Latest

புதன், 15 ஜூலை, 2026

பாட்டாளி மக்கள் கட்சி மருத்துவர் ராமதாஸ் அணியில் இருந்த நிர்வாகிகள் முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல் ....16ஆம் தேதி காலை பிசிசி திருமண மண்டபத்தில் தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் வருகை தர உள்ளதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் பேட்டி....

பாட்டாளி மக்கள் கட்சி மருத்துவர் ராமதாஸ் அணியில் இருந்த நிர்வாகிகள் முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல் ....16ஆம் தேதி காலை பிசிசி திருமண மண்டபத்தில் தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் வருகை தர உள்ளதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் பேட்டி....

சேலம்,
S.K. சுரேஷ் பாபு. 

பாட்டாளி மக்கள் கட்சி மருத்துவர் ராமதாஸ் அணியில் இருந்த நிர்வாகிகள் முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல் ....
16ஆம் தேதி காலை பிசிசி திருமண மண்டபத்தில் தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் வருகை தர உள்ளதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் பேட்டி....

அரசியல் துரோகம் என ராமதாஸ் தெரிவித்தது தொடர்ந்து நாங்கள் என்ன செய்வது என தெரியவில்லை - அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய நிர்வாகிகள் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது - தமிழகம் முழுவதும் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர் அடுத்த கட்ட முடிவுகள் குறித்து இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் தெரிவித்தார்
மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர் அவர்களின் ஆலோசனை கேட்ட பிறகு முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். டாக்டர் அன்புமணி ராமதாஸ் ராமதாஸ் இருவரும் பிரியவே கூடாது என நாங்கள் வலியுறுத்தினோம் 5.8 சதவீதம் வாக்குகள் உள்ள பாட்டாளி மக்கள் கட்சிகளின் வாக்குகள் சிதறும் என தெரிவித்தோம் நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் மேற்பட்ட நிர்வாகிகள் வருவார்கள் அவர்களுக்கு ஒரு சீட்டு கொடுக்கப்படும் அதில் தங்களது கருத்துக்கள் தெரிவிக்க வலியுறுத்த உள்ளம் என தெரிவித்தார்.
பெரும்பாலான பொறுப்பாளர்கள் பாமக கட்சியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினால் அவர்களின் முடிவு அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். அருள் ஜி கே மணி இருவரும் அன்புமணியை அதிகம் விமர்சித்துஉள்ளீர்கள் தற்போது பாமகவில் உங்களை அவர்கள் நினைத்துக் கொள்ள அன்புமணி ஒத்துக் கொள்வாரா என கேட்ட கேள்விக்கு நாங்கள் பெரிய தவறு ஒன்றும் செய்யவில்லை என தெரிவித்தார் அன்புமணி சம்பந்தமாக நான் பேசிய அனைத்து உரையாடல்களும் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கூறிய நாங்கள் பேசினோம் எனவும் தெரிவித்தார். தந்தை மகன் இருவரும் இணைந்த பிறகு மருத்துவர் ராமதாசை தனியாக தன்னை சந்திக்க அனுமதிக்கவில்லை என அருள் தெரிவித்தார். ஜிகே மணி மற்றும் காந்திமதி அவர்களுக்கு நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அழைப்பு கொடுத்துள்ளோம் என தெரிவித்தார்.
நாளை கட்சி துவங்கி 38 ஆண்டுகள் துவங்க உள்ளது இனிப்புகள் வழங்கி கொண்டாடும் நிகழ்ச்சி நாளை நடைபெறும் எனவும் தெரிவித்தார் மருத்துவர் ராமதாஸ் அவர்களுடன் 40 ஆண்டுகளாக பயணித்த அனைவரும் நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்பார்கள் எனவும் தெரிவித்தார்.
காவிரி நீர் விவகாரம்: தமிழக எல்லை ஓசூரில் விவசாயிகள் அதிரடி போராட்டம். கர்நாடகா நோக்கிச் சென்ற நூற்றுக்கணக்கான தமிழக விவசாய பெருங்குடி மக்கள்  கைது!

