தமிழ்நாடு முதல்வரின் உத்திரவுப்படி கடந்த 22 மாத திமுக ஆட்சியில் ஏதாவது ஒரு வகையில் பயன் பெறாதவர்கள் எவரும் இல்லை
மருத்துவ துறையில் உள்ள காலி பணியிடங்கள் அனைத்தும் MRB மூலம் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகிறது என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேட்டி
-*******
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி கே.எஸ் இளங்கோவனை வெற்றி பெற செய்வது குறித்து வீரப்பன்சத்திரம் பகுதி 24, 25 வார்டுகளின் வாக்குசாவடி முகவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
இதில் 24, 25 வார்டுகளின் தேர்தல் பணிக்குழுவின் பொறுப்பாளர் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பங்கேற்று வெற்றி வியூகம் குறித்து ஆலோசனை வழங்கினார்
அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் தந்தை பெரியாரின் பேரன் ஈ விகேஎஸ் இளங்கோவன் உறுதி செய்யப்பட்ட ஒன்று இருப்பினும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வீடு வீடாக சென்று திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்து கூறி வாக்கு சேகரிக்க உரிய ஆலோசனை வழங்கப்பட்டது
தமிழ்நாடு முதல்வரின் உத்திரவுப்படி கடந்த 22 மாத திமுக ஆட்சியில் ஏதாவது ஒரு வகையில் பயன் பெறாதவர்கள் எவரும் இல்லை
மருத்துவ துறையில் உள்ள காலி பணியிடங்கள் அனைத்தும் MRB மூலம் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகிறது
இந்த நிகழ்ச்சியில் திமுக துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, சட்டமன்ற உறுப்பினர் தாயகம்கவி, திமுக நெசவாளர் அணி மாநில செயலாளர் SLTசச்சிதானந்தம், மண்டல தலைவர் ப.க.பழனிச்சாமி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
ஞாயிறு, 29 ஜனவரி, 2023
Author: shabanewstamil
We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.
0 coment rios: