Latest

புதன், 1 ஜூலை, 2026

தமிழகம் தழுவிய விவசாயிகளின் போராட்டத்தில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் 53 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.5.7.1972 ல் இந்த முதல் போராட்டத்தில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள  பெத்தநாயக்ன்பாளையம் வட்டம்  அதே பகுதியை சார்ந்த 9 விவசாயிகள் உயிரிழந்தனர். காலை 10 மணிக்கு சேலம் மாவட்டம் ஆத்தூர்  பெத்தநாயக்ன்பாளையம்  பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள ஸ்தூபி பகுதிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் வருகை தந்து அனைத்து விவசாயிகளும் பேரணியாக சென்று துப்பாக்கி சூட்டில் பலியான தீயாகிகள் அனைவரையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்த நினைவிடத்தில் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு. உழவர் பெருந்தலைவர்  நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அழைப்பு...

தமிழகம் தழுவிய விவசாயிகளின் போராட்டத்தில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் 53 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.5.7.1972 ல் இந்த முதல் போராட்டத்தில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்ன்பாளையம் வட்டம் அதே பகுதியை சார்ந்த 9 விவசாயிகள் உயிரிழந்தனர். காலை 10 மணிக்கு சேலம் மாவட்டம் ஆத்தூர் பெத்தநாயக்ன்பாளையம் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள ஸ்தூபி பகுதிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் வருகை தந்து அனைத்து விவசாயிகளும் பேரணியாக சென்று துப்பாக்கி சூட்டில் பலியான தீயாகிகள் அனைவரையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்த நினைவிடத்தில் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு. உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அழைப்பு...

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

தமிழகம் தழுவிய விவசாயிகளின் போராட்டத்தில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் 53 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.5.7.1972 ல் இந்த முதல் போராட்டத்தில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள  பெத்தநாயக்ன்பாளையம் வட்டம்  அதே பகுதியை சார்ந்த 9 விவசாயிகள் உயிரிழந்தனர். காலை 10 மணிக்கு சேலம் மாவட்டம் ஆத்தூர்  பெத்தநாயக்ன்பாளையம்  பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள ஸ்தூபி பகுதிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் வருகை தந்து அனைத்து விவசாயிகளும் பேரணியாக சென்று துப்பாக்கி சூட்டில் பலியான தீயாகிகள் அனைவரையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்த நினைவிடத்தில் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு. உழவர் பெருந்தலைவர்  நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அழைப்பு...

