Latest

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026

சேலம் SKS மகளிர் நல மையத்தில், பிரத்யேக 'காஸ்மெட்டிக் கைனகாலஜி' (Cosmetic Gynecology) மற்றும் உயர்தர மகப்பேறு மருத்துவப் பிரிவுக்கான தொடக்க விழா

சேலம் SKS மகளிர் நல மையத்தில், பிரத்யேக 'காஸ்மெட்டிக் கைனகாலஜி' (Cosmetic Gynecology) மற்றும் உயர்தர மகப்பேறு மருத்துவப் பிரிவுக்கான தொடக்க விழா

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சேலம் SKS மகளிர் நல மையத்தில், பிரத்யேக 'காஸ்மெட்டிக் கைனகாலஜி' (Cosmetic Gynecology) மற்றும் உயர்தர மகப்பேறு மருத்துவப் பிரிவுக்கான தொடக்க விழா

சேலம் ஃபேர்லேண்ட்ஸ், பிருந்தாவன் சாலையில் இயங்கி வரும் புகழ்பெற்ற SKS மகளிர் நல மற்றும் கருத்தரிப்பு மையம் (SKS Women's Health Clinic & Fertility Center), பெண்களின் முழுமையான நல்வாழ்வை உறுதி செய்வதில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. பெண்களின் ஆரோக்கியம், தன்னம்பிக்கை மற்றும் அழகியல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட 'காஸ்மெட்டிக் கைனகாலஜி', மகப்பேறு மருத்துவம் மற்றும் மகளிர் நலனுக்கான பிரத்யேக மருத்துவப் பிரிவின் தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில், SKS மருத்துவமனையின் தலைவர் திருமதி ஸ்ரீ வசந்தா, நிர்வாக இயக்குநர் டாக்டர் சுரேஷ் விஸ்வநாதன், இயக்குநர் திருமதி சோமா நந்தா சுரேஷ், தலைமை நிர்வாக அதிகாரி (CEO) டாக்டர் சில்பி மணி மற்றும் கருத்தரிப்பு மற்றும் மகளிர் நல மருத்துவர் கவிதா நாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். புதிய மருத்துவப் பிரிவின் ரிப்பன் வெட்டும் நிகழ்வை, நிர்வாக இயக்குநரின் குழந்தைகளான ஷைலின் மற்றும் ஷனாயா ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். இது குறித்து SKS மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுரேஷ் விஸ்வநாதன் கூறுகையில், "சென்னை மற்றும் கோயம்புத்தூர் போன்ற பெருநகரங்களில் கிடைக்கும் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகளைச் சேலம் மக்களுக்கும் இங்கேயே வழங்குவதே எங்கள் நோக்கமாகும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாது, மனரீதியான தன்னம்பிக்கையும் மிகவும் முக்கியமானது," என்று தெரிவித்தார். மேலும் காஸ்மெட்டிக் கைணகாலஜி மற்றும் மம்மி மேக் ஓவர், விரிவான கர்ப்பகால பராமரிப்பு, அதிக ஆபத்துள்ள கர்ப்ப கால பராமரிப்பு மற்றும் நவீன கருத்தரிப்பு சிகிச்சை முறைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார் மருத்துவமனையில் நிர்வாக இயக்குனர்.
சேலம் ஜோயாலுக்காஸ் ஷோரூமில்,  ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 13, 2026 வரை 'பில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி ஷோ' (Brilliance Diamond Jewellery Show)

சேலம் ஜோயாலுக்காஸ் ஷோரூமில், ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 13, 2026 வரை 'பில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி ஷோ' (Brilliance Diamond Jewellery Show)

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சேலம் ஜோயாலுக்காஸ் ஷோரூமில்,  ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 13, 2026 வரை 'பில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி ஷோ' (Brilliance Diamond Jewellery Show)

