Latest

திங்கள், 4 மே, 2026

தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளித்ததன் பேரில் 234 தொகுதிகளிலும் 5000 முதல் 10,000 வாக்குகள் வெகுஜன மக்களால் செலுத்தப்பட்டுள்ளது. தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி த.வெ.க விற்கு வாழ்த்து.

தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளித்ததன் பேரில் 234 தொகுதிகளிலும் 5000 முதல் 10,000 வாக்குகள் வெகுஜன மக்களால் செலுத்தப்பட்டுள்ளது. தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி த.வெ.க விற்கு வாழ்த்து.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளித்ததன் பேரில் 234 தொகுதிகளிலும் 5000 முதல் 10,000 வாக்குகள் வெகுஜன மக்களால் செலுத்தப்பட்டுள்ளது. தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி த.வெ.க விற்கு வாழ்த்து. 

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியினருடனும் கூட்டணி வைக்காத தமிழக வெற்றி கழகத்திற்கு தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு தனது முழு ஆதரவையும் 234 தொகுதிகளிலும் அளித்து இருந்தது. அந்த வகையில் கடந்த 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் தற்போது வாக்குகள் எனும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் புதிதாக களம் கண்ட தமிழக வெற்றி கழகம் நூற்றுக்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது. இந்த நிலையில், தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி வாழ்த்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். 
அதில், தேசிய ஒடுக்கபட்ட மக்கள் குடியரசு ( இந்தியா ). ஆதரவு பெற்ற தமிழக வெற்றி கழகம்  தேர்தலில் முன்னணி பெற நமது இயக்கத்தின் 234 தொகுதிகளிலும். குறைந்த்து தொகுதிக்கு 5000 முதல் பத்தாயிரம் ( வெகுசன மக்கள்,  ஊழியர்கள்,  தொழிலாளர்கள்,  ஓய்வூதியர்கள் )  வாக்குகள் அளிக்பட்டது என்றும் அறிக்கையின் வாயிலாக தனது வாழ்த்துக்களையும் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவன தலைவர் சரஸ்ராம் ரவி.
வெ லதா, மாநில ஒருங்கிணைப்பாளர். அறிவழகன், முருகேசன், மேற்கு  மண்டல ஒருங்கிணைப்பாளர். கைலாசம் ராஜேந்திரன், தென்கிழக்கு மண்டலம்.
புகழேந்தி,  அனிதா, கிழக்கு மண்டலம், முனுசாமி,  தமிழமுதன், வடமேற்கு மண்டலம். ராதாகிருஷ்ணன் பாஸ்கர், தென்மண்டலம்.

ஞாயிறு, 3 மே, 2026

பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற தவறும் பட்சத்தில் பன்ருட்டி  ஊராச்சி அலுவலகம் முன் அல்லது உதவி இயக்குநர் ( கிராம பஞ்ச்சாயத்து ,) அலுவரகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம். தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம்.

பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற தவறும் பட்சத்தில் பன்ருட்டி ஊராச்சி அலுவலகம் முன் அல்லது உதவி இயக்குநர் ( கிராம பஞ்ச்சாயத்து ,) அலுவரகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம். தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம்.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு.

பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற தவறும் பட்சத்தில் பன்ருட்டி  ஊராச்சி அலுவலகம் முன் அல்லது உதவி இயக்குநர் ( கிராம பஞ்ச்சாயத்து ,) அலுவரகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம். தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம்.

தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பண்ருட்டியில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் லதா தலைமையில் நடைபெற்ற இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், கடலூர் மாவட்டம் பன்ருட்டி வட்டம்-  பன்ரூட்டி ஊராட்சி  நிர்வாகம் மற்றும்  வட்டார வளர்ச்சி அதிகாரியின் கவனத்திற்கு பல்வேறு முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அதில் குறிப்பாக செம்மேடு பகுதி பஞ்சாயத்து வாழ்  பட்டியலின ஒடுக்கபட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், செம்மேடு ஊர் பகுதியில் பஸ் நிறுத்தம்  ஏற்படுத்து வேண்டும், செம்மேடு பகுதியில்  நூலகம் அமைத்து கொடுக்க வேண்டும், செம்மேடு வாழ் பட்டியலின மக்களுக்கு கழிவு நீர் கால்வாய்  சுகாதார மையம் தெரு விளக்குகள் மயானத்திற்கு மின் விளக்கு வசதி அமைத்து கொடுத்திட வேண்டும், 
கடந்த 10 ஆண்டுகளில் செம்மேடு பகுதி வாழ்  மக்களுக்கு ஒதுக்கிய  பஞ்சாயத்து நிதி எவ்வளவு என்பதனை  வெள்ளை அறிக்கை வழங்க வேண்டும் மற்றும்
மேற்குறிப்பிடப்பட்ட தீர்மானங்கள் குறித்து நடவடிக்கைகள் காலம் கடத்தினால் ஊர் மக்கள் ஒன்று திரண்டு  ஒடுக்கபட்ட மக்கள் குடியரசு இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பு குழ பன்ருட்டி  ஊராச்சி அலுவலகம் முன் அல்லது உதவி இயக்குநர் ( கிராம பஞ்ச்சாயத்து ,) அலுவரகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீரமானம் நிறைவேற்றபட்டது.

தமிழகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் 1.5 ஹெக்டேர் பஞ்சமி நிலங்கள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் ஆலோசனைக் கூட்டத்தில் 7  முக்கிய தீர்மானங்கள்.

தமிழகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் 1.5 ஹெக்டேர் பஞ்சமி நிலங்கள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் ஆலோசனைக் கூட்டத்தில் 7 முக்கிய தீர்மானங்கள்.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் 1.5 ஹெக்டேர் பஞ்சமி நிலங்கள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் கடலூர் ஆலோசனைக் கூட்டத்தில் 7  முக்கிய தீர்மானங்கள்.

சமூகம், அரசியல், கல்வி, பொருளாதாரம் மற்றும் மேம்பாடு நோக்கத்திற்காக செயல்பட்டு வரும் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் கடலூர் மாவட்ட துவக்க விழா மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் லதா தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி, மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ஹரிகிருஷ்ணன் மற்றும் புகழேந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கிய கூட்டத்தில், நிர்வாகிகள் வினோத் ராமதாஸ் கண்ணன் தமிழரசன் செல்வம் மாலா மற்றும் நெடுமாறன் முன்னிலை வகித்தனர். 
தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு அமைப்பின் நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு,  அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். தொடர்ந்து நடைபெற்ற  ஆலோசிக்கப்பட்ட இந்த கூட்டத்தில், 
தமிழகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் 1.5 ஹிட்டேர் பரப்பளவு கொண்ட பஞ்சமி நிலங்கள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், கடலூர் மாவட்ட நிர்வாகம் பொது மக்களின் தேவைகளான குடிநீர் கழிவுநீர் தெரு மின் வசதி சுகாதாரம் நூலகம் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் கிராமம் முழுவதும் செய்து கொடுக்க வேண்டும் மற்றும் கடலூர் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்யாத மாவட்ட நல அதிகாரியை உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட ஏழு முக்கிய அம்ச தீர்மானங்கள் தமிழக அரசை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்டன. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைப்பின் மண்டல மாவட்ட நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 1 மே, 2026

மே-1 தொழிலாளர் தின வாழ்த்துக்களுடன், சேலத்தில்  சாதனையாளர்களுக்கு குடியரசு  சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவிப்பு.

மே-1 தொழிலாளர் தின வாழ்த்துக்களுடன், சேலத்தில் சாதனையாளர்களுக்கு குடியரசு சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவிப்பு.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

மே-1 தொழிலாளர் தின வாழ்த்துக்களுடன், சேலத்தில்  சாதனையாளர்களுக்கு குடியரசு  சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவிப்பு. 

உலக தொழிலாளர் தினத்தை ஒட்டி, தேசிய ஒடுக்கபட்ட மக்கள் குடியரசு மற்றும் மத்திய- மாநில அரசு & பொதுதுறை ஊழியர்கள்  தொழிலாளர்கள் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பாக பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்திய  சமூக சேவையாளர்களுக்கு  குடியரசு விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.  
சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, தேசிய ஒடுக்கபட்ட மக்கள் குடியரசு நிறுவன தலைவரும், மத்திய, மாநில மற்றும் அரசு  பொதுதுறை ஊழியர்கள்  தொழிலாளர்கள் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு முதன்மை ஒருங்கிணைப்பாளருமான சரஸ்ராம் ரவி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,
அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட்ட வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் இடம் பிடித்த சமூக செய்வதற்கு குடியரசு விருதுகள் வழங்கி அமைப்புகளின் தலைவர் சரஸ்ராம் ரவி வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இந்த நிகழ்வில் அமைப்புகளின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் சேலம் மாநகரின் முக்கிய பிரமுகர்கள் என  திரளானவர்கள் பங்கேற்றனர்.

