Latest

சனி, 18 ஏப்ரல், 2026

11 சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ரஜினி ரசிகர்கள். தொகுதி முழுவதும் ரஜினி ரசிகர்களுக்கு மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.

11 சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ரஜினி ரசிகர்கள். தொகுதி முழுவதும் ரஜினி ரசிகர்களுக்கு மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

11 சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ரஜினி ரசிகர்கள். தொகுதி முழுவதும் ரஜினி ரசிகர்களுக்கு மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு. 

2026 சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 11 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சேலம் மாவட்டத்தில் அதிமுக திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நற்பணி மன்றம் கலைக்கப்பட்டாலும் கூட, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர பக்தரான பாரப்பட்டி கனகராஜ் தலைமையிலான ரஜினி ரசிகர்கள், அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடிக்கு பழனிச்சாமி அவர்களை சந்தித்து சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் ரஜினி ரசிகர்கள் ஆகிய நாங்கள் முழு ஆதரவு வழங்குவதாக ஏற்கனவே தெரிவித்து இருந்தனர். 
அந்த வகையில் கடந்த சில நாட்களாக 11 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர்கள், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிடும் அதிமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அதிமுக அரசின் சாதனைகள் குறித்தும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு பணிக்காக சென்ற ரஜினி ரசிகர்களுக்கு சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து ஆரத்தி எடுத்தும் பட்டாசுகளை வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். 
இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் ரஜினி ரசிகர்கள் மாவட்டம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு என்டிஏ கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக ஆதரவு திரட்டுவதும் வாக்குகளை சேகரிப்பதும் மாவட்ட மக்களிடையே மிகுந்து வரவேற்பினை பெற்றுள்ளது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. இந்த நிகழ்ச்சிகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகர்களும் நிர்வாகிகளுமான புருஷோத்தமன் இளம்பிள்ளை சின்னமணி, சூரமங்கலம் செல்வராஜ், குருமூர்த்தி, கிச்சிபாளையம் ரமேஷ், ராமன், சுக்கம்பட்டி பிரபு, தமிழ், பூபதி சித்தன், சண்முகம், நவீன் தங்கராஜ், யோகா ராஜா,சேட்டு ஸ்ரீதர், சீனி மற்றும் ஆலமரத்தான் உள்ளிட்ட ஏராளமானூர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

வெள்ளி, 17 ஏப்ரல், 2026

சேலத்தில் அனைத்து மதத்தினர் கலந்து கொண்ட ஈகைப் பெருநாள் சந்திப்பு... மனிதநேய பண்பாளர் விருது வழங்கி அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாநில இணைச் செயலாளர் ஷேக் இமாம் கௌரவிக்கப்பட்டார்.

சேலத்தில் அனைத்து மதத்தினர் கலந்து கொண்ட ஈகைப் பெருநாள் சந்திப்பு... மனிதநேய பண்பாளர் விருது வழங்கி அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாநில இணைச் செயலாளர் ஷேக் இமாம் கௌரவிக்கப்பட்டார்.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தில் அனைத்து மதத்தினர் கலந்து கொண்ட ஈகைப் பெருநாள் சந்திப்பு... மனிதநேய பண்பாளர் விருது வழங்கி அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாநில இணைச் செயலாளர் இமாம் மொஹீதின் கௌரவிக்கப்பட்டார். 