வீரவணக்க நாள் பேரணி மற்றும் மரியாதை செய்யும் நிகழ்வு குறித்து வேலுச்சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 
தமிழகத்தில் கடந்த 1970 முதல் 1980 கடுமையான வறட்சி நிலவியது, அப்போது தமிழக விவசாயிகள் வேளாண் பணிகளை தொடங்குவதற்கு நிதி கையிருப்பு இல்லாமல் தவித்தனர். பல சிரமங்களுக்கு இடையிலும் வேளாண் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டிருந்த நிலையில், அப்போதைய தமிழ்நாடு அரசு மூலம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன் மற்றும் பண்ணை அபிவிருத்தி கடன் பெற்று, கிணற்று பாசனத்தை நம்பி விவசாயிகள் பயிர் செய்துவந்தனர்.
கிணறு பாசனத்தை நம்பி பயிர் செய்யும் விவசாயிகள், தமிழ்நாடு அரசு மின்சார வாரியம் மூலம், கிணற்று மோட்டாருக்கு மின் இணைப்பு பெற்று, பயிர் செய்தனர், அவ்வாறு அவர்கள் பயன்படுத்திய மின்சாரத்திற்கு அதிக கட்டணம் மின் வாரியத்தால் வசூலிக்கப்பட்டு வந்தது. இயற்கை சீற்றம் மற்றும் பருவம் தவறிய மழை பொழிவின் காரணமாக விளைச்சல் இல்லாததால் விவசாயிகளால் மின்சார கட்டணத்தை கட்டமுடியாத நிலையில் மின்சார வாரியம் விவசாயிகளுக்கு மிகப்பெரிய நெருக்கடி கொடுத்து வந்தது.
ஒரு புறம்  தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி நிலவிய நிலையில், தமிழக விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம்  வாங்கிய பயிர் கடன்  மற்றும் பண்ணை சாராத கடனை திருப்பி செலுத்த இயலவில்லை.
கடனை திருப்பி செலுத்தாவிட்டால் ஜப்தி என்ற சட்டத்தின் படி, விவசாயிகள் வீட்டில் உள்ள பொருட்களை ஜப்தி செய்து நடவடிக்கை எடுக்க தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் முயற்சித்தினர். 
தமிழக விவசாயிகள் படும் இன்னல்களை கருத்தில் கொண்டு சிதறிய நெல்லிக்காயாக கிடந்த தமிழக விவசாயிகளை, கடன் தொல்லை, மின்சார கட்டணம்  உயர்வு போன்ற துயரங்களில் இருந்து காப்பாற்றுவதற்காக, தமிழக விவசாயிகள் சங்கத்தை தோற்றிவித்தது  மறைந்த உழவர் பெருந்தலைவர் C . நாராயணசாமி நாயுடு அவர்கள் தலைமையில் 1970 முதல் 1980 வரை தமிழகம் தழுவிய அளவில் விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்றது. கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த போராட்டத்தில், தமிழ்நாடு அரசு காவல்துறை நடத்திய துப்பாக்கி  சூட்டில், துப்பாக்கி குண்டுக்கு இறையாகி 53 விவசாயிகளும் இறந்துள்ளனர். கிணற்று மோட்டாருக்கு தமிழக அரசு யூனிட்டுக்கு 8 பைசாவாக பழைய கட்டணத்தில்   இருந்து ஒரு பைசா உயர்த்தி 9 பைசாவாக நிர்ணயம் செய்தன் காரணமாக தமிழக விவசாயிகள் சங்கம்‌ சார்பில் ஒரு பைசா உயர்வில் இருந்து அரை பைசாவாக குறைக்க கோரி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து மிகப்பெரிய போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது . அதன் பின்னர் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்கள் அறிவுரைபடி தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் அனைவரும் ஒற்றுமையாக நிலைத்து நின்று பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய பால் மற்றும் காய்கரிகளை விற்பனைக்கு அனுப்பாமல் தமிழகம் முழுவதும் நிறுத்தப்பட்டது தமிழக விவசாயிகள் சங்கம் போராட்தை கண்டு அப்போது தமிழகத்தில் ஆட்சி செய்த தமிழக அரசு  பணிந்தது என்று அன்றைய தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிக்கையில் தலைப்பு செய்தியாக வெளிவந்துள்ளது. இப்படிபட்ட சூழ்நிலையில்தான் கடத்த காலக்கட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைக்கா முன்னிறுத்திய  போராட்டம் விளைவாகத்தான் தமிழக அரசு பயிர் கடன் தள்ளுபடி இலவச மின்சாரம் கொடுக்கப்பட்டது என்று அனைத்து விவசாயிகளும் நினைவில் கொள்ள வேண்டும். 5.7.1972 ல் இந்த முதல் போராட்டத்தில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள  பெத்தநாயக்ன்பாளையம் வட்டம்  அதே பகுதியை சார்ந்த 9 விவசாயிகள் மீது தமிழக காவல்துறை துப்பாக்கி சுடு நடதத்தியதில் விவசாயிகள் உயிரிழந்தனர், 
இது போல் பல தினங்களில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம், தமிழகம் முழுவதும் நடைபெற்றதில் வேடந்தூர் பெருமாநல்லூர் கோயில்பட்டி குறிஞ்சாங்குளம் ஆகிய பகுதிகளில் 53 தமிழக விவசாயிகள் மீது தமிழ்நாடு அரசு காவல்துறை துப்பாக்கி சுடு ‌நடத்தி, விவசாயிகளை கொன்று குவித்தது. தமிழக அரசு தமிழகத்தில் முதல் துப்பாக்கி சுடு நடத்திய  நாளான 5.7.1972 மறைந்த தியாகிகளுக்கு ஆண்டு தோறும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வீர வணக்க
 நாளாக கடைபிடித்து வருகிறோம். தமிழக விவசாயிகள் கிணறு மோட்டார் மூலம் பாசனம் செய்ய இலவச மின்சாரம் கிடைக்க வழிவகை உருவாக்கி கொடுத்தது, துப்பாக்கி சுடு மூலம் இறந்த தீயாகிகள் மூலம் தான் இலவச மின்சாரம் கிடைக்க பெற்றது என்பதை இப்போது உள்ள இளம் சங்திகள் தெறிந்துகொள்ள வேண்டும். தமிழக விவசாயிகளுக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்த‌ வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 5.7. 2026 காலை 10 மணிக்கு சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்ன்பாளையம்  பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள தூபி பகுதிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் வருகை தந்து அனைத்து விவசாயிகளும் பேரணியாக சென்று துப்பாக்கி சூட்டில் பலியான தீயாகிகள் அனைவரையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்த நினைவிடத்தில் வீர வணக்கம் செல்லுத்த   விவசாயிகள் அனைவரும் வருகை தரும்படி உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் அன்புடன் அழைக்கிறேன் என்று மாநில தலைவர் வேலுச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.

