Latest

திங்கள், 13 ஜூலை, 2026

கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை திறக்க ஒரே அணியாக திரண்டு வந்து காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை பெறுவதற்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி அழைப்பு.

கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை திறக்க ஒரே அணியாக திரண்டு வந்து காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை பெறுவதற்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி அழைப்பு.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை திறக்க ஒரே அணியாக திரண்டு வந்து காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை பெறுவதற்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி அழைப்பு.

இது தொடர்பாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி விடுதுள்ள அழைப்பு கடிதத்தில், தமிழ்நாட்டிற்கு இந்த ஆண்டுக்கு உண்டான காவிரி பங்கீட்டு தண்ணீரை கர்நாடகா அரசு திறந்துவிடாததை கண்டித்து  அங்கு உள்ள அணைகளில் இருக்கும் காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை திறக்க  உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் இளம் விவசாயிகள் சங்கம், விவசாய முன்னேற கழகம் மற்றும் பல்வேறு விவசாயிகள் சங்க அமைப்புக்கள் இணைந்து நாளை மறுநாள் 15.7.2026 அன்று  புதன்கிழமை காலை 11 மணிக்கு  தமிழக எல்லையான ஓசூர் E S I மருத்துவமனை பகுதியில்  இருந்து,  தமிழக விவசாயிகளை மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி கர்நாடகா சென்று அங்கு உள்ள அணைகளில்  தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை திறக்கப்படவுள்ளது. எனவே காவிரி பாசனத்தை நம்பியுள்ள  விவசாயிகள் மற்றும்  தமிழகத்தில் காவிரியை  குடிநீர் ஆதாரமாக கொண்டுள்ள  22 மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், இளைஞர்கள்  பல தரப்பட்ட அமைப்பை சார்ந்தவர்கள் அனைவரும் ஒரே அணியாக திரண்டு வந்து காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை பெறுவதற்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

ஞாயிறு, 12 ஜூலை, 2026

சேலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம். ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனரும் தலைவருமான அதியமான் கலந்து கொண்டு நான்கு மாவட்ட நிர்வாகிகளுடன் முக்கிய முடிவு.

சேலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம். ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனரும் தலைவருமான அதியமான் கலந்து கொண்டு நான்கு மாவட்ட நிர்வாகிகளுடன் முக்கிய முடிவு.


சேலம்,
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம். ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனரும் தலைவருமான அதியமான் கலந்து கொண்டு நான்கு மாவட்ட நிர்வாகிகளுடன் முக்கிய முடிவு. 

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது அனைத்து அரசியல் கட்சியினரின் கோரிக்கையாகவே இருந்து வருகிறது. அதன் அடிப்படையில் ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் சேலம் திருவா கவுண்டனூரில் நடைபெற்றது. ஆதித்தமிழர் பேரவையின் சேலம் மத்திய மாவட்ட செயலாளரும் மாநில துணைச் செயலாளருமான ஏ.டி.ஆர். சந்திரன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் 4 மாவட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்த கூட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனரும் தலைவருமான அதியமான் தலைமை வகித்தார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், பேரவையின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. தொடர்ந்து  தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதன் அவசியம் குறித்தும் அதன் தேவைகள் குறித்தும் நிறுவனரும் தலைவருமான அதியமான் 4 மாவட்ட நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். நான்கு மாவட்ட நிர்வாகிகள் பல்வேறு ஆலோசனைகளையும் தெரிவித்தனர்.
தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசும் போது, தமிழக அரசு தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது என்றும் அண்டை மாநிலங்களை போன்று தமிழகத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் வேண்டுமென்று கூறிய ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் உள் ஒதுக்கீடு நியமனம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் ஆதிதிராவிடர் என்பது தனிப்பட்ட ஜாதி என்பதை குறிப்பதால் ஒட்டுமொத்த ஆதிதிராவிடர் நலத்துறையும் சமூக நீதித்துறை என மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றார். மேலும் அவர் கூறுகையில் தமிழக அமைச்சரவையில் 3 அருந்ததியருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்றும் தற்பொழுது ஒருவர் மட்டுமே அமைச்சர்  பதவியில் உள்ளதாகவும், ஆதிதிராவிடர் பெயரை மாற்றி சொல்வதால் நாங்கள் திராவிடத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்றும் அதியமான் குறிப்பிட்டார்.

