Latest

ஞாயிறு, 6 ஜூலை, 2025

இஸ்லாமியர்களின் தியாக திருநாளில் இறைத்தூதரின் பேரன்களுக்காக இஸ்லாமிய இளைஞர்களின் தியாகத்தை போற்றிப் பாராட்டிய சேலம் கோட்டை பகுதியை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஷபி.

இஸ்லாமியர்களின் தியாக திருநாளில் இறைத்தூதரின் பேரன்களுக்காக இஸ்லாமிய இளைஞர்களின் தியாகத்தை போற்றிப் பாராட்டிய சேலம் கோட்டை பகுதியை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஷபி.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

இஸ்லாமியர்களின் தியாக திருநாளில் இறைத்தூதரின் பேரன்களுக்காக இஸ்லாமிய இளைஞர்களின் தியாகத்தை போற்றிப் பாராட்டிய சேலம் கோட்டை பகுதியை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஷபி.

இஸ்லாமியர்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மொஹரம் திருநாள் உலக இஸ்லாமியர்களால் கடைபிடிக்கப்பட்டு  வருகிறது. இறைதூதர் நபிகள் நாயகத்தின் பேரர்களான ஹசேன் மற்றும் உசேன் கொல்லப்பட்டதை நினைவு கூறும் விதமாகவும், அவர்களது தியாகத்தை போற்றும் விதமாக கொண்டாடப்படும் இந்த திருநாளையொட்டி சேலத்தில் இஸ்லாமியர்களால் கடைபிடிக்கப்பட்டது. தியாகத் திருநாளாக கருதப்படும் இந்த மொகரம் விழாவையொட்டி சேலம் கோட்டை சுன்னத் ஜமாத் சார்பில் புலி ஆட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் கோட்டை பகுதியில் உள்ள ஃபிரண்ட்ஸ் மஹாலில் துவங்கிய இந்த புலி ஆட்ட நிகழ்வில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புலிவேடமிட்டு மேளதாளம் இசைக்கு ஏற்றவாறு புலி நடனமாடி இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் பேரர்களின்  தியாகத்தை போற்றினார். கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த புலி நடன ஊர்வலமானது அந்த பகுதியில் உள்ள மிகச்சிறந்த சமூக செயற்பாட்டாளர் தன்னிறன் பாராமல் பொதுநலன் கருதி ஏழை எளிய இஸ்லாமிய மக்களுக்கு மட்டுமல்லாமல் ஏனைய மக்களுக்கும் இதுவரை சேவை செய்து வரும் கோட்டை பகுதியை சேர்ந்து சிறந்த சமூக செயற்பாட்டாளர் ஷபி அவர்கள் வீட்டின் அருகில் சென்ற இந்த திருநாள் ஊர்வலத்தில் பங்கேற்ற புலி வேடம் தரித்து ஷல் அல்லாவின் பேரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் நடனமாடிய சிறியவர் முதல் பெரியவர்களுக்கு தன்னாலான மரியாதையை செலுத்தி மகிழ்ந்தார் உடன் அவரது குடும்பத்தார் அனைவரும் உடன் இருந்தனர்.



சனி, 5 ஜூலை, 2025

இறைதூதர் பேரன்களின் தியாகத்தை போற்றும் வகையில், சேலத்தில்  இஸ்லாமியர்கள் புலி நடனமாடி நேர்த்திக்கடன்.

இறைதூதர் பேரன்களின் தியாகத்தை போற்றும் வகையில், சேலத்தில் இஸ்லாமியர்கள் புலி நடனமாடி நேர்த்திக்கடன்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

இறைதூதர் பேரன்களின் தியாகத்தை போற்றும் வகையில், சேலத்தில்  இஸ்லாமியர்கள் புலி நடனமாடி நேர்த்திக்கடன்.

இஸ்லாமியர்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மொஹரம் திருநாள் உலக இஸ்லாமியர்களால் கடைபிடிக்கப்பட்டு  வருகிறது. இறைதூதர் நபிகள் நாயகத்தின் பேரர்களான ஹசேன் மற்றும் உசேன் கொல்லப்பட்டதை நினைவு கூறும் விதமாகவும், அவர்களது தியாகத்தை போற்றும் வகையில்  கொண்டாடப்படும் இந்த திருநாளையொட்டி சேலத்தில் இஸ்லாமியர்களால் மிரட்சியுடன் கடைபிடிக்கப்பட்டது. தியாகத் திருநாளாக கருதப்படும் இந்த மொகரம் விழாவையொட்டி சேலம் கோட்டை சுன்னத் ஜமாத் சார்பில் புலி ஆட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டுதோறும் சேலத்தில் கலைக்கட்டும் இவ்விழாவானது கோட்டை பகுதியில் உள்ள ஃபிரண்ட்ஸ் மஹாலில் துவங்கிய இந்த புலி ஆட்ட நிகழ்வில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புலிடமிட்டு மேளதாள இசைக்கு ஏற்றவாறு புலி நடனமாடி இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் பேரர்கள் தியாகத்தை போற்றினர்.
கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த புலி நடன ஊர்வலமானது இறுதியில் ஃபிரண்ட்ஸ் மஹாலில் நிறைவு பெற்றது. சேலம் கோட்டை சுன்னத் ஜமாத் தலைவர் காதர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நிர்வாகிகள் பண்டு அஜித் அலி குட்டி புலி அசின் ஷாபிர் சேட்டு பாபு சவுகத் அலி யூசுப் கான் பாஷா, நசீம் ஆரிப் ஆசிப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். இதனை அடுத்து சேலம் கோட்டை சுன்னத் ஜமாத் சார்பில் பிற்பகல் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன.




