Latest

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

தமிழகத்தில் இன்று முதல் பால் உற்பத்தி நிறுத்த போராட்டம் எதிரொலி. தமிழகம் முழுவதும் படிப்படியாக பால் நிறுத்தும் போராட்டம் தமிழக விவசாயிகள் தீவிரப் படுத்துவர். தமிழக  விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் வேலுச்சாமி தமிழக அரசுக்கு எச்சரிக்கை.

தமிழகத்தில் இன்று முதல் பால் உற்பத்தி நிறுத்த போராட்டம் எதிரொலி. தமிழகம் முழுவதும் படிப்படியாக பால் நிறுத்தும் போராட்டம் தமிழக விவசாயிகள் தீவிரப் படுத்துவர். தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் வேலுச்சாமி தமிழக அரசுக்கு எச்சரிக்கை.

நாமக்கல்.
S.K. சுரேஷ்பாபு. 

தமிழகத்தில் இன்று முதல் பால் உற்பத்தி நிறுத்த போராட்டம் எதிரொலி. தமிழகம் முழுவதும் படிப்படியாக பால் நிறுத்தும் போராட்டம் தமிழக விவசாயிகள் தீவிரப் படுத்துவர். தமிழக  விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் வேலுச்சாமி தமிழக அரசுக்கு எச்சரிக்கை.

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் கூட்டத் தொடரில், பசும்பால் லிட்டருக்கு கொள்முதல் விலையாக மூன்று ரூபாய் உயர்த்தி தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்பு பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஏற்புடையதாக இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததோடு மட்டுமல்லாமல், பல்வேறு கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளனர். இதனுடைய ஆவின் பால் பண்ணைகளுக்கு, தமிழக முதலமைச்சரின் இந்த பால் கொள்முதல் விலை அதிருப்தி அளிப்பதாக உள்ளது என்றும் இதனை ஏற்புடையதாக இல்லை என்பதோடு பசும்பால் லிட்டருக்கு கொள்முதல் விலையாக 10 ரூபாய் உயர்த்தி தரவேண்டும் என்று உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி ஏற்கனவே தெரிவித்திருந்ததோடு மட்டுமல்லாமல், 
தமிழகத்தில் வரும் 24ஆம் தேதி முதல் ஆவின் பால்பனைகளுக்கு பால் அனுப்பாமல் தமிழக முழுவதும் உற்பத்தி நிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்படும் போராட்டத்திற்கு ஆதரவையும் தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில் தமிழக முழுவதும்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பால் உற்பத்தியாளர்கள் இன்று பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் கொள்முதலுக்கு  வழங்காமல் பல்வேறு நிலையில் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். 
இதன் ஒரு பகுதியாக, 
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் அக்கியம்பட்டி மற்றும் சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் பாகல்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு 24.8.2026 இன்று முதல் விவசாயிகள் ஆவின் நிவனவனம் மூலம் விவசாயிகள் இடம் கொள்முதல் செய்யும் பால்  விலை கட்டுபடியான விலை இல்லை என்று தமிழ்நாடு அரசுக்கு எதிர்பு தெறிவித்து ஆவின் நிறுவனத்திற்கு  விவசாயிகள் பால்  கொள்ளமுதலுக்கு அனுப்பாமல் பால் நிறுத்தும் போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.
இதுபோல் இனி தமிழகம் முழுவதும் படிப்படியாக பால் நிறுத்தும் போராட்டம் தமிழக விவசாயிகள் தீவிரப்படுத்துவார்கள் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு இந்த அறிக்கையின் வாயிலாக எச்சரிக்கை விடுக்கிறேன் என்று சங்கத்தின் மாநில தலைவர்
R.வேலுசாமி.
தெரிவித்துள்ளார். போராட்டம் தொடங்கிய முதல் நாளே நாமக்கல் கோவை திருச்சி திருப்பூர் கிருஷ்ணகிரி விழுப்புரம் வேலூர் மற்றும் சேலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகப்படியான விவசாயிகள் ஆவின் நிறுவனங்களுக்கு பால் வழங்காமல் சாலையில் கறந்த பாலை ஊற்றி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சனி, 22 ஆகஸ்ட், 2026

சேலம் கிச்சிபாளையத்தில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருட்டை தொடர்ந்து, வாகன எரிப்பு சம்பவம். காவல்துறையினரின் பாதுகாப்பு  அதிருப்தியாக உள்ளது என பொதுமக்கள் வேதனை.