வெள்ளி, 10 ஜூலை, 2026

வெள்ளி தங்கம் மற்றும் நகை தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க ஆவணம் செய்ய வேண்டும். சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை நல சங்கத்தின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு..

வெள்ளி தங்கம் மற்றும் நகை தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க ஆவணம் செய்ய வேண்டும். சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை நல சங்கத்தின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு..

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

வெள்ளி தங்கம் மற்றும் நகை தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க ஆவணம் செய்ய வேண்டும். சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை நல சங்கத்தின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு..

சேலம் மாநகரம் உட்பட மாவட்டம் முழுவதும் முக்கிய பாரம்பரிய தொழில்களில் ஒன்றாக வெள்ளி கொலுசு உற்பத்தி தொழிலும் கருதப்படுகிறது. அந்த வகையில் சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை நலச் சங்கத்தின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதில் சங்கத்தின் தலைவர் ஸ்ரீ ஆனந்தராஜ் தெரிவித்துள்ளதாவது, 
வெள்ளி மற்றும் தங்க நகை தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க ஆவணம் செய்ய வேண்டும் என்றும் சேலம், சென்னை, மதுரை, திருச்சி, விருதுநகர் மற்றும் விழுப்புரம் உட்பட தமிழகம் முழுவதும் வெள்ளி மற்றும் தங்கம் தொழிலில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தாருடன் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தனி நலவாரியம் அமைத்து தர என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் தமிழக அரசுக்கு வெள்ளி மற்றும் தங்க நகை தொழில்களில் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் நகை விற்பனையில் வரியாக செலுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் வெள்ளி மற்றும் தங்க நகை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இதுவரை தமிழக அரசின் எந்த விதமான நல வாரியத்திலும் எந்தவிதமான பலன்களும் கிடைக்கவில்லை எனவே உடனடியாக தமிழக அரசு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என்றும் சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை நலச்சங்கத்தின் சார்பாக சேலம் வெள்ளி குலத்திற்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் புவிசார் குறியீடு பெறுவதற்கு ஆவணம் செய்ய வேண்டும் என்றும் சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை நலச் சங்கத்தின் தலைவர் ஸ்ரீ ஆனந்தராஜன் குறிப்பிட்டுள்ளார்.

வியாழன், 9 ஜூலை, 2026

கர்நாடக அணைகளில் உள்ள காவிரி உரிமை பங்கிட்டு தண்ணீரை திறக்க வலியுறுத்தி கர்நாடக எல்லையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம். காவிரி பாசன வசதி பெரும் அனைத்து விவசாயிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும். சுற்றறிக்கையின் வாயிலாக தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அழைப்பு.

கர்நாடக அணைகளில் உள்ள காவிரி உரிமை பங்கிட்டு தண்ணீரை திறக்க வலியுறுத்தி கர்நாடக எல்லையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம். காவிரி பாசன வசதி பெரும் அனைத்து விவசாயிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும். சுற்றறிக்கையின் வாயிலாக தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அழைப்பு.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

கர்நாடக அணைகளில் உள்ள காவிரி உரிமை பங்கிட்டு தண்ணீரை திறக்க வலியுறுத்தி கர்நாடக எல்லையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம். காவிரி பாசன வசதி பெரும் அனைத்து விவசாயிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும். சுற்றறிக்கையின் வாயிலாக தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அழைப்பு. 

இது குறித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சேர்ந்த மாநில தலைவர் சுற்றறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளதாவது,
தமிழ்நாட்டிற்கு நடப்பாண்டிற்கு உண்டான காவிரி பங்கேற்று தண்ணீரை கர்நாடகா அரசு திறந்து விடாததை கண்டித்து, அங்குள்ள அணைகளில் இருக்கும் காவிரி உரிமை பங்கிட்டு தண்ணீரை திறக்க உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் இளம் விவசாயிகள் சங்கம் இணைந்து வருகின்ற 15.7.2026 அன்று காலை 11 மணியளவில் தமிழ்நாடு கர்நாடகா எல்லையான ஓசூர் பகுதியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை பகுதியில் இருந்து தமிழக விவசாயிகளை மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி கர்நாடக சென்று அங்குள்ள அணைகளில் காவிரி உரிமை பங்கேற்று தண்ணீரை திறக்க கோரி போராட்டம் நடத்த உள்ளோம். 
எனவே தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை பங்கேற்று தண்ணீரை திறக்க தமிழ்நாட்டில் உள்ள காவிரி பாசனம் பெரும் அனைத்து விவசாயிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி சுற்றறிக்கையின் வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார்.