சேலம் கிச்சிபாளையத்தில் துவக்கப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் விரைவில் மகப்பேறு மருத்து வார்டு  துவக்கப்படும். 44வது கோட்ட மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் இமயவரம்பன் பெருமிதம்.

சேலம் கிச்சிபாளையத்தில் துவக்கப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் விரைவில் மகப்பேறு மருத்து வார்டு துவக்கப்படும். 44வது கோட்ட மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் இமயவரம்பன் பெருமிதம்.

சேலம்.
S.K. சுரேஷ் பாபு.

சேலம் கிச்சிபாளையத்தில் துவக்கப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் விரைவில் மகப்பேறு மருத்து வார்டு  துவக்கப்படும். 44வது கோட்ட மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் இமயவரம்பன் பெருமிதம்.
  
தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழக முழுவதும் 208 நகர்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார நிலையம் தமிழக முதலமைச்சரால் காணொளி காட்சி வாயிலாக திறந்துவைக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாநகராட்சி 44வது கோட்டத்திற்கு உட்பட்ட  கிச்சிபாளையம் கரீம் காம்பவுண்ட் அருகே சுமார்  30 லட்சம் மதிப்பிலான நகர்ப்புற நலவாழ்வு மையத்தினை தமிழக முதலமைச்சர் யார் திறந்து வைக்கப்பட்டது. இதனை வரவேற்கும் விதமாக மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மற்றும் 44 வது கோட்ட மாமன்ற உறுப்பினர் இமயவரம்பன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி பொதுமக்களுக்காக அர்ப்பணித்தனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததை பொதுமக்கள் அனைவரும் வெகுவாக பாராட்டினர். 
நிகழ்வில் பேசிய மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் இமயவரம்பன், இந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களின் 60 ஆண்டுகால கோரிக்கை மற்றும் போராட்டத்திற்கு பிறகு கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்ட இமயவரம்பன், தான் 44-வது கோட்டை மாமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பிறகு தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் சேலம் மாநகர மேயர் ஆகியோரை அணுகி மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதி என்பதால் இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டுமென்ற கோரிக்கையை விடுத்ததாகவும் அதன் அடிப்படையில் அதற்கான நிதி ஒதுக்கி அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு இந்த இடத்தில் அதற்கான பணிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு தற்பொழுது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறந்ததற்கு தமிழக முதலமைச்சர் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களுக்கும் முதற்கண் தன் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக விழாவில் தெரிவித்தார். மேலும் சேலம் மாநகராட்சி பகுதிகளிலேயே மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதி உச்சிபாளையம் என்பதால் அரசு மருத்துவர்கள் ஏற்கனவே பணி செய்யும் காலகட்டத்திற்கு பதிலாக கூடுதலாக காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பணியாற்றவும் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் இங்கு 24 மணி நேரமும் சேலம் மாநகர ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முன்பாக 108 ஆம்புலன்ஸ் வாகனம் எப்பொழுதும் இருக்கும் என்று தெரிவித்த இமயவரம்பன் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பப்பை புற்றுநோய் கண்டறியும் இயந்திரங்கள் உட்பட ஆரம்ப கால நோய்கள் அனைத்திற்கும் முதல் உதவி சிகிச்சை வழங்க முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெரிய அளவிலான மகப்பேறு மருத்துவ வாழும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பெருமைப்பட தெரிகின்றார்.
இந்நிகழ்வில், அந்த பகுதியில் முக்கிய பிரமுகர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

வெள்ளி, 4 ஜூலை, 2025

வக்பு வாரிய திருத்தச் சட்டம் ரத்து செய்ய கோரி மனிதநேய மக்கள் கட்சி பேரணி - மாவட்ட தலைவர் ஏ. சித்தீக் பேட்டி

வக்பு வாரிய திருத்தச் சட்டம் ரத்து செய்ய கோரி மனிதநேய மக்கள் கட்சி பேரணி - மாவட்ட தலைவர் ஏ. சித்தீக் பேட்டி


ஊராட்சி மன்றம் முதல் பாராளுமன்றம் வரை இஸ்லாமிய சமூகத்திற்கு பிரதி நிதித்துவத்தை உறுதி செய் வக்பு வாரிய திருத்தச் சட் டத்தை ரத்து செய் எனும் இரட்டை கோரிக்கைகள் வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி வருகின்ற ஜூலை 6ல் மாநில தலை வர் பேராசிரியர் வி.பி. ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தலைமையில் மாபெரும் பேரணி மற்றும் மாநாடு மதுரையில் நடத்துகிறது என கட்சியின் மாவட்ட தலைவர் ஏ. சித்தீக் தெரிவித்துள்ளார் ...

