Latest

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

ஆடிப்பூரத்தை ஒட்டி சேலத்தில் தேர் வீதி ஸ்ரீ பெரிய அங்காள பரமேஸ்வரிக்கு வளைகாப்பு நடத்திய சுமங்கலி பெண்கள். திருமணத்தடை குழந்தையின்மை உள்ளிட்ட பல்வேறு வேண்டுதலை வலியுறுத்தி ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம்.

ஆடிப்பூரத்தை ஒட்டி சேலத்தில் தேர் வீதி ஸ்ரீ பெரிய அங்காள பரமேஸ்வரிக்கு வளைகாப்பு நடத்திய சுமங்கலி பெண்கள். திருமணத்தடை குழந்தையின்மை உள்ளிட்ட பல்வேறு வேண்டுதலை வலியுறுத்தி ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

ஆடிப்பூரத்தை ஒட்டி சேலத்தில் தேர் வீதி பெரிய அங்காள பரமேஸ்வரிக்கு வளைகாப்பு நடத்திய சுமங்கலி பெண்கள். திருமணத்தடை குழந்தையின்மை உள்ளிட்ட பல்வேறு வேண்டுதலை வலியுறுத்தி ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம்.

ஆடிப்பூரம் என்பது தமிழ் மாதமான ஆடி மாதம் பூரம் நட்சத்திரம் வரும் நன்னாளில் கொண்டாடப்படும் சக்திக்குரிய மிகச் சிறப்பு வாய்ந்த விழாவாகும். இது உலக மக்களைக் காக்க உமாதேவி அவதரித்த நாளாகவும், பூமி தேவி ஆண்டாளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த ஆண்டாள் ஜெயந்தியாகவும் போற்றப்படுகிறது. உலக நல்வாழ்வுக்காகவும்  வளர்ச்சிக்காகவும் அம்பிகை சக்தியாக உருவெடுத்த நாள். இதனை ஒட்டி சேலத்தில் உள்ள அனைத்து அம்மன் ஆலயங்களிலும் ஆடிப்பூர விழா வெகு விமர்சையாகவும் சிறப்பு அபிஷேக அலங்காரங்களும் நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக சேலம் தேர் வீதி ஸ்ரீ பெரிய அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர விழாவிற்கான ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. அலங்கரிக்கப்பட்டிருந்த ஸ்ரீ அங்காளபரமேஸ்வரிக்கு மஞ்சள் குங்குமம் பால் திருமஞ்சனம் பஞ்சாமிர்தம் திருவாபரணம் உன்னுடைய பல்வேறு மங்களப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது, தொடர்ந்து வளையல் மாலை சூட்டி வளைகாப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றன. திருக்கோவில் தர்மகர்த்தா சங்கர் பூசாரியின் மகன் சிவா முன் நின்று நடத்திய இந்த சிறப்பு பூஜையில், சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் பக்தர்கள் என ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது வேண்டுதல்களை வலியுறுத்தி சிறப்பு பூஜைகளை மேற்கொண்டனர். 
ஆடிப்பூரத் திருவிழா சிறப்பு பூஜையில் பங்கேற்றால் திருமணம் ஆகாத ஆண்களுக்கும் கன்னிப் பெண்களுக்கும் திருமணம் ஆகும் குழந்தை பேரு இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பேரு உண்டாகும் என்ற ஐதீகத்தின் காரணமாக ஏராளமான இளம் பெண்களும் இளைஞர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்ட இந்த பூஜையில் திருக்கோவிலில் பூசாரி சிவா அம்மனுக்கு வளைகாப்பு செய்து அதற்கான சடங்குகளை மேற்கொண்டார். தொடர்ந்து திருமணம் ஆகாத கன்னிப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும் வளைகாப்பு நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கான பிரசாதங்களும் வழங்கப்பட்டன. இந்த விழாவின் சிறப்புகள் குறித்து சேலம் தேர் வீதி ஸ்ரீ பெரிய அங்காளம்மன்ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி பரமேஸ்வரி திருக்கோவிலின் தர்மகர்த்தாவின் மகன் சிவா நமது கூறுகையில், 
வைணவத் தலங்களில் பூமி தேவியின் அம்சமான ஆண்டாள் துளசி மாடத்தில் அவதரித்த திருநாளாகக் கொண்டாடப்படுகிறது என்று கூறிய அவர், அம்மன் கோயில்களில் அம்பிகைக்கு வளைகாப்பு மற்றும் சீமந்தம் நடத்தப்பட்டு வளையல்கள் பிரசாதமாக வழங்கப்படுகின்றன என்றும் வழிபாட்டு முறைகள் மற்றும் அம்மனுக்குச் சாற்றப்பட்ட வளையல்களை அணிந்து கொள்வதால் மாங்கல்ய பலம் பெருகும் மற்றும் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு வாரிசு யோகம் உண்டாகும் என்றார். மேலும்  திருமணமாகாதவர்கள் ஆண்டாளையும் அம்பிகையையும் வழிபட விரும்பிய நல்ல வாழ்க்கைத்துணை அமையும் என்று குறிப்பிட்ட சிவா,   வைணவக் கோயில்களிலும் வீடுகளிலும் ஆண்டாள் அருளிய திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி பாடல்களைப் பாடி வழிபடுவது சிறப்பு என்றும் ஆடிப்பூரத்தன்று உங்கள் அருகில் உள்ள குறிப்பிட்ட அம்மன் அல்லது ஆண்டாள் ஆகியோரது கோயில்களுக்கு சென்று விசேஷ பூஜைகளை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து ஆடிப்பூர சிறப்பு பூஜையை ஒட்டி சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டன.
ஆடிப்பூரத்தை ஒட்டி சேலத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரிக்கு வளைகாப்பு நடத்திய சுமங்கலி பெண்கள். திருமணத்தடை குழந்தையின்மை உள்ளிட்ட பல்வேறு வேண்டுதலை வலியுறுத்தி ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம்.

