erode news லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
erode news லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

16 மேஜைகளில் 15 சுற்றுகளாக எண்ணப்படும் - மாவட்டத் தேர்தல் அதிகாரி பேட்டி

16 மேஜைகளில் 15 சுற்றுகளாக எண்ணப்படும் - மாவட்டத் தேர்தல் அதிகாரி பேட்டி


ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரிமான கிருஷ்ணணுண்ணி இன்று சித்தோடு ஐ.ஆர்.டி.டி அரசினர் பொறியல் கல்லூரியில் வாக்கு எண்ணும மையத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணணுண்ணி கூறுகையில் ...

தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது, வாக்குப்பதிவு எந்திரங்கள் வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பான அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
அடுத்தது முக்கியமாக வாக்கு எண்ணிக்கை வரும் மார்ச் 2-ந் தேதி நடைபெற உள்ளது. 

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. வாக்கு மையத்திற்கு 5 அடுத்து பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

துணை ராணுவத்தினர், போலீசார் என 450 பேர் சுழற்சி முறையில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஒரு ஷிட்டில் 150 பேர் வரை பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். வாக்கு எண்ணிக்கை மையம், அதன் சுற்றுவட்டார பகுதியில் என 48 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

மின்னணு வாக்கு பதிவு வைக்கப்பட்டுள்ள, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறை, அதன் சுற்று வட்டாரப்பகுதி என அனைத்து பகுதிகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன, இதனை கண்காணிக்கவே ஒரு குழு தனியாக நியமிக்கப்பட்டுள்ளன, 

வாக்குப்பதிவின்போது 2 பூத்துகளின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதால் அவற்றுக்கு பதில் மாற்று எந்திரங்கள் கொண்டுவரப்பட்டன. இடைத்தேர்தலில் அதிக வாக்குப்பதிவானது நல்ல விஷயம். 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி எங்கள் தரப்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன .மேலும் ராணுவமும் கொடி அணிவகுப்பு நடத்தின. இதன் காரணமாக வாக்குப்பதிவு அதிகரித்து இருக்கலாம். வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கும். தொடங்கியதும் தபால் ஓட்டுக்கள் பிரித்து எண்ணப்படும். பின்னர் அரை மணி நேரம் கழித்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் பிரித்து எனப்படும். 

இதற்காக இரண்டு அறைகளில் 16 மேஜைகள் போடப்பட்டுள்ளன 15 சுற்றுகள் வரை வாக்குகள் எனப்பட்டு அதன் பிறகு முடிவுகள் அறிவிக்கப்படும். எந்த நேரத்திற்குள் வாக்கு எண்ணிக்கை முடியும் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. 

முடிந்த அளவு குறிப்பிட்ட நேரத்தில் வாக்குப்பதிவு எண்ணிக்கை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

புதன், 1 பிப்ரவரி, 2023

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் வனத்துறையினர் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் வனத்துறையினர் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் வனத்துறையினர் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்நிலைப் பகுதிகளில் வனத்துறையினர் சார்பில், ஒருநாள் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இரண்டு நாட்களாக நடைபெற்ற கணக்கெடுப்பில், மொத்தம் 50-க்கும் மேற்பட்ட நீர்நிலைப் பறவை இனங்களும், 30-க்கும் மேற்பட்ட பொதுப் பறவைகள் இனங்கள் என மொத்தம் 120-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கணக்கெடுக்கும் பணியில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதில், பாம்புண்ணி கழுகு, தடித்த அழகு மீன்கொத்தி, வானம்பாடி, ஊசிவாள் வாத்து, மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, தேன் பருந்து குக்ருவாள், இருவாச்சி, செந்நீல கொக்கு, மரகத புறா உள்ளிட்ட பறவை அந்தியூரில் தென்பட்டதால் சுற்றுசூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக ஐரோப்பிய கண்டத்தில் இருந்து இந்தியாவிற்கு வலசைவரும் பறவை இனங்களில் ஒன்றான யூரோப்பியன் விஈடர் பறவை காணப்பட்டது.

