Latest

செவ்வாய், 12 மே, 2026

சேலத்தில் பேரன்களின் ஆசைகளை நிறைவேற்றும் விதமாக இனிப்புகளை வழங்கி கொண்டாடி நிறைவேற்றிய தாத்தா. தமிழக விவசாயிகளின் பிரதான கோரிக்கையான காவிரி கோதாவரி இணைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சிவபெருமாள் வேண்டுகோள்.

சேலத்தில் பேரன்களின் ஆசைகளை நிறைவேற்றும் விதமாக இனிப்புகளை வழங்கி கொண்டாடி நிறைவேற்றிய தாத்தா. தமிழக விவசாயிகளின் பிரதான கோரிக்கையான காவிரி கோதாவரி இணைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சிவபெருமாள் வேண்டுகோள்.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் பேரன்களின் ஆசைகளை நிறைவேற்றும் விதமாக இனிப்புகளை வழங்கி கொண்டாடி நிறைவேற்றிய தாத்தா. தமிழக விவசாயிகளின் பிரதான கோரிக்கையான காவிரி கோதாவரி இணைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சிவபெருமாள் வேண்டுகோள். 

தமிழகத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய சூறாவளியில் சிக்கி பிரதான கட்சிகளான திமுக அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் சின்னாபின்னமாக்கி, தமிழக முதல்வராக பொறுப்பேற்றார் கட்சியின் தலைவர் விஜய். ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத போதும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மற்றும் விசிக ஒலிக்க கட்சிகளின் ஆதரவால் தமிழக முதலமைச்சராக விஜய் நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். இந்த நிகழ்வை தமிழக முழுவதும் உள்ள விஜய் ரசிகர்களால் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில், சேலத்தில் தமிழக விவசாயிகளின் சங்க மாநில தலைவர் சிவபெருமாள் அவர்களின் பேரன்களும் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றத்தை கொண்டாடும் விதமாக இனிப்புகளை வழங்கி கொண்டாட வேண்டும் என்று தனது தாத்தாவிடம் கேட்டுள்ளனர். 
இதற்கு இசைவு தெரிவித்து தமிழக விவசாயிகளின் சங்க மாநில தலைவர் சிவபெருமாள், சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள உணவு விடுதி ஊழியர்கள், அந்த பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், தேநீர் கடைக்காரர்கள் மற்றும் காவல் துறையினர் என அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி கொண்டாடி பேரண்களின் ஆசையை பூர்த்தி செய்து வைத்த நிகழ்வு அந்தப் பகுதியில் இடையே மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது. இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சிவபெருமாள் நம்முடைய கூறுகையில், 17 வது தமிழக சட்டப்பேரவைக்கான முதல் அமைச்சராக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கு முதற்கண் தங்களது அமைப்பான தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் இதனை வரவேற்கும் விதமாக இன்று இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டதாகவும் தெரிவித்தார். 
மேலும் தமிழக விவசாயிகளின் தீர்க்கப்படாத கோரிக்கைகள் பல தற்பொழுது வரை தீர்க்கப்படாமல் இருப்பதாகவும், தற்பொழுது உள்ள சூழலில் தமிழக முதலமைச்சர் அவர்களையும் தமிழக விவசாயத்துறை அமைச்சர் அவர்களையும் சந்திக்கும் ஒரு தருவாய் கிடைக்கும் பட்சத்தில் அவர்களிடம் மூன்று பிரதான முக்கிய கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாக தெரிவித்த சிவபெருமாள், தமிழக விவசாயிகளின் பிரதான கோரிக்கையான காவிரி கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றினால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து என்பது எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும் என்றும் ஆகவே கர்நாடகாவிடம் பாசன நீருக்காக கையேந்தும் அவசியம் தமிழக விவசாயிகளுக்கு ஏற்படாது என்று குறிப்பிட்டதோடு மேகதாதுவேல் கர்நாடகா அரசு அணை கட்டினால் என கட்டவில்லை என்றால் என்ற ஒரு சூழலும் உருவாகும் ஆகவே தமிழக முதல்வரையும் தமிழக விவசாயத் துறை அமைச்சரையும் சந்திக்கும் தருவாயில் இந்த கோரிக்கையை முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவித்த அவர் 100 நாள் வேலை திட்டத்தில் 124 நாட்கள் என  மாறுதல்கள் செய்த போதிலும்  குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளையும் சேர்க்க வேண்டும் கூலி குறைவு என பல சிக்கல்கள் உள்ளதால் தமிழக விவசாயிகளுக்கு 124 வேலை திட்டத்தில் பணி வழங்குவதோடு அவர்கள் ஏற்கனவே பணியாற்றும் பணியிடத்தில் பணியாற்றும்போது அவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் இதற்கு தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் மற்றும் தமிழக விவசாயிகள் விளைவிக்கும் காய்கறி கனி வகைகளுக்கு உரிய விலை கிடைப்பது இல்லை சார்பாக கத்தரி தக்காளி செடி விதைகளை இலவசமாக தமிழகம் முழுவதும் வழங்க வேண்டும் இது தமிழக விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது என்றும் சிவபெருமாள் தெரிவித்தார்.