ஞாயிறு, 28 ஜூன், 2026

வெள்ளி கொலுசு தயாரிப்பது என்பது உருக்குதல், வடிவமைப்பு செய்தல், இணைத்தல் மற்றும் மெருகூட்டுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய 16 கட்டங்களைக் கொண்ட ஒரு கலைநயமிக்க முறையாகும்.

வெள்ளி கொலுசு தயாரிப்பது என்பது உருக்குதல், வடிவமைப்பு செய்தல், இணைத்தல் மற்றும் மெருகூட்டுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய 16 கட்டங்களைக் கொண்ட ஒரு கலைநயமிக்க முறையாகும்.

சேலம், 
S.K. சுரேஷ் பாபு. 

வெள்ளி கொலுசு தயாரிப்பது என்பது உருக்குதல், வடிவமைப்பு செய்தல், இணைத்தல் மற்றும் மெருகூட்டுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய 16 கட்டங்களைக் கொண்ட ஒரு கலைநயமிக்க முறையாகும். 

தூய வெள்ளியுடன் அதன் உறுதித்தன்மைக்காக குறிப்பிட்ட அளவு செம்பு சேர்த்து, சிறிய மண் தொட்டியில் கரி மற்றும் உமி கொண்டு சூடாக்கி உருக்கப்படும்.கம்பி தயாரித்தல் தயாரிப்பு முறையின் முக்கிய கட்டங்கள்உருக்குதல் (Melting) அம்சங்களாக கருதப்படுகின்றன. உருகிய வெள்ளி, கம்பி தயாரிக்கும் இயந்திரம் (Wire Machine) மூலம் மெல்லிய கம்பிகளாக மாற்றப்படும். வடிவமைப்பு (Designing): கொலுசுக்கான பூ, அரும்பு, பட்டை, சலங்கை போன்ற பாகங்கள் பிரத்யேக அச்சுகள் (Dies) மற்றும் இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படும். 
பின்னர்  பட்டறையில் (Loose Patrai) இந்த பாகங்கள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு, சங்கிலி வடிவில் கோர்க்கப்படும்.மெருகூட்டுதல்.
கொலுசு முழுவடிவம் பெற்றதும், மெஷின் பாலிஷ் மற்றும் கை மெருகு (Buffing and Polishing) கொடுக்கப்பட்டு பளபளப்பாக்கப்படும். இவ்வளவு பணிகளை கடந்து பெண்களின் பாதங்களை அலங்கரிக்கும் இந்த சலங்கைகள் பொருந்திய கால் கொலுசுகள் தயாரிப்பு நிறுவனங்களால் ஒரு காலத்தில் சேலம் மாநகரைக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்திருந்தது. புவி சார் குறியீடு, உட்படு எண்ணற்ற பெருமைகளை மாங்கனி மாநகர சேலம் மாநகரத்திற்கு பெற்று தந்த ஆளுமை கூட தங்கத்தை போன்று தற்பொழுது நாளுக்கு நாள் உயர்ந்து வரும் வெள்ளியின் உயர்வாள் பாதிக்கப்பட்டுள்ளது என்னவோ இந்த தொழிலையே நம்பி உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களை மட்டுமே என்பதை யாராலும் மறுத்து விட முடியாது. 
சேலம் செவ்வாய்பேட்டை, சேலத்தை அடுக்குள்ள சிவதாபுரம் பனங்காடு திருமலைகிரி உள்ளிட்ட பகுதிகள் ஒரு காலகட்டத்தில் சின்ன சிங்கப்பூர் ஆகவே கருதப்பட்டது காரணம் வெள்ளி கொலுசு தொழில் உச்சத்தில் இருந்த பொழுது. தற்பொழுது தங்கத்தை போன்று நாளுக்கு நாள் வெளியில் விளையும் நிர்ணயிக்கப்படுவதால் சேலம் மாணவருக்கு பெருமை சேர்த்து வந்த இந்த வெள்ளி பொருட்களின் உற்பத்தி தொழில் அதல பாதாளத்திற்கு சென்று மீள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வெள்ளி தொழில் சம்பந்தப்பட்ட அத்துனை பேரும். வெள்ளி வர்த்தகத்தை ஆன்லைனில் நிர்ணயித்தது மட்டுமே என்று குற்றம் சுமத்தும் ஒட்டுமொத்த இந்த தொழிலையே நம்பியுள்ளவர்கள் இதற்கு மூல காரணம் மத்தியில் அங்கம் வகிக்கும் பாஜக அரசு மட்டுமே என்று குறை கூறாமல் இருக்கவில்லை. 
வேதனையுடன் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் சேர்ந்த முன்னாள் மாவட்ட செயலாளர் இமாம், நம்மிடையே பதிவிட்டு ஆதங்கம் இதோ. ஒவ்வொரு தொழிலிலும் கைதேர்ந்த நபர்கள் இருப்பார்கள் என்பதைப் போன்று 40 கட்டங்களை கடந்தால் மட்டுமே ஒரு பெண்மணியின் பாதங்களை அலங்கரிக்கும் இந்த ஒரு கொலுசை தயாரிக்க முடியும். அந்த வகையில் பார்க்கும்போது ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒவ்வொரு சிறப்பம்சமாக கொண்டவர்கள் இருப்பார்கள் இருந்தார்கள். அவர்களின் தற்போதைய நிலை சுண்ணாம்பு அடிப்பது வீட்டு வேலைகளை செய்வது கிடைக்கும் கூலி தொழிலுக்கு செல்வது. இந்த நிலை எப்பொழுது மாறும் என்று தெரியாமல் விழி பிதுங்கி பலர் இந்த தொழிலை விட்டு விலகி சென்று விட்டதாகவும் எஞ்சியிருப்பவர்களால் மட்டுமே சேலத்தின் பெருமையை சேர்க்க கட்டிக் காப்பாற்ற கொண்டிருப்பதாகவும் வேதனை தெரிவித்தார். 
நழிவடைந்து வரும் வெள்ளி கொலுசு உட்பட வெள்ளி பொருட்களின் உற்பத்தியை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் என்ன செய்யப் போகின்றன. பொறுத்திருந்து பார்ப்போம்.
நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்று மாங்கனி மாநகருக்கு பெருமை சேர்த்த சிற்ப ஸ்தபதி.

நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்று மாங்கனி மாநகருக்கு பெருமை சேர்த்த சிற்ப ஸ்தபதி.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்று மாங்கனி மாநகருக்கு பெருமை சேர்த்த சிற்ப ஸ்தபதி. 

