HEALTH லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
HEALTH லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 3 டிசம்பர், 2023

வலுவான ஆரோக்கியமான விந்தணுக்களை பெற வாழைப்பூ அவசியம்..!!

வலுவான ஆரோக்கியமான விந்தணுக்களை பெற வாழைப்பூ அவசியம்..!!

அடி முதல் நுனி வரை பயன் தரக்கூடியது வாழை. வாழைத்தண்டு, வாழைக்காய், வாழைப்பழம், வாழை இலை, வாழைப்பூ எல்லாமே அரிய மருத்துவக் குணங்களைக் கொண்டிருக்கிறது. வாழைநாரும், வாழைப்பட்டையும் கூட பூவும் நாரும் மணப்பது போல என்று மணக்கிறது. இப்போதைய காலகட்டத்தில் நாம் அதிகமாக சந்திக்கும் பிரச்னைகளில் ஒன்று கருத்தரித்தலில் தாமதம் அல்லது குறைபாடு. பெண்கள் முழுமையடையும் தாய்மையில் தாய்மைப்பேறு இயல்பாக கிடைப்பதில் இன்று அதிக குறைபாடு உள்ளது. மன அழுத்தம், தாமத திருமணம், குழந்தைப்பேறை தள்ளிப்போடும் தன்மை இவையெல்லாம் தாண்டி மாறிவரும் உணவு பழக்கங்களும் உடல் உறுப்புகளைப் பாதிப்படைய செய்துவிடுகிறது. உடல் உறுப்புகளை வலுவாக்கும் உணவுகளை மறந்ததன் விளைவு இன்று பல நோய்களின் பிறப்பிடமாக அமைந்துவிட்டது. பெண்களின் கருப்பை மாதந்தோறும் கருமுட்டைகளை உற்பத்தி செய்து வலுவாக இருக்கும்பட்சத்தில் திருமணம் முடிந்ததும் குழந்தைப்பேறு உண்டாவதில் எவ்வித தடையும் இருக்காது
கருப்பை வளர்ச்சியடையவும் அதனுடைய பணிகள் சீராக நடைபெறவும் வாழைப்பூ உதவுகிறது. சிறிதே துவர்ப்பு கொண்ட வாழைப்பூவை வாரம் இரு முறை எடுத்துக்கொண்டால் கருப்பை பிரச்னைகள், கருப்பை புற்றுநோய் முக்கியமாக குழந்தையின்மை பிரச்னைகளைச் சந்திக்காமல் இருக்கலாம். வெள்ளைப்படுதல், மாதவிடாய்க் கோளாறுகள், சீரான மாதவிடாய், அந்த நாட்களில் தோன்றும் வயிறு வலி இவை அனைத்தையும் நீக்கும் ஒரே மருந்தாக அரு மருந்தாக வாழைப்பூ விளங்குகிறது. வாழைப்பூவில் இருக்கும் நீண்ட நாவை மட்டும் நீக்கி, பொடியாக நறுக்கி மோரில் சுத்தம் செய்து பருப்பு சேர்த்து கூட்டாகவோ, பொறியலாகவோ சாப்பிடலாம். அல்லது அடையாகவும் வார்க்கலாம்.. வாழைப்பூவை கடலைப்பருப்புடன் சேர்த்து வடையாகவும் செய்யலாம் வாழைப்பூவைச் சுத்தம் செய்யும் போது இறுதியில் இருக்கும் அடி குறுத்தை அப்படியே நன்றாக மென்று சாப்பிட்டால் கருப்பை பல மடங்கு நன்மை பெறும். இயன்றவரை எண்ணெயில் பொறித்து வடையாக சாப்பிடுவதை கூட்டாகவோ, பொறியலாகவோ செய்து சாப்பிடுவதே நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். வாழைப்பூ ஆண்களுக்கு விந்தணுக்களை உற்பத்தி செய்வதை அதிகரிக்கிறது. பெண்களுக்கு மலட்டுத்தன்மையை நீக்குகிறது.. இதுமட்டுமல்ல இன்னும் பல அரிய மருத்துவக்குணங்களைக் கொண்டிருக்கிறது.. நீரிழிவை கட்டுப்பாட்டில் வைப்பது, மூலத்தைப் போக்குவது, வயிற்றுப்புண்ணை ஆற்றுவது.. என இன்னும் பட்டியல்கள் நீள்கிறது.. அவ்வப்போது பார்க்கலாம். குறிப்பாக வாழையடி வாழையாக வாழ தலைமுறைகள் பிறக்கவேண்டுமே.. அதைச் சிறப்பாகவும் வாழை செய்கிறது என்பதால் தான் வாழையடி வாழை என்றார்கள் போலும்..