சேலம் கிச்சிபாளையத்தில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருட்டை தொடர்ந்து, வாகன எரிப்பு சம்பவம். காவல்துறையினரின் பாதுகாப்பு அதிருப்தியாக உள்ளது என பொதுமக்கள் வேதனை.

சேலம், 
S.K. சுரேஷ் பாபு. 

சேலம் கிச்சிபாளையத்தில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருட்டை தொடர்ந்து, வாகன எரிப்பு சம்பவம். காவல்துறையினரின் பாதுகாப்பு  அதிருப்தியாக உள்ளது என பொதுமக்கள் வேதனை.

சேலம் மாநகர காவல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது, சேலம் கிச்சிபாளையம் காவல் நிலைய பகுதி. 42,43 மற்றும் 44 ஆகிய கோட்ட பகுதிகள் உள்ளடக்கியது.  ஒரு காலகட்டத்தில் கிச்சிப்பாளையம் என்ற பெயரை கேட்டாலே மாநகரம் ஏன் மாவட்ட மக்களையும் உழுக்கும் பகுதியாக இருந்து வந்தது. மிரள வைக்கும் அளவிற்கு கொலைச் சம்பவங்கள், வழிப்பறி உள்ளிட்ட செயல்களின் தலைமை இடமாக இருந்தது சேலம் கிச்சிபாளையம். சேலம் மாநகர காவல் துறையின் சீறிய முயற்சியின் காரணமாக தற்பொழுது மேற்கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளும் நீங்கி பொதுமக்கள் இயல்பாக வாழக்கூடிய ஒரு சூழலில் உருவாகியுள்ள இந்த நிலையில், இரவு நேரங்களில் மர்ம நபர்கள் கிச்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களில் இருந்து பெற்றோர்களை திருடுவதும், ஒரு கட்டத்தில் வாகனங்களை களவாடுவதும் தொடர்ச்சியாக இருந்து வந்த நிலையில் தற்பொழுது புதிய பிரச்சினையாக கிச்சிப்பாளையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களை எரிக்கும் நிகழ்வு அன்றாட நிகழ்ந்து கொண்டிருப்பது சாமானிய மக்களை வேதனையின் உச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 
இந்த நிலையில் சேலம் மாநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிச்சிப்பாளையம் காவல் நிலையம் அருகிலேயே மர்ம நபர்களால் இரவு நேரங்களில் பெட்ரோலை திருடி வாகன எரிப்பு சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 17ஆம் தேதி இரவு நடைபெற்ற இந்த படுபாதக செயல் குறித்து சேலம் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் தற்பொழுது வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அந்த பகுதி பொது மக்களின் ஒட்டுமொத்த குற்றச்சாட்டாகவே உள்ளது. இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணிக்கு வருகின்றார்களா இல்லையா எதை நம்பி கூலித் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் வாகனத்தை வெளியில் நிறுத்துவது என்ற சந்தேகத்தில் வாழ்ந்து வருவதாக விரக்தியின் உச்சத்தில் பேசிய பொது மக்களின் வேதனை குரல் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவே இருந்தது. தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இந்த குற்ற செயல் குறித்து சேலம் கிச்சிப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் பால்ராஜ் அவர்களையே சாரும். என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் 66-வது பட்டமளிப்புவிழா. முதல் ஐந்து இடங்களைப் பெற்ற 55 மாணவ மாணவியர் உட்பட 692 மாணாகர்களுக்கு பட்டையச் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு.

சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் 66-வது பட்டமளிப்புவிழா. முதல் ஐந்து இடங்களைப் பெற்ற 55 மாணவ மாணவியர் உட்பட 692 மாணாகர்களுக்கு பட்டையச் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் 66-வது பட்டமளிப்புவிழா. முதல் ஐந்து இடங்களைப் பெற்ற 55 மாணவ மாணவியர் உட்பட 692 மாணாகர்களுக்கு பட்டையச் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு.

