செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023
சனி, 8 ஜூலை, 2023
தி.மு.க பொறியாளர் அணியின் ஈரோடு மாநகர துணை அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்ட தாரிக், அமைச்சர் சு.முத்துசாமி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
ஞாயிறு, 2 ஜூலை, 2023
பொது சிவில் சட்டம் குறித்து ஆன்லைனில் கருத்து தெரிவிப்பது எப்படி?
பொது சிவில் சட்டம் குறித்து ஆன்லைனில் கருத்து தெரிவிப்பது எப்படி?
பொது சிவில் சட்டம் குறித்து ஆன்லைனில் கருத்து தெரிவிப்பது எப்படி முழு விவரம் uniform civil code.
பொது சிவில் சட்டம் பற்றி தங்களது கருத்துகள், பார்வையை பொதுமக்கள், மத அமைப்புகள் 30 நாட்களுக்குள் membersecretary-Ici@gov.in என்ற மின்னஞ்சலில் சமர்ப்பிக்கலாம் என இந்திய சட்ட ஆணையம் அறிவித்துள்ளது
இது குறித்து ஆணையம் வெளியிட்டுள்ள சட்ட செய்தி குறிப்பில்
Law Commission of India solicits views & ideas of the public and recognized religious organizations about Uniform Civil Code The 22nd Law Commission of India is inter alia examining the Uniform Civil Code, a reference sent by the Ministry of Law & Justice. Initially the 21st Law Commission of India had examined the subject on Uniform Civil Code and solicited the views of all the stakeholders through its appeal along with a questionnaire dated 07.10.2016 and further public appeals/notices dated 19.03.2018, 27.03.2018 and 10.4.2018. Pursuant to the same, overwhelming responses have been received by the Commission.
The 21st Law Commission has issued the consultation paper on "Reforms of Family Law" on 31.08.2018. Since more than three years have been lapsed from the date of issuance of the said Consultation Paper, bearing in mind the relevance and importance of the subject and also the various Court orders on the subject, the 22nd Law Commission of India considered it expedient to deliberate afresh over the
subject.Accordingly, the 22nd Law Commission of India decided again to solicit views and ideas of the public at large and recognized religious organizations about the Uniform Civil Code.
Those who are interested and willing may present their views within a period of 30 days from the date of Notice through "click here" button or by Email at membersecretary-lci[at]gov[dot]in to the Law Commission of India என செய்தி வெளியிட்டுள்ளது.
அரசியலமைப்பின் 44 வது பிரிவு, மாநில கொள்கையின் வழிகாட்டுதல் கொள்கைகளில் ஒன்றாகும், இது ஒரு சீரான சிவில் குறியீட்டை பரிந்துரைக்கிறது. ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள், அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள், "இங்கே கிளிக் செய்க" என்ற பொத்தான் மூலமாகவோ அல்லது உறுப்பினர் செயலர் - எல்சிஐ[at]gov[dot]ல் உள்ள மின்னஞ்சல் மூலமாகவோ இந்திய சட்ட ஆணையத்தில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது சிவில் சட்டம் என்றால் என்ன?
இந்தியாவில், வெவ்வேறு சமூகங்களில் அவர்களின் மதம், நம்பிக்கை போன்றவற்றின் அடிப்படையில் திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை மற்றும் தத்தெடுப்பு விஷயங்களில் தனித்தனியான சட்டங்கள் உள்ளன. ஆனால் பொது சிவில் சட்டம் இயற்றப்பட்டால், நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவருக்கும் சாதி, மதம், பாலின பாகுபாடு இல்லாமல் ஒரே மாதிரியான சட்டம் பின்பற்றப்படும்.
இந்தியாவில் குற்றவியல் நடவடிக்கைக்கான சட்டத்தைப் பொறுத்தவரை, இந்தியா முழுக்க அனைவருக்கும் ஒன்றுதான். அதாவது கொலை, கொள்ளை போன்ற குற்றவியல் சம்பவங்களில் யார் ஈடுபட்டாலும் ஒரே தண்டனை தான். ஆனால், திருமணம், விவாகரத்து, பரம்பரை, தத்தெடுப்பு போன்ற அவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் அனைத்து மதச் சமூகங்களுக்கும் பொருந்தும் படி அவரவர் மதங்களுக்கு பல்வேறு சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன.