சேலம் உலகின் மிகவும் விரும்பப்படும் நகை நிறுவனமான ஜோயாலுக்காஸ், தனது சேலம் கிளையில் 'பில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி ஷோ' மூலம் சேலம் மக்களைக் கவரத் தயாராகிவிட்டது. ஆகஸ்ட் 28, 2026 அன்று தொடங்கும் இந்த மிகவும் எதிர்பார்க்கப்படும் கண்காட்சி, வைர நகைகளின் நேர்த்தியான கலைத்திறன், அழகு மற்றும் புதுமை ஆகியவற்றின் மறக்க முடியாத கொண்டாட்டமாக அமையவுள்ளதது. திருமணங்களுக்கான பிரம்மாண்டமான நகை சேகரிப்புகள் முதல் அன்றாட பயன்பாட்டிற்கான நவீன வைர நகைகள் வரை, இந்தக் கண்காட்சி காலத்தால் அழியாத பாரம்பரியம் மற்றும் நவீன அழகியல் ஆகியவற்றின் சங்கமத்தை வழங்குகிறது. இதில் உள்ள ஒவ்வொரு வடிவமைப்பும் ஒரு கலைப்படைப்பாகும்; இவை கண்காட்சி நடைபெறும் காலத்தில் மட்டுமே கிடைக்கும். இது குறித்து ஜோயாலுக்காஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜோய் ஆலுக்காஸ் கூறியதாவது: "வைரங்கள் மீதான எங்கள் பெருமை மற்றும் நகை வடிவமைப்பில் முழுமைக்கான எங்கள் அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு இடையேயான பிணைப்பை 'பில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி ஷோ' வெளிப்படுத்துகிறது. எங்கள் இதயத்தில் சேலத்திற்கு ஒரு சிறப்பான இடம் உண்டு. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது. அழகு, தனித்துவம் மற்றும் சிறந்த கைவினைத்திறனைப் பிரதிபலிக்கும் பிரத்யேக வடிவமைப்புகளைக் கண்டறிய வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பை வழங்கும். இந்தச் சிறப்பான நிகழ்வைக் கொண்டாடும் விதமாக, கண்காட்சிக் காலத்தில் ₹1 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பிலான வைர நகைகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச தங்க நாணயம் வழங்கப்படும்; இது அவர்களின் ஷாப்பிங் அனுபவத்தை மேலும் சிறப்பாக்கும். 'பில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி ஷோ' சேலம் ஷோரூமில் மட்டுமே செப்டம்பர் 13, 2026 வரை நடைபெறும். ஆடம்பரம், அன்பு மற்றும் காலத்தால் அழியாத அழகின் கதைகளைச் சொல்லும் வைரங்களின் அற்புதமான உலகத்தைக் காணவும் ரசிக்கவும் அனைத்து வாடிக்கையாளர்களும் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள். கவர்ச்சியின் கதையைச் சொல்லும் வைர நகைகளின் அற்புதமான உலகத்திற்கு அனைவரையும் வரவேற்கிறோம் என்றும் தெரிவித்தார்.

வியாழன், 27 ஆகஸ்ட், 2026

சேலத்தில் திருமணிமுத்தாற்றின் புனிதத்தை மீட்டெடுக்க, சேலம் மாவட்ட அனைத்து திருக்கோவில் பாதுகாப்பு சங்கத்தினர் சிறப்பு வழிபாடு.

சேலத்தில் திருமணிமுத்தாற்றின் புனிதத்தை மீட்டெடுக்க, சேலம் மாவட்ட அனைத்து திருக்கோவில் பாதுகாப்பு சங்கத்தினர் சிறப்பு வழிபாடு.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தில் திருமணிமுத்தாற்றின் புனிதத்தை மீட்டெடுக்க, சேலம் மாவட்ட அனைத்து திருக்கோவில் பாதுகாப்பு சங்கத்தினர் சிறப்பு வழிபாடு.

