Latest

வெள்ளி, 3 ஏப்ரல், 2026

10 அம்ச கோரிக்கைகள் எந்த அரசியல் கட்சிகளும் ஏற்காததன் எதிரொலி. தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி தமிழக வாக்காளர்களுக்கு வேண்டுகோள்.

10 அம்ச கோரிக்கைகள் எந்த அரசியல் கட்சிகளும் ஏற்காததன் எதிரொலி. தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி தமிழக வாக்காளர்களுக்கு வேண்டுகோள்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

10 அம்ச கோரிக்கைகள் எந்த அரசியல் கட்சிகளும் ஏற்காததன் எதிரொலி. தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி தமிழக வாக்காளர்களுக்கு வேண்டுகோள். 

தேசிய ஒடக்கப்பட்ட மக்கள் குடியரசின்
 நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி, பிற்படுத்தப்பட்ட,  மிகவும் பிற்படுத்தப்பட்ட,  சீர்மரபினர், தாழ்த்தப்பட்டவர்கள்,  பழங்குடியின மக்கள் மற்றும் பட்டியலின மக்களின் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி அவர்களுக்கான உரிமைகளையும் பெற்று தந்தவர். அந்த வகையில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் 10 கோரிக்கைகள் எந்த அரசியல் கட்சிகளும் ஏற்க மறுக்கின்றது என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அந்த பத்து கோரிக்கைகளையும் பதிவிட்டுள்ள சரஸ்ராம் ரவி, 12 லட்சம் எக்டர் பஞ்சமி நிலம் மீட்க தேர்தல் அறிக்கை, 75000 SC/ ST காலி பினலனிடைவு இடங்களை நிரப ப உறுதி, தாட்கோ கடன் வழங்க 38 மாவட டத்திலும் தனி வங்கி, தமிழகம் முழவதும் டோல் கேட் வரி தடை, மண்டல் கமிஷன் இட ஒதுக்கீடு சதவீத்த்தை  தமிழக அனைத்து அரசு துறைகளிலும் நிரப்பிடுக, தமிழகம் முழுவதும் சட்ட கல்லூரியில் படிக்க Entrance test நீக்கி மாணவர்கள் எடுத்த +2 மதிப்பெண் அடிப்படையில் இடம் கொடு, ஆணவ படுகொலைகள் தடுக்க தனி சட்டம். ( தெலுங்கானாவில் தற்சமயம் கொண்டு வரபட்டுள்ளது ), அரசு பொது துறை நிறுவனங்களை தனியாரிடம் தாரைவார்க்க கூடாது, இரயில்வே துறையில் மட்டும் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் நிரப்ப்பட வேண்டும், அரசுப் போக்குவரத்து / மின் வாரியம்  துறையை நவீன படுத்தி தொழிலாளர்களின் உரிமைகள் -நலன்கள் பாதுகாத்திட வேண்டும், 
டாஸ்மாக் நிறுவனத்தை மூட வேண்டும் . அரசு சாராயம் விற்க கூடாது, டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்று துறையில் பதவி வழங்கிட வேண்டும் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இரண்டு வருடத்திற்கு மேல் ஒரு இடத்தில் பணி அமர்த்த கூடாது இடம் மாற்றம். செய்ய வேண்டும், அரசு புறம்போக்கு நிலங்கள் தனியாருக்கு பட்டா வழங்கி ஊழல் செய்யும் அதிகாரிகளை 6 மாதம் ஒரு முறை ஆய்வு செய்து  நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், பத்திரிக்கை - ஊடகம்  நிருபர்கள் - ஊழியர்கள் நல வாரியம் ஏற்படுத்தி அவர்களது குடும்பம் பொருளாதார வளர்ச்சி பெற அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ( தனி வீடு-  வட்டியில்லா கல்வி கடன் - வட்டியில்லா வாகன கடன் வழங்க வேண்டும்  38 மாவட்டத்திலும் ) என்று குறிப்பிட்டுள்ள தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவன தலைவர் சரஸ்ராம் ரவி, நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்றும் ஆனால் இந்த பத்தம் சொ கோரிக்கைகளை எந்த அரசியல் கட்சியும் ஏற்காததால் அனைவரும் நோட்டாவிற்கு வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்துள்ளார். 

