Latest

புதன், 29 ஏப்ரல், 2026

கடந்த காலங்களில் கருத்து கணிப்புகள் பெரும்பாலும் பொய்யான வரலாறு உள்ளது. எனவே கருத்துக்கணிப்பை விவசாயிகள் யாரும் வரவேற்கவில்லை. உழவர் பெருந்தலைவர்  நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி கருத்து.

கடந்த காலங்களில் கருத்து கணிப்புகள் பெரும்பாலும் பொய்யான வரலாறு உள்ளது. எனவே கருத்துக்கணிப்பை விவசாயிகள் யாரும் வரவேற்கவில்லை. உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி கருத்து.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

கடந்த காலங்களில் கருத்து கணிப்புகள் பெரும்பாலும் பொய்யான வரலாறு உள்ளது. எனவே கருத்துக்கணிப்பை விவசாயிகள் யாரும் வரவேற்கவில்லை. உழவர் பெருந்தலைவர்  நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி கருத்து.

17 வது தமிழக சட்டப்பேரவை காண தேர்தல் கடந்த 23ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழக முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்திய அளவில் நடைபெற்ற ஐந்து மாநில தேர்தல்களில் இரண்டாவது வரலாற்றுச் சாதனையாக தமிழகத்தில் 85.15% வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கை தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அதன் அடிப்படையில்,  
தற்போது தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய  கருத்து கணிப்பு என்பது இது ஒரு கருத்து திணிப்பு. இதை விவசாயிகள், பொதுமக்கள் யாரும் நம்பவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில்  தி‌.மு.க ஆட்சியில் தமிழக விவசாயிகளுக்கு தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்ததை எதுவும் நிறைவேற்றாமல் தமிழக விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டதன்  காரணமாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை என உணர்ந்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் அனைவரும் ஒரே நிலைப்பாட்டோடு அணி வகுத்து திரண்டு நின்று அ.தி.மு.க கட்சி பொதுச்செயலாளர் மாண்புமிகு. எடப்பாடி K.பனிழனிசாமி அவர்கள்தான் 2026 ல் தமிழக முதல்வராக வரவேண்டும். தமிநாட்டிற்கு நல்லாட்சி தரவேண்டும் என்ற தாரக மத்திரத்தோடு தமிழக விவசாயிகள் அனைவரும் குடும்பம், குடும்பமாக கடந்த 23-ந் தேதி அன்று வாக்குசாவடி சென்று தனது ஜனநாயக கடமையை ஆற்றி வாக்களித்துள்ளார்கள் என்பதை இந்த அறிக்கையின் வாயிலாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில்  தெரிவித்துக்கொள்கிறேன்.
முந்தைய காலங்களில் இதுபோன்ற கருத்து கணிப்புகள் பெரும்பாலும் பொய்யான வரலாறு உள்ளது. எனவே கருத்துக்கணிப்பை விவசாயிகள் யாரும் வரவேற்கவில்லை. ஜனநாயகத்தை நிலைநாட்டும் செயல் வாக்குப்பதிவு. அதன் முடிவு வாக்கு எண்ணிக்கையில் தெரிந்துவிடும். இடையில் வரும் குழப்பங்களை பெதுமக்களும் நப்பவேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம் என்றும் தனது கருத்து பதிவில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய், 28 ஏப்ரல், 2026

காவிரி மேலாண்மை ஆணைய  கூட்டத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு தண்ணீரை தினந்தோறும் விகிதாசார அடிப்படையில் கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீரை   ஒழுங்காற்று குழுவின் மூலம் காவிரி தண்ணீரை ஆற்றில் திறந்துவிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி வலியுறுத்தல். காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டு விவசாயிகள் நலன் கருதி நடுநிலையாக செயல்படாமல் இருக்கும் பட்சத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தனது தலைமையில் காவிரி டெல்டா விவசாயிகளை மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி  கர்நாடகா சென்று அங்குள்ள அணைகளில் தமிழ். நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு தண்ணீரை திறப்போம்  என்றும் முன்னெச்சரிக்கை.

