Latest

வெள்ளி, 17 ஜூலை, 2026

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினைஞர் நல சங்க தலைவர்.

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினைஞர் நல சங்க தலைவர்.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினைஞர் நல சங்க தலைவர்.

வெள்ளி கொலுசு உற்பத்தி என்பது உருக்குதல், கம்பி இழுத்தல், வடிவமைப்பு செய்தல், இணைத்தல், மற்றும் பாலிஷ் செய்தல் ஆகிய பல கட்டங்களைக் கொண்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்ப்பேட்டை, சிவதாபுரம், குகை போன்ற பகுதிகளில் இத்தொழில் பாரம்பரியமாக கைவினைப் பொருட்களாகவும், நவீன இயந்திரங்கள் மூலமாகவும் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது.வெள்ளி கொலுசு தயாரிக்கும் செயல்முறை உருக்குதல் மற்றும் கலவை (Melting & Alloying): சுத்தமான வெள்ளி, அதனுடன் கடினத்தன்மை மற்றும் உறுதி சேர்க்க குறிப்பிட்ட அளவு செம்பு அல்லது பித்தளை சேர்த்து உயர் வெப்பநிலையில் உருக்கப்பட்டு கட்டிகளாக (Ingots) மாற்றப்படுகிறது. கம்பி இழுத்தல் (Wire Drawing)  வெள்ளிக் கட்டிகள் இயந்திரங்கள் அல்லது உருளைகள் மூலம் மெல்லிய கம்பிகளாக மாற்றப்படுகின்றன. கொலுசின் வடிவத்திற்கு ஏற்ப கம்பியின் தடிமன் தீர்மானிக்கப்படுகிறது. வடிவமைப்பு மற்றும் இணைப்பு (Design & Assembly): மெல்லிய கம்பிகள் முறுக்கப்பட்டு, சிறிய சங்கிலிகளாகவோ அல்லது கொக்கிகளாகவோ வடிவமைக்கப்படுகின்றன. பாரம்பரிய கொலுசுகளில் மணிகள் (குப்பம்) இணைக்கும் பணி கையால் செய்யப்படுகிறது. சோல்டரிங் (Soldering) இணைக்கப்பட்ட பாகங்கள் உறுதியாக ஒட்டிக்கொள்ள மெல்லிய வெள்ளி/செம்பு உலோகக்கலவை கொண்டு சூடுபடுத்தப்பட்டு இணைக்கப்படுகின்றன.பாலிஷ் செய்தல் (Buffing & Polishing): கொலுசுகளுக்கு பளபளப்பான தோற்றத்தை கொடுக்க, ரசாயன கலவைகளுடன் கூடிய பஃபர் (Buffing) இயந்திரங்களைக் கொண்டு தேய்த்து மெருகூட்டப்படுகிறது. தரம் மற்றும் முத்திரை (Hallmarking): இறுதியாக, கொலுசின் தரம் பரிசோதிக்கப்பட்டு ஹால்மார்க் முத்திரை இடப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. 
இந்த நிலையில் வெள்ளி விற்பனையை ஆன்லைனில் மத்திய அரசு கொண்டு வந்தது, இதன் காரணமாக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெள்ளியின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெள்ளித் தொழில் முழுமையுமாக சேலம் மாவட்டத்தில் நலிவடைந்து விட்டது என்றே கூறலாம். என்றாலும் வெள்ளி தொழில் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் தீர்க்கப்படாத கோரிக்கைகள் எவ்வளவோ இருந்தாலுமே கூட அதில் முக்கியமாக சேலத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளிப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் வெள்ளி மற்றும் தங்கவேல் நகை செய்யும் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்பன கோரிக்கைகள் தற்பொழுது  பிரதானமாக எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினைஞர் நல சங்கத்தின் தலைவர் ஸ்ரீ ஆனந்தராஜன் இந்த இரண்டு கோரிக்கைகள் தொடர்பாக ஏற்கனவே சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கையை மனமும் கொடுத்துள்ளார். இந்த நிலையில் ஸ்ரீ ஆனந்தராஜன் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதனிடையே மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்ட கோரிக்கை மனு குறித்தும் ஏற்கனவே வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் தீர்க்கப்படாத பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் ஸ்ரீ ஆனந்தராஜன் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் இடம் பேசியதாகவும் கூறப்படுகிறது.
சேலம் கெங்கவல்லியில் அம்பேத்கர் சிலை விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலத்தில் இந்திய குடியரசு கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

