City லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
City லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 மார்ச், 2023

மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பல பேரிடம் 1.25 கோடி ரூபாய் மோசடி செய்த மின்வாரிய லைன் மேன் கைது..!

மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பல பேரிடம் 1.25 கோடி ரூபாய் மோசடி செய்த மின்வாரிய லைன் மேன் கைது..!


மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 1.25 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபரை ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சிங்கம்பேட்டையை சேர்ந்தவர் மூர்த்தி, பவானி மின்சார வாரியத்தில் லைன் மேனாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 24 நபர்களிடம் மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்த நிலையில் அவர்களிடம் ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் பணம் பெற்றுள்ளார்.

வேலை கிடைக்கும் என மூர்த்தியின் பேச்சை நம்பி ஏமாந்த சிங்கம்பேட்டை மாடசாமி என்பவர் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் மூர்த்தியை பிடித்து விசாரணை செய்த நிலையில் அவர் மோசடியாக 24 நபர்களிடம் 1.25 கோடி பணம் பெற்றது தெரியவந்தது. 

இதையடுத்து அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோபி கிளை சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

சனி, 17 டிசம்பர், 2022

உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் 466வது கந்தூரி விழா தொடங்குவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் 466வது கந்தூரி விழா தொடங்குவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் 466வது கந்தூரி விழா தொடங்குவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரம் நாகை மாவட்டத்திலுள்ள நாகூரில் இஸ்லாமியர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமான நாகூர் ஆண்டவர் ஹஜ்ரத் நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தர்கா அமைந்துள்ளது. இந்நிலையில், 466வது கந்தூரி விழா வருகின்ற 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. பெருவிழாவிற்காக நாகூர் தர்கா முழுவதும் வண்ணம் பூசப்பட்டு பல லட்சம் ரூபாய் செலவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.நாகூர் தர்கா நிர்வாக அறங்காவலர் சையது காமில் சாகிப் தலைமையில் தர்கா நிர்வாகிகள் கந்தூரி விழாவிற்கான அனைத்து ஏற்பாடும் செய்து வருகின்றனர். இதனால் நாகூர் தர்கா புதுப்பொலிவுடன் தயாராகி வருகிறது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் நாகையிலிருந்து வருகின்ற ஜனவரி 2ம் தேதி நடைபெற உள்ளது.
ஜீரகள்ளி வனப்பகுதியில்  உள்ள கருப்பன் யானையை பிடிக்க ரேடியோ காலர் பொருத்த வனத்துறை முடிவு..!

ஜீரகள்ளி வனப்பகுதியில் உள்ள கருப்பன் யானையை பிடிக்க ரேடியோ காலர் பொருத்த வனத்துறை முடிவு..!