ஞாயிறு, 10 மே, 2026

தமிழக  விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து விவசாயிகளின்  வாழ்வாதாரம் மேம்பட வழிவகை செய்வீர்கள் என நம்புகிறேன். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுச்சாமி தமிழக முதல்வருக்கு வாழ்த்து கடிதம்.

தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட வழிவகை செய்வீர்கள் என நம்புகிறேன். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுச்சாமி தமிழக முதல்வருக்கு வாழ்த்து கடிதம்.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழக  விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து விவசாயிகளின்  வாழ்வாதாரம் மேம்பட வழிவகை செய்வீர்கள் என நம்புகிறேன். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுச்சாமி தமிழக முதல்வருக்கு வாழ்த்து கடிதம்.

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி வெளியிட்டுள்ள வாழ்த்து மடலில், 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு மாற்றாக இன்று புதிதாக தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள மாண்புமிகு C. ஜோசப் விஜய் அவர்களுக்கு, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசாவது தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து, அவர்களுக்கு தீர்க்கப்படாத உள்ள நீண்ட நெடுநாள் கோரிக்கைகளை, விவசாயிகளின்  வாழ்வாதாரம் மேம்பட வழிவகை செய்வீர்கள் என நம்புகிறேன் என்று உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி வாழ்த்து மடலின் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.
சேலம் ஸ்ரீ ராமானுஜர் மணி மண்டபத்தில் சகஸ்ர 1001 கலசபிஷேக வைபவம். கங்கை முதலான புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் கிட்டும் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்பு.

சேலம் ஸ்ரீ ராமானுஜர் மணி மண்டபத்தில் சகஸ்ர 1001 கலசபிஷேக வைபவம். கங்கை முதலான புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் கிட்டும் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்பு.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் ஸ்ரீ ராமானுஜர் மணி மண்டபத்தில் சகஸ்ர 1001 கலசபிஷேக வைபவம். கங்கை முதலான புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் கிட்டும் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்பு. 