சேலம் கெங்கவல்லியில் அம்பேத்கர் சிலை விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலத்தில் இந்திய குடியரசு கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.


சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சேலம் கெங்கவல்லியில் அம்பேத்கர் சிலை விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலத்தில் இந்திய குடியரசு கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

இந்திய குடியரசு கட்சியின் சேலம் மண்டலத்தின் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம், சேலம் மண்டல செயலாளர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. கெங்கவல்லி ஒன்றியத்திற்குட்பட்ட ஒதியத்தூரில் டாக்டர் அம்பேத்கர் சிலையை பேரூராட்சி நிர்வாகம் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், தலித் சமூகத்தைச் சேர்ந்த 15 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் பொய் வழக்குகளை ரத்து செய்து, அவர்களை உடனடியாக விடுதலை செய்ய தமிழக முதலமைச்சர் தலையிட வேண்டும் எனக் கோரியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர். மேலும், கட்சி சார்பில் முன்வைக்கப்பட்ட 9 தீர்மானங்களை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் மங்காப்பிள்ளை, மாநில பொருளாளர் கௌரிசங்கர், மாநில துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநில பொறுப்பாளர் வணங்காமுடி கருத்துரையாற்றினார். மாவட்டத் தலைவர் கணேசன் வரவேற்புரையாற்றினார்.
மாவட்ட செயலாளர்கள் தீனா, ரவிக்குமார், மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக விழுப்புரம் மண்டல செயலாளர் இருவேல்பட்டு குமார், மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன், தர்மபுரி மாவட்டத் தலைவர் பழனிச்சாமி, கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் கண்ணப்பன், மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வீரப்பன், மாவட்ட அமைப்பு செயலாளர் ரஜினி, பச்சைப்பட்டி குமார், பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலாளர் வக்கீல், துணைத் தலைவர் சந்தோஷ், இ.ஆ.து. செயலாளர் விஜய பிரபாகரன் மற்றும் தாசநாயக்கன்பட்டி காந்திபுரம் கிளை செயலாளர் பழனிச்சாமி, ராசநாயக்கன்பட்டி பகுதி செயலாளர் சுபாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநகர பொருளாளர் தலித் ராஜு நன்றியுரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய குடியரசு கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் தென்னை மற்றும் பனை மரத்தில் இருந்து இறக்கும் கள்ளுக்கு உண்டான தடையை ஏன் நீக்கவில்லை. த.வெ.க அரசுக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி கேள்வி. நீக்காததற்கு உண்டான காரணத்தையும் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்.

தமிழகத்தில் தென்னை மற்றும் பனை மரத்தில் இருந்து இறக்கும் கள்ளுக்கு உண்டான தடையை ஏன் நீக்கவில்லை. த.வெ.க அரசுக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி கேள்வி. நீக்காததற்கு உண்டான காரணத்தையும் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு.

தமிழகத்தில் தென்னை மற்றும் பனை மரத்தில் இருந்து இறக்கும் கள்ளுக்கு உண்டான தடையை ஏன் நீக்கவில்லை. த.வெ.க அரசுக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி கேள்வி. நீக்காததற்கு உண்டான காரணத்தையும் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்.

