Latest
புதன், 27 மே, 2026
செவ்வாய், 26 மே, 2026
தமிழக முதலமைச்சரை சந்திக்க விடாமல், தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகளை தடுத்து நிறுத்திய காவல்துறையினரால் பரபரப்பு. தமிழக விவசாயிகளே காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாகவும் கீழ்த்தரமாகவும் நடத்துவதாகவும் தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் வேலுச்சாமி ஆவேசம்.
சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
தமிழக முதலமைச்சரை சந்திக்க விடாமல், தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகளை தடுத்து நிறுத்திய காவல்துறையினரால் பரபரப்பு. தமிழக விவசாயிகளே காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாகவும் கீழ்த்தரமாகவும் நடத்துவதாகவும் தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் வேலுச்சாமி ஆவேசம்.
தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழக தலைமையிலான தமிழக அரசின் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை சந்திக்க நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் உட்பட மாநில நிர்வாகிகள் சென்னை சென்றிருந்தனர். தமிழக விவசாயிகளின் தீர்க்கப்படாத பிரதான கோரிக்கைகளை வலியுறுத்துவதற்கு நேரம் கேட்பதற்காக தமிழக முதலமைச்சரை சந்திக்க சென்ற தமிழக விவசாய பெருங்குடி மக்களை சென்னை காவல்துறையினர், தமிழக முதலமைச்சரை சந்திக்க அனுமதிக்காமல், தடுத்து நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் அவர்களை அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டது தமிழக அளவில் விவசாயிகள் இடையே கடும் கொந்தளிப்பினை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையைச் சேர்ந்த தமிழக காவல்துறையினரின் இந்த அநீதியான செயலை கண்டித்து, நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் செய்தியாளர்களிடம் ஆவேசமாக பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள TVK தலைவரும் தமிழக முதலமைச்சர் ஆன ஜோசப் விஜய் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவித்து தமிழக விவசாயிகளின் நீண்ட கால பிரச்சனைகளான மேகதாது அணை விவகாரம், தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள்ளிறக்க விதிக்கப்பட்ட தலையை நீக்க கோருவது, நதிநீர் இணைப்பு விவகாரம் மற்றும் பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு பிரதான பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கு நேரம் ஒதுக்கி தர வேண்டும் என்று தமிழக முதல்வரை சந்தித்து கடிதம் கொடுப்பதற்காக வந்த தங்களை தமிழக காவல்துறையை சார்ந்த சென்னை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்ட செயலை நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் வன்மையாக தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் தலைவர் வேலுச்சாமி.
மேலும் அவர் கூறுகையில் அனுமதி கேட்டு நேரம் ஒதுக்கி தர அனுமதி கேட்க வந்தபோது தமிழக முதலமைச்சர் சந்திக்க விடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் தமிழக விவசாயிகளை கீழ்த்தரமாக காவல்துறையினர் நடத்துகின்றனர் என்று குற்றம் சுமத்திய வேலுச்சாமி, தமிழக விவசாயிகளுக்கு சென்னையில் ஏற்பட்ட அநீதியை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கண்டிப்பாக கொண்டு செல்வோம் என்றும், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பயிர் கடன் தள்ளுபடி என்பதை ஏற்க முடியாது என்றும், தமிழக முதலமைச்சர் மறுபரிசீலனை செய்து கடந்த காலங்களை போன்று பிரித்தாலும் சூழ்ச்சி இல்லாமல் தமிழக விவசாயிகளின் நலன் கருதி முழு விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பேசிய அவர் விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு அறிவிக்கும் திட்டங்கள் ஆகட்டும் செயல்பாடுகள் ஆகட்டும் முன்கூட்டியே விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசி மட்டுமே சிறு குறு விவசாயிகளின் பாதுகாக்கும் வகையில் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல் இது போன்ற பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளதால் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தமிழக அரசு தவருபட்சத்தில் தமிழகத்தில் மிகப்பெரிய அளவிலான தொடர்ச்சியான போராட்டங்கள் மேற்கொள்ள ப்படும் என்று எச்சரிக்கை விடுத்த தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி, தமிழக முதல்வரை சந்திக்க காவல்துறையினர் தடுத்து நிறுத்திய சம்பவம் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியான பிறகு சென்னையை சேர்ந்த காவல்துறையினர் விவசாயிகள் மீது பற்று உள்ளவர்களை போன்று காட்டிக் கொள்வது வேதனையின் உச்சமாக உள்ளதாகவும் தனது வருத்தத்தை பதிவிட்டால் விவசாயிகள் சங்கத் தலைவர் வேலுச்சாமி.