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு தண்ணீரை தினந்தோறும் விகிதாசார அடிப்படையில் கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீரை ஒழுங்காற்று குழுவின் மூலம் காவிரி தண்ணீரை ஆற்றில் திறந்துவிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி வலியுறுத்தல். காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டு விவசாயிகள் நலன் கருதி நடுநிலையாக செயல்படாமல் இருக்கும் பட்சத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தனது தலைமையில் காவிரி டெல்டா விவசாயிகளை மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி கர்நாடகா சென்று அங்குள்ள அணைகளில் தமிழ். நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு தண்ணீரை திறப்போம் என்றும் முன்னெச்சரிக்கை.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

காவிரி மேலாண்மை ஆணைய  கூட்டத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு தண்ணீரை தினந்தோறும் விகிதாசார அடிப்படையில் கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீரை   ஒழுங்காற்று குழுவின் மூலம் காவிரி தண்ணீரை ஆற்றில் திறந்துவிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி வலியுறுத்தல். காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டு விவசாயிகள் நலன் கருதி நடுநிலையாக செயல்படாமல் இருக்கும் பட்சத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தனது தலைமையில் காவிரி டெல்டா விவசாயிகளை மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி  கர்நாடகா சென்று அங்குள்ள அணைகளில் தமிழ். நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு தண்ணீரை திறப்போம்  என்றும் முன்னெச்சரிக்கை.

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். 
அந்த அறிக்கையில், காவிரி மேலாண்மை ஆணையம்  50 வது கூட்டம் இன்று புதுடெல்லியில் நடைபெறவுள்ளது தற்போது தமிழ்நாட்டில் கடுமையான வறட்சியின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடியில் இருந்து வெகுவாக சரிந்துள்ளது. வருகின்ற ஜீன் மாதம் 12 ந் தேதி தமிழகத்தில் உள்ள காவிரி டெல்டா  விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய தமிழ்நாடு அரசு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டியுள்ளது இன்று காவிரி மேலாண்மை ஆணைய  கூட்டத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு தண்ணீரை தினந்தோறும் விகிதாசார அடிப்படையில் கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீரை   ஒழுங்காற்று குழுவின் மூலம் காவிரி தண்ணீரை ஆற்றில் திறந்துவிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
காவிரி மேலாண்மை ஆணையம், உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு தண்ணீரை இனிவரும் காலங்களில் முறையாக தினந்தோறும் விகிதாசார அடிப்படையில் திறந்துவிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டு விவசாயிகள் நலன் கருதி நடுநிலையாக செயல்படாமல் இருக்கும் பட்சத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் எனது தலைமையில் காவிரி டெல்டா விவசாயிகளை மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி  கர்நாடகா சென்று அங்குள்ள அணைகளில் தமிழ். நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு தண்ணீரை திறப்போம் என காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முன்னெச்சரிக்கையாக இந்த தகவலை  நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டில் அணைகட்டும் என தெரிவிக்கும் நிலைப்பாட்டிற்கு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இன்று எந்த ஒரு அனுமதியும் கர்நாடக அரசுக்கு வழங்கக்கூடாது எனவும் இந்த செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன் என்று உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிவுறுத்தலையும் எச்சரிக்கையையும் பதிவிட்டுள்ளார்.

.


திங்கள், 27 ஏப்ரல், 2026

2026 ஆம் ஆண்டிற்கான நாலெட்ஜ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி வேலைவாய்ப்பு தினம் மற்றும் பணி நியமன ஆணை வழங்கும் விழா.

2026 ஆம் ஆண்டிற்கான நாலெட்ஜ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி வேலைவாய்ப்பு தினம் மற்றும் பணி நியமன ஆணை வழங்கும் விழா.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

2026 ஆம் ஆண்டிற்கான நாலெட்ஜ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி வேலைவாய்ப்பு தினம் மற்றும் பணி நியமன ஆணை வழங்கும் விழா.

