு, 50 சதவீத மானியமும், மீதமுள்ள 50 சதவீதத்திற்கு, குறைந்த வட்டியில் கடனுதவி வழங்குவது, காட்டன் நூல்களுக்கு விதிக்கப்படும் 5% ஜிஎஸ்டி வரி போன்று செயற்கை நூல் இலை ரயானுக்கும் 5% விதிப்பது, போன்ற திட்டங்களை வகுத்து, விசைத்தறிகளையும், விசைத்தறி தொழிலை நம்பி இருக்கும், ஒரு கோடி 50 லட்சத்துக்கு மேற்பட்ட, தமிழ்நாட்டு மக்கள் தொகைக்கு, வாழ்வாதாரத்துக்கு வழி வகுக்க வேண்டும் என்று, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக, மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுகிறோம் என்றார்.

திங்கள், 14 ஜூலை, 2025

ஈரோட்டில் நாவலடியான் பியூல்ஸ் நிறுவனத்தின் புதிய பெட்ரோல் பங்குகள் உதயம்

ஈரோட்டில் நாவலடியான் பியூல்ஸ் நிறுவனத்தின் புதிய பெட்ரோல் பங்குகள் உதயம்


ஈரோட்டில் நாவலடியான் பியூல்ஸ் நிறுவனத்தின் சார்பில் புதிய பெட்ரோல் பங்குகள் உதயமானது...

ஈரோடு ஆனைக்கல் பாளையம் பாளையம் ரிங் ரோட்டில் இன்று நாவலடியான் பியூல்ஸ் நிறுவனத்தின் சார்பில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களின் புதிய பெட்ரோல் பங்குகள் திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இவ்விழாவில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ ஆர் ஈஸ்வரன் எம் எல் ஏ,  தமிழ்நாடு வீட்டு வசதி துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ பிரகாஷ், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வி.எஸ் மாதேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்று பெட்ரோல் பங்குகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்,


இவ்விழாவில் ஈரோடு மாநகராட்சி மேயர் எஸ் நாகரத்தினம், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.கே சரஸ்வதி,  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் எஸ் சூரியமூர்த்தி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொருளாளர் கே.கே.சி பாலு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.பிரபாகரன், அஇஅதிமுக எம் ஜி ஆர் மன்ற இளைஞர் அணி இணைச் செயலாளர் வி.பி சிவசுப்பிரமணியம், எம்.எஸ்.கே தங்கராஜ் உள்ளிட்ட பலர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்,


நவலடியான் பியூல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் நவலடியான் ஆர்.வேலுச்சாமி, வி.பொன் விக்னேஷ் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.


மேலும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் சி எஸ் சதீஷ்குமார் டி.டி சுரேஷ் சந்திரசேகர் தேஷ்முக், குமார் கவுரவ், பிரதீப் குமார் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் நிர்வாகிகள் பங்கஜ் மீனா, ஆர் ஷங்கர், வருண் யாதவ், ஜீவன் அவினாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

வெள்ளி, 4 ஜூலை, 2025

வக்பு வாரிய திருத்தச் சட்டம் ரத்து செய்ய கோரி மனிதநேய மக்கள் கட்சி பேரணி - மாவட்ட தலைவர் ஏ. சித்தீக் பேட்டி

வக்பு வாரிய திருத்தச் சட்டம் ரத்து செய்ய கோரி மனிதநேய மக்கள் கட்சி பேரணி - மாவட்ட தலைவர் ஏ. சித்தீக் பேட்டி


ஊராட்சி மன்றம் முதல் பாராளுமன்றம் வரை இஸ்லாமிய சமூகத்திற்கு பிரதி நிதித்துவத்தை உறுதி செய் வக்பு வாரிய திருத்தச் சட் டத்தை ரத்து செய் எனும் இரட்டை கோரிக்கைகள் வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி வருகின்ற ஜூலை 6ல் மாநில தலை வர் பேராசிரியர் வி.பி. ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தலைமையில் மாபெரும் பேரணி மற்றும் மாநாடு மதுரையில் நடத்துகிறது என கட்சியின் மாவட்ட தலைவர் ஏ. சித்தீக் தெரிவித்துள்ளார் ...

சபா நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில் ...

இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம், இந்தியாவில் முஸ்லீம் மக்களுக்கு சட்டம் இயற்றும் அமைப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதேயாகும்,

இந்நாட்டின் மன்றத்தில் பாராளு மொத்தமாக 543 உறுப்பினர்கள் உள்ள நிலையில், மக்கள்தொகை அடிப்படையில் குறைந்தபட்சம் 80 முஸ்லீம் எம்.பிக்கள் இருக்க வேண்டும், ஆனால், தற்போது சுமாராக 24 பேர் மட்டுமே இருக்கிறார்கள். அதேபோல், ராஜ்ய சபாவில் 35 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 13 பேர் மட்டுமே உள்ளனர்,


தமிழக சட்டமன்றத்தில் மட்டும் 14 முஸ்லீம் எம்.எல்.ஏக் கள் இருக்க வேண்டிய நிலை இருப்பினும், தற்போது அதில் பாதிக்கும் குறைவான 7 பேர்தான் உள்ளனர், இந்தியா முழுவதும் 4,123 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில், முஸ்லீம் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 296 மட்டுமே என்பது கவலைக்கிடமானது.

தமிழகத்தில் மட்டும் 7 சதவீத முஸ்லீம் மக்கள் வசிக்கிறோம், ஆனால், அந்த மக்கள் தொகைக்கு ஏற்ப நமக்கு அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை, இது ஒரு சமூக நீதிக்கே எதிரானது.

இந்த உண்மைகளை எடுத்துச் சொல்லவும், அரசியலில் முஸ்லீம் மக்களின் உரிய இடத்தை கோரிக்கையாக முன்வைக்கவும், நமது இந்த மாநாட்டை நடத்துகிறோம் என்றார்.

புதன், 2 ஜூலை, 2025

நம்பியூர் அருகே வெறிநாய்கள் கடித்ததில் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி : விவசாயிகள் அதிர்ச்சி..!

நம்பியூர் அருகே வெறிநாய்கள் கடித்ததில் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி : விவசாயிகள் அதிர்ச்சி..!

நம்பியூர் அருகே அழகாபுரி, பொலவபாளையம், காந்திபுரம் மேடு ஆகிய பகுதிகளில் வெறி நாய்கள் கடித்ததில் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியானதால் விவசாயிகளும் பொதுமக்களும் சோகம்

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே காந்திபுரம் மேடு, ஓம்சக்தி கோவில் வீதி, அழகாபுரி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜமால், ஈஸ்வரமூர்த்தி, ரங்கநாதன், சாதிக் அலி ஆகியோருக்கு சொந்தமான அப்பகுதியில் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்

இவர்களுக்கு  சொந்தமாக 15 க்கு மேற்பட்ட ஆடுகள் உள்ளது தினமும் வீட்டின் பின்பகுதியில் கட்டி வைத்து பின்பு மேய்ச்சலுக்காக காட்டுப்பகுதிக்கு ஆடுகளை அழைத்துச் சென்று மேச்சலில் ஈடுபடுத்தி பின்பு வீடு திரும்புவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக தனது வீட்டின் அருகில் இருக்கும் காட்டு பகுதிக்கு அழைத்துச் சென்று மேச்சலில் ஈடுபட்டு வந்தார் அப்பொழுது அப்பகுதிக்கு 10 மேற்பட்ட வெறிநாய்கள் அவ்வழியாக வந்துள்ளது.


ஆடுகளை கண்ட வெறிநாய்கள் சுற்றிவர துரத்தி துரத்தி கடித்து தாக்கி உள்ளது இதில் சம்பவ இடத்திலேயே 10 க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகிது மேலும் 5 ஆடுகள் கவலைக்கிடமான நிலைமையில் உள்ளது.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறிய போது கடந்த ஒரு வருடமாகவே இந்த வெறிநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.

இது குறித்து நாங்கள் பல்வேறு இடங்களில் வெறி நாய்களை கட்டுப்படுத்த புகார்  கொடுத்தும் நம்பியூர் பேரூராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை

கடந்த ஒரு வருடத்தில் எங்கள் பகுதிகளிலேயே  பல்வேறு இடங்களில் இதுபோல் நடந்துள்ளது இன்று பட்டப்பகலிலேயே வெறிநாய்கள் ஆடுகளை கடித்து கொன்று உள்ளது.

இந்த வெறி நாய்கள் கட்டுபடுத்துவது குறித்து உள்ளாட்சி நிர்வாகமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கேட்டுக் கொண்டார்