சேலம் பொன்னம்மாபேட்டை சுன்னத் ஜமாத் நிர்வாகம் சார்பாக இதயங்களை இணைக்கும் ஈகைப் பெருநாள் சந்திப்பை அனைத்து மதத்தினர் சார்பாக நடைபெற்றது. பள்ளிவாசலின் முத்தவல்லி சத்தார் மற்றும் செயலாளர் இனாமுல் ஹசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 
முன்னாள் 35வது கோட்ட மாமன்ற உறுப்பினர் நசீர் அகமது,  தற்போதைய 31 வது கோட்ட மாமன்ற உறுப்பினர்  சையது மூசா மற்றும்  அம்மாபேட்டை ஜமாத் நாயக் முத்தவல்லியும் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாநில இணைச்செயலாளருமான  இமாம் மொஹிதின், வரலாற்றுச் சங்கம் சார்பாக டிராவல்ஸ் பாபு, தொழிலதிபர் ஈசன் எழில் விழியன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். 
இதில் கலந்து கொண்ட பலரும்  தங்களின் அழகிய கருத்துக்களை பகிர்ந்தனர். மேலும் தனது கருத்துக்களையும் பகிர்ந்த ஷேக் இமாம் அவர்களுக்கு சிறந்த மனிதநேய பண்பாளர் என்கின்ற அடிப்படையில் விருதையும் வழங்கி கௌரவித்தனர். தன்னை  கண்ணியப்படுத்திய ஜமாத்தார்களுக்கும் வல்ல இறைவனுக்கும் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாநில இணைச்செயலாளர் இமாம். மொஹிதின்.
அதிமுக தேர்தல் அறிக்கையில் விடுபட்ட தமிழக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை இடம்பெற செய்யும் வகையில், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி முக்கிய நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர்.

அதிமுக தேர்தல் அறிக்கையில் விடுபட்ட தமிழக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை இடம்பெற செய்யும் வகையில், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி முக்கிய நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர்.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

அதிமுக தேர்தல் அறிக்கையில் விடுபட்ட தமிழக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை இடம்பெற செய்யும் வகையில், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி முக்கிய நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். 

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், வருகின்ற 23ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றுவது குறித்தும் விவசாயிகளை தொலைநோக்குப் பார்வையுடன் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் வகையில், தமிழக விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்  சங்கங்களில் வாங்கிய பயிர் கடன்கள் தள்ளுபடி, நீர் மேலாண்மை திட்டத்தின் மூலம் நிலத்தடி நீரை செறிஊட்டும் வகையில், ஆற்று படுகைகளில் மழை வெள்ள உபரி நீர் கடலில் வீணாக கலப்பதை தடுக்கும் வகையில் தடுப்பணை கட்டப்படும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகளுக்கு பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக கட்சி வழங்கிய காரணத்தினால், அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு தமிழக விவசாயிகள் சங்கம் முழு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக கட்சி 2026 இல் தேர்தல் அறிக்கையில் தமிழக விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கைகளில் ஒரு சில கோரிக்கைகள் இடம்பெறவில்லை. இடம்பெறாத கோரிக்கைகள் தமிழக விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கைகள் ஆகும். தேர்தல் அறிக்கையில் தற்போது இடம்பெற செய்யும் வகையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தலைமையில், 14 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய படிவத்தை மாநில மற்றும் நிர்வாகிகள், சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் நேரில் சந்தித்து வழங்கினர்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே பல திட்டங்கள் நிறைவேற்றுவதாக உறுதி அளிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது, தமிழகத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள 16 கூட்டுறவு ஆலைகள் மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளை மீட்டெடுத்து கரும்பு விவசாயிகளுக்கு நல்ல கொள்முதல் விலை கிடைக்கவும் எத்தனால் தயாரிக்க இனிவரும் காலங்களில் தாங்கள் வழிவகை செய்ய வேண்டும், தமிழகத்தில் தென்னை மற்றும் பனை கள்  கலப்படம் என்று கூறி தமிழக அரசு விதிக்கப்பட்டுள்ள நிரந்தர தடையை தென்னை மற்றும் பனை தொழிலாளர்களின் நலன் கருதி நீண்ட கால கோரிக்கையான கள்ளுக்கு தடை நீக்க ஏற்பாடு செய்ய வேண்டும் மற்றும் ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படும் எருமை மற்றும் பசும்பாலுக்கு தற்பொழுது கொடுக்கப்படும் விலையில் இருந்து இனிவரும் காலங்களில் 15 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 கோரிக்கைகள் அடங்கிய படிவத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆட்சி அமைந்த உடன் தங்களது கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்ததாக வேலுச்சாமி நம்முடைய தெரிவித்தார்.

