Latest

சனி, 25 ஜனவரி, 2025

வேங்கை வயல் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு கூட்டு  நடவடிக்கை குழு முதன்மை ஒருங்கிணைப்பாளரும் மத்திய மாநில எஸ்சி எஸ்டி பிரிவு ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான சரஸ்ராம் ரவி அறிக்கை வெளியீடு.

வேங்கை வயல் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு முதன்மை ஒருங்கிணைப்பாளரும் மத்திய மாநில எஸ்சி எஸ்டி பிரிவு ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான சரஸ்ராம் ரவி அறிக்கை வெளியீடு.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

வேங்கை வயல் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு கூட்டு  நடவடிக்கை குழு முதன்மை ஒருங்கிணைப்பாளரும் மத்திய மாநில எஸ்சி எஸ்டி பிரிவு ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான சரஸ்ராம் ரவி தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி அறிக்கை வெளியீடு.


இதுகுறித்து சரஸ்ராம் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில், 

வேங்கை வயல் வேடிக்கை.

பட்டியலின மக்களை மனிதராக பார்க்கபடுவதில்லை.
சட்டம் ஒரு புறம்- அதை அமுல்படுத்த மறுகின்ற  வருவாய்/ காவல்  அதிகாரிகள் மறுபுறம்.
1989 ல்  சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டம்  அறிமுகம்.
ஆனால் அமுல்படுத்தாமல் பல ஆண்டுகள் கடந்து 2005  வரை மறுப்பு.
பிறகு சட்டத்தில்  சில மாற்றம்- விதிகள்.
2015 ல் சட்டத்தில் மீண்டும்  மாற்றம்.
சாதிய வன்கொடுமை சடத்தை முழமையாக எந்த மாவட்டத்திலும் அமுல்படுத்த மறுக்கும் காவல் துறை/ வருவாய் துறை.
புகார் பெற்ற  24 மணி நேரத்தில் வழக்கு பதிய வேண்டும்.
24 மணி தேரத்தில் சம்பவ இடத்தில் உயர் வருவாய் அதிகாரிகள் , காவல் துறை அதிகாரிகள் களம் காண வேண்டும். 
அவர்கள் அவ்வாறு நடப்பது இல்லை.
அந்த சட்டத்தை முழமையாக யாரும் உணர்ந்து செயல்படுவதில்லை.
அதைவிட மோசம்..
அந்த சாதிய வன்கொடுமை சட்டத்தை பட்டியலின மக்களுக்கு10 %  கூட தெரிவதில்லை அறிவதில்லை.( படித்தவரும்/ பணியிலிருப்பவரும் )
இந்த நெறிமுறைகள் எல்லாம் கடைபிக்காத அரசு நிர்வாகம் வேங்கைவயல் நிகழ்வு அவலம்  தோழிரிந்து காட்டபடுகின்றது.
இந்த சட்டத்தின் சிறப்பு என்னவென்றால் குற்றம் சாட்டபட்டவரே, குற்றவாளியே குற்றத்தை சிறப்பு நீதிமன்றத்தில் நிருபிக்க வேண்டும்.
புகார் அளித்தவர் அல்ல.
ஏட்டளவில் சட்டம் / பட்டியலின ,பழங்குடி மக்களின் பரிதாப நிலை.
தமிழகத்தில் 120 லட்சம் பட்டியலின, பழங்குடி மக்கள் ஒன்று சேர வேண்டும்
அரசியல் அதிகாரம் பெற போராட வேண்டும்.
பிற கட்சிகளை நம்பி பிழைக்க கூடாது.
2026 ல் தமிழகத்தில் உள்ள 120 லட்சம் வாக்கு யாருக்கு ? முடிவெடுக்க வேண்டும். என்றும் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கையை குழுவின் முதன்மை ஒருங்கிணைப்பாளரும், மத்திய மாநில எஸ்சி எஸ்டி பிரிவு ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சரஸ்ராம் ரவி தமிழக அரசுக்கு கேள்விகளை எழுப்பி அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார். 


ஈரோடு கிழக்குத் தொகுதியில் கூடுதலாக 568 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி

ஈரோடு கிழக்குத் தொகுதியில் கூடுதலாக 568 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி

ஈரோடு கிழக்குத் தொகுதியில் கூடுதலாக 568 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சுழற்சி முறை மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஜன.25) நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தால், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டு,வரும் பிப்ரவரி 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையொட்டி, வாக்குப்பதிவிற்காக 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 13ம் தேதி இந்திய தேர்தல் ஆணைய அறிவுரையின்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு கணினி முறையில் ஆணைய இணையதளத்தின் மூலம் 284 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 284 கட்டுப்பாட்டு அலகு, 308 விவிபெட் இயந்திரங்கள் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தேர்தல் களத்தில் 46 வேட்பாளர்கள் உள்ளதால், இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் கணினி துணை சுழற்சி முறையில் கூடுதலாக 568 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஈரோடு மாநகராட்சி ஆணையர் எச்.எஸ்.ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, துணை ஆட்சியர் (பயிற்சி) சிவபிரகாசம், வட்டாட்சியர் (தேர்தல்) சிவசங்கர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தியாகராஜ் உட்பட தொடர்புடைய தேர்தல் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 15வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஈரோட்டில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 15வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் 15வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (ஜன.25) நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 15வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு 'வாக்களிப்பதே சிறந்தது, நிச்சயம் வாக்களிப்பேன்' என்ற தலைப்பில் வாக்காளர் தின நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலர்  மற்றும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் இன்று (ஜன.25) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், அவர் தெரிவித்ததாவது, அனைவருக்கும் 15வது தேசிய வாக்காளர் தின நல்வாழ்த்துக்கள். 1950 ஜனவரி 25ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது. அதனை கொண்டாடும் விதமாக இந்த வாக்காளர் தினத்தை நாம் அனைவரும் கொண்டாடுகிறோம்.

இந்த வருடம் இந்திய தேர்தல் ஆணையமானது 75 ஆண்டுகள் நிறைவடைவது மேலும் சிறப்பாகும். இந்த வருடம் பிப்ரவரி 5ம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த வாக்காளர் தினமானது அதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2023 இடைத்தேர்தலில் 74.69 சதவீதம் வாக்குகளும், நாடாளுமன்ற 66.05 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்.

வாக்களிப்பதே சிறந்தது, நிச்சயம் வாக்களிப்பேன் என்ற தலைப்பு தலைப்பாக இல்லாமல் செயலில் காட்ட வேண்டும். இதற்காக பிப்ரவரி 5ம் தேதி அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் இதனை விடுமுறையாக பயன்படுத்தாமல் வாக்களிப்பதற்கு ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி வாக்களித்து, ஈரோடு மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் அதிகபடியான வாக்கு சதவீதத்தினை அடைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில், அனைத்துத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் ஆகியோர் தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரக கூட்டங்கில் நடைபெற்ற பள்ளி, கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


இதனையடுத்து, தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளி கல்லூரிகளில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி சுவரொட்டி வடிவில் சுவர் இதழ் போட்டி, பாட்டு போட்டி, கடித வரைவு போட்டி, கோலப் போட்டி (மகளிர் சுயஉதவிக்குழு) மற்றும் வினாடி வினா ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

தொடர்ந்து, தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் சிறப்பாக பணியாற்றியமைக்காக கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொறுப்பு அலுவலர்கள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும், சிறந்த தேர்தல் கல்விக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், சிறந்த கல்லூரி வளாக மாணவ தூதுவர் ஆகியோர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.


மேலும், மாற்றுத்திறனாளிகள், பெண் வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள், மூத்த வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோரை பொன்னாடை போர்த்தி, கனிகள் வழங்கி கௌரவித்தார். மேலும் 3 இளம் வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையினை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளாகள் தா.முஹம்மது குதுரத்துல்லா (பொது), பிரேமலதா (நிலம்), மாவட்ட சமூக நல அலுவலர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சண்முகவடிவு, வட்டாட்சியர் (தேர்தல்) சிவசங்கர் உட்பட பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 24 ஜனவரி, 2025

சத்தியமங்கலம்: தாளவாடி அருகே ராகி பயிரால் விபத்தில் சிக்கிய அரசு பேருந்து

சத்தியமங்கலம்: தாளவாடி அருகே ராகி பயிரால் விபத்தில் சிக்கிய அரசு பேருந்து

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள பனங்கள்ளி கிராமத்தில் இருந்து பயணிகளை ஏற்றுக் கொண்டு அரசு பேருந்து ஒன்று தாளவாடி நோக்கி இன்று (ஜன.24) காலை சென்று கொண்டிருந்தது.


அப்போது, மெட்டல்வாடி கிராமம் அருகே வந்த போது, சாலையில் உலர கொட்டப்பட்டு இருந்த ராகி பயிரில் அரசு பேருந்தின் சக்கரம் சிக்கி தாறுமாறாக ஓடி பேருந்து விபத்தில் சிக்கியது. இதில், பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதோடு, அதிஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.