காவிரி நீர் விவகாரம்: தமிழக எல்லை ஓசூரில் விவசாயிகள் அதிரடி போராட்டம். கர்நாடகா நோக்கிச் சென்ற நூற்றுக்கணக்கான தமிழக விவசாய பெருங்குடி மக்கள் கைது!

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

காவிரி நீர் விவகாரம்: தமிழக எல்லை ஓசூரில் விவசாயிகள் அதிரடி போராட்டம். கர்நாடகா நோக்கிச் சென்ற நூற்றுக்கணக்கான தமிழக விவசாய பெருங்குடி மக்கள்  கைது!

காவிரி நீரைத் திறக்கக் கோரி தமிழக எல்லையான ஓசூரில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு!

கர்நாடக அணை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்ற விவசாயிகளைத் தடுத்து நிறுத்திய போலீசாருடன் தள்ளுமுள்ளு!

விதிகளை மீறிச் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் ஒட்டுமொத்தமாகக் கைது!

"தண்ணீர் தராவிட்டால் ₹1 லட்சம் கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடருவோம்" - அய்யாக்கண்ணு அதிரடி பேட்டி!*

"ஏரோட்டம் இல்லையென்றால் கோட்டையில் காரோட்டம் இல்லை" - தமிழக அரசுக்கு விவசாயச் சங்கத் தலைவர் வேலுசாமி எச்சரிக்கை!.

காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழக-கர்நாடக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இன்று பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. இந்த ஆண்டுக்குரிய காவிரித் தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடாததைக் கண்டித்து, தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு விவசாயிகள் சங்க அமைப்புகள் ஒன்றிணைந்து கர்நாடக எல்லையை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்றனர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான தள்ளுமுள்ளைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம், இளம் விவசாயிகள் சங்கம், விவசாய முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்புகள் இந்தத் தொடர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.
காவிரியை நீர் ஆதாரமாகக் கொண்டுள்ள தமிழகத்தின் 22 மாவட்டங்களைச் சேர்ந்த பாசன விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் என நூற்றுக்கணக்கானோர் இன்று காலை ஓசூர் மூக்கண்டப்பள்ளி தோப்பு மாரியம்மன் கோவில் வளாகத்தில் திரண்டனர்.

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி தலைமையிலும், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிறுவனர் அய்யாக்கண்ணு முன்னிலையிலும் இப்பேரணி தொடங்கியது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாகக் கர்நாடக மாநிலத்திற்குள் நுழைந்து, அங்குள்ள அணைகளை முற்றுகையிட்டுத் தண்ணீரைத் திறப்பதுதான் தங்களின் இலக்கு என முழக்கமிட்டவாறு விவசாயிகள் முன்னேறினர்.

இருப்பினும், பேரணி ஓசூர் இ.எஸ்.ஐ ரிங் ரோடு சாலை சந்திப்புப் பகுதியை அடைந்தபோது, அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு அரண் அமைத்து விவசாயிகளைத் தடுத்து நிறுத்தினர். 

இதனால் இருதரப்பிற்கும் இடையே கடுமையான வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. எல்லையைத் தாண்ட போலீஸ் அனுமதி மறுத்ததால், ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலையிலேயே அமர்ந்து கர்நாடக மற்றும் மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

இதனைத் தொடர்ந்து, சாலையில் மறியலில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு, வேலுசாமி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகளைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்து தனியார் மண்டபங்களில் தங்கவைத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிறுவனர் அய்யாக்கண்ணு 