சேலம் மாநகரின் ஊடாகப் பாய்ந்து, நாமக்கல் மாவட்டம் நஞ்சை எடையார் கிராமத்தில் காவிரியில் கலக்கும் ஒரு முக்கிய துணை நதியே திருமணிமுத்தாறு ஆகும். சேலம் மாவட்டம் சேர்வராயன் மலைத்தொடர் ( ஏற்காடு மலை ) பகுதியில் திருமணிமுத்தாறு உருவாகிறது. 
சேலம்  மாநகர் மற்றும் பல ஊர்கள் வழயாகப் பாய்ந்து, சுமார் 120 கிலோமீட்டர் தூரப் பயணத்திற்குப் பிறகு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே நஞ்சை எடையார் என்னும் இடத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க  திருமணிமுத்தாற்றின் கரையில் புகழ்பெற்ற, கோட்டை அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன்,  உத்தமசோழபுரம் கரபுரநாதசுவாமி கோயில் போன்ற பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்கள் அமைந்துள்ளன. 
இப்பகுதியில் உள்ள சாய ஆலை மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் ஆற்றில் கலப்பதால், மழைக்காலங்களிலும் சரி, மற்ற காலங்களிலும் ஆற்று நீர் மாசடைந்து வெள்ளை நிற நுரை பொங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர் மாசடைவதுடன், பொதுமக்களின் சுகாதாரமும் பாதிக்கப்படுவதாகக் கிராம மக்கள் தொடர் வேதனை தெரிவித்து வருகின்றனர். இதைக் கட்டுப்படுத்த பல்வேறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கைகளும் மனுக்களும் அளித்து வருகின்றனர். 
இந்த நிலையில் திருமணிமுத்தாற்றின் பெருமைகளை மீட்டெடுக்கவும், ஆட்டின் புனித தன்மையை காக்கவும் மற்றும் இனி வரும் காலங்களில் குப்பையில் மற்றும் கழிவுகளை கொட்டுவதை தடுத்து நிறுத்தவும் சேலம் மாவட்ட திருக்கோவில் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் வளாகத்தில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சங்கத்தின் மாநில இணை செயலாளர் சண்முகவேல் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில் மாவட்ட செயலாளர் சண்முகம், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சத்ய சுதன், கோக் ரவி, மாவட்டத் துணைச் செயலாளர் நேதாஜி, மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் சர்மிளா சரவணன், கவிதா பேபி ரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணிமுத்தாற்றின் கரையில் ஆகம விதிமுறைப்படி அகழ்விளக்குகளை இயக்கியும் கைகளில் அகல் விளக்குகளை ஏற்றியும் புனித வழிபாட்டில் ஈடுபட்டனர். 
இதனை அடுத்து சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு குறித்து அனைத்து திருக்கோவில் பாதுகாப்பு சங்கத்தின் மாநில இணை செயலாளர் சண்முகவேல் நமது கூறுகையில், 
பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்டது இந்த மணிமுத்தாறு என்றும் இந்த புனித ஆற்றில் முத்து குளித்து எடுக்கப்பட்ட முத்து இன்றும் சுகவனேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள ஸ்வர்ணாம்பிகை அம்மனின் மூக்கில் இருப்பதாகவும் இப்படி பெருமைமிகு முத்தாறு இன்று இந்த பகுதியில் உள்ள மார்க்கெட்டில் மிகுதியாகும் கழிவுகளை கொட்டும் குப்பை தொட்டியாகவும் சாயக்கழிவு நீர் கலந்து மாசடைந்து துர்நாற்றம் வீசும் பகுதியாக மாறியுள்ளது வேதனைக்குரியதாக உள்ளது என்றும் குறிப்பிட்டார். மேலும் இந்த புனித ஆரை பாதுகாக்க இனிவரும் காலங்களில் மணிமுத்தாறு செல்லும் பகுதியில் உள்ள மார்க்கெட் வர்த்தக வணிக நிறுவனங்களில் இருந்து கொட்டப்படும் கழிவுகளை தடுக்க அமைப்பின் சார்பில் முயற்சி மேற்கொள்ள உள்ளதோடு இது சம்பந்தமாக கூடிய விரைவில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு வழங்க உள்ளதாகவும் சண்முகவேல் தெரிவித்தார்.

