Latest

வியாழன், 11 ஜூன், 2026

கடந்த ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட வணிகர் நல வாரியத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் இடம்பெறாதது தொடர்பாக மன வருத்தத்தை அளித்துள்ளதை போகும் வகையில் பேரவை நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில மாநாட்டில் தமிழக முதலமைச்சர் க்கு கோரிக்கை தீர்மானம்.

கடந்த ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட வணிகர் நல வாரியத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் இடம்பெறாதது தொடர்பாக மன வருத்தத்தை அளித்துள்ளதை போகும் வகையில் பேரவை நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில மாநாட்டில் தமிழக முதலமைச்சர் க்கு கோரிக்கை தீர்மானம்.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

கடந்த ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட வணிகர் நல வாரியத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் இடம்பெறாதது தொடர்பாக மன வருத்தத்தை அளித்துள்ளதை போகும் வகையில் பேரவை நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில மாநாட்டில் தமிழக முதலமைச்சர் க்கு கோரிக்கை தீர்மானம். 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில மாநாடு நடைபெற்றது. பேரவையின் மாநில பொதுச் செயலாளர் மெஸ்மர்கந்தன் வெள்ளையன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் மாநில பொருளாளர் ராயல் பீர்முகமது மற்றும் சேலம் மாவட்ட தலைவர் ராசி சரவணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பேரவையின் மாநில தலைவர் சௌந்தர் ராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, வணிகர்களின் நலன் குறித்து தமிழக அரசை வலியுறுத்தும் வகையில், சிறப்புரையாற்றினார். தமிழகம் முழுவதும் சுமார் 7000 கிளைச் சங்கங்களைக் கொண்டு பேரவை கடந்த அரை நூற்றாண்டுகளாக  வெற்றி நடை போட்டு செயல்பட்டு வருகிறது. ஜாதி, மதம் மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்டு வணிகர்களின் நலனுக்காகவும் பொது மக்களின் நலனுக்காகவும் போராடிவரும் பேரவையின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.
தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டில் ஆன்லைன் வணிகத்தின் ஆதிக்கத்தால் சிறு வணிகம் கொஞ்சம் கொஞ்சமாக நசுக்கப்பட்டு வருகின்றது. உள்நாட்டு வணிகத்தை ஊக்குவிக்கவும், அந்நிய பொருட்களின் ஆதிக்கத்தை முறியடிக்கவும் ஆன்லைன் வர்த்தகத்தின் ஆதிக்கத்தின் கட்டுப்படுத்தவும் திட்டங்களை வகுத்து வணிகர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றிய தமிழக முதலமைச்சர் வழிவகை செய்ய வேண்டும், பெரம்பூரில் பேரவையின் நிறுவனத் தலைவர் வாழ்ந்த நெல் வயல் சாலைக்கு வெள்ளையன் சாலை என்று பெயர் மாற்றி வணிகர்களின் காவலராக திகழ்ந்த மாபெரும் தியாகியை தமிழக அரசு கௌரவப்படுத்த வேண்டும் மற்றும் தமிழக முதலமைச்சர் சமர்ப்பிக்க இருக்கின்ற முதல் நிதி நிலை அறிக்கையில் நலிவுற்ற வணிகர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிட உதவிட வேண்டும் என்பன ஒலித்த ஏழு முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டில் தமிழக முழுவதும் உள்ள மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பேரவை உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புதன், 10 ஜூன், 2026

தமிழக விவசாயிகளின் நலன் கருதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய அனைத்து பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழக முதலமைச்சருக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி கோரிக்கை.

தமிழக விவசாயிகளின் நலன் கருதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய அனைத்து பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழக முதலமைச்சருக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி கோரிக்கை.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழக விவசாயிகளின் நலன் கருதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய அனைத்து பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழக முதலமைச்சருக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி கோரிக்கை. 

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி, தமிழக விவசாயிகளின் அத்தியாவசிய கோரிக்கையை வலியுறுத்தி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அரசு தனது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு, கடந்த 25.5.2026 அன்று விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டது. அதில் சிறு குறு மற்றும் பெரு விவசாயிகள் என்ற பிரித்தாலும் சூழ்ச்சியுடன் பயிர் கடன் தள்ளுபடி செய்தது. இது தமிழக விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு இதனை மறுபரிசீலனை செய்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய அனைத்து பயிர் கடன்களையும் மகாராஷ்டிரா அரசு சமீபத்தில் தள்ளுபடி செய்ததைப் போல தமிழக அரசும் தள்ளுபடி செய்ய வேண்டும் என
வரும் 18 ஆம் தேதி தொடங்க உள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் மறுபரிசீலனை செய்து அறிவிக்க வேண்டும்  என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்வதாக தலைவர் வேலுச்சாமி குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த கோரிக்கை கடிதத்தின் நகல் வேளாண்மை துறை அமைச்சர் அவர்களுக்கும் மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் அவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

திங்கள், 8 ஜூன், 2026

18 ம் தேதி கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழக விவசாயிகளின் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சிவபெருமாள் தமிழக அரசுக்கு கோரிக்கை.

