Latest

திங்கள், 22 ஜூன், 2026

சேலம் ஓமலூரில் பணி ஓய்வு பெற்று 13 ஆண்டு காலம் ஆகியும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கிராம உதவியாளர் பணி ஓய்வு பெற்று 13 ஆண்டுகளாகியும் ஓய்வூதிய பலன்களை வழங்காமல் ஏமாற்றும் மேட்டூர் சார் ஆட்சியர் மற்றும் ஓமலூர் வட்டாட்சியர். மத்திய மாநில அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு மற்றும் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு கடும் கண்டனம்.

சேலம் ஓமலூரில் பணி ஓய்வு பெற்று 13 ஆண்டு காலம் ஆகியும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கிராம உதவியாளர் பணி ஓய்வு பெற்று 13 ஆண்டுகளாகியும் ஓய்வூதிய பலன்களை வழங்காமல் ஏமாற்றும் மேட்டூர் சார் ஆட்சியர் மற்றும் ஓமலூர் வட்டாட்சியர். மத்திய மாநில அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு மற்றும் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு கடும் கண்டனம்.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் ஓமலூரில் பணி ஓய்வு பெற்று 13 ஆண்டு காலம் ஆகியும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கிராம உதவியாளர் பணி ஓய்வு பெற்று 13 ஆண்டுகளாகியும் ஓய்வூதிய பலன்களை வழங்காமல் ஏமாற்றும் மேட்டூர் சார் ஆட்சியர் மற்றும் ஓமலூர் வட்டாட்சியர். மத்திய மாநில அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு மற்றும் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு கடும் கண்டனம். 

சேலம் மாவட்டம் ஓமலூர் சேர்ந்தவர் கோவிந்தராஜ். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த இவர் ஓமலூரில் கிராம உதவியாளராக பணியாற்றி கடந்த 2013 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். இவர் பணி ஓய்வு பெற்று 13 ஆண்டு காலம் ஆகியும் தற்பொழுது வரை ஓய்வூதிய பலன்கள் வழங்காமல் மேட்டூர் சார் ஆட்சியரும், ஓமலூர் வட்டாட்சியர் உட்பட வருவாய்த் துறையினர் தொடர்ச்சியாக கோவிந்தராஜை அலைகழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மற்றும் கோரிக்கை மனு வழங்கியும் தற்போது வரை பாதிக்கப்பட்ட கோவிந்தராஜுக்கு எந்த ஓய்வூதிய பலனும் கிடைக்கவில்லை என்பதால் மத்திய மாநில அரசு ஊழியர் கூட்டமைப்பு மற்றும் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் தேசிய ஒருங்கிணைப்பாளரான சரஸ்ராம் ரவிராமசாமி அவர்களை கோவிந்தராஜ் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள அவரது அலுவலகத்தில் அணுகினார். 
பாதிக்கப்பட்ட கோவிந்தராஜிற்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக 13 ஆண்டுகளாக மனப்பலன்கள் ஏதும் கொடுக்காமல் அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் குறித்து முழுமையாக கேட்டு அறிந்த சரஸ்ராம் ரவிராமசாமி நம்மிடம் கூறுகையில், தமிழகம் முழுவதும் அரசு துறைகளில் பணியாற்றும் எஸ்சி / எஸ்டி, சீர் மரபினர் மற்றும் பட்டியலின சமுதாயத்தை சார்ந்த ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும், அவர்களுக்கான ஓய்வூதிய பலன் மற்றும் பண பலன்கள் ஏதும் முழுமையாக சென்று சேருவதில்லை என்று குற்றம் சாட்டிய அவர், சேலம் மாவட்டம் ஓமலூர் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு கிராம உதவியாளராக பணியாற்றி பணி ஓய்வு பெற்றார். இவருக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதிய பலன்கள் முழுவதும் தற்பொழுது வரை கொடுக்காமல் மேட்டூர் சார் ஆட்சியரும் ஓமலூர் வட்டாட்சியரும் தொடர்ச்சியாக அலைகழித்து வருவதோடு மட்டுமல்லாமல் வேண்டுமென்றே பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி இழுத்தடிப்பதாகவும் இதனை தேசிய ஒடுக்கப்பட்ட  மக்கள் குடியரசு வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய சரஸ்ராம் ரவிராமசாமி, இது சம்பந்தமாக சேலம் மாவட்ட ஆட்சியர்,  தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் நேஷனல் கமிஷன் ஐ சேர்ந்த ரவிவர்மன்  ஆகியோருக்கு இன்று காலை புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இதே போல் சேலம் மாவட்டம் மேச்சேரியில் 34 தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த வாட்டர் மேன்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவங்கள் தொடர்பாக தாழ்த்தப்பட்ட ஆணையத்திற்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணையம் கடந்த 13 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம உதவியாளருக்கு ஓய்வூதிய பலன்களை கொடுக்காமல் ஏமாற்றிய மேட்டூர் சார் ஆட்சியர், ஓமலூர் வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அப்போது நிர்வாகி அடைக்கலம், பாதிக்கப்பட்ட உட்பட  கோவிந்தராஜ் அவரது  குடும்பத்தார் என பலரும் உடன் இருந்தனர்.