சேலம், தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் 66-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில்  உள்ள ஸ்ரீ வள்ளியப்பா அரங்கில் வெகுசிறப்பாக நடைபெற்றது. சோனா கல்விக் குழுமங்களின் தலைவர் சொ.வள்ளியப்பா  அவர்கள் விழாவிற்கு தலைமையேற்றார். மதுரை, பாரமவுண்ட் டெக்ஸ்டைல் மில்ஸ் (பி) லிமிடெட், நிறுவனத்தின் நிறுவனரும் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் நிறுவனர் கருமுத்து தியாகராஜர் அவர்களின் புதல்வியுமான திருமதி லக்ஷ்மி முருகேசன் அவர்கள், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, முதல் ஐந்து இடங்களைப் பெற்ற 55 மாணவ மாணவியர் உட்பட 692 மாணவ, மாணவியர்களுக்கு பட்டையச் சான்றிதழ்கள் (Diploma Certificates) வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து, கல்லூரியின் முதல்வர் முனைவர்  கனகராஜ் தமது உரையில், மாணவ, மாணவிகளுக்கு வருடத்திற்கு 8.5 லட்சம் ஊதியம் பெறும் வகையில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது என்றும், மேலும் 450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு, 120-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களில் வருடத்திற்கு ரூ.5.00 லட்சம் வரையிலான ஊதியத்தில் 1200-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு பணி நியமன ஆணைகள், வழங்கப்பட்டுள்ளது எனவும் பெருமைப்பட  தெரிவித்தார். மேலும்,100-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து, மாணவர்களுக்கு தொழில் துறை சார்ந்த பயிற்சிகள் சிறப்பாக பயிற்றுவிக்கப்படுகிறது என்றும்  அவர் கூறினார்.
கல்லூரியின், இயக்குனர் முனைவர். கார்த்திகேயன், தமது பட்டமளிப்பு விழா உரையில், தான் பயின்ற இக்கல்லூரி, மாணவர்களுக்கு சிறப்பான தொழில் நுட்பக்கல்வியை வழங்குவதிலும், கட்டமைப்பு வசதிகள், திறன் பயிற்சிகள், காப்புரிமை பெறுதல், ஆராய்ச்சி ஆகியவற்றில் அனைத்து கல்லூரிகளுக்கும் முன்னோடியாக திகழ்கின்றது என்றும், இச்சிறப்பான கல்லூரியில் பயிலும் வாய்ப்பு கிடைத்ததற்கு மாணவர்கள் பெருமைபட வேண்டும் என்றும் பாராட்டினார். மேலும், மாணவர்கள் தாங்கள் வளர்த்துக் கொண்ட அறிவையும், திறமைகளையும் தொடந்து புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும், தற்போதைய வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதுமையான கண்டுபிடிப்புகளில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் அறிவுரை கூறி வாழ்த்தினார்.  கல்லூரியின் துணைத்தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா மற்றும் தியாகு வள்ளியப்பா ஆகியோர் விழாவில் சிறப்புரையில். மாணவர்கள் வாழ் நாள் முழுவதும் நவீன தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்றும், புதுமையான திட்டங்களை ஸ்டார்ட்- அப்ஸ் மூலமாக புதிய தொழில் நிறுவனங்களாக செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்து வாழ்த்தினர். கல்லூரியின், தலைவர் சொ.வள்ளியப்பா, அவர்கள் பட்டமளிப்பு விழாவின் தலைமையுரையில், இக்கல்லூரி 68 வருடங்களாக சிறப்பான கல்வியை வழங்கி, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிகாட்டியுள்ளது என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். இக்கல்லூரியில் பயின்ற அனைவரும் தொழிற் கல்வியுடன் ஒழுக்கத்தையும் கற்று நாட்டின் தலைசிறந்த குடிமகன்களாக திகழ வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்த இப்பட்டமளிப்பு விழாவில் 692 மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோருடன் வருகை புரிந்து பட்டையச் சான்றிதழ்களைப் பெற்றனர். சான்றிதழ் பெற்ற மாணவ, மாணவியர், கல்லூரியின் தலைவர், துணைத்தலைவர்கள், முதல்வர், துறைத்தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
விழாவில், தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர்  முனைவர் கனகராஜ் உட்பட கல்லூரியில் பேராசிரியர்கள் துறை தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

தமிழகத்தில் கட்டுபடி ஆகாத பால் கொள்முதல் விலை விவகாரம். தமிழக முழுவதும் வரும் 24 ஆம் தேதி முதல் ஆவின் பால் உற்பத்தி நிறுத்த போராட்டம். தமிழக விவசாயிகள் சங்க ஆதரவுடன் நடைபெறும் இந்த போராட்டத்திற்கு தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும். தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஆர்.வேலுச்சாமி அழைப்பு.