புதன், 29 ஏப்ரல், 2026

கடந்த காலங்களில் கருத்து கணிப்புகள் பெரும்பாலும் பொய்யான வரலாறு உள்ளது. எனவே கருத்துக்கணிப்பை விவசாயிகள் யாரும் வரவேற்கவில்லை. உழவர் பெருந்தலைவர்  நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி கருத்து.

கடந்த காலங்களில் கருத்து கணிப்புகள் பெரும்பாலும் பொய்யான வரலாறு உள்ளது. எனவே கருத்துக்கணிப்பை விவசாயிகள் யாரும் வரவேற்கவில்லை. உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி கருத்து.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

கடந்த காலங்களில் கருத்து கணிப்புகள் பெரும்பாலும் பொய்யான வரலாறு உள்ளது. எனவே கருத்துக்கணிப்பை விவசாயிகள் யாரும் வரவேற்கவில்லை. உழவர் பெருந்தலைவர்  நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி கருத்து.

17 வது தமிழக சட்டப்பேரவை காண தேர்தல் கடந்த 23ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழக முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்திய அளவில் நடைபெற்ற ஐந்து மாநில தேர்தல்களில் இரண்டாவது வரலாற்றுச் சாதனையாக தமிழகத்தில் 85.15% வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கை தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அதன் அடிப்படையில்,  
தற்போது தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய  கருத்து கணிப்பு என்பது இது ஒரு கருத்து திணிப்பு. இதை விவசாயிகள், பொதுமக்கள் யாரும் நம்பவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில்  தி‌.மு.க ஆட்சியில் தமிழக விவசாயிகளுக்கு தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்ததை எதுவும் நிறைவேற்றாமல் தமிழக விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டதன்  காரணமாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை என உணர்ந்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் அனைவரும் ஒரே நிலைப்பாட்டோடு அணி வகுத்து திரண்டு நின்று அ.தி.மு.க கட்சி பொதுச்செயலாளர் மாண்புமிகு. எடப்பாடி K.பனிழனிசாமி அவர்கள்தான் 2026 ல் தமிழக முதல்வராக வரவேண்டும். தமிநாட்டிற்கு நல்லாட்சி தரவேண்டும் என்ற தாரக மத்திரத்தோடு தமிழக விவசாயிகள் அனைவரும் குடும்பம், குடும்பமாக கடந்த 23-ந் தேதி அன்று வாக்குசாவடி சென்று தனது ஜனநாயக கடமையை ஆற்றி வாக்களித்துள்ளார்கள் என்பதை இந்த அறிக்கையின் வாயிலாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில்  தெரிவித்துக்கொள்கிறேன்.
முந்தைய காலங்களில் இதுபோன்ற கருத்து கணிப்புகள் பெரும்பாலும் பொய்யான வரலாறு உள்ளது. எனவே கருத்துக்கணிப்பை விவசாயிகள் யாரும் வரவேற்கவில்லை. ஜனநாயகத்தை நிலைநாட்டும் செயல் வாக்குப்பதிவு. அதன் முடிவு வாக்கு எண்ணிக்கையில் தெரிந்துவிடும். இடையில் வரும் குழப்பங்களை பெதுமக்களும் நப்பவேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம் என்றும் தனது கருத்து பதிவில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய், 28 ஏப்ரல், 2026

காவிரி மேலாண்மை ஆணைய  கூட்டத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு தண்ணீரை தினந்தோறும் விகிதாசார அடிப்படையில் கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீரை   ஒழுங்காற்று குழுவின் மூலம் காவிரி தண்ணீரை ஆற்றில் திறந்துவிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி வலியுறுத்தல். காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டு விவசாயிகள் நலன் கருதி நடுநிலையாக செயல்படாமல் இருக்கும் பட்சத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தனது தலைமையில் காவிரி டெல்டா விவசாயிகளை மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி  கர்நாடகா சென்று அங்குள்ள அணைகளில் தமிழ். நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு தண்ணீரை திறப்போம்  என்றும் முன்னெச்சரிக்கை.

