Latest

வியாழன், 3 செப்டம்பர், 2026

சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா. அரசு தேர்வுகளில் 100% வெற்றி பெற உதவியாக இருந்த ஆசிரியர் பெருமக்களுக்கும், தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கும் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.

சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா. அரசு தேர்வுகளில் 100% வெற்றி பெற உதவியாக இருந்த ஆசிரியர் பெருமக்களுக்கும், தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கும் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா. அரசு தேர்வுகளில் 100% வெற்றி பெற உதவியாக இருந்த ஆசிரியர் பெருமக்களுக்கும், தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கும் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.

சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் மேதகு ஆயர் அருள்செல்வம் ராயப்பன் அவர்கள் தலைமையேற்று  பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் நூறு சதவீதம் வெற்றியைப் பெற்றுத் தந்த  ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் பாராட்டு தெரிவித்தார். 
ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பரிசுகள் வழங்கி பாராட்டினார். மாணவர் ரீகன், மாணவர் ரித்திக்,மாநில  தேசிய டேக்வாண்டோ  போட்டியிலும் தங்கப்பதக்கம் மற்றும் வெண்கல பதக்கங்கள் வென்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். 
புதியதாக கட்டப்பட்ட சுகாதார கட்டிடத்தை மேதகு ஆயர் அவர்கள் திறந்து வைத்தார். அருட்பணி எட்வின் ஆயரின் செயலர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இவ்விழாவிற்கு தலைமை ஆசிரியர் அருட்பணி A. ஜோதி பெர்னாண்டோ அவர்களும், அருட்பணி A. டேவிட்  உதவி தலைமை ஆசிரியர் அவர்களும் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டார்கள்.
ஈரோட்டில் இளையராஜாவின் இசை வெள்ளம்..! 50 ஆண்டுகால இசைப் பயணத்தை கொண்டாடும் பிரம்மாண்ட நேரடி இன்னிசை விழா

ஈரோட்டில் இளையராஜாவின் இசை வெள்ளம்..! 50 ஆண்டுகால இசைப் பயணத்தை கொண்டாடும் பிரம்மாண்ட நேரடி இன்னிசை விழா


ஈரோட்டில் இளையராஜாவின் இசை வெள்ளம்..!

50 ஆண்டுகால இசைப் பயணத்தை கொண்டாடும் பிரம்மாண்ட நேரடி இன்னிசை விழா

ஈரோடு, செப். 3:
இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில், ஈரோடு டெக்ஸ்வேலியில் வரும் அக்டோபர் 25-ம் தேதி பிரம்மாண்டமான நேரடி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அருண் ஈவென்ட்ஸ் மற்றும் மெர்குரி நிறுவனம் சார்பில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கான செய்தியாளர் சந்திப்பு ஈரோடு டெக்ஸ்வேலியில் நடைபெற்றது.

முக்கியஸ்தர்கள் பங்கேற்பு

நிகழ்ச்சியின் முக்கிய விளம்பரதாரர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சதீஷ் குமார், முழுநேர இயக்குநர் அனிதா சதீஷ் குமார், ஏற்றுமதி மற்றும் சில்லறை விற்பனை மேலாளர் சஞ்சய் சதீஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், ஃபார்ச்சூன் சிட்டி டெக்ஸ்வேலி நிர்வாக இயக்குநர் ராஜசேகர், செயல் இயக்குநர் டி.பி. குமார், இயக்குநர் உமா சேகர், தலைமை நிர்வாக அதிகாரி கோவர்த்தனன் ஆகியோரும் பங்கேற்றனர்.

எம்.சி.ஆர். டெக்ஸ்டைல்ஸ் நிறுவனர்களான எம்.சி. ராபின், எம்.சி. ரிக்சன், பி.என்.ஐ. நிர்வாக இயக்குநர் மகேஷ் பி.வி. கிரி, ரெனாட்டஸ் ப்ரோகான் தலைமை நிர்வாக அதிகாரி பகலா வெங்கடேஷ், வால்யூம் ஸீரோ நிர்வாக இயக்குநர் ராஜாராம் முருகையா உள்ளிட்ட தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.