புதன், 26 ஆகஸ்ட், 2026

சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் 2026 முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா

சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் 2026 முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் 
2026 முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை 2026 முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா கல்லூரியின் சிறப்பு அரங்கத்தில்  நடைபெற்றது. கல்லூரியின் துணைத்தலைவர்கள் திரு.சொக்குவள்ளியப்பா, திரு.தியாகுவள்ளியப்பா  முன்னிலையில் நடைபெற்ற விழாவிற்கு கல்லூரி தலைவர் திரு.வள்ளியப்பா தலைமை வகித்தார். இந்த விழாவில் சென்னை ஆயுதப்படை, கூடுதல் காவல்துறைத் தலைவர், தினகரன் ஐ.பி.எஸ் மற்றும் பெங்களூரு கனரா வங்கியின், பிரிவுத் தலைவர், அனந்த் ஜலோன்ஹா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். முன்னதாக சிறப்புவிருந்தினர்கள், கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார், மற்றும் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். பின்னர் கல்லூரியின் அட்மிஷன் டீன் மற்றும் கணினி அறிவியல் துறைத்தலைவர் சத்தியபாமா விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார். 
இதனைத்தொடர்ந்து பேசிய கல்லூரியின் துணைத்தலைவர்கள் சொக்குவள்ளியப்பா மற்றும் தியாகுவள்ளியப்பா ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்க சோனா கல்லூரி காத்திருப்பதாகவும், அவற்றை முழுமையாக பயன்படுத்தி சிறந்த மாணவர்களாக அவர்கள் உருவாகவேண்டுமென்று கேட்டுக்கொண்டனர். பின்னர் சிறப்பு விருந்தினர், சென்னை ஆயுதப்படை, கூடுதல் காவல்துறைத் தலைவர், தினகரன் ஐ.பி.எஸ் பேசும் பொழுது, மாணவர்கள் எந்த சூழ்நிலையிலும் தங்கள் முக்கியத்துவத்தையும், தனித்துவத்தையும் இழந்து விடாமல் இருக்க  வேண்டுமென்றும் இதற்கு தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் மிக அவசியம் என்றார். கனரா வங்கியின், பிரிவுத் தலைவர், அனந்த் ஜலோன்ஹா பேசும் பொழுது, சிறந்த உள் கட்டமைப்பு, நல்ல பேராசிரியர்கள், மாணவர்களை சிறந்தவர்களாக தயார்படுத்துதல், ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் சோனா கல்லூரி சிறந்து விளங்குவதால்தான் அகில இந்திய அளவில் சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது என்றும் இத்தகைய கல்லூரியில் பயிலும் வாய்ப்பு கிடைத்ததற்கு மாணவர்கள் நீங்கள் பெருமை பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.     
சோனா கல்வி குழுமத்தின் தலைவர் திரு.வள்ளியப்பா பேசும்பொழுது, வாழ்வின் முக்கியத்தருணமான இந்த காலக்கட்டத்தில் படிப்பில் முழுக்கவனம் செலுத்தி மாணவர்கள் சிறந்து விளங்க வாழ்த்து தெரிவித்தார். பின்னர் மாணவ மாணவிகளுக்கான வழிகாட்டுதல்கள், பல்வேறு கல்வி உதவித்தொகை, பிற வசதிகள் அவற்றை பயன்படுத்திக்கொள்வது பற்றி கல்லூரியின் முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார் எடுத்துரைத்தார். இந்த விழாவில் சோனா கல்வி குழுமத்தின் இயக்குனர் கார்த்திகேயன், முதல்வர்கள் காதர்நவாஷ், கனகராஜ், கவிதா, பேராசிரியர்கள் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் என பலர் பங்கேற்றனர். இந்த விழாவிற்கான ஏற்பாட்டினை துறைத்தலைவர் ரேணுகா மற்றும் பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இறுதியாக எம்.பி. ஏ துறைத்தலைவர் அஞ்சனி நன்றியுரையாற்றினார்.
மிலாடி நபியையொட்டி சேலத்தில் இஸ்லாமியர்கள் பங்கேற்ற ஊர்வலம் :

