Latest

செவ்வாய், 16 ஜூன், 2026

தமிழக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில்  75,000 ரூபாய் வரை மட்டும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்வர். பசிக்கு அழும் குழந்தைக்கு பலூன் கொடுப்பது போல் உள்ளது. தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி விமர்சனம்.

தமிழக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 75,000 ரூபாய் வரை மட்டும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்வர். பசிக்கு அழும் குழந்தைக்கு பலூன் கொடுப்பது போல் உள்ளது. தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி விமர்சனம்.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

தமிழக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில்  75,000 ரூபாய் வரை மட்டும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்வர். பசிக்கு அழும் குழந்தைக்கு பலூன் கொடுப்பது போல் உள்ளது. தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி விமர்சனம்.

தமிழக விவசாயிகள் தமிழக கூட்டுறவு சங்கங்களில் பெற்ற பயிர் கடனை எந்த விதமான பாகுபாடும் இன்றி முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்பது மட்டுமே தமிழக விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. இதனிடையே தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழக விவசாயிகள் பெற்ற பயிர் கடன் தள்ளுபடி தொடர்பாக உத்தரவு ஒன்றினை  பிறப்பித்தார். இது தமிழக விவசாயிகளிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ள நிலையில், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அவசர அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், தமிழக விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வாங்கிய கடனை, சிறு, குறு, பெரு  விவசாயிகள் என்ற பாகுபாடின்றி  முழுவதும் தள்ளுபடி செய்யாமல், ரூ.75,000/ம்  வரை மட்டும் தள்ளுபடி செய்து, இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் C.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளது, தமிழக விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இது பசிக்கு அழும் குழந்தைக்கு பலூன் கொடுப்பது போல் உள்ளது என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த அறிக்கையின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தலைவர் வேலுச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

திங்கள், 15 ஜூன், 2026

சேலம் அருகே சாதிய பாகுபாட்டு தாக்குதல். திருக்கோவிலில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் பட்டியலினத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளி படுகாயம்.

சேலம் அருகே சாதிய பாகுபாட்டு தாக்குதல். திருக்கோவிலில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் பட்டியலினத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளி படுகாயம்.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் அருகே சாதிய பாகுபாட்டு தாக்குதல். திருக்கோவிலில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் பட்டியலினத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளி படுகாயம். 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சேஷன்சாவடி பகுதியை சார்ந்தவர் மணிகண்டன் மாற்றுத்திறனாளி ஆன இவருக்கு கைகள் இல்லை. தனது சகோதரருடன் வாகனம் உள்ளில் கலந்து மூன்று தினங்களுக்கு முன்பு அங்குள்ள பிரசித்தி பெற்ற அஞ்சமலை குட்டை முனியப்பன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். பட்டியலின சமுதாயத்தை சார்ந்த இவர்களை கண்ட அங்குள்ள உயர் ஜாதியினர் மணிகண்டன் மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவரையும் ஜாதி பெயரை கூறியும், தகாத சொற்களால் திட்டியும் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். ஐந்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு இந்த கொலைவெறி தாக்குதல் சம்பவத்தில் பட்டியலினத்தைச் சார்ந்த மணிகண்டன் மற்றும் அவரது சகோதரர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக வாழப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு பொது தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திருக்கோவில் ஒன்றில் ஜாதியை பாகுபாடு பார்த்து பட்டியல் இனத்தைச் சார்ந்த சகோதரர்களை அங்குள்ள உயர் ஜாதியினர் வகுப்பைச் சார்ந்த ஸ்ரீ டிராவல்ஸ் உரிமையாளர் ராஜா என்பவர் உட்பட ஐந்து பேர் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி ஆன மணிகண்டன் நம்மிடையே கூறுகையில், கோவிலில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ பதிவு காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதாகவும் அதனை காவல்துறையினர் கைப்பற்றி சம்பந்தப்பட்டவர்கள் மீது ஸ்ரீ டிராவல்ஸ் உரிமையாளர் ராஜா உட்பட ஐந்து பேர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு,  தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சரை கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார். அருந்ததியினர் பறையர் என கூறி திருக்கோவில் வளாகத்திற்குள்ளேயே பட்டியலினத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளி சகோதரர்கள் தாக்கப்பட்டுள்ள சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஞாயிறு, 14 ஜூன், 2026

சேலத்தில் இந்து வழக்கறிஞர்கள் முன்னணி துவக்க விழா.

சேலத்தில் இந்து வழக்கறிஞர்கள் முன்னணி துவக்க விழா.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் இந்து வழக்கறிஞர்கள் முன்னணி துவக்க விழா.

