திங்கள், 21 அக்டோபர், 2024
ஈரோட்டில் காவலர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து ஆட்சியர், எஸ்பி மரியாதை
ஈரோடு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு சின்னத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் ஆகியோர் மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினர்.
பின்னர், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்த போது பணியின் போது, வீரமரணம் அடைந்த காவலர்களை நினைவு கூர்ந்து அவர்களின் தியாகத்தை போற்றும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 21 அன்று காவலர் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
1959-ம் ஆண்டு, இதே நாளில் லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில், 10 மத்திய பாதுகாப்பு படைக் காவலர்கள் உயிரிழந்தனர். கடல் மட்டத்திலிருந்து, 16,000 அடி உயரத்தில், அன்று வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை, கடல் அலைகள் கண்ணுக்குத் தெரியும் இவ்விடத்தில் இருந்து நாம் இன்று நினைவு கூறுகிறோம்.
கடற்கரையானாலும் பனிமலைச் சிகரமானாலும், காவலர் பணி, இடர் நிறைந்தது. உனது வருங்காலத்திற்கு எனது தற்காலத்தை ஈந்தேன். நாளைய உன் விடியலுக்கு இன்று நான் மடியத் தயார் என்று கூறி இவ்வாண்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நம்மை விட்டுப் பிரிந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.
மடிந்து உயிர் தியாகம் செய்த காவலர்கள் விட்டுச் சென்ற பணிகளைச் செய்து முடிப்போம் என்று உறுதி பூண்டு, அவர்களின் வீரத் தியாகம் வீண்போகாது என்று இந்த காவலர் வீரவணக்க நாளில் உறுதிமொழி ஏற்போம் என்றார்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் விவேகானந்தன் (தலைமையிடம்), வேலுமணி (சைபர் குற்றப்பிரிவு) உட்பட காவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு அருகே தனியார் பள்ளி, கல்லூரி பேருந்துகள் மோதல்: 30 பேர் காயம்
ஈரோட்டில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 27 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
ஈரோடு திண்டல் சைதன்யா சி.பி.எஸ்.சி. பள்ளி வளாகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ஈரோடு இணை ஆணையர் மண்டல கோயில்கள் சார்பாக 27 ஜோடிகளுக்கு இன்று (21ம் தேதி) திருமணம் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின் படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் தமிழ்நாடு சட்டப்பேரவை அறிவிப்புகள் 2024-2025 அறிவிப்பு எண்.27-ன் படி பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜோடிகளுக்கு கோயில்கள் சார்பாக 4 கிராம் பொன் தாலி உட்பட ரூ.60 ஆயிரம் மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி திருமண விழா நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு 600 ஜோடிகளுக்கு கோயில்கள் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இவ்வாண்டு கூடுதலாக 100 ஜோடிகளுக்கு சேர்த்து ஒரு மண்டலத்திற்கு 35 ஜோடிகள் வீதம் 700 ஜோடிகளுக்கு கோயில்கள் சார்பாக திருமண விழா நடத்தி வைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது .
அதனைத் தொடர்ந்து இன்று (21ம் தேதி) திங்கட்கிழமை ஈரோடு மாவட்டம், திண்டல் சைதன்யா சிபிஎஸ்சி பள்ளி வளாகத்தில், ஈரோடு இணை ஆணையர் மண்டல கோயில்கள் சார்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய 27 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் பங்கேற்ற ஒவ்வொரு ஜோடிக்கும் தாலி (தங்கம் 4 கிராம்), மெட்டி, பட்டு புடவை (ஜாக்கெட், பாவாடை), பட்டு வேஷ்டி சட்டை, துண்டு, பாய், இரும்பு கட்டில், மெத்தை, தலையணை, பெட்சீட், கிரைண்டர், மிக்ஸி, கேஸ் அடுப்பு, மர பீரோ, சுவாமி படம், குத்து விளக்கு (பித்தளை). பூஜை தட்டு (பித்தளை), மணி (பித்தளை), பொங்கல் குண்டா, குங்கும சிமிழ், காபி குண்டா, வடிகட்டி, சாப்பாடு தட்டு உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், துணை மேயர் வே.செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் நவமணி கந்தசாமி, இந்து சமய அறநிலையத்துறை ஈரோடு மண்டல இணை ஆணையர் அ.தி.பரஞ்ஜோதி, பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் துணை ஆணையர் மேனகா, ஈரோடு உதவி ஆணையர் சுகுமார், பவானி அருள்மிகு சங்கமேஸ்வரர் கோயில் உதவி ஆணையர் அருள்குமார், ஈரோடு மாவட்ட செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
வெள்ளி, 18 அக்டோபர், 2024
பெருந்துறை அருகே லிப்ட் கொடுத்த ஆசிரியையிடம் வழிப்பறி: 4 கல்லூரி மாணவர்கள் கைது
ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி
ஈரோட்டில் தமிழகப் பண்பாட்டு கண்காட்சியினை துவக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வேட்டை தடுப்புக் காவலர்கள் வனக்கோட்ட அலுவலரிடம் மனு
ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு
ஈரோடு கள்ளுக்கடைமேட்டில் ஆக்கிரமித்திருந்த ஆஞ்சநேயர் கோயில் இடித்து அகற்றம்
வியாழன், 17 அக்டோபர், 2024
ஈரோடு மாவட்டத்தில் நாளை (அக்.,19) பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிப்பு
ஈரோடு மாவட்ட வளர்ச்சிப் பணிகள்: உயர் அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை
புதன், 16 அக்டோபர், 2024
சித்தோடு அருகே போலீஸ் எனக் கூறி ரூ.25 ஆயிரம் பணம் பறித்த 5 பேர் கைது
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 35). இவர் சித்தோடு அருகே உள்ள கோணவாய்க்கால் ராமன் பாலக்காடு என்ற இடத்தில் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு மசாஜ் சென்டருக்குள் நுழைந்த 5 பேர் தங்களை போலீஸ் எனக்கூறி, மசாஜ் சென்டரில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக தகவல் வந்துள்ளது என்று கூறியுள்ளனர்.
பின்னர் ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டி, கார்த்திகேயன் வைத்திருந்த ரூ.25 ஆயிரத்தை பறித்துக் கொண்டு சென்றுவிட்டனர். இதனைத் தொடர்ந்து, வந்தவர்கள் போலீஸ்காரர்கள் தானா? என்று சந்தேகம் அடைந்த கார்த்திகேயன் இதுகுறித்து சித்தோடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, மசாஜ் சென்டரில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கார்த்திகேயனிடம் போலீஸ் எனக்கூறி மிரட்டி பணம் பறித்த, ஈரோடு வீரப்பன்சத்திரத்தைச் சேர்ந்த வசந்தராஜ் (வயது 34), செங்கோடம்பள்ளத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 38), லக்காபுரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 32), சூரம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் (வயது 30), ஆனந்தகுமார் (வயது 38) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். பின்னர், ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோபி அருகே டி.என்.பாளையத்தில் மின்சாரம் தாக்கி மக்னா யானை உயிரிழப்பு
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: நம்பியூரில் அரசு அலுவலகங்களில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு
ஈரோட்டில் தீபாவளி இனிப்பு, காரம் தயாரித்து விற்போருக்கு விழிப்புணர்வு கூட்டம்
தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்புத் துறை ஆணையகம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்ட முழுவதிலும் உள்ள இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பு மற்றும் சில்லரை விற்பனையாளருக்கான விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஈரோடு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தங்கவிக்னேஷ் தலைமை வகித்தார். ஈரோடு மாநகராட்சி பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கேசவராஜ், செல்வன், அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தங்கவிக்னேஷ் பேசியதாவது, தீபாவளி பண்டிகை முன்னிட்டு இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பு மற்றும் சில்லரை விற்பனையாளர் அனைவரும் உணவு பாதுகாப்புத்துறை உரிமம் அல்லது பதிவு சான்று கட்டாயமாக பார்வைக்கு வைத்திருக்க வேண்டும்.
இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்பட்ட பிறகே விற்பனை செய்தல் வேண்டும். உணவு பொருட்கள் கையாளுபவர்கள் கையுறை, முககவசம், தலைகவசம் ஆகியவற்றை அணிந்து பணிபுரிவதை உறுதிப்படுத்த வேண்டும்.
