Latest

புதன், 5 ஆகஸ்ட், 2026

ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டத்திற்கான ஆணையத்திடம் சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லுாரி சார்பில் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டது.

ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டத்திற்கான ஆணையத்திடம் சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லுாரி சார்பில் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டது.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் சட்டக் கல்லூரியில் மாதிரி பாராளுமன்ற போட்டி. ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டத்திற்கான நீதியரசர் கே என் பாட்ஷா தலைமையிலான ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பரிசளித்து விழாவினை சிறப்பித்தனர்.

சேலம் மத்திய சட்டக் கல்லூரி, கௌரவக் கொலைகள் தடுப்பு ஆணையத்துடன் ஒரு உயர்மட்ட கலந்துரையாடல் அமர்வுடன், கல்லூரி அளவிலான ஒரு விறுவிறுப்பான மாதிரி நாடாளுமன்றப் போட்டியையும் நடத்தியது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், புகழ்பெற்ற சட்ட வல்லுநர்களும் நிர்வாகப் பிரமுகர்களும் கலந்துகொண்டனர். ஆணையத்தின் தலைவர் மாண்புமிகு நீதிபதி கே.என். பாஷா அவர்களின் வருகை இந்நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்தது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற ஒரு விரிவான அமர்வின் போது, ​​பேராசிரியர்களும் மாணவர்களும் கௌரவக் குற்றங்களை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட விரிவான பரிந்துரைகளையும் ஒரு மாதிரிச் சட்டத்தையும் முன்வைத்தனர். சேலம் மத்திய சட்டக் கல்லூரியின் தலைவர் திரு. சரவணன் தனபாலன், இந்த அதிகாரப்பூர்வத் தொகுப்பை நீதிபதி கே.என். பாஷாவிடம் வழங்கினார். சட்ட சீர்திருத்தத்திற்காக மாணவர் மற்றும் பேராசிரியர்களின் கருத்துக்களை முன்முயற்சியுடன் திரட்டிய தமிழ்நாட்டின் முதல் நிறுவனம் என்ற வகையில் மத்திய சட்டக் கல்லூரியை ஆணையம் பாராட்டியதுடன், இது சமூகப் பொறுப்பின் ஒரு முன்மாதிரியான வெளிப்பாடு என்றும் புகழ்ந்தது. மாதிரி நாடாளுமன்றத்தின் நிறைவு விழாவில் உரையாற்றிய மாண்புமிகு நீதிபதி கே.என். பாஷா, தனது நிறைவுரையில், நீதித்துறை அனுபவம், அரசியலமைப்பு அறநெறி மற்றும் குடிமைக் கடமை ஆகியவற்றில் வேரூன்றிய ஒரு தொலைநோக்குப் பார்வையைப் பகிர்ந்துகொண்டார். தற்போதைய அரசியலமைப்பு உத்தரவாதங்கள், 2 ஆண்டுகள் 11 மாதங்கள் மற்றும் 18 நாட்கள் நீடித்த கடினமான விவாதங்களின் மூலம் உருவாக்கப்பட்டன என்பதை அவர் மாணவர்களுக்கு நினைவூட்டினார். மேலும், இந்தக் கட்டமைப்பைப் பாதுகாப்பது சட்ட சமூகத்தின் இன்றியமையாத கடமை என்பதையும் அவர் வலியுறுத்தினார். ஜனநாயகம் என்பது எழுதப்பட்ட சட்டத் தொகுப்புகள் அல்லது தேர்தல்களை விட மேலானது என்று நீதிபதி பாஷா குறிப்பிட்டார். அது, குணநலன், அறநெறித் துணிவு மற்றும் தனிப்பட்ட லட்சியங்களுக்கு மேலாகப் பொதுநலனை முன்னிறுத்துதல் ஆகியவற்றைச் சார்ந்த ஒரு நீடித்த