வனக் கிராமங்களை முற்றுகையிடும் யானைகளை விரட்ட ராமு, சின்னதம்பி ஆகிய கும்கிகள் நிறுத்தம்..! ஈரோடு மாவட்டம், ஆசனூர் வனச்சரகத்துக்குள்பட்ட ஆசனூர், ஓங்கல்வாடி, அரேப்பாளையம் கிராமப்பகுதிகளில் அண்மைக் காலமாக ஒற்றைக் காட்டுயானை புகுந்து சேட்டை செய்து வருகிறது. குறிப்பாக வனப்பகுதியையொட்டியுள்ள அரேப்பாளையம், ஓங்கல்வாடி கிராமங்களுக்குள் பகல் நேரத்திலேயே அந்த காட்டுயானை வலம் வருவதால் கிராம மக்கள் கடும் பீதியடைந்தனர். சில நேரங்களில் அந்த காட்டுயானை ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டு வாகனங்களை வழி மறிப்பது, ஊருக்குள் நிறுத்தியுள்ள வாகனங்களின் கண்ணாடியை உடைப்பது, அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து சேதம் ஏற்படுத்துவது என தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்தது. இந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேட்டைத் தடுப்பு காவலர்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் யானையை துரத்துவதற்காக இவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் கைகொடுக்கவில்லை.
இதனால் ஓங்கல்வாடி, அரேப்பாளையம், ஆசனூர் கிராமப் பகுதிக்குள் நுழையும் காட்டுயானையைத் அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்தியடிப்பதற்காக பொள்ளாச்சி, டாப்சிலிப் கோழிகமுத்தி வளர்ப்பு யானைகள் பயிற்சி முகாமில் இருந்து ராமு, சின்னதம்பி ஆகிய 2 கும்கி யானைகள் வனத்துறையால் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த கும்கி யானைகள் ஓங்கல்வாடி, அரேப்பாளையம், ஆசனூர் வனப்பகுதியையொட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காட்டு யானைகளின் வருகையை தீவிரமாக கண்காணித்து வருகின்றன. இதுகுறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் (பொறுப்பு) ராஜ்குமார் நமது செய்தியாளரிடம் கூறுகையில் ... அரேப்பாளையம், ஓங்கல்வாடி, ஆசனூர் பகுதியில் ஒற்றை யானையின் நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். அந்த யானை பகல் நேரத்திலேயே வனப்பகுதியை விட்டு வெளியேறி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை மறிப்பது, ஓங்கல்வாடி, அரேப்பாளையம் கிராமத்துக்குள் புகுந்து உலா வருவது என தொல்லை தருவதாக மக்களிடம் இருந்து புகார் பெறப்பட்டது. இந்த காட்டு யானை யாருக்கும் பயப்படுவதில்லைை. அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்தியடிப்பதற்காக வேட்டைத் தடுப்பு காவலர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்த யானை தொடர்ந்து 4 நாள்களாக கிராமப் பகுதிக்குள் புகுந்து பீதியை ஏற்படுத்தி வருவதால் இந்த யானையை துரத்துவதற்காக பொள்ளாச்சி, டாப்சிலிப்பில் இருந்து 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இவை இப்பகுதியில் இரவும், பகலும் நிறுத்தி வைக்கப்பட்டு காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்படும். அதேசமயம், தாளவாடி, ஜீரகள்ளி வனச்சரகங்களுக்குள்பட்ட பகுதியில் கருப்பன் என்று பெயரிடப்பட்ட வேறொரு காட்டு யானை அண்மைக்காலமாக அங்குள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. அந்த யானை ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன் திகினாரை, மரியாபுரம், அருள்வாடி, ஜீரகள்ளி, மல்லன்குழி போன்ற பகுதிகளில் சுற்றித் திரிந்த போது, 2 விவசாயிகளை மிதித்து கொன்றது. அந்த யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது. தற்போது அந்த யானை மீண்டும் ஜீரகள்ளி, தாளவாடி வனச்சரகங்களுக்கு உள்பட்ட கிராமப்பகுதிகளில் சுற்றி வருகிறது. இந்த கருப்பன் யானைக்கு ரேடியோ காலர் பொருத்த முடிவு செய்து அதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது. எனவே விரைவில் கருப்பன் யானையை பிடித்து, அதற்கு ரேடியோ -காலர் பொருத்தி அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வனத்துறையினரும், கால்நடைத் துறையினரும் கலந்தாலோசனை நடத்தி வருகிறோம். விரைவில் கருப்பன் யானையை பிடித்து ரேடியோ காலர் பொருத்தப்பட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு போய் விடப்பட்டு, அதன் நடமாட்டத்தை கண்காணிப்படும் என்று தெரிவித்தார்.

வெள்ளி, 16 டிசம்பர், 2022

மாநிலத்தின் புதிய கல்விக் கொள்கை ஆய்வறிக்கை முதல்வரிடம் ஜனவரி மாதம் வழங்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

மாநிலத்தின் புதிய கல்விக் கொள்கை ஆய்வறிக்கை முதல்வரிடம் ஜனவரி மாதம் வழங்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