தமிழகத்தில் கட்டுபடி ஆகாத பால் கொள்முதல் விலை விவகாரம். தமிழக முழுவதும் வரும் 24 ஆம் தேதி முதல் ஆவின் பால் உற்பத்தி நிறுத்த போராட்டம். தமிழக விவசாயிகள் சங்க ஆதரவுடன் நடைபெறும் இந்த போராட்டத்திற்கு தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும். தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஆர்.வேலுச்சாமி அழைப்பு.

நாமக்கல்.
S.K. சுரேஷ்பாபு. 

தமிழகத்தில் கட்டுபடி ஆகாத பால் கொள்முதல் விலை விவகாரம். தமிழக முழுவதும் வரும் 24 ஆம் தேதி முதல் ஆவின் பால் உற்பத்தி நிறுத்த போராட்டம். தமிழக விவசாயிகள் சங்க ஆதரவுடன் நடைபெறும் இந்த போராட்டத்திற்கு தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும். தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஆர்.வேலுச்சாமி அழைப்பு.

தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து நடைபெற்று வரும் கூட்டத் தொடரில் 110 விதியின் கீழ் தமிழக முதலமைச்சர் ஆவின் பாலுக்கு கொள்முதல் விலையாக 3 ரூபாயை உயர்த்தி அறிவித்தார். இதனை ஏற்க முடியாத தமிழக விவசாய பெருங்குடி மக்களால் பல்வேறு எதிர்ப்புகளும் கோரிக்கைகளும் எழுந்த வண்ணமே உள்ளன. இது தொடர்பாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R. வேலுச்சாமி, தமிழக அரசு நிறுவனமான ஆவின் பால் பண்ணைக்கு பால் உற்பத்தி நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, தமிழக விவசாயிகள் பெருந்திரளாக பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார். 
அந்த அறிவிப்பில், தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனம் மூலம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் பாலுக்கு தற்போது வழங்கப்படும் விலையில் இருந்து கூடுதல் கொள்முதல் விலையாக 19.8.2026 அன்று தமிழ்நாடு அரசு லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் உயர்தி அறிவித்த அறிவிப்பு பால் உற்பத்தியாளர்களுக்கும் மற்றும் தமிழக விவசாயிகளுக்கும் இது கட்டுப்படியான விலை இல்லை வருகின்ற 24.8.2026 ந் தேதி முதல் பால் ஆவின் நிறுவனத்திற்கு கொள்முதலுக்கு தொடர்ந்து அனுப்பாமல் பால் நிறுத்தும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கம் இணைந்து நடத்தும் போராட்டத்திற்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் முழு ஆதரவு தெறிவித்து, தமிழகம் முழுவதும் பால் நிறுத்தும் போராட்டத்தில் பங்கேற்போம் என்பதை இந்த அறிக்கையின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R. வேலுச்சாமி. 
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தின் காரணமாக ஏற்படும் அசௌகரியத்தை  பொறுத்துக் கொள்ளுமாறும் தமிழக மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உள்நாட்டில் பசுமை புரட்சி மற்றும் வெண்மை புரட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து, விவசாயிகளின் வாழ்வாரம் ஏற்றம் பெற, மத்திய அரசு இனி வரும் காலங்களில், மத்திய அரசு  வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் உணவு பொருட்களை நிறுத்த வேண்டும். தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் R. வேலுச்சாமி வலியுறுத்தல்.

உள்நாட்டில் பசுமை புரட்சி மற்றும் வெண்மை புரட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து, விவசாயிகளின் வாழ்வாரம் ஏற்றம் பெற, மத்திய அரசு இனி வரும் காலங்களில், மத்திய அரசு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் உணவு பொருட்களை நிறுத்த வேண்டும். தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் R. வேலுச்சாமி வலியுறுத்தல்.


நாமக்கல்,
S.K. சுரேஷ்பாபு. 

உள்நாட்டில் பசுமை புரட்சி மற்றும் வெண்மை புரட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து, விவசாயிகளின் வாழ்வாரம் ஏற்றம் பெற, மத்திய அரசு இனி வரும் காலங்களில், மத்திய அரசு  வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் உணவு பொருட்களை நிறுத்த வேண்டும். தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் R. வேலுச்சாமி வலியுறுத்தல்.