ஆடிப்பூரத்தை ஒட்டி சேலத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரிக்கு வளைகாப்பு நடத்திய சுமங்கலி பெண்கள். திருமணத்தடை குழந்தையின்மை உள்ளிட்ட பல்வேறு வேண்டுதலை வலியுறுத்தி ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

ஆடிப்பூரத்தை ஒட்டி சேலத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரிக்கு வளைகாப்பு நடத்திய சுமங்கலி பெண்கள். திருமணத்தடை குழந்தையின்மை உள்ளிட்ட பல்வேறு வேண்டுதலை வலியுறுத்தி ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம்.

ஆடிப்பூரம் என்பது தமிழ் மாதமான ஆடி மாதம் பூரம் நட்சத்திரம் வரும் நன்னாளில் கொண்டாடப்படும் சக்திக்குரிய மிகச் சிறப்பு வாய்ந்த விழாவாகும். இது உலக மக்களைக் காக்க உமாதேவி அவதரித்த நாளாகவும், பூமி தேவி ஆண்டாளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த ஆண்டாள் ஜெயந்தியாகவும் போற்றப்படுகிறது. ஆன்மீக மற்றும் புராண முக்கியத்துவம்அம்பிகையின் அவதாரம்: உலக நல்வாழ்வுக்காகவும் உயிரlərin வளர்ச்சிக்காகவும் அம்பிகை சக்தியாக உருவெடுத்த நாள். இதனை ஒட்டி சேலத்தில் உள்ள அனைத்து அம்மன் ஆலயங்களிலும் ஆடிப்பூர விழா வெகு விமர்சையாகவும் சிறப்பு அபிஷேக அலங்காரங்களும் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக சேலம் பிச்சிபாளையம் ஸ்ரீ அங்கு அங்காளம்மன் பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் வீட்டில் ஆடிப்பூர விழாவிற்கான ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.
அலங்கரிக்கப்பட்டிருந்த ஸ்ரீ அங்கு அங்காள பரமேஸ்வரிக்கு வளையல் மாலை சூட்டி வளைகாப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றன. திருக்கோவில் தலைவர் பன்னீர்செல்வம் முன் நின்று நடத்திய இந்த சிறப்பு பூஜையில், கிச்சிபாளையம் எருமாபாளையம் குகை கருங்கல்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது வேண்டுதல்களை வலியுறுத்தி சிறப்பு பூஜைகளை மேற்கொண்டனர். ஆடிப்பூரத் திருவிழா சிறப்பு பூஜையில் பங்கேற்றால் திருமணம் ஆகாத ஆண்களுக்கும் கன்னிப் பெண்களுக்கும் திருமணம் ஆகும் குழந்தை பேரு இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பேரு உண்டாகும் என்ற ஐதீகத்தின் காரணமாக ஏராளமான இளம் பெண்களும் இளைஞர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்ட இந்த பூஜையில் திருக்கோவிலின் தலைவர் பன்னீர்செல்வம் அம்மனுக்கு வளைகாப்பு செய்து அதற்கான சடங்குகளை மேற்கொண்டார்.
தொடர்ந்து திருமணம் ஆகாத கன்னிப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும் வளைகாப்பு நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கான பிரசாதங்களும் வழங்கப்பட்டன.