பூச்சிகளை மட்டுமே உண்ணும் பறவையான இது தமிழில் பஞ்சுருட்டான் என அழைக்கப்படுகிறது. இதே போல 50 ஆண்டு காலம் வாழும் மிக அரிதான மலை இருவாச்சி குடும்பத்தை சேர்ந்த மிக அரிதாக தென்படும் மலை இருவாச்சி பறவையும் தென்பட்டுள்ளது. மேலும், இமயமலை பகுதியில் இருக்கும் வெர்டிட்டர் பிளைட் கேட்ச்சர் பறவைகளும் அந்தியூர் வனப்பகுதியில் தென்பட்டதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்
அந்தியூரில் வங்கியில் கடன் வாங்கித் தருவதாக கூறி, தொழிலாளியிடம் பணம் வாங்கி ஏமாற்றிய நபரை, போலீசார் கைது செய்தனர்.

அந்தியூரில் வங்கியில் கடன் வாங்கித் தருவதாக கூறி, தொழிலாளியிடம் பணம் வாங்கி ஏமாற்றிய நபரை, போலீசார் கைது செய்தனர்.


ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த அப்பு ஆறுமுகம் என்பவர், பழுதடைந்த வீட்டை சரி செய்ய வங்கியில் கடன் வாங்கி தருகிறேன் எனக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அப்பு ஆறுமுகம் தனது நண்பர் எனக்கூறி, ஒலகடம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரை, வங்கியில் கடன் பெற்று தரும் ஏஜெண்டாக பணிபுரிந்து வருவதாக அறிமுகம் செய்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, வங்கியில் கடன் பெற தனக்கு 31 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என, சீனிவாசன் கூறியதையடுத்து முருகன் சீனிவாசனிடம் 31,000 ரூபாய் கொடுத்துள்ளார்.

பின்னர், கடன் பெற்றுத் தர காலதாமதம் செய்து வந்ததைத் தொடர்ந்து, அவரிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். அதற்கு இருவரும் மறுக்கவே, சீனிவாசன் மற்றும் அப்பு ஆறுமுகம் மீது அந்தியூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அந்தியூர் சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி, ஆறுமுகத்தை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்தார். இதில் தலைமறைவாய் இருந்து வந்த சீனிவாசனை நேற்று கைது செய்து பவானி நீதிமன்றத்தில், ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். மேலும், போலீசார் வேறு யாரிடமாவது அவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா என, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

ஞாயிறு, 29 ஜனவரி, 2023

சித்தோடு அருகே காரைக் கடத்தி பணம் கொள்ளையடித்த வழக்குகேரள மாநிலத்தைச் சேர்ந்த6 பேர் கொண்ட கும்பல் கைது 5 பேருக்கு வலைவீச்சு

சித்தோடு அருகே காரைக் கடத்தி பணம் கொள்ளையடித்த வழக்குகேரள மாநிலத்தைச் சேர்ந்த6 பேர் கொண்ட கும்பல் கைது 5 பேருக்கு வலைவீச்சு



சித்தோடு அருகே வடமாநில டிரைவரைத் தாக்கி காரைக் கடத்தி, பணம் கொள்ளையடித்த வழக்கில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பலைப் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 5 பேரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம், அக்வாரியைச் சேர்ந்தவர் காந்திலால் மகன் விகாஸ் (எ) விக்ரம் (42). கடந்த 3 வருடங்களாக ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், சுந்தரகிரி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர், ஆக்டிங் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரைத் தொடர்பு கொண்ட நெல்லூரைச் சேர்ந்த பாரத் ஜெயின், கோவையில் உள்ள தனது தங்கையை காரில் சென்று அழைத்து வர வேண்டும் என்று கூறி கடந்த 20-தேதி காரைக் கொடுத்துள்ளார்.

அந்தக் காரில் புறப்பட்ட விகாஸ், 21-ம் தேதி அதிகாலை சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் பவானியை அடுத்த லட்சுமி நகர், காவிரி ஆற்று பாலம் அருகே சென்றபோது, வேனில் வந்த கும்பல் இரும்பு பைப்பை கொண்டு கார் கண்ணாடிகளை உடைத்ததோடு, விகாஸை இறக்கிவிட்டு காரைக் கடத்திச் சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், சித்தோடு போலீசார் நேற்று அதிகாலை 2 மணி அளவில் லட்சுமி நகர், கந்தசாமி மில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது கோவையில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற பொலிரோ பிக்அப் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், வாகனத்தின் எண் போலியாக இருந்ததும், வாகனத்துக்குள் அறிவாள், பட்டாக்கத்தி, இரும்பு பைப்புகள், உருட்டு கட்டை, மிளகாய் பொடி மற்றும் ரொக்கம் ரூ.20,000, செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. வாகனத்தில் வந்த 6 பேரிடம் விசாரணை நடத்தியபோது, பின்னால் காரில் வந்த கும்பல் தப்பியோடியது.