புதன், 8 மார்ச், 2023

கர்ப்பத்தை தள்ளிப்போட விரும்பும் பெண்கள் செக்ஸ்க்கு பின் இந்த உணவுகளை சாப்பிட்டால் போதுமாம் தெரியுமா?

கர்ப்பத்தை தள்ளிப்போட விரும்பும் பெண்கள் செக்ஸ்க்கு பின் இந்த உணவுகளை சாப்பிட்டால் போதுமாம் தெரியுமா?

திருமணமான பெரும்பாலான தம்பதிகளின் கனவு குழந்தையை பற்றியதாகத்தான் இருக்கும், ஆனால் சரியான திட்டமிடல் மற்றும் குழந்தை பெற தயாராக இருக்கும்போது குழந்தை பெறுவதுதான் அவர்களுக்கும் சரி, பிறக்கப்போகும் குழந்தைக்கும் சரி நல்லது. தேவையற்ற கர்ப்பத்தைத் தடுக்க அல்லது கர்ப்பத்தை தள்ளிப்போட பல பெண்கள் பிற கருத்தடை மாத்திரைகள் அல்லது பிற முறைகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், சில ஆரோக்கியமான வழிமுறைகளின் மூலம் கருத்தடை மாத்திரை இல்லாமலோ அல்லது கருத்தடை முறை இல்லாமலோ அவர்கள் உடலுறவு கொள்ளலாம். தேவையற்ற கர்ப்பத்தைத் தடுக்க அதிர்ஷ்டவசமாக சில எளிய மற்றும் பயனுள்ள வீட்டு வைத்தியங்கள் உள்ளன. கர்ப்பத்தைத் தவிர்க்க, பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பிறகு பெண் அவற்றைப் பயன்படுத்தலாம். இந்த முறைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், அதன் பிறகு நீங்கள் கர்ப்பமாக இருக்க மாட்டீர்கள் என்று 100% உறுதியாக இல்லாவிட்டாலும் அது குறைந்தபட்ச உறுதியை கண்டிப்பாக அளிக்கும். கர்ப்பத்தைத் தடுக்கும் சில பொருட்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பப்பாளி 

 நீங்கள் பாதுகாப்பற்ற உடலுறவு வைத்திருந்தால், அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை பப்பாளி சாப்பிடுங்கள். பப்பாளி கருத்தரிப்பதை அனுமதிக்காது மற்றும் உடலுறவுக்குப் பிறகு இயற்கையாகவே தேவையற்ற கர்ப்பத்தின் பிறப்புக் கட்டுப்பாட்டாக செயல்படுகிறது. 

அன்னாசி 

அன்னாசிப்பழத்தின் இயற்கையான பண்புகள் கரு உருவாகுவதைத் தடுக்கிறது மற்றும் உடலுறவுக்குப் பிறகு திட்டமிடப்படாத கர்ப்பத்தைத் தவிர்க்கிறது. உடலுறவுக்குப் பிறகு 2-3 நாட்களுக்கு தினமும் ஒரு பழுத்த அன்னாசிப்பழம் சாப்பிடுவது கர்ப்பத்தைத் தவிர்க்க உதவுகிறது.

 இஞ்சி 

இஞ்சி மாதவிடாயைத் தூண்டும் மற்றும் கர்ப்பத்தைத் தடுக்கும் ஒரு பொருளாகும். எளிய தீர்வாக நீங்கள் இஞ்சி டீயை உட்கொள்ளலாம். கொதிக்கும் நீரில் நசுக்கப்பட்ட அல்லது அரைத்த இஞ்சியைச் சேர்க்கவும். 5 நிமிடங்களுக்குப் பிறகு, கலவையை வடிகட்டிக் குடிக்கவும். கர்ப்பத்தைத் தடுக்க ஒவ்வொரு நாளும் 2 கப் வலுவான இஞ்சி தேநீர் குடிக்கவும். இஞ்சி தேநீர் உங்களுக்கோ அல்லது உங்கள் உடலுக்கோ எந்த விதத்திலும் தீங்கு விளைவிக்காது, இதில் எந்த பக்க விளைவுகளும் இல்லை, மேலும் இது உங்கள் சருமத்திற்கு நல்லது, எடை குறைக்க உதவுகிறது மற்றும் மாதவிடாய் காலத்தை தூண்டுகிறது. 

