சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
2026 சட்டமன்றத் தேர்தலை நடத்தாமல், தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி 6 மாத காலம் வேண்டும். தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவனத் தலைவர் சரஸ்ராம் ரவி வலியுறுத்தலால் பரபரப்பு.
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இனமும் அறிவிக்கப்படாத நிலையில், முக்கிய கட்சிகள் அனைத்தும் பல்வேறு தலைப்புகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து ஏற்கனவே பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். இந்த நிலையில் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவன தலைவர் சரஸ்ராம் ரவி பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை நடத்தாமல் ஆறு மாத காலம் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். அந்த வலியுறுத்தலில்,
1
தமிழகம் முழுவதும் காணாமல் போன - அபகரிப்பு செய்யபட்ட 12 .5 லட்சம் எக்டர் பஞ்சமி நிலம் மீட்டெடுக்க வேண்டும்.
2
1 லட்சம் SC, / ST / OBC backlog vacancies தமிழக அரசு துறையில்
நிரப்பிட வேண்டும்.
3
தமிழகத்தில் உள்ள
44 தனி தொகுதிகளில் தனி தேர்தல் நடத்திட வேண்டும்.
4
38/ மாவட்டங்களில் எந்த அரசியல் தடையீடும் இல்லாமல் மக்கள் பணி / தேர்தல் பணி செய்ய மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கிட வேண்டும்.
5
தனி தொகுகளில் கட்சி வேட்பாளர்கள் நிறுந்த தடை கோரி வழக்கு தொடுக்க காலம் வேண்டியதால்.
6
தேர்தலில் கட்சிகள் கூட்டு சேர்ந்து தேர்தலை கொள்ளையடிக்காமல் இருக்க அனைத்து கட்சிகளும் இனி தனி தனியாக தேர்தலை சந்தித்து அவர்கள் பெறும் வாக்கு விகிதாச்சர % அடிப்படையில் ஆட்சி பொறுப்பில் அமர்ந்திட
தேர்தல் அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் இந்த ஆறு வலியுறுத்தல்களின் அடிப்படையில், தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி 6 மாத காலம் வேண்டும் என்று தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவன தலைவர் சரஸ்ராம்ரவி, மாநிலத் தலைவர் வழக்கறிஞர் ஏழமலையுடன் இணைந்து பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு வலியுறுத்தி உள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.