மாநிலத்தின் புதிய கல்விக் கொள்கை ஆய்வறிக்கை முதல்வரிடம் ஜனவரி மாதம் வழங்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி ஈரோடு திண்டலில் உள்ள வேளாளர் மகளிர் கலை கல்லூரியின் கூட்டரங்கில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடர்பான தன்னார்வல ஆசிரியர்களுக்கான பயிற்சி திட்ட தொடக்க விழா நடந்தது, பயிற்சியை துவக்கி வைத்த பின்பு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில்... புதிய கல்விக் கொள்கை குறித்த ஆய்வு தமிழகம் முழுவதும் முடிவடைந்துள்ளது, இப்பொழுது தனியார் பள்ளி சங்கங்கள் போன்ற துறை சார்ந்த கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன, டிசம்பரில் இது முடிவடையும் ஜனவரியில் முதல்வரிடம் இந்த ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும், அதன் பிறகு முதல்வர் அதை ஆய்வு செய்து ஆணை வெளியிடுவார், நடப்பாண்டு, தமிழகம் முழுவதும் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 4.8 லட்சம் பேருக்கு எழுத்தறிவு கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது அதில் ஈரோடு மாவட்டத்தின் இலக்கு 23 ஆயிரத்து 598 கடந்த ஆண்டு 3.10 லட்சம் பேருக்கு திட்டம் பயன் தந்தது இலக்கை விஞ்சி 5 லட்சம் பேர் வரை இத்திட்டத்தில் பயன் அடைவார்கள் அமைச்சர் முத்துசாமி கூறியது போல் தமிழகத்தில் ஒருவர் கூட கல்லாதவர் இல்லை என்ற நிலையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது, பள்ளிக் கல்வித் துறை சார்பில் 24 வகையான விளையாட்டில் 208 வகையான போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன, புதிதாக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தை இந்தியாவின் விளையாட்டு தலைநகராக மாற்ற அறிவித்துள்ளார், அத்துறையுடன் இணைந்து மேலும் விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுப்போம், பள்ளிகளில் குழந்தைகள் கஞ்சா போன்ற தீய பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது என்று முதல்வர் ஏற்கனவே கவலை தெரிவித்துள்ளார், ஐஏஎஸ் அதிகாரிகள் கூட்டத்தில் கூட போதை பொருள் இல்லா மாநிலத்தை உருவாக்குவாக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார், எனவே கல்வி கூடங்களில், மாணவ, மாணவியர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என பேட்டியளித்தார். விழாவில் தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணணுண்னி, ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் உட்பட பல உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வியாழன், 15 டிசம்பர், 2022

இறுதிப் பயணத்தை மேற்கொண்டவர்களின் ஆத்மாவை திருப்தி அடையச் செய்யும் உயரிய சேவை ஈரோட்டில் தொடங்கியது ..!

இறுதிப் பயணத்தை மேற்கொண்டவர்களின் ஆத்மாவை திருப்தி அடையச் செய்யும் உயரிய சேவை ஈரோட்டில் தொடங்கியது ..!