தமிழகத்தில் ஆட்சி பொறுப்பு ஏற்ற உடன் தமிழக அரசு தமிழகத்தில் உள்ள 717 அரசு மதுபான கடைகளை முடியாது. இந்த நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறப்பது தொடர்பாக தமிழக அரசு இன்று புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் வேலுச்சாமி த.வெ.க தலைமையிலான தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியத்துடன் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். 
அந்த அறிக்கையில், தமிழகத்தை ஒட்டியுள்ள  கேரளம், பாண்டிச்சேரி, ஆந்திரா ஆகிய அண்டை மாநிலங்களைப் போல் தமிழ்நாடு அரசும் டாஸ்மாக் மூலம் உணவகத்துடன் கூடிய மதுக்கடை நடத்தும் என்ற அறிவிப்பு வெளியிட்ட தவெக அரசு,  அதே அண்டை மாநிலங்களில் உள்ளதைப் போல் தமிழக விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான தென்னை மற்றும் பனை மரத்தில் இருந்து இறக்கும் கள்ளுக்கு உண்டான தடையை ஏன் நீக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி, தடை நீக்கத்திற்கான காரணத்தை தமிழக விவசாயிகளுக்கு த.வெ.க அரசு தெரிவிக்க வேண்டும் என்று  உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் இந்த அறிக்கையின் வாயிலாக  கேட்டுக்கொள்கிறேன் என்று மாநிலத் தலைவர் வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.

வியாழன், 16 ஜூலை, 2026

ஆடி முதல் நாளில் பொதுமக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து தேங்காய் சுட்டு இறைவனுக்கு படையலிட்டு வழிபாடு நடத்திய மாமன்ற உறுப்பினர்.

ஆடி முதல் நாளில் பொதுமக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து தேங்காய் சுட்டு இறைவனுக்கு படையலிட்டு வழிபாடு நடத்திய மாமன்ற உறுப்பினர்.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

ஆடி முதல் நாளில் பொதுமக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுடன் தேங்காய் சுட்டு இறைவனுக்கு படையலிட்டு வழிபாடு நடத்திய மாமன்ற உறுப்பினர். 

ஆடி முதல் நாளன்று சேலம் மற்றும் கொங்கு மண்டலப் பகுதிகளில் 'தேங்காய் சுடும் பண்டிகை' கொண்டாடப்படுகிறது. அதர்மத்தை வெல்ல மகாபாரதப் போர் ஆடி 1-ல் தொடங்கியபோது, பாண்டவர்கள் வெற்றி வேண்டி காளி மற்றும் விநாயகரை வழிபட்டதன் அடையாளமாக இது கருதப்படுகிறது. தேய்க்கப்பட்ட தேங்காயினுள் வெல்லம், அவல், பருப்பு உள்ளிட்டவை நிரப்பி நெருப்பில் சுடப்பட்டு பிரசாதமாக படைக்கப்படுகிறது.வரலாறு மற்றும் ஐதீகம்:மகாபாரதப் போர் குருக்ஷேத்திரத்தில் ஆடி மாதம் முதல் தேதியன்று தொடங்கியதாக நம்பப்படுகிறது. இந்தப் போரில் அதர்மம் அழிந்து தர்மம் வெல்ல வேண்டும் என்பதற்காக, பாண்டவர்கள் கிருஷ்ணனின் அறிவுறுத்தலின்படி விநாயகரையும் மற்ற தெய்வங்களையும் வேண்டி விரதம் இருந்தனர். அப்போது, பல மங்களப் பொருட்களைத் தேங்காய்க்குள் வைத்து அதை நெருப்பில் சுட்டு படையலாக இட்டதாகவும், அதன் பின்னரே போர் தொடங்கியதாகவும் ஐதீகம் உள்ளது. இந்த வரலாற்று நிகழ்வை நினைவுபடுத்தும் வகையிலும், விவசாயம் செழிக்கவும், குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கவும் மக்கள் இன்றும் இதனைக் கடைப்பிடிக்கின்றனர்.கொண்டாடும் முறை:பூரணம் தயாரித்தல்: முழுத் தேங்காயின் மேல்தோலைச் சற்றுத் தேய்த்து, அதன் ஒரு கண்ணைத் துளையிட்டு நீர் வெளியேற்றப்படும்.பின்னர் அத்துளை வழியாகப் பச்சரிசி, வெல்லம், பருப்பு, பொட்டுக்கடலை, எள், அவல் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்து நிரப்புவார்கள்.நீண்ட குச்சியில் தேங்காயைக் குத்தி, வீட்டின் வாசலில் மூட்டப்படும் நெருப்பில் சுடுவார்கள்.நெருப்பின் வெப்பத்தில் உள்ளே இருக்கும் வெல்லம் உருகி, சுவையான பிரசாதமாக மாறும். பின்னர் இது குடும்பத்தினருக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. 
அந்த வகையில் சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் புத்து மாரியம்மன் கோவில் அருகே, சிறந்த வழக்கறிஞர், மிகச் சிறந்த சமூக சேவகர் மற்றும் சேலம் மாநகராட்சி ஒன்பதாவது கோட்டை மாமன்ற உறுப்பினர் என்று பன்முகம் கொண்ட தெய்வேலிங்கம் தனது தனது 9-வது கோட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுடன்  இணைந்து ஆடி பண்டிகையை வரவேற்கும் விதமாக முதல் நாளான இன்று தேங்காய் சுட்டு இறைவனுக்கு படைப்பு சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். இந்த நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கத்தின் குடும்பத்தார் உட்பட பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