மேலும், பாண்டியன் எலக்ட்ரிக்கல்ஸ் & பைப்ப்ஸ் நிர்வாக இயக்குநர் எல்லாளன், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சேலம் மண்டலத் தலைவர் ராஜவேலு, பிராண்டிங் பீஸ் & கோ நிறுவனர் விக்னேஷ் வேலுசாமி, அனில் ஃபுட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி பிரபாகர் யுவராஜன், சர்வேஷ் எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் தியா எக்ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் பி.எஸ். கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் பங்கேற்றனர்.

செந்தில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை டாக்டர் பி.எஸ். கௌரி சங்கர், V சோடா மற்றும் 369 நிறுவனர் அருண் மாதேஸ்வரன், MJM கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் அவ்வை.ஆர். முருகன், யெஸ் ப்ரின்டிங்ஸ் உரிமையாளர் ஆனந்த் அர்தநாரீஸ்வர் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

50 ஆயிரம் ரசிகர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு

கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 50,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும் வகையில், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பிரம்மாண்ட மேடை மற்றும் காட்சியமைப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

‘ஜெயிலர்’, ‘டாக்டர்’, ‘பீஸ்ட்’, ‘விடுதலை’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பிரம்மாண்ட அரங்குகள் மற்றும் காட்சியமைப்புகளை உருவாக்கிய கலை இயக்குநர் கிரண், இந்நிகழ்ச்சிக்கான மேடை அமைக்கும் பணியில் ஈடுபட உள்ளார்.

“இளையராஜாவின் இசைப் பயணத்தில் நாமும் பங்கேற்பது பெருமை”

நிகழ்ச்சி குறித்து மில்கி மிஸ்ட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சதீஷ் குமார் கூறுகையில், தமிழகத்தின் பெருமைமிகு அடையாளமாக விளங்கும் இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தை ஈரோட்டில் கொண்டாடுவது பெருமைக்குரிய விஷயம் என்றும், வாழ்நாள் முழுவதும் அவரது இசைப் பயணத்தில் நாமும் பங்கேற்றிருப்பது சிறப்பான ஒன்று என்றும் தெரிவித்தார்.

டிக்கெட் விற்பனை தொடக்கம்

நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையை சதீஷ் குமார் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் டிக்கெட்டுகளை பெற்றுக் கொண்டனர்.

அக்டோபர் 25-ம் தேதி நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை தற்போது entrypasses.com இணையதளத்தில் நடைபெற்று வருகிறது.

புதன், 2 செப்டம்பர், 2026

சேலம் - ஓமலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தின் சட்டவிரோதக் கட்டண வசூலைக் கண்டித்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் தலைமையில் சாலை மறியல் போராட்டம்.

சேலம் - ஓமலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தின் சட்டவிரோதக் கட்டண வசூலைக் கண்டித்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் தலைமையில் சாலை மறியல் போராட்டம்.

சேலம்,
S. K.சுரேஷ்பாபு.

சேலம் - ஓமலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தின் சட்டவிரோதக் கட்டண வசூலைக் கண்டித்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் தலைமையில் சாலை மறியல் போராட்டம்.

