Latest

செவ்வாய், 17 மார்ச், 2026

திருப்பி கொடுக்கணும் இல்ல.....தவேகா நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் கருத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பதிலடி.... ஆதவ் அர்ஜுனாவின் கருத்திற்கு த வெ க தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்து சூப்பர் ஸ்டாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் ஆதவ் அர்ஜுனாவிற்கு முற்றுப்புள்ளி வைப்போம். சேலத்தில் தீவிர ரஜினி ரசிகர் பாரப்பட்டி கனகராஜ் ஆவேசம்.

திருப்பி கொடுக்கணும் இல்ல.....தவேகா நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் கருத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பதிலடி.... ஆதவ் அர்ஜுனாவின் கருத்திற்கு த வெ க தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்து சூப்பர் ஸ்டாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் ஆதவ் அர்ஜுனாவிற்கு முற்றுப்புள்ளி வைப்போம். சேலத்தில் தீவிர ரஜினி ரசிகர் பாரப்பட்டி கனகராஜ் ஆவேசம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

திருப்பி கொடுக்கணும் இல்ல.....
தவேகா நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் கருத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பதிலடி.... ஆதவ் அர்ஜுனாவின் கருத்திற்கு த வெ க தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்து சூப்பர் ஸ்டாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் ஆதவ் அர்ஜுனாவிற்கு முற்றுப்புள்ளி வைப்போம். சேலத்தில் தீவிர ரஜினி ரசிகர் பாரப்பட்டி கனகராஜ் ஆவேசம். 

2026 தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிகழக நிர்வாகி ஆதவா அர்ஜுன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து அவரது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில்  தேவையற்ற அவதூறு கருத்துக்களை வெளியிட்டுள்ளது தமிழகத்தில் தற்பொழுது அரசியல் களத்தில் பேச்சு பொருள் ஆகியுள்ளது. இதற்கு தமிழக எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய இணை அமைச்சர் எல் முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் எதிராக பல்வேறு கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், தன் மீது அவதூறு கருத்துக்கள் பரப்பிய தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவிற்கு ரஜினி அறிக்கையின் வாயிலாக தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார். அதில் திரைப்படத்தில் இடம்பெறும் வசனத்தை முன்னுறுத்தி திருப்பி கொடுக்கணும் இல்ல... காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என்று ஆதார் அர்ஜுனாவிற்கு பதிலடி கொடுத்துள்ளார் உலக திரை உலகின் சூப்பர் ஸ்டாராக கருதப்படும் ரஜினிகாந்த் பதிலடி கொடுத்துள்ளார். ரஜினிகாந்தின் இந்த கண்டன பதிவு தமிழக அரசியல் களத்தில் மிகவும் ஒரு பரபரப்பான சூழ்நிலையில் தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக இவ்வளவு கண்டன அறிக்கை தற்பொழுது வெளியாகி உள்ளது என்பது ஒரு பரபரப்பு பேச்சு பொருளாகவே தற்பொழுது தமிழகத்தில் எழுந்துள்ளது. ரஜினிகாந்தின் இந்த தமிழக வெற்றி கழகத்திற்கு எதிரான இந்த கண்டன பதிவு, தமிழகம் உட்பட  ஏன் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள இந்த அவதூறு கருத்திருக்கு சேலம் மாவட்டமும் விட்டு வைக்கவில்லை. தற்பொழுது சேலத்திலும் இந்த பிரச்சனை பூதாகரமாக கிளம்பியுள்ளது.
சேலத்தை சேர்ந்த மிகப் பெரிய தொழில் அதிபரும் ரஜினியின் தீவிர பக்தருமான பாரப்பட்டி கனகராஜ் நம்முடைய கூறுகையில், அரசியலைக் கடந்து அனைவராலும் மதிக்கப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தமிழக வெற்றி கழக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் கட்சியை தொடங்குவதாக அறிவித்து பல்வேறு காரணங்களுக்காக அரசியல் இருந்து விலகியது அவரவருடைய விருப்பம் என்றும் குறிப்பிட்ட சேலம் பாரப்பட்டி கனகராஜ், தற்போது உள்ள சூழலிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்ற பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள ஆதவ் அர்ஜுனாவிற்கு ரஜினி ரசிகர்களாகிய நாங்கள் விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம் என்றும் குறிப்பிட்டார். மேலும் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்த அவர் அங்கும் தேவையில்லாத கருத்துக்களை வெளிப்படுத்தி தொல் திருமாவளவன் அவர்களால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆதவன் அர்ஜுனா தற்பொழுது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து தான் உண்டு, தன் பணி உண்டு என்று பயணித்துக் கொண்டிருக்கும் உலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மீது அவதூறு கருத்து பரப்பியதற்கு tvk தலைவர் நடிகர் விஜய் ஆதவ் அர்ஜுனாவை கண்டிப்பதோடு ஆதவ் அர்ஜுனா ரஜினிகாந்திடம் மன்னிப்பு கேட்க அறிவுறுத்த வேண்டும் என்று தனது கருத்தை வெளிப்படுத்திய சேலம் பாரப்பட்டி கனகராஜ் தவறும் பட்சத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தமிழக அரசியலில் இல்லை என்றாலும் அவர் கைகாட்டும் கட்சிக்கு வாக்களிக்க தமிழகத்தில் உள்ள அனைத்து ரஜினி ரசிகர்களும் சித்தமாக உள்ளனர் என்றும் அவர் கைகாட்டும் கட்சி மட்டுமே ஆட்சி அமைக்கும் முடியும் என்பது தமிழகத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த நிலையில் தேனீ கூட்டில் கல் எறிந்ததை போன்று ஆதம் அர்ஜுனா பேசியதன் விளைவை தமிழக வெற்றி கழகம் வரும்  2026 நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் த வெ க மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். 
சேலத்தில் ரஜினி ரசிகர்களின் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் கருத்திற்கு அகில உலக சூப்பர் ஸ்டார் என்று கருதப்படும் ரஜினிகாந்த் தனது அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ள கண்டனம் தமிழக வெற்றி கழகத்திற்கு உண்மையிலேயே இந்த சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை என்பது அரசியல் பிரமுகர்களின் கருத்தாகவே tஉள்ளது. ரஜினிகாந்த் என்ன திருப்பிக் கொடுக்கப் போகிறார் காலம் என்ன பதில் சொல்லும் என்பதை நாமும் பொருத்திருந்து பார்ப்போம்.