சேலம் கன்னங்குறிச்சியை சார்ந்தவர் ராஜா என்கின்ற சிற்ப கலைஞர். இவர் பாலமுருகன் சிற்பக் கலைக்கூடம் என்ற பெயரில் அதே பகுதியில் ஸ்தாபனம் ஒன்றை நிறுவி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, பஞ்சலோக சிலைகள், கோவில் திருப்பணிகள், கற்சிற்பங்கள், மரச் சிற்பங்கள் மேற்கண்ட சிற்பக்கலை சார்ந்த பணி வேலைகள் அனைத்து சிற்ப சாஸ்திர ஆகம விதிமுறைப்படி மேற்கொண்டு முதன்மை கலைஞராக தமிழக அளவில் திகழ்ந்து வந்தவர் என்ற பெருமைக்குரியவர் ராஜாஸ்தபதி. இவரது சிற்பக்கலை திருப்பணிகளை போற்றி ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு இந்திய திருநாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பையும் சமீபத்தில் வெளியிட்டது. 
அதன் அடிப்படையில் புது தில்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் இந்திய குடியரசுத் தலைவர் மேதகு த்ரௌபதி முர்மு  பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தார். இந்திய திருநாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்று மாங்கனி மாநகரான சேலத்திற்கு பெருமை சேர்த்த மண்ணின் மைந்தர் ராஜா ஸ்தபதிக்கு கடந்த இரண்டு நாட்களாக சேலத்தில் மாணவரின் முக்கிய பிரமுகர்களும் உற்றார் உறவினர்களும் தொடர்ச்சியாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் நமது செய்தி குழு நேரில் அவரை அணுகி வாழ்த்துக்களை தெரிவித்த போது, 
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிற்ப கலை துறையில் என்னை சிறந்த மனிதராக தேர்ந்தெடுத்து அதற்கான பத்மஸ்ரீ விருதையும் அறிவித்து கௌரவித்த இந்திய குடியரசு தலைவருக்கும் பாரத பிரதமருக்கும் தன்னை தேர்வு செய்த தேர்வு குழுவினருக்கும் முதற்கண் தனது  நன்றியை உரித்துதாக்குவதாக தெரிவித்துக் கொண்ட அவர், இளைஞர்கள் மத்தியில் சிற்ப கலையை ஊக்குவிக்கும் வகையில் எதிர்காலத்தில் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், தமிழகத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள சிற்பக் கலைஞர்களின் நலனை ஊக்குவிக்க அதற்கான திட்டங்களை வகுத்து அவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கை இணையும் முன் வைத்தார். 
மண்ணின் மைந்தரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டுவது மாணவரின் முக்கிய பிரமுகர்களையும் கடந்து பள்ளி மாணக்கர்களும் நேரில் சந்தித்து வாழ்த்து கூற வயதில்லை என்றாலும் அவரிடம் ஆசி பெற்று சென்ற வண்ணம் உள்ளனர் என்பது மட்டும் நிதர்சனம்.
சின்னசேலத்தில் மாபெரும் இலவச சிறுநீரக மாற்று  அறுவை சிகிச்சை முகாம்.

சின்னசேலத்தில் மாபெரும் இலவச சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முகாம்.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சின்னசேலத்தில் மாபெரும் இலவச சிறுநீரக மாற்று  அறுவை சிகிச்சை முகாம்.

டயாலிசிஷிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி சேலம் சீரகாப்பாடி விம்ஸ் மருத்துவமனை மற்றும் சின்னசேலம் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய ஏதும் இலவச சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முகாம்  கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் நடைபெற்றது. ரோட்டரி சங்க நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமினை, விம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும், மருத்துவருமான மீனாட்சி சுந்தரம் அறிவுறுத்தலின் பேரில்,
மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி வெங்கடேஷ் வழிகாட்டுதலின்படி, மருத்துவமனையின் முதன்மை நரம்பியல் நிபுணர் மருத்துவர் மோகன்பாபு துவக்கி வைத்த இந்த சிறப்பு முகாமில், மருத்துவமனையன் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு, ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு, இசிஜி, சிறுநீரக மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளுக்கான ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த முகாமில், நீண்ட காலமாக நீரிழிவு நோய்க்கு மருந்து உட்கொள்பவர்கள், அதிக உடல் பருமன் கொண்டவர்கள்,  உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள்,  கை கால்கள் மற்றும் உடலில் வீக்கம் உள்ளவர்கள், அடிக்கடி சிறுநீர் தொற்று ஏற்படுபவர்கள், சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள், சிறுநீர் கழிப்பது எரிச்சல் வலி அல்லது இரக்கம் காண்பவர்கள் மற்றும் குடும்பத்தில் சிறுநீரக நோய் வரலாறு உள்ளவர்கள் கலந்து கொண்டு இலவச சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை பெற்றுச் சென்றனர். 
இந்த சிறப்பு மருத்துவ முகாமில் சின்னசேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர். 

