Latest

ஞாயிறு, 1 மார்ச், 2026

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78வது பிறந்தநாளையொட்டி ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில அதிமுக சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் – ஏராளமான பொதுமக்கள் பயனடைந்தனர்..!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78வது பிறந்தநாளையொட்டி ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில அதிமுக சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் – ஏராளமான பொதுமக்கள் பயனடைந்தனர்..!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 78வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில மாபெரும் இலவச மருத்துவ முகாம் – ஏராளமான பொதுமக்கள் பயனடைந்தனர்

முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு,
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான
எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க,
ஈரோடு மாநகர் மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி, அனைத்துலக எம்ஜிஆர் மன்றம், KIMS மருத்துவமனை இணைந்து,
ஈரோடு மாவட்டம் முள்ளாம்பரப்பு ஆர்.பி.டி திருமண மண்டபத்தில் மாபெரும் இலவச பொது மருத்துவ சிகிச்சை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.பி. சிவசுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமை, முன்னாள் அமைச்சரும் கழக அமைப்புச் செயலாளருமான தங்கமணி மற்றும் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.வி. ராமலிங்கம் ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்.


இந்த நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் மயில் என்கிற சுப்பிரமணி, மொடக்குறிச்சி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சாலை மாணிக்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். தென்னரசு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகுமார் சின்னையன், முன்னாள் அமைச்சர் பி.சி. ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர். 


மேலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய மற்றும் பேரூர் கழக செயலாளர்கள், மாநில மற்றும் மாவட்ட சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


இந்த மருத்துவ முகாமில் கிம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த  மருத்துவ நிபுணர்கள் பல்துறை மருத்துவ சேவைகளை வழங்கினர். 

குறிப்பாக இருதய நோய் சிகிச்சை, மூளை நரம்பியல் சிகிச்சை, எலும்பியல் சிகிச்சை, சிறுநீரக சிகிச்சை, பெண்களுக்கான மகப்பேறு மருத்துவம், பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, 


பொதுமக்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
மேலும் முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு உயர்தர மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. 

இந்த இலவச மருத்துவ முகாமில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு பயனடைந்தனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த மருத்துவ முகாம், பொதுமக்களுக்கு பெரும் பயன் அளித்ததாகவும், பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பாராட்டினர்.
சேலத்தில் JCI மண்டல மீடியா  அமைப்பின் சார்பில் பொதுமக்களை நல்வழிப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு பதாகை திறப்பு விழா. சேலம் ஜங்ஷன் பிரதான சாலையில் நடைபெற்ற விழாவில் அமைப்பின் தேசிய துணை தலைவர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

சேலத்தில் JCI மண்டல மீடியா அமைப்பின் சார்பில் பொதுமக்களை நல்வழிப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு பதாகை திறப்பு விழா. சேலம் ஜங்ஷன் பிரதான சாலையில் நடைபெற்ற விழாவில் அமைப்பின் தேசிய துணை தலைவர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தில் JCI மண்டல மீடியா  அமைப்பின் சார்பில் பொதுமக்களை நல்வழிப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு பதாகை திறப்பு விழா. சேலம் ஜங்ஷன் பிரதான சாலையில் நடைபெற்ற விழாவில் அமைப்பின் தேசிய துணை தலைவர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