அதாவது, தனிநபர்களுக்கான சிவில் சட்டம்
மதங்களுக்கு மதம் மாறுபடும். இப்படி இந்தியாவில் உள்ள, பல்வேறு சிவில் சட்டங்களை நீக்கி, அனைத்து தரப்பினருக்கும் ஒரே சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என பாஜக உள்ளிட்ட தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும், பல்வேறு மதங்களை உள்ளடக்கிய இந்தியா போன்ற நாட்டில் பொது சிவில் சட்டம் என்பது சரியாக இருக்காது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இந்திய அரசியலமைப்பின் வழிகாட்டி
நெறிமுறைகளின் கீழ் உள்ள 44வது பிரிவில் "இந்தியா முழுமைக்கும் குடிமக்கள் ஒரே விதமான பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கலாம்" எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
பொது சிவில் சட்டம் குறித்து ஜமா அத்துல் உலமா சபை அறிக்கை:-
கண்ணியமிகு ஜமாஅத்துல் உலமா சபையின் மாவட்ட, வட்டார நிர்வாக பெருமக்கள் உள்ளிட்ட அனைத்து ஆலிம் பெருமக்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்களிடமிருந்தும் பதிவு செய்யப்பட்ட மத அமைப்புகளிடமிருந்தும் சட்ட ஆணையம் கருத்து கேட்டிருப்பதும் அதை ஒரு மாதத்துக்குள் (14.07.2023) அனுப்ப வேண்டும் தாங்கள் அறிவீர்கள் என கூறியிருப்பதையும், இது தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கு கீழ்காணும் ஐந்து விஷயங்கள் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இவற்றை முழுமையாகவோ இவற்றில் சிலவற்றையோ இதற்குரிய (ONLINE FORM ல் ONLINE FORM LINK இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.)
தகவலை பதிவேற்றம் செய்ய வேண்டிய இடத்தில் டைப் செய்தோ அல்லது PDF ஆகவோ பதிவேற்றம் செய்து அனுப்பவும்.
இது பொதுமக்கள் ஒவ்வொருவரும் அனுப்புவதற்கானது. இதற்கான விழிப்புணர்வை ஒவ்வொரு மஸ்ஜிதின் இமாம் அவர்கள் ஜும்ஆ மற்றும் ஈதுல் அழ்ஹா பெருநாள் ஆகியவற்றில் அறிவிப்பு செய்து மீண்டும் மீண்டும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இவை முறையாக நடைபெறுவதை மாவட்ட மற்றும் வட்டார நிர்வாகங்கள் தொடர் அக்கறை எடுத்து உறுதி செய்ய வேண்டும்.
நம்முடைய தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை பதிவு செய்யப்பட்ட அமைப்பு என்ற அடிப்படையில் பொதுச்சிவில் சட்டம் ஏன் தேவையில்லை என்பதை மிகத் தெளிவாக விரிவாக விளக்கி இந்திய சட்ட ஆணையத்திடம் இன்ஷா அல்லாஹ் தனது கருத்தை தெரிவிக்கும்.
NO NEED OF UNIFORM CIVIL CODE FOR SOME OF THE FOLLOWING MAIN REASONS
1. Article 25 Guarantees Right to Freedom of Religious Practice, so practicing personal laws cannot be interferred even by the State.
2. UCC is against the Spirit of the Secular Character of our Constitution.
3. Indian Legal System is based on pluralism and the
application of UCC will result in its complete destruction.
4. The Parliamentary System of India itself is in the model of Unity in Diversity. So, UCC cannot exist in parallel.
5. The Supreme Court of India has time and again upheld the Constitutional Validity of Personal Laws over UCC.
பொது சிவில் சட்டம் குறித்து ஆன்லைனில் கருத்து தெரிவிப்பது எப்படி?
உங்களது மொபைலில் உள்ள ஜிமெயில் ஓபன் செய்து கொள்ளுங்கள்.