புதன், 15 ஜூலை, 2026

காவிரி நீர் விவகாரம்: தமிழக எல்லை ஓசூரில் விவசாயிகள் அதிரடி போராட்டம். கர்நாடகா நோக்கிச் சென்ற நூற்றுக்கணக்கான தமிழக விவசாய பெருங்குடி மக்கள்  கைது!

காவிரி நீர் விவகாரம்: தமிழக எல்லை ஓசூரில் விவசாயிகள் அதிரடி போராட்டம். கர்நாடகா நோக்கிச் சென்ற நூற்றுக்கணக்கான தமிழக விவசாய பெருங்குடி மக்கள் கைது!

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

காவிரி நீர் விவகாரம்: தமிழக எல்லை ஓசூரில் விவசாயிகள் அதிரடி போராட்டம். கர்நாடகா நோக்கிச் சென்ற நூற்றுக்கணக்கான தமிழக விவசாய பெருங்குடி மக்கள்  கைது!

காவிரி நீரைத் திறக்கக் கோரி தமிழக எல்லையான ஓசூரில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு!

கர்நாடக அணை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்ற விவசாயிகளைத் தடுத்து நிறுத்திய போலீசாருடன் தள்ளுமுள்ளு!

விதிகளை மீறிச் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் ஒட்டுமொத்தமாகக் கைது!

"தண்ணீர் தராவிட்டால் ₹1 லட்சம் கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடருவோம்" - அய்யாக்கண்ணு அதிரடி பேட்டி!*

"ஏரோட்டம் இல்லையென்றால் கோட்டையில் காரோட்டம் இல்லை" - தமிழக அரசுக்கு விவசாயச் சங்கத் தலைவர் வேலுசாமி எச்சரிக்கை!.

காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழக-கர்நாடக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இன்று பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. இந்த ஆண்டுக்குரிய காவிரித் தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடாததைக் கண்டித்து, தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு விவசாயிகள் சங்க அமைப்புகள் ஒன்றிணைந்து கர்நாடக எல்லையை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்றனர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான தள்ளுமுள்ளைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம், இளம் விவசாயிகள் சங்கம், விவசாய முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்புகள் இந்தத் தொடர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.
காவிரியை நீர் ஆதாரமாகக் கொண்டுள்ள தமிழகத்தின் 22 மாவட்டங்களைச் சேர்ந்த பாசன விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் என நூற்றுக்கணக்கானோர் இன்று காலை ஓசூர் மூக்கண்டப்பள்ளி தோப்பு மாரியம்மன் கோவில் வளாகத்தில் திரண்டனர்.