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான NDA கூட்டணிக்கு தேசிய மக்கள் கட்சி ( NPP ) 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை  நேரில் சந்தித்து ஆதரவு கடிதத்தை வழங்கிய தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான NDA கூட்டணிக்கு தேசிய மக்கள் கட்சி ( NPP ) 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கடிதத்தை வழங்கிய தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான NDA கூட்டணிக்கு தேசிய மக்கள் கட்சி ( NPP ) 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை  நேரில் சந்தித்து ஆதரவு கடிதத்தை வழங்கிய தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள். 

2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு தேர்தலுக்கான பணிகளை முழு வீச்சில் செய்து வருகிறது இந்திய மற்றும் தமிழக தலைமை தேர்தல் ஆணையம். இந்த நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தேசிய மக்கள் கட்சி முழு ஆதரவை தெரிவித்திருந்தது.  அதன் பேரில் தேசிய மக்கள் கட்சியின் ( NPP ) நிறுவனரும் தலைவருமான சங்மா அறிவுறுத்தலின் அடிப்படையில், 
மாநிலத் தலைவர் கோ. சீனிவாசன் தேசிய செயலாளர் அசோக்சாமி, மாநில செயலாளர் ராம்ஜி மற்றும் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் தர்மன் உள்ளிட்ட மாநில மற்றும் அனைத்து மாவட்ட தலைவர்கள் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து தேசிய மக்கள் கட்சியின் ( NPP ) முழு ஆதரவு கடிதத்தினை வழங்கினர். 
தேசிய மக்கள் கட்சியின் ( NPP ) தேசிய, மாநில மற்றும் மாவட்ட  நிர்வாகிகளை வரவேற்ற எடப்பாடி பழனிச்சாமி தனது  நன்றியை தெரிவித்துக் கொண்டார். அப்போது தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவர் கோ ஸ்ரீனிவாசன் செய்தியாளரிடம் கூறுகையில் இந்திய திருநாட்டின் 6 தேசிய கட்சிகளில் ஒன்றான தேசிய மக்கள் கட்சி நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தங்களது முழு ஆதரவினை தெரிவித்து அதற்கான கடிதத்தை எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி அமர வைப்பதற்கு தங்களது கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முழுமூச்சுடன் செயல்படுவார்கள் என்றும் உறுதியளித்தார். இந்த நிகழ்வின்போது, கரூரை சேர்ந்த மாநில பொதுச் செயலாளர் ராஜ்மோகன், தர்மபுரி மாவட்ட தலைவர் சரண்யா ராணி, ஈரோடு மாவட்ட தலைவர் தங்கவேலு மற்றும் நீலகிரி மாவட்ட தலைவர் ராஜேஷ் உட்பட கன்னியாகுமரி கோவை கிருஷ்ணகிரி திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

வேலுச்சாமி அவர்களுக்கும் தமிழக விவசாயிகள் சங்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பதிவு செய்யப்பட்ட சங்கத்திற்கு சிவபெருமாள் தான் மாநில தலைவர். உழவர் பெருந்தலைவர்  நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பழனி முருகன் திட்டவட்ட அறிவிப்பு.

வேலுச்சாமி அவர்களுக்கும் தமிழக விவசாயிகள் சங்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பதிவு செய்யப்பட்ட சங்கத்திற்கு சிவபெருமாள் தான் மாநில தலைவர். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பழனி முருகன் திட்டவட்ட அறிவிப்பு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