சேலம் மாவட்டம் காக்காபாளையம் அருகே உள்ள நாலெட்ஜ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் 14வது வேலைவாய்ப்பு நாள் விழா, கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு KIOT அறக்கட்டளையின் செயலாளர் டாக்டர். ஜே. குமார் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களான, சென்னை TCS நிறுவனத்தின் கல்வி கூட்டணிகள் குழுவின் உலகளாவிய தலைவர் டாக்டர். சுசீந்திரன் கே.எம்., சென்னை ராக்கெட் இந்தியா நிறுவனத்தின் தொழில்நுட்பத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் திரு. மோகன்பாபு பாலச்சந்திரன், பெங்களூரு HCL டெக் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் மற்றும் தயாரிப்புப் பொறியியலுக்கான உலகளாவிய தலைவர் டாக்டர். தனசேகரன் ராதாகிருஷ்ணன் மற்றும் பெங்களூரு குவெஸ்ட் குளோபல் நிறுவனத்தின் மேம்பாட்டுக் குழுவின் முன்னணி பல்கலைக்கழக உறவுகள் தலைவர் திரு. எஸ். தீபக் குமார் ஆகியோர், 700க்கும் மேற்பட்ட இறுதி ஆண்டு பி.இ., பி.டெக். மற்றும் எம்.பி.ஏ. மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி கடிதங்களை வழங்கினர்.
மாணவர்களிடையே உரையாற்றியபோது, டாக்டர்.சுசீந்திரன் கே.எம், மோகன்பாபு, பாலச்சந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.
KIOT அறக்கட்டளையின் நிறுவனரும் தலைவரும், கல்லூரியின் நிர்வாகத் தலைவருமான டாக்டர் பி.எஸ்.எஸ். சீனிவாசன், இந்நிறுவனம் பின்பற்றும் பல்வேறு புதுமையான பயிற்சி மாதிரிகள் சிறந்த வேலை வாய்ப்பு முடிவுகளுக்கு வழிவகுத்துள்ளதாகவும், மேலும், உலகளாவிய சவால்கள் இருந்தபோதிலும், இந்நிறுவனம் 90%-க்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை வழங்கி, சராசரியாக 24.10 லட்சம் ரூபாயும், அதிகபட்சமாக 18.50 லட்சம் ரூபாய் சம்பளமும் அளித்துள்ளதாகவும் பேசினார்.
கல்லூரியில் வழங்கப்படும் பிரத்யேகப் பயிற்சிகள் மற்றும் முன்னணி நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் ஹேக்கத்தான் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவதன் காரணமாக மாணவர்களுக்குச் சிறந்த வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளதாக அந்த நிறுவனத்தின் முதல்வர் டாக்டர் கே. விசாகவேல் தெரிவித்தார்.
வேலைவாய்ப்பு மற்றும் தொழில்-நிறுவன கலந்துரையாடல் இயக்குனர் டாக்டர் பி. ராஜேந்திரன், KIỚT-இன் வேலைவாய்ப்பு சாதனைகளை எடுத்துரைத்தார். டெக் மஹிந்திரா, அமெரிக்கன் மெகா டிரெண்ட்ஸ், ஹெக்ஸாவேர், ஹரிதா டெக்செர்வ், சிட்டி யூனியன் வங்கி மற்றும் பிற முன்னணி தகவல் தொழில்நுட்பம் மற்றும் கோர் நிறுவனங்கள் வளாகத்தில் ஆள்சேர்ப்பு நடத்தி மாணவர்களுக்கு பணி நியமனக் கடிதங்களை வழங்கியதை அவர் எடுத்துரைத்தார்.
KIOT அறக்கட்டளையின் பொருளாளர் திரு. வி. சுரேஷ் குமார், செயற்குழு உறுப்பினர் திரு. செங்கோட்டுவேல் மற்றும் MBA இயக்குநர் டாக்டர் ஏ. ஸ்டீபன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சேர்க்கை கடிதங்களைப் பெற்ற மாணவர்கள், கல்லூரி வழங்கிய பல்வேறு பயிற்சிகள் மூலமாகவே தங்களுக்குச் சிறந்த வேலை வாய்ப்புகள் கிடைத்ததாகக் கூறி, கல்லூரி நிர்வாகத்திற்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர். KIOT அறக்கட்டளையின் அறங்காவலர்கள், இயக்குநர்கள், பல்வேறு துறைகளின் தலைவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

வியாழன், 23 ஏப்ரல், 2026

திருமண கோலத்தில் ஜனநாயக கடமை ஆற்றிய சேலம் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அஜித் சாக்கோ.

திருமண கோலத்தில் ஜனநாயக கடமை ஆற்றிய சேலம் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அஜித் சாக்கோ.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

திருமண கோலத்தில் ஜனநாயக கடமை ஆற்றிய சேலம் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அஜித் சாக்கோ. 