உடன்படிக்கையாகும். உண்மையான தலைமை என்பது, வெறும் ஆரவாரத்தாலோ அல்லது உணர்ச்சிகரமான சொல்லாட்சியாலோ அல்ல, மாறாக பகுத்தறிவு, சரிபார்க்கப்பட்ட உண்மை மற்றும் அசைக்க முடியாத கண்ணியம் ஆகியவற்றால் வரையறுக்கப்படுகிறது என்று அவர் வலியுறுத்தினார். ஒழுக்கமற்ற அதிகாரம் குழப்பத்திற்கு வழிவகுக்கும் என்றும், மனசாட்சியால் வழிநடத்தப்படும் பேச்சு ஒரு நீதியான சமூகத்தை உருவாக்கும் என்றும் அவர் எச்சரித்தார். நாளைய நீதியின் பாதுகாவலர்களாகச் செயல்படுமாறு இளம் சட்ட அறிஞர்களை வலியுறுத்திய அவர், வசதிக்காக ஒருபோதும் உண்மையின் மீது சமரசம் செய்துகொள்ள வேண்டாம் என்றும், அவநம்பிக்கை தங்களது இலட்சியவாதத்தைக் குலைக்க அனுமதிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். மேலும், தனிநபர்கள் தங்களது நேர்மையைத் தீவிரமாகப் பாதுகாக்க வேண்டும், ஏனெனில் அது ஒருமுறை சமரசம் செய்யப்பட்டால் ஒருபோதும் முழுமையாக மீட்டெடுக்க முடியாத ஒரே சொத்து என்றும் அவர் கூறினார். நீதிபதிகள் வி.ஆர். கிருஷ்ண ஐயர் மற்றும் பி.என். பகவதி போன்ற சட்ட மேதைகளை முன்னிலைப்படுத்திய அவர், மாணவர்கள் தொழில்முறைச் சிறப்பிற்காகப் பாடுபடவும், இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி மோகனா போன்ற முன்னோடிகளைப் பின்பற்றவும் ஊக்குவித்தார். 
இந்த விழாவில் மற்ற முக்கியத் தலைவர்களின் ஆழ்ந்த உரைகளும் இடம்பெற்றன. திரு. சரவணன் தனபாலன் ஆற்றிய தலைமை உரையில், அரசியல் கட்சித் தாவல் மற்றும் தேர்தல்களின் போது நிலவும் சமமற்ற களங்கள் போன்ற ஜனநாயக செயல்முறைகளில் உள்ள முக்கிய சவால்களை எடுத்துரைத்ததோடு, பாரபட்சமற்ற நிர்வாகத்தின் முக்கியப் பங்கையும் அவர் வலியுறுத்தினார். பொது மன்றங்கள். வழக்கறிஞர் செல்வாகோமதி, ஹன்சா மேத்தா உள்ளிட்ட அரசியலமைப்புச் சபையின் 15 பெண் உறுப்பினர்களின் பங்களிப்புகளை நினைவு கூர்ந்ததோடு, மாணவர்கள் மனித உரிமைப் பாதுகாவலர்களாக முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தி, அனைவருக்கும் மாதவிடாய் விடுப்பு வழங்குவது குறித்த மாதிரி நாடாளுமன்றத்தின் மாதிரி மசோதாவைப் பாராட்டினார். ஆணைய உறுப்பினர்களான திரு. ராமநாதன் ஐபிஎஸ் மற்றும் திரு. பழனிகுமார் ஐஏஎஸ் ஆகியோரும், தொகுதி மறுவரையறைச் சட்டம் மற்றும் வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் போன்ற சிக்கலான தலைப்புகளில் மாணவர்களின் விவாதத் திறனைப் பாராட்டினர். மாதிரி நாடாளுமன்றப் போட்டியில் சிறந்து விளங்கிய செல்வி கோபிகா, செல்வி மெர்லின் சோபியா மற்றும் திரு. யஷ்வந்த் ஆகியோருக்கு விருதுகள் வழங்கி நிகழ்ச்சி நிறைவடைந்தது. 
உதவிப் பேராசிரியர் ஜெசிந்தாவின் வரவேற்புரை மற்றும் சுவாமிநாதனின் நன்றியுரையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. மாண்புமிகு நீதிபதி கே.என். பாஷா, திரு. ராமநாதன் ஐ.பி.எஸ், திரு. பழனிகுமார் ஐ.ஏ.எஸ், நீதிபதி திரு. ரவீந்திர போஸ், உறுப்பினர் செயலாளர் மற்றும் வழக்கறிஞர் செல்வி செல்வகோமதி ஆகியோர் கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்களில் அடங்குவர்.






செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது. சேலம் அரியானூரில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர். சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது. சேலம் அரியானூரில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர். சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது. அரியானூரில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர். 

தமிழக விவசாயிகளின் நலன் கருதி நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது  டி.வி.கே. கொடுத்த வாக்குறுதிகள் அமுல்படுத்துவதிலேயே பல்வேறு குளறுபடிகள். தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்பை ஏமாற்றி முழுமையாக செயல்படுத்தவில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும். தமிழக விவசாயிகளின் நலன், கூட்டுறவு வங்கிகளில் அவர்கள் பெற்று பயிர் கடன்கள் அனைத்தையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் மற்றும் காவிரி உரிமை பங்கிட்டு நீர் பிரச்சனை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  தஞ்சையில் நேற்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மிகப் பிரம்மாண்டமான அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்களைக் குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக ஏழு பிரிவுகளின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்பொழுது விசாரணைக்காக தஞ்சைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் திமுகவினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 
இதன் ஒரு பகுதியாக சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் தலைமையில் திரண்ட திமுகவினர், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கழுதை கண்டித்து அரியானூர் சேலம் கோவை  தேசிய நெடுஞ்சாலையில்சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளர் வெண்ணிலா சேகர், ஆட்டையாம்பட்டி பேரூர் கழக செயலாளர் முருக பிரகாஷ், கல்வியாளர் அணி இணைச் செயலாளர் மலர்விழி வீரபாண்டி ராஜா, இளைஞர் அணி பொறுப்பாளர் ஃபிரண்ட்ஸ் ரமேஷ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட திமுகவினர் சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரியனுர் பகுதியில் டி வி கே தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய்யை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பொய் வழக்கு போட்டு கைது செய்த தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை விடுதலை செய்ய வேண்டும் என்றும் மறியல் போராட்டத்தின் போது வலியுறுத்தினர். இந்த போராட்டத்தின் காரணமாக அரியானூர் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் பரபரப்பும் காணப்பட்டது.
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைக்காக தமிழக முதல்வர் ஆர்வம் காட்டாமல்,  எதிர்க்கட்சி தலைவர் மற்றும் எதிர் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்வதில் மட்டும் ஏன் இத்தனை ஆர்வம் காட்டுவது ஏன் ??? .தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தமிழக முதலமைச்சருக்கு சரமாரி கேள்வி. இதுகுறித்து தமிழக  விவசாயிகளுக்கு பதில் கூற வேண்டும் என்றும் முதல்வருக்கு வலியுறுத்தல்.

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைக்காக தமிழக முதல்வர் ஆர்வம் காட்டாமல், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் எதிர் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்வதில் மட்டும் ஏன் இத்தனை ஆர்வம் காட்டுவது ஏன் ??? .தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தமிழக முதலமைச்சருக்கு சரமாரி கேள்வி. இதுகுறித்து தமிழக விவசாயிகளுக்கு பதில் கூற வேண்டும் என்றும் முதல்வருக்கு வலியுறுத்தல்.

நாமக்கல்.
S.K. சுரேஷ்பாபு.

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைக்காக தமிழக முதல்வர் ஆர்வம் காட்டாமல்,  எதிர்க்கட்சி தலைவர் மற்றும் எதிர் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்வதில் மட்டும் ஏன் இத்தனை ஆர்வம் காட்டுவது ஏன் ??? .
தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தமிழக முதலமைச்சருக்கு சரமாரி கேள்வி. இதுகுறித்து தமிழக  விவசாயிகளுக்கு பதில் கூற வேண்டும் என்றும் முதல்வருக்கு வலியுறுத்தல்.