சேலம் எருமாபாளையத்தில்  உள்ள ஸ்ரீ பகவத் ராமானுஜர் கைங்கரிய சொசைட்டி ஸ்ரீ ராமானுஜர் மணி மண்டபத்தில் உலக நன்மை கருதி சகஸ்ர 11 கலசாபிஷேக வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று தொடங்கிய இந்த விழாவில் முதல் பூஜையாக கோ பூஜையுடன் தொடங்கியது. தொடங்கு மகா சுதர்சன ஹோமம் 1001 கலச ஸ்தாபடும் வேத பிரபந்த பாராயணம் சாற்றுமுறை உள்ளிட்ட நிகழ்வுடன் தொடங்கிய இந்த விழாவில் இன்று கோ பூஜை சுப்ரபாதம் விஸ்வரூபம் தோமாலை அர்ச்சனை திருவாராதனம் தீர்த்த பிரசாதம் உள்ளிட்டவைகள் நடைபெற்றது தொடர்ந்து ஸ்ரீ ரங்கநாத பெருமாள் உற்சவருக்கும் ஸ்ரீ ராமானுஜர் உற்சவருக்கும் 1001 சகஸ்ர கலச அபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றன. 
ஸ்ரீ ராமானுஜர் மணிமண்டபத்தில் மேல்கோட்டை ஸ்ரீ யதுகிரி, யதிராஜா 
நாராயண ராமானுஜர் ஜி எஸ் சுவாமிகள் திருக்கோவிலூர் எம்பெருமானார் தேஹளீச ராமானுஜர் ஜி எஸ் சுவாமிகள் மற்றும் திருச்சித்ர கூடம் ரங்காச்சாரியார் சுவாமிகள் திருக்கடையூர் நம்பிகள் சுவாமிகள் ஆகியோர் மங்களா சாசனத்துடன் நடைபெற்ற இந்த விழாவில், கங்கை முதலான புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் கிட்டும் எல்லா யாகங்களின் பலன் தீட்டும் எல்லா தானியங்களின் பலன் கிட்டும் அனைத்து பாவங்களையும் போக்க வல்லது என்பன உள்ளிட்ட 8 ம்ச காரணிகளின் காரணத்தால் சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கலசாபிஷேக விழாவினை சிறப்பித்தனர். 
விழா குறித்து ஸ்ரீ பகவத் ராமானுஜர் கைங்கரிய சொசைட்டியின் செயலர் முரளிதரன் கூறுகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சேலம் கோட்டை பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் பக்தி சபையினர் நடத்தியதற்கு பிறகு தற்பொழுது இப்பொழுதுதான் இந்த சகஸ்ர கலசாபிஷேக நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் இதில் கலந்துகொண்டால் ஏராளமான புண்ணியங்கள் கட்டும் என்பதால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு எம்பெருமானை வழிபட்டு சென்றதாக தெரிவித்தார். 
விழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர் ஸ்ரீராமன் பொருளாளர் நரசிம்மமூர்த்தி சேலம் ராமகிருஷ்ணா எலெக்ட்ரிக்கல்ஸ் ரவிச்சந்திரன் சேலம் ஜெயகிருஷ்ணா பெஸ்டிசைட்ஸ் பிரைவேட் லிமிடெட் இன் ரவி சுந்தர் மற்றும் துணைச் செயலாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.

வெள்ளி, 8 மே, 2026

சேலம் மாவட்ட ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக World Red Cross Day கொண்டாடப்பட்டம். JEAN HENDRY DUNANT திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடப்பட்டது.

சேலம் மாவட்ட ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக World Red Cross Day கொண்டாடப்பட்டம். JEAN HENDRY DUNANT திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடப்பட்டது.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சேலம் மாவட்ட ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக World Red Cross Day கொண்டாடப்பட்டம். JEAN HENDRY DUNANT திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடப்பட்டது.

ரெட் கிராஸ் சொசைட்டி நிறுவனர் JEAN HENDRY DUNANT அவர்களின் பிறந்த நாளை கௌரவிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் MAY 8 WORLD RED Cross Day ஆக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாள் போர் மற்றும் இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் மனிதாபிமானப் பணிகளைப் போற்றுகிறது. சேலம் மாவட்ட ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக இன்று World Red Cross Day கொண்டாடப்பட்டது. 
JEAN HENDRY DUNANT திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப் பட்டது . இந்த நிகழ்வில் சேலம் மாவட்ட  ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் ராஜா சுந்தர் சிங், செயலரும், சிந்தி இந்து தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியையும் ஆன திருமதி. T.லதா, துணை சேர்மன் ஜெய் சந்த் லோதா, மாநில பிரதிநிதி சகாயராஜ்,  ஜூனியர் ரெட் கிராஸ் கன்வீனர், பிரபாகர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

வியாழன், 7 மே, 2026

இந்த இக்கட்டான அரசியல் சூழலில் கம்னியூஸ்ட் கட்சிகள் மற்றும்  விசிக விற்கு தலா ஒரு மந்திரி பதவி. இந்த இக்கட்டான அரசியல் சூழலில் த. வெ.க தலைவர் விஜய் அவர்களுக்கு, தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவனரும் தலைவருமாள் சரஸ் ராம் ரவி, கோரிக்கை.

இந்த இக்கட்டான அரசியல் சூழலில் கம்னியூஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக விற்கு தலா ஒரு மந்திரி பதவி. இந்த இக்கட்டான அரசியல் சூழலில் த. வெ.க தலைவர் விஜய் அவர்களுக்கு, தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவனரும் தலைவருமாள் சரஸ் ராம் ரவி, கோரிக்கை.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு.