வியாழன், 25 ஜூன், 2026

இறைதூதர் பேரன்களின் தியாகத்தை போற்றும் வகையில், சேலத்தில்  இஸ்லாமியர்கள் புலி நடனமாடி நேர்த்திக்கடன்.

இறைதூதர் பேரன்களின் தியாகத்தை போற்றும் வகையில், சேலத்தில் இஸ்லாமியர்கள் புலி நடனமாடி நேர்த்திக்கடன்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

இறைதூதர் பேரன்களின் தியாகத்தை போற்றும் வகையில், சேலத்தில்  இஸ்லாமியர்கள் புலி நடனமாடி நேர்த்திக்கடன்.

இஸ்லாமியர்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மொஹரம் திருநாள் உலக இஸ்லாமியர்களால் கடைபிடிக்கப்பட்டு  வருகிறது. இறைதூதர் நபிகள் நாயகத்தின் பேரர்களான ஹசேன் மற்றும் உசேன் கொல்லப்பட்டதை நினைவு கூறும் விதமாகவும், அவர்களது தியாகத்தை போற்றும் வகையில்  கொண்டாடப்படும் இந்த திருநாளையொட்டி சேலத்தில் இஸ்லாமியர்களால் மிரட்சியுடன் கடைபிடிக்கப்பட்டது. 
தியாகத் திருநாளாக கருதப்படும் இந்த மொகரம் விழாவையொட்டி சேலம் கோட்டை சுன்னத் ஜமாத் சார்பில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக புலி ஆட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டுதோறும் சேலத்தில் கலைக்கட்டும் இவ்விழாவானது கோட்டை பகுதியில் உள்ள ஃபிரண்ட்ஸ் மஹாலில் துவங்கிய இந்த புலி ஆட்ட நிகழ்வில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புலிடமிட்டு மேளதாள இசைக்கு ஏற்றவாறு புலி நடனமாடி இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் பேரர்கள் தியாகத்தை போற்றினர்.
கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த புலி நடன ஊர்வலமானது இறுதியில் ஃபிரண்ட்ஸ் மஹாலில் நிறைவு பெற்றது. சேலம் கோட்டை சுன்னத் ஜமாத் தலைவர் காதர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நிர்வாகிகள் பண்டு, ஷேக் மதார், ஆரிப், பாஷா, அஜீம், யூசுப் மற்றும் ஆசிப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். இதனை அடுத்து சேலம் கோட்டை சுன்னத் ஜமாத் சார்பில் பிற்பகல் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன.
தமிழக விவசாயிகளின் நலன் கருதி 2026 2027 ஆம் ஆண்டு இடைக்கால நிதிநிலை அறிகையில் தென்னை மற்றும் பனை மர கள்ளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடைகளை அவர்கள் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தனது தலைமையில் பூட்டு போடும் போராட்டம். தமிழக அரசுக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி எச்சரிக்கை.

தமிழக விவசாயிகளின் நலன் கருதி 2026 2027 ஆம் ஆண்டு இடைக்கால நிதிநிலை அறிகையில் தென்னை மற்றும் பனை மர கள்ளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடைகளை அவர்கள் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தனது தலைமையில் பூட்டு போடும் போராட்டம். தமிழக அரசுக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி எச்சரிக்கை.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழக விவசாயிகளின் நலன் கருதி 2026 2027 ஆம் ஆண்டு இடைக்கால நிதிநிலை அறிகையில் தென்னை மற்றும் பனை மரத்தில் இருந்து இரக்கும் கள்ளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடைகளை  செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தனது தலைமையில் பூட்டு போடும் போராட்டம். தமிழக அரசுக்கு  உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி எச்சரிக்கை. 