இனிப்பு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான செயற்கை வண்ணங்கள் பயன்படுத்துதல் கூடாது. உணவுகையாளுபவர்கள் அனைவரும் மருந்துவ சான்றிதழ் பெற்று இருத்தல் வேண்டும்.
ஒரு முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் வகைகளை மறு உபயோகம் செய்தல் கூடாது. மாறாக உபயோகப்படுத்தப்பட்ட எண்ணெய்யை அங்கீகரிக்கப்பட்ட பயோடீசல் மறுசுழற்சி நிறுவனங்களிடம் வழங்கி அதன் ஆவணங்களை வைத்திருந்தல் வேண்டும்.
மேலும், பொதுமக்கள் உணவு பொருட்கள் குறித்த புகார்களுக்கு 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.
செவ்வாய், 15 அக்டோபர், 2024
ஈரோடு மாவட்டத்தில் நாளை (அக்.,17) பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிப்பு
ஈரோடு மாவட்டத்தில் கவுந்தப்பாடி, காந்திநகர் மற்றும் தண்ணீர்பந்தல் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (அக்டோபர் 17) வியாழக்கிழமை நடக்கிறது. இதனால், கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவுந்தப்பாடி துணை மின் நிலையம்:-
மின்தடை ஏற்படும் பகுதிகள்:- கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், குஞ்சரமடை, ஓடத்துறை, ஓடமேடு, பெத்தாம்பாளையம், கருக்கம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், கண்ணாடிபுதூர், மாணிக்கவலசு, பெருந்தலையூர், வெள்ளாங்கோவில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தருமாபுரி, கவுந்தப்பாடிபுதூர், பி.மேட்டுப்பாளையம், செந்தாம்பாளையம், செட்டிபாளையம், ஆவரங்காட்டுவலசு, ஆலந்தூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேலம்பாளையம், சந்திராபுரம், பெருமாபாளையம், தன்னாசிபட்டி, அய்யன்வலசு, மணிபுரம், விராலிமேடு, தங்கமேடு, கவுண்டன்பாளையம் மற்றும் செரயாம்பாளையம்
காஞ்சிக்கோவில் அருகே உள்ள காந்திநகர் துணை மின் நிலையம்:-
மின்தடை ஏற்படும் பகுதிகள்:- காஞ்சிகோவில், பள்ளப்பாளையம், கவுண்டம்பாளையம், கரட்டுப்பாளையம், சின்னியம்பாளையம், அய்யன்வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஓலப்பாளையம், காந்தி நகர், நடுவலசு, கருக்கம்பாளையம், துடுப்பதி, பொன்னாண்டாவலசு, கொளத்தான்வலசு, சூரியம்பாளையம், பெத்தாம்பாளையம், இளையாம்பாளையம், கோவில்பாளையம், ஓசப்பட்டி, மாதநாயக்கன்பாளையம், சாணார்பாளையம், தீர்த்தம்பாளையம், சமாதானபுரம், சீரங்ககவுண்டம்பாளையம், பாலக்கரை, தொட்டியனூர், கோவில்காட்டுவலசு, எருக்காட்டுவலசு மற்றும் இச்சிவலசு
மொடக்குறிச்சி அருகே உள்ள தண்ணீர்பந்தல் துணை மின் நிலையம்:-
மின்தடை ஏற்படும் பகுதிகள்:- உலகபுரம், வேலம்பாளையம், வெங்கிடியாம்பாளையம், தண்ணீர்பந்தல், ஞானிபாளையம், ஊஞ்சப்பாளையம், தேவணம்பாளையம், ராயபாளையம், கொத்துமுட்டிபாளையம், மைலாடி, நடுப்பாளையம், குடுமியாம்பாளையம், வேமாண்டம்பாளையம், முகாசி அனுமன்பள்ளி, அஞ்சுராம்பாளையம், வெள்ளிவலசு, பள்ளியூத்து, ராட்டைசுற்றிபாளையம், ராசாம்பாளையம், மந்திரிபாளையம், சென்னிமலை பாளையம், சங்கராங்காட்டுவலசு, கனகபுரம், கவுண்டச்சிபாளையம், நல்லாம்பாளையம், பூவாண்டிவலசு மற்றும் புதுப்பாளையம்.