மேலும், கடந்த 16ம் தேதி இதே வழியாக சென்ற கார் கொள்ளு பயிர் டயரில் சிக்கியதால் விபத்து ஏற்பட்டு தீ பிடித்து எரிந்தது. இதில், காரில் இருந்த 7 பேரும் உயிர் தப்பினர். இந்நிலையில், ராகி பயிரால் அரசு பேருந்து விபத்துக்குள்ளாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோட்டில் சேவல் வைத்து மெகா சூதாட்டம் 20 பேர் கைது - ரூ.1.32 லட்சம் பறிமுதல்

ஈரோட்டில் சேவல் வைத்து மெகா சூதாட்டம் 20 பேர் கைது - ரூ.1.32 லட்சம் பறிமுதல்

ஈரோட்டில் சேவல் வைத்து மெகா சூதாட்டம் நடத்திய 20 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.1.32 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு அருகே தொட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் ஒரு கும்பல் சேவல் வைத்து சூதாட்டம் நடத்துவதாக ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது ஓட்டலில் 20 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சேவல் மெகா சூதாட்டம் நடத்திக் கொண்டிருந்தது தெரிய வந்தது.

மேலும் அந்த கும்பல் சேவல்களின் கால்களில் கூறிய கத்தியை கட்டி பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தது. போலீசார் கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்றனர். அது கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் சரவணன் (வயது 45), மூர்த்தி (வயது 44), சிவா (வயது 30), கருப்பண்ணன் (வயது 50), மணிகண்டன் (வயது 30), செந்தில் (வயது 50), ஸ்ரீ ஹரி (வயது 21), பழனிவேல் (வயது 38), கிருஷ்ணராஜ் (வயது 25), ஜெகதீஷ் (வயது 46), தங்கராஜ் (வயது 49), தனசேகரன் (வயது 45), குமார் (வயது 43), தமிழ் (வயது 21), சோமு (வயது 55), குகன் (வயது 35), செந்தில் ராஜா (வயது 41), நாகராஜன் (வயது 44), சுரேஷ்குமார் (வயது 38) மற்றும் ஓட்டல் உரிமையாளர் பிரகாஷ் ஆகியோர் என தெரிய வந்தது.

இதுகுறித்து, தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து 20 பேர் கொண்ட கும்பலை கைது செய்து, அவர்களிடம் இருந்து 12 சேவல்களை பறிமுதல் செய்தனர். மேலும், ரூ.1.32 லட்சம் பணம், 32 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு ரயில் நிலையத்தில் 5வது பிளாட்பாம் அமைக்க ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை

ஈரோடு ரயில் நிலையத்தில் 5வது பிளாட்பாம் அமைக்க ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை

ஈரோடு ரயில் நிலையத்தில் 5வது பிளாட்பாம் அமைக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சருக்கு தெற்கு ரயில்வே ஆலோசனை குழு முன்னாள் உறுப்பினர் கே.என்.பாட்சா கோரிக்கை விடுத்துள்ளார்.
தெற்கு ரயில்வே ஆலோசனை குழு முன்னாள் உறுப்பினர் பாட்சா, மத்திய ரயில்வே துறை அமைச்சர் ஸ்ரீ அஷ்வினி வைஷ்ணவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, ஈரோடு ரயில் நிலையத்தில் 4 பிளாட்பாரங்கள் மட்டுமே உள்ளது. ஈரோடு மிக பெரிய தொழில் நகரமாகும்.

இங்கு ஜவுளி, மஞ்சள், சர்க்கரை ஆலை, பேப்பர் மில், பல் நோக்கு மருத்துவமனைகள், புனித யாத்திரைகளின் மையமாகவும். அதிக மக்கள் தொகை நகரமாகவும் உள்ளது. வியாபார விசயமாக உள்ளூர், வெளியூர், வெளி மாநிலத்தில் இருந்தும் மக்கள் இங்கு வருகிறார்கள். தினசரி ஈரோடு வழியாக 150க்கும் மேற்பட்ட ரயில்கள் நின்று புறப்பட்டு செல்கிறது.

நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் வந்தும், சென்றும் கொண்டு இருக்கிறார்கள். இப்படி சிறப்பு வாய்ந்த ஈரோடு ரயில் நிலையத்தில் நான்கு பிளாட்பாரங்கள் மட்டுமே உள்ளது. தெற்கு ரயில்வேயில் அதிக வருமானம் ஈட்டி தருவது ஈரோடு ரயில் நிலையம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், ரயில்கள் பிளாட்பாரம் பற்றாக்குறையாக உள்ளதால் வரக்கூடிய ரயில்களை பிளாட்பாரம் வசதி இல்லாமல் ரயில்களை அவுட்டரில் நிற்க வைத்து காலதாமதமும், பயணிகளுக்கு இடையூறாகவும் உள்ளது. ஆகவே ஈரோட்டில் ஐந்தாவது பிளாட்பாரமும், நடைமேடையும் அமைத்து கொடுக்க வேண்டும்.