உலர்ந்த அத்திப்பழம் 

உலர்ந்த அத்திப்பழங்கள் சிறந்த இயற்கை கருத்தடை முறைகளில் ஒன்றாகும். அத்திப்பழம் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கும். உடலுறவுக்குப் பிறகு கர்ப்பத்தைத் தவிர்க்க, பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பிறகு 2-3 உலர்ந்த அத்திப்பழங்களை சாப்பிடுங்கள். அத்திப்பழத்தை அதிகமாக உண்ணாதீர்கள், ஏனெனில் இவை வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது

வியாழன், 2 பிப்ரவரி, 2023

கிராமத்து கிணற்றில் குதித்து மகிழ்ச்சிகரமான குளியல் - நம்ம ஸ்டேட் ஹெல்த் மினிஸ்டர் மா.சுப்பிரமணியன்..!

கிராமத்து கிணற்றில் குதித்து மகிழ்ச்சிகரமான குளியல் - நம்ம ஸ்டேட் ஹெல்த் மினிஸ்டர் மா.சுப்பிரமணியன்..!

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் 16 கிலோமீட்டர் தூரம் ஓடியும், தோட்டத்து கிணற்றில் குதித்து கிராமத்துக் குளியலுடன் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் பணியை துவங்கிய நம்ம ஹெல்த் மினிஸ்டர் மா.சுப்பிரமணியன்..!

தனது முகநூல் பக்கத்தில், தான் குளித்த வீடியோக்களை வெளியிட்டு ஈரோடு மக்களுக்கு உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தி  ஊக்கப்படுத்தியுள்ளார்..!
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சிறந்த அத்லட்டிக் வீரர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவர் தினமும் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்யக்கூடியவர். 

அந்த வகையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஈரோடு கிழக்குச் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலின் பொறுப்பாளராக திமுக சார்பில் நியமிக்கப்பட்டுள்ளார், 

அந்தப் பணிகளை மேற்கொள்வதற்கு முன்பு  தினந்தோறும், இடைத்தேர்தலுக்காக வந்திருக்கும் நாம் எடைகூடக் கூடாது என்பதற்காக இன்று அதிகாலை சென்னிமலை பகுதியில் 16 கிலோமீட்டர் தூரம் மோடியும் நடந்தும் பயிற்சி மேற்கொண்டதாகவும், அவர் தங்கி இருக்கும் தோட்டத்து வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குதித்து நீச்சல் அடித்து மகிழ்ச்சிகரமான கிராமத்து குளியலுடன் தனது பணியை மேற்கொண்டதாக தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு, ஈரோடு மாவட்ட பொது மக்களுக்கு உடற்பயிற்சியின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில், உடற்பயிற்சியை ஊக்குவித்துள்ளார் நம்ம ஸ்டேட் ஹெல்த் மினிஸ்டர் மா சுப்பிரமணியன்.

செவ்வாய், 24 ஜனவரி, 2023

தக்காளி சாப்பிட்டால் கண் பார்வை அதிகரிக்குமா?

தக்காளி சாப்பிட்டால் கண் பார்வை அதிகரிக்குமா?

தக்காளியில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால் தக்காளி சாப்பிட்டால் கண்ணுக்கு மிகவும் நல்லது என கூறப்படுகிறது. முக்கியமாக கண் பார்வை நல்ல ஒளியுடன் இருக்க வேண்டுமென்றால் வைட்டமின் ஏ அதிகம் உள்ள தக்காளியை சாப்பிடவேண்டும் என்றும் இதனால் கண் பார்வையை மேம்படுத்தி மாலைக்கண் உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் மேலும் தினசரி தக்காளி பழத்தை சாப்பிடுவதன் மூலம் பல வியாதிகளை தடுக்கலாம் என்றும் அதுமட்டுமின்றி தக்காளி தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு மேலும் வலு சேர்க்கும் என்றும் கூறப்படுகிறது எலும்புகள் வலுவாக இருப்பதற்கு தக்காளியை தினமும் சாப்பிட வேண்டும் என்றும் மூட்டு வலி எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் வராமல் தக்காளி சாப்பிடுவதால் தடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ புற்று நோய்க்கு எதிராக போராடும் தன்மை கொண்டது என்றும் உடல் எடையை குறைக்கும் நீர்ச்சத்துள்ள காய்கறி தக்காளி என்றும் கூறப்படுகிறது