சேலம் மாநகராட்சியின் நுழைவாயிலாக அமையும் ஓமலூர் சுங்கச்சாவடி, விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ளது. உண்மையில், தோப்பூரிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள மல்லூருக்கு அப்பால், நாமக்கல் மாவட்ட நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருக்க வேண்டிய இந்தச் சுங்கச்சாவடி, ஓமலூரில் அமைக்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் உள்ளன. உள்ளூர் வாகனங்களுக்கான கட்டணம் ரூ.15-லிருந்து ரூ.60-ஆகவும், கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.25-லிருந்து ரூ.200-ஆகவும் (ஒன்பது மடங்கு) உயர்த்தப்பட்டதை அறிந்ததும், சேலம் மேற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஐ. அருள் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் சுங்கச்சாவடி மற்றும் அதன் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அப்போது காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, ​​டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகளிடம் பேசி கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய (NHAI) திட்ட இயக்குநர் உறுதியளித்தார். இருப்பினும், உள்ளூர் மக்களுக்குக் கட்டணச் சலுகை வழங்கப்படாவிட்டால் விதிமுறைகளின்படி ஓமலூர் சுங்கச்சாவடி மூடப்பட வேண்டும் என்று வலியுறுத்திய போராட்டக்காரர்கள், ஒரு மாத கால அவகாசம் அளித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் கோவிந்தன், இளைஞரணிச் செயலாளர் தமிழன் துரை செந்தில்குமார், மாங்கனி பாலு, மாவட்டச் செயலாளர் இளம்பிள்ளை பச்சமுத்து, செல்லப்பிள்ளைக்குட்டை கோவிந்தராஜ், கோணகப்பாடி ரத்தினவேல், விஜயராயா, என். சேகர், மகாதேவன், சக்தி, மணிகண்டன், கரிசல் குணா, சித்திவேல்முருகன், ஐ. தங்கம், மா. கோகிலா, மணி, கார்த்தி, சின்னசாமி, அருண், நிர்மல் மற்றும் பிற நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

திங்கள், 31 ஆகஸ்ட், 2026

சேலம் அருகே மூதாட்டிக்கு கால் மாற்றி அறுவை சிகிச்சை செய்த அரசு மருத்துவர். தவறிழைத்த மருத்துவர், வெளியில் கூறினாள்  கொலை மிரட்டல் விடுவதாக, பாதிக்கப்பட்ட மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் புகார்.

சேலம் அருகே மூதாட்டிக்கு கால் மாற்றி அறுவை சிகிச்சை செய்த அரசு மருத்துவர். தவறிழைத்த மருத்துவர், வெளியில் கூறினாள் கொலை மிரட்டல் விடுவதாக, பாதிக்கப்பட்ட மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் புகார்.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் அருகே மூதாட்டிக்கு கால் மாற்றி அறுவை சிகிச்சை செய்த அரசு மருத்துவர். தவறிழைத்த மருத்துவர், வெளியில் கூறினாள்  கொலை மிரட்டல் விடுவதாக, பாதிக்கப்பட்ட மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் புகார். 