ஏற்காடு எக்ஸ்பிரஸ் ஈரோட்டிலிருந்து சென்னை வரை இயக்கப்படும் இந்த ரயில் ஒன்று தான் ஈரோட்டிலிருந்து இயக்கப்படுகிறது. இந்த வண்டி இரவு 9 மணிக்கு புறப்பட்டு விடியற்காலை 3.45 மணிக்கு சென்னை செல்கிறது. இதனால் அங்கு ஆட்டோ, டாக்ஸி, பஸ் வசதி, தங்குவதற்கு விடுதி வசதியும் இல்லாமல் சிரமப்படுகிறார்கள்.

ஆகவே, இந்த ரயிலை இரவு 10 மணிக்கு இயக்கினால் மிகவும் சௌகரியமாக இருக்கும். ஈரோட்டில் ரயில் ஏறுவதற்கு பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, சத்தி, காங்கயம் ஆகிய பகுதிகளில் இருந்து பயணிகள் முன்கூட்டியே வர சூழ்நிலை உள்ளது. ஆகவே இந்த ரயிலை இரவு 10 மணிக்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை நாகர்கோவில் மற்றும் கோயம்புத்தூரில் இருந்து தூத்துக்குடி லிங்க் எக்ஸ்பிரஸ் தொற்றுநோய்களின் போது நிறுத்தப்பட்டது இதனால் கோவை திருப்பூர், ஈரோடு, மதுரை மாநகராட்சி நகர மக்கள், தூத்துக்குடிக்கு செல்ல சிரமப்படுகின்றனர். எனவே மேற்கண்ட மாநகர பயணிகளின் கருத்தில் கொண்டு கோவையில் இருந்து தூத்துக்குடிக்கு இரவு நேர ரயிலை உடனடியாக இயக்க வேண்டும்.

பழங்கால ஆலயமான மகுடேஸ்வரர் கோயில் பிரபலமானது மாநிலம் முழுவதிலுமிருந்து மக்கள் இந்த கோயிலுக்கு வருவார்கள். எனவே அவர்களின் வசதிக்காக அந்த வழியாக செல்லும் ரயில்களை கொடுமுடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை சேலம் பாசஞ்சர் ரயில் தண்டவாள பராமரிப்பு பணிக்காக கடந்த ஓராண்டு காலமாக நிறுத்தப்பட்டது. இந்த ரெயிலை பொது மக்கள் வசதிக்காக இந்த ரயிலை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வியாழன், 23 ஜனவரி, 2025

ஈரோட்டில் மனிதநேய மக்கள் கட்சி செயல்வீரர்கள் கூட்டம்

ஈரோட்டில் மனிதநேய மக்கள் கட்சி செயல்வீரர்கள் கூட்டம்

ஈரோட்டில் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது 

மனிதநேய மக்கள் கட்சி ஈரோடு கிழக்கு மாவட்டத்தின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சங்கு நகரில் மாவட்ட தலைவர் சித்திக் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் பி.சலீம் வரவேற்புரை ஆற்றினார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆட்டோ சாகுல் அமீது  இறைவசனம் ஓதி துவங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் சு.ராஜ்குமார் கலந்து கொண்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் செயல்பாடுகள் குறித்து நெகிழ்ச்சியுடன் வாழ்த்தி பேசினார்.

மமக மாநில தலைமை பிரதிநிதிகள் சுல்தான் அமீர் மற்றும் முஹம்மது ரிஸ்வான் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதனைத் தொடர்ந்து தலைமை கழக பேச்சாளர் கோவை செய்யது அவர்கள் பாசிச பாஜக ஒன்றிய அரசின் அராஜக ஆட்சியை பற்றியும், முஸ்லிம்களின் இன்றைய அரசியல் நிலைப்பாடு பற்றியும் எழுச்சி உரையாற்றினார்.

மமக மாநில செயற்குழு உறுப்பினர் அமீர், மருத்துவ சேவை அணி மாநில துணை செயலாளர் பௌஜூல் ஹஸன், கரூர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது, மமக மாவட்ட துணை செயலாளர்கள் சாகுல் ஹமீது, தஸ்ருதீன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சாகுல் அமீது, இஸ்மாயில், தகவல் தொழில் நுட்ப அணி கோவை மண்டல செயலாளர் க.முஹம்மத் உமர் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.
இந்நிகழ்வில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த கழக போராளிகள் ஈரோடு கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், மாநில தலைமை பிரதிநிதியுமான சுல்தான் அமீர் முன்னிலையில் தங்களை மனிதநேய மக்கள் கட்சியில் இணைத்துக் கொண்டனர். 

இறுதியாக மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணை தலைவர் சுல்தான் அலாவுதீன் நன்றியுரை ஆற்றினார்.

இந்த சிறப்பு வாய்ந்த மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் மாவட்ட துணை & அணி நிர்வாகிகள், கழகத்தின் தூண்களான அனைத்து கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.