பன்னாட்டு ஜூனியர் சேம்பர் (Junior Chamber International - JCI) என்பது 18 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் தலைமைத்துவத் திறன்சமூகப் பொறுப்புணர்வு மற்றும் தொழில்முனைவோரை மேம்படுத்தும் ஒரு இலாப நோக்கற்ற சர்வதேச தன்னார்வத் தொண்டு அமைப்பாகும். 1944-ல் தொடங்கப்பட்ட இவ்வமைப்பு, 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் உறுப்பினர்களைக் கொண்டுநேர்மறையான சமூக மாற்றத்தை உருவாக்க செயல்படுகிறது. அந்த வகையில் சேலம் JCI அமைப்பின் சேலம் மண்டல தலைவர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது இந்த விழிப்புணர்வு பதாகை திறக்கும் விழா சேலம் ஜங்ஷன் பிரதான சாலையில் உள்ள சூரமங்கலம் காவல் நிலையம் அருகே நடைபெற்றது. அமைப்பின் மண்டல மீடியா ஒருங்கிணைப்பாளர் கிரித்திகா முன்னிலை வகித்த இந்த நிகழ்வில் அமைப்பின் தேசிய துணை தலைவர் ஜித்தேஷ் அத்வானி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகன ஓட்டிகள் பயணிக்க வேண்டும் மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கக் கூடாது என் மனம் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பலகையை திறந்து வைத்தார். இது குறித்து பன்னாட்டு ஜூனியர் சேம்பர் அமைப்பின் தேசிய துணை தலைவர் ஜித்தேஷ் அத்வானி மற்றும் சேலம் மண்டல தலைவர் மணிவண்ணன் ஆகியோர்  செய்தியாளர்களிடம் கூறுகையில், 
எந்த நோக்கத்திற்காக இந்த அமைப்பு தொடங்கப்பட்டதோ அந்த நோக்கத்தை நோக்கி இந்த அமைப்பு தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டிருப்பதாகவும் இளைய சமுதாயத்தினரை மட்டுமே கொண்டு அவர்களை ஊக்குவிக்கும் மொபைல் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி அவர்களுக்கான தேவைகள் அனைத்தும் பயிற்சிகளின் வாயிலாக பூர்த்தி செய்து கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு இளைய சமுதாயத்தினரையும் ஆண் பெண் உட்பட அனைத்து தரப்பினரையும் இது இந்தியாவில் மிகச் சிறந்த இடத்தில் அமர வைத்துள்ளது தங்களது அமைப்புக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று பெருமிதம் தெரிவித்தார். இது போக அமைப்பின் எதிர்கால லட்சியம் நோக்கம் என்று பல்வேறு வகையில் இருந்தாலுமே கூட எதிர்கால இந்திய தூண்களை நிர்ணயிக்கும் விதமாக படித்த இளம் வயதினருக்கு தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து அவர்களை நல்வழிப்படுத்துவது மட்டுமே தங்களது இலக்கு என்றும் அதற்கான காலகட்ட நிர்ணயம் தங்கள் நிர்ணயிக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், எதிர்காலத்தில் 100க்கு 1000 சதவீதம் இந்த இலக்கை நாங்கள் எட்டி இந்தியாவில் படித்த இளைஞர்களை நல்வழிப்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் உறுதிப்பட தெரிவித்தார்.
மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் பொங்கல் தொகுப்புடன் புது பானை மற்றும் அடுப்பு வழங்கிட வேண்டும். தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் பொங்கல் தொகுப்புடன் புது பானை மற்றும் அடுப்பு வழங்கிட வேண்டும். தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் பொங்கல் தொகுப்புடன் புது பானை மற்றும் அடுப்பு வழங்கிட வேண்டும். தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கு பகுதியில் பொங்கல் தொகுப்புடன் புதுப்பானை மற்றும் அடுப்பு வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் சேலத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் மழைக்கால நிவாரணம் வழங்கிட வேண்டும் மழைக்கால நிவாரணம் ரூபாய் 5 ஆயிரத்தில் இருந்து பத்தாயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.ஏரி மற்றும் குளங்களிலிருந்து எவ்வித நிபந்தனையும் இன்றி களிமண் எடுத்து தொழில் செய்வதற்கு அரசு ஆவணம் செய்ய வேண்டும். அனைத்து மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் மின்சக்கரம் வழங்கி இலவச மின்சாரம் வழங்க வேண்டும் குடியிருக்கும் வீட்டிற்கு குடிமனை பட்டா வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 
வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிப்பது எனவும் மன்றத்தில் தங்களின் கோரிக்கைகளுக்காக குரல் எழுப்ப பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து சேலம் மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது .


சேலத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற  முருகப்பெருமானின் வேல் பூஜை மற்றும் மஹேஸ்வர பூஜை.

சேலத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற முருகப்பெருமானின் வேல் பூஜை மற்றும் மஹேஸ்வர பூஜை.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற  முருகப்பெருமானின் வேல் பூஜை மற்றும் மஹேஸ்வர பூஜை. 