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி தலைமையிலும், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிறுவனர் அய்யாக்கண்ணு முன்னிலையிலும் இப்பேரணி தொடங்கியது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாகக் கர்நாடக மாநிலத்திற்குள் நுழைந்து, அங்குள்ள அணைகளை முற்றுகையிட்டுத் தண்ணீரைத் திறப்பதுதான் தங்களின் இலக்கு என முழக்கமிட்டவாறு விவசாயிகள் முன்னேறினர்.
இருப்பினும், பேரணி ஓசூர் இ.எஸ்.ஐ ரிங் ரோடு சாலை சந்திப்புப் பகுதியை அடைந்தபோது, அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு அரண் அமைத்து விவசாயிகளைத் தடுத்து நிறுத்தினர். 

இதனால் இருதரப்பிற்கும் இடையே கடுமையான வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. எல்லையைத் தாண்ட போலீஸ் அனுமதி மறுத்ததால், ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலையிலேயே அமர்ந்து கர்நாடக மற்றும் மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

இதனைத் தொடர்ந்து, சாலையில் மறியலில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு, வேலுசாமி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகளைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்து தனியார் மண்டபங்களில் தங்கவைத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிறுவனர் அய்யாக்கண்ணு 

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா மாதா மாதம் தண்ணீர் திறந்து விட்டால், தமிழகத்தின் 28 மாவட்டங்களின் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும்; விவசாயிகளும் குறுவை, சம்பா, கோடை சாகுபடியைச் செய்ய முடியும். ஆனால், கர்நாடகா தண்ணீர் தராததால் டெல்டா பகுதியை வறட்சியாக்கி, அங்கிருந்து மீத்தேன், பெட்ரோல், டீசல் எடுக்க மத்திய அரசு வஞ்சிக்கிறது.
இங்கிருக்கும் தமிழக அரசோ, தண்ணீர் வராத நேரத்தில் மணல் விற்கப் பார்க்கிறது. ஏற்கனவே முசிறி முதல் வாத்தலை வரை மணல் அள்ளியதால் 50,000 தென்னை மரங்களும், காவிரி-கொள்ளிடம் கரைகளில் இருந்த லட்சக்கணக்கான பனை மரங்களும் காய்ந்து இயற்கையே அழிந்துவிட்டது. மீண்டும் அத்தகைய சூழலை உருவாக்கக் கூடாது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசுக்கு எதிராக நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளோம். விவசாயிகளுக்குக் ஏற்பட்ட இழப்பீடாக ₹1 லட்சம் கோடி நஷ்டஈடு வேண்டும், ஒரு விவசாயிக்கு ₹50,000 வழங்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்யவுள்ளோம். மேலும், கோதாவரி - காவிரி இணைப்பின் மூலம் 1,000 டிஎம்சி தண்ணீர் தருவதாகக் கூறிய வாக்குறுதியையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை. 

அமெரிக்காவில் ஒப்பந்தம் செய்து இறக்குமதி செய்யப்படும் மரபணு மாற்றப்பட்ட உணவுகளால் (GM Seeds) இளம்தலைமுறையினருக்குப் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதையெல்லாம் கண்டித்து எங்கள் போராட்டம் டெல்லியிலும் சென்னையிலும் தொடரும்.

அதேபோல தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி அளித்த பேட்டியில், 