வியாழன், 16 ஏப்ரல், 2026

சேலம் விநாயக மிஷின் சேர்மன் டாக்டர் கணேசன் பிறந்த நாள் விழா. விம்ஸ் மருத்துவமனையில் சிறப்பு ரத்ததான முகாம்.

சேலம் விநாயக மிஷின் சேர்மன் டாக்டர் கணேசன் பிறந்த நாள் விழா. விம்ஸ் மருத்துவமனையில் சிறப்பு ரத்ததான முகாம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் விநாயக மிஷின் சேர்மன் டாக்டர் கணேசன் பிறந்த நாள் விழா. விம்ஸ் மருத்துவமனையில் சிறப்பு ரத்ததான முகாம். 

சேலம் விநாயக மிஷின் சேர்மனும், விம்ஸ் மருத்துவமனையின் தலைவர் மான டாக்டர் கணேசன் பிறந்த நாள் விழா சிறப்பு ரத்ததான முகாம் சேலம் அரியானுறை தாண்டியுள்ள மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. விம்ஸ் ரத்த வங்கியுடன் இணைந்து நடத்திய இந்த ரத்ததான முகாமிற்கு விம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார்.
விம்ஸ் அலைடு ஹெல்த் கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார், விம்ஸ் மருத்துவமனையில் துணை மருத்துவ இயக்குனர் அசோக், பொது மேலாளர்  வெங்கடேஷ், முதுநிலை மருத்துவர் ஈஸ்வரன், மருத்துவர்கள் கண்ணன் மற்றும் பிரபாகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு முகாமில், மருத்துவர்கள், செவிலியர்கள், அனைத்து துறை  மேலாளர்கள், ஊழியர்கள், விம்ஸ் ஹெல்த் அலாய்டு சயின்ஸ் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, குருதிக்கொடை வழங்கினர்.
அப்போது ரத்ததானம் செய்வதன் சிறப்பு மற்றும் அதன் அவசியம்  குறித்தும் ரத்த வங்கியின்  மருத்துவர் விக்னேஷ் மருத்துவர் களுக்கு விளக்கம் அளித்தார். இந்த நிகழ்வில் மேலாளர் கலை, மார்க்கெட்டிங் மேலாளர் அருள்மணி, செய்தி தொடர்பு துறை அலுவலர் கணேசன் உட்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

புதன், 15 ஏப்ரல், 2026

தேசிய பாராளுமன்ற   தொகுதி வரையரை. மத்திய அரசு கொண்டு வரும் புதிய தொகுதி வரையரை BJP க்கு மட்டும் சொந்தமல்ல. தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவனத் தலைவர் சரஸ்ராம் ரவி அவர்களின் கருத்தும் விளக்கமும்.

தேசிய பாராளுமன்ற தொகுதி வரையரை. மத்திய அரசு கொண்டு வரும் புதிய தொகுதி வரையரை BJP க்கு மட்டும் சொந்தமல்ல. தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவனத் தலைவர் சரஸ்ராம் ரவி அவர்களின் கருத்தும் விளக்கமும்.

சேலம்.
S.K. சுரேஷ் பாபு.

தேசிய பாராளுமன்ற   தொகுதி வரையரை. மத்திய அரசு கொண்டு வரும் புதிய தொகுதி வரையரை BJP க்கு மட்டும் சொந்தமல்ல. தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவனத் தலைவர் சரஸ்ராம் ரவி அவர்களின் கருத்தும் விளக்கமும்.