சனி, 20 ஜூன், 2026

இளம் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம். சேலம் மாநகர துணை மேயர் துவக்கி வைத்த இந்த சிறப்பு முகாமில் ஏராளமான ஏழை எளிய மக்கள் கலந்து கொண்டு பயன்.

இளம் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம். சேலம் மாநகர துணை மேயர் துவக்கி வைத்த இந்த சிறப்பு முகாமில் ஏராளமான ஏழை எளிய மக்கள் கலந்து கொண்டு பயன்.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

இளம் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம். சேலம் மாநகர துணை மேயர் துவக்கி வைத்த இந்த சிறப்பு முகாமில் ஏராளமான ஏழை எளிய மக்கள் கலந்து கொண்டு பயன். 

அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சியினரால் நாடு முழுவதும் இளைஞர்களின் எழுச்சி திருநாளாகவும், ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கமிட்டியின் பொருளாளர் சஞ்சய் காந்தி ஏற்பாட்டில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் சேலத்தில் இன்று நடைபெற்றது.
சேலம் விநாயகா மிஷன் கிருபானந்த வாரியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் லோட்டஸ் கண் மருத்துவமனை இன்ஸ்டிடியூட் ஆகியவை இணைந்து நடத்திய இந்த சிறப்பு மருத்துவ முகாமினை சேலம் மாணவர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும் சேலம் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவருமான திருமதி சாரதா தேவி மாணிக்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார். முகாமினை இணைந்து நடத்திய அமைப்புகளின் சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்ட இந்த மாபெரும் இலவச பொது மருத்துவ முகாமில், பார்வை குறைபாடுகள், கண்புரை பரிசோதனை, கண் சர்க்கரை நோய், கண்புரை அறுவை சிகிச்சை உட்பட கண் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும், இதே போல ரத்த அழுத்தம், தோல் நோய் பிரச்சனைகள், காது மூக்கு தொண்டை பிரச்சனைகள், இதயம் தொடர்பான பிரச்சனைகள், கர்ப்பகால சிகிச்சை ஆலோசனைகள் உட்பட பொது மருத்துவம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் சிகிச்சைகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இந்த சிறப்பு மருத்துவ முகாமில் லைன்மேடு, குகை மற்றும் அன்னதானப்பட்டி உட்படு சுற்று பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் ஏழை எளியவர்களும் கலந்து கொண்டு பயன் பெற்று சென்றனர். 
இந்த சிறப்பு முகாம் துவக்க விழாவில், சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ராஜ்குமார், கந்தசாமி, நடராஜ், ராஜா, சரவணன்,  வெங்கட்ராஜ், கோபி குமரன், பச்சப்பட்டி பழனிச்சாமி மற்றும் உடையாபட்டி பிரகாஷ் என கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் என ஏராளமான கலந்து கொண்டனர்.

வியாழன், 18 ஜூன், 2026

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும்  கர்நாடகா அரசின் முயற்சிக்கு எதிராக, தமிழக சட்டப்பேரவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சி முழு ஆதரவுடன் தனி தீர்மானம் நிறைவேற்றம்.உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி வரவேற்பு.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகா அரசின் முயற்சிக்கு எதிராக, தமிழக சட்டப்பேரவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சி முழு ஆதரவுடன் தனி தீர்மானம் நிறைவேற்றம்.உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி வரவேற்பு.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும்  கர்நாடகா அரசின் முயற்சிக்கு எதிராக, தமிழக சட்டப்பேரவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சி முழு ஆதரவுடன் தனி தீர்மானம் நிறைவேற்றம்.உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி வரவேற்பு. 