ஞாயிறு, 15 ஜனவரி, 2023

தாம்பத்ய ஆர்வம் குறையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

தாம்பத்ய ஆர்வம் குறையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

ஒரு சிலருக்கு 40 வயதிலேயே தாம்பத்தியத்தில் ஆர்வம் குறைந்து விடும் என்றும் அவ்வாறு ஆர்வம் குறையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதை தற்போது பார்ப்போம்.  40 வயதை எட்டிய ஒரு சிலருக்கு மாதம் ஒரு முறை கூட தாம்பத்தியம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருப்பதில்லை. இதற்கு காரணம் வைட்டமின்கள் குறைவுதான் என்று கூறப்படுகிறது.    வைட்டமின் பி3, பி,9 சி மற்றும் டி, இ ஆகிய குறைவாக இருந்தால் தாம்பத்தியத்தில் உள்ள ஆர்வம் குறையும் என்று கூறப்படுகிறது. எனவே தாம்பத்தியத்தில் ஆர்வம் அதிகரிக்க சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், பூண்டு, முருங்கைக்காய், பீட்ரூட், முந்திரி பருப்பு, பிஸ்தா, பாதம் ஆகியவற்றை சாப்பிட வேண்டும் என்று கூறப்படுகிறது  அதேபோல் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் சிக்கன், வான்கோழி, முட்டை, பால், மீன் ஆகியவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மனதுக்கு உற்சாகம் அளிப்பதுடன் தாம்பத்தியத்திலும் ஆர்வம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது

ஞாயிறு, 18 டிசம்பர், 2022

கருஞ்சீரகத்தின் மருத்துவ குணங்கள்

கருஞ்சீரகத்தின் மருத்துவ குணங்கள்

சித்த மருத்துவத்தில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் மிகப் பழமையான மூலிகை மருந்து கருஞ்சீரகம். 100 கிராம் கருஞ்சீரகத்தில் கார்போஹைட்ரேட் 24.9, புரதம் 26.7, கொழுப்பு 28.5 சதவீதத்தில் உள்ளது. வைட்டமின்கள் ஏ, சி, ஈ, பி மற்றும் லினோலெய்க் அமிலம் நிறைந்துள்ளது. இதிலுள்ள 'தைமோகுயினோன்' என்ற தாவர வேதிப்பொருள் மிகச்சிறந்த ஆன்ட்டி ஏஜிங், ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆகும். இது உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதிலும், உடல் உள் உறுப்புகளில் ஏற்படும் கோளாறுகளை சீராக்குவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. கருஞ்சீரக விதைகளில் உள்ள எண்ணெய் சத்து கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரித்து இதய செயல் பாட்டை ஊக்குவிக்கிறது. டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கும் இது நல்ல பலனைத் தருகிறது. தைராய்டு சுரப்பி பிரச்சினை உள்ளவர்களுக்கு இது ஓர் அருமருந்து. இதை தினசரி உண்ணும் அளவு 1-3 கிராம். இதை வறுத்து பொடித்து டீ போல போட்டு குடிக்கலாம். அல்லது சமையலுக்கு பயன்படுத்தும் மசாலாவில் சேர்த்து பயன்படுத்தலாம். கருஞ்சீரக விதைக்கு மாதவிடாயை தூண்டும் தன்மை உடையதால் கர்ப்பிணிகள் பயன்படுத்தக்கூடாது. ரத்த அழுத்தத்திற்கு மருந்து எடுப்பவர்கள் இதை அளவோடு எடுக்க வேண்டும், ஏன் எனில் இது ரத்த அழுத்தத்தை சிறிது குறைக்கும். கருஞ்சீரகத்தை தினமும் அளவோடு எடுத்து வந்தால் `இது ஆயுள் காக்கும் இறை மருந்து' என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

செவ்வாய், 13 டிசம்பர், 2022

பாகற்காயில் இந்த அபாயம் இருக்கிறதா..!