அடுத்து இ மெயில் அனுப்ப என்பதை செய்து ஓப்பன் செய்து கொள்ளுங்கள்.
கிளிக் அடுத்து Subject ல் Regarding UCC என்று டைப் செய்து கொள்ளுங்கள்,
அடுத்து TO என்பதில் சட்ட ஆணையத்தின் ஈமெயில் கொள்ளுங்கள் முகவரியை டைப் செய்து இ மெயில் முகவரி : membersecretary- Ici@gov.in
To address membersecretary- Ici@gov.in
Compose Email பகுதியில் உங்கள் கருத்தை ஆங்கிலத்தில் பதிவிட்டு இறுதியாக உங்கள் பெயர் குறிப்பிட்டு SEND செய்து விடுங்கள் அவ்வளவுதான்.
ஆட்சேபனை கருத்துக்கள் பதிவு செய்ய கடைசி நாள் : 14.07.2023
வெள்ளி, 30 ஜூன், 2023
ஈரோடு வ.உ.சி.பூங்கா ஈத்கா மைதானத்தில் நடந்த பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ..!
ஈரோடு பெரியார் நகரில் உள்ள மைதானத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில், அப்துல் ரகுமான் தலைமையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தியாகத் திருநாள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
நமது நிருபர் : இப்ராஹிம் - ஈரோடு.
வெள்ளி, 19 மே, 2023
ரொம்ப காலமா குண்டும் குழியுமாக இருக்கிற ரோட்டை போடுங்க பாஸ்..!
சனி, 13 மே, 2023
மசாஜ் சென்டருக்குள் புகுந்து கத்திமுனையில், மசாஜ் செய்யும் கேரள பெண்களிடம் தங்க நகைகளை பறித்த கும்பல் கைது ...!
ஞாயிறு, 16 ஏப்ரல், 2023
வீரப்பன் கூட்டாளி மீசைக்கார மாதையன் உயிரிழந்தார்..!
வியாழன், 6 ஏப்ரல், 2023
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவெரா மரணமடைந்ததைத் தொடர்ந்து அத்தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் அவரது தந்தை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் கடந்த மார்ச்-15 ஆம் தேதி நெஞ்சு வலி காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இதய ரத்த நாளங்கள் சுருங்கியிருப்பதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.
சனி, 1 ஏப்ரல், 2023
ஈரோடு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் பாரம்பரியமிக்க முளைப்பாரி திருவிழா கோலாகலம்..!
வெள்ளி, 10 மார்ச், 2023
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் கொடுக்கப்பட்ட டோக்கனுக்கு ஏதாவது கிடைக்குமா?
புதன், 1 மார்ச், 2023
#Breaking news ஈரோடு கிழக்கு தொகுதி... தபால் வாக்குகளில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலை...
செவ்வாய், 28 பிப்ரவரி, 2023
16 மேஜைகளில் 15 சுற்றுகளாக எண்ணப்படும் - மாவட்டத் தேர்தல் அதிகாரி பேட்டி
திங்கள், 27 பிப்ரவரி, 2023
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 74.79 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023
துணை ராணுவத்தினர் - தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் - ஈரோடு எஸ்.பி சசிமோகன் பேட்டி
#Breaking news ஈரோடு இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது - வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
இடைத்தேர்தலுக்கு 52 இடங்களில் 238 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் இதில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 பேர் ஆண்களாகவும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பேர் பெண்களாகவும் உள்ளனர்.
இந்த இடைத்தேர்தலில் 1430 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 286 வாக்குப்பதிவு கட்டுப்பாடு கருவிகள், 310 விவிபெட் இயந்திரங்கள் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளன.
நான்கு மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 2200 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்கு சாவடிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
சனி, 25 பிப்ரவரி, 2023
பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ 1000 மகளிர் உரிமைத் தொகை வரும் மார்ச் மாதம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் - முதல்வர் மு.க ஸ்டாலின்..!