தமிழகத்தின் 11 டெல்டா மாவட்டங்களில் ஜீவாதாரமாக விளங்கி வரும் மேட்டூர் அணைக்கான நீர் வரத்தை தடுத்து நிறுத்தும் வகையில், கடந்த பல வருடங்களாக கர்நாடக அரசு மேகதாது பகுதியில் அணைக்கட்டும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல் கர்நாடகா அரசு தொடர்ந்து தன்னிச்சையாகவே செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே அதிமுக மற்றும் திமுக அரசு களின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளும் அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதோடு அவ்வப்போது சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு வந்தன. 
இதனிடையே தமிழக விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் கர்நாடக அரசின் இந்த மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பல கட்ட போராட்டங்கள் அறிவித்து அதனை முழுமையாக செயல்படுத்தியும் வந்துள்ளது மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சமீபத்தில், தமிழக விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி மேகதாட்டில் அணை கட்டினால் தகர்த்தெறிவோம் என்றும் தமிழகத்தில் விவசாயிகள் போராட்டம் புரட்சி புயலாக உருவாகும் என்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலுச்சாமி ஏற்கனவே எச்சரிக்கையை  வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்த நிலையில், கர்நாடக அரசின் தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் மேகதாட்டில் அணைக்கட்டும் முயற்சியை ஏற்க முடியாது, இதன் காரணமாக காவிரி படுகைகளில் தமிழக அரசால் எந்த ஒரு திட்டப் பணிகளையும் மேற்கொள்ள இயலாது, கர்நாடக அரசின் அணைக்கட்டும் விவகாரத்திற்கு இந்த திட்ட அறிக்கைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க கூடாது  உள்ளிட்ட பல்வேறு முன்மொழிவுகளை முன்வைத்து தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று தமிழக சட்டப்பேரவையில் கர்நாடக அரசுக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார். இதனை அடுத்து சட்டப்பேரவையில் இருந்து அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுக்கு விடுக்கப்பட்டது. அப்பொழுது பிரதான எதிர்க்கட்சியான திமுக உட்பட அதிமுக என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களையும் கோரிக்கைகளையும் முன் வைத்ததோடு தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட இந்த கர்நாடக அரசுக்கு எதிரான தனி தீர்மானத்திற்கு முழு ஆதரவினை தெரிவித்தனர். இதனை அடுத்து பேசிய தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தீர்மானம் முன்மொழிந்ததற்கு முழு ஒப்புதல் வழங்கிய அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும்  நன்றியினை தெரிவித்துக் கொண்ட அவர், எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்வைத்த பிரத்தியேக தனி நடுவர் மன்றம் அமைக்கும் கோரிக்கையையும் இணைத்து தீர்மானம் நிறைவேற்ற சட்டப்பேரவை தலைவருக்கு பரிந்துரைத்தார். இதனை அடுத்து சட்டப்பேரவை தலைவரால் மேகதாட்டில் அணை கட்டும் விவகாரத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் ஒரு மணமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார். 
தமிழக அரசால் இன்று முன்மொழிக்கப்பட்ட  மற்றும் நிறைவேற்றப்பட்ட கர்நாடக அரசுக்கு எதிரான தனி தீர்மானத்திற்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் வேலுச்சாமி தனது வரவேற்பினையும் ஆதரவணையும் தெரிவித்தார்.
சோனா கல்வி நிறுவனங்களின் சார்பில் ஆரோக்கியமான முதுமைக்கான யோகா என்ற உலகளவிய தலைப்பை மையமாக கொண்டு சர்வதேச யோகா தின விழா. 1000 கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்று அசத்தல்.

சோனா கல்வி நிறுவனங்களின் சார்பில் ஆரோக்கியமான முதுமைக்கான யோகா என்ற உலகளவிய தலைப்பை மையமாக கொண்டு சர்வதேச யோகா தின விழா. 1000 கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்று அசத்தல்.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சோனா கல்வி நிறுவனங்களின் சார்பில் ஆரோக்கியமான முதுமைக்கான யோகா என்ற உலகளவிய தலைப்பை மையமாக கொண்டு 
சர்வதேச யோகா தின விழா. 1000 கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்று அசத்தல்.

ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தின விழா கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நிகழ்வாண்டு சர்வதேச யோகா தின விழாவை மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்து வருகிறது. ஆரோக்கியமான முதுமைக்கான யோகா என்ற கருப்பொருளை மையமாக கொண்டு நிகழ்வாண்டு யோகா தின விழா கடைபிடிக்கப்படுகிறது.  இதனைபோற்றும் வகையில் சேலம் சோனா கல்லூயின் விளையாட்டு மைதானத்தில் கொண்டாடப்பட்டது. 
சோனா கல்வி நிறுவனத்தின் துணைத்தலைவர் தியாகுவள்ளியப்பா தலைமையில் நடைப்பெற்ற விழாவில் கல்லூரியின் இயக்குநர் கார்த்திகேயன் சோனா கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் செந்தில்குமார், கனகராஜ், காதர்நவாஷ், கவிதா, தர்மசம்வர்த்தினி மற்றும் பேராசிரியர்கள்மற்றும் 1000-த்துகும் மேற்பட்ட  மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி உலகமே ஒன்று சேர்ந்து சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுகிறது. இந்த உலகளாவிய நிகழ்வு யோகாவின் பண்டைய இந்திய பயிற்சி மற்றும் உடல், மனம் மற்றும் உணர்ச்சி நல்வாழ்வை மேம்படுத்தவும், சுறுசுறுப்பான முதுமையை உறுதிப்படுத்தவும் யோகாவின் பங்கினை இது வலியுறுத்துகிறது என்று சோனா கல்வி நிறுவனத்தின் துணைத்தலைவர் தியாகு வள்ளியப்பா தெரிவித்தார்.
இந்த விழாவில் சோனா கல்வி நிறுவனங்களின் மாணவர்களின் யோகா நடன நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைப்பெற்றது. இதனை தொடர்ந்து கல்லூரியின் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.
தமிழகம் வெற்றிப்பயணம் என்ற தொலைநோக்கு திட்டத்தின் கீழ் 2026 - 2027 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் ஏற்றம் பெரும் வகையில் 34 அம்ச முக்கிய கோரிக்கைகளை துறைவாரியாக நிறைவேற்றி விடுக. த.வெ.க தலைமையிலான தமிழக அரசுக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி வேண்டுகோள்.

தமிழகம் வெற்றிப்பயணம் என்ற தொலைநோக்கு திட்டத்தின் கீழ் 2026 - 2027 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் ஏற்றம் பெரும் வகையில் 34 அம்ச முக்கிய கோரிக்கைகளை துறைவாரியாக நிறைவேற்றி விடுக. த.வெ.க தலைமையிலான தமிழக அரசுக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி வேண்டுகோள்.

 
சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழகம் வெற்றிப்பயணம் என்ற தொலைநோக்கு திட்டத்தின் கீழ் 2026 - 2027 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் ஏற்றம் பெரும் வகையில் 34 அம்ச முக்கிய கோரிக்கைகளை துறைவாரியாக நிறைவேற்றி விடுக. த.வெ.க தலைமையிலான தமிழக அரசுக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி வேண்டுகோள். 

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் மேம்படுத்தும் வகையில் முக்கிய கடிதம் ஒன்றினை தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு எழுதியுள்ளார். அதில்,
தமிழக அரசு விவசாய அபிவிரித்திக்காக  பல்வேறு மானிய திட்டங்கள் அறிவித்து செயல்பாட்டில் உள்ள திட்டங்களின் வாயிலாக கிடைக்கும் அனைத்து மானியங்களும் இனிவரும் காலங்களில் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்ப தமிழக அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், தமிழகத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மற்றும் இரண்டு பொதுத்துறை சர்க்கரை ஆலைகளை மீட்டெடுக்கவும் ஆலைகளின் வருவாயை ஊக்குவிக்கவும் கரும்பிலிருந்து பெறப்படும் எரிபொருளான எத்தனால் தயாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்க கோரி தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும், தமிழக விவசாயிகளின் நலன் கருதி தமிழகத்தில் தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து இறக்கும் கள்ளு க்கு உண்டான தடையை உடனடியாக நீக்க வேண்டும், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி சரபங்கா மேட்டூர் உபரி நீர் திட்டம் மூலம் விடுபட்ட வறண்ட ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பு தமிழக அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், 
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி வழங்க வேண்டிய காவிரி பங்கிட்டு தண்ணீரை கர்நாடக அரசு தினம் தோறும் விகிதாச்சார அடிப்படையில் தண்ணீரை திறந்து விடுவதற்கு தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட 34 அம்ச முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றி தர கோரி தமிழக முதலமைச்சர் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் தமிழக முதலமைச்சருக்கு எழுதப்பட்ட இந்த கடிதத்தின் நகலை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களுக்கும் நீர்வளத்துறை அமைச்சர் அவர்களுக்கும்  அனுப்பப்பட்டுள்ளதாகவும் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய், 16 ஜூன், 2026

தமிழக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில்  75,000 ரூபாய் வரை மட்டும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்வர். பசிக்கு அழும் குழந்தைக்கு பலூன் கொடுப்பது போல் உள்ளது. தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி விமர்சனம்.