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R.வேலுச்சாமி, மத்திய அரசை வலியுறுத்தி பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு செய்தி குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அங்க செய்தி குறிப்பில்,
உள்நாட்டின் தேவைக்காக, மத்திய அரசு 10 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டில் இருந்து 10 லட்சம் டன் சர்க்கரையை, அக்டோபர் 31 ந் தேதி வரை முழு வரி விலக்குடன்  இறக்குமதி செய்ய முன்வந்தது.இந்தியாவில் இனி வரும் காலங்களில்   பண்டிகை  வருவதை முன்னிட்டும் உள்நாட்டில் சர்க்கரை உற்பத்தி குறைந்துள்ளதாலும், சர்க்கரை விலை இந்தியாவில் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் சர்க்கரையை இறக்குமதி செய்ய மத்திய அரசு முன்வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு வெளிநாட்டிலிருந்து சர்க்கரையை இறக்குமதி செய்வதை  அறிந்த விவசாயிகளிடம் இச்செய்தி மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மத்திய அரசு உள்நாட்டில் சர்க்கரை உற்பத்தி குறைந்ததை காரணம் சொல்லி வெளிநாட்டில் இருந்து சர்க்கரை இறக்குமதி செய்வதாக சொன்னதற்கு, இனிவரும் காலங்களில் இதுப்போன்று உணவு தேவைக்காக வெளிநாட்டில் இருந்து சர்க்கரை மற்றும் இதர உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யக்கூடாது என மத்திய பாஜக அரசுக்கு  உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த செய்தி  குறிப்பின் வாயிலாக நினைவூட்டுகிறேன்.
பாரத நாடு பழம்பெரும் நாடு இந்தியாவில் உணவு உற்பத்தி செய்வதற்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் உள்ளது.பசுமை புரட்சி மற்றும் வெண்மை புரட்சி உருவாக்கும் வகையில் உள்நாட்டில் உள்ள விவசாயிகள் மகத்தான சாதனை படைக்கும் ஆற்றல் மிக்கவர்களாக இந்திய விவசாயிகள் உள்ளனர். இந்தியாவில் உள்ள விவசாயிகளின் ஆற்றல் திறமையை புரிந்து கொண்டு மத்திய பாஜக அரசு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கு உற்பத்தி செலவில் இருந்து உடனடியாக 50% உயர்த்தி லாபகரமான விலையான MSP - யை நிர்ணயம் செய்யாததால் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கும் தற்போது  விவசாயிகள் உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கு வெளி சந்தையில் கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. அதனால் விவசாயிகள் விவசாயம் செய்தால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. தற்போது உள்நாட்டில் உணவு உற்பத்தி இல்லாமல் தொடர்ந்து விலை அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுளது. மத்திய அரசு இனிவரும் காலங்களில் வெளிநாட்டில் இருந்து இறக்கும் செய்யும் உணவு பொருட்களை நிறுத்திவிட்டு உள்நாட்டில் உள்ள பசுமை புரட்சி மற்றும் வெண்மை புரட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து, விவசாயிகளின் வாழ்வாரம் ஏற்றம் பெறும் வகையில் மத்திய அரசு இனி வரும் காலங்களில் செயல்பட வேண்டும் என  உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த அறிக்கையின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன் என்று தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி வலியுறுத்தி உள்ளார்.

வியாழன், 20 ஆகஸ்ட், 2026

கோயில்களுக்கு வழங்கப்படும் பசுக்கள் அர்ச்சகர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம், கோயில் அர்ச்சகர்கள் நலச் சங்கத் தலைவர் பி. வாசு மனு.

கோயில்களுக்கு வழங்கப்படும் பசுக்கள் அர்ச்சகர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம், கோயில் அர்ச்சகர்கள் நலச் சங்கத் தலைவர் பி. வாசு மனு.

சேலம்,
S.K.சுரேஷ்பாபு.