பாகற்காயில் இந்த அபாயம் இருக்கிறதா..!

என்னதான் காய்கறிகளில் அளவுகடந்த சத்துக்கள் நிறைந்திருந்தாலும் சில தீமைகளும் அதில் இருக்கதான் செய்கிறது. இதனை சரியான முறையில் எடுத்துக் கொ‌ண்டா‌ல் அதிலிருந்து விடுபடலாம்.இந்த வகையில் கசப்பாக இருந்தாலும் பல நன்மைகள் பாகற்காயில் உள்ளது. ஆனால் அதில் இருக்கும் சில கசப்பான தீமைகளும் இருக்கிறது. பாகற்காய் பிரியர்கள் குறிப்பிட்ட அளவு சரியாக உட்கொள்ளாமல் அளவுக்கதிகமாக உட்கொள்வதன் காரணத்தினால் வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி பிரச்சனைகளை உண்டாக்கி விடுகிறது. சர்க்கரை நோயாளிகள் பெரும்பாலும் பாகற்காயினை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் சர்க்கரையின் அளவு குறைகிறது. அத்துடன் உட்கொள்ளும் மருந்துகளை பொருத்து மாற்றம் பெறும் என்பதால் மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம்.

சனி, 10 டிசம்பர், 2022

கல்லீரல், ஈரல் மற்றும் மூளைக்கு நன்மை பயக்கும் காய்..!

கல்லீரல், ஈரல் மற்றும் மூளைக்கு நன்மை பயக்கும் காய்..!

வெள்ளரிக்காய் அதிக நீர் சத்துள்ள ஒரு காயாகும் . கோடைகாலத்தில் இதனை எடுத்து கொள்ளும்போது உடலில் நீர் சத்து குறையாமல் சமநிலையாக பாதுகாக்க உதவுகிறது. இதலிருக்கும் விதைகள் ஏராளமான நன்மைகள் தரக்கூடியது. முகத்துக்கு பொலிவு சேர்க்கவும் ,கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தால் அதை போக்கவும் இது பயன்படுகிறது. அத்துடன் சிறுநீரகம் தொடர்பான நோய்களை குணப்படுத்த வெள்ளரிக்காயானது மிகவும் பயனளிக்கிறது. சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் முதல் சிறுநீரக நோய் தொற்று வரை இது குணப்படுத்துகிறது. வெள்ளரிக்காயினை சாப்பிட்டு வருவதால் உடல் குளிர்சியடைந்து , உடல் சூட்டை பெருமளவில் குறைக்கிறது. மேலும் வெள்ளரிக்காய் பசியின்மையை சரிசெய்து பசியினை உண்டாக்கும் தன்மை கொண்டது. மேலும் இதில் பொட்டாசியம் மிகுதியாக காணப்படுவதால் நாவின் வறட்ச்சியை போக்குகிறது. இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை உருவாக்குகிறது. கல்லீரல் மற்றும் ஈரல் போன்றவற்றில் இருக்கும் சூட்டினை தணித்து, வெள்ளரிக்காய் மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது என்பதால் மாணவர்கள் அதிகம் உண்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தினந்தோறும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவதை காணலாம்.

வெள்ளி, 9 டிசம்பர், 2022

உடல் எடையை குறைக்கும் மரவள்ளிக்கிழங்கு… மேலும் பல நன்மைகள்!!!

உடல் எடையை குறைக்கும் மரவள்ளிக்கிழங்கு… மேலும் பல நன்மைகள்!!!