தமிழக விவசாயிகளின் நலன் கருதி நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது  டி.வி.கே. கொடுத்த வாக்குறுதிகள் அமுல்படுத்துவதிலேயே பல்வேறு குளறுபடிகள். தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்பை ஏமாற்றி முழுமையாக செயல்படுத்தவில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும். தமிழக விவசாயிகளின் நலன், கூட்டுறவு வங்கிகளில் அவர்கள் பெற்று பயிர் கடன்கள் அனைத்தையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் மற்றும் காவிரி உரிமை பங்கிட்டு நீர் பிரச்சனை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  தஞ்சையில் நேற்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மிகப் பிரம்மாண்டமான அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்களைக் குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக ஏழு பிரிவுகளின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்பொழுது விசாரணைக்காக தஞ்சைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் திமுகவினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் ஆர்.வேலுச்சாமி, டி.வி.கே. தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய்க்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியும்,  இதற்கான விளக்கத்தை கேட்டும் கண்டன பதிவு ஒன்றினை  வெளியிட்டுள்ளார். 
அந்த பதிவில்,  தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் அரசு நாட்டின் முதுகெழும்பாக உள்ள தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருக காவிரி பங்கீட்டு உரிமை உயிர் தண்ணீரை  இந்த ஆண்டு முறையாக கர்நாடகா அரசிடம் இருந்து பெற்று தர தவெக அரசு தவறிவிட்டது. தவெக கட்சி தேர்தல் வாக்குறுதி படி தமிழக விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி செய்ததில் தற்போது முறையாக நடக்கவில்லை, தமிழகத்தில் தற்போது கடுமையான வறட்சி தலை விரித்தாடுகிறது.
தமிழகத்தில் தவெக கட்சிக்கு வாக்களித்து ஆட்சி கட்டிலில் அமர வைத்த தமிழ்நாடு மக்களுக்கும் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றி கொடுக்க கோரி தற்போது தமிழகம் முழுவதும் போராடிக்கொண்டிருக்கும் நிலையில்  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரிய நேரத்தில் செயல்படாமல் மௌன அரசாக இருந்து விட்டு, நாளை தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய உள்ள நிலையில் தமிழக விவசாயிகளின் கோரிக்கைக்காக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக எதிர்கட்சி தலைவர் குரல் எழுப்புவார் என்று அஞ்சி, நேற்று தஞ்சையில் திமுக சார்பில், காவிரி உரிமையில் தவெக அரசின் மெத்தன போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றதில் தமிழக எதிர்கட்சி தலைவர்  உதயநிதி ஸ்டாலினை,  தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவதூறாக பேசியதாக கூறி சினிமா பாணியில் நடப்பது போல் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதனை  உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைக்காக  தமிழக முதல்வர் ஆர்வம் காட்டவில்லை மாறாக  எதிர்க்கட்சி தலைவர் மற்றும் எதிர் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்வதில் மட்டும் ஏன் இத்தனை ஆர்வம் என்று விவசாயிகளுக்கு பதில் கூற வேண்டும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் தனது கண்டன பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

திங்கள், 3 ஆகஸ்ட், 2026

சேலத்தில் ஆடிப்பெருக்கு நன்னாளில் அம்மனுக்கு தாலி மாற்றி சிறப்பு வழிபாடு.. அங்காளம்மனின் அதி தீவிர பக்தரின் சிறப்பு வழிபாட்டால் பக்தர்கள்  நெகிழ்ச்சி....

சேலத்தில் ஆடிப்பெருக்கு நன்னாளில் அம்மனுக்கு தாலி மாற்றி சிறப்பு வழிபாடு.. அங்காளம்மனின் அதி தீவிர பக்தரின் சிறப்பு வழிபாட்டால் பக்தர்கள் நெகிழ்ச்சி....

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தில் ஆடிப்பெருக்கு நன்னாளில் அம்மனுக்கு தாலி மாற்றி சிறப்பு வழிபாடு.. அங்காளம்மனின் அதி தீவிர பக்தரின் சிறப்பு வழிபாட்டால் பக்தர்கள்  நெகிழ்ச்சி....