விசாரணையில், கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், பியோபாடி, முண்டகள்ளி ஹவுஸ், தங்கப்பன் மகன் ஜெயன் (45), முண்டூர், நச்சுப்புள்ளி, கொட்டுப்பாரா ஹவுஸ், சந்திரன் மகன் சந்தோஷ் (39), பாலக்காடு, நாபுள்ளிபுரா, மலுவஞ்சேரி ஹவுஸ், ஜார்ஜ் மகன் டைட்டஸ் (33), பூலாம்பட்ட கிராமம், குண்ராமி ஹவுஸ், அய்யப்பன் மகன் விபுல் (எ) சந்தோஷ் (31), பாலக்காடு, அச்சம்பாரா, ஹம்பாடதி ஹவுஸ், ஹம்ஸா மகன் முஜீப் ரகுமான் (37), கரிம்பா, காஞ்சிராம், அப்துல் ரகுமான் மகன் முஜீர் ரஹ்மான் (45) என்பதும், கடந்த 21-ம் தேதி சித்தோடு லட்சுமி நகர் அருகே காரைக் கடத்தி பணம் கொள்ளையடித்த வழக்கில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள கோடாளி ஸ்ரீதர், சசிபோஸ், ராகுல், ஸ்ரீகாந்த் மற்றும் அடையாளம் தெரியாத நபர் உட்பட 5 பேரைத் தேடி வருகின்றனர்.
தி.மு.க ஆட்சியில் பொது மக்களின் விருப்பங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஆகவே ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அ. தி.மு.க. வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

தி.மு.க ஆட்சியில் பொது மக்களின் விருப்பங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஆகவே ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அ. தி.மு.க. வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் த.மா.கா. பிரமுகர் இல்ல திருமணத்திற்கு மாநில தலைவரும் எம்.பி.யுமான ஜி.கே.வாசன் வருகை தந்து கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது வாசன் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அண்ணா தி.மு.க. போட்டியிடுவதை ஏற்றுக் கொண்டுள்ளது. பாரதீய ஜனதா கட்சிக்கும், த.மா.கா.வுக்கும் நல்ல நட்பு இருந்து வருகிறது. அதன் அடிப்படையில் அண்ணா தி.மு.க. தலைமையிலான கூட்டணி வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். தி.மு.க. ஆட்சியில் பொது மக்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்படவில்லை. தி.மு.க. ஆட்சி மீது பொதுமக்களுக்கு நல்ல ஈர்ப்பு இருப்பதாக எதுவும் தெரியவில்லை. எனவே, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அண்ணா தி.மு.க. மாபெரும் வெற்றி உறுதியாகிவிட்டது. ஆளுங்கட்சி யாரை வேண்டுமானாலும் வேட்பாளராக நிறுத்தட்டும்.‌அது பற்றி நாங்கள் எதுவும் கூற மாட்டோம். நாங்கள் எங்கள் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார். முன்னதாக திருமண விழாவிற்கு வருகை தந்த ஜி.கே.வாசனை பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் சால்வை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியில், த.மா.கா. மாநிலச் செயலாளர் விடியல் சேகர், மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜா, ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அ. தி.மு.க. பொருளாளர் கே.பி.எஸ்.மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி கே.எஸ் இளங்கோவன் வெற்றி உறுதி

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி கே.எஸ் இளங்கோவன் வெற்றி உறுதி