இந்து முன்னணி பேரியக்கத்தின் சேலம் மாநகர் மாவட்ட இந்து வழக்கறிஞர் முன்னணி துவக்க விழா இன்று நடைபெற்றது. இந்து வழக்கறிஞர் முன்னணியின் மாநில செயலாளர் ரத்தினகுமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் இந்து முன்னணி மாநில செயலாளர் தாமு எ. வெங்கடேஸ்வரன் கோட்ட தலைவர் சந்தோஷ் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். விழாவில் பல வழக்கறிஞர்கள் தங்களை இந்த அமைப்பில் இணைத்துக் கொண்டனர். அவர்களை இந்து முன்னணி மாநில செயலாளர் ரத்தினகுமார் வாழ்த்தி வரவேற்றார்.

வியாழன், 11 ஜூன், 2026

கர்நாடகா அரசிடம் உரிய காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை தமிழ்நாட்டிற்கு பெற்று தரவில்லை என்றால், தமிழகத்தில் விவசாயிகள் போராட்டம் புரட்சி புயலாக உருவாகும்.  தவெக அரசுக்கு தமிழக விவசாயிகள் சங்கம் கடிதம் வாயிலாக அறிவுறுத்தல்.

கர்நாடகா அரசிடம் உரிய காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை தமிழ்நாட்டிற்கு பெற்று தரவில்லை என்றால், தமிழகத்தில் விவசாயிகள் போராட்டம் புரட்சி புயலாக உருவாகும். தவெக அரசுக்கு தமிழக விவசாயிகள் சங்கம் கடிதம் வாயிலாக அறிவுறுத்தல்.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

கர்நாடகா அரசிடம் உரிய காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை தமிழ்நாட்டிற்கு பெற்று தரவில்லை என்றால், தமிழகத்தில் விவசாயிகள் போராட்டம் புரட்சி புயலாக உருவாகும்.  தவெக அரசுக்கு தமிழக விவசாயிகள் சங்கம் கடிதம் வாயிலாக அறிவுறுத்தல்.

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு அவசர கடிதம் ஒன்றினை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், தமிழ்நாடு அரசு காவிரி டெல்டா விவசாயிகள் நலன் கருதி ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்காக ஜூன் மாதம் 12ஆம் தேதி ஆன இன்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். இதில் சுமார் 5 லட்சம் ஏக்கருக்கு மேலான  விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 
இந்த ஆண்டு  குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது குறித்து இதுவரையிலும் தவெக அரசு நீர்வளத்துறை மூலம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது  காவிரி டெல்டா விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக அரசு குறுவை சாகுபடி செய்ய இந்தாண்டு திட்டமிட்டபடி தமிழ்நாட்டிற்கு உண்டான  காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை கர்நாடகா அரசிடம் பேசி ஜீன் இம்மாதம் இறுதிக்குள் உரிய நேரத்தில் தண்ணீரை பெற்று தர முன்வர வேண்டும். தவெக அரசு இம்மாதம் இறுதிக்குள்  மேட்டூர் அணையில் இருந்து உரிய நேரத்தில் கர்நாடகா அரசிடம் உரிய காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை தமிழ்நாட்டிற்கு பெற்று தராமல் கர்நாடகாவில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக நடந்து கொண்டால் தமிழகத்தில் விவசாயிகள் புரட்சி புயலாக உருவாகும் என தவெக அரசுக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தங்களுக்கு நினைவூட்டும் விதமாக, இந்த கடிதம் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன். 
தமிழகத்தில் விவசாயிகள் புரட்சி புயலாக உருவாகும் என தவெக அரசுக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தங்களுக்கு நினைவூட்டும் விதமாக இந்த கடிதம் வாயிலாக தெரிவித்துக் கொள்வதாக தலைவர் வேலுச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

புதன், 10 ஜூன், 2026

தமிழக விவசாயிகளின் நலன் கருதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய அனைத்து பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழக முதலமைச்சருக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி கோரிக்கை.

தமிழக விவசாயிகளின் நலன் கருதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய அனைத்து பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழக முதலமைச்சருக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி கோரிக்கை.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழக விவசாயிகளின் நலன் கருதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய அனைத்து பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழக முதலமைச்சருக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி கோரிக்கை. 