ஆடிப்பெருக்கு (ஆடி 18) நன்னாளில் சுமங்கலிப் பெண்கள் தாலிக் கயிறு மாற்றுவது கணவரின் ஆயுளைக் கூட்டி, மாங்கல்ய பலத்தை பலமடங்கு பெருக்கும் என்பது முதன்மையான ஆன்மீக நம்பிக்கையாகும். இந்த சுபநாளில் செய்யப்படும் காரியங்கள் அனைத்தும் பலமடங்கு பெருகும் என்பதால், தாலி பிரித்துக் கோர்க்கும் வைபவத்திற்கு இந்நாள் மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது.
தாலி மாற்றும் வைபவத்தின் ஆன்மீக முக்கியத்துவம் மாங்கல்ய பலம் பெருகுதல். ஆடி 18 அன்று நதிக்கரைகளிலோ அல்லது வீட்டிலோ வழிபாடுகள் செய்து தாலிக்கயிறு மாற்றுவதால் கணவருக்கு நீண்ட ஆயுளும், குடும்பத்திற்கு வற்றாத செல்வமும் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த நிலையில் நவகிரகங்களுக்கும் நாயகிகளான அங்காளம்மன், மாரியம்மன், மற்றும் காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு இந்த புனித நாளில் தாலி மாற்றி சிறப்பு பூஜை மேற்கொண்ட சேலம் கிச்சிபாளையம் கொறகூடை அங்கு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் திரு வீட்டில் இதற்கான சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருக்கோவில் மற்றும் திருக்கோவில் வீட்டின் நிறுவனரும் மிகச்சிறந்த ஆன்மீகவாதியும் தீவிர சிவன் அடியாரான பன்னீர்செல்வம் சுவாமி ஜி ஏற்பாட்டின் பேரில், முன்னதாக திருக்கோவில் வீட்டில் மிகப் பிரம்மாண்டமான முறையில் அலங்கரிக்கப்பட்டிருந்த அம்மனுக்காக ஐந்துக்கும் மேற்பட்ட சுமங்கலி பெண்கள் மங்களப் பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்து சிறப்பு பூஜைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து திருக்கோவிலில் சிவாச்சாரியார் பன்னீர்செல்வம் தலைமையில், ஆடிப்பெருக்கு திருநாளில் சுமங்கலி பெண்களுக்கு தாலி மாற்றும் வைபவம் ஒருபுறம் இருந்தாலும் அம்மனுக்கே திருமாங்கல்யத்தை மாற்றி சிறப்பு பூஜை மேற்கொண்டார். இந்த மாங்கல்யம் மாற்றும் சிறப்பு பூஜைகளுக்கான அனைத்து சேவைகளும் முடிந்ததன் பிறகு மகா தீபாராதனை காட்டும் போது திருக்கோவில் வீட்டில் உள்ள அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு இருள் சூழ்ந்த நேரத்தில் மகாதேவாரனை காட்டப்பட்டது பக்தர்களிடையே மிகப் பெரிய ஒரு பரவசத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.
இதனை அடுத்து இந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் மங்களப் பொருட்களுடன் பிரசாதங்களும் வழங்கப்பட்டன. இதுகுறித்து சேலம் கிச்சிபாளையம் கொறகூடை அங்கு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் தலைவர் பன்னீர்செல்வம் நம்மிடையே கூறுகையில், வழக்கமாக சுமங்கலி பெண்கள் மேற்கொள்ளும் இந்த பூஜை ஒரு புறம் இருந்தாலும் நவகிரகங்களின் நாயகிகள் ஆக விளங்கும் அம்மனுக்கே திருமாங்கல்யம் மாற்றி சிறப்பு பூஜை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இனிவரும் காலங்களில், தமிழகத்தில் விவசாயத் தொழில் முற்றிலும் பொய்த்துப் போகாமல் இருக்க நல்ல மழை பெய்து எப்பொழுதும் வற்றாத காவிரி ஆறாக மாறி தமிழக விவசாயிகளின் நலனை பெரிதும் பாதுகாக்கும் என்பதில் ஐயமில்லை என்றும் குறிப்பிட்டார்.

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2026

காவிரி தாயே வாழ்க வளமுடன்...என ஆடிப்பெருக்கு நல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி.

காவிரி தாயே வாழ்க வளமுடன்...என ஆடிப்பெருக்கு நல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி.

நாமக்கல், 
S.K. சுரேஷ்பாபு. 

காவிரி தாயே வாழ்க வளமுடன்...என ஆடிப்பெருக்கு நல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி. 