தமிழ்நாடு முதல்வரின் உத்திரவுப்படி கடந்த 22 மாத திமுக ஆட்சியில் ஏதாவது ஒரு வகையில் பயன் பெறாதவர்கள் எவரும் இல்லை மருத்துவ துறையில் உள்ள காலி பணியிடங்கள் அனைத்தும் MRB மூலம் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகிறது என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேட்டி -******* ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி கே.எஸ் இளங்கோவனை வெற்றி பெற செய்வது குறித்து வீரப்பன்சத்திரம் பகுதி 24, 25 வார்டுகளின் வாக்குசாவடி முகவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் 24, 25 வார்டுகளின் தேர்தல் பணிக்குழுவின் பொறுப்பாளர் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பங்கேற்று வெற்றி வியூகம் குறித்து ஆலோசனை வழங்கினார் அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் தந்தை பெரியாரின் பேரன் ஈ விகேஎஸ் இளங்கோவன் உறுதி செய்யப்பட்ட ஒன்று இருப்பினும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வீடு வீடாக சென்று திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்து கூறி வாக்கு சேகரிக்க உரிய ஆலோசனை வழங்கப்பட்டது தமிழ்நாடு முதல்வரின் உத்திரவுப்படி கடந்த 22 மாத திமுக ஆட்சியில் ஏதாவது ஒரு வகையில் பயன் பெறாதவர்கள் எவரும் இல்லை மருத்துவ துறையில் உள்ள காலி பணியிடங்கள் அனைத்தும் MRB மூலம் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகிறது இந்த நிகழ்ச்சியில் திமுக துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, சட்டமன்ற உறுப்பினர் தாயகம்கவி, திமுக நெசவாளர் அணி மாநில செயலாளர் SLTசச்சிதானந்தம், மண்டல தலைவர் ப.க.பழனிச்சாமி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

சனி, 28 ஜனவரி, 2023

அதிமுக தரப்பில் நியமிக்கப்பட்டுள்ள பகுதி பொறுப்பாளர்களுடன்  முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்..

அதிமுக தரப்பில் நியமிக்கப்பட்டுள்ள பகுதி பொறுப்பாளர்களுடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்..

 

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்றத் தேர்தலில் கிழக்குத் தொகுதிக்குட்பட்ட அசோகபுரம் பகுதியில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கிழக்கு தொகுதி தேர்தல் பணி என்பது களம் கண்ட பலரும் சிறப்புடன் பணி ஆற்றுகிறோம்.அதிமுகவை பொறுத்தவரை கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அயராது பணியாற்றி வருகிறோம்.. வரலாற்றில் இல்லாத அளவுக்கு தேர்தல் வெற்றி இருக்கப் போகிறது.. எங்களை பொறுத்தவரை எதிர்க்கட்சியினர் மாடியில் இருந்து மக்களை பார்க்கின்றனர்... வெற்றி என்பதை மட்டும் லட்சியமாக வைத்து பணியாற்றி வருகிறோம். நல்ல முடிவுகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம்..பிரச்சாரம் துவங்கி நடைபெறுகிறது . தொகுதி மக்களை பொறுத்தவரையில் மாற்றத்தை விரும்புகின்றனர் . வீடாக வீடாக சென்று மாற்றம் தேவை என்பது மக்கள் சொல்லி வரும் சூழலில் மக்களின் மனநிலை வெளிப்படையாக உள்ளது என்றார்.. சென்னை தலைமைச் செயலகத்தில் ஆட்சி மன்ற குழு கூடி வேட்பாளரை முடிவு செய்யும் என்றும் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவுகள் டெல்லி செங்கோட்டையில் எதிரொலிக்கும் என்றும் அதிமுகவுடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணி என்பது குறித்து இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்
பவானிசாகர் அருகே கிரஷரில் படுத்துக் கொண்டிருந்த நாயை, சிறுத்தை தாக்கும் காட்சி சிசிடிவி யில் வெளியாகி உள்ளது.