திங்கள், 16 மார்ச், 2026

விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஏழை எளிய சாமானிய மக்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகவும் அவர் அவர் சொந்த தேவையை பூர்த்தி செய்வதற்கு கொண்டு செல்லும் பணத்திற்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை நியமித்து நெருக்கடி நிலை உருவாக்குவதை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் இந்திய தேர்தல் அணையத்தை வன்மையாக கண்டிகிறது. விவசாயிகள் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்களுக்கு பல்வேறு நிலையில் நெருக்கடி நிலை உருவாக்கப்பட்டால் தமிழகத்தில் அடுத்த ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை அனைத்து தரப்பு மக்களும் வாக்களிக்காமல் தேர்தலை புறகணிப்பு செய்யும். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி பகிரங்க அறிவிப்பு தேர்தல் ஆணையத்திற்கு.

விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஏழை எளிய சாமானிய மக்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகவும் அவர் அவர் சொந்த தேவையை பூர்த்தி செய்வதற்கு கொண்டு செல்லும் பணத்திற்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை நியமித்து நெருக்கடி நிலை உருவாக்குவதை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் இந்திய தேர்தல் அணையத்தை வன்மையாக கண்டிகிறது. விவசாயிகள் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்களுக்கு பல்வேறு நிலையில் நெருக்கடி நிலை உருவாக்கப்பட்டால் தமிழகத்தில் அடுத்த ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை அனைத்து தரப்பு மக்களும் வாக்களிக்காமல் தேர்தலை புறகணிப்பு செய்யும். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி பகிரங்க அறிவிப்பு தேர்தல் ஆணையத்திற்கு.

சேலம்.
S.K. சுரேஷ் பாபு.

விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஏழை எளிய சாமானிய மக்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகவும் அவர் அவர் சொந்த தேவையை பூர்த்தி செய்வதற்கு கொண்டு செல்லும் பணத்திற்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை நியமித்து நெருக்கடி நிலை உருவாக்குவதை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் இந்திய தேர்தல் அணையத்தை வன்மையாக கண்டிகிறது. விவசாயிகள் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்களுக்கு பல்வேறு நிலையில் நெருக்கடி நிலை உருவாக்கப்பட்டால் தமிழகத்தில் அடுத்த ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை அனைத்து தரப்பு மக்களும் வாக்களிக்காமல் தேர்தலை புறகணிப்பு செய்யும். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி பகிரங்க அறிவிப்பு தேர்தல் ஆணையத்திற்கு.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று தமிழக தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியினை அறிவித்தது. அதன் அடிப்படையில் தேர்தல் விதிமுறைகள் அனைத்தும் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேலுசாமி அறிக்கையின் வாயிலாக வன்மையான கண்டனத்தை தமிழக தேர்தல் ஆணையத்திற்கு பதிவிட்டுள்ளார். 
அதன் அடிப்படையில் அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது, தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவு வருகிற ஏப்ரல் மாதம் 23.4.2026 அன்று நடைபெறவுள்ளதாக நேற்று மாலை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு விதிமுறைகள், தேர்தல் அறிப்பு வெளியான நேரத்தில் இருந்து அமுள் படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது விவசாயிகள் தான். விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளை பொருட்களை விற்பனை செய்த பின்பு பணம் எடுத்துச் செல்லும்போதும் தங்கள் கால்நடைகளை விற்பனை செய்து பணம் எடுத்துச் செல்லும் போதும் மேலும் புதிதாக கால்நடைகளை வாங்குவதற்காக பணம் எடுத்துச் செல்லும் போதும் விவசாய இடு பொருள்களை வாங்குவதற்கு பணம் எடுத்துச் செல்லும் போதும், ரூ.50,000 மேல் உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்துச் செல்கின்றனர். எனக்கூறி தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்வார்கள். அடுத்த வாரத்தில் ரமலான் பண்டிகையின் காரணமாக விவசாயிகள் தங்கள் கால்நடைகளை கால்நடை சந்தைகளில் விற்று வருவர் எந்த கால்நடை சந்தையிலும் கணினி ரசீது கொடுத்து வியாபாரம் செய்யப்படுவதில்லை. இதனால் கால்நடைகளை வாங்குவதற்கு வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வரத்து இல்லாமல் போகும் அதனால் கால்நடைகள் விலை குறையும் இதேபோல் வேளாண் விளைபொருள் வர்த்தகம் செய்ய வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் அதிகப்படியாக வரத்து இல்லாமல் விவசாயிகள் விளை பொருட்கள் விலை மிக குறையும் வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிட்டுள்ள தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுச்சாமி, 
இந்திய தேர்தல் ஆணையம் அரசியல்வாதிகள் தவறான முறையில் பயன்படுத்தும் நிதியை கண்காணிப்பு செய்யாமல் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஏழை எளிய சாமானிய மக்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகவும் அவர் அவர் சொந்த தேவையை பூர்த்தி செய்வதற்கு கொண்டு செல்லும் பணத்திற்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை நியமித்து நெருக்கடி நிலை உருவாக்குவதை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் இந்திய தேர்தல் அணையத்தை வன்மையாக கண்டிகிறது என்று இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தேர்தல் ஆணையத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ள அவர், மேலும் இதேபோல் தவறான முறையில் நடந்துகொண்டு விவசாயிகள் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்களுக்கு பல்வேறு நிலையில் நெருக்கடி நிலை உருவாக்கப்பட்டால் தமிழகத்தில் அடுத்த ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை அனைத்து தரப்பு மக்களும் வாக்களிக்காமல் தேர்தலை புறகணிப்பு செய்யும் நிலைமை உருவாகும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நினைவுபடுத்துகிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் தனது கண்டன  அறிக்கையில், R.வேலுசாமி.
மாநிலத் தலைவர்.
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளார்.
ஈகை திருநாளான புனித ரமலான் மாதத்தில் வரும் கண்ணியமிக்க இரவு. திருக்குர்ஆன் அருளப்பட்ட இந்த தினத்தில்  இஸ்லாமியர்களால் கடைபிடிக்கப்படும் இந்த புனித இரவுக்காக பள்ளி சிறார்களுக்கும் இயலாமையில் உள்ள கண்ணில் பட்டவர்களுக்கு எல்லாம் பொருள் உதவி செய்து மகிழ்ந்த சேலத்தின் மிகச்சிறந்த சமூக சேவகர்.

ஈகை திருநாளான புனித ரமலான் மாதத்தில் வரும் கண்ணியமிக்க இரவு. திருக்குர்ஆன் அருளப்பட்ட இந்த தினத்தில் இஸ்லாமியர்களால் கடைபிடிக்கப்படும் இந்த புனித இரவுக்காக பள்ளி சிறார்களுக்கும் இயலாமையில் உள்ள கண்ணில் பட்டவர்களுக்கு எல்லாம் பொருள் உதவி செய்து மகிழ்ந்த சேலத்தின் மிகச்சிறந்த சமூக சேவகர்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

ஈகை திருநாளான புனித ரமலான் மாதத்தில் வரும் கண்ணியமிக்க இரவு. திருக்குர்ஆன் அருளப்பட்ட இந்த தினத்தில்  இஸ்லாமியர்களால் கடைபிடிக்கப்படும் இந்த புனித இரவுக்காக பள்ளி சிறார்களுக்கும் இயலாமையில் உள்ள கண்ணில் பட்டவர்களுக்கு எல்லாம் பொருள் உதவி செய்து மகிழ்ந்த சேலத்தின் மிகச்சிறந்த சமூக சேவகர்.