நதிகளை காப்போம்,  விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை காப்போம் என்ற நல்ல நோக்குடன், தமிழக விவசாய பெருங்குடி மக்களுக்கு தனது ஆடிப்பெருக்கு நல் வாழ்த்துக்களை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஆர். வேலுச்சாமி செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
அதில் காவிரி தாயே வாழ்க வளமுடன் என்று தொடங்கியுள்ள அவர் நதிநீர் உழவர்  உரிமை என்றும் நீரை தடுக்காதே விவசாயிகளை வாட்டாதே காவிரியை காப்போம்,  விவசாய பெருங்குடி மக்களின் வாழ்க்கை வாழ்வாதாரத்தை காப்போம் என்று பதிவிட்டுள்ள வேலுச்சாமி, தமிழ் மக்களின் பண்பாட்டோடும் உழவர் பெருமக்களின் வாழ்வியலோடும் இரண்டறக் கலந்த புனித நாளான ஆடிப்பெருக்கு நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் என்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும், காவிரி உள்ளிட்ட நதிகள் பெருக்கெடுத்து ஓடுவதைப் போல விவசாய பெருங்குடி மக்களின் வாழ்விலும் மகிழ்ச்சியும் வளமும் பெருகிட வேண்டும் என தனது வாழ்த்துச் செய்தியில் பகிர்ந்துள்ளார் வேலுச்சாமி. 
ஆறுகளில் பெருகிவரும் நீரை வரவேற்கும் விதமாக மேற்கொள்ளப்படும் நீர் வழிபாடான  ஆடிப்பெருக்கு விழா காவிரி படுகைகள் அனைத்தும் வறண்ட நிலையில் கலை இழந்து கொண்டாட்டம் என்பதும்   ஆற்றில் தண்ணீர் இல்லாததால் குளக்கரைகளில்  ஆடிப்பெருக்கை முன்னிட்டு பெண்கள் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 31 ஜூலை, 2026

மேகதாது மற்றும் காவிரி நீர் பங்கீட்டு விவகாரம். தமிழகத்திற்கு துரோகம் இழைத்து வரும் கர்நாடக அரசை கண்டித்து வரும் 13-ஆம் தேதி கர்நாடகாவில் இருந்து தமிழகம் வழியாக செல்லும் அனைத்து அத்தியாவசிய சேவைகளும் தடுத்து நிறுத்தும் மிகப்பெரிய போராட்டம். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி மிகக் கடுமையான எச்சரிக்கை.

மேகதாது மற்றும் காவிரி நீர் பங்கீட்டு விவகாரம். தமிழகத்திற்கு துரோகம் இழைத்து வரும் கர்நாடக அரசை கண்டித்து வரும் 13-ஆம் தேதி கர்நாடகாவில் இருந்து தமிழகம் வழியாக செல்லும் அனைத்து அத்தியாவசிய சேவைகளும் தடுத்து நிறுத்தும் மிகப்பெரிய போராட்டம். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி மிகக் கடுமையான எச்சரிக்கை.

நாமக்கல்,
S.K. சுரேஷ்பாபு.

மேகதாது மற்றும் காவிரி நீர் பங்கீட்டு விவகாரம். தமிழகத்திற்கு துரோகம் இழைத்து வரும் கர்நாடக அரசை கண்டித்து வரும் 13-ஆம் தேதி கர்நாடகாவில் இருந்து தமிழகம் வழியாக செல்லும் அனைத்து அத்தியாவசிய சேவைகளும் தடுத்து நிறுத்தும் மிகப்பெரிய போராட்டம். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி மிகக் கடுமையான எச்சரிக்கை.