2026 ஆம் ஆண்டிற்கான சட்டப் பேரவை தேர்தல், தமிழக முழுவதும் என்று ஒரே கட்டமாக நடைபெற்றது. நான்கு முனை போட்டி நிலவிய, சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்கு சாவடி மையங்களில் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். அந்த வகையில்,  தமிழகத்தில் தமிழகத்தில் தேர்தல் திருவிழா ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்க,  இன்று அதே நாளில் முக்கிய முகூர்த்த நாளும் கூட. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியவர். 
இது ஒரு புறம் இருக்க, முக்கிய சுப முகூர்த்த நாளான இன்று அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதா கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அஜித் சாக்கோவிற்கு இன்று திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு சுப முகூர்த்த உடையிலேயே கணவனும் மனைவியுமாக அஜித் சாக்கோ தம்பதியினர், ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட, சேலம் மாவட்டம் வலசையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடி மையத்திற்கு வந்திருந்தனர். அப்போது ஜனநாயக கடமை ஆற்ற நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளர் பெருமக்களும், பாதுகாப்பிற்கு நின்றிருந்த காவல்துறையினரும், தேர்தல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதிகாரிகள் உட்பட பணியாளர்களும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இதனை அடுத்து தங்களது வாக்குச்சாவடிக்குள் சென்ற புதுமண தம்பதியினர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குப்பதிவில் கலந்து கொண்டனர். 
திருமணம் முடித்த கையோடு சேலம் கிழக்கு மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளரும் வழக்கறிஞருமான அஜித் சாக்கோ தனது மனைவியுடன் திருமண கோலத்தில் வாக்களிக்க வந்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது என்பது மட்டும் நிதர்சனம். காலை 7 மணிக்கு மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6:00 மணிக்கு நிறைவு பெற்றது. அந்த வகையில் ஆறு மணி நிலவரப்படி தமிழக முழுவதும் 84.51 விழுக்காடு வாக்குகளும், இதேபோல 11 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சேலம் மாவட்டத்தில் 90.28 விழுக்காடு வாக்கு பதிவு நடைபெற்று வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது கூடுதல் தகவலாக உள்ளது.
17வது தமிழக சட்டப்பேரவை காண தேர்தலில் தனது மனைவியுடன் ஜனநாயக கடமையாற்றிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர பக்தனான சேலத்தைச் சேர்ந்த பாரப்பட்டி கனகராஜ்.

17வது தமிழக சட்டப்பேரவை காண தேர்தலில் தனது மனைவியுடன் ஜனநாயக கடமையாற்றிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர பக்தனான சேலத்தைச் சேர்ந்த பாரப்பட்டி கனகராஜ்.

சேலம். 
S.K. சுரேஷ் பாபு. 

17 வது தமிழக சட்டப்பேரவை காண தேர்தலில் தனது மனைவியுடன் ஜனநாயக கடமையாற்றிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர பக்தனான சேலத்தைச் சேர்ந்த பாரப்பட்டி கனகராஜ். 

தமிழக சட்டப்பேரவைக்கான முதல் சட்டமன்றத் தேர்தல் கடந்த 1952 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 2026 ஆம் ஆண்டிற்கான 17 வது, சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக இன்று தமிழக முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனிடையே சேலம் மாவட்டத்தில் உள்ள ரஜினி ரசிகர்கள் தாங்களாக முன்வந்து சேலத்தை சேர்ந்த ரஜினியின் தீவிர பக்தனாக பாரப்பட்டி கனகராஜ் தலைமையில் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அதிமுக தலைமையான கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஏற்கனவே, இரண்டாயிரத்திற்கு அதிகமான ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று, எடப்பாடி யார் அவர்களின் இல்லத்தில்  அறிவித்திருந்தனர்.
அந்த வகையில் சமீப தினங்களாக சேலம் மாவட்டத்தின் 11 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு தீவிர சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து அதிமுக கூட்டணிக்கு வாக்கு சேகரிக்க ரஜினியின் தீவிர ரசிகர்கள் சேலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டதை தமிழகமே திரும்பி பார்த்தது. அந்த வகையில் தேர்தல் நாளான இன்று ரஜினியின் தீவிர பக்தன் பாரப்பட்டி கனகராஜ் மற்றும் திருமதி பாரப்பட்டி கனகராஜ் ஆகியோர் சேலம் வீரபாண்டி தொகுதிக்கு உட்பட்ட பாரப்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். 
மேலும் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகள் உட்பட தமிழகத்தில் பெரும்பாலான தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்று அதிமுக தலைமையிலான ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமையும் என்றும் பாரப்பட்டி கனகராஜ் நம்பிக்கை தெரிவித்தார்.