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடகா தண்ணீர் தர மறுக்கிறது. இதுகுறித்துத் தமிழக அரசிடம் முறையிட்டால், செவிடன் காதில் சங்கூதியது போல மெத்தனமாக இருக்கிறது. விவசாயிகளின் கோரிக்கையைத் தற்போதைய அரசு முற்றிலும் மறந்துவிட்டது. அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், எல்லையைத் தாண்டிச் சென்று அணைகளின் ஷட்டர்களை உடைத்தாவது தண்ணீரைத் திறக்க வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் வந்தோம். ஆனால், தமிழக அரசு தன் காவல்துறையை ஏவல்துறையாகப் பயன்படுத்தி விவசாயிகளின் குரல்வளையை நசுக்குகிறது.
விவசாயிகளை ஏளனமாக நினைக்கும் இந்த அரசுக்கு ஒன்று கூறிக்கொள்கிறோம்... 'விவசாயிகளின் ஏரோட்டம் இல்லை என்றால், கோட்டையிலே ஆட்சியாளர்களுக்குக் காரோட்டம் இல்லை'. வரும் தேர்தல்களில் அரசியல்வாதிகள் ஓட்டுக் கேட்டு வரும்போது விவசாயிகள் அவர்களை விரட்டியடிப்பார்கள். காவிரியிலிருந்து கொள்ளை லாபத்திற்காக மணல் அள்ளும் குவாரிகளைத் திறக்க அரசு முயன்றால், விவசாயிகள் சங்கம் அதற்குப் பூட்டுப் போடும் மூடுவிழாவை நடத்தும் என எச்சரிக்கிறோம்.

கர்நாடக அரசிடமிருந்து உரிய காவிரித் தண்ணீரைப் பெற்றுத் தரக் கோரியும், காவிரிப் படுகையில் மணல் அள்ளக் கூடாது என வலியுறுத்தியும் எல்லையில் விவசாயிகள் நடத்திய இந்தப் போராட்டம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதான விவசாயிகள் தங்களின் போராட்டம் ஓயாது என்றும், அடுத்தகட்டமாகச் சென்னை மற்றும் டெல்லியில் பெருந்திரள் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
 
அய்யாக்கண்ணு, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிறுவனர் 
வேலுசாமி, மாநிலத் தலைவர், உழவர் பேரியக்கதலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.


பாட்டாளி மக்கள் கட்சி மருத்துவர் ராமதாஸ் அணியில் இருந்த நிர்வாகிகள் முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல் ....16ஆம் தேதி காலை பிசிசி திருமண மண்டபத்தில் தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் வருகை தர உள்ளதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் பேட்டி....

பாட்டாளி மக்கள் கட்சி மருத்துவர் ராமதாஸ் அணியில் இருந்த நிர்வாகிகள் முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல் ....16ஆம் தேதி காலை பிசிசி திருமண மண்டபத்தில் தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் வருகை தர உள்ளதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் பேட்டி....

சேலம்,
S.K. சுரேஷ் பாபு. 

பாட்டாளி மக்கள் கட்சி மருத்துவர் ராமதாஸ் அணியில் இருந்த நிர்வாகிகள் முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல் ....
16ஆம் தேதி காலை பிசிசி திருமண மண்டபத்தில் தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் வருகை தர உள்ளதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் பேட்டி....

அரசியல் துரோகம் என ராமதாஸ் தெரிவித்தது தொடர்ந்து நாங்கள் என்ன செய்வது என தெரியவில்லை - அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய நிர்வாகிகள் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது - தமிழகம் முழுவதும் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர் அடுத்த கட்ட முடிவுகள் குறித்து இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் தெரிவித்தார்
மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர் அவர்களின் ஆலோசனை கேட்ட பிறகு முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். டாக்டர் அன்புமணி ராமதாஸ் ராமதாஸ் இருவரும் பிரியவே கூடாது என நாங்கள் வலியுறுத்தினோம் 5.8 சதவீதம் வாக்குகள் உள்ள பாட்டாளி மக்கள் கட்சிகளின் வாக்குகள் சிதறும் என தெரிவித்தோம் நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் மேற்பட்ட நிர்வாகிகள் வருவார்கள் அவர்களுக்கு ஒரு சீட்டு கொடுக்கப்படும் அதில் தங்களது கருத்துக்கள் தெரிவிக்க வலியுறுத்த உள்ளம் என தெரிவித்தார்.
பெரும்பாலான பொறுப்பாளர்கள் பாமக கட்சியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினால் அவர்களின் முடிவு அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். அருள் ஜி கே மணி இருவரும் அன்புமணியை அதிகம் விமர்சித்துஉள்ளீர்கள் தற்போது பாமகவில் உங்களை அவர்கள் நினைத்துக் கொள்ள அன்புமணி ஒத்துக் கொள்வாரா என கேட்ட கேள்விக்கு நாங்கள் பெரிய தவறு ஒன்றும் செய்யவில்லை என தெரிவித்தார் அன்புமணி சம்பந்தமாக நான் பேசிய அனைத்து உரையாடல்களும் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கூறிய நாங்கள் பேசினோம் எனவும் தெரிவித்தார். தந்தை மகன் இருவரும் இணைந்த பிறகு மருத்துவர் ராமதாசை தனியாக தன்னை சந்திக்க அனுமதிக்கவில்லை என அருள் தெரிவித்தார். ஜிகே மணி மற்றும் காந்திமதி அவர்களுக்கு நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அழைப்பு கொடுத்துள்ளோம் என தெரிவித்தார்.
நாளை கட்சி துவங்கி 38 ஆண்டுகள் துவங்க உள்ளது இனிப்புகள் வழங்கி கொண்டாடும் நிகழ்ச்சி நாளை நடைபெறும் எனவும் தெரிவித்தார் மருத்துவர் ராமதாஸ் அவர்களுடன் 40 ஆண்டுகளாக பயணித்த அனைவரும் நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்பார்கள் எனவும் தெரிவித்தார்.
சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா

சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா

சேலம்,
S.K. சுரேஷ் பாபு. 

சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா

சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் விதமாக 15.07.2026 புதன்கிழமை  காலை 10.00 மணியளவில்  கல்லூரியின் ஸ்ரீ வள்ளியப்பா கலையரங்க கூடத்தில் நடைபெற்றது. கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் விதமாக நடைபெற்ற இந்த விழா குத்துவிளக்கேற்றுதலில்  துவங்கி இனிதே ஆரம்பமானது.  கல்லூரியின் ஆங்கிலத்துறை தலைவர் முனைவர். ஜி.அனுராதா அவர்கள் அனைத்து  மாணவர்களையும் வரவேற்றார். கல்லூரியின் தலைவர் திரு சொ.வள்ளியப்பா அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரியின் துணைத் தலைவர்கள் திரு.சொக்கு வள்ளியப்பா, திரு . தியாகு வள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சோனா தொழில்நுட்பக் கல்லூரி  முதல்வர் முனைவர். எஸ் . ஆர்.ஆர் செந்தில்குமார் அவர்கள்  மற்றும் தியாகராஜா பல்தொழில் நுட்பக் கல்லூரி , வள்ளியப்பா பப்ளிக் பள்ளியின் இயக்குநர் முனைவர். வி.கார்த்திகேயன் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர். கல்லூரியின் முதல்வர் முனைவர் கு.மை காதர் நவாஸ் அவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களையும் அவர்களின்  பெற்றோர்களையும் வரவேற்று பேசினார்.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த திரு. ஜெய் கிருஷ்ணன் Partner & Head of investments, Beyond Next Ventures, Bengaluru  அவர்கள் பெற்றோர் மாணவர்களிடையே சிறப்புரை நிகழ்த்தினார். பள்ளி காலத்தில் இருந்து கல்லூரி வாழ்க்கைக்கு அடி எடுத்து வைக்கும் சிறப்பினையும், மாணவர்கள் எவ்வாறு தங்களது திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் குறித்து பேசினார். கல்லூரியின் தலைவர் திரு . சொ.வள்ளியப்பா அவர்கள் பேசும் பொழுது மாணவர்கள் கல்லூரி பருவத்தை நன்முறையில் அமைந்து கொண்டு பெற்றோர்களைப் பேணி பாதுகாக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
இந்த நிகழ்வின் நிறைவாக உயிர்த்தொழில் நுட்பவியல் துறைத்தலைவர் முனைவர். எம் .புவனேஸ்வரி அவர்கள் நன்றி உரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சியுடன் கலந்துகொண்டு பெருமை சேர்த்தனர்.