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா மாதா மாதம் தண்ணீர் திறந்து விட்டால், தமிழகத்தின் 28 மாவட்டங்களின் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும்; விவசாயிகளும் குறுவை, சம்பா, கோடை சாகுபடியைச் செய்ய முடியும். ஆனால், கர்நாடகா தண்ணீர் தராததால் டெல்டா பகுதியை வறட்சியாக்கி, அங்கிருந்து மீத்தேன், பெட்ரோல், டீசல் எடுக்க மத்திய அரசு வஞ்சிக்கிறது.
இங்கிருக்கும் தமிழக அரசோ, தண்ணீர் வராத நேரத்தில் மணல் விற்கப் பார்க்கிறது. ஏற்கனவே முசிறி முதல் வாத்தலை வரை மணல் அள்ளியதால் 50,000 தென்னை மரங்களும், காவிரி-கொள்ளிடம் கரைகளில் இருந்த லட்சக்கணக்கான பனை மரங்களும் காய்ந்து இயற்கையே அழிந்துவிட்டது. மீண்டும் அத்தகைய சூழலை உருவாக்கக் கூடாது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசுக்கு எதிராக நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளோம். விவசாயிகளுக்குக் ஏற்பட்ட இழப்பீடாக ₹1 லட்சம் கோடி நஷ்டஈடு வேண்டும், ஒரு விவசாயிக்கு ₹50,000 வழங்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்யவுள்ளோம். மேலும், கோதாவரி - காவிரி இணைப்பின் மூலம் 1,000 டிஎம்சி தண்ணீர் தருவதாகக் கூறிய வாக்குறுதியையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை. 

அமெரிக்காவில் ஒப்பந்தம் செய்து இறக்குமதி செய்யப்படும் மரபணு மாற்றப்பட்ட உணவுகளால் (GM Seeds) இளம்தலைமுறையினருக்குப் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதையெல்லாம் கண்டித்து எங்கள் போராட்டம் டெல்லியிலும் சென்னையிலும் தொடரும்.

அதேபோல தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி அளித்த பேட்டியில், 

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடகா தண்ணீர் தர மறுக்கிறது. இதுகுறித்துத் தமிழக அரசிடம் முறையிட்டால், செவிடன் காதில் சங்கூதியது போல மெத்தனமாக இருக்கிறது. விவசாயிகளின் கோரிக்கையைத் தற்போதைய அரசு முற்றிலும் மறந்துவிட்டது. அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், எல்லையைத் தாண்டிச் சென்று அணைகளின் ஷட்டர்களை உடைத்தாவது தண்ணீரைத் திறக்க வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் வந்தோம். ஆனால், தமிழக அரசு தன் காவல்துறையை ஏவல்துறையாகப் பயன்படுத்தி விவசாயிகளின் குரல்வளையை நசுக்குகிறது.

விவசாயிகளை ஏளனமாக நினைக்கும் இந்த அரசுக்கு ஒன்று கூறிக்கொள்கிறோம்... 'விவசாயிகளின் ஏரோட்டம் இல்லை என்றால், கோட்டையிலே ஆட்சியாளர்களுக்குக் காரோட்டம் இல்லை'. வரும் தேர்தல்களில் அரசியல்வாதிகள் ஓட்டுக் கேட்டு வரும்போது விவசாயிகள் அவர்களை விரட்டியடிப்பார்கள். காவிரியிலிருந்து கொள்ளை லாபத்திற்காக மணல் அள்ளும் குவாரிகளைத் திறக்க அரசு முயன்றால், விவசாயிகள் சங்கம் அதற்குப் பூட்டுப் போடும் மூடுவிழாவை நடத்தும் என எச்சரிக்கிறோம்.

கர்நாடக அரசிடமிருந்து உரிய காவிரித் தண்ணீரைப் பெற்றுத் தரக் கோரியும், காவிரிப் படுகையில் மணல் அள்ளக் கூடாது என வலியுறுத்தியும் எல்லையில் விவசாயிகள் நடத்திய இந்தப் போராட்டம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதான விவசாயிகள் தங்களின் போராட்டம் ஓயாது என்றும், அடுத்தகட்டமாகச் சென்னை மற்றும் டெல்லியில் பெருந்திரள் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
 
அய்யாக்கண்ணு, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிறுவனர் 
வேலுசாமி, மாநிலத் தலைவர், உழவர் பேரியக்கதலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.


சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா

சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா

சேலம்,
S.K. சுரேஷ் பாபு. 

சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா

சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் விதமாக 15.07.2026 புதன்கிழமை  காலை 10.00 மணியளவில்  கல்லூரியின் ஸ்ரீ வள்ளியப்பா கலையரங்க கூடத்தில் நடைபெற்றது. கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் விதமாக நடைபெற்ற இந்த விழா குத்துவிளக்கேற்றுதலில்  துவங்கி இனிதே ஆரம்பமானது.  கல்லூரியின் ஆங்கிலத்துறை தலைவர் முனைவர். ஜி.அனுராதா அவர்கள் அனைத்து  மாணவர்களையும் வரவேற்றார். கல்லூரியின் தலைவர் திரு சொ.வள்ளியப்பா அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரியின் துணைத் தலைவர்கள் திரு.சொக்கு வள்ளியப்பா, திரு . தியாகு வள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சோனா தொழில்நுட்பக் கல்லூரி  முதல்வர் முனைவர். எஸ் . ஆர்.ஆர் செந்தில்குமார் அவர்கள்  மற்றும் தியாகராஜா பல்தொழில் நுட்பக் கல்லூரி , வள்ளியப்பா பப்ளிக் பள்ளியின் இயக்குநர் முனைவர். வி.கார்த்திகேயன் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர். கல்லூரியின் முதல்வர் முனைவர் கு.மை காதர் நவாஸ் அவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களையும் அவர்களின்  பெற்றோர்களையும் வரவேற்று பேசினார்.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த திரு. ஜெய் கிருஷ்ணன் Partner & Head of investments, Beyond Next Ventures, Bengaluru  அவர்கள் பெற்றோர் மாணவர்களிடையே சிறப்புரை நிகழ்த்தினார். பள்ளி காலத்தில் இருந்து கல்லூரி வாழ்க்கைக்கு அடி எடுத்து வைக்கும் சிறப்பினையும், மாணவர்கள் எவ்வாறு தங்களது திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் குறித்து பேசினார். கல்லூரியின் தலைவர் திரு . சொ.வள்ளியப்பா அவர்கள் பேசும் பொழுது மாணவர்கள் கல்லூரி பருவத்தை நன்முறையில் அமைந்து கொண்டு பெற்றோர்களைப் பேணி பாதுகாக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
இந்த நிகழ்வின் நிறைவாக உயிர்த்தொழில் நுட்பவியல் துறைத்தலைவர் முனைவர். எம் .புவனேஸ்வரி அவர்கள் நன்றி உரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சியுடன் கலந்துகொண்டு பெருமை சேர்த்தனர்.
கல்வி வளர்ச்சி நாளின் தந்தையான கர்மவீரரின் 124 வது பிறந்தநாள் விழா. தாதை.  சேகோ. ரவிக்குமார் தலைமையில் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் ஐயாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

கல்வி வளர்ச்சி நாளின் தந்தையான கர்மவீரரின் 124 வது பிறந்தநாள் விழா. தாதை. சேகோ. ரவிக்குமார் தலைமையில் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் ஐயாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

கல்வி வளர்ச்சி நாளின் தந்தையான கர்மவீரரின் 124 வது பிறந்தநாள் விழா. தாதை.  சேகோ. ரவிக்குமார் தலைமையில் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் ஐயாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

தமிழக முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் (ஜூலை 15) ஆண்டுதோறும் தமிழக அரசால் 'கல்வி வளர்ச்சி நாளாக' (Educational Development Day) கொண்டாடப்படுகிறது. ஏழை மாணவர்களின் கல்விக்காக அவர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டம் மற்றும் இலவச சீருடைத் திட்டங்களை நினைவுகூரும் வகையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பிக்கப்படுகிறது. அந்த வகையில் கர்மவீரரின் 124 வது பிறந்தநாள் விழா சேலத்தில் உள்ள பல்வேறு அமைப்பினரால் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் சேலம் 2- வது அகாரம் பகுதியில் உள்ள முன்னாள் முதலமைச்சரும் கல்விச் செம்மலுமான கர்மவீரர் காமராஜரின் திரு உருவ சிலைக்கு சேலம் மாவட்ட மக்கள் சிந்தனையாளர் சங்கத்தைச் சேர்ந்த சேலம்  தாதை.சேகோ.ரவிக்குமார் தலைமையில் ஐயாவின் திருவுரு சிலைக்கு பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 