மண்ணிற்கு அடியில் வளரும் மரவள்ளிக்கிழங்கில் பல சத்துக்கள் நிறைந்துள்ளன. ஏழை மக்கள் மற்றும் பஞ்ச காலங்களுலும் அந்த காலத்தில் போர்க் காலங்களிலும் உணவாக மரவள்ளிக்கிழங்கு பயன்பட்டிருக்கிறது. இதில் வைட்டமின்C, கார்போஹைட்ரேட், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துகள் மிகுந்து காணப்படுகிறது.மரவள்ளிக் கிழங்கில் இருக்கும் நார்ச்சத்தானது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, குடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்ற பயன்படுகிறது. மேலும் செரிமான மண்டலத்தை சீராக்குவதுடன், சரியான குடல் இயக்கத்துக்கு இது வழிவகுக்கிறது. அத்துடன் இதில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இதில் இருக்கும் போலேட் மற்றும் வைட்டமின் சி ஆகியவையும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுகிற ஆன்டிஆக்சிடன்டுகளும் நிறைந்துள்ளது. நாள்தோறும் மரவள்ளிக்கிழங்கினை எடுத்து கொண்டால் உடல் எடையை குறைக்க உதவுகின்றது. பலரும் ஞாபக மறதியால் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு ஞாபக மறதியை குறைப்பதுடன், ரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்கிறது.

வெள்ளி, 28 அக்டோபர், 2022

க்களே எச்சரிக்கை பதிவு..!! இந்த ஷாம்புகளால் புற்றுநோய் ஆபத்து..!!

க்களே எச்சரிக்கை பதிவு..!! இந்த ஷாம்புகளால் புற்றுநோய் ஆபத்து..!!

யூனிலிவர் நிறுவனம் தனது சில தயாரிப்புகளை தற்போது திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. இந்நிறுவன ஷாம்பு தயாரிப்புகளில், குறிப்பாக டவ் ஷாம்புக்களில், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பென்சீன் (Benene) எனப்படும் ரசாயனத்தின் ஆபத்து அதிகம் உள்ளதாக யூனிலிவர் நிறுவனம் கூறியுள்ளது. எனவே, அக்டோபர் 2021 வரை தயாரிக்கப்பட்ட யூனிலிவர் நிறுவன உலர்ரக ஷாம்புக்களை திரும்பப் பெற்று வருகிறது. பென்சீன் அளவை காரணம் காட்டி ஷாம்பூக்கள் திரும்பப் பெறப்படுவது இது முதல் முறையல்ல, ஏற்கெனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் P&G தயாரிப்பான Pantene மற்றும் Herbal Essences ஷாம்புக்கள் சந்தையில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஷாம்பு பயன்படுத்துவோரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. Dove, Nexuss, Suave, Tressme, Tigi போன்ற உலர்ரக ஷாம்புக்களை (dry shampoo) யூனிலிவர் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 1 ஆகஸ்ட், 2022

பெண்களே இது உங்களுக்கு..!! எளிய முறையில் செய்ய கூடிய டிப்ஸ்..!!

பெண்களே இது உங்களுக்கு..!! எளிய முறையில் செய்ய கூடிய டிப்ஸ்..!!