திங்கள், 6 ஜூலை, 2026

அனைத்திந்திய இந்து திருக்கோவில்கள் பாதுகாப்பு சங்கத்திற்கு புதிய  சேலம் மாவட்ட செயலாளராக சேலத்தைச் சேர்ந்த சண்முகம் நியமனம்.

அனைத்திந்திய இந்து திருக்கோவில்கள் பாதுகாப்பு சங்கத்திற்கு புதிய சேலம் மாவட்ட செயலாளராக சேலத்தைச் சேர்ந்த சண்முகம் நியமனம்.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு. 

அனைத்திந்திய இந்து திருக்கோவில்கள் பாதுகாப்பு சங்கத்திற்கு புதிய  சேலம் மாவட்ட செயலாளராக சேலத்தைச் சேர்ந்த சண்முகம் நியமனம். 

அனைத்திந்திய இந்து திருக்கோவில்கள் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய தலைவராக இருப்பவர்  அருள்வேலன் ஜி. தமிழகம் உட்பட தேசிய அளவில் மாவட்டங்கள் தோறும் பொறுப்பாளர்கள் உள்ள நிலையில் அனைத்திந்திய இந்து திருக்கோவில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சேலம் மாவட்ட செயலாளர் ஆக சேலத்தைச் சேர்ந்த சிறந்த ஆன்மீகவாதியான சண்முகம் அவர்களை,  அருள்வேலன் ஜி நியமனம் செய்துள்ளார். 
இதற்கு தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ள சிறந்த ஆன்மீகவாதியான சண்முகம். மேலும் சேலம் மாவட்டத்தின் புதிதாக பொறுப்பேற்றுள்ள சண்முகம் ஜி அவர்களுக்கு,  ஆன்மீகம் மற்றும் திருக்கோவில்கள் சார்ந்த சேவை பணி சிறக்க மாநகரத்தில் உள்ள பெரும்பாலான முக்கிய பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

ஞாயிறு, 5 ஜூலை, 2026

தமிழகத்தில் இலவச மின்சாரத்திற்காக போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு. உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி தலைமையில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் மரியாதை. தமிழக விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக விவசாயிகளின் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்புடன் அணையை தகர்ப்போம் என்றும் சூளுரை.

தமிழகத்தில் இலவச மின்சாரத்திற்காக போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு. உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி தலைமையில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் மரியாதை. தமிழக விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக விவசாயிகளின் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்புடன் அணையை தகர்ப்போம் என்றும் சூளுரை.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

தமிழகத்தில் இலவச மின்சாரத்திற்காக போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு. உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி தலைமையில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் மரியாதை. தமிழக விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக விவசாயிகளின் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்புடன் அணையை தகர்ப்போம் என்றும் சூளுரை.

