சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
மாம்பழம் அழுகிவிட்டது என்று கூறிய சிட்டிங் எம்எல்ஏ அருள் பிரச்சாரம். சேலத்திற்கு பெயர் பெற்றுத்தந்த மாங்கனியின் சீசன் காலம் தற்பொழுது தான், பூத்து, குலுங்கி, காய்த்து, பழுத்து, அமோக விளைச்சல் கொடுக்கும் என்று சேலம் மேற்கு தொகுதி NDA கூட்டணி வேட்பாளர் மு. கார்த்தி கவுண்ட்டர்.. ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் உற்சாகம்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழக முழுவதும் நடைபெற உள்ளது. இந்திய மற்றும் தமிழக தலைமை தேர்தல் ஆணையங்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 11 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சேலம் மாவட்டத்தில், NDA கூட்டணியில் பாமகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மு. கார்த்தி சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிடுகின்றார். கடந்த 10 நாட்களாக மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் நல்லாட்சி மலர்ந்திடவும், அவரது ஆசி பெற்ற சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி பாமக உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மு கார்த்தி,
இன்று சேலம் பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து தனது வாக்கு சேகரிப்பு பணியை கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் தொடங்கிய அவர், தளவாய்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகள் பின்னர் சர்க்கார் கொல்லப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுக்காடு பகுதியில் தனது வாக்கு சேகரிப்பு பணியினை நண்பகல் முடித்தார். அப்போது கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் திறந்தவெளி வாகனத்திலும், ஒரு சில பகுதிகளில் நடந்தே சென்றும் மாம்பழம் சின்னத்தில் தன்னை மாபெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டார். என் டி ஏ கூட்டணி கட்சி நிர்வாகிகள் புடை சூழ மேற்கு தொகுதி பாமக வேட்பாளர் கார்த்தி சென்ற இடங்கள் வழி நெடுங்கிலும் பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர்களை வாரி இறைத்தும், வீட்டின் மொட்டை மாடியில் இருந்து மலர்களை தூவியும் பட்டாசுகளை வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது அவர் செய்தியாளரிடம் கூறுகையில், மேற்கு தொகுதி தொகுதியை பொருத்தவரை தற்பொழுது சட்டமன்ற உறுப்பினராக உள்ள இரா அருள் மாம்பழம் அழுகிவிட்டதாகவும், அதனால் தனக்கு சிலிண்டர் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டது குறித்து சில மேற்கு தொகுதி பாமக வேட்பாளர் மு கார்த்தி அவர்களிடம் கேட்டபோது, சேலம் மாநகருக்கு பெயர் ஈட்டி தந்தது மாங்கனி என்றும் தற்பொழுதும் மாங்கனி மாநகரம் தான் என்று சேலத்தை புகழ் பாடி வருகின்றனர் தற்பொழுது தான் சேலத்தில் மாம்பழம் சீசன் தொடங்கியுள்ளது, வரும் காலங்களில் பூத்து காய்த்து குலுங்கி பழுத்து மாபெரும் விளைச்சலை தரும் அப்பொழுது அழுகிய மாம்பழம் என்று கூறிய இரா அருள் என்ன பதில் கூறுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று தெரிவித்தார்.
பொதுமக்கள் மத்தியில் கூறி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தற்பொழுதைய மேற்கு தொகுதி வேட்பாளர் மாண மு கார்த்தி இரா அருள் அவர்களுக்கு பதிலடி கொடுத்தார். இது அங்கு கூடி இருந்த ஆயிரக்கணக்கான வாக்காளர் பெருமக்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்ற தாய் என தெரியவில்லை அனைவரும் உடனடியாக கரகோஷங்களை எழுப்பியது விண்ணை பிளக்கும் வகையில் அமைந்திருந்தது. மேற்கு தொகுதி பாமக வேட்பாளர் மு கார்த்தி அவர்களின் சுற்றுப்பயணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அந்த பகுதியை சேர்ந்த கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பாமகவை சார்ந்த கார்த்திகை மற்றும் கோபால் உள்ளிட்ட மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.