இந்த விழாவின் சிறப்புகள் குறித்து சேலம் கிச்சிபாளையம் ஸ்ரீ அங்கு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் வீட்டின் தலைவர் பன்னீர்செல்வம் நம்மிடையே கூறுகையில், வைணவத் தலங்களில் பூமி தேவியின் அம்சமான ஆண்டாள் துளசி மாடத்தில் அவதரித்த திருநாளாகக் கொண்டாடப்படுகிறது என்று கூறிய அவர், அம்மன் கோயில்களில் அம்பிகைக்கு வளைகாப்பு மற்றும் சீமந்தம் நடத்தப்பட்டு வளையல்கள் பிரசாதமாக வழங்கப்படுகின்றன என்றும் வழிபாட்டு முறைகள் மற்றும்  அம்மனுக்குச் சாற்றப்பட்ட வளையல்களை அணிந்து கொள்வதால் மாங்கல்ய பலம் பெருகும் மற்றும் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு வாரிசு யோகம் உண்டாகும் என்றார். மேலும்  திருமணமாகாதவர்கள் ஆண்டாளையும் அம்பிகையையும் வழிபட விரும்பிய நல்ல வாழ்க்கைத்துணை அமையும் என்று குறிப்பிட்ட பன்னீர்செல்வம், வைணவக் கோயில்களிலும் வீடுகளிலும் ஆண்டாள் அருளிய திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி பாடல்களைப் பாடி வழிபடுவது சிறப்பு என்றும் ஆடிப்பூரத்தன்று உங்கள் அருகில் உள்ள குறிப்பிட்ட அம்மன் அல்லது ஆண்டாள் ஆகியோரது கோயில்களுக்கு சென்று விசேஷ பூஜைகளை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து ஆடிப்பூர சிறப்பு பூஜையை ஒட்டி சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டன.

வியாழன், 13 ஆகஸ்ட், 2026

காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக  அரசை கண்டித்து ஆகஸ்ட் 13 முதல், தொடர் போராட்ட அறிவிப்பு எதிரொலி. மயிலாடுதுறை மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மரிக்க முயன்ற தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் ஆர். வேலுச்சாமி மயிலாடுதுறை தங்கும் விடுதியிலேயே அதிரடி கைது. விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து நாகை விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே  மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு.

காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசை கண்டித்து ஆகஸ்ட் 13 முதல், தொடர் போராட்ட அறிவிப்பு எதிரொலி. மயிலாடுதுறை மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மரிக்க முயன்ற தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் ஆர். வேலுச்சாமி மயிலாடுதுறை தங்கும் விடுதியிலேயே அதிரடி கைது. விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து நாகை விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு.

நாமக்கல்,
S.K. சுரேஷ்பாபு.

காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக  அரசை கண்டித்து ஆகஸ்ட் 13 முதல், தொடர் போராட்ட அறிவிப்பு எதிரொலி. மயிலாடுதுறை மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க முயன்ற தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் ஆர். வேலுச்சாமி மயிலாடுதுறை தங்கும் விடுதியிலேயே அதிரடி கைது. விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து நாகை விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே  மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு.

தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும் வகையில் தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக தொடர் போராட்டங்கள் அறிவித்து அறிக்கையின் வாயிலாக கர்நாடக அரசிற்கு தலைவர் வேலுசாமி பகிரங்க எச்சரிக்கை விடுத்து இருந்தார். 
அதில்  கர்நாடகா அணைகளில் தற்போது போதிய தண்ணீர் இருப்பு வைத்துக்கொண்டு தண்ணீர் திறந்து விடாமல் துரோகம் விளைவித்ததற்கு கர்நாடகா அரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் எனது தலைமையில் வருகின்ற 13 ந் தேதி அன்று முதல் கர்நாடகாவில் இருந்து தமிழகம் மற்றும்  கேரளா செல்லும் சரக்கு மற்றும் பயணிகள் இரயில்கள் மேலும்  தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் சரக்கு மற்றும் பயணிகள் இரயில்கள் போக்குவரத்தை முற்றிலும் முடக்குவோம். மேலும் தமிழகம் வழியாக கர்நாடகா செல்லும் எரிவாயு மற்றும் தமிழகத்தில் இருந்து உற்பத்தி செய்து கர்நாடகா செல்லும் மின்சாரம் உட்பட அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழகத்தில் பலகட்ட தொடர் போராட்டம் வாயிலாக கர்நாடகாவில்  உள்ள தொழில்வளம் பாதிக்கும் வகையில் முடக்கி காட்டுவோம் என்பதை கர்நாடகா அரசுக்கு இந்த அறிக்கையின் வாயிலாக எச்சரிக்கை  என்று இந்த அறிக்கையின் வாயிலாக கர்நாடக அரசுக்கு பகிரங்க எச்சரிக்கையினை வேலுசாமி அறிவித்து இருந்தார். 
அதனை செயல்படுத்தும் விதமாக முதற்கட்ட போராட்டமாக மயிலாடுதுறையில் இருந்து மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க நடவடிக்கை எடுத்து இருந்த நிலையில்  நேற்று மயிலாடுதுறை தங்குமிடுதியில் தங்கி இருந்த தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தலைமையிலான விவசாயிகளை இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தங்கும் விடுதியிலேயே சிறை பிடித்தனர். மேலும் தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் வேலுச்சாமி உள்ளிட்ட விவசாயி சங்க பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டது குறித்து வெளியில் தகவல் கசியாமல் இருக்க விவசாய பெருங்குடி மக்களின் கைபேசிகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்ததாக தெரிகிறது. என்றாலும் இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மற்றும் நாகை விவசாய சங்க பிரதிநிதிகள் மயிலாடுதுறை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனர். 
மேலும் மயிலாடுதுறை மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க ரயில் நிலையம் உள்ளே நுழைய முயன்ற போது காவல்துறையினருக்கும் விவசாய பெருங்குடி மக்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு மற்றும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மிகப்பெரிய பரபரப்பு காணப்பட்டது. இதனை எடுத்து எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க முயன்ற மயிலாடுதுறை மற்றும் நாகை விவசாயிகளையும் ஏற்கனவே முன்கூட்டியே முன்னெச்சரிக்கையின் நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு இருந்து தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் மாலை ஏழு மணிக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர். தமிழக விவசாய பெருங்குடி மக்களின் நலனுக்காகவும் அவர்களது உரிமைகளுக்காகவும் போராட்டம் அறிவித்து காவல்துறையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக விவசாயிகள் சங்க தலைவர் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட விவகாரம் தமிழக விவசாயிகளிடையே மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது மட்டும் நிதர்சனம். என்றாலும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் முன் எடுத்துள்ள கர்நாடக அரசுக்கு எதிரான தொடர் போராட்டம் திட்டமிட்டபடி நடந்தே தீரும் என்று தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு இணையான சலுகைகள் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட டாஸ்மாக் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

அரசு ஊழியர்களுக்கு இணையான சலுகைகள் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட டாஸ்மாக் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

அரசு ஊழியர்களுக்கு இணையான சலுகைகள் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட டாஸ்மாக் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். 

