சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
10 அம்ச கோரிக்கைகள் எந்த அரசியல் கட்சிகளும் ஏற்காததன் எதிரொலி. தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி தமிழக வாக்காளர்களுக்கு வேண்டுகோள்.
தேசிய ஒடக்கப்பட்ட மக்கள் குடியரசின்
நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியின மக்கள் மற்றும் பட்டியலின மக்களின் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி அவர்களுக்கான உரிமைகளையும் பெற்று தந்தவர். அந்த வகையில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் 10 கோரிக்கைகள் எந்த அரசியல் கட்சிகளும் ஏற்க மறுக்கின்றது என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அந்த பத்து கோரிக்கைகளையும் பதிவிட்டுள்ள சரஸ்ராம் ரவி, 12 லட்சம் எக்டர் பஞ்சமி நிலம் மீட்க தேர்தல் அறிக்கை, 75000 SC/ ST காலி பினலனிடைவு இடங்களை நிரப ப உறுதி, தாட்கோ கடன் வழங்க 38 மாவட டத்திலும் தனி வங்கி, தமிழகம் முழவதும் டோல் கேட் வரி தடை, மண்டல் கமிஷன் இட ஒதுக்கீடு சதவீத்த்தை தமிழக அனைத்து அரசு துறைகளிலும் நிரப்பிடுக, தமிழகம் முழுவதும் சட்ட கல்லூரியில் படிக்க Entrance test நீக்கி மாணவர்கள் எடுத்த +2 மதிப்பெண் அடிப்படையில் இடம் கொடு, ஆணவ படுகொலைகள் தடுக்க தனி சட்டம். ( தெலுங்கானாவில் தற்சமயம் கொண்டு வரபட்டுள்ளது ), அரசு பொது துறை நிறுவனங்களை தனியாரிடம் தாரைவார்க்க கூடாது, இரயில்வே துறையில் மட்டும் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் நிரப்ப்பட வேண்டும், அரசுப் போக்குவரத்து / மின் வாரியம் துறையை நவீன படுத்தி தொழிலாளர்களின் உரிமைகள் -நலன்கள் பாதுகாத்திட வேண்டும்,
டாஸ்மாக் நிறுவனத்தை மூட வேண்டும் . அரசு சாராயம் விற்க கூடாது, டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்று துறையில் பதவி வழங்கிட வேண்டும் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இரண்டு வருடத்திற்கு மேல் ஒரு இடத்தில் பணி அமர்த்த கூடாது இடம் மாற்றம். செய்ய வேண்டும், அரசு புறம்போக்கு நிலங்கள் தனியாருக்கு பட்டா வழங்கி ஊழல் செய்யும் அதிகாரிகளை 6 மாதம் ஒரு முறை ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், பத்திரிக்கை - ஊடகம் நிருபர்கள் - ஊழியர்கள் நல வாரியம் ஏற்படுத்தி அவர்களது குடும்பம் பொருளாதார வளர்ச்சி பெற அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ( தனி வீடு- வட்டியில்லா கல்வி கடன் - வட்டியில்லா வாகன கடன் வழங்க வேண்டும் 38 மாவட்டத்திலும் ) என்று குறிப்பிட்டுள்ள தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவன தலைவர் சரஸ்ராம் ரவி, நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்றும் ஆனால் இந்த பத்தம் சொ கோரிக்கைகளை எந்த அரசியல் கட்சியும் ஏற்காததால் அனைவரும் நோட்டாவிற்கு வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்துள்ளார்.