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு தண்ணீரை தினந்தோறும் விகிதாசார அடிப்படையில் கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீரை ஒழுங்காற்று குழுவின் மூலம் காவிரி தண்ணீரை ஆற்றில் திறந்துவிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி வலியுறுத்தல். காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டு விவசாயிகள் நலன் கருதி நடுநிலையாக செயல்படாமல் இருக்கும் பட்சத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தனது தலைமையில் காவிரி டெல்டா விவசாயிகளை மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி கர்நாடகா சென்று அங்குள்ள அணைகளில் தமிழ். நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு தண்ணீரை திறப்போம் என்றும் முன்னெச்சரிக்கை.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

காவிரி மேலாண்மை ஆணைய  கூட்டத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு தண்ணீரை தினந்தோறும் விகிதாசார அடிப்படையில் கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீரை   ஒழுங்காற்று குழுவின் மூலம் காவிரி தண்ணீரை ஆற்றில் திறந்துவிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி வலியுறுத்தல். காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டு விவசாயிகள் நலன் கருதி நடுநிலையாக செயல்படாமல் இருக்கும் பட்சத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தனது தலைமையில் காவிரி டெல்டா விவசாயிகளை மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி  கர்நாடகா சென்று அங்குள்ள அணைகளில் தமிழ். நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு தண்ணீரை திறப்போம்  என்றும் முன்னெச்சரிக்கை.

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். 
அந்த அறிக்கையில், காவிரி மேலாண்மை ஆணையம்  50 வது கூட்டம் இன்று புதுடெல்லியில் நடைபெறவுள்ளது தற்போது தமிழ்நாட்டில் கடுமையான வறட்சியின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடியில் இருந்து வெகுவாக சரிந்துள்ளது. வருகின்ற ஜீன் மாதம் 12 ந் தேதி தமிழகத்தில் உள்ள காவிரி டெல்டா  விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய தமிழ்நாடு அரசு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டியுள்ளது இன்று காவிரி மேலாண்மை ஆணைய  கூட்டத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு தண்ணீரை தினந்தோறும் விகிதாசார அடிப்படையில் கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீரை   ஒழுங்காற்று குழுவின் மூலம் காவிரி தண்ணீரை ஆற்றில் திறந்துவிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
காவிரி மேலாண்மை ஆணையம், உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு தண்ணீரை இனிவரும் காலங்களில் முறையாக தினந்தோறும் விகிதாசார அடிப்படையில் திறந்துவிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டு விவசாயிகள் நலன் கருதி நடுநிலையாக செயல்படாமல் இருக்கும் பட்சத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் எனது தலைமையில் காவிரி டெல்டா விவசாயிகளை மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி  கர்நாடகா சென்று அங்குள்ள அணைகளில் தமிழ். நாட்டிற்கு உண்டான காவிரி பங்கீட்டு தண்ணீரை திறப்போம் என காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முன்னெச்சரிக்கையாக இந்த தகவலை  நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டில் அணைகட்டும் என தெரிவிக்கும் நிலைப்பாட்டிற்கு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இன்று எந்த ஒரு அனுமதியும் கர்நாடக அரசுக்கு வழங்கக்கூடாது எனவும் இந்த செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன் என்று உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிவுறுத்தலையும் எச்சரிக்கையையும் பதிவிட்டுள்ளார்.

.


திங்கள், 27 ஏப்ரல், 2026

2026 ஆம் ஆண்டிற்கான நாலெட்ஜ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி வேலைவாய்ப்பு தினம் மற்றும் பணி நியமன ஆணை வழங்கும் விழா.

2026 ஆம் ஆண்டிற்கான நாலெட்ஜ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி வேலைவாய்ப்பு தினம் மற்றும் பணி நியமன ஆணை வழங்கும் விழா.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

2026 ஆம் ஆண்டிற்கான நாலெட்ஜ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி வேலைவாய்ப்பு தினம் மற்றும் பணி நியமன ஆணை வழங்கும் விழா.