நாமக்கல் மாவட்டம் குமார பாளையத்தை சேர்ந்தவர் காலம் சென்ற மாதேஸ்வரன். இவரது மனைவி கோமதி. இவரது ராதிகாவை சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவருக்கு திருமணம் முடித்து கொடுத்துள்ளார். இந்த நிலையில் சுமார் 60 வயதுக்கு மேலான கோமதிக்கு வலது காலில் ஏற்பட்ட மூட்டு வலி காரணமாக மிகவும் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து மூதாட்டி கோமதி மகள் மற்றும் மருமகன் உதவியோடு சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, அரசு  மருத்துவர் பாலாஜி என்பவரை அணுகி உள்ளனர். பரிசோதித்த மருத்துவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி அதற்கான காலக்கடுவையும் நிர்ணயித்ததாகவும் தெரிகிறது. இதற்காக கடந்த 2022 ஆம் ஆண்டு மூதாட்டி கோமதிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாகவே முடிந்துள்ளது. ஆனால் மயக்கம் தெளிந்து பார்த்த மூதாட்டி கோமதி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு அதிர்ச்சி மட்டுமே காத்திருந்தது. காரணம் ஒரு அரசு மருத்துவர் வலது காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்த அவலம் வெளியே தெரிய வந்தது. 
இதுகுறித்து அரசு மருத்துவரான பாலாஜி என்பவரை பாதிக்கப்பட்ட கோமதி மற்றும் அவரது குடும்பத்தார் அணுகியபோது, மருத்துவர்களுக்கான கோட்ரசிற்கு வரவழைத்து இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் என் மானம் மரியாதை போய்விடும் அதனால் வெளியில் யாரிடமும் கூறி விடாதீர்கள் இதற்கு நன்றிக்கடன் ஆக நான் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தங்களுக்கு வழங்குவதாக கூறி வீடியோ எடுத்துக் எடுத்துக் கொண்டது மட்டுமல்லாமல், படுபாதகச் செயலில் ஈடுபட்ட அரசு மருத்துவர் பாலாஜி வீடியோவை கட் செய்து விட்டு பாதிக்கப்பட்ட கோமதியை கண்மூடித்தனமாக மிரட்டியதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இது சம்பந்தமாக எடப்பாடி காவல் நிலையத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் எடப்பாடி காவல் துறையினரும் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனையின் உச்சம். நிலைமை இப்படி இருக்கு ஏற்கனவே பாதிக்கப்பட்ட வலது காலிருக்கும் மாறாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதன் அடிப்படையில் நாள்தோறும் தனது அன்றாட அத்தியாவசிய தேவைகளையும் காலை கடன்களையும் கூட பூர்த்தி செய்ய முடியாமல் மூதாட்டி தவித்து வந்துள்ளார். 
அதன் பிறகு சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர் பாலாஜியை தங்களால் பார்க்கவே முடியவில்லை என்பது பாதிக்கப்பட்ட மூதாட்டியின் வேதனையாக இருந்து வந்த நிலையில், மகள் ராதிகா மற்றும் மருமகன் ராஜ்குமார் ஆகியோரின் உதவியுடன் கோமதி வழக்கறிஞர் கலைச்செல்வன் என்பவரை அணுகி உள்ளார். வழக்கறிஞர் கலைச்செல்வனின் அறிவுறுத்தலின் பேரில், சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இன்று புகார் மனு ஒன்றினையும் பாதிக்கப்பட்ட மூதாட்டி கோமதி மற்றும் அவரது குடும்பத்தார் வழங்கினர். இதனிடையே வழக்கறிஞர் கலைச்செல்வன் இந்த அறுவை சிகிச்சையால் மூதாட்டி கோமதிக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்தும், அவருக்கு அரசு மருத்துவரால் ஏற்படுத்தப்பட்ட அநீதி குறித்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உலக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சம்பந்தப்பட்ட கோமதி இழைக்கப்பட்ட கொடுமை குறித்து விசாரணை குழு அமைத்து உரிய விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட கோமதிக்கு உரிய தீர்வு ஏற்படுத்தி தரவேண்டும் என்று சேலம் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனருக்கு உத்தரவினையும் பிறப்பித்திருந்தது. 
இந்த நிலையில் மீண்டும் அந்த விசாரணைக்காக சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்த மூதாட்டி கோமதி நம்மிடையே கூறியது வேதனையை ஏற்படுத்துவதாகவே இருந்தது. மேலும் தனக்கு தவறான சிகிச்சை செய்து அநீதி இழைத்த அரசு மருத்துவர் மீது துரை ரீதியான நடவடிக்கை எடுத்து எனக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்குவதோடு மட்டுமல்லாமல் எனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்து தர வேண்டும் என்றும் கண்ணீர் மல்க கோரிக்கை முன்வைத்தார்.
பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 44 ரூபாய் என தமிழக முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் R. வேலுச்சாமி அறிவிப்பு.

பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 44 ரூபாய் என தமிழக முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் R. வேலுச்சாமி அறிவிப்பு.

நாமக்கல், 
S.K. சுரேஷ்பாபு.

பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 44 ரூபாய் என தமிழக முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் R. வேலுச்சாமி அறிவிப்பு.