சேலம் பெரமனூர் கதிரேசன் செட்டியார் குடும்பத்தாரின் சார்பில் 14 ஆம் ஆண்டு எம்பெருமான் முருக கடவுளின் வேல் பூஜை மற்றும் மஹோஸ்வர பூஜை ஆகியவை வெகு விமர்சையாக நடைபெற்றது. கதிரேசன் செட்டியார் குடும்பத்தார், சேலம் எஸ்.ஜே கண்ணன் குடும்பத்தார், ஸ்டேஷனரி சாத்தப்பன் குடும்பத்தார் மற்றும் காமராஜர் காலனி புகழ் என்கின்ற பழனியப்பன் குடும்பத்தார் உள்ளிட்டோர் முன் நின்று நடத்திய இந்த சிறப்பு பூஜை ஏற்காடு அடிவார பகுதியில் உள்ள செட்டிநாடு மகாலில் நடைபெற்றது. 
அந்த பகுதி இந்திரா நகர் ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகர் திருக்கோவிலில் இருந்து பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி அந்த பகுதிகளின் முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்று மண்டபத்தை அடைந்தது. தொடர்ந்து தொடர்ந்து முருகப்பெருமானின் சக்திவேலிற்கு சக்தி பூஜையும் சிவபெருமானுக்கு மகேஸ்வர பூஜையும் தொடங்கியது.  முருகனடிமை ஸ்ரீலஸ்ரீ சிவஸ்ரீ திருஞானசம்பந்தம் சிவாச்சியார் சுவாமிகள் தலைமையில், சேலம் அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோவில் மற்றும் ஸ்ரீ முத்துமலை முருகன் திருக்கோவில் ஈசானி சிவாச்சாரியார் கலந்துகொண்டு சுவாமிகளின் விக்கிரகங்களுக்கு பால் இளநீர் சந்தனம் மஞ்சள் திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு மங்களப் பொருட்களால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திருக்கயிலாய வாக்கியங்கள் முழங்க பக்தர்களின் சரண கோஷங்களுக்கு இடையே மகா தேவாரதனை நடைபெற்றன. இதனை அடுத்து சக்திவேல் இருக்கும் சிவபெருமானுக்கும் சிறப்பு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு சிறப்பு சேவைகளும் நடைபெற்றன. 
விழாவில் கலந்து கொண்டாள் தொழில் விருத்தி வியாபார விருத்தி குடும்ப விருத்தி திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகும் குழந்தை பேர் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்ற ஐதீகத்தின் காரணமாக சேலம் மாநகரில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இந்த விழாவினை சிறப்பித்தனர். மேலும் இந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கிய பிறகு மாலை பானக பூஜையுடன் 14 ஆம் ஆண்டு வேல் பூஜை மற்றும் மகேஸ்வர பூஜை நிறைவு பெற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.

வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் ஹேக்கத்தான் போட்டிகள்.

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் ஹேக்கத்தான் போட்டிகள்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் ஹேக்கத்தான் போட்டிகள். 