தமிழகத்திற்கு தொடர் துரோகத்தை இழைத்து வரும் கர்நாடக அரசுக்கு எதிராக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி மிகக் கடுமையான எச்சரிக்கை அறிக்கையினை வெளியிட்டுள்ளார். 
அந்த அறிக்கையில், கர்நாடகா அரசு இந்த ஆண்டுக்கான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை தமிழ்நாட்டிற்கு தர மறுக்கிறது. அதேபோல் காவிரியின் குறுக்கே மேகதாட்டில் அணை கட்டும்  பணி குறித்தத முயற்சியை  கர்நாடகா அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கர்நாடகா அரசு தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை பங்கீட்டு உயிர் தண்ணீரை தரததால் தமிழகத்தில் கடுமையான வறட்சியின் காரணமாக தொழில் வளம் இல்லாமல் வளர்ச்சி  முற்றிலும் முடங்கும்  வாய்ப்பு   உள்ளது.டெல்டா விவசாயிகளுக்கு இந்த ஆண்டு பாசன வசதி இல்லாதால் ஒருகோடி லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.  தமிழகத்தில் உள்ள 22 மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் அபாயம் உருவாகும். காவிரி ஆயக்கட்டு பாசன விவசாயிகள் மற்றும் காவிரி ஊற்றுநீர் பாசன விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாசன வசதி இல்லாமால்  தற்போது முடங்கிப்போய் உள்ளது .
தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை உயிர் பங்கீட்டு தண்ணீரை கர்நாடகா அணைகளில் இருந்து கர்நாடகா அரசை விடுவிக்க கோரி காவிரி ஒழுங்காற்றுகுழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தும் அந்த உத்தரவை கர்நாடகா அரசு செய்படுத்த தொடர்ந்து மறுத்து வருகிறது.
தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் கர்நாடகா அரசுக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் எடுத்துறைபது என்னவென்றால் கர்நாடகாவின் தொழில் வளம் வளர்சிக்காக தமிழ்நாட்டில் உற்பத்தி செய்துதான் மின்சாரம் கர்நாடகா செல்கிறது அதேபோல் தமிழ்நாட்டின் வழியாகத்தான் கேரள மாநிலத்தில் இருந்து  எரிவாயு  செல்கிறது. 
கர்நாடகா மாநிலம் வளர்ச்சி நோக்கி செல்வதற்கு மிகப்பெரிய பங்கு என்னவென்றால் சென்னை துறைமுகம் அதேபோல் தூத்துக்குடி துறைமுகம் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சின் துறைமுகம் ஆகியவைகளில் கர்நாடகா உற்பத்தி செய்யும்  பொருட்கள் கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு ரயில்கள் மூலம்தான் தமிழகம் வழியாக துறைமுகம் செல்ல வேண்டிய நிலைமை கர்நாடகாவிற்கு உள்ளது. இதை அங்கு கன்னட அரசியல் கட்சி தலைவர்கள் உணராமல் தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை உயிர் பங்கீட்டு தண்ணீரை கர்நாடகா அணைகளில் தற்போது போதிய தண்ணீர் இருப்பு வைத்துக்கொண்டு தவறான முறையில் கர்நாடகாவில் கடும் வறட்சி என்று தவறான தகவல்  கூறி  மறுப்பதாலும் தமிழ்நாட்டின் உரிமையை முற்றிலும் பறிக்கும் திட்டத்தோடும்,  மேலும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டில் அணை கட்டியே தீருவோம் என்று கூறி முழக்கம்மிட்டு கர்நாடகாவில் உள்ள அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டிற்கு எதிராக வருகின்ற 13 ந் அன்று கர்நாடகாவில் பந்து என்று அறிவித்துள்ளது. 
இந்த நிலையில் அதே நாளில் வருகின்ற 13 ந் தேதி முதல் கர்நாடகாவில் இருந்து சரக்கு ரயில் மூலம் தமிழகம் வழியாக துறைமுகம் பகுதிக்கு ஏற்றுமதி செய்ய செல்லும் சரக்கு ரயில்கள் மற்றும்  வெளிநாட்டில் இருந்து துறைமுகம் வழியாக கர்நாடகவிற்கு செல்லும் சரக்குகள் மற்றும் கர்நாடகா மாநிலம் வளர்சிக்காக செல்லும் சரக்கு ரயில்கள் மேலும் தமிழகம்  வழியாக பயணிகளை ஏற்றி செல்லும் விரைவு ரயில்கள் தமிழ்நாட்டில் இருந்து உற்பத்தி செய்து கர்நாடகா செல்லும் மின்சாரம் கொச்சின் கேரள மாநிலத்தில் இருந்து தமிழகம் வழியாக கர்நாடகா செல்லும் எரிவாயு ஆகியவற்றை தொடர்ந்து கர்நாடகாவிற்கு செல்ல விடாமல் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் சங்க அமைப்புக்கள் மற்றும் விவசாயிகளையும் மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி கர்நாடகாவிற்கு எதிராக வருகின்ற 13 ந் தேதி அன்று முதல் தமிழகம் தழுவிய மிகப்பெரிய தொடர் போராட்டம் நடத்தப்படும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கர்நாடகா அரசுக்கு இந்த அறிக்கையின் மூலம் எச்சரிக்கை விடுக்கிறேன்.