இதுகுறித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R. வேலுச்சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 
தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனம் மூலம் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் தமிழக விவசாயிகளிடம் இருந்து தற்போது கொள்முதல் செய்யும் பாலுக்கு கட்டுப்படியான விலை இல்லை. பால் உற்பத்தி செய்ய பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனம் பராமரிப்பு செலவு பலமடங்கு உயர்ந்துள்ள காரணத்தை முன்வைத்து தவெக அரசு பால் கொள்முதல் விலையை தேர்தல் அறிக்கையில் கூறியது போல்  உயர்த்தி வழங்க கோரி விவசாயிகள் சங்க அமைப்புகள் சார்பிலும் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் சார்பிலும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை முழுமையாக தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை, அதன் பின்னர் தமிழகம் முழுவதும் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் அனைவரும் இணைந்து கடந்த வாரம் 24.8.2026 முதல் தமிழகம் முழுவதும் ஆவின் நிறுவனத்திற்கு பால் அனுப்பாமல் பால் நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது. தவெக அரசு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் தமிழக விவசாயிகள் நலன் கருதி விரைவில் தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதல் விலை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தெறிவிக்கப்பட்டு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் தமிழக விவசாயிகள் அனைவரும் இணைந்து பால் நிறுத்த போராட்டம் கைவிட வேண்டும் என அறிவிக்கப்பட்ட பின்னர் தற்காலிகமாக பால் நிறுத்தும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள விவசாயிகள் சங்க அமைப்புக்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் இணைந்து நடத்திய போராட்டத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஆவின் நிறுவனம் மூலம் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் தமிழக விவசாயிகள் இடம் இருந்து கொள்முதல் செய்யும் பால் தற்போது விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.35 ல் இருந்து கொள்முதல் விலையாக லிட்டர் ஒன்றுக்கு ரூ.4 விலை உயர்த்தி ரூ 39  என அறிவிப்பு வெளியிட்டு,  அதனுடன் பால் கொள்முதல் விலையுடன் சேர்த்து ஊக்கத் தொகையாக ரூ.5 என நிர்ணயம் செய்து, பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.44 என தமிழக முதல்வர் அவர்கள் இன்று அறிவிப்பு வெளியிட்டதை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வரவேற்பதாக தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R.வேலுச்சாமி செய்தி குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2026

சேலத்தில் விமர்சையாக நடைபெற்ற ராஜகணபதி திருக்கோவில் கும்பாபிஷேக விழா. காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பிற்கு இடையே பக்த கோடிகளுக்கான அனைத்து அத்தியாவசிய தேவைகளும் பூர்த்தி செய்து தரப்பட்டுள்ளது. அனைத்து திருக்கோவில் பாதுகாப்பு சங்கத்தினர் பெருமிதம்.

சேலத்தில் விமர்சையாக நடைபெற்ற ராஜகணபதி திருக்கோவில் கும்பாபிஷேக விழா. காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பிற்கு இடையே பக்த கோடிகளுக்கான அனைத்து அத்தியாவசிய தேவைகளும் பூர்த்தி செய்து தரப்பட்டுள்ளது. அனைத்து திருக்கோவில் பாதுகாப்பு சங்கத்தினர் பெருமிதம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் விமர்சையாக நடைபெற்ற ராஜகணபதி திருக்கோவில் கும்பாபிஷேக விழா. காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பிற்கு இடையே பக்த கோடிகளுக்கான அனைத்து அத்தியாவசிய தேவைகளும் பூர்த்தி செய்து தரப்பட்டுள்ளது. அனைத்து திருக்கோவில் பாதுகாப்பு சங்கத்தினர் பெருமிதம். 