கோயில்களுக்கு வழங்கப்படும் பசுக்கள் அர்ச்சகர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம், கோயில் அர்ச்சகர்கள் நலச் சங்கத் தலைவர் பி. வாசு மனு

இது தொடர்பாக கோவில் பூசாரிகள் நலச்சங்க தலைவர் பி வாசு அளித்துள்ள கோரிக்கை மனுவில், தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில்களில், பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் பசுக்களை, அரசு உத்தரவுப்படி தகுதியுள்ள கோயில் அர்ச்சகர்களுக்கு முறையாக வழங்க வேண்டும் என்று கோயில் அர்ச்சகர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அதில் முக்கிய கோரிக்கைகளாக, புரட்டாசி மாதம் மற்றும் விசேஷ நாட்களில் கோயில்களுக்கு வழங்கப்படும் பசுக்கள் அர்ச்சகர்களுக்கு முறையாக வழங்கப்பட வேண்டும். பசுக்களை வழங்குவதில் முறைகேடுகள் மற்றும் தேவையற்ற நிபந்தனைகளை (பராமரிப்புக் கட்டணம், தடுப்பூசி சான்றிதழ் போன்றவை) தவிர்க்க வேண்டும். கோயிலுக்கு வரும் அனைத்துப் பசுக்களையும் முறையாகக் கணக்கெடுத்து, காணொளிப் பதிவு செய்து, எவ்விதத் தடையுமின்றி அர்ச்சகர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பசுக்களைக் கால்நடைச் சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 
பக்தர்களின் நம்பிக்கையைக் காக்க அர்ச்சகர்களின் உரிமைகளைப் பாதுகாப்போம் என்றும் கோயில் அர்ச்சகர்கள் நலச் சங்க மாநிலத் தலைவர் பி.வாசு குறிப்பிட்டுள்ளார்.
திரை மற்றும் அரசியல்: இளைய தலைமுறையின் கண்ணோட்டமும் தமிழகத்தின் எதிர்காலமும். சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான தமிழ் பேச்சுப் போட்டி நடைபெற்றது.

திரை மற்றும் அரசியல்: இளைய தலைமுறையின் கண்ணோட்டமும் தமிழகத்தின் எதிர்காலமும். சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான தமிழ் பேச்சுப் போட்டி நடைபெற்றது.

சேலம், 
S.K.சுரேஷ்பாபு.

திரை மற்றும் அரசியல்: இளைய தலைமுறையின் கண்ணோட்டமும் தமிழகத்தின் எதிர்காலமும். சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான தமிழ் பேச்சுப் போட்டி நடைபெற்றது.

கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்ற விழாவிற்கு சென்ட்ரல் சட்டக் கல்லூரியின் தலைவர் திரு. சரவணன் தனபாலன் தலைமை தாங்கினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திரு. ராம்குமார் சிங்காரம் முன்னிலையில் நடைபெற்ற போட்டிகளில், கொள்கையா? கவர்ச்சியா? தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்களின் மனநிலை, 
நீதிக்கட்சி முதல் இன்றைய அரசியல் வரை: தமிழகத் திரையுலகின் பரிணாம வளர்ச்சி, இணையத் தலைமுறையும் பிம்ப அரசியலும் ஜனநாயகத்திற்கு ரசிகர் மன்ற மனப்பான்மை பலமா அல்லது பலவீனமா, திரைப்படங்களில் சமூக நீதி விழிப்புணர்வு என்பது வெறும் தேர்தல் உத்தியா? மற்றும் புதிய தமிழகத்தை நோக்கிய ஆரோக்கியமான ஜனநாயகத்தை உருவாக்குவதில் மாணவர்களின் பங்கு ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றன. 
மாநிலம் முழுவதிலும் உள்ள 30 மாவட்டங்களைச் சேர்ந்த, பல்வேறு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டு, மேற்கூறிய தலைப்புகளில் உரையாற்றினர். இப்போட்டிக்கான பரிசளிப்பு விழா கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது. சென்ட்ரல் சட்டக் கல்லூரியின் தலைவர் திரு. சரவணன் தனபாலன் இவ்விழாவில் சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திரு. ராம்குமார் சிங்காரம், சிறப்புரை ஆற்றியதுடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளையும் வழங்கினார். 
தனது சிறப்புரையில், சென்ட்ரல் சட்டக் கல்லூரியின் தலைவர் திரு. சரவணன் தனபாலன் பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் விவாதப் போட்டிகள், தேசிய மற்றும் மாநில அளவிலான மாதிரி நீதிமன்றப் போட்டிகள் மற்றும் கருத்தரங்குகளின் தலைப்புகள் வழக்கமாக முக்கியமான சமகாலப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டவை என்று குறிப்பிட்டார். 
பரிசு வழங்கும் விழாவில், சென்ட்ரல் லா கல்லூரியின் உதவிப் பேராசிரியர் திரு. பாலகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். உதவிப் பேராசிரியர் திரு. மணிகண்டன் நன்றியுரை ஆற்றினார்.