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் சேலம் மாவட்டம் சந்தியூரில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. 
மாவட்ட கவுன்சில் செயலாளர் பொன்னி பழனியப்பன் ஏடிசி தொழிற்சங்க செயலாளர் மற்றும் டாஸ்மாக் கூட்டுக் குழு சார்பாக LPF CIt VC பாட்டாளி மக்கள் கட்சி விற்பனையாளர் தொழிற்சங்கம் ஆகிய தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், மதுபான சில்லறை விற்பனை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் அரசு பணியாளர்களுக்கு இணையான சலுகைகள் வழங்கிட வேண்டும், மதுபான விற்பனையை தனியார் மயமாக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் மற்றும் ஆன்லைன் மது விற்பனை முறையை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 14 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து தங்களது 14 அம்ச கோரிக்கைகள் குறித்தும் நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை படிவத்தை சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம் வழங்கினார்.
இந்த போராட்டம் குறித்து சேலம் மாவட்ட டாஸ்மாக் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவரும், தொ.மு.ச தலைமை செயற்குழு உறுப்பினருமான ஜம்பு செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழக அரசின் டாஸ்மாக் பணியாளர்களின் 14 முக்கிய அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தற்பொழுது ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளதாகவும், தங்களது பல்வேறு கோரிக்கைகளை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே நிறைவேற்ற தமிழக அரசையும் டாஸ்மாக் நிர்வாகத்தையும் வலியுறுத்துவதாக கூறினார்.  இந்த கவன ஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் அனைத்து சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

புதன், 12 ஆகஸ்ட், 2026

ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று மாபெரும் தொடர்  வந்தே பாரத்  இரயில் மறியல் போராட்டம். காவிரி உரிமையை மீட்டெடுக்க கர்நாடகா அரசுக்கு தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் வேலுச்சாமி அதிரடி எச்சரிக்கை.

ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று மாபெரும் தொடர் வந்தே பாரத் இரயில் மறியல் போராட்டம். காவிரி உரிமையை மீட்டெடுக்க கர்நாடகா அரசுக்கு தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் வேலுச்சாமி அதிரடி எச்சரிக்கை.

நாமக்கல்,
S.K. சுரேஷ்பாபு.

ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று மாபெரும் தொடர்  வந்தே பாரத்  இரயில் மறியல் போராட்டம். காவிரி உரிமையை மீட்டெடுக்க கர்நாடகா அரசுக்கு தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் வேலுச்சாமி அதிரடி எச்சரிக்கை.

மேகதாது அணை விவகாரம் மற்றும் காவிரி நீர் பங்கிட்டு பிரச்சினை தொடர்பாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம். அந்த வகையில் இந்திய திருநாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி வந்தே மாதரம் ரயில் மறியல் போராட்டத்தினை பகிரங்கமாக அறிவித்துள்ளார் அந்த சங்கத்தின் மாநில தலைவர் வேலுச்சாமி செய்திக் குறிப்பின் வாயிலாக. அதில்,.
கர்நாடகா அரசு தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை உயிர் பங்கீட்டு தண்ணீரை ஆண்டுதோறும் தொடர்ந்து காவிரியில் திறந்துவிட மறுத்து வருகிறது.மேலும்  தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதிப்பை ஏற்படுத்தும்  நோக்கத்தோடு  கர்நாடகா அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டில் அணை கட்டும் முயற்ச்சி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கர்நாடகா அரசு தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்பட்டு வருவதை அதை  முறியடிக்கும் வகையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா பகுதியில் இருந்து இருமார்கமாக வரும் வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை வருகின்ற ஆகஸ்ட் 15 ந் தேதி சுந்திர தினத்தன்று உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் எனது தலைமையில் தமிழக விவசாயிகளை மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி ‌தமிழகத்தில் ரயில் மறியல் தொடர் போராட்டம் நடைபெறும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கர்நாடகா அரசுக்கு இந்த அறிக்கையின் மூலம் எச்சரிக்கை விடுக்கிறேன் என்று அந்த சங்கத்தின் மாநில தலைவர். வேலுச்சாமி எச்சரித்துள்ளார்.

திங்கள், 10 ஆகஸ்ட், 2026

பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்டம் என்று அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி. இலட்சோப லட்ச நன்றிகளை தெரிவித்து சேலம் மாநகரம்  முழுவதும் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பச்சைப்பட்டி பழனிச்சாமி சுவரொட்டிகள்.

பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்டம் என்று அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி. இலட்சோப லட்ச நன்றிகளை தெரிவித்து சேலம் மாநகரம் முழுவதும் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பச்சைப்பட்டி பழனிச்சாமி சுவரொட்டிகள்.

சேலம்,
S.K.சுரேஷ்பாபு.

பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்டம் என்று அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி. இலட்சோப லட்ச நன்றிகளை தெரிவித்து சேலம் மாநகரம்  முழுவதும் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பச்சைப்பட்டி பழனிச்சாமி சுவரொட்டிகள். 