உலக இஸ்லாமியர்களால் ஈகைத் திருநாளாக கொண்டாடப்படும் புனித ரமலான் திருவிழாவின் போது இஸ்லாமிய பெருமக்களால் பெரிதும் போற்றப்படும் கண்ணியமிக்க இரவு எனப்படும் லைலத்துல் கத்ர் என்ற பொருளுக்கான விளக்கம் கேட்டு சேலம் கோட்டை பகுதியை சேர்ந்த மிகச்சிறந்த சமூக சேவகரான கோட்டை ஷபி என்பவரை நமது செய்தி குழு அனுப்பியது. அப்பொழுது அவர் கூறியதாவது, லைலத்துல் கத்ர் (கண்ணியமிக்க இரவு) என்பது ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தில், குறிப்பாக ஒற்றைப்படை இரவுகளில் (21, 23, 25, 27, 29) வரக்கூடிய மிகவும் புனிதமான இரவாகும். இந்த இரவில் குர்ஆன் அருளப்பட்டது. ஆயிரம் மாதங்களை (சுமார் 83 ஆண்டுகள்) விட சிறந்த இந்த இரவில் செய்யும் வழிபாடு, பாவமன்னிப்பு மற்றும் பிரார்த்தனைகளுக்கு அதீத நன்மைகள் கிடைக்கும் என்று கூறிய கோட்டை ஷபி, லைலத்துல் கத்ரின் சிறப்புகள் மற்றும் முக்கிய தகவல்கள்கலாக அதன் பொருள் குறித்து கூறத் தொடங்கிய அவர்,'லைல்' என்றால் இரவு, 'கத்ர்' என்றால் கண்ணியம், சிறப்பு அல்லது விதித்தல் என்று பொருள்படும் என்றும் தெரிவித்தார். 
ஏற்கனவே தன் நலன் பாராமல் பிறர் நலனுக்காக வலது கை கொடுப்பதை இடது கை அறியாது என்ற பழமொழிக்கு ஏற்ப எவருக்கும் தெரியாமல் தன்னால் முடிந்தவரை ஈகை செய்து வரும் இவர், இந்த திருநாளயொட்டி இன்று காலை முதலே சேலம் சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெற்ற பள்ளி சிறார்கள் சிற்றுண்டி வழங்கி மகிழ்ந்த அவர், சேலம் கோட்டை உட்பட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயலாமை நிலையில் உள்ள கண்ணியமிக்க இந்த திருநாளிற்காக, தனது கண்ணில் பட்ட இயலாதவர்கள்  அனைவருக்கும் தன்னால் இயன்ற ஈகையையும் செய்து மகிழ்ந்தார். 
தொடர்ந்து திருக்குர்ஆன் அருளப்பட்ட இந்த தினத்தின் புனித தன்மையை குறித்து தொடர்ந்து அவர், இந்த இரவில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது, ஆயிரம் மாதங்கள் தொடர்ந்து வணக்க வழிபாடுகள் செய்வதை விட சிறந்தது இஸ்லாம்கல்வி.காம்.
குர்ஆன் அருளப்பட்ட இரவு என்றும் இந்த இரவில் தான் திருக்குர்ஆன் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முதன்முதலில் அருளப்பட்டது.
பாவமன்னிப்பு நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் இந்த இரவில் தொழுகையில் நிலைத்திருப்பவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும் இன்று தெரிவித்ததோடு மட்டுமல்லாமல்,  ரமளானின் கடைசி பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் தேட வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
அடையாளங்களாக  இந்த இரவு அமைதியானதாக இருக்கும், அதிக வெப்பமோ குளிரோ இருக்காது. அடுத்த நாள் காலையில் சூரியன் கதிர்கள் இல்லாமல் மென்மையாக உதிக்கும். லைலத்துல் கத்ர் இரவில் அதிகம் ஓத வேண்டிய துஆ: "அல்லாஹும்ம இன்னக அஃபுவ்வுன் துஹிப்புல் அஃவ்வ ஃபஃபு அன்னி" (பொருள்: யா அல்லாஹ்! நீ மன்னிப்பவன், மன்னிப்பை விரும்புபவன், எனவே என்னை மன்னிப்பாயாக இந்த புனித தினத்தின் அடையாளங்களை நம்மிடையே பகிர்ந்து கொண்டார் சேலத்தில் சிறந்த சமூக சேவகர் ஆன கோட்டை ஷபி.

ஞாயிறு, 15 மார்ச், 2026

2026 2029 ஆம் ஆண்டிற்கான சோழ வேளாளர் சமூக டிரஸ்ட் நிர்வாகிகளுக்கான தேர்தல். சேலத்தில்  தலைவர் பதவிக்கு போட்டியிட்டு நான் வெற்றி பெற்றால் உயர்கல்வி செல்லும் மாணவ மாணவர்களின் நலனுக்காக உயர்கல்வி தொடர்பான பயிற்சி வகுப்புகள் தொடங்குவேன் என்றும் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஜெயபிரகாஷ் உறுதி.