இந்த சம்பவம் சென்னை மட்டுமல்லாது தமிழக விவசாயிகள் இடையே கடும் கொந்தளிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது என்பது மட்டும் நிதர்சனம்.
திங்கள், 25 மே, 2026
தமிழகத்தில் பாகுபாடு இன்றி அனைத்து விவசாயிகளுக்கும் கடந்த காலங்களைப்போல் பாகுபாடு இன்றி அனைத்து விவசாயிகளின் பயிர் கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தமிழக முதலமைச்சருக்கு அறிக்கையின் வாயிலாக கோரிக்கை.
சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
தமிழகத்தில் பாகுபாடு இன்றி அனைத்து விவசாயிகளுக்கும் கடந்த காலங்களைப்போல் பாகுபாடு இன்றி அனைத்து விவசாயிகளின் பயிர் கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தமிழக முதலமைச்சருக்கு அறிக்கையின் வாயிலாக கோரிக்கை.
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி கோரிக்கை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,
தமிழ்நாடு அரசு, விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வாங்கிய பயிர் கடனை இன்று தள்ளுபடி செய்துள்ளது. இதில் சிறு, குறு, பெரு விவசாயிகள் என்று பிரித்தாலும் சூழ்ச்சியுடன் பயிர் கடன் தள்ளுபடி செய்ததை, தமிழ்நாடு அரசு மறு பரிசீலனை செய்து பாகுபாடு இன்றி அனைத்து விவசாயிகளுக்கும் கடந்த காலங்களைப்போல் பாகுபாடு இன்றி அனைத்து விவசாயிகளின் பயிர் கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இந்த அறிக்கையின் மூலம் வலியுறுத்துகிறேன் என்றும் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளி, 22 மே, 2026
மேகதாது அணை - மத்திய அரசு தலையிட்டு தமிழக விவசாயிகளை காக்க வேண்டும். தமிழக முதல்வர், மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு தொடர்ந்து அடம்பிடித்தால், தமிழக அமைச்சரவையில் உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களை வாபஸ் பெற வேண்டும் என தமிழக மக்கள் சார்பில் கோருகிறோம். தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவனரும் தேசிய ஒருங்கிணைப்பாளருமான சரஸ்ராம் ரவிராமசாமி வலியுறுத்தல்
சேலம்,
S.K. சுரேஷ் பாபு.
.
மேகதாது அணை - மத்திய அரசு தலையிட்டு தமிழக விவசாயிகளை காக்க வேண்டும். தமிழக முதல்வர், மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு தொடர்ந்து அடம்பிடித்தால், தமிழக அமைச்சரவையில் உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களை வாபஸ் பெற வேண்டும் என தமிழக மக்கள் சார்பில் கோருகிறோம். தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவனரும் தேசிய ஒருங்கிணைப்பாளருமான சரஸ்ராம் ரவிராமசாமி வலியுறுத்தல்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தனது செய்தி குறிப்பில், இந்தியா ஒரு கூட்டாட்சி குடியரசு நாடு. மாநிலங்கள் அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதே இந்தியாவின் அடிப்படைத் தத்துவம். கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சி, 2018 உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் 20 லட்சம் ஏக்கர் பாசன விவசாயம் முற்றிலும் அழிந்து, குடிநீர் பஞ்சம் ஏற்படும்.
கர்நாடக துணை முதல்வர் திரு. டி.கே. சிவக்குமார் அவர்களின் தமிழ்நாட்டிற்கு தடுக்க உரிமை இல்லை" என்ற பேச்சு, கூட்டாட்சி தத்துவத்திற்கும், மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவுக்கும் எதிரானது. இந்த பொறுப்பற்ற பேச்சை அவர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு இயக்கத்தின் முக்கிய கோரிக்கைகளையும் பதிவிட்டுள்ளார்,. அதில்,
1. மத்திய அரசு, மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக் கூடாது. காவிரி மேலாண்மை ஆணையத்தை வலுப்படுத்தி, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு உரிய நீரை உறுதி செய்ய வேண்டும்.