கிராமப் புறத்தில் வசிக்கும் பொதுமக்களின் சிரமத்தை குறைக்க ஈரோட்டில் முதன்முறையாக நடமாடும் எரியூட்டு தகன வாகன சேவை தொடங்கப்பட்டுள்ளது... இத்திட்டம் ரோட்டரி சங்க நன்கொடையாளர்கள் உதவியுடன் தமிழகத்தில் முதல்முறையாக ஈரோட்டில் தொடங்கப்பட்டுள்ளது... ஈரோடு மாநகராட்சி மற்றும் ஈரோடு ரோட்டரி ஆத்மா மின் மயான அறக்கட்டளை சார்பில், ஈரோடு காவிரி கரையில் மின் மயானம் அமைக்கப்பட்டு, கடந்த 14 ஆண்டுகளாக சேவை செய்து வருகிறது, அதன் தொடர்ச்சியாக கிராமப் புறத்தில் வசிக்கும் பொதுமக்களின் சிரமத்தை குறைக்க நடமாடும் எரியூட்டு வாகனம் ஈரோடு சென்ட்ரல், ரோட்டரி சங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடமாடும் எரியூட்டும் தகன தொடக்க விழா நடைபெற்றது.
ரோட்டில் வாகன சேவை எரியூட்டும் வாகன இயக்கத்தை தொடங்கி வைத்த ரோட்டரி ஆத்மா அறக்கட்டளை நிறுவனத் தலைவர் டாக்டர் சகாதேவன் கூறுகையில், இத்திட்டம் ரோட்டரி சங்க நன்கொடையாளர்கள் உதவியுடன் தமிழகத்தில் முதல்முறையாக ஈரோட்டில் தொடங்கப்பட்டுள்ளது. கிராமப் பகுதிகளில் எரியூட்டுவதற்கு விறகு அல்லது சாண வரட்டி மூலம் உடலை தகனம் செய்ய வேண்டுமானால் ரூ.15,000 வரை செலவாகும். எரியூட்ட சுமார் 8 மணி நேரம் ஆகும். இந்த வாகனம் மூலம் ஒரு மணி நேரத்தில் எரியூட்டப்படும். இதற்காக ரூ.7,500 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது, இத்தொகையை கூகுள்பே அல்லது போன்பே மூலமாகவும் செலுத்தலாம். இந்த ஏரியூட்டு வாகனம் மாநகராட்சிக்கு வெளியேயும், குடியிருப்புப் பகுதி இல்லாத கிராம மயானம் மற்றும் விவசாய நிலத்தில் நிறுத்தப்பட்டு சடலம் எரியூட்டப்படும் என்பதுடன், 96557-19666 என்ற கட்டணமில்லா கைப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு பதிவு செய்து கொள்ளலாம், பதிவு செய்யும் நபர்கள் உறுதிமொழிப் படிவம் மற்றும் ( இறந்தவர் + உறவினரின் ஆதார் அட்டை ) அடையாள அட்டையை வழங்க வேண்டும் என்றார். இவ்விழாவில் அக்னி ஸ்டில்ஸ் நிர்வாக இயக்குனர் தங்கவேலு, செங்குந்தர் பள்ளி தாளாளர் சிவானந்தம், ஆர் ஆர் துளசி பில்டர்ஸ் சத்தியமூர்த்தி, ஆத்மா அறக்கட்டளை நிறுவனத் தலைவர் டாக்டர் இ.சகாதேவன், ரோட்டரி மாவட்ட ஆளுநர் பி.இளங்குமரன், ஆத்மா அறக்கட்டளை செயலாளர் வி.கேராஜமாணிக்கம், பொருளாளர் எஸ்.சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நெல்லை அருகே மினி லாரியில் ரகசிய அறை அமைத்து கடத்திய 100 கிலோ கஞ்சா பறிமுதல் - ஓட்டுநர் கைது!

நெல்லை அருகே மினி லாரியில் ரகசிய அறை அமைத்து கடத்திய 100 கிலோ கஞ்சா பறிமுதல் - ஓட்டுநர் கைது!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மினி லாரியில் ரகசிய அறை அமைத்து கடத்திவந்த 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக ஒருவரை கைது செய்தனர் தமிழகம் முழுவதும் கஞ்சா பயன்பாட்டை ஒழிக்க டிஜிபி சைலேந்திரா பாபு கஞ்சா வேட்டை 3.0-வினை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த உத்தரவிட்டு உள்ளார். அதன் பேரில், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பல்பீர் சிங் தலைமையிலான, வி.கே.புரம் காவல் ஆய்வாளர் பெருமாள் மற்றும் அம்பாசமுத்திரம் தனிப்படை போலீசார், அம்பாசமுத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை செய்பவர்களை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.  இந்த நிலையில், நேற்று வாகன தணிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, மினி லாரியின் அடியில் ரகசிய கபோர்டு அமைத்து, அதில் சுமார் 100 கிலோ எடையுள்ள கஞ்சாவை விற்பனைக்காக ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்படவிருந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக கஞ்சாவை கடத்தி வந்த தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் இராமானுஜம் புதூரை சேர்ந்த தளவாய் மாடன்(24) என்பவரை போலீசார் கைது செய்து, மினி லாரி மற்றும கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.  தொடர்ந்து, தளவாய் மாடனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட ஆதிச்சநல்லூரை சேர்ந்த பிரவின், புதுக்குடியை சேர்ந்த அருள்பாண்டி உள்ளிட்டோரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகினறனர்.
மதுரை மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கை சீர்குலைக்கும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை... தென் மண்டல ஐ.ஜி. எச்சரிக்கை!