இந்த இக்கட்டான அரசியல் சூழலில் கம்னியூஸ்ட் கட்சிகள் மற்றும்  விசிக விற்கு தலா ஒரு மந்திரி பதவி. இந்த இக்கட்டான அரசியல் சூழலில் த. வெ.க தலைவர் விஜய் அவர்களுக்கு, தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவனரும் தலைவருமாள் சரஸ் ராம் ரவி, கோரிக்கை.

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான 17 வது தமிழக சட்டப்பேரவை அமைப்பதில் பிரதான கட்சிகள் இடையே பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் ஏற்கனவே ஆதரவு தெரிவித்து ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களை வழங்கி இருந்த நிலையில், தற்பொழுது விசிக இடதுசாரிகள் கட்சிகளுடன் த.வெ.க  தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்திய வண்ணமே உள்ளன. என்றாலும் இனமும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி, தமிழக வெற்றி கழக தலைவருக்கு கோரிக்கை ஒன்றினை முன் வைத்துள்ளார்.
அதில், ஒருவேளை இடதுசாரி கட்சிகளும், விடுதலை சிறுத்தை கட்சியும் ஆதரவு அளிக்கும் பட்சத்தில், கம்னியூஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக கட்சியின் தங்களது 6  உறுப்பினர்களும் TVK. ஆட்சி அமர  முழ ஆதரவு தரபட வேண்டும். கம்னியூஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக விற்கு தலா ஒரு மந்திரி பதவி வழங்க வேண்டும். திருச்சி இடை தேர்தலில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு TVK  ஆதரவு அளித்து  வெற்றி பெற செய்ய வேண்டும். தொல். திருமாவிற்கு துணை முதல்வர் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள சரஸ் ராம் ரவி அவர்கள் தமிழகம் காக்கபட வேண்டும் என்றும் தனது கோரிக்கை பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

புதன், 6 மே, 2026

சேலத்தில் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை பாராட்டு வழா.

சேலத்தில் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை பாராட்டு வழா.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தில் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை பாராட்டு வழா.

சிந்தி கல்விச் சங்கத்தின் சிந்தி இந்து உதவி பெறும் தொடக்கப் பள்ளி சேலம் நாராயண நகர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 1987 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை இடைநிலை ஆசிரியை ஆக பணியாற்றிய ஸ்ரீமதி சித்ரா மகேஸ்வரி ஆசிரியை பணி ஓய்வு பெற்றார். ஓய்வுபெறும் ஆசிரியைக்கு  பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 
பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி லதா தலைமையில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில், பள்ளியின் தலைவர் ஸ்ரீ. ராம்சந்த் டி கிங்கர், பள்ளியின் தாளாளர் ஸ்ரீ. நரேஷ் கே கிங்கர், பள்ளியின் செயலர்
திரு. மகேஷ் டி சாவ்லா மற்றும் பள்ளியின் பொருளாளர் மற்றும்திரு. தீபக் ஜி பத்திஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பணி ஓய்வு பெற்ற ஆசிரியைக்கு பொன்னாடை போர்த்தியும் நினைவு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர். தொடர்ந்து பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரிய பெருமக்கள் சார்பிலும் ஓய்வு பெற்ற ஆசிரியைக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டன. நிகழ்வில் அந்த பகுதியின் முக்கிய பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.


தமிழகத்தில் ஏற்பட்ட அலையில் சிக்கிய அனைத்து கட்சிகளையும் சின்னாபின்னம் ஆக்கியவர் த.வெ.க தலைவர் விஜய்.. 2026 இல் மாற்றத்தை விரும்பிய தமிழக மக்களுக்கு ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சியை நடத்த திராவிட கட்சிகள் எந்தவிதமான நெருக்கடிகளையும் கொடுக்கக் கூடாது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர பக்தனான பாரப்பட்டி கனகராஜ் பேட்டி.

தமிழகத்தில் ஏற்பட்ட அலையில் சிக்கிய அனைத்து கட்சிகளையும் சின்னாபின்னம் ஆக்கியவர் த.வெ.க தலைவர் விஜய்.. 2026 இல் மாற்றத்தை விரும்பிய தமிழக மக்களுக்கு ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சியை நடத்த திராவிட கட்சிகள் எந்தவிதமான நெருக்கடிகளையும் கொடுக்கக் கூடாது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர பக்தனான பாரப்பட்டி கனகராஜ் பேட்டி.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழகத்தில் ஏற்பட்ட அலையில் சிக்கிய அனைத்து கட்சிகளையும் சின்னாபின்னம் ஆக்கியவர் த.வெ.க தலைவர் விஜய்.. 2026 இல் மாற்றத்தை விரும்பிய தமிழக மக்களுக்கு ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சியை நடத்த திராவிட கட்சிகள் எந்தவிதமான நெருக்கடிகளையும் கொடுக்கக் கூடாது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர பக்தனான பாரப்பட்டி கனகராஜ் பேட்டி. 