சேலம் மாவட்டம் காக்காபாளையம் அருகே உள்ள நாலெட்ஜ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் 14வது வேலைவாய்ப்பு நாள் விழா, கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு KIOT அறக்கட்டளையின் செயலாளர் டாக்டர். ஜே. குமார் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களான, சென்னை TCS நிறுவனத்தின் கல்வி கூட்டணிகள் குழுவின் உலகளாவிய தலைவர் டாக்டர். சுசீந்திரன் கே.எம்., சென்னை ராக்கெட் இந்தியா நிறுவனத்தின் தொழில்நுட்பத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் திரு. மோகன்பாபு பாலச்சந்திரன், பெங்களூரு HCL டெக் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் மற்றும் தயாரிப்புப் பொறியியலுக்கான உலகளாவிய தலைவர் டாக்டர். தனசேகரன் ராதாகிருஷ்ணன் மற்றும் பெங்களூரு குவெஸ்ட் குளோபல் நிறுவனத்தின் மேம்பாட்டுக் குழுவின் முன்னணி பல்கலைக்கழக உறவுகள் தலைவர் திரு. எஸ். தீபக் குமார் ஆகியோர், 700க்கும் மேற்பட்ட இறுதி ஆண்டு பி.இ., பி.டெக். மற்றும் எம்.பி.ஏ. மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி கடிதங்களை வழங்கினர்.
மாணவர்களிடையே உரையாற்றியபோது, டாக்டர்.சுசீந்திரன் கே.எம், மோகன்பாபு, பாலச்சந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.
KIOT அறக்கட்டளையின் நிறுவனரும் தலைவரும், கல்லூரியின் நிர்வாகத் தலைவருமான டாக்டர் பி.எஸ்.எஸ். சீனிவாசன், இந்நிறுவனம் பின்பற்றும் பல்வேறு புதுமையான பயிற்சி மாதிரிகள் சிறந்த வேலை வாய்ப்பு முடிவுகளுக்கு வழிவகுத்துள்ளதாகவும், மேலும், உலகளாவிய சவால்கள் இருந்தபோதிலும், இந்நிறுவனம் 90%-க்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை வழங்கி, சராசரியாக 24.10 லட்சம் ரூபாயும், அதிகபட்சமாக 18.50 லட்சம் ரூபாய் சம்பளமும் அளித்துள்ளதாகவும் பேசினார்.
கல்லூரியில் வழங்கப்படும் பிரத்யேகப் பயிற்சிகள் மற்றும் முன்னணி நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் ஹேக்கத்தான் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவதன் காரணமாக மாணவர்களுக்குச் சிறந்த வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளதாக அந்த நிறுவனத்தின் முதல்வர் டாக்டர் கே. விசாகவேல் தெரிவித்தார்.
வேலைவாய்ப்பு மற்றும் தொழில்-நிறுவன கலந்துரையாடல் இயக்குனர் டாக்டர் பி. ராஜேந்திரன், KIỚT-இன் வேலைவாய்ப்பு சாதனைகளை எடுத்துரைத்தார். டெக் மஹிந்திரா, அமெரிக்கன் மெகா டிரெண்ட்ஸ், ஹெக்ஸாவேர், ஹரிதா டெக்செர்வ், சிட்டி யூனியன் வங்கி மற்றும் பிற முன்னணி தகவல் தொழில்நுட்பம் மற்றும் கோர் நிறுவனங்கள் வளாகத்தில் ஆள்சேர்ப்பு நடத்தி மாணவர்களுக்கு பணி நியமனக் கடிதங்களை வழங்கியதை அவர் எடுத்துரைத்தார்.
KIOT அறக்கட்டளையின் பொருளாளர் திரு. வி. சுரேஷ் குமார், செயற்குழு உறுப்பினர் திரு. செங்கோட்டுவேல் மற்றும் MBA இயக்குநர் டாக்டர் ஏ. ஸ்டீபன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சேர்க்கை கடிதங்களைப் பெற்ற மாணவர்கள், கல்லூரி வழங்கிய பல்வேறு பயிற்சிகள் மூலமாகவே தங்களுக்குச் சிறந்த வேலை வாய்ப்புகள் கிடைத்ததாகக் கூறி, கல்லூரி நிர்வாகத்திற்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர். KIOT அறக்கட்டளையின் அறங்காவலர்கள், இயக்குநர்கள், பல்வேறு துறைகளின் தலைவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.