வியாழன், 30 ஜூலை, 2026

கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கை விரிப்பு.கர்நாடகா அரசு மேல் முறையீடு செய்வதால் எந்த ஒரு பலனும் இல்லை,.  தமிழ்நாடு அரசு தான் விரைந்து உச்சநீதிமன்றம் நாட வேண்டும். டி.கே.சிவகுமாருக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி பதிலடி.

கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கை விரிப்பு.கர்நாடகா அரசு மேல் முறையீடு செய்வதால் எந்த ஒரு பலனும் இல்லை,. தமிழ்நாடு அரசு தான் விரைந்து உச்சநீதிமன்றம் நாட வேண்டும். டி.கே.சிவகுமாருக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி பதிலடி.

நாமக்கல்,
S.K.சுரேஷ்பாபு.

கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கை விரிப்பு.கர்நாடகா அரசு மேல் முறையீடு செய்வதால் எந்த ஒரு பலனும் இல்லை,.  தமிழ்நாடு அரசு தான் விரைந்து உச்சநீதிமன்றம் நாட வேண்டும். டி.கே.சிவகுமாருக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி பதிலடி.

மேகதாது விவகாரம், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காதது, மத்திய அரசிற்கு ஒத்துழைக்காதது, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை உதாசீனப்படுத்துவது என நாளுக்கு நாள் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அவர்களின் போக்கு சொல்லொனா துயரத்தை தமிழக விவசாய பெருங்குடி மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது என்பதை யாராலும் மறுத்து விடவும் மறந்து விடவும் முடியாது. அந்த வகையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தொடர் உத்தரவுகளை உதாசீனப்படுத்தும் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாரின் செயலால் பாய்ந்தோடிய காவிரி, மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்கள் வரை பாலைவனமாக காட்சி அளித்து வருகின்றன என்பது வேதனையின் உச்சம். 
இது காவிரியை மட்டுமே நம்பி முப்போகங்களை விளைவித்து வரும் டெல்டா மாவட்ட விவசாய பெருங்குடி மக்களின் மனதை நொறுக்கி விட்டு உள்ளது என்றே கூறலாம். இந்த விவகாரம் தொடர்பாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி கர்நாடக அரசின் செயலுக்கு அவ்வப்போது எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றார்.
இந்த நிலையில், ஏற்கனவே காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு  தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்த நிலையில்,  கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கை விரித்த நிலையில்,  மீண்டும் இன்று காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், காவிரி மேலாண்மை ஆணையம் அடுத்த கட்ட உத்தரவு பிறப்பிக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழக விவசாய பெருங்குடி மக்கள் இடையே ஒட்டுமொத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், கர்நாடக முதல்வர் இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்து இருப்பது தமிழக விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டும் நிதர்சனம். 
நிலைமை இப்படி இருக்கு கர்நாடக முதலமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி பதிலடி கொடுத்துள்ளதோடு தமிழக அரசுக்கு சில வழிமுறைகளையும் கூறியுள்ளார். 
அதில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மதிக்காமல், அதனை செயல்படுத்தாமல், கர்நாடகா அரசு மேல் முறையீடு செய்வதால் எந்த ஒரு பலனும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி, தமிழக அரசு  தான் விரைந்து உச்சநீதிமன்றம் நாட வேண்டும் என்றும் வழிமுறை கூறியுள்ளார்.
தமிழக விவசாயிகளின் நலனுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் கர்நாடக அரசை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் சங்க தலைவர் தொல், திருமாவளவன் உள்ளிட்டோர் தங்களது கண்டனத்தை பதிவிட்டு உள்ள நிலையில், வரும் 3-ம் தேதி பெங்களூர் செல்ல உள்ள நிலையில் தமிழகத்தில் திமுக சார்பில் கர்நாடகாவிற்கு எதிராகவும் தமிழக அரசுக்கு எதிராகவும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் போராட்ட அறிவிப்பை அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.