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு அவசர எச்சரிக்கை கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. இதில் சங்கத்தின் மாநில தலைவர் வேலுச்சாமி எழுதியுள்ளதாவது, தமிழக விவசாயிகள் தங்களது நிலத்தில் சாகுபடி செய்துள்ள தென்னை மற்றும் பனை மரத்தில் இருந்து இயற்கையான முறையில் கலப்படம் இல்லாமல் பெறப்படும் கள்ளானது உணவில் ஒரு பகுதியாகும். மக்கள் தினமும் பருகி வருகின்றனர்.
அத்தகைய கள்ளுக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை நீக்க கோரி பலமுறை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தோம். ஆனால் தமிழக அரசு இதுவரை கள்ளுக்கு உண்டான தடையை நீக்க எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.‌ தமிழக அரசின் நாட்டுக்கும் மனித உயிருக்கும் ஆபத்தை விலை விக்கும் மதுபானத்தை டாஸ்மாக் கடைகள் மூலமாக  வருவாயை பெருக்கி வருவதில் தான் அதிகப்படியான ஆர்வம் காட்டி வருகிறது. தென்னை மற்றும் மற்றும் பனை மரத்திலிருந்து இறக்கும் கள்ளு மனிதனின் உடலுக்கு ஆரோக்கியமான உணவுப் பொருளாகும். இது ஒரு போதை பொருள் அல்ல தமிழக அரசு கள்ளுக்கு உண்டான கடையை நீக்கினால் பல லட்சம் விவசாயிகள் விவசாய குடும்பங்கள் வாழ்வாதாரம் ஏற்றம் பெறும். 
இதனால் தென்னை மற்றும் பனை மரம் ஏறும் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் மேம்படும். தமிழக விவசாயிகளின் நலன் கருதி தென்னை மற்றும் பனை மரத்திலிருந்து இறக்கும் கள்ளுக்கு உண்டான தடையை தமிழக அரசு உடனடியாக நீக்க வேண்டும். தமிழகத்தை சுற்றியுள்ள அண்டை மாநிலங்களில் கள்ளுக்கு தடை இல்லை. தமிழகத்தில் மட்டும் கடந்த 1.1.87 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு கள்ளில் கலப்படம் என்று கூறி தடை செய்துள்ளது. எனவே டி வி கே அரசு தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 2026 - 2027 ஆம் ஆண்டு இடைக்கால நிதிநிலை அறிக்கையின் போது அறிவிப்பு வெளியிட வேண்டும். இது சம்பந்தமாக அறிவிப்பு வெளியிடாவிட்டால், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் வேலுச்சாமி ஆகிய எனது தலைமையில் தமிழக முழுவதும் முழுவதும் தமிழக அரசால் நடத்தப்பட்டு வரும் அரசு மதுபான கடைகளுக்கு வரும் செப்டம்பர் 15ஆம் தேதி பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த அவசர கடிதம் வாயிலாக தெரிவித்துக் கொள்வதாக மாநில தலைவர் வேலுச்சாமி தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு போராட்ட எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக முதலமைச்சருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் நகல் மதுவிலக்கு மற்றும் ஆயத்திருவை அமைச்சருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்த அவசர கடிதத்தில் வேலுச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

திங்கள், 22 ஜூன், 2026

சேலம் ஓமலூரில் பணி ஓய்வு பெற்று 13 ஆண்டு காலம் ஆகியும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கிராம உதவியாளர் பணி ஓய்வு பெற்று 13 ஆண்டுகளாகியும் ஓய்வூதிய பலன்களை வழங்காமல் ஏமாற்றும் மேட்டூர் சார் ஆட்சியர் மற்றும் ஓமலூர் வட்டாட்சியர். மத்திய மாநில அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு மற்றும் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு கடும் கண்டனம்.