தமிழக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 75,000 ரூபாய் வரை மட்டும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்வர். பசிக்கு அழும் குழந்தைக்கு பலூன் கொடுப்பது போல் உள்ளது. தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி விமர்சனம்.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

தமிழக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில்  75,000 ரூபாய் வரை மட்டும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்வர். பசிக்கு அழும் குழந்தைக்கு பலூன் கொடுப்பது போல் உள்ளது. தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி விமர்சனம்.

தமிழக விவசாயிகள் தமிழக கூட்டுறவு சங்கங்களில் பெற்ற பயிர் கடனை எந்த விதமான பாகுபாடும் இன்றி முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்பது மட்டுமே தமிழக விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. இதனிடையே தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழக விவசாயிகள் பெற்ற பயிர் கடன் தள்ளுபடி தொடர்பாக உத்தரவு ஒன்றினை  பிறப்பித்தார். இது தமிழக விவசாயிகளிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ள நிலையில், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அவசர அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், தமிழக விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வாங்கிய கடனை, சிறு, குறு, பெரு  விவசாயிகள் என்ற பாகுபாடின்றி  முழுவதும் தள்ளுபடி செய்யாமல், ரூ.75,000/ம்  வரை மட்டும் தள்ளுபடி செய்து, இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் C.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளது, தமிழக விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இது பசிக்கு அழும் குழந்தைக்கு பலூன் கொடுப்பது போல் உள்ளது என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த அறிக்கையின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தலைவர் வேலுச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

திங்கள், 15 ஜூன், 2026

சேலம் அருகே சாதிய பாகுபாட்டு தாக்குதல். திருக்கோவிலில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் பட்டியலினத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளி படுகாயம்.

சேலம் அருகே சாதிய பாகுபாட்டு தாக்குதல். திருக்கோவிலில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் பட்டியலினத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளி படுகாயம்.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் அருகே சாதிய பாகுபாட்டு தாக்குதல். திருக்கோவிலில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் பட்டியலினத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளி படுகாயம். 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சேஷன்சாவடி பகுதியை சார்ந்தவர் மணிகண்டன் மாற்றுத்திறனாளி ஆன இவருக்கு கைகள் இல்லை. தனது சகோதரருடன் வாகனம் உள்ளில் கலந்து மூன்று தினங்களுக்கு முன்பு அங்குள்ள பிரசித்தி பெற்ற அஞ்சமலை குட்டை முனியப்பன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். பட்டியலின சமுதாயத்தை சார்ந்த இவர்களை கண்ட அங்குள்ள உயர் ஜாதியினர் மணிகண்டன் மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவரையும் ஜாதி பெயரை கூறியும், தகாத சொற்களால் திட்டியும் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். ஐந்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு இந்த கொலைவெறி தாக்குதல் சம்பவத்தில் பட்டியலினத்தைச் சார்ந்த மணிகண்டன் மற்றும் அவரது சகோதரர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக வாழப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு பொது தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திருக்கோவில் ஒன்றில் ஜாதியை பாகுபாடு பார்த்து பட்டியல் இனத்தைச் சார்ந்த சகோதரர்களை அங்குள்ள உயர் ஜாதியினர் வகுப்பைச் சார்ந்த ஸ்ரீ டிராவல்ஸ் உரிமையாளர் ராஜா என்பவர் உட்பட ஐந்து பேர் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி ஆன மணிகண்டன் நம்மிடையே கூறுகையில், கோவிலில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ பதிவு காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதாகவும் அதனை காவல்துறையினர் கைப்பற்றி சம்பந்தப்பட்டவர்கள் மீது ஸ்ரீ டிராவல்ஸ் உரிமையாளர் ராஜா உட்பட ஐந்து பேர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு,  தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சரை கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார். அருந்ததியினர் பறையர் என கூறி திருக்கோவில் வளாகத்திற்குள்ளேயே பட்டியலினத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளி சகோதரர்கள் தாக்கப்பட்டுள்ள சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.