பவானிசாகர் அருகே கிரஷரில் படுத்துக் கொண்டிருந்த நாயை, சிறுத்தை தாக்கும் காட்சி சிசிடிவி யில் வெளியாகி உள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானை, கரடி, புலி, சிறுத்தை என ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் புலி, சிறுத்தைகள் விவசாய தோட்டத்தில் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டையாடி வருகின்றன. மேலும், சிறுத்தைகள் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராங்களில் புகுந்து கால்நடைகளை அடித்துக் கொல்வது தொடர்ந்து நடந்து வருகிறது. அதனைத்தொடர்ந்து, பவானிசாகர் வனப்பகுதியை ஒட்டி 10-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த குவாரிகள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் அவ்வப்போது கல்குவாரி உரிமையாளர்கள் வளர்த்து வரும் காவலுக்காக வளர்த்து வரும் நாயை வேட்டையாடி வருவதும், வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில், பவானிசாகர்-மேட்டுபாளையம் சாலையில் உள்ள அம்மாபாளையம் பகுதியில் இயங்கி வரும் தனியார் கிரஷரில் நேற்று இரவு 9.45 மணியளவில் சிறுத்தை ஒன்று நுழைந்தது. அப்போது அங்கு படுத்திருந்த நாயை பிடிப்பதற்காக சிறுத்தை துரத்தியது. சிறுத்தையை கண்ட நாய் வேகமாக ஓடி மயிரிழையில் உயிர் தப்பியது. சிறுத்தை நாயை துரத்திய காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்த இக்காட்சி அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

வெள்ளி, 27 ஜனவரி, 2023

ஈரோடு மாவட்டம் சென்னிமலை சாலை இரங்கம்பாளையம் அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோவிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நேற்று காலை சிறப்பாக நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை சாலை இரங்கம்பாளையம் அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோவிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நேற்று காலை சிறப்பாக நடைபெற்றது.

ஈரோடு ரங்கம் பாளையம் பகுதியில் அமைந்துள்ள சித்தி விநாயகர் திருக்கோயிலில் தை 13ம் நாள் சஷ்டி திதியும், ரேவதி விண்மீனும் அமிர்தயோகமும் கூடிய சிவயோக சிவமங்கல வேலையில் அருள்மிகு சித்தி விநாயகர் மூலாலய திருக்குட நன்னீராட்டு பேரொளி வழிபாடு மூலம் காலை ஒன்பது மணிக்கு வேத வித்தகர் தமிழ் மந்திரங்கள் ஓதி, திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. இதற்காக கடந்த தை பதினொன்னாம் நாள் காவிரிக்குச் சென்று புனித நீர் எடுத்துவரப்பட்டது, அது சமயம் பெண்கள் ஏராளமானோர் முளைப்பாரி எடுத்து வந்தனர். தை 12 ம் தேதி மங்கல இசை, ஐங்கரன் வேள்வி, திருமகள் வழிபாடு, அனுமதி பெறுதல், மண் எடுத்தல், காப்பணிதல் வழிபாடுகள் முதற்கால யாக வேள்வி" தொடர்ந்து 108 மூலிகை, கனியமுதுகள் திரவியங்களைக் கொண்டு வேள்வி வழிபாடு, மூலத் திருமேனிக்கு எந்திரம் வைத்து எண் வகை மருந்து சாற்றுதல் போன்றவை மிகச் சிறப்பாக நடைபெற்றது. நேற்று காலை நடைபெற்ற திருக்குட நன்னீராட்டு விழாவில் அப்ப பகுதி சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் அப்போது அவர்கள் மேல் புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. அதை எடுத்து வந்த அனைத்து பக்தர்களுக்கும் காலையில் அனைத்து பக்தர்களும் காசி திருமண மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் நிர்வாகி முத்து, 56 ஆவது வார்டு கவுன்சிலர் செந்தில்குமார் ஆகியோர் விழா ஏற்பாட்டு செய்திருந்தனர். திருக்கோயில் நிர்வாகிகள் வடிவேல், பழனிச்சாமி, செல்வராஜ், சந்திரசேகர்,மோகன்ராஜ், மணிகண்டன், வெங்கடேஷ், சுரேஷ், யுவராஜ், பிரபாகரன், காசி திருமண மண்டபம் நிறுவனர் ஐயப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்
ஈரோடு வில்லரசம்பட்டியில் நள்ளிரவில் கோயிலிலுள்ள பொருட்களை மர்மநபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதனால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஈரோடு வில்லரசம்பட்டியில் நள்ளிரவில் கோயிலிலுள்ள பொருட்களை மர்மநபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதனால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஈரோடு அடுத்த வில்லரசம்பட்டி பகுதியில் பழமை வாய்ந்த கருப்பண்ண சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தினமும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோயிலில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நுழைந்த மர்மநபர் ஒருவர் கோயிலின் முன்பு இருந்த வேல், ஊஞ்சல் உள்ளிட்ட உள்ளிட்ட கோயிலின் பொருட்களை சேதப்படுத்தியுள்ளார். இதனையடுத்து, அடுத்த நாள் அதிகாலையில் கோயிலுக்கு வந்த பூசாரி மற்றும் பொதுமக்கள் கோயிலின் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவே ஏராளமானோர் கோவில் முன்பு குவிந்தனர். அதனைத்தொடர்ந்து, வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கோயிலில் பொருத்திருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், கால்டாக்சியில் காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கோயிலின் பொருட்களை சேதப்படுத்திய காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனையடுத்து, சிசிடிவி காட்சிகளை வைத்து வேல் , ஊஞ்சல் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்திய மர்மநபர்கள் குறித்து, வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து கோயில் சிலையை சேதப்படுத்தியது யார்? என விசாரித்து வருகின்றனர். கோயில் பொருட்களை சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பவானி நகராட்சியில் ரூபாய் 24.6 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டு திட்ட பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