சோனா தொழில்நுட்பக் கல்லூரியும் தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி மையமும் ( டேன்கேம் ) இணைந்து 
மெகா தொழில்துறை ஹேக்கத்தான் போட்டிகளை நடத்தியது. சேலம் சோனா தொழில் நுட்பக் கல்லூரியும் தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி மையம் ( டேன்கேம் ) இணைந்து “டி.என்-இம்பாக்ட் 2026” மெகா தொழில்துறை ஹேக்கத்தான்-ஐ 28 பிப்ரவரி 2026 அன்று ஸ்ரீ வள்ளியப்பா கலையரங்கக் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.  இச்சிறப்பு ஹேக்கத்தான், ஒருங்கிணைந்த தொழில்-கல்விசார் சவால்களைத்  தீர்க்கும் திறன், புதுமைப்பணிகள் உருவாக்கம், மற்றும் படைப்பாற்றல் தொழில்நுட்பத்தில் திறன் முனைவோர் ஆகியவற்றை ஒரே கூரையில் கொண்ட நிகழ்வாக அமைந்தது. இந்த ஹேக்கத்தானில் தமிழ்நாட்டின் பல பொறியியல் கல்லூரிகளிலிருந்து 1000-க்கும் மேலான மாணவர்கள் மற்றும் டிசைன் பொறியாளர்கள் பங்கேற்று, தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். மாணவர்கள் தொழிற் உற்பத்தி மேம்பாடு, தானியக்க வடிவமைப்பு, நிலையான தொழில்நுட்ப தீர்வுகள், மற்றும் சுழற்சி பொருளாதாரம் போன்ற தலைப்புகளில் புதுமையான யோசனைகள் மற்றும் செயல்பாட்டு மாதிரிகளை முன்வைத்து தொழில்துறை சவால்களை வெற்றிகரமாக கையாண்டனர்.
சோனா கல்விக் குழுமத்தின் துணைத்தலைவர் திரு. தியாகு வள்ளியப்பா அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ். ஆர். ஆர். செந்தில்குமார் அவர்கள்  முன்னிலை வகித்தார். தொடக்கவிழாவில் பேராசிரியர் டாக்டர் டி. செந்தில் குமார் (டீன் – மாணவர் நலன்) அவர்கள்  வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக ஃபூஜி எலக்ட்ரிக் இந்தியா நிறுவனத்தின் கற்றல் மற்றும் மேம்பாடு பிரிவு மூத்த மேலாளர் டாக்டர் திவ்யா ராமன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தொழில்துறை நோக்கில் வழிகாட்டும் முறை குறித்து உரையாற்றினார்.
டேன்கேம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு. எஸ். எம். விஜயதீபன், சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. ரவிகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
நிகழ்வு இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. மாணவர்கள் தங்கள் தீர்வுகளைத் தொழில்துறை நிபுணர்கள் மற்றும் கல்வி ஆலோசகரிடம் நேரடியாக வழங்கினர். பின்னர் தொழில்நுட்ப விவாத அமர்வுகள் மாணவர்கள் மற்றும் சென்ஸரிங் குழுக்களிடையே கருத்தரங்காக அமைந்து மேலும் புதுமைப்பணிகளை ஊக்குவித்தது.ஹேக்கத்தானின் முடிவில் முதலாம் பரிசாக ₹1,00,000, இரண்டாம் பரிசாக ₹75,000, மற்றும் மூன்றாம் பரிசாக ₹50,000 ஆகிய பரிசுகள் வழங்கப்பட்டன. 
இந்த பரிசுகள் மாணவர்களின் பங்களிப்பு,தீர்வு காணும்  திறன், புதுமை சிந்தனை, மற்றும் உற்பத்தி-தொழில்துறையில் செயல்படும் திறனை ஊக்குவிப்பதாக அமைந்திருந்தது. 
டிஎன்-இம்பாக்ட் 2026 ஹேக்கத்தான் நிகழ்வு மாணவர்களின் பிரச்சினை தீர்வு திறன், தொழில்–கல்வி ஒத்துழைப்பு, மற்றும் இன்றைய தொழில்துறைக்குத் தேவையான நடைமுறைத் திறனை வளர்க்க மிக முக்கியமாக செயல்பட்டது. இது சேலத்தின் முன்னணி கல்வி நிறுவனமான சோனா கல்லூரி-யின் புதுமை, தொழில் முனைவோர் பண்பு, மற்றும் கல்வி சிறப்பு ஆகியவற்றின் மீண்டும் ஒரு உறுதிப்படுத்தல் வகையை ஏற்படுத்தியது. இவ்விழா, தமிழ்நாட்டின் மேம்பட்ட உற்பத்தித் துறையையும் தொழில்நுட்ப மையத்தையும் வலுப்படுத்த வரும் பொறியியல் திறமையாளர்களை உருவாக்கும் ஒரு முக்கிய முயற்சியாக அமைந்துள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை திரு .வெங்கடேஷ்ராஜா உள்ளிட்ட பேராசிரியர்கள் குழு சிறப்பாக செய்திருந்தனர்.
சேலம் கணேஷ் பொறியியல் கல்லூரியில் 15 வது ஆண்டு விழா கொண்டாட்டம். RAZZMATZZ 2026 என்ற தலைப்பில் கல்லூரி மாணவ மாணவிகளின் கண் கவர் கலை நிகழ்ச்சிகள்.

சேலம் கணேஷ் பொறியியல் கல்லூரியில் 15 வது ஆண்டு விழா கொண்டாட்டம். RAZZMATZZ 2026 என்ற தலைப்பில் கல்லூரி மாணவ மாணவிகளின் கண் கவர் கலை நிகழ்ச்சிகள்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் கணேஷ் பொறியியல் கல்லூரியில் 15 வது ஆண்டு விழா கொண்டாட்டம். RAZZMATZZ 2026 என்ற தலைப்பில் கல்லூரி மாணவ மாணவிகளின் கண் கவர் கலை நிகழ்ச்சிகள். 