18 ம் தேதி கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழக விவசாயிகளின் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சிவபெருமாள் தமிழக அரசுக்கு கோரிக்கை.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

18 ம் தேதி கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழக விவசாயிகளின் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சிவபெருமாள் தமிழக அரசுக்கு கோரிக்கை. 

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சிவபெருமாள் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் 18ஆம் தேதி கூட உள்ள நிலையில் அன்று தமிழக விவசாயிகளின் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், மற்ற மாநிலங்களில் உலகை போன்று தமிழக விவசாயிகளின் நலன் கருதி தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்கி தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவை கூடும் தினத்தன்று அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் காவிரி கோதாவரி இணைப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கான நிதி அறிக்கையும் தயார்  செய்யப்பட்ட நிலையில் பின்னர் வந்த திமுக அரசு அதனை கண்டு கொள்ளாமல் அப்படியே விட்டு விட்டதாகவும், தற்பொழுது புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக தலைமையிலான அரசு பாரதப் பிரதமரை சந்தித்து காவிரி கோதாவரி திட்டத்தை முழுமையாக தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட அவர் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து என்பது தொடர்ச்சியாக எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும் என்பதாலும், மேகதாது அணைக்கட்டும் விவகாரத்தில் தமிழகத்திற்கு எந்த விதமான பாதிப்பும் இருக்காது என்றும் தெரிவித்தார். 
தொடர்ந்து மேட்டூர் அணையில் 80 அடிக்கு மேல் இருந்தால் தான் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியும் என்பதால், டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடி செய்வதில் விவசாயிகளிடையே குழப்பு நிலை நீடிப்பதாகவும் ஆகவே ஜூன் 12 மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக நீர் பாசனத்துறை அமைச்சர் மற்றும் நீர் பாசன துறை அதிகாரிகளுடன் தமிழக முதலமைச்சர் தங்களை போன்று விவசாய சங்க பிரதிநிதிகள் அழைத்து மேட்டூர் அணையின் திறப்பது தொடர்பாக ஆலோசித்து அதன் பிறகு முடிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்ட சிவபெருமாள் நியாய விலை கடைகளில் பாமாயில் கொடுப்பதற்கு பதிலாக தேங்காய் எண்ணெயை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தார்.

வெள்ளி, 5 ஜூன், 2026

அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களின் மாறுவோம் மாற்றுவோம் என்ற நோக்கத்தின் we the leaders இயக்கத்தில் இணைந்த உறுப்பினர்கள்  சேலத்தில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்.

அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களின் மாறுவோம் மாற்றுவோம் என்ற நோக்கத்தின் we the leaders இயக்கத்தில் இணைந்த உறுப்பினர்கள் சேலத்தில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களின் மாறுவோம் மாற்றுவோம் என்ற நோக்கத்தின் 
we the leaders இயக்கத்தில் இணைந்த உறுப்பினர்கள் சேலத்தில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்.

அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களின் we the leaders இயக்கத்தில் 10 லட்சம் உறுப்பினர்கள் இணைந்ததை அடுத்து, சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஓரியண்டல் சக்தி தியேட்டர் முன்பு சேலம் மாவட்ட உறுப்பினர்கள் பொது மக்களுக்கு கேக் கொடுத்தும் பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். உறுப்பினர்கள் நாகராஜ் வெங்கடேசன், கார்த்திக், நாகராஜேஸ்வரன், மாதவராஜ் ஆகியோர் முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட அண்ணாமலை ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து தங்களது மகிழ்ச்சியை பொதுமக்களுடன் பகிர்ந்து கொண்டனர். மேலும் இது குறித்து கூறும் போது,  அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களின் மாறுவோம் மாற்றுவோம் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இயக்கத்தில் இணைந்த அனைவருக்கும் எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஒன்பது லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட இந்த இயக்கமானது அண்ணாமலையின் கரத்தினை வலுப்படுத்துவோம் என்றனர்.
NCCF நிறுவனம் கொள்முதல் செய்துள்ள ஐந்து மாவட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 400 கோடி ரூபாய்க்கும் மேலாக உள்ள நிலுவைத் தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுத்திடுக. தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தமிழக அரசுக்கு கோரிக்கை.

NCCF நிறுவனம் கொள்முதல் செய்துள்ள ஐந்து மாவட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 400 கோடி ரூபாய்க்கும் மேலாக உள்ள நிலுவைத் தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுத்திடுக. தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தமிழக அரசுக்கு கோரிக்கை.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

NCCF நிறுவனம் கொள்முதல் செய்துள்ள ஐந்து மாவட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 400 கோடி ரூபாய்க்கும் மேலாக உள்ள நிலுவைத் தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுத்திடுக. தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தமிழக அரசுக்கு கோரிக்கை. 