மிலாடி நபியையொட்டி சேலத்தில் இஸ்லாமியர்கள் பங்கேற்ற ஊர்வலம் :

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

மிலாடி நபியையொட்டி சேலத்தில் இஸ்லாமியர்கள் பங்கேற்ற ஊர்வலம் : 
 
இஸ்லாமியர்களின் இறை தூதரான நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை மிலாடி நபியாக உலக இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி சேலத்தில் கோட்டை தன்ஜிமே அஹ்லே சுன்னத்வல் ஜமாத் சார்பில் மிலாடி நபி விழா கொண்டாடப்பட்டது. இதன் ஒருபகுதியாக இதில் முத்தவல்லிகள் மற்றும் இஸ்லாமிய பெருமக்கள் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது.
சேலம் கோட்டை மைதானத்தில் இருந்து ஜாமியா மசூதியின் முன்னாள் முத்தவல்லி நாசர்கான் தலைமையில் நடைபெற்ற ஊர்வலத்தினை சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
இஸ்லாமிய குழந்தைகளின் இசை முழக்கத்துடன் தொடங்கிய இந்த ஊர்வலமானது, சேலம் அரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,  திருவள்ளுவர் சிலை வழியாக வந்து மசூதியை அடைந்தனர். ஊர்வலத்தில், ஜமாத்தார்களும், சிறுவர்களும் பங்கேற்று இசை வாத்தியங்கள் முழங்க நபிகள் நாயகத்தை துதித்து பாடல்களை பாடியவாறு வந்தனர். இந்த ஊர்வலத்தில் நூற்றுக்கும் மேற்ட்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

திங்கள், 24 ஆகஸ்ட், 2026

சேலத்தில் நகர்ப்புற மைய அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை.

சேலத்தில் நகர்ப்புற மைய அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தில் நகர்ப்புற மைய அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை.

நகர்ப்புற மைய அளவிலான தடகளப் போட்டிகள் சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. பல்வேறு அணிகள் பங்கேற்ற இந்த தடகள போட்டியில் சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் பங்கேற்றனர். தடகள விளையாட்டில் உள்ள பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்,  தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக (2025 மற்றும் 2026) ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை  படைத்தனர். மொத்தம் 118 புள்ளிகள் பெற்று சிறந்த அணியாகத் தேர்வு பெற்றது. பல்வேறு தடகளப் போட்டிகளில் மாணவர்கள் சிறப்பாகப் பங்கேற்று முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்று பள்ளியின் வெற்றிக்கு பெருமை சேர்த்தனர். குறிப்பாக இளையோர் பிரிவில் மாணவர் விஷ்ணு, மூன்று போட்டிகளில் முதலிடம் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டத்தையும், மூத்தோர் பிரிவில் மாணவர் தமிழரசன், 800 மீ., 1500 மீ. மற்றும் 3000 மீ. ஓட்டங்களில் முதலிடம் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டத்தையும் வென்றனர். தொடர்ந்து தடகளப் போட்டிகளில் இரண்டாவது முறையாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற மாணவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் அருட்பணி ஜோதி பெர்னான்டோ, உதவி தலைமை ஆசிரியர் அருட்பணி டேவிட், உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் ராபர்ட் ஆகியோர் வெகுவாக  பாராட்டி வாழ்த்தினர். தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது, சிறுமலர் பள்ளியின் விளையாட்டுத் திறமை, மாணவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு சிறந்த சான்றாகும்.