சேலம் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி திருக்கோயில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான  திருக்கோயில். மூலவர் விநாயகர் பெருமான் ஒவ்வொரு நாளும் ராஜ அலங்காரத்துடன் பக்தர்களுக்குக் காட்சியளிப்பதால், இவருக்கு 'ராஜகணபதி' என்ற திருநாமம் ஏற்பட்டது. சேலம் பகுதி மன்னர்கள் காலத்தில் காடுகளும் மலைகளும் சூழ்ந்த பகுதியாக இருந்ததால் 'சைலதேசம்' என்று அழைக்கப்பட்டது. அப்போது மன்னர்கள் விநாயகப் பெருமானைத் தங்களைத் தீமைகளிலிருந்து காக்கும் காவல் தெய்வமாகக் கருதி வழிபட்டனர். சேலம் நகரின் மையத்தில் முதல் அக்ராஹாரத்தில் தேரடி (Car House) சந்திப்புக்கு அருகில் சுகவனேஸ்வரர் திருக்கோயிலுக்கு மிக அருகில் இக்கோயில் அமைந்துள்ளது. புதிய தொழில் தொடங்குதல், திருமணப் பத்திரிகைகள் வைத்தல், வாகனப் புத்தாண்டு சாவிகள் மற்றும் முக்கியமான ஆவணங்களை விநாயகர் விக்ரகத்தின் அடியில் வைத்து வழிபடுதல் இங்கு சிறப்பு. மேலும், உலகப் புகழ்பெற்ற வல்லப கணபதி திருமண வரவேற்பு கோலத்தில் காட்சியளிப்பது இத்தலத்தின் மகா கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
திருக்கோவில் வளாகத்தில் ஆகம விதிமுறைப்படி அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் நான்கு கால பூஜைகள் பூர்த்தியானதை தொடர்ந்து புனித நீர் கலச ஊர்வலம் நடைபெற்றன. தொடர்ந்து ஸ்ரீ ராஜகணபதி திருக்கோவிலில் கோபுர கலசத்திற்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து புனித நீர் ஊற்றி திருக்கோவில் சிவாச்சாரியார்கள் குடமுழுக்கு விழாவினை வெகு விமர்சையாக நடத்தி வைத்தனர். தமிழக வெற்றி கழகத்தின் சேலம் மாவட்ட செயலாளர் தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான விஜய் தமிழன் பார்த்திபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ராஜகணபதி திருக்கோவிலின் கும்பாபிஷேக விழாவினை சிறப்பித்தார். பின்னர் குடமுழுக்கு விழா நடைபெற்றதை தொடர்ந்து விழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. மேலும் திருக்கோவிலின் சார்பில் மகா அன்னதான நிகழ்வும் நடைபெற்றன. இது தவிர பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஆங்காங்கே பக்தர்களின் நலனுக்காக சிற்றுண்டிகள் குடிநீர் பாட்டில்களும் வழங்கப்பட்டன. திருக்கோவில் திரு குடமுழுக்கு விழாவிற்காக கடைவீதி முதல் அக்ரகாரம் இரண்டாவது அக்ரஹார பகுதிகள் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டு மாற்று பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. 
இந்த குடமுழுக்கு விழாவில் சேலம் மாநகரம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏன் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இரட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ராஜ கணபதியின் அருள் பெற்று சென்றனர். இந்த கும்பாபிஷேக விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சேலம் மாநகர காவல் துறை மிகச் சிறப்பாக செய்திருந்ததாகவும் இந்த விழாவிற்காக வருகை தந்த ஏராளமான பக்தர்களின் நலன் கருதி அனைத்து திருக்கோவில் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் அன்னதானம் மற்றும் குடிநீர்  பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ள தோடு தொடர்ச்சியாக நடைபெற உள்ள மண்டல பூஜைகளில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கும் அதனை தொடர்ந்து வரும் விநாயகர் சதுர்த்தி விழா வரை பக்தர்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய உதவிகளும் செய்து தரப்பட உள்ளதாகவும், கும்பாபிஷேக விழாவை தொடர்ந்தஅ நடைபெற உள்ள மண்டல பூஜை மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் விநாயகர் சதுர்த்தி விழா உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு வரும் பக்தர்கள் தங்களது உடைமைகளை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூட்டத்தை பயன்படுத்தி சமூக விரோதிகள் சிலர் பொதுமக்களின் உடமைகளை களவாடவும் வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு பக்தர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர், அனைத்து திருக்கோவில் பாதுகாப்பு சங்கத்தின் மாநில இணை செயலாளர் சண்முகவேல் மற்றும் மாவட்ட செயலாளர் சண்முகம் ஆகியோர் தெரிவித்தனர். இந்த விழாவில் திருக்கோவிலில் அறங்காவலர் குழு தலைவரும் சோனா கல்வி குழுமத்தின் தலைவருமான வள்ளியப்பா மற்றும் திருமதி வள்ளியப்பா உள்ளிட்டோர் குடும்பத்தாருடன் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சேலம் அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை ஒட்டி சேலம் மாநகரமே விழாக்கோலம் பூந்துள்ளது என்பது மட்டும் நிதர்சனம்.