அதன்படி அவர் வெளியில் உள்ள அறிக்கையில், எந்த தேசிய  மாநில கட்சிகளும் மக்களுக்கு சேவை செய்து அவர்களின் நம்பிக்கை பெற்று வெற்றி பெறலாம். மேலும் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிப்பு, பெரிய நாடாளுமன்ற தொகுதிகள் பிரிப்பதால் மக்களின் சேவை எளிதாக்கபடும் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு உதாரணமாக,. தமிழகத்தில் பல மாவட்டங்கள்பிரித்து 38 மாவட்டங்கள் உருவாகியது.
38 மாவட்ட ஆட்சித்தலைவர்கள்,  38 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் வட்டம் ஒன்றியம் உருவாகி மக்களுக்கு சேவை எளிதாக கிடைக்கபட்டது. 
இன்னும் தெளிவாக சொல்லபோனால்,.
சேலம் மாவட்டம் ஈரோடு,  நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கள்ளகுறிச்சி  பிரிக்கபட்டதால்  மக்கள் அதிகாரிகளை பார்க்க சேலம் வர தேவையில்லை. மக்களின் சேவை அங்கவே கிடைக்கபட்டது.
அதுபோல,. பாராளுமன்ற தொகுதி பிரிப்பு, எண்ணிக்கை அதிகரிப்பும் மக்களின் சேவை மைய்படுத்துயது. இதை வெறுமனே அரசியல் நோக்கோடும், பாரதிய ஜனதாவிற்கே  வாய்ப்பு அதிகம் என கூறுவது தங்கள் கட்சி மீது நீங்களே நம்பிக்கை இல்லாமல் இருப்பது தெளிவுபடுத்துகின்றது என்றும் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி தனது கருத்தையும் விளக்கத்தையும் பதிவிட்டுள்ளார்.


இந்திய அரசியல் சாசன சிற்பி டாக்டர் அம்பேத்கரின் 135 வது பிறந்தநாள் விழா. அதிகாலை 12 மணி அளவில் சட்ட மாமேதையின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தேசிய கொடுக்கப்பட்டு மக்கள் குடியரசு அமைப்பினர்.

இந்திய அரசியல் சாசன சிற்பி டாக்டர் அம்பேத்கரின் 135 வது பிறந்தநாள் விழா. அதிகாலை 12 மணி அளவில் சட்ட மாமேதையின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தேசிய கொடுக்கப்பட்டு மக்கள் குடியரசு அமைப்பினர்.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

இந்திய அரசியல் சாசன சிற்பி டாக்டர் அம்பேத்கரின் 135 வது பிறந்தநாள் விழா. அதிகாலை 12 மணி அளவில் சட்ட மாமேதையின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தேசிய கொடுக்கப்பட்டு மக்கள் குடியரசு அமைப்பினர்.

ஏப்ரல் 14ஆம் தேதி சட்ட மாமேதையின் பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது அந்த வகையில், தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு அமைப்பின் சார்பில், சேலம் மாவட்ட மத்திய நூலகம் அருகே அமைந்துள்ள பாபாசாகேப் அவர்களின் திருஉருவச் சிலைக்கு, அதிகாலை 12.1 மணி அளவில் சட்டமாமேதை இந்திய அரசியல் சாசன சிற்பி  டாக.டர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவசிலைக்கு  கூட்டமைப்பு சார்பாக நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொழிலாளர் நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், ஒருங்கிணைப்பாளர்கள் 
வழக்கறிஞர் பன்னீர்செல்வம், வணங்காமுடி,
செல்வராஜ்,
சுப்ரமணி,
மாரிமுத்து, அல்போன்ஸ்.
சிவபிரகாசம்
மற்றும் நடேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.

செவ்வாய், 14 ஏப்ரல், 2026

மாம்பழம் அழுகிவிட்டது என்று கூறிய சிட்டிங் எம்எல்ஏ அருள் பிரச்சாரம்.  சேலத்திற்கு பெயர் பெற்றுத்தந்த  மாங்கனியின் சீசன் காலம் தற்பொழுது தான்,  பூத்து, குலுங்கி,  காய்த்து, பழுத்து,  அமோக விளைச்சல் கொடுக்கும் என்று சேலம் மேற்கு தொகுதி NDA கூட்டணி வேட்பாளர் மு. கார்த்தி கவுண்ட்டர்..

மாம்பழம் அழுகிவிட்டது என்று கூறிய சிட்டிங் எம்எல்ஏ அருள் பிரச்சாரம். சேலத்திற்கு பெயர் பெற்றுத்தந்த மாங்கனியின் சீசன் காலம் தற்பொழுது தான், பூத்து, குலுங்கி, காய்த்து, பழுத்து, அமோக விளைச்சல் கொடுக்கும் என்று சேலம் மேற்கு தொகுதி NDA கூட்டணி வேட்பாளர் மு. கார்த்தி கவுண்ட்டர்..