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்று உள்ள த.வெ.க தலைமையிலான தமிழக அரசுக்கு வாழ்த்துக்களையும், தமிழக விவசாயிகளுக்கான அத்தியாவசிய கோரிக்கைகள் குறித்தும் அவ்வப்போது தமிழக அரசுக்கு பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றார் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி. 
அந்த வகையில் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் விவசாயிகள் விளைவித்த நெல்மணிகளை மத்திய அரசு நிர்ணயம் செய்த தனியார் நிறுவனமான NCCF நிறுவனம் கொள்முதல் செய்து வந்துள்ளது. மூன்று மாதங்கள் கொள்முதல் செய்த நெல்லுக்கு உண்டான தொகையை விவசாயிகளுக்கு தற்பொழுது வரை வழங்கவில்லை. விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய 400 கோடி ரூபாய்க்கும் மேல் உள்ள நிலுவைத் தொகையினை தமிழக அரசு உடனடியாக விவசாயிகளுக்கு பெற்றுத்தர தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், தமிழக அரசை இந்த அறிக்கையின் வாயிலாக வலியுறுத்துவதாக சங்கத்தின் மாநில தலைவர் வேலுசாமி குறிப்பிட்டுள்ளார்.

வியாழன், 4 ஜூன், 2026

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கு திரும்பிய மாணவச் செல்வங்கள். சேலம்  முருங்கப்பட்டியில் வாசனை மலர்களை கொடுத்து, குழந்தைச் செல்வங்களை  வரவேற்ற பள்ளியின் தலைமை ஆசிரியர்.

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கு திரும்பிய மாணவச் செல்வங்கள். சேலம் முருங்கப்பட்டியில் வாசனை மலர்களை கொடுத்து, குழந்தைச் செல்வங்களை வரவேற்ற பள்ளியின் தலைமை ஆசிரியர்.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கு திரும்பிய மாணவச் செல்வங்கள். சேலம்  முருங்கப்பட்டியில் வாசனை மலர்களை கொடுத்து, குழந்தைச் செல்வங்களை  வரவேற்ற பள்ளியின் தலைமை ஆசிரியர்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு நாளில் புதிய மாணவ மாணவிகளை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் முன்னாள் மாணவர்கள் மலர் தூவி, இனிப்பு வழங்கி வரவேற்கும் நிகழ்வு அதிகாரப்பூர்வமாக 2022-2023 கல்வி ஆண்டு முதல், தமிழக அரசின் வழிகாட்டுதலில் தீவிரப்படுத்தப்பட்டு அன்புடன் வரவேற்கிறோம் என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 2026 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கு திரும்பிய மாணவ செல்வங்களை வரவேற்கும் நிகழ்ச்சி சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட முருங்கபட்டி இருவழி அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. கோடை விடுமுறைக்குப் பின் வரும் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, பள்ளி மீதான ஆர்வத்தை  அதிகரிக்கும் வகையில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் கு. சரவணன் தலைமை வகித்தார். 
பள்ளிகளில் தோரணங்கள் கட்டப்பட்டு, மேள தாளங்களுடன், ஆசிரியர்கள் மலர் கொடுத்து மாணவர்களை ஆசிரியர் பயிற்றுனர் திருமதி தேன்மொழி வாசனை மலர்களை கொடுத்து வரவேற்றார். புதிய பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் விலையில்லாப் பொருட்கள் முதல் நாளிலேயே வழங்கப்படுகின்றன. இந்த பாரம்பரியம், 2026-27 கல்வி ஆண்டில், ஜூன் 4, 2026 அன்று, கோடை வெப்பம் காரணமாக சற்று தாமதமாகத் திறக்கப்பட்டது என்பதும், விழா கோலாகலமாக நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 2 ஜூன், 2026

சேலம் எடப்பாடியில் தீபம் அறக்கட்டளையின் சார்பில் 15 வது ஆண்டாக மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

சேலம் எடப்பாடியில் தீபம் அறக்கட்டளையின் சார்பில் 15 வது ஆண்டாக மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் எடப்பாடியில் தீபம் அறக்கட்டளையின் சார்பில் 15 வது ஆண்டாக மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா. 

சேலம் தீபம் அறக்கட்டளையின் சார்பில் ஆண்டுதோறும் சேலம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள குஞ்சாம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தீபம் அறக்கட்டளையின் தலைவர் முனைவர் பழனிச்சாமி மற்றும் செயலாளர் சிட்டிசன் ஹரி பாஸ்கர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நடைபெற்ற முடிந்த அரசு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பள்ளி அளவிலும், மாவட்ட அளவிலும் மற்றும் மாநில அளவில் விளையாடி பள்ளிக்கு பெருமை சேர்த்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கௌரவித்தனர். 15 வது ஆண்டாக நடைபெற்ற இந்த நிகழ்வில்,  பள்ளியின் ஆசிரியர் பெருமக்கள் மாணவ மாணவிகள் எடப்பாடி நகரின் முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.