2026 2029 ஆம் ஆண்டிற்கான சோழ வேளாளர் சமூக டிரஸ்ட் நிர்வாகிகளுக்கான தேர்தல். சேலத்தில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு நான் வெற்றி பெற்றால் உயர்கல்வி செல்லும் மாணவ மாணவர்களின் நலனுக்காக உயர்கல்வி தொடர்பான பயிற்சி வகுப்புகள் தொடங்குவேன் என்றும் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஜெயபிரகாஷ் உறுதி.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

2026 2029 ஆம் ஆண்டிற்கான சோழ வேளாளர் சமூக டிரஸ்ட் நிர்வாகிகளுக்கான தேர்தல். சேலத்தில்  தலைவர் பதவிக்கு போட்டியிட்டு நான் வெற்றி பெற்றால் உயர்கல்வி செல்லும் மாணவ மாணவர்களின் நலனுக்காக உயர்கல்வி தொடர்பான பயிற்சி வகுப்புகள் தொடங்குவேன் என்றும் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஜெயபிரகாஷ் உறுதி.

சேலம் கிச்சிபாளையம் சோழ வேளாளர் சமூக டிரஸ்ட் நிர்வாகிகளுக்கான தேர்தல் 3 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவி காலம் முடிந்ததை எடுத்து இன்று சேலம் நாராயண நகர் பகுதியில் உள்ள சோழ வேளாளர் சமுதாய திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியர் ரா சுப்பிரமணி, உதவி தேர்தல் நடத்தும் ஆணையர்களாக கோபால் மற்றும் ராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற 2026 மற்றும் 29 ஆம் ஆண்டிற்கான தேர்தலில் ஒரு தலைவர் பதவிக்கு ஐந்து பேரும், 15 செயற்குழு உறுப்பினர்கள் கொண்ட பொறுப்பிற்கு 34 பேரும் போட்டியிட்டனர். இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் தேர்தலைப் போன்று மிகவும் கண்ணியமாக பலத்த காவல்துறை பாதுகாப்புடன் இந்த தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவானது மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. சமுதாய டிரஸ்டுக்காக நடத்தப்படும் இந்த தேர்தலில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு பதிவு செய்தனர். இந்திய தேர்தல் ஆணையத்தால் கடைபிடிக்கப்படும் அத்துணை ஆவணங்களும் ஒரு சமுதாய தேர்தலில் கடைபிடிக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல். வாக்கு பதிவு இன்று மாலை நிறைவடைந்த உடன் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு, பின்னர் நாளை வாக்குகள் எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்டு வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்படுவார்கள். இதனை அடுத்து நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் துணைத் தலைவர்கள், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் மற்றும் வாக்காளர்கள் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு தலைவர் பதவிக்கு ஐந்து பேர் போட்டியிடும் சூழலில் ஜெயப்பிரகாஷ் என்பவரும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றார் அவர் நம்மிடையே கூறுகையில், தன் வெற்றி பெற்றால் சோழர் மேலாளர் சமூக மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து தருவதோடு அவர்களை அடுத்த கட்ட நகர்விற்கு கொண்டு செல்ல முனைப்புடன் செயல்படுவேன் என்றும் சோழ வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அதிகப்படியான மதிப்பெண்கள் பெரும் மாணவ மாணவிகளின் நலன் கருதி உயர்கல்விக்கு தேவையான அனைத்து கல்விக்கு தேவையான பயிற்சி வகுப்புகளும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த தேர்தலின் காரணமாக சேலம் கிச்சிபாளையம் நாராயண நகர் பகுதியில் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.
2026 2029 ஆம் ஆண்டிற்கான சோழ வேளாளர் சமூக டிரஸ்ட் நிர்வாகிகளுக்கான தேர்தல். சேலத்தில்  தலைவர் பதவிக்கு ஐந்து பேரும், 15 செயற்குழு உறுப்பினர் பொறுப்புக்கு 34 பேரும் போட்டி.

2026 2029 ஆம் ஆண்டிற்கான சோழ வேளாளர் சமூக டிரஸ்ட் நிர்வாகிகளுக்கான தேர்தல். சேலத்தில் தலைவர் பதவிக்கு ஐந்து பேரும், 15 செயற்குழு உறுப்பினர் பொறுப்புக்கு 34 பேரும் போட்டி.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

2026 2029 ஆம் ஆண்டிற்கான சோழ வேளாளர் சமூக டிரஸ்ட் நிர்வாகிகளுக்கான தேர்தல். சேலத்தில்  தலைவர் பதவிக்கு ஐந்து பேரும், 15 செயற்குழு உறுப்பினர் பொறுப்புக்கு 34 பேரும் போட்டி.