கர்மவீரர் காமராசர் அவர்களுடைய 
124 வது பிறந்த தினத்தை முன்னிட்டு 
அவருடைய திரு உருவ சிலைக்கு 
மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
இன்றைய நிகழ்வில்,  
திரு O.S. கணேஷ், சேலம் மாவட்ட மக்கள் சிந்தனையாளர் சங்க தலைவர்,
திரு சிவசுப்பிரமணியன் ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர், 
திரு பிரபு, சமூக நல பேரவை தலைவர், கவிஞர் திரு மா. புகழேந்தி, 
கவிஞர் திரு செல்வராசா, 
சமூக ஆர்வலர்கள் 
 திரு ஜெயவேல் , திரு குணசேகரன், திரு மனோகரன், திருமதி ஸ்ரீ நீலா உள்ளிட்ட ஒரு கலந்து கொண்டு கர்மவீரரின் பிறந்தநாள் விழாவை சிறப்பித்தனர்.

திங்கள், 13 ஜூலை, 2026

கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை திறக்க ஒரே அணியாக திரண்டு வந்து காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை பெறுவதற்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி அழைப்பு.

கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை திறக்க ஒரே அணியாக திரண்டு வந்து காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை பெறுவதற்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி அழைப்பு.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை திறக்க ஒரே அணியாக திரண்டு வந்து காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை பெறுவதற்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி அழைப்பு.

இது தொடர்பாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி விடுதுள்ள அழைப்பு கடிதத்தில், தமிழ்நாட்டிற்கு இந்த ஆண்டுக்கு உண்டான காவிரி பங்கீட்டு தண்ணீரை கர்நாடகா அரசு திறந்துவிடாததை கண்டித்து  அங்கு உள்ள அணைகளில் இருக்கும் காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை திறக்க  உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் இளம் விவசாயிகள் சங்கம், விவசாய முன்னேற கழகம் மற்றும் பல்வேறு விவசாயிகள் சங்க அமைப்புக்கள் இணைந்து நாளை மறுநாள் 15.7.2026 அன்று  புதன்கிழமை காலை 11 மணிக்கு  தமிழக எல்லையான ஓசூர் E S I மருத்துவமனை பகுதியில்  இருந்து,  தமிழக விவசாயிகளை மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி கர்நாடகா சென்று அங்கு உள்ள அணைகளில்  தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை திறக்கப்படவுள்ளது. எனவே காவிரி பாசனத்தை நம்பியுள்ள  விவசாயிகள் மற்றும்  தமிழகத்தில் காவிரியை  குடிநீர் ஆதாரமாக கொண்டுள்ள  22 மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், இளைஞர்கள்  பல தரப்பட்ட அமைப்பை சார்ந்தவர்கள் அனைவரும் ஒரே அணியாக திரண்டு வந்து காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை பெறுவதற்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

ஞாயிறு, 12 ஜூலை, 2026

சேலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம். ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனரும் தலைவருமான அதியமான் கலந்து கொண்டு நான்கு மாவட்ட நிர்வாகிகளுடன் முக்கிய முடிவு.

சேலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம். ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனரும் தலைவருமான அதியமான் கலந்து கொண்டு நான்கு மாவட்ட நிர்வாகிகளுடன் முக்கிய முடிவு.


சேலம்,
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம். ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனரும் தலைவருமான அதியமான் கலந்து கொண்டு நான்கு மாவட்ட நிர்வாகிகளுடன் முக்கிய முடிவு. 