சேலம் ஓமலூரில் பணி ஓய்வு பெற்று 13 ஆண்டு காலம் ஆகியும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கிராம உதவியாளர் பணி ஓய்வு பெற்று 13 ஆண்டுகளாகியும் ஓய்வூதிய பலன்களை வழங்காமல் ஏமாற்றும் மேட்டூர் சார் ஆட்சியர் மற்றும் ஓமலூர் வட்டாட்சியர். மத்திய மாநில அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு மற்றும் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு கடும் கண்டனம்.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் ஓமலூரில் பணி ஓய்வு பெற்று 13 ஆண்டு காலம் ஆகியும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கிராம உதவியாளர் பணி ஓய்வு பெற்று 13 ஆண்டுகளாகியும் ஓய்வூதிய பலன்களை வழங்காமல் ஏமாற்றும் மேட்டூர் சார் ஆட்சியர் மற்றும் ஓமலூர் வட்டாட்சியர். மத்திய மாநில அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு மற்றும் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு கடும் கண்டனம். 

சேலம் மாவட்டம் ஓமலூர் சேர்ந்தவர் கோவிந்தராஜ். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த இவர் ஓமலூரில் கிராம உதவியாளராக பணியாற்றி கடந்த 2013 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். இவர் பணி ஓய்வு பெற்று 13 ஆண்டு காலம் ஆகியும் தற்பொழுது வரை ஓய்வூதிய பலன்கள் வழங்காமல் மேட்டூர் சார் ஆட்சியரும், ஓமலூர் வட்டாட்சியர் உட்பட வருவாய்த் துறையினர் தொடர்ச்சியாக கோவிந்தராஜை அலைகழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மற்றும் கோரிக்கை மனு வழங்கியும் தற்போது வரை பாதிக்கப்பட்ட கோவிந்தராஜுக்கு எந்த ஓய்வூதிய பலனும் கிடைக்கவில்லை என்பதால் மத்திய மாநில அரசு ஊழியர் கூட்டமைப்பு மற்றும் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் தேசிய ஒருங்கிணைப்பாளரான சரஸ்ராம் ரவிராமசாமி அவர்களை கோவிந்தராஜ் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள அவரது அலுவலகத்தில் அணுகினார். 
பாதிக்கப்பட்ட கோவிந்தராஜிற்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக 13 ஆண்டுகளாக மனப்பலன்கள் ஏதும் கொடுக்காமல் அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் குறித்து முழுமையாக கேட்டு அறிந்த சரஸ்ராம் ரவிராமசாமி நம்மிடம் கூறுகையில், தமிழகம் முழுவதும் அரசு துறைகளில் பணியாற்றும் எஸ்சி / எஸ்டி, சீர் மரபினர் மற்றும் பட்டியலின சமுதாயத்தை சார்ந்த ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும், அவர்களுக்கான ஓய்வூதிய பலன் மற்றும் பண பலன்கள் ஏதும் முழுமையாக சென்று சேருவதில்லை என்று குற்றம் சாட்டிய அவர், சேலம் மாவட்டம் ஓமலூர் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு கிராம உதவியாளராக பணியாற்றி பணி ஓய்வு பெற்றார். இவருக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதிய பலன்கள் முழுவதும் தற்பொழுது வரை கொடுக்காமல் மேட்டூர் சார் ஆட்சியரும் ஓமலூர் வட்டாட்சியரும் தொடர்ச்சியாக அலைகழித்து வருவதோடு மட்டுமல்லாமல் வேண்டுமென்றே பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி இழுத்தடிப்பதாகவும் இதனை தேசிய ஒடுக்கப்பட்ட  மக்கள் குடியரசு வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய சரஸ்ராம் ரவிராமசாமி, இது சம்பந்தமாக சேலம் மாவட்ட ஆட்சியர்,  தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் நேஷனல் கமிஷன் ஐ சேர்ந்த ரவிவர்மன்  ஆகியோருக்கு இன்று காலை புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இதே போல் சேலம் மாவட்டம் மேச்சேரியில் 34 தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த வாட்டர் மேன்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவங்கள் தொடர்பாக தாழ்த்தப்பட்ட ஆணையத்திற்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணையம் கடந்த 13 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம உதவியாளருக்கு ஓய்வூதிய பலன்களை கொடுக்காமல் ஏமாற்றிய மேட்டூர் சார் ஆட்சியர், ஓமலூர் வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அப்போது நிர்வாகி அடைக்கலம், பாதிக்கப்பட்ட உட்பட  கோவிந்தராஜ் அவரது  குடும்பத்தார் என பலரும் உடன் இருந்தனர்.