மதுரை மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கை சீர்குலைக்கும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை... தென் மண்டல ஐ.ஜி. எச்சரிக்கை!

மதுரை மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை பாதிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில், மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் மற்றும் தனிப்படை காவலர்களுக்கான ஆலேசானை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமை வகித்தார். இதில் மதுரை சரக டிஐஜி பொன்னி, மாவட்ட எஸ்பி சிவ பிரசாத், ஏடிஎஸ்பிக்கள, டிஎஸ்பிக்கள் மற்றும் தனிப்படை போலீசார் கலந்து கெண்டனர். இந்த கூட்டத்தில் பழிக்கு பழியாக கொலை சம்பவங்களை தடுக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், புலன் விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் போன்றவைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு, ஐஜி அஸ்ரா கார்க் அறிவுரை வழங்கினார். மேலும், சட்டம் ஒழுங்கு பாதிக்க கூடிய நடவடிக்கையில் ஈடுபடும் ரவுடிகள் யாராக இருப்பினும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.  

சனி, 10 டிசம்பர், 2022

உதகையில் சாலை பாதுகாப்பு விழா: வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம் வழங்கிய ஆட்சியர் அம்ரித்!

உதகையில் சாலை பாதுகாப்பு விழா: வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம் வழங்கிய ஆட்சியர் அம்ரித்!

உதகையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசங்களை ஆட்சியர் அம்ரித் வழங்கினார்.  நீலகிரி மாவட்டம் உதகை சேரிங் கிராஸ் பகுதியில் காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் கலந்து கொண்டு 30 பயனாளிகளுக்கு இலவச தலைக்கவசத்தை வழங்கினார். முன்னதாக சாலை பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு இடையே நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, பேச்சு போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் அம்ரித் பேசியதாவது - சாலை பாதுகாப்பு வார விழாவின் நோக்கம் வாகன ஓட்டிகள் விபத்தில்லாமல் வாகனத்தை இயக்க வேண்டும் என்பதே. இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும். வாகன ஓட்டிகள் பாதுகாப்பான வேகத்திலும், இரவில் எதிரில் வாகனம் வரும்போது ஓளியை குறைத்தும், சாலை சந்திப்பில் வலது புறத்தில் இருந்து வாகனங்களுக்கு வழிவிட்டு முன் செல்லும் வாகனங்களுக்கு போதிய இடைவெளி விட்டும், மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் கவனமாக செல்ல வேண்டும். போக்குவரத்து விதிகளை மதித்து வாகன ஓட்டுவது மிகவும் முக்கியம். வாகனங்கள் இயக்கும் போது, செல்போன் பயன்படுத்தாமலும், நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டும்போது விபத்துக்களை தவிர்ப்பது மட்டுமில்லாமல் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி ஆஷிஷ் ராவத், டேன் டீ பொதுமேலாளர் ஜெயராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, ஏடிஎஸ்பி மோகன் நவாஸ், உதகை ஆர்.டி.ஓ துரைசாமி, வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

சனி, 3 டிசம்பர், 2022

மாணவர்களை கழிப்பறை சுத்தம் செய்த வைத்த விவகாரம்.. பள்ளி தலைமை ஆசிரியைக்கு சரியான ஆப்பு..!