திங்கள், 20 ஏப்ரல், 2026

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, சேலம் மாவட்டத்தை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சந்தித்து ஆதரவு தெரிவித்த நிகழ்வு.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, சேலம் மாவட்டத்தை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சந்தித்து ஆதரவு தெரிவித்த நிகழ்வு.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, சேலம் மாவட்டத்தை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சந்தித்து ஆதரவு தெரிவித்த நிகழ்வு.

அகில உலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர பக்தரான சேலம் பாரப்பட்டி கனகராஜ்  தனது ஆதரவாளர்கள் ஆயிரத்திற்கும்  மேற்பட்டோருடன் சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து, வரும் சட்டமன்ற தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகர்களான தங்களின் ஆதரவை தெரிவித்தனர். முன்னதாக கந்தம்பட்டி பைபாஸ் பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் அதிகமான தனது ஆதரவாளர்கள் உடன் ஊர்வலமாக வந்த ரஜினி பக்தன் கனகராஜ் நெடுஞ்சாலை நகரில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை சந்தித்து தங்களது முழு ஆதரவினை 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வழங்கினர்.
பொன்னாடை போர்த்தியும் பூங்கொத்து கொடுத்தும் ஆதரவு கடிதத்தினை வழங்கிய பாரப்பட்டி கனகராஜ் அவர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது அவர் செய்தியாளரிடம் கூறுகையில், அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து ஒரு வருடத்திற்கு முன்பு  முடிவெடுத்து தலைமைக்கு கடிதம் அனுப்பி உள்ளதாகவும், இது தன்னுடைய தனிப்பட்ட முடிவு என்றும், சேலம் மாவட்டத்தில் மட்டும் 11 தொகுதிகளிலும்  ரஜினி ரசிகர்கள் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கனகராஜ் தெரிவித்தார்.

சனி, 18 ஏப்ரல், 2026

11 சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ரஜினி ரசிகர்கள். தொகுதி முழுவதும் ரஜினி ரசிகர்களுக்கு மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.

11 சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ரஜினி ரசிகர்கள். தொகுதி முழுவதும் ரஜினி ரசிகர்களுக்கு மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

11 சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ரஜினி ரசிகர்கள். தொகுதி முழுவதும் ரஜினி ரசிகர்களுக்கு மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு. 

2026 சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 11 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சேலம் மாவட்டத்தில் அதிமுக திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நற்பணி மன்றம் கலைக்கப்பட்டாலும் கூட, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர பக்தரான பாரப்பட்டி கனகராஜ் தலைமையிலான ரஜினி ரசிகர்கள், அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடிக்கு பழனிச்சாமி அவர்களை சந்தித்து சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் ரஜினி ரசிகர்கள் ஆகிய நாங்கள் முழு ஆதரவு வழங்குவதாக ஏற்கனவே தெரிவித்து இருந்தனர். 
அந்த வகையில் கடந்த சில நாட்களாக 11 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர்கள், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிடும் அதிமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அதிமுக அரசின் சாதனைகள் குறித்தும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு பணிக்காக சென்ற ரஜினி ரசிகர்களுக்கு சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து ஆரத்தி எடுத்தும் பட்டாசுகளை வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். 
இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் ரஜினி ரசிகர்கள் மாவட்டம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு என்டிஏ கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக ஆதரவு திரட்டுவதும் வாக்குகளை சேகரிப்பதும் மாவட்ட மக்களிடையே மிகுந்து வரவேற்பினை பெற்றுள்ளது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. இந்த நிகழ்ச்சிகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகர்களும் நிர்வாகிகளுமான புருஷோத்தமன் இளம்பிள்ளை சின்னமணி, சூரமங்கலம் செல்வராஜ், குருமூர்த்தி, கிச்சிபாளையம் ரமேஷ், ராமன், சுக்கம்பட்டி பிரபு, தமிழ், பூபதி சித்தன், சண்முகம், நவீன் தங்கராஜ், யோகா ராஜா,சேட்டு ஸ்ரீதர், சீனி மற்றும் ஆலமரத்தான் உள்ளிட்ட ஏராளமானூர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.