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

மாம்பழம் அழுகிவிட்டது என்று கூறிய சிட்டிங் எம்எல்ஏ அருள் பிரச்சாரம்.  சேலத்திற்கு பெயர் பெற்றுத்தந்த  மாங்கனியின் சீசன் காலம் தற்பொழுது தான்,  பூத்து, குலுங்கி,  காய்த்து, பழுத்து,  அமோக விளைச்சல் கொடுக்கும் என்று சேலம் மேற்கு தொகுதி NDA கூட்டணி வேட்பாளர் மு. கார்த்தி கவுண்ட்டர்.. ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் உற்சாகம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழக முழுவதும் நடைபெற உள்ளது. இந்திய மற்றும் தமிழக தலைமை தேர்தல் ஆணையங்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 11 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சேலம் மாவட்டத்தில், NDA கூட்டணியில் பாமகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மு. கார்த்தி சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிடுகின்றார். கடந்த 10  நாட்களாக மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் நல்லாட்சி மலர்ந்திடவும், அவரது ஆசி பெற்ற சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி பாமக உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மு கார்த்தி,
இன்று சேலம் பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து தனது வாக்கு  சேகரிப்பு பணியை கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் தொடங்கிய அவர், தளவாய்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகள் பின்னர் சர்க்கார் கொல்லப்பட்டி  ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுக்காடு பகுதியில் தனது வாக்கு சேகரிப்பு பணியினை நண்பகல் முடித்தார். அப்போது  கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் திறந்தவெளி வாகனத்திலும், ஒரு சில பகுதிகளில் நடந்தே சென்றும்  மாம்பழம் சின்னத்தில் தன்னை மாபெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டார். என் டி ஏ கூட்டணி கட்சி நிர்வாகிகள் புடை சூழ மேற்கு தொகுதி பாமக வேட்பாளர் கார்த்தி சென்ற இடங்கள் வழி நெடுங்கிலும் பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர்களை வாரி இறைத்தும்,  வீட்டின் மொட்டை மாடியில் இருந்து மலர்களை தூவியும் பட்டாசுகளை வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். 
அப்போது அவர் செய்தியாளரிடம் கூறுகையில், மேற்கு தொகுதி தொகுதியை பொருத்தவரை தற்பொழுது சட்டமன்ற உறுப்பினராக உள்ள இரா அருள் மாம்பழம் அழுகிவிட்டதாகவும், அதனால் தனக்கு சிலிண்டர் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டது குறித்து சில மேற்கு தொகுதி பாமக வேட்பாளர் மு கார்த்தி அவர்களிடம் கேட்டபோது, சேலம் மாநகருக்கு பெயர் ஈட்டி தந்தது மாங்கனி என்றும் தற்பொழுதும் மாங்கனி மாநகரம் தான் என்று சேலத்தை புகழ் பாடி வருகின்றனர் தற்பொழுது தான் சேலத்தில் மாம்பழம் சீசன் தொடங்கியுள்ளது, வரும் காலங்களில் பூத்து காய்த்து குலுங்கி பழுத்து மாபெரும் விளைச்சலை தரும் அப்பொழுது அழுகிய மாம்பழம் என்று கூறிய இரா அருள் என்ன பதில் கூறுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று தெரிவித்தார்.
பொதுமக்கள் மத்தியில் கூறி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தற்பொழுதைய மேற்கு தொகுதி வேட்பாளர் மாண மு கார்த்தி இரா அருள் அவர்களுக்கு பதிலடி கொடுத்தார். இது அங்கு கூடி இருந்த ஆயிரக்கணக்கான வாக்காளர் பெருமக்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்ற தாய் என தெரியவில்லை அனைவரும் உடனடியாக கரகோஷங்களை எழுப்பியது விண்ணை பிளக்கும் வகையில் அமைந்திருந்தது. மேற்கு தொகுதி பாமக வேட்பாளர் மு கார்த்தி அவர்களின் சுற்றுப்பயணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அந்த பகுதியை சேர்ந்த கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பாமகவை சார்ந்த கார்த்திகை மற்றும் கோபால் உள்ளிட்ட மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.