சனி, 29 ஆகஸ்ட், 2026

சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரியின் 25வது பட்டமளிப்பு விழாவில், 1380 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கௌரவிப்பு

சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரியின் 25வது பட்டமளிப்பு விழாவில், 1380 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கௌரவிப்பு

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரியின் 25வது பட்டமளிப்பு விழாவில், 1380 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கௌரவிப்பு

சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரியின் பட்டமளிப்பு விழா கல்லூரியின் கல்லூரியின் சிறப்பு அரங்கத்தில்  நடைபெற்றது. கல்லூரி தலைவர் திரு.வள்ளியப்பா தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் துணைத்தலைவர்கள் திரு.சொக்குவள்ளியப்பா, திரு.தியாகுவள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து கல்லூரி முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார் அனைவரையும் வரவேற்று பட்டமளிப்பு விழா அறிக்கையை சமர்பித்தார். சிறப்பு விருந்தினராக சென்னை, ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின், தலைமை வழிகாட்டியான கிருஷ்ணா பாலகுருநாதன் அவர்கள் கலந்து கொண்டு 15 பட்டதாரிகளுக்கு முனைவர் பட்டங்களையும், சிறந்த தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த 31 மாணவ மாணவிகள் மற்றும் இளநிலை பட்டதாரிகள் 1070, முதுநிலை பட்டதாரிகள் 310 பேர் உட்பட 1380 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். 
இதனைதொடர்ந்து சிறப்புவிருந்தினர்கள் பேசும்பொழுது, சிறப்பான கல்வி சேவையை அர்ப்பனித்த பேராசிரியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து மேலும் சிறந்த உள் கட்டமைப்பு, மாணவர்களை சிறந்தவர்களாக தயார்படுத்துதல், ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் சோனா கல்லூரி சிறந்து விளங்குவதால்தான் பல விருதுகளை பெற்றுள்ளது என்றனர். மேலும் சர்வதேச தரத்தில் செயல்பட்டுவரும் சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் மாணவர்கள் எங்கு சென்றாலும் தனிச்சிறப்போடு விளங்கி கல்லூரிக்கு நற்பெயரை பெற்றுத்தந்து வருகிறார்கள் என்றும் இத்தகைய கல்லூரியில் பயிலும் வாய்ப்பு கிடைத்ததற்கு மாணவர்கள் பெருமைபட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சோனா கல்விக் குழுமத்தின் தலைவர் திரு.வள்ளியப்பா பேசும்பொழுது சவால்கள் நிறைந்த இன்றைய சூழலில் நவீனத் தொழில்நுட்பங்களை அறிந்து அதற்குகேற்ப தங்களின் ஆற்றலை நாள்தோறும் வளர்த்து கொண்டு திறம்பட செயலாற்ற வேண்டும் என தெரிவித்தார். 
இந்த விழாவில் சோனா கல்விக்குழுமத்தின்  முதல்வர்கள், இயக்குனர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.