பவானி நகராட்சியில் ரூபாய் 24.6 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டு திட்ட பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

ஈரோடு வடக்கு மாவட்டம் பவானி நகராட்சி 27 வார்டுகளிலும் அனைத்து வீடுகளுக்கும் சீரான குடிநீர் இணைப்பு வழங்கும் வகையிலும் நகர விரிவாக்கத்தை கருத்தில் கொண்டும் அம்ருத் 2.0 குடிநீர் மேம்பாட்டு திட்ட பணிகள் 24.6 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. குடிநீர் மேம்பாட்டு திட்ட பணிகளுக்கு என்.நல்லசிவம் அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில், பவானி நகர மன்ற தலைவர் சிந்தூரிஇளங்கோவன், நகர செயலாளர் நாகராஜன்‌, பவானி தெற்கு ஒன்றிய செயலாளர் துரைராஜ், நகர மன்ற துணைத்தலைவர், உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் மாதேஸ்வரன், பாலமுருகன், தங்கராஜ் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

வியாழன், 26 ஜனவரி, 2023

ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை அறிவிக்க உள்ளார்..!?

ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை அறிவிக்க உள்ளார்..!?

ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமையில் தேர்தல் பணி குழு கூட்டம் நடைபெற்றது. இந்தத் தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ செங்கோட்டையன, கே.சி கருப்பண்ணன், கே.வி ராமலிங்கம், தங்கமணி, விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார், பண்ணாரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ் தென்னரசு, சிவசுப்பிரமணியம், இ.எம் ராஜா உள்ளிட்ட அதிமுக மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர், யுவராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனையடுத்து, காலை 10 : 30 மணிக்கு துவங்கிய தேர்தல் பணிக்குழு கூட்டமானது மாலை 6 : 30 அளவில் நிறைவடைந்தது, எட்டு மணி நேரம் இக்கூட்டமானது நடைபெற்றது. இதனை தொடர்ந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஈரோட்டில் இருந்து புறப்பட்டு சேலம் சென்றார். அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் புறப்பட்டு சென்றனர். நாளை காலை 10 மணிக்கு மேல், மீண்டும் ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் நிர்வாகிகளுடன் தேர்தல் பணிக்குழு கூட்டம் நடைபெற உள்ளது . இதன் தொடர்ச்சியாக நாளை முழுமையாக இந்த தேர்தல் பணிக்குழு கூட்டமும், ஆட்சி மன்ற குழுவில் முடிவெடுக்கப்பட்டு நாளையே, நாளை மறுநாளோ வேட்பாளர் யார்? என அறிவிக்கப்படலாம் என்ற தகவல்களை அதிமுக வட்டார தெரிவிக்கின்றன.
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, தலைமையில் பகுதி கழகச் செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது...

ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, தலைமையில் பகுதி கழகச் செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது...

ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, தலைமையில் பகுதி கழகச் செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது... இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ செங்கோட்டையன,கே.சி கருப்பண்ணன், கே.வி ராமலிங்கம், தங்கமணி, செம்மலை சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார், பண்ணாரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ் தென்னரசு, சிவசுப்பிரமணியம், இ.எம் ராஜா உள்ளிட்ட அதிமுக மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர், யுவராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதன், 25 ஜனவரி, 2023

பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவர்கள் வடிவமைத்த பேட்டரி காருக்கு தேசிய அளவில் முதல் பரிசு

பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவர்கள் வடிவமைத்த பேட்டரி காருக்கு தேசிய அளவில் முதல் பரிசு

பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவர்கள் வடிவமைத்த பேட்டரி காருக்கு தேசிய அளவில் முதல் பரிசு கிடைத்துள்ளது. சத்தியமங்கலம் எஸ்ஏஇ இந்தியா, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் டிசிஎஸ் நிறுவனங்கள் இணைந்து பெங்களூரில் எலக்ட்ரிக் வாகன கண்டுபிடிப்புக்கான 'ரீவ்' எனும் போட்டியை நடத்தியது. இதில் இந்தியா முழுவதும் இருந்து வந்திருந்த கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது கண்டுபிடிப்பை சமர்ப்பித்தனர். இந்த போட்டியில் பண்ணாரி அம்மன் கல்லூரியைச் சேர்ந்த மனுபேக்சரிங் மற்றும் பேப்ரிக்கேசன் பிரிவைச் சேர்ந்த 25 மாணவர்கள் கலந்து கொண்டு டைனமிக் பேஸ் பிரிவில் வடிவமைக்கப்பட்ட எலக்ட்ரிக் வாகனத்தை சமர்ப்பித்தனர். ஜெனரல்மோட்டார்ஸ் மற்றும் டிசிஎஸ் நிறுவனத்தை சேர்ந்த நடுவர்கள் பல்வேறு பிரிவுகளில் ஆய்வு செய்தனர். பின் பெங்களூரில் நடைபெற்ற இறுதி போட்டியில் பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவர்கள் வடிவமைத்த 90 கி.மீ மைலேஜ் தரக்கூடிய ஜியூஸ் என்ற வாகனம் சிறந்த பெஸ்ட் பிரசன்டேசன் அவார்டு மற்றும் ரூபாய் 1.5 லட்சம் பரிசுதொகையுடன் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்தது. வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரியின் சேர்மேன் பாலசுப்பிரமனியம், முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினார்கள்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படாத 74 வது குடியரசு தினவிழா..!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படாத 74 வது குடியரசு தினவிழா..!

74 வது குடியரசு தினம்....ஈரோடு ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக நலத்திட்ட உதவிகள் வழங்கவில்லை. 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வ.உ.சி பூங்கா விளையாட்டு மைதானத்தில் ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தேசிய கொடியினை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்று கொண்டார்.
இதனையடுத்து காவல்துறையினருக்கு பதக்கங்களை வழங்கிய ஆட்சியர் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 485 பேருக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளது, இதனால் நலத்திட்ட உதவிகள் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு அருகே உள்ள நசியனூர் அப்பத்தாள் கோயிலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்

ஈரோடு அருகே உள்ள நசியனூர் அப்பத்தாள் கோயிலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்

ஈரோடு அருகே உள்ள நசியனூர் அப்பத்தாள் கோயிலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். அருகில், முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், கே.வி.ராமலிங்கம், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி, முன்னாள் எம்பி செல்வ குமார சின்னையன், பெருந்துறை ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ் ஆகியோர் உள்ளனர்.
பவானி பேருந்து நிலையத்தில் அரசு-தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன் பறிமுதல்

பவானி பேருந்து நிலையத்தில் அரசு-தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன் பறிமுதல்

பவானி பேருந்து நிலையத்தில் அரசு-தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் பவானி புதிய பேருந்து நிலையத்திலிருந்து செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிக அளவில் ஒலி எழுப்பும் பைப் ஹாரன்கள் பயன்படுத்துவதாகவும், சில  தனியார் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு உள்ளே வாராமல் வெளியே நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வதாகவும் புகார் எழுந்தது.

இதனையடுத்து கோபி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முனுசாமி மற்றும் பவானி வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் சித்ரா ஆகியோர் பவானி புதிய பேருந்து நிலையத்தில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, விதிகளுக்குப் புறம்பாக பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலியெழுப்பும் பைப் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும், பவானி புதிய பேருந்து நிலையத்துக்குள் அனைத்து பேருந்துகளும் வந்து பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும், போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினார் .