சேலம் கிச்சிபாளையம் சோழ வேளாளர் சமூக டிரஸ்ட் நிர்வாகிகளுக்கான தேர்தல் 3 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவி காலம் முடிந்ததை எடுத்து இன்று சேலம் நாராயண நகர் பகுதியில் உள்ள சோழ வேளாளர் சமுதாய திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியர் ரா. சுப்பிரமணி, உதவி தேர்தல் நடத்தும் ஆணையர்களாக கோபால் மற்றும் ராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற 2026 மற்றும் 29 ஆம் ஆண்டிற்கான தேர்தலில் ஒரு தலைவர் பதவிக்கு ஐந்து பேரும், 15 செயற்குழு உறுப்பினர்கள் கொண்ட பொறுப்பிற்கு 34 பேரும் போட்டியிட்டனர். இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் தேர்தலைப் போன்று மிகவும் கண்ணியமாக பலத்த காவல்துறை பாதுகாப்புடன் இந்த தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவானது மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. சமுதாய டிரஸ்டுக்காக நடத்தப்படும் இந்த தேர்தலில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு பதிவு செய்தனர். இந்திய தேர்தல் ஆணையத்தால் கடைபிடிக்கப்படும் அத்துணை ஆவணங்களும் ஒரு சமுதாய தேர்தலில் கடைபிடிக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல். வாக்கு பதிவு இன்று மாலை நிறைவடைந்த உடன் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு, பின்னர் நாளை வாக்குகள் எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்டு வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்படுவார்கள். இதனை அடுத்து நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் துணைத் தலைவர்கள், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் மற்றும் வாக்காளர்கள் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் என்று தேர்தல் நடத்தும் அலுவலரான ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் கா சுப்பிரமணி தெரிவித்தார். 
இதே போல ஒரு தலைவர் பதவிக்கு ஐந்து பேர் போட்டியிடும் சூழலில் ஜெயப்பிரகாஷ் என்பவரும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றார் அவர் நம்மிடையே கூறுகையில், தன் வெற்றி பெற்றால் சோழர் மேலாளர் சமூக மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து தருவதோடு அவர்களை அடுத்த கட்ட நகர்விற்கு கொண்டு செல்ல முனைப்புடன் செயல்படுவேன் என்றும் சோழ வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அதிகப்படியான மதிப்பெண்கள் பெரும் மாணவ மாணவிகளின் நலன் கருதி உயர்கல்விக்கு தேவையான அனைத்து கல்விக்கு தேவையான பயிற்சி வகுப்புகளும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த தேர்தலின் காரணமாக சேலம் கிச்சிபாளையம் நாராயண நகர் பகுதியில் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.

வெள்ளி, 13 மார்ச், 2026

சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகத்தை தனியார் மயமாக்கும் திட்டத்தை சேலம் மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும். மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பையும் செயல்படுத்தும் பட்சத்தில் சேலம் மாநகராட்சி நிர்வாகம் மிகக் கடுமையான விளைவுகளை சந்திக்கும். அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை ஆவேசம்.

சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகத்தை தனியார் மயமாக்கும் திட்டத்தை சேலம் மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும். மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பையும் செயல்படுத்தும் பட்சத்தில் சேலம் மாநகராட்சி நிர்வாகம் மிகக் கடுமையான விளைவுகளை சந்திக்கும். அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை ஆவேசம்.

சேலம். 
S.K. சுரேஷ் பாபு.

சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகத்தை தனியார் மயமாக்கும் திட்டத்தை சேலம் மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும். மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பையும் செயல்படுத்தும் பட்சத்தில் சேலம் மாநகராட்சி நிர்வாகம் மிகக் கடுமையான விளைவுகளை சந்திக்கும். அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை ஆவேசம். 