மாணவர்களை கழிப்பறை சுத்தம் செய்த வைத்த விவகாரம்.. பள்ளி தலைமை ஆசிரியைக்கு சரியான ஆப்பு..!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த பாலக்கரையில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 35 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 2 கழிப்பறைகள் உள்ளன. ஒன்றை ஆசிரியர்களும், மற்றொன்றை மாணவர்களும் உபயோகித்து வருகின்றனர். ஈரோடு அருகே பட்டியலின மாணவர்களை, கழிவறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியை கீதாராணி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.  ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த பாலக்கரையில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 35 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 2 கழிப்பறைகள் உள்ளன. ஒன்றை ஆசிரியர்களும், மற்றொன்றை மாணவர்களும் உபயோகித்து வருகின்றனர். இந்த கழிவறைகளை தினந்தோறும் 2 மாணவர்கள் சுத்தம் செய்ய வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர் கீதாராணி அறிவுறுத்தியுள்ளார்.  இந்த விவகாரம் அறிந்த பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். அதிகாரிகள் விசாரணை நடத்த வந்தபோது தலைமை ஆசிரியை கீதாராணி பணிக்கு வராமல் தலைமறைவானார். இந்த விசாரணையில் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்தது உறுதியானதை அடுத்து தலைமை ஆசிரியை கீதாராணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.  இதுதொடர்பாக மாணவனின் தாய் பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியை கீதாராணி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டார். 

வெள்ளி, 18 நவம்பர், 2022

வடமாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்த எதிர்ப்பு; ஈரோட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சாலை மறியல்!

வடமாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்த எதிர்ப்பு; ஈரோட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சாலை மறியல்!

ஈரோட்டில் தனியார் போக்குவரத்து பார்சல் நிறுவனத்தில் வடமாநில தொழிலாளர்களை பணியமர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500-க்கும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு அசோகபுரம் பவானி சாலையில் தனியார் போக்குவரத்து பார்சல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 8 சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த மாதம் நிறுவனத்திற்கு வந்த லோடுகளை சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பதிலாக வடமாநில தொழிலாளர்களை வைத்து அதிகாரிகள் இறக்கியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் புகார் அளித்த நிலையில், பார்சல் நிறுவனத்தினர் 8 தொழிலாளர்களையும் வேலையிலிருந்து சஸ்பெண்ட் செய்ததாக கூறப்படுகிறது. அத்துடன் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனசோ, முன் பணமோ கொடுக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை பார்சல் நிறுவனத்தில் வடமாநில தொழிலாளர்கள் லோடுகளை இறக்கிய நிலையில், அதற்கு சுமைத்துக்கும் தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு திரண்ட 500-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் நிறுவனத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிய எதிர்ப்பு தெரிவித்து திடீரென பவானி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தின்போது, தொழிலாளி ஒருவர் மீது தனியார் நிறுவன அதிகாரியின் இருசக்கர வாகனம் மோதியதால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், அந்த அதிகாரியை சரமாரியாக தாக்கினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கருங்கல்பாளையம் போலீசார், தொழிலாளர்களை சமாதானப்படுத்தி அதிகாரியை மீட்டனர். தொடர்ந்து, போக்குவரத்து பார்சல் நிறுவன அதிகாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்களின் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

புதன், 19 அக்டோபர், 2022

மாதம் 30 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை.. யார் எல்லாம் விண்ணப்பிக்கலாம் ? முழு விபரம் இதோ

மாதம் 30 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை.. யார் எல்லாம் விண்ணப்பிக்கலாம் ? முழு விபரம் இதோ

சேலம் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் சமூக நல அலுவலகத்தில் ஓராண்டு தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய பாதுகாப்பு அலுவலர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இந்த பணிக்கு தகுதியான நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

செவ்வாய், 3 மே, 2022

ஈரோடு புதிய பேருந்து நிலையம் குறித்த கலந்தாலோசனை கூட்டம்; அமைச்சர் முத்துச்சாமி பங்கேற்பு!

ஈரோடு புதிய பேருந்து நிலையம் குறித்த கலந்தாலோசனை கூட்டம்; அமைச்சர் முத்துச்சாமி பங்கேற்பு!

ஈரோடு மாவட்டம் சோலாரில் ரூ.63.50 கோடி மதிப்பில் அமைக்கப்படும் புதிய பேருந்து நிலையத்துக்கான கலந்தாலோசனைக் கூட்டம், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் சோலார் பகுதியில் ரூ.63.50 கோடி மதிப்பில் அமைக்கப்படும் புதிய பேருந்து நிலையத்துக்கான கலந்தாலோசனை கூட்டம், இன்று ஈரோடு மேயர் நாகரத்தினம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி ஆகியோர் கலந்துகொண்டு, சிறப்புரை ஆற்றினர்.