2. காங்கிரஸ் கட்சி தலைமை திரு. மல்லிகார்ஜுன கார்கே, திரு. ராகுல் காந்தி அவர்கள் கர்நாடக அரசை கட்டுப்படுத்த வேண்டும். கூட்டணி தர்மத்தை காப்பாற்ற வேண்டும். இல்லையெனில் தமிழக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். 3. தமிழக முதல்வர், மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு தொடர்ந்து அடம்பிடித்தால், தமிழக அமைச்சரவையில் உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களை வாபஸ் பெற வேண்டும் என தமிழக மக்கள் சார்பில் கோருகிறோம்.
மாநிலங்கள் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து, வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்திய ஜனநாயகத்தின் உயிர்நாடி. அதை கர்நாடக அரசு மறந்து விடக்கூடாது. நதிநீர் பிரச்சினையை அரசியலாக்கி மக்களை மோதவிடும் போக்கை காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகள் கைவிட வேண்டும் என்றும்
சரஸ்ராம் ரவிராமசாமி
தேசிய ஒருங்கிணைப்பாளர் & நிறுவனர் தனது அறிக்கையில் பதிவிட்டுள்ளார்.
தமிழக விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி மேகதாட்டில் அணை கட்டினால் தகர்த்தெறிவோம். கர்நாடக துணை முதலமைச்சர் டி கே சிவகுமாருக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி கடும் எச்சரிக்கை.
சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
தமிழக விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி மேகதாட்டில் அணை கட்டினால் தகர்த்தெறிவோம். கர்நாடக துணை முதலமைச்சர் டி கே சிவகுமாருக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி கடும் எச்சரிக்கை.
நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக கர்நாடகா அரசுக்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில் கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழ்நாட்டிற்கு எந்தவித உரிமையும் உரிமையும் இல்லை என்று கூறிய கர்நாடக துணை முதல்வர் டி கே சிவக்குமார் அவர்களுக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பதிலடி கொடுப்பது என்னவென்றால், தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி பங்கேற்று தண்ணீரை கர்நாடக அரசு அங்கு உள்ள அணைகளில் தேக்கி வைக்க எந்த தார்மீக உரிமையும் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திற்கு உண்டான காவிரி பங்கேற்று தண்ணீரை தினம்தோறும் விகிதாச்சார அடிப்படையில் திறக்க வேண்டும். மேலும் தமிழகத்தை பொறுத்தவரை காவிரி ஆற்றின் பாசனப்பகுதி பெரும்பாலும் குருவை, சம்பா மற்றும் தாளடி இரு போகத்தை சாகுபடி பொருத்தவரை ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் ஏக்கருக்கும் மேல் பாசன பகுதி உள்ளது. காவிரி ஆற்றின் பொருத்தமட்டில் முழு உரிமையும் தமிழ்நாட்டிற்கே உள்ளது. என கர்நாடகா அரசு நன்கு உணர வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சி செய்து அதற்கான பணி தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டால் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க தமிழக விவசாயிகள் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். இதற்காக இரத்தம் சிந்தவும் தயங்க மாட்டோம். மேலும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தலைமையிலான தமிழக விவசாயிகளின் மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி வந்து மேகதாட்டில் அணை கட்டினால் தகர்த்தெறிவோம் என்று அறிக்கையின் வாயிலாக கர்நாடகா அரசை மிகக் கடுமையாக எச்சரிக்கின்றேன் என்று தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி பதிவிட்டுள்ளார்.
செவ்வாய், 19 மே, 2026
சேலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.அருள் த.வெ.க வில் இணைவது உண்மையல்ல எந்த கட்சிக்கும் செல்லவில்லை. சேலம் மாவட்ட பாமக இளைஞரணி செயலாளர் விஜயகுமார் திட்டவட்டம்.
சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
சேலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.அருள் த.வெ.க வில் இணைவது உண்மையல்ல எந்த கட்சிக்கும் செல்லவில்லை. சேலம் மாவட்ட பாமக இளைஞரணி செயலாளர் விஜயகுமார் திட்டவட்டம்.