சேலம் அம்மாபேட்டை கணேஷ் பொறியியர் கல்லூரியில் 15 நமது ஆண்டு விழா கொண்டாட்டம் வெகு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கல்லூரியின் தாளாளர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கல்லூரியில் செயலர் விஜய கணேஷ் பொருளாளர் செந்தில்குமார் மற்றும் முதல்வர் முனைவர் சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 
கல்லூரி மாணவ மாணவிகளுக்கு என RAZZMATZZ RAZZMATZZ 2026 என்ற பெயரில் நடைபெற்ற இந்த ஆண்டு விழா கொண்டாட்டத்தில் கல்லூரி மாணவ மாணவிகளின் தனி திறமைகளை மேம்படுத்தும் விதமாக தனிநபர் நடனம் குழு நடனம் பரதநாட்டியம் குரு நாடகம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. மேலும் பல்கலைக்கழக அளவில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அவர்களின் பத்திரிக்கையாளர்கள் உடனான சந்திப்பு நிகழ்வும் அரங்கேறியது. இந்த ஆண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் அனைவரும் லேசர் லைட் மின் ஒளி மற்றும் பிரத்தியேக ஒலி அமைப்புகளுடன் நீக்கப்பட்டு இருந்த பிரம்மாண்ட மேடையில் தங்களது முழு திறமைகளையும் வெளிப்படுத்தி அரங்கையே அதிர வைத்தனர் என்பது மட்டும் நிதர்சனம். இந்த விழாவில் கல்லூரியில் துறை தலைவர்கள் பேராசிரியர்கள் மாணாக்கர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக விவசாயிகளின் பக்கம் அரசியல் கட்சிகளின் கவனம் திரும்பும் வகையில், 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள தமிழக விவசாயிகள் சங்கத்தின் மகாசபை கூட்டம்.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக விவசாயிகளின் பக்கம் அரசியல் கட்சிகளின் கவனம் திரும்பும் வகையில், 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள தமிழக விவசாயிகள் சங்கத்தின் மகாசபை கூட்டம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக விவசாயிகளின் பக்கம் அரசியல் கட்சிகளின் கவனம் திரும்பும் வகையில், 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள தமிழக விவசாயிகள் சங்கத்தின் மகாசபை கூட்டம். 

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மகாசபை கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் தோக்கவாடியில் நடைபெற்றது. தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த மகாசபை கூட்டத்தில், மாநிலத் துணைத் தலைவர்கள் மூர்த்தி, ராஜா பெருமாள், மாநில பொதுச்செயலாளர் ஏழுமலை, மாநில பொருளாளர் மோகன் குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நடைபெற்ற மகாசபை கூட்டம் நடைபெற்றது. 
உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் வளர்ச்சி பணிகள் குறித்தும் தமிழக விவசாயிகளின் எதிர்கால நலன் மற்றும் தேவைகள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்ட இந்த மகாசபை கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் சில நிர்வாகிகள் மாற்றம் குறித்தும் சங்க பைலாவில் உள்ள சில விதிமுறைகளை திருத்தம் செய்வது சம்பந்தமாகவும் தமிழக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சியினரிடம் தேர்தல் வாக்குறுதிகள் பெறுவது சம்பந்தமாக விவசாயிகளின் கோரிக்கைகளை அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அரசியல் கட்சியை தலைவர்களை ஈர்க்கும் வகையில் நடைபெற்ற மகாசபை கூட்டத்தில் 32 தீர்மானங்கள் கொண்டு வந்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேலுச்சாமி முன்மொழிந்தார். அதன் பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றுவது சம்பந்தமாக  நிர்வாகிகள் அனைவரும் விவாதித்து ஏக மனதாக 32 தீர்மானங்களும் திருவண்ணாமலையில் நடைபெற்ற மகாசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. 

32 தீர்மானங்களில் முக்கிய மூன்று தீர்மானங்களாக, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் ஏற்றம் பெற நாடு முழுவதும் விவசாயிகள் உற்பத்தி செய்த வழி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும், அமெரிக்காவுடன் உணவு தானியங்கள் மற்றும் வேளாண் சார்ந்த பொருட்களுக்கு தடையற்ற ஒப்பந்தம் செய்ய மத்திய அரசு மீண்டும் முயற்சித்தால் நாடு முழுவதும் ஒரே அணியாக திரண்டு மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் மேற்கொள்ளவும் தயங்க மாட்டோம் மற்றும் தமிழக விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்ற பயிர் கடன் மற்றும் பண்ணை சாரா கடன்களை தமிழக அரசு முழுவதும் தள்ளிப்படை செய்ய வேண்டும் இதே போல மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் தமிழக விவசாயிகள் பெற்ற பயிர் கடன்கள் மற்றும் பண்ணை சாரா கடன்களையும் மத்திய அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உட்பட தமிழக விவசாயிகளின் நலன் கருதி 32 முக்கிய தீர்மானங்கள் இந்த மகாசபை கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. 2026 சட்டமன்ற தேர்தல் தேதி தற்போது வரை அறிவிக்கப்படாத நிலையிலேயே தமிழக தேர்தல்களும் தற்பொழுது சுட்டெரிக்க தொடங்கியுள்ள வெயிலை காட்டிலும் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் தற்போது தமிழக விவசாயிகளின் மகாசபை கூட்டம் அனைத்து அரசியல் கட்சிகளின் கவனத்தையும் ஈர்க்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.