தமிழகத்தில் கடந்த 1970 முதல் 1980 கடுமையான வறட்சி நிலவியது,  அப்போது தமிழக விவசாயிகள் வேளாண் பணிகளை தொடங்குவதற்கு நிதி கையிருப்பு இல்லாமல் தவித்தனர். பல சிரமங்களுக்கு இடையிலும் வேளாண் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டிருந்த நிலையில், அப்போதைய தமிழ்நாடு அரசு மூலம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன் மற்றும் பண்ணை அபிவிருத்தி கடன் பெற்று, கிணற்று பாசனத்தை நம்பி விவசாயிகள் பயிர் செய்துவந்தனர். கிணறு பாசனத்தை நம்பி பயிர் செய்யும் விவசாயிகள், தமிழ்நாடு அரசு மின்சார வாரியம் மூலம், கிணற்று மோட்டாருக்கு மின் இணைப்பு பெற்று, பயிர் செய்தனர், அவ்வாறு அவர்கள் பயன்படுத்திய மின்சாரத்திற்கு அதிக கட்டணம் மின் வாரியத்தால் வசூலிக்கப்பட்டு வந்தது. இயற்கை சீற்றம் மற்றும் பருவம் தவறிய மழை பொழிவின் காரணமாக விளைச்சல் இல்லாததால் விவசாயிகளால் மின்சார கட்டணத்தை கட்டமுடியாத நிலையில் மின்சார வாரியம் விவசாயிகளுக்கு மிகப்பெரிய நெருக்கடி கொடுத்து வந்தது. ஒரு புறம்  தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி நிலவிய நிலையில், தமிழக விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம்  வாங்கிய பயிர் கடன்  மற்றும் பண்ணை சாராத கடனை திருப்பி செலுத்த இயலவில்லை.
கடனை திருப்பி செலுத்தாவிட்டால் ஜப்தி என்ற சட்டத்தின் படி, விவசாயிகள் வீட்டில் உள்ள பொருட்களை ஜப்தி செய்து நடவடிக்கை எடுக்க தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் முயற்சித்தினர். தமிழக விவசாயிகள் படும் இன்னல்களை கருத்தில் கொண்டு சிதறிய நெல்லிக்காயாக  கிடந்த தமிழக விவசாயிகளை, கடன் தொல்லை, மின்சார கட்டணம்  உயர்வு போன்ற துயரங்களில் இருந்து காப்பாற்றுவதற்காக,  தமிழக விவசாயிகள் சங்கத்தை தோற்றிவித்தது  மறைந்த உழவர் பெருந்தலைவர் C . நாராயணசாமி நாயுடு அவர்கள் தலைமையில் 1970 முதல் 1980 வரை தமிழகம் தழுவிய அளவில் விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்றது. 
கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த போராட்டத்தில், தமிழ்நாடு அரசு காவல்துறை நடத்திய துப்பாக்கி  சூட்டில், துப்பாக்கி குண்டுக்கு இறையாகி 53 விவசாயிகளும் இறந்துள்ளனர். ‌கிணற்று மோட்டாருக்கு தமிழக அரசு யூனிட்டுக்கு 8 பைசாவாக பழைய கட்டணத்தில்   இருந்து ஒரு பைசா உயர்த்தி 9 பைசாவாக நிர்ணயம் செய்தன் காரணமாக தமிழக விவசாயிகள் சங்கம்‌ சார்பில் ஒரு பைசா உயர்வில் இருந்து அரை பைசாவாக குறைக்க கோரி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து மிகப்பெரிய போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது . அதன் பின்னர் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்கள் அறிவுரைபடி தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் அனைவரும் ஒற்றுமையாக நிலைத்து நின்று பொதுமக்களுக்கு கிடைக்கவேண்டிய பால் மற்றும் காய்கரிகளை விற்பனைக்கு அனுப்பாமல் தமிழகம் முழுவதும் நிறுத்தப்பட்டது தமிழக விவசாயிகள் சங்கம் போராட்தை கண்டு அப்போது தமிழகத்தில் ஆட்சி செய்த தமிழக அரசு  பணிந்தது என்று அன்றைய தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிக்கையில் தலைப்பு செய்தியாக வெளிவந்துள்ளது.இப்படிபட்ட  சூழ்நிலையில்தான் கடத்த காலக்கட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைக்கா முன்னிறுத்திய  போராட்டம் விளைவாகத்தான்  தமிழக அரசு பயிர் கடன் தள்ளுபடி இலவச மின்சாரம் கொடுக்கப்பட்டது என்று அனைத்து விவசாயிகளும் நினைவில் கொள்ள வேண்டும். 5.7.1972 ல் இந்த முதல் போராட்டத்தில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள  பெத்தநாயக்ன்பாளையம் வட்டம்  அதே பகுதியை சார்ந்த 9 விவசாயிகள் மீது தமிழக காவல்துறை துப்பாக்கி சுடு நடதத்தியதில் விவசாயிகள் உயிரிழந்தனர். 
இது போல் பல தினங்களில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம், தமிழகம் முழுவதும் நடைபெற்றதில் வேடந்தூர் பெருமாநல்லூர் கோயில்பட்டி குறிஞ்சாங்குளம் ஆகிய பகுதிகளில் 53 தமிழக விவசாயிகள் மீது தமிழ்நாடு அரசு காவல்துறை துப்பாக்கி சுடு ‌நடத்தி, விவசாயிகளை கொன்று குவித்தது. தமிழக அரசு தமிழகத்தில் முதல் துப்பாக்கி சுடு நடத்திய  நாளான 5.7.1972 மறைந்த தியாகிகளுக்கு ஆண்டு தோறும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வீர வணக்க
 நாளாக கடைபிடித்து வருகிறோம். தமிழக விவசாயிகள் கிணறு மோட்டார் மூலம் பாசனம் செய்ய இலவச மின்சாரம் கிடைக்க வழிவகை உருவாக்கி கொடுத்தது, துப்பாக்கி சுடு மூலம் இறந்த தீயாகிகள் மூலம் தான் இலவச மின்சாரம் கிடைக்க பெற்றது என்பதை இப்போது உள்ள இளம் சங்திகள் தெறிந்துகொள்ள வேண்டும். தமிழக விவசாயிகளுக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் இன்று சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்றது. உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி தலைமையில் திரண்ட தமிழக விவசாயிகள் சங்கத்தினர் அங்குள்ள, பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள ஸ்தூபி பகுதியில்  திரண்டனர்.  
பின்னர் தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் வேலுச்சாமி தலைமையில் சிறந்த தமிழக விவசாயிகள் அங்கிருந்து ஊர்வலமாக இந்த போராட்டத்தில் உயிர்நீத்தை விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு வந்த தமிழக விவசாயிகள் உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள ஸ்தூபிக்கு மாலை அனைத்தும் மலர்களை தூவியும் மரியாதை செலுத்தினர். தமிழக காவல்துறையின் துப்பாக்கி சூட்டில் பலியான விவசாயிகளின் நினைவிடங்கலான பெத்தநாயக்கன்பாளையம் மற்றும் நரசிங்கபுரம் பகுதிக்கு சென்று அவர்கள் சமாதிகளுக்கு மாலை அணிவித்தும், மலர்களைத் துவியும் மரியாதை செய்தனர். 
இதுகுறித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தமிழக காவல்துறையினரால் துப்பாக்கிச் சீட்டில் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்தும் தமிழகத்தில் தற்போது விவசாயிகள் அனுபவித்து வரும் பிரச்சினைகளை குறித்தும் பட்டியலிட்ட அவர், தமிழக விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி மேகதாதுவில் கர்நாடக அரசு தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் அணை கட்டுமேயானால் அதனை தகர்த்தெறியவும் தயங்க மாட்டோம் என்று வேலுச்சாமி சூளுரைத்தார். இந்த நிகழ்வில் அமைப்பின் நிர்வாகிகள் குடும்பத்தார் என பலர் கலந்து கொண்டனர்.