சபா நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில் ...

இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம், இந்தியாவில் முஸ்லீம் மக்களுக்கு சட்டம் இயற்றும் அமைப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதேயாகும்,

இந்நாட்டின் மன்றத்தில் பாராளு மொத்தமாக 543 உறுப்பினர்கள் உள்ள நிலையில், மக்கள்தொகை அடிப்படையில் குறைந்தபட்சம் 80 முஸ்லீம் எம்.பிக்கள் இருக்க வேண்டும், ஆனால், தற்போது சுமாராக 24 பேர் மட்டுமே இருக்கிறார்கள். அதேபோல், ராஜ்ய சபாவில் 35 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 13 பேர் மட்டுமே உள்ளனர்,


தமிழக சட்டமன்றத்தில் மட்டும் 14 முஸ்லீம் எம்.எல்.ஏக் கள் இருக்க வேண்டிய நிலை இருப்பினும், தற்போது அதில் பாதிக்கும் குறைவான 7 பேர்தான் உள்ளனர், இந்தியா முழுவதும் 4,123 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில், முஸ்லீம் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 296 மட்டுமே என்பது கவலைக்கிடமானது.

தமிழகத்தில் மட்டும் 7 சதவீத முஸ்லீம் மக்கள் வசிக்கிறோம், ஆனால், அந்த மக்கள் தொகைக்கு ஏற்ப நமக்கு அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை, இது ஒரு சமூக நீதிக்கே எதிரானது.

இந்த உண்மைகளை எடுத்துச் சொல்லவும், அரசியலில் முஸ்லீம் மக்களின் உரிய இடத்தை கோரிக்கையாக முன்வைக்கவும், நமது இந்த மாநாட்டை நடத்துகிறோம் என்றார்.

புதன், 2 ஜூலை, 2025

நம்பியூர் அருகே வெறிநாய்கள் கடித்ததில் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி : விவசாயிகள் அதிர்ச்சி..!

நம்பியூர் அருகே வெறிநாய்கள் கடித்ததில் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி : விவசாயிகள் அதிர்ச்சி..!

நம்பியூர் அருகே அழகாபுரி, பொலவபாளையம், காந்திபுரம் மேடு ஆகிய பகுதிகளில் வெறி நாய்கள் கடித்ததில் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியானதால் விவசாயிகளும் பொதுமக்களும் சோகம்

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே காந்திபுரம் மேடு, ஓம்சக்தி கோவில் வீதி, அழகாபுரி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜமால், ஈஸ்வரமூர்த்தி, ரங்கநாதன், சாதிக் அலி ஆகியோருக்கு சொந்தமான அப்பகுதியில் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்

இவர்களுக்கு  சொந்தமாக 15 க்கு மேற்பட்ட ஆடுகள் உள்ளது தினமும் வீட்டின் பின்பகுதியில் கட்டி வைத்து பின்பு மேய்ச்சலுக்காக காட்டுப்பகுதிக்கு ஆடுகளை அழைத்துச் சென்று மேச்சலில் ஈடுபடுத்தி பின்பு வீடு திரும்புவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக தனது வீட்டின் அருகில் இருக்கும் காட்டு பகுதிக்கு அழைத்துச் சென்று மேச்சலில் ஈடுபட்டு வந்தார் அப்பொழுது அப்பகுதிக்கு 10 மேற்பட்ட வெறிநாய்கள் அவ்வழியாக வந்துள்ளது.


ஆடுகளை கண்ட வெறிநாய்கள் சுற்றிவர துரத்தி துரத்தி கடித்து தாக்கி உள்ளது இதில் சம்பவ இடத்திலேயே 10 க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகிது மேலும் 5 ஆடுகள் கவலைக்கிடமான நிலைமையில் உள்ளது.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறிய போது கடந்த ஒரு வருடமாகவே இந்த வெறிநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.

இது குறித்து நாங்கள் பல்வேறு இடங்களில் வெறி நாய்களை கட்டுப்படுத்த புகார்  கொடுத்தும் நம்பியூர் பேரூராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை

கடந்த ஒரு வருடத்தில் எங்கள் பகுதிகளிலேயே  பல்வேறு இடங்களில் இதுபோல் நடந்துள்ளது இன்று பட்டப்பகலிலேயே வெறிநாய்கள் ஆடுகளை கடித்து கொன்று உள்ளது.

இந்த வெறி நாய்கள் கட்டுபடுத்துவது குறித்து உள்ளாட்சி நிர்வாகமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கேட்டுக் கொண்டார்