சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
வெள்ளி தங்கம் மற்றும் நகை தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க ஆவணம் செய்ய வேண்டும். சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை நல சங்கத்தின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு..
சேலம் மாநகரம் உட்பட மாவட்டம் முழுவதும் முக்கிய பாரம்பரிய தொழில்களில் ஒன்றாக வெள்ளி கொலுசு உற்பத்தி தொழிலும் கருதப்படுகிறது. அந்த வகையில் சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை நலச் சங்கத்தின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதில் சங்கத்தின் தலைவர் ஸ்ரீ ஆனந்தராஜ் தெரிவித்துள்ளதாவது,
வெள்ளி மற்றும் தங்க நகை தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க ஆவணம் செய்ய வேண்டும் என்றும் சேலம், சென்னை, மதுரை, திருச்சி, விருதுநகர் மற்றும் விழுப்புரம் உட்பட தமிழகம் முழுவதும் வெள்ளி மற்றும் தங்கம் தொழிலில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தாருடன் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தனி நலவாரியம் அமைத்து தர என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் தமிழக அரசுக்கு வெள்ளி மற்றும் தங்க நகை தொழில்களில் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் நகை விற்பனையில் வரியாக செலுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் வெள்ளி மற்றும் தங்க நகை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இதுவரை தமிழக அரசின் எந்த விதமான நல வாரியத்திலும் எந்தவிதமான பலன்களும் கிடைக்கவில்லை எனவே உடனடியாக தமிழக அரசு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என்றும் சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை நலச்சங்கத்தின் சார்பாக சேலம் வெள்ளி குலத்திற்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் புவிசார் குறியீடு பெறுவதற்கு ஆவணம் செய்ய வேண்டும் என்றும் சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை நலச் சங்கத்தின் தலைவர் ஸ்ரீ ஆனந்தராஜன் குறிப்பிட்டுள்ளார்.