60 கோட்டங்களை உள்ளடக்கிய சேலம் மாநகராட்சிக்கு சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மேட்டூர் அணையில் பல்வேறு பகுதிகளில் நீர் உந்த நிலையங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் உந்தப்படும் நீரை சுத்திகரிப்பு செய்யப்பட்டு சேலம் மாநகரில் நான்கு மண்டலங்களில் உள்ள முக்கிய ராட்சத மேல்நிலை பெரிய அளவிலான நீர் தொட்டிகளில் நீரை நிரப்பி. 60 கோட்ட மக்களுக்கும் குடிநீர் வினியோகம் என்பது வாரத்திற்கு வாரத்திற்கு ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை விநியோகிக்கப்பட்டு வருவது வழக்கம். இந்த நிலையில்,  கையால் ஆகாத சேலம் மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகத்தை தனியார் மையமாக கடந்த மாமன்ற இயல்புக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு சேலம் மாநகரம் உட்பட  மாவட்ட முழுவதும் உள்ள அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களாலும் கடுமையான கண்டனம் எழுந்தது. கடும் எதிர்ப்பையும் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல், திமுக கூட்டணி மாமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் மாநகர மேயர் ராமச்சந்திரன் தீர்மானம் நிறைவேற்றிய போது, அதிமுக உறுப்பினர்கள் மட்டுமே கடும் அமலியில் ஈடுபட்டு, இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாமன்ற கூட்டத்தை புறக்கணித்தார்களே தவிர, திமுகவைச் சேர்ந்த மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த தீர்மான நிறைவேற்றும் நிகழ்ச்சியில் திமுக கூட்டணி கட்சிகளான துணை மேயர் சாரதாதேவி மாணிக்கம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாமன்ற உறுப்பினர் இமயவர்மன் இதுபோக ஒரு முஸ்லிம் கட்சியை சேர்ந்த இஸ்லாமியரும் அங்கு அங்கே ஏதோ அமர்ந்திருந்தார்கள். எவர் ஒருவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை காரணம் தெரியவில்லை. இந்த நிலையில் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை முக்கிய நிர்வாகிகளுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தா தேவி அவர்களை சந்தித்து சேலம் மாநகராட்சியில் நிலவி வரும் அவல நிலை குறித்தும், அராஜகம் குறித்தும், 
ஊழல் குறித்தும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து கோரிக்கை மனு வழங்குவதற்காக வந்திருந்தார்.
அப்பொழுது அவர் கூறுகையில் குடிநீர் விநியோகம் என்பது இயற்கை வழங்கிய ஒரு உன்னத தேவை. அதனை வியாபாரம் ஆக்கும் நோக்கில் திமுகவை சேர்ந்த மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் இதனை தனியார் மையம் ஆக்கி கொள்ளை அடித்துக் கோடி  லாபம் சம்பாதிக்க இந்த திட்டத்தை தீர்மானமாக நிறைவேற்றி உள்ளார்கள் என்றும் இதனை சேலம் மாநகராட்சி மேயர் உடனடியாக ரத்து செய்யவில்லை எனில் மாநகரம் முழுவதும் உள்ள மக்களை ஒன்று திரட்டி கடுமையான போராட்டத்தை மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் தம்பிக்கும் வகையிலும்,  வைத்து தங்களின் அமைப்பு வைத்து விடும் என்று ஆவேசத்துடன் பேட்டி அளித்தார் ஜங்ஷன் அண்ணாதுரை.
உடன் அமைப்பின் நிர்வாகிகள் அண்ணாதுரை முருகன் சார்லஸ் கார்த்தி தினேஷ் உட்பட ஊர் மக்கள் பலரும் உடன் இருந்தனர்.
இந்திய மக்களுக்கும் வணிகப் பயன்பாட்டிற்கும் தேவையான எரிவாயு உருளைகள் தங்கு தடை இன்றி கிடைக்க மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலத்தில் பிரபல இனிப்பு உணவு நிறுவனமான குப்தா ஸ்வீட்ஸ் நிறுவனம் வேண்டுகோள்.

இந்திய மக்களுக்கும் வணிகப் பயன்பாட்டிற்கும் தேவையான எரிவாயு உருளைகள் தங்கு தடை இன்றி கிடைக்க மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலத்தில் பிரபல இனிப்பு உணவு நிறுவனமான குப்தா ஸ்வீட்ஸ் நிறுவனம் வேண்டுகோள்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

இந்திய மக்களுக்கும் வணிகப் பயன்பாட்டிற்கும் தேவையான எரிவாயு உருளைகள் தங்கு தடை இன்றி கிடைக்க மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலத்தில் பிரபல இனிப்பு உணவு நிறுவனமான குப்தா ஸ்வீட்ஸ் நிறுவனம் வேண்டுகோள். 

வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய்க்கு ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப, உள்நாடுகளில் பெட்ரோல் டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் மாற்றம் இருக்கும். ஆனால் தற்பொழுது ஈரான் ஈராக் போர் மூண்டு, ஈரானில் வர்த்தக வணிக நிறுவனங்கள் குடியிருப்புகள் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது ஆயிரக்கணக்கான உயிர் பலிகளும் ஏற்பட்டுள்ளன. உலக நாடுகளின் உயிர் துடிப்பாக இருக்கும் கச்சா எண்ணெய் தயாரிக்கும் இடங்களையும் அமெரிக்கா, ஈராக் உள்ளிட்ட நாடுகள் குண்டுகள் வீசி தாக்கி அளித்ததன் எதிரொலியாக, உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் என்பது முற்றிலுமாக தடைபட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா மிகப்பெரிய பெட்ரோலிய தயாரிப்புகளில் பின்னடைவை சந்தித்து வருகிறது. நிலைமை எப்படி இருக்கு, எரிவாயு சிலிண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் போர்ப்பதற்றத்தின் காரணமாக வர்த்தக உபயோகத்திற்காக பயன்படும் சிலிண்டர்களின் விநியோகம் நிறுத்தப்படுவதாக ஏற்கனவே அறிவித்து விட்டன. இது வர்த்தக சிலிண்டர்களை மட்டுமே நம்பி அன்றாடம் பயணித்து வரும் உணவகங்களின் நிலை தற்பொழுது கேள்விக்குறியாகிவிட்டது. 
அந்த வகையில் சேலம் மாவட்ட உணவக உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில் நிலைமை இதேபோன்று நீடித்தால் இன்னும் இரண்டு நாட்களில் சேலம் மாவட்டத்தில் சுமார் 3000 உணவகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்படும் என்று கூறியிருந்தனர். இந்த நிலையில் சேலத்தில் பிரபல இனிப்பு மற்றும் உணவக நிறுவனமான குப்தா ஸ்வீட்ஸ் நிர்வாகத்தை சந்தித்து இந்த பிரச்சனை குறித்து நிறுவனர் பிரமோத் ஜி மற்றும் நிர்வாக இயக்குனர் ரஞ்ஜத் ஆகியோரை அணுகிய போது, நிர்வாகத்தின் சார்பாக குப்தா ஸ்வீட்ஸ் நிறுவனங்களின் மேலாளர் முகமது ராஜா நம்முடைய கூறுகையில், 
எரிவாயு உருளை தட்டுப்பாடு என்பது தங்களது நிறுவனத்திற்கு தற்பொழுது என வில்லை என்றும், வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் வர்த்தக சிலிண்டர் விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்தியதை தொடர்ந்து பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருவதை தாங்கள் அறிந்து வருகிறோம் என்றும் எதிர்வரும் காலங்களில் தங்களது நிறுவனத்திற்கும் இது போன்ற ஒரு சூழல் ஏற்படும் பட்சத்தில் காலையில் பற்ற வைக்கும் அடுப்பு இரவு வரை அணைக்க முடியாமல் தயாரிக்கப்படும் பரோட்டா தோசை  உள்ளிட்ட உணவு வகைகளை நிறுத்தி வைப்பதோடு மட்டுமல்லாமல் அதற்கு மாற்றாக ஒரு தடவை சமைத்து மாலை முழுவதும் விநியோகிக்கப்படக்கூடிய கலவை சாதங்கள் எனப்படும் தக்காளி தயிர் வெஜிடபிள் பிரியாணி உள்ளிட்ட அனைத்து கலவை சாதங்கள் மட்டுமே இனி தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், டீ காபி விநியோகம் செய்ய முடியுமா என்பது கூட தற்பொழுது சந்தேகத்தை எழுப்பி உள்ளதாக கூறிய நிறுவன மேலாளர் முகமது ராஜா, எங்களது நிறுவனத்தின் மூல தயாரிப்பு இனிப்புகள் மட்டுமே என்பதால் இனிப்புகள் உற்பத்தியிலும் குறிப்பாக வட இந்திய இனிப்புகள் மட்டுமே விற்பனை செய்யப்படும் தங்களது நிறுவனத்தில் இனிப்பு உற்பத்தி என்பது முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் தங்களது நிறுவனம் செவ்வாய்பேட்டையை மையமாகக் கொண்டு சேலத்தில் பல்வேறு கிளைகளை விரிவுபடுத்தி உள்ளதாக கூறியவர் வர்த்தக வணிக நிறுவனங்கள் நிறைந்த செவ்வாய்பேட்டை பகுதி முழுக்க முழுக்க வெள்ளி மற்றும் அதனை சார்ந்த அனைத்து வகையான வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதியாகவும், இங்கு வணிகத்திற்காக வரும் வெளியூர் நபர்கள் வெளிமாநிலன் அவர்கள் இங்கேயே தங்கி தங்களது பணி முடியும் வரை பெரும்பாலும் தங்களது குப்தா ஸ்வீட்ஸ் நிறுவனத்திற்காக மட்டுமே உணவு உட்கொள்ள ஒருவர் என்று குறிப்பிட்ட அவர் இனிவரும் காலங்களில் நிலைமை சீரழையாமல் இருந்தால் எப்படி வாடிக்கையாளர்களை மகிழ்விப்பது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்று கூறினார். மேலும் இந்த பிரச்சனைக்கு மத்திய மாநில அரசுகளை குற்றம் சாட்டவே இயலாது என்றும் மாறாக வளைகுடா நாடுகளில் நடைபெறும் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டுவதற்குள் நிலைமை சீரடைந்து ஒவ்வொரு நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் விநியோகம் முழுமையாக சென்று சேர்ந்தால் மட்டுமே இதுபோன்ற அசௌகர்யத்தில்  இருந்து மீள முடியும் என்று குறிப்பிட்ட அவர் கொரோனா கால கட்டத்தில் கூட இப்படி ஒரு பாதிப்பை எவர் ஒருவரும் சந்தித்து இருக்க மாட்டார்கள் ஆனால் தற்பொழுது ஏற்பட்டுள்ள ஈரான் ஈராக் போர் சம்பந்தமாக தமிழகம் ஏன் இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருவதாக வேதனை தெரிவித்ததோடு நிலைமை விரைவில் சீரடையும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.
நிலைமை சீரடையும் வரை தங்களது இனிப்பது மற்றும் உணவு நிறுவனத்தின் ஆதரவாளர்கள் இந்த அசௌகரியத்தை பொறுத்து தொடர்ந்து நல்ல ஆதரவு வழங்க வேண்டும் என்றும் குப்தா ஸ்வீட்ஸ் நிறுவன மேலாளர் முகமது ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.