முதல்வரின் காலை உணவு திட்டத்தை பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் காலை உணவு திட்டம் என்று பெயர் மாற்றி பெருந்தலைவர் கல்வி சேவைக்கு உரிய மதிப்பளித்து இந்த திட்டத்தை அறிவித்த தமிழக முதல்வர் மாண்புமிகு திரு ஜோசப் விஜய் அவர்களுக்கு லட்சோப லட்ச காங்கிரஸ் தொண்டர்கள் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து  நன்றி போஸ்ட் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் பச்சப்பட்டி பழனிசாமி மற்றும் சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் 40 வது டிவிசன் தலைவர் P.வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து, சேலம் மாநகரம் முழுவதும் போஸ்டர் விளம்பரங்கள் அடித்து ஒட்டி உள்ளார். 
அந்த சுவரொட்டிகளில் 
பசி இல்லா காலை...
கல்வி நிறைந்த நாளை...
பெருந்தலைவர் காமராஜர் வழியில், எதிர்காலம் நம்முடையதாக இருக்கட்டும் என்றும் அச்சிடப்பட்டிருந்தது. 

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

சேலம் மாவட்ட தன்னார்வலர்கள் அறிமுக விழா மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி. விழாவில் சுற்றுச்சூழல் மாதத்தை முன்னிட்டு 3000 மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

சேலம் மாவட்ட தன்னார்வலர்கள் அறிமுக விழா மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி. விழாவில் சுற்றுச்சூழல் மாதத்தை முன்னிட்டு 3000 மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

சேலம்,
S. K.சுரேஷ்பாபு.

சேலம் மாவட்ட தன்னார்வலர்கள் அறிமுக விழா மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி. விழாவில் சுற்றுச்சூழல் மாதத்தை முன்னிட்டு 3000 மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டம் கருப்பூரில் அமைந்துள்ள பெரியார் பல்கலைக்கழகத்திற்கு எதிரில் உள்ள பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வி த லீடர்ஸ் சார்பில்  சேலம் மாவட்ட தன்னார்வலர்கள் அறிமுக விழாவும் சுற்றுலா சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வீத லீடர்ஸ் கோவை தன்னார்வலர் பாலாஜி உத்தம ராமசாமி, கோவை குளங்களின் பாதுகாவலர் மணிகண்டன், அத்திக்கடவு அவிநாசி திட்டம் சுப்பிரமணியன், நொய்யல் ஆறு அறக்கட்டளை அரசூர் அசோகன், சிப்காட் எதிர்ப்பு போராட்ட குழு மகேஸ்வரி, சத்தியமங்கல காடுகள் ஆராய்ச்சி மாணவி செல்வி ஹரி ராஜஸ்ரீ, அனாதை பிணங்களின் பிதாமகன் மேட்டூர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்தோடு சேலம் எஸ் கே எஸ் மருத்துவமனை வழங்கிய இலவச பொது மருத்துவ முகாம் துவக்க விழாவும், மாருதி ரத்த வங்கி வழங்கிய இலவச ரத்ததான முகாமும், அரவிந்த் கண் மருத்துவமனை வழங்கிய இலவச கண் பரிசோதனை முகாமும், வள்ளி மருத்துவமனை வழங்கிய எலும்பியல் மருத்துவ முகாமும் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றல் நிகழ்வும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. வீ த லீடர்ஸ்-ன் தலைமை சேவகர்  திரு. அண்ணாமலை அவர்களின் அறிவுறுத்தல் படி ஆகஸ்ட் மாதத்திற்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உறுதிமொழியினை தன்னார்வலர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து தீர்மானங்களை முன்மொழிந்து அதை நிறைவேற்றினர். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட பாலாஜி உத்தம ராமசாமி, கோவை குளங்களின் பாதுகாவலர் மணிகண்டன்  ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தன்னார்வலர்களும் பொதுமக்களும் சுமார் 900 பேர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து தன்னார்வலர்கள் பொது மக்களுக்கும் இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சேலம் மாவட்ட தன்னார்வலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.விழாவில் சுற்றுச்சூழல் மாதத்தை முன்னிட்டு 3000 மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.