வேலுச்சாமி அவர்களுக்கும் தமிழக விவசாயிகள் சங்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பதிவு செய்யப்பட்ட சங்கத்திற்கு சிவபெருமாள் தான் மாநில தலைவர். உழவர் பெருந்தலைவர்  நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பழனி முருகன் திட்டவட்ட அறிவிப்பு. 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தமிழகத்தில் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில், தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவிற்கு பல்வேறு அமைப்புகள் சங்கங்கள்  தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சிவபெருமாள் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான NDA கூட்டணிக்கு, தமிழக முழுவதும் ஆதரவு தெரிவித்து அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இதற்கு உழவர் பெருந்தலைவர்  நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் நாமக்கல்லை சேர்ந்த வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக கடும் கண்டனம் தெரிவித்ததோடு இந்த சங்கத்திற்கும் சிவபெருமாளுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றும் இவருடைய இந்த அதிமுக கூட்டணிக்கான ஆதரவு தெரிவித்துள்ளது தொடர்பாக, விரைவில் மாநில செயற்குழு கூட்டம் நடத்தி, அதில் எந்த கட்சி தலைவருக்கு ஆதரவு என்பதை வேலுச்சாமி ஆகிய எனது தலைமையில் அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் இதே உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பழனி முருகன் விவசாய சங்க லெட்டர் பேடில், 
மேற்கண்ட விலாசத்தில் மற்றும் பதிவு பெற்ற எண்ணில் இயங்கி வரும் சங்கத்திற்கு N. சிவபெருமாள் அவர்கள் முறைப்படி தேர்தல் அலுவலர்களால் தேர்தல் நடைபெற்று தேர்வானவர். இது முறைப்படி சேலம் பத்திரப்பதிவு துறையில் பதிவும் செய்யப்பட்டுள்ளது. திரு வேலுச்சாமி அவர்களுக்கும் மேற்படி  சங்கத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் அவர் முறைப்படி சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார். வரும் காலத்தில் வேலுச்சாமி அவர்கள் மேற்படி சங்கத்தின் பெயரையோ, பதிவு எண்ணையோ பயன்படுத்த எந்த உரிமையும் இல்லை. அவருடன் நமது சங்க நிர்வாகிகள் யாரும் தொடர்பில் இல்லை. மீரும் பட்சத்தில் வேலுச்சாமி அவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனை தாழ்மையுடன் அனைவருக்கும்தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அறிக்கையின் வாயிலாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பழனி முருகன் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை களத்தை விட தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் யார் என்பதில் எழுந்துள்ள பிரச்சனை தற்போது தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலிலும் கடுமையான சூட்டை கிளப்பியுள்ளது.

வியாழன், 2 ஏப்ரல், 2026

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அகில இந்திய மஜ்லிஸ் கட்சி 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு. சேலத்தில் நடைபெற்ற திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் மாநில இணை செயலாளர் S.R. இமாம் மைதீன் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் இரா இராஜேந்திரனுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அகில இந்திய மஜ்லிஸ் கட்சி 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு. சேலத்தில் நடைபெற்ற திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் மாநில இணை செயலாளர் S.R. இமாம் மைதீன் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் இரா இராஜேந்திரனுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அகில இந்திய மஜ்லிஸ் கட்சி 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு. சேலத்தில் நடைபெற்ற திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் மாநில இணை செயலாளர் S.R. இமாம் மைதீன் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் இரா இராஜேந்திரனுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து.

சேலம் தெற்கு மற்றும் வடக்கு 
சட்டமன்ற தொகுதியின் வெற்றி  வேட்பாளர்கள் சந்திப்பு மற்றும் அறிமுக கூட்டம்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அகில இந்திய மஜ்லிஸ் இ- இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி முழு ஆதரவை தெரிவித்திருந்தது. 
அதன் பேரில் AIMIM கட்சியின் மாநிலத் தலைவர் ஜனாப் டீ.ஸ்.வக்கீல் அஹமத் மற்றும்
மாநில பொதுச் செயலாளர்
ஜனாப் AM ரசூல் மொய்தீன்  அவர்களின் ஆலோசனையின்படி, மஜ்லிஸ் கட்சியின் மாநில இணைச்செயலாளர் சேலம் S.R. இமாம் மைதீன் அவர்கள் தலைமையில் சேலம் மாவட்ட தலைவர் பாசில் மாவட்டச் செயலாளர் தாஜுதீன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு
சேலம் வடக்கு வெற்றி வேட்பாளர் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ரா ராஜேந்திரன் அவர்களையும்  சேலம் தெற்கு வெற்றி வேட்பாளர் லோகநாதன் அவர்களையும் சந்தித்து கொண்டாடை போற்றி  வாழ்த்துகளை தெரிவித்து வேட்பாளர் அறிமுக கூட்டத்திலும் கலந்து கொண்டு மாநில இணைச்செயலாளர் சேலம் S.R. இமாம் மைதீன் அவர்கள் உரையாற்றினர்.
மேலும் 11 சட்டமன்ற தொகுதிகளில் உள்ளடக்கிய சேலம் மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைய அனைவரும் முழு முனையுடன் செயலாற்ற வேண்டும் என்பது மட்டுமே எனது வேண்டுகோள் என்று தனது உரையை நிறைவு செய்தார்.
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் என்ற போலி பெயரில் அதிமுகவிற்கு நிபந்தனை அற்ற ஆதரவு என்ற செய்தி வெளியானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளியான செய்திக்கு கண்டனம் தெரிவித்த வேலுச்சாமி, தமிழக விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை ஏற்கும் அரசியல் கட்சி தலைவருக்கு ஆதரவு தருவது தொடர்பான மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்து  அறிவிக்கப்படும்.. தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தகவல்.