சனி, 4 ஜூலை, 2026

சேலம் விம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் மரியாதை நிமித்தமாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் விஜய் பார்த்திபன் அவர்களை சந்தித்தார்.

சேலம் விம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் மரியாதை நிமித்தமாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் விஜய் பார்த்திபன் அவர்களை சந்தித்தார்.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் விம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் மரியாதை நிமித்தமாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் விஜய் பார்த்திபன் அவர்களை சந்தித்தார். 

சேலத்தில் புகழ்பெற்ற மற்றும் சர்வதேச தரத்திற்கு இணையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் அதற்கான வசதிகளை கொண்டது சேலத்தை அடுத்துள்ள சின்ன சீரகாபாடி விம்ஸ்  மருத்துவமனை. இந்த சிறப்புமிக்க மருத்துவமனையில் நாள்தோறும் உள்நோயாளிகளாகவும் வெளி நோயாளிகளாகவும் சேலம் மாவட்டம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் ஏன் வெளிமாநிலங்களில் இருந்தும் இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று செல்கின்றனர். அந்த வகையில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் இந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக டாக்டர் மீனாட்சி சுந்தரம் இருந்து வருகின்றார். அவர் தற்பொழுது புதிதாக பொறுப்பேற்றுள்ள TVK தமிழக அரசின் தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சேலத்தைச் சேர்ந்த தமிழன் விஜய் பார்த்திபன் அவர்களை இன்று மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். அப்பொழுது டாக்டர் மீனாட்சி சுந்தரம் பூங்கொத்துக்கொடுத்தும் பொன்னாடை போர்த்தியும் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு மருத்துவம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை அமைச்சரிடம் முன் வைத்ததாகவும் தெரிகிறது. இந்த நிகழ்வின் போது விம்ஸ் மருத்துவமனையின் மருத்துவப் பிரிவு அலுவலர் அருள் மணி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.