வேலைக்கு செல்லும் பெண்கள் அவசரத்திலும் மற்றும் குடும்பத்தை கவனித்து கொள்ளும் பொறுப்பு அதிகமாக இருக்கும் காரணத்தினாலும் அவர்களது அழகு விஷயத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது.பெண்கள் குடும்ப பொறுப்புகளை சுமக்கும் அதே சமயத்தில், தங்களது அழகு விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். வேலைக்கு போகும் பெண்களுக்கு நேரம் குறைவாக தான் இருக்கும். இருப்பினும் இந்த குறைந்த நேரத்திலும், உங்கள் அழகை கூட்டும் இயற்கை அழகு குறிப்புகள் என்னென்ன என்று இவற்றில் நாம் காண்போம். தினந்தோறும் குறைந்தது 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை தண்­ணீர் பருகுங்கள். பீட்ரூட் சாறினை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து தண்ணீ­ரால் கழுவுங்கள். முகம் பொலிவு பெறும். பன்னீரும், சந்தனத் தூளும் கலந்த கலவையில் 5 துளி பால் சேர்த்து முகத்திலும் உடம்பிலும் தேய்த்துகொள்ளுங்கள். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான வெந்நீரில் குளிக்க, முகமும் தேகமும் பளபளப்பாகும். எலுமிச்சை சாறுடன் சிறிது சூடான தேன் கலந்து முகத்தில் தடவி அது உலர்ந்தபின் முகம் கழுவுங்கள். முகம் வனப்பு பெறும். உடம்பு பளபளப்பும், புதுப்பொலிவும் பெற தினமும் காலையில் தண்ணீ­ரில் தேன் கலந்து குடியுங்கள். மஞ்சள்தூளும், சந்தனத்தூளும் ஆலிவ் எண்ணையில் கலந்து உடம்பில் தேய்த்து 10 நிமிடம் கழித்து குளிக்க, முகமும், தேகமும் மினுமினுக்கும். உங்கள் சருமம் உலராமல் பளபளப்புடன் திகழ, தினமும் சிறிதளவு பசும்பாலை உடல் முழுக்க தேய்த்து விட்டு பின்பு குளியுங்கள். பணிபுரியும் இடம் குளிர்சாதன வசதியுடன் இருந்தால் சருமத்திற்கு நல்லது. வெந்நீரைவிட சாதாரண தண்ணீரில் குளிப்பது நல்லது. குளித்தபின் துணியால் அழுத்தித் துடைக்காமல் மென்மையாக ஒற்றி துடைப்பது சருமத்திற்கு பாதுபாப்பு. தோல் பளபளப்பாக இருக்க வைட்டமின் 'ஏ' மற்றும் வைட்டமின் 'சி' நிறைந்த உணவு வகைகளை உட்கொள்ளுங்கள். கொதிக்க வைத்த கேரட் சாறினை முகத்திலும், உடம்பிலும் தேய்த்துக் குளிக்க, முகமும், தேகமும் பளபளப்பாகும். பாலில் எலுமிச்சை சாறு கலந்து உடம்பில் தேய்த்துக் குளிக்க, முகமும் தேகமும் பளிச்சிடும். மஞ்சள்தூள் மற்றும் பாலாடை கலந்த கலவையை உடம்பில் தேய்த்துக் குளிக்க, உடல் பொலிவுடன் பிரகாசிக்கும். பச்சைப் பயிறு மாவு மற்றும் பாலாடை கலந்த கலவையை உடம்பில் தேய்த்துக் குளிக்க, உடல் பளபளப்பாகும். ரோஜா இதழ்களை கூழாக அரைத்து அத்துடன் பாலாடை சேர்த்து அந்தக் கலவையை கண், இமை, உதடு தவிர்த்து மற்ற இடங்களில் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து குளிக்க உடம்பு புதுப்பொலிவு பெறும். தயிரும், கோதுமை மாவும் சேர்ந்த கலவையை உடம்பில் தேய்த்து 5 நிமிடம் கழித்து குளிக்க தேகம் புத்துணர்ச்சி பெறும். வெயிலில் நடப்பது மேனி அழகைக் கெடுக்கும். இதைத் தடுக்க வெள்ளரிச்சாறும், தக்காளிச்சாறும் சமஅளவில் கலந்து உடம்பில் தேய்த்துக் குளித்தால் தோல் நிறம் மங்காமல் மின்னிப் பிரகாசிக்கும். கடுகு எண்ணையை உடம்பில் தேய்த்து 5 நிமிடம் கழித்து பச்சைப் பயிறு மாவு உடம்பில் தேய்த்துக் குளித்தால் உடல் பளபளப்பாகும். புளோரின் சத்து நிறைந்த ஆட்டுப்பால், பாலாடைக்கட்டி, கேரட், வெள்ளரி, முட்டைக்கோஸ் போன்ற பச்சை காய்கறிகளைச் சாப்பிடுவதால் சருமம் வனப்புடன் திகழும். சோடியம் சத்துக் குறைந்தால் தோலில் சுருக்கம் ஏற்படும். வெயில்காலத்தில் சோடியம் சத்து மிகுந்த வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் தோல் சுருக்கம் விழாமல் பாதுகாக்கலாம். இது உடல் சூட்டையும் தணித்து குளுமையும் தரும். சிலிகான் சத்து குறையும்போது உடலில் வேனற்கட்டி, வெடிப்பு, சிரங்கு போன்ற பாதிப்புகள் தோன்றும். இதைத் தவிர்க்க முளை கட்டிய தானியங்கள், தக்காளி, பார்லி மற்றும் ஸ்ட்ராபெர்ரி, அத்திப்பழ வகைகளைச் சாப்பிட்டுவர வேண்டும். பச்சையம் சத்து நிறைந்த கோதுமைக் கஞ்சி, பச்சைக்கீரை, காய்கறி வகைகளைச் சாப்பிட்டு வர, தோல் வெடிப்புகள் ஏற்படாது. சருமம் நிறம் மங்காமல் செழுமையுடன் இருக்கும்.