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் என்ற போலி பெயரில் அதிமுகவிற்கு நிபந்தனை அற்ற ஆதரவு என்ற செய்தி வெளியானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளியான செய்திக்கு கண்டனம் தெரிவித்த வேலுச்சாமி, தமிழக விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை ஏற்கும் அரசியல் கட்சி தலைவருக்கு ஆதரவு தருவது தொடர்பான மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும்.. தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தகவல்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் என்ற போலி பெயரில் அதிமுகவிற்கு நிபந்தனை அற்ற ஆதரவு என்ற செய்தி வெளியானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளியான செய்திக்கு கண்டனம் தெரிவித்த வேலுச்சாமி, தமிழக விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை ஏற்கும் அரசியல் கட்சி தலைவருக்கு ஆதரவு தருவது தொடர்பான மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்து  அறிவிக்கப்படும்.. தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தகவல்.

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பரபரப்பான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார் அதில், 
சிறப்பான முறையில் நீண்டகாலமாக வேலுச்சாமி ஆகிய தனது தலைமையில் செயல்பட்டு வருகிறது. விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் கவணத்துக்கு கொண்டு செல்லும் வகையில் பல்வேறு போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்ப்பட்டு  நல்ல முறையில் இதுநாள் வரை இயங்கி வருகிறது. வருகிற 23 ந் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக  கூட்டணி  கட்சிக்கு நிபந்தனை அற்ற ஆதரவு தருவதாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தில் எந்தவொரு அடிப்படை உறுப்பினரும் இல்லாத, போலியான முறையில் மாநிலத் தலைவர் என்று உருவெடுத்தது திரு.N.சிவபெருமாள் அவர்கள் தவறான முறையில் சங்கத்தின் பெயரை சீர்குலைக்கும் வகையில் பத்திரிகை மற்றும் ஊடகம் வாயிலாக  செய்தி வெளியிட்டுள்ளார். இவருக்கும் இந்த சங்கத்துக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. 
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வருகிற 23 ந் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், தமிழக விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை எந்த தமிழக அரசியல் கட்சி  தலைவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ அந்த அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தருவது சமந்தமாக  அடுத்த வாரம் மாநில செயற்குழு கூட்டம் கூட்டுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது அதன் பின்னர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு வைத்து சங்கம் யாருக்கு ஆதரவு என்ற நிலைப்பாடு குறித்து செய்தி வெளிடப்படும் போலியான முறையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் பெயரை பயன்படுத்தும் நபர்கள் மீது உரிய முறையில் சட்டப்பூர்வமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை பத்திரிகை மற்றும் ஊடகம் நிறுவனங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். போலியான முறையில் அதிமுகாவிற்கு நிபந்தனை அற்ற ஆதரவு தருவதாக கூறி பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளியான செய்தி  தவறானது இது போன்று தவறான செய்தியை பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்கள் வெளியிடவேண்டாம் என இந்த அறிக்கையின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதன், 1 ஏப்ரல், 2026

சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஒன்பதாவது ஆண்டு விழா

சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஒன்பதாவது ஆண்டு விழா

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஒன்பதாவது ஆண்டு விழா

சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஒன்பதாவது ஆண்டு விழா கல்லூரியின் ஶ்ரீ வள்ளியப்பா கலையரங்கக் கூடத்தில் நடைபெற்றது. பெருமைமிக்க சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சி சாதனைகளை வெளிப்படுத்தும் விதமாக நடைபெற்ற இந்த ஆண்டு விழாவிற்கு கல்லூரியின் துணைத் தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு  வள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் தலைவர் ஶ்ரீ வள்ளியப்பா அவர்கள் தலைமையேற்று சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா கொண்டாட்டங்களைத் துவக்கி வைத்தார். அனைவரையும் வரவேற்ற கல்லூரியின் முதல்வர் முனைவர் கு.மை.காதர் நவாஸ் அவர்கள் மாணவர்களின் சாதனைகள் அடங்கிய படத்தொகுப்புடன்  கூடிய ஆண்டறிக்கையைச் சமர்ப்பித்தார். கல்லூரியின் துறை சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் பேராசிரியர்களின் ஆராய்ச்சிகள்  பங்களிப்பு மாணவர்களின்  ஆராய்ச்சிகள், விளையாட்டுகள் மற்றும் பிற துறைகளில் சாதனைகள் என கல்லூரியின் சாதனைகளைப் பட்டியலிட்டார். பெருமைக்குரியசேகர் ( Partner Deloitte Touche Tohmatsu India LLP ) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .
மேலும்  கல்வியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு ரூபாய் 4,35,000  வழங்கப்பட்டது. கல்வியாண்டில் கல்வியில் முன்னிலை வகித்து   படித்து முடித்து வெளியேறிய சிறந்த  மாணவர்களுக்கு ரூபாய்  100000 வழங்கப்பட்டது.  விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ஒரு பருவ கட்டணமாக தலா 37,000 வீதம் ரூபாய் 2,12,000   வழங்கி கௌரவிக்கப்பட்டது. கல்லூரியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூபாய் 30,000 , சிறந்த நாட்டு நலப்பணி திட்டம்(NSS) இளைஞர் செஞ்சிலுவை சங்கம் (YRC) செஞ்சூருள்(RRC) மற்றும் தேசிய மாணவர் படை(NCC) மாணவர்களுக்கு ரூபாய் 11000,  மாணவர்களில் சிறந்த தமிழ் மற்றும் ஆங்கில  பேச்சாளர்களுக்கு ரூபாய் 10,000,  தொடர்ந்து நூலகத்தை நன்முறையில்  பயன்படுத்திய மாணவர்களுக்கு 2000 மதிப்புள்ள புத்தகமும் வழங்கப்பட்டது. பொருளாராதார அளவில் பின்தங்கிய மாணவர்களுக்கு நிர்வாக உதவித் தொகையாக ரூபாய்  4,35,000 மற்றும்  பல்கலைக்கழக அளவில் மாணவர்களைத் தரவரிசையில் இடம்பெறச் செய்த துறைகளுக்கு ரூபாய் 300,000 வழங்கி சிறப்பித்தனர். மாணவர்களின் மருத்துவத்திற்காக ரூபாய் 35,0000 என்று ஏறத்தாழ ரூபாய் 15,00,000  கல்லூரியின் நிர்வாகத்தின் சார்பாக மாணவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தமிழ்த்துறை சார்பாக எழுதப்பட்டுள்ள 'பக்தியும் தமிழும் ( சைவம்)' என்ற ஆய்வு நூலைத் தலைவர்  சொ. வள்ளியப்பா அவர்கள் வெளியிட தமிழ்த்துறை தலைவர் முனைவர் க.விஜயராகவன் அவர்கள் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் சோனா கல்வி நிறுவனத்தின் முதல்வர்கள் முனைவர் கனகராஜ், முனைவர் செந்தில்குமார், திருமதி .இ.ஜெ. கவிதா ,பேராசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.
உளவியல் துறைத் தலைவர் முனைவர். ஷீனா மேத்யூ அவர்கள் நன்றி உரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது.

செவ்வாய், 31 மார்ச், 2026

சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர்.

சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர்.

11 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி சேலம் மாவட்டத்தில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள தேமுதிகவிற்கு சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் அவர்களுக்கு ஆதரவாக, தமிழக சுற்றுலாத் துறை அமைச்சரும் சேலம் வடக்கு தொகுதி திமுக வேட்பாளருமான வழக்கறிஞர் இரா. இராஜேந்திரன், மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக நடந்தே சென்றும் திறந்தவெளி வாகனத்தில் சென்ற வாரம் திமுக தலைமையிலான தமிழக அரசின் கடந்த ஐந்தாண்டு கால சாதனைகள் குறித்த துண்டு பிரசவங்களை விநியோகித்து வாக்குகளை சேகரித்தார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வின் போது சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவரும், சேலம் மாநகர துணை மேருமான திருமதி சாரதாதேவி மாணிக்கம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.