இந்த ஆய்வின்போது பவானி நகர்மன்றத் தலைவர் சிந்தூரி இளங்கோவன்,  போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.
108 ஆம்புலன்ஸ் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்

108 ஆம்புலன்ஸ் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்

108 ஆம்புலன்ஸ் சேவைக்கான வேலை வாய்ப்பு முகாம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள், அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஈரோடு அரசு தலைமை அரசு மருத்துவமனை உள்ள டிபி-ஹாலில் வரும் 28-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

108 சேவையில் மருத்துவ உதவியாளர் பணிக்கான கல்வித்தகுதி:  B.Sc. நர்சிங், அல்லது GNM, ANM, DMLT (12 ஆம் வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும். அல்லது Life Science Graduates (B.Sc. Zoology. Botany, BioChemistry.Microbiology, Biotechnology, Plant Biology) முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்: ரூ.15,435/- (மொத்த ஊதியம்)

வயது: நேர்முக தேர்வு அன்று 19 வயதுக்கு மேலும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்

தேர்வு முறை: 1. எழுத்துத் தேர்வு 2.மருத்துவ நேர்முகம்-உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை 3. மனிதவளத் துறையின் நேர்முகம்.

108 சேவையில் டிரைவருக்கான அடிப்படை தகுதிகள்:

கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பில் தேர்ச்சி ,

மாத ஊதியம்: ரூ.15,235/- (மொத்த ஊதியம்) ,

வயது: நேர்முக தேர்வு அன்று 24 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

உயரம்: 162.5 சென்டி மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும்

தகுதி: இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் Badge வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 1 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை :1. எழுத்துத் தேர்வு 2. தொழில்நுட்பத் தேர்வு 3. மனிதவள துறை நேர்காணல் 4.கண்பார்வை சம்பந்தப்பட்ட தேர்வு 5. TEST DRIVE. 

நேர்முகத் தேர்வு:- 

நேர்முக தேர்வுக்கு கலந்துகொள்ளும் அனைவரும் அசல் சான்றிதழ்களை சரிபார்ப்பதற்காக கொண்டு வர வேண்டும். மேலும் விவரம் அறிய கீழ்காணும் தொலைபேசி எண்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளவும் : 7338894971,91540084152, 7397724829, 7397724813,7397724858
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான எனக்கு,  கமலஹாசன் அதரவு அளித்தற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் - ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்  ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஈரோட்டில் பேட்டி ...

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான எனக்கு, கமலஹாசன் அதரவு அளித்தற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் - ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஈரோட்டில் பேட்டி ...

கமலஹாசன் அவர்கள் இயற்கையிலேயே ஆதரவு தெரிவிப்பார் என எனக்கு நன்றாக தெரியும் ... கமலஹாசன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ... நேரில் வந்து பிரச்சாரத்தில் ஈடுபடுவாரா? என்ற கேள்விக்கு வருவார் என நம்புகிறேன் என ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

செவ்வாய், 24 ஜனவரி, 2023

ஈரோடு கிழக்குத் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுடன், தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சந்தித்து தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்

ஈரோடு கிழக்குத் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுடன், தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சந்தித்து தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை அவரது இல்லமான குடியரசு இல்லத்தில் தமிழக மின்சாரம் மற்றும் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி மரியாதை நிமித்தமாகவும் தேர்தல் பணி குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார் முன்னதாக ஈரோடு பெரியார் நகரில் உள்ள தமிழக வீட்டு வசதி துறை அமைச்சரும் தெற்கு மாவட்ட செயலாளருமான சு.முத்துச்சாமியை சந்தித்து தேர்தல் பணி மற்றும் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொன்டார். இந்த நிகழ்ச்சியில் திமுக துணை பொது செயலளார் அந்தியூர் செல்வராசு, வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம், அரவக்குறிச்சி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, மாநில நிர்வாகிகள் SLTசச்சிதானந்தம், வி.சி.சந்திரகுமார் மாவட்ட, மாநகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.