சேலம் மாணவர் மாவட்ட பாமக மாவட்ட செயலாளராக இருப்பவர் இரா அருள். இவர் ஏற்கனவே பாமகவில் பிளவு ஏற்படாத பட்சத்தில் சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்றார். இதனை எடுத்து பாமகவில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக கட்சியில் பிளவு ஏற்பட்டது. இதனை அடுத்து கட்சியை நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சிலர் மேற்கு தொகுதியில் குக்கர் சின்னத்தில் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற இரா அருள் மீண்டும் களம் கண்டார். ஏற்கனவே தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வீடு தேடி சென்று கோரிக்கைகளை பெற்று நிவர்த்தி செய்தது உள்ளிட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து இருந்தாலும் கூட அவர் வெற்றிவாக சுடவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் வீசிய சூறாவளியில் தமிழக வெற்றி கழகம் அனைத்து திராவிட கட்சிகள் உட்பட பெரும்பாலான கட்சிகளை சின்னாபின்னமாகி இன்று மிகப்பெரும் கட்சியாக தமிழகத்தில் உருவெடுத்து அதன் கட்சியின் தலைவர் முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் சேலம் மாநகர் மாவட்ட பாமக செயலாளர் முன்னாள் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா அருள் கட்சியை விட்டு விலகுவதாக நேற்று செய்திகள் வெளியாகின. இதை எடுத்து சில ஊடகங்கள் யூகத்தின் அடிப்படையில் பாமகவிலிருந்து விலகிய இரா அருள் தமிழக வெற்றி கழகத்தில் இணைவார் என்ற செய்தியை வெளிப்படுத்தி வந்த வண்ணமே இருந்தது. இதற்கு இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ள சேலம் மாநகர் மாவட்ட பாமக இளைஞரணி செயலாளர் விஜயகுமார். அவர் கூறியிருப்பதாவது, அரசியல் கட்சி மாற்றம் க
குறித்து எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில், அவர் கட்சி மாறுகின்றார் என்ற தகவல் உண்மைக்கு புறம்பானது என்று மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜயகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
திங்கள், 18 மே, 2026
தேசிய ஒடுக்கபட்ட மக்கள் குடியரசு ( இந்தியா ) இயக்கத்திற்கு அந்த வாய்ப்பு கொடுத்தால் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் நிகழ்ந்து கொண்டு இருக்கும் ஊழல் புகார்களை, உண்மை அறியும் குழ ( FACT FINDING COMMITTEE ) அமைத்து மாதம் ஒரு உண்மை ஊழல் அறிக்கை தமிழக முதல்வருக்கு நேர்மையாக உண்மையாக அளிக்கபடும். தமிழக முதல்வருக்கு தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவிராமசாமி வேண்டுகோள்.
சேலம்,
S.K. சுரேஷ் பாபு.
தேசிய ஒடுக்கபட்ட மக்கள் குடியரசு ( இந்தியா ) இயக்கத்திற்கு அந்த வாய்ப்பு கொடுத்தால் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் நிகழ்ந்து கொண்டு இருக்கும் ஊழல் புகார்களை, உண்மை அறியும் குழ ( FACT FINDING COMMITTEE ) அமைத்து மாதம் ஒரு உண்மை ஊழல் அறிக்கை தமிழக முதல்வருக்கு நேர்மையாக உண்மையாக அளிக்கபடும். தமிழக முதல்வருக்கு தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவிராமசாமி வேண்டுகோள்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அருகில், தமிழக முதல்வர் அவர்களே, தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களிலும் கல்வி, மருத்துவம், அரசு துறைகளில் ஊழல் மலிந்து போய் உள்ளது. இதை தடுக்க பதியதாக ஊழல் தடுப்பு துறை உருவாக்கபட வேண்டும். திரு சகாயம் போல் நேர்மையான அதிகாரிகளை நியமித்து 38 மாவட்ட குழ அமைக்கபட வேண்டும். மாதம் ஒரு முறை குழ கூடி அந்தந்த மாவட்ட ஊழல் விசயங்களை ஆதாரத்துடன் பட்டியலிட்டு அறிக்கை முதல்வருக்கு அளிக்கபட வேண்டும். என தேசிய ஒடுக்கபட்ட மக்கள் குடியரசு ( இந்தியா ) இயக்கத்திற்கு அந்த வாய்ப்பு கொடுத்தால் 38 மாவட்டங்களில் உண்மை அறியும் குழ ( FACT FINDING COMMITTEE ) அமைத்து மாதம் ஒரு உண்மை ஊழல் அறிக்கை தமிழக முதல்வருக்கு நேர்மையாக உண்மையாக அளிக்கபடும் என்றும் கோரிக்கையின் வாயிலாக தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி ராமசாமி பதிவுத்துள்ளார்.