2026 ஆம் ஆண்டிற்கான 17 வது தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது. குறுகிய காலத்தில் கட்சியை தொடங்கி ஆட்சி அமைத்த பெருமை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்களே சாரும். என்றாலும் இந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற த.வெ.க  உட்பட பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவிற்கு பெரும்பான்மை கிடைக்காத சூழலில், தற்பொழுது ஆட்சி அமைப்பதற்கு உண்டான 118 இடங்களை நிரூபிப்பதற்காக த.வெ.க பிரதான கட்சிகள் உட்பட சிறிய கட்சிகளிடம் ஆதரவு கோரி பேச்சுவார்த்தை நடைபெற்ற வண்ணமே உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தின் 17 ஆவது முதலமைச்சர் ஆக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நாளை பதவி ஏற்க உள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர பக்தனான பாரப்பட்டி கனகராஜ், நம்மிடையே கூறுகையில், தமிழக அரசியல் களத்தில் ரஜினிகாந்த் வராதது வெற்றிடமாகவே தற்போது வரை கருதப்படுவது குறித்தும் அவரது இடத்தை த.வெ.க தலைவர் விஜய் பூர்த்தி செய்துள்ளாரா என்ற என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பாரப்பட்டி கனகராஜ் பதில் அளிக்கையில், 
சூப்பர் ஸ்டார் அவர்கள் அரசியல் களத்திற்கு வராதது அந்த வெற்றிடம் தற்பொழுது வரை அப்படியே தான் இருந்து வருகிறது என்றும் குறிப்பிட்டார். மேலும் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக விஜய் அமர்வார் என யாரும் எதிர்பார்க்கவில்லை என்றும், 2026  சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் வீசி அலையின்  அடிப்படையில், சிக்கிய பிரதான கட்சிகள் உட்பட அரசியல் கட்சிகள் அனைத்தும் சிக்கி சின்னாபின்னம் ஆகிவிட்டது என்றார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் களத்திற்கு வந்து  வந்து கட்சி தொடங்கி இதுபோன்று தேர்தலை சந்தித்து இருந்தால் 150 இடங்களுக்கு மேலாக கிடைத்திருக்கும் என்றும், என்றாலும் தமிழகத்தின் 17 வது முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பொறுப்பேற்பதற்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மேலும் தற்பொழுது உள்ள சூழலில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் வேண்டும் ஆனால் 108 இடங்களில் மட்டுமே தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றதன் அடிப்படையில் பிரதான கட்சிகள் உட்பட சிறிய கட்சிகளிடம் ஆதரவு கோரி தமிழக வெற்றிக்கழகம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டுள்ளது என்றாலும், தமிழக வெற்றி கழகம் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ஐந்து ஆண்டுகள் சிறப்பாக பூர்த்தியாகும் என்று குறிப்பிட்ட பாரப்பட்டி கனகராஜ், எதிர்வரும் 5 ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும் என்பதோடு மட்டுமல்லாமல் தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து இந்த முடிவை தெரிவித்து இருக்கும் நிலையில் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக இந்த ஐந்து ஆண்டுகளும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்கும் விஜய் ஃப்ரீயாக பணியாற்ற எந்தவிதமான நெருக்கடிகளும் கொடுக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். 
தேர்தல் அறிக்கை என்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் பல அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தாலும் அதனை முழுமையாக செயல்படுத்தினாலே போதும் என்றும் கூடுதலாக புதிய திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்த வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் ஆக பொறுப்பேற்ற பிறகு தமிழக வெற்றி கணக்க தலைவர் விஜய் சேலம் வரும்போது அவரிடம் சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு கோரிக்கைகள் அவரிடம் ரஜினி ரசிகர்களின் சார்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர பக்தன் என்ற அடிப்படையில் எனது தலைமையில் கோரிக்கை மனு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.