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

தமிழகத்தில் இன்று முதல் பால் உற்பத்தி நிறுத்த போராட்டம் எதிரொலி. தமிழகம் முழுவதும் படிப்படியாக பால் நிறுத்தும் போராட்டம் தமிழக விவசாயிகள் தீவிரப் படுத்துவர். தமிழக  விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் வேலுச்சாமி தமிழக அரசுக்கு எச்சரிக்கை.

தமிழகத்தில் இன்று முதல் பால் உற்பத்தி நிறுத்த போராட்டம் எதிரொலி. தமிழகம் முழுவதும் படிப்படியாக பால் நிறுத்தும் போராட்டம் தமிழக விவசாயிகள் தீவிரப் படுத்துவர். தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் வேலுச்சாமி தமிழக அரசுக்கு எச்சரிக்கை.

நாமக்கல்.
S.K. சுரேஷ்பாபு. 

தமிழகத்தில் இன்று முதல் பால் உற்பத்தி நிறுத்த போராட்டம் எதிரொலி. தமிழகம் முழுவதும் படிப்படியாக பால் நிறுத்தும் போராட்டம் தமிழக விவசாயிகள் தீவிரப் படுத்துவர். தமிழக  விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் வேலுச்சாமி தமிழக அரசுக்கு எச்சரிக்கை.

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் கூட்டத் தொடரில், பசும்பால் லிட்டருக்கு கொள்முதல் விலையாக மூன்று ரூபாய் உயர்த்தி தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்பு பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஏற்புடையதாக இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததோடு மட்டுமல்லாமல், பல்வேறு கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளனர். இதனுடைய ஆவின் பால் பண்ணைகளுக்கு, தமிழக முதலமைச்சரின் இந்த பால் கொள்முதல் விலை அதிருப்தி அளிப்பதாக உள்ளது என்றும் இதனை ஏற்புடையதாக இல்லை என்பதோடு பசும்பால் லிட்டருக்கு கொள்முதல் விலையாக 10 ரூபாய் உயர்த்தி தரவேண்டும் என்று உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி ஏற்கனவே தெரிவித்திருந்ததோடு மட்டுமல்லாமல், 
தமிழகத்தில் வரும் 24ஆம் தேதி முதல் ஆவின் பால்பனைகளுக்கு பால் அனுப்பாமல் தமிழக முழுவதும் உற்பத்தி நிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்படும் போராட்டத்திற்கு ஆதரவையும் தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில் தமிழக முழுவதும்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பால் உற்பத்தியாளர்கள் இன்று பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் கொள்முதலுக்கு  வழங்காமல் பல்வேறு நிலையில் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். 
இதன் ஒரு பகுதியாக, 
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் அக்கியம்பட்டி மற்றும் சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் பாகல்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு 24.8.2026 இன்று முதல் விவசாயிகள் ஆவின் நிவனவனம் மூலம் விவசாயிகள் இடம் கொள்முதல் செய்யும் பால்  விலை கட்டுபடியான விலை இல்லை என்று தமிழ்நாடு அரசுக்கு எதிர்பு தெறிவித்து ஆவின் நிறுவனத்திற்கு  விவசாயிகள் பால்  கொள்ளமுதலுக்கு அனுப்பாமல் பால் நிறுத்தும் போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.
இதுபோல் இனி தமிழகம் முழுவதும் படிப்படியாக பால் நிறுத்தும் போராட்டம் தமிழக விவசாயிகள் தீவிரப்படுத்துவார்கள் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு இந்த அறிக்கையின் வாயிலாக எச்சரிக்கை விடுக்கிறேன் என்று சங்கத்தின் மாநில தலைவர்
R.வேலுசாமி.
தெரிவித்துள்ளார். போராட்டம் தொடங்கிய முதல் நாளே நாமக்கல் கோவை திருச்சி திருப்பூர் கிருஷ்ணகிரி விழுப்புரம் வேலூர் மற்றும் சேலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகப்படியான விவசாயிகள் ஆவின் நிறுவனங்களுக்கு பால் வழங்காமல் சாலையில் கறந்த பாலை ஊற்றி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.