Latest

வெள்ளி, 18 ஜூலை, 2025

சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் துப்புரவு பணியாளர்கள் 250 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி மகிழ்ந்த  காங்கிரஸ் மூத்த தலைவர் கே வி தங்கபாலு.

சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் துப்புரவு பணியாளர்கள் 250 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி மகிழ்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் கே வி தங்கபாலு.

சேலம். 
S.K. சுரேஷ் பாபு.

சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் துப்புரவு பணியாளர்கள் 250 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி மகிழ்ந்த  காங்கிரஸ் மூத்த தலைவர் கே வி தங்கபாலு.

கல்வி கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123 வது பிறந்தநாள் விழா மற்றும் மகாத்மா காந்தி சிலை அமைத்து ஐம்பதாவது ஆண்டு விழா ஆகியவற்றை முன்னிட்டு சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக 28, 48,  மற்றும் 49 வது கோட்டங்களில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் 250 பேருக்கு வேஷ்டி சேலை மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் 2000 பேருக்கு நோட்டு புத்தகம் பேனா உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. சேலம் அன்னதானப்பட்டி காந்தி சிலை அருகே நடைபெற்ற விழாவிற்கு சேலம் மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ ஆர் பி பாஸ்கர் தலைமை தாங்கினார். சேலம் மாநகர துணை மேயர் திருமதி சாரதா தேவி மாணிக்கம் மற்றும் சேலம் மாநகர காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் மிட்டாய் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டூர் முன்னிலை வகித்த விழாவில், முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவருமான கேவி தங்கபாலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு வேஷ்டி சேலை நோட்டு புத்தகங்களை வழங்கி மகேந்திரா. நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பச்சைப்பட்டி பழனிச்சாமி கோபி குமரன் 29 வது கோட்டை மாமன்ற உறுப்பினர் கிரிஜா குமரேசன் மொட்டையாண்டி சாந்தமூர்த்தி பர்வேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆடி முதல் வெள்ளியையொட்டி சேலத்தில் பிரசித்திபெற்ற கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு.....ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர்..

ஆடி முதல் வெள்ளியையொட்டி சேலத்தில் பிரசித்திபெற்ற கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு.....ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர்..

சேலம்.
S.K.சுரேஷ்பாபு.

ஆடி முதல் வெள்ளியையொட்டி சேலத்தில் பிரசித்திபெற்ற கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு.....ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர்..

தமிழ் மாதங்களில் வரும் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.இதனையொட்டி தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலையங்களில் திருவிழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். அதிலும் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் நடைபெறும் ஆடிபெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த மாதத்தில் ஆடி-1, ஆடி-18, ஆடி அமாவாசை, ஆடி வெள்ளி என அடுத்தடுத்து விஷேசங்கள் வரும். இதுபோன்ற நாட்களில் கோவில்களில் விஷேச பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி ஆடி மாதம் நேற்று  தொடங்கியது. ஆடி மாதத்தில் இன்று முதல் வெள்ளி என்பதால் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. குறிப்பாக சேலத்தில் உள்ள 8 பட்டிகளுக்கும் காவல் தெய்வமாக விளங்கி வரும், சேலத்தில் பிரசித்திபெற்ற கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவிலில், இன்று காலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அம்மனுக்கு உகந்த வெள்ளி என்ற ஐதீகம் உள்ளதால் இன்று காலை முதல் பக்தர்கள் ஏராளமானோர் கோவிலில் குவிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபாட்டு சென்றனர்.
வரும் 22-ம் தேதி அம்மனுக்கு பூச்சாட்டுதலுடன் ஆடிபெருவிழா தொடங்க உள்ளதென்பதும், வரும் 29ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் நடுதல் விழா நடைபெற உள்ளது என்பதும், அதனைத் தொடர்ந்து சக்தி அளித்தல் பொங்கல் வைபவம் மாவிளக்கு எடுத்தல் உருளுதண்டம் நிகழ்வுகளுடன் திருக்கோவிலுக்கு புதிதாக கட்டப்பட்ட திருத்தேரோட்டம்  முதன் முறையாக அடுத்த மாதம் 8ம் தேதி இடம் கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் விழாவிற்கான ஏற்பாட்டு பணிகளை கோவில் நிர்வாகத்தினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

வியாழன், 17 ஜூலை, 2025

தனது பிறந்தநாளில் ஆதரவற்ற முதியவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கியதுடன் ஆடி முதல் நாளில் தேங்காய் சுடுவதற்கான மூலப்பொருட்களை வழங்கி மகிழ்ந்த சிறந்த சேவை போராளி.

தனது பிறந்தநாளில் ஆதரவற்ற முதியவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கியதுடன் ஆடி முதல் நாளில் தேங்காய் சுடுவதற்கான மூலப்பொருட்களை வழங்கி மகிழ்ந்த சிறந்த சேவை போராளி.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தனது பிறந்தநாளில் ஆதரவற்ற முதியவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கியதுடன் ஆடி முதல் நாளில் தேங்காய் சுடுவதற்கான மூலப்பொருட்களை வழங்கி மகிழ்ந்த சிறந்த சேவை போராளி. 

சேலம் பொன்னம்மாப்பேட்டை புத்துமாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் தெய்வவலிங்கம். வழக்கறிஞரான இவர், சேலம் மாநகராட்சியின் 9 வது கோட்ட மாமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். ஏற்கனவே பல்வேறு சமூக  சேவைகளை மேற்கொண்டு வரும் இவர்,  தெய்வா என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றினை துவக்கி நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட ஏழை எளிய முதியவர்களுக்கு காலை சிற்றுண்டிகளை வழங்கி மகிழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தனது தெய்வா அறக்கட்டளை துவக்கி 154வது நாளான இன்று, அதுமட்டுமில்லாமல் இன்று ஆடி முதல் நாள் என்பதாலும் தனது 50 வது பிறந்தநாள் என்பதாலும் பொன்னம்மாபேட்டை புத்து மாரியம்மன் கோவில் அருகே தெய்வா  அறக்கட்டளையின் சார்பில் 250 க்கும் மேற்பட்ட ஏழை எளிய முதியவர்களுக்கு வழக்கம் போல காலை சிற்றுண்டிகளை வழங்கி மகிழ்ந்த வழக்கறிஞரும், மாமன்ற உறுப்பினரும் மற்றும் சிறந்த சமூக சேவை போராளியுமான தெய்வலிங்கம்,
ஆடி முதல் நாளில் இந்துக்கள் தேங்காய் சுட்டு இறைவனுக்கு படைத்து வழிபடுவது வழக்கமான ஒன்றாக கருதும் நிலையில், தேங்காய் சுடுவதற்காக தேங்காய் மற்றும் குச்சி தேங்காய் உள்ளே  செலுத்துவதற்கான மூலப் பொருட்களை வழங்கி மகிழ்ந்தார் சிறந்த சமூக சேவை செயற்பாட்டாளர் தெய்வலிங்கம். காலை சிற்றுண்டி மற்றும் தேங்காய் சுடுவதற்கான மூலப்பொருட்களை பெற்ற பயனாளிகள் அனைவரும் சமூக சேவையாளர் தெய்வலிங்கத்திற்கு தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். இதேபோன்று சேலம் மாநகராட்சியின் 9வது கோட்ட தூய்மை பணியாளர்கள் மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கத்தின் 50 வது பிறந்த நாளை ஒட்டி பொன்னாடை போர்த்தி நினைவு பரிசுகளை வழங்கி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்வில் வழக்கறிஞர் தெய்வலிங்கத்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், தெய்வா அறக்கட்டளை நிர்வாகிகள் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.