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது அனைத்து அரசியல் கட்சியினரின் கோரிக்கையாகவே இருந்து வருகிறது. அதன் அடிப்படையில் ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் சேலம் திருவா கவுண்டனூரில் நடைபெற்றது. ஆதித்தமிழர் பேரவையின் சேலம் மத்திய மாவட்ட செயலாளரும் மாநில துணைச் செயலாளருமான ஏ.டி.ஆர். சந்திரன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் 4 மாவட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்த கூட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனரும் தலைவருமான அதியமான் தலைமை வகித்தார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், பேரவையின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. தொடர்ந்து  தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதன் அவசியம் குறித்தும் அதன் தேவைகள் குறித்தும் நிறுவனரும் தலைவருமான அதியமான் 4 மாவட்ட நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். நான்கு மாவட்ட நிர்வாகிகள் பல்வேறு ஆலோசனைகளையும் தெரிவித்தனர்.
தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசும் போது, தமிழக அரசு தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது என்றும் அண்டை மாநிலங்களை போன்று தமிழகத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் வேண்டுமென்று கூறிய ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் உள் ஒதுக்கீடு நியமனம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் ஆதிதிராவிடர் என்பது தனிப்பட்ட ஜாதி என்பதை குறிப்பதால் ஒட்டுமொத்த ஆதிதிராவிடர் நலத்துறையும் சமூக நீதித்துறை என மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றார். மேலும் அவர் கூறுகையில் தமிழக அமைச்சரவையில் 3 அருந்ததியருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்றும் தற்பொழுது ஒருவர் மட்டுமே அமைச்சர்  பதவியில் உள்ளதாகவும், ஆதிதிராவிடர் பெயரை மாற்றி சொல்வதால் நாங்கள் திராவிடத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்றும் அதியமான் குறிப்பிட்டார்.

வெள்ளி, 10 ஜூலை, 2026

வெள்ளி தங்கம் மற்றும் நகை தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க ஆவணம் செய்ய வேண்டும். சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை நல சங்கத்தின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு..

வெள்ளி தங்கம் மற்றும் நகை தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க ஆவணம் செய்ய வேண்டும். சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை நல சங்கத்தின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு..

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

வெள்ளி தங்கம் மற்றும் நகை தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க ஆவணம் செய்ய வேண்டும். சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை நல சங்கத்தின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு..

சேலம் மாநகரம் உட்பட மாவட்டம் முழுவதும் முக்கிய பாரம்பரிய தொழில்களில் ஒன்றாக வெள்ளி கொலுசு உற்பத்தி தொழிலும் கருதப்படுகிறது. அந்த வகையில் சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை நலச் சங்கத்தின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதில் சங்கத்தின் தலைவர் ஸ்ரீ ஆனந்தராஜ் தெரிவித்துள்ளதாவது, 
வெள்ளி மற்றும் தங்க நகை தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க ஆவணம் செய்ய வேண்டும் என்றும் சேலம், சென்னை, மதுரை, திருச்சி, விருதுநகர் மற்றும் விழுப்புரம் உட்பட தமிழகம் முழுவதும் வெள்ளி மற்றும் தங்கம் தொழிலில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தாருடன் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தனி நலவாரியம் அமைத்து தர என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் தமிழக அரசுக்கு வெள்ளி மற்றும் தங்க நகை தொழில்களில் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் நகை விற்பனையில் வரியாக செலுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் வெள்ளி மற்றும் தங்க நகை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இதுவரை தமிழக அரசின் எந்த விதமான நல வாரியத்திலும் எந்தவிதமான பலன்களும் கிடைக்கவில்லை எனவே உடனடியாக தமிழக அரசு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என்றும் சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை நலச்சங்கத்தின் சார்பாக சேலம் வெள்ளி குலத்திற்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் புவிசார் குறியீடு பெறுவதற்கு ஆவணம் செய்ய வேண்டும் என்றும் சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை நலச் சங்கத்தின் தலைவர் ஸ்ரீ ஆனந்தராஜன் குறிப்பிட்டுள்ளார்.