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி, தமிழக விவசாயிகளின் அத்தியாவசிய கோரிக்கையை வலியுறுத்தி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அரசு தனது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு, கடந்த 25.5.2026 அன்று விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டது. அதில் சிறு குறு மற்றும் பெரு விவசாயிகள் என்ற பிரித்தாலும் சூழ்ச்சியுடன் பயிர் கடன் தள்ளுபடி செய்தது. இது தமிழக விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு இதனை மறுபரிசீலனை செய்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய அனைத்து பயிர் கடன்களையும் மகாராஷ்டிரா அரசு சமீபத்தில் தள்ளுபடி செய்ததைப் போல தமிழக அரசும் தள்ளுபடி செய்ய வேண்டும் என
வரும் 18 ஆம் தேதி தொடங்க உள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் மறுபரிசீலனை செய்து அறிவிக்க வேண்டும்  என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்வதாக தலைவர் வேலுச்சாமி குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த கோரிக்கை கடிதத்தின் நகல் வேளாண்மை துறை அமைச்சர் அவர்களுக்கும் மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் அவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

திங்கள், 8 ஜூன், 2026

18 ம் தேதி கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழக விவசாயிகளின் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சிவபெருமாள் தமிழக அரசுக்கு கோரிக்கை.

18 ம் தேதி கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழக விவசாயிகளின் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சிவபெருமாள் தமிழக அரசுக்கு கோரிக்கை.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

18 ம் தேதி கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழக விவசாயிகளின் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சிவபெருமாள் தமிழக அரசுக்கு கோரிக்கை. 

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சிவபெருமாள் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் 18ஆம் தேதி கூட உள்ள நிலையில் அன்று தமிழக விவசாயிகளின் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், மற்ற மாநிலங்களில் உலகை போன்று தமிழக விவசாயிகளின் நலன் கருதி தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்கி தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவை கூடும் தினத்தன்று அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் காவிரி கோதாவரி இணைப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கான நிதி அறிக்கையும் தயார்  செய்யப்பட்ட நிலையில் பின்னர் வந்த திமுக அரசு அதனை கண்டு கொள்ளாமல் அப்படியே விட்டு விட்டதாகவும், தற்பொழுது புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக தலைமையிலான அரசு பாரதப் பிரதமரை சந்தித்து காவிரி கோதாவரி திட்டத்தை முழுமையாக தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட அவர் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து என்பது தொடர்ச்சியாக எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும் என்பதாலும், மேகதாது அணைக்கட்டும் விவகாரத்தில் தமிழகத்திற்கு எந்த விதமான பாதிப்பும் இருக்காது என்றும் தெரிவித்தார். 
தொடர்ந்து மேட்டூர் அணையில் 80 அடிக்கு மேல் இருந்தால் தான் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியும் என்பதால், டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடி செய்வதில் விவசாயிகளிடையே குழப்பு நிலை நீடிப்பதாகவும் ஆகவே ஜூன் 12 மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக நீர் பாசனத்துறை அமைச்சர் மற்றும் நீர் பாசன துறை அதிகாரிகளுடன் தமிழக முதலமைச்சர் தங்களை போன்று விவசாய சங்க பிரதிநிதிகள் அழைத்து மேட்டூர் அணையின் திறப்பது தொடர்பாக ஆலோசித்து அதன் பிறகு முடிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்ட சிவபெருமாள் நியாய விலை கடைகளில் பாமாயில் கொடுப்பதற்கு பதிலாக தேங்காய் எண்ணெயை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தார்.

வெள்ளி, 5 ஜூன், 2026

அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களின் மாறுவோம் மாற்றுவோம் என்ற நோக்கத்தின் we the leaders இயக்கத்தில் இணைந்த உறுப்பினர்கள்  சேலத்தில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்.

அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களின் மாறுவோம் மாற்றுவோம் என்ற நோக்கத்தின் we the leaders இயக்கத்தில் இணைந்த உறுப்பினர்கள் சேலத்தில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களின் மாறுவோம் மாற்றுவோம் என்ற நோக்கத்தின் 
we the leaders இயக்கத்தில் இணைந்த உறுப்பினர்கள் சேலத்தில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்.

அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களின் we the leaders இயக்கத்தில் 10 லட்சம் உறுப்பினர்கள் இணைந்ததை அடுத்து, சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஓரியண்டல் சக்தி தியேட்டர் முன்பு சேலம் மாவட்ட உறுப்பினர்கள் பொது மக்களுக்கு கேக் கொடுத்தும் பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். உறுப்பினர்கள் நாகராஜ் வெங்கடேசன், கார்த்திக், நாகராஜேஸ்வரன், மாதவராஜ் ஆகியோர் முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட அண்ணாமலை ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து தங்களது மகிழ்ச்சியை பொதுமக்களுடன் பகிர்ந்து கொண்டனர். மேலும் இது குறித்து கூறும் போது,  அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களின் மாறுவோம் மாற்றுவோம் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இயக்கத்தில் இணைந்த அனைவருக்கும் எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஒன்பது லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட இந்த இயக்கமானது அண்ணாமலையின் கரத்தினை வலுப்படுத்துவோம் என்றனர்.