வரலாற்றில் மிக மோசமான தேர்தலாக ஈரோடு இடைத் தேர்தல் பதிவாகி உள்ளது - அரசியல் விமர்சகர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றச்சாட்டு
திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்கி உள்ளார். அதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்பவர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இவருக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்து வருகிறார். சமீபத்தில் அருந்ததியர் பற்றி சீமான் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.மொத்தம் 77 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். தொகுதியில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது, தற்போது தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்ட உள்ளது.
இன்று பிரசாரம் முடிவுக்கு வர உள்ளதால் வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 21 மாத ஆட்சியில் திமுக ஆட்சியின் செயல்பாட்டுக்கு மக்கள் வழங்கும் மதிப்பெண்ணாக இந்த தேர்தல் இருக்கும் என கூறப்படுகிறது.
இதனால் ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெற வைக்க திமுக, காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். அதிமுகவில் நிலவிய குழப்பத்துக்கு மத்தியில் இரட்டை இலை சின்னத்தை பெற்ற மகிழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உள்ளது. எப்படியாவது தென்னரசை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று அதிமுகவும் திமுகவுக்கு இணையாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
பிரச்சாரம் மட்டுமன்றி, வாக்காளர்களை செமத்தியாக கவனிக்கிறார்கள் திமுகவும், அதிமுகவும். வேலைக்கு செல்வதை விட அதிகளவில் வருமானம் வருவதால் மக்கள் பிரசாரத்தை தொழிலாகவே மாற்றிக் கொண்டுள்ளார்கள் முக்கால்வாசி வாக்காளர்கள். பிரசாரத்துக்கு செல்லும் பெண்களுக்கு தினமும் குறைந்தது ரூ.750 முதல் ரூ. 1000 வரை கிடைத்து வந்தது.
தேர்தல் பணிமனையில் அமர்ந்து கொண்டால் ரூ.500, பிரியாணி, ஆண்களுக்கு ரூ.500 மற்றும் மதுபாட்டிலும் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் இடைத்தேர்தல் பிரசாரத்தை வாக்காளர்கள் நன்றாகவே கவனிக்கிறார்கள். இது ஒருபக்கம் என்றால், குக்கர், வெள்ளி கால் கொலுசு, வெள்ளி டம்ளர், பட்டுபுடவை மற்றும் பிற பொருட்கள் என கிடைக்கிறது.
பால் குக்கர், காய்கறி வெட்டும் கட்டர், பிளாஸ்டிக் பாக்ஸ் செட், சமையலுக்கான குக்கர், கடா போன்றவையும் பல்வேறு இடங்களில் கமுக்கமாக வாக்காளர்களுக்கு விநியோகித்து வருகிறார்கள் கரைவேட்டிக்காரர்கள். இதற்கெல்லாம் மேலே ஒரு படி போய் ஸ்மார்ட் வாட்ச் கொடுத்தும் வாக்காளர்களை கவர்ந்து வருகிறார்கள். 20 நாள் பிரசாரம், ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் என ஒவ்வொரு வாக்காளர்களும் சுமார் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை சம்பாதித்து வருகிறார்கள்.
தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாளே உள்ள சூழலில் இன்னும் பல பரிசுகள் கிடைக்குமா ? என்ற ஏக்கத்தில் வாக்காளர்கள் தொகுதியை சுற்றி வந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய முறைகேடுகள் தேர்தல் ஆணையத்துக்கு இதுவரை தெரியாமல் இருக்கிறதா ? என்ற கேள்வியும் எழுகிறது. வரலாற்றில் மிக மோசமான தேர்தலாக ஈரோடு இடைத் தேர்தல் பதிவாகி உள்ளது என்று அரசியல் விமர்சகர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டி உள்ளனர்.
இணையும் பாருங்கள்... https://youtu.be/vrWw3UUftHU
புதன், 22 பிப்ரவரி, 2023
தி.மு.க - நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்கிடையே கடும் மோதல்.. கல்வீச்சில் 2 தரப்பினருக்கும் மண்டை உடைந்தது.. போலீசாரும் தாக்கப்பட்டதால் பரபரப்பு..!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 27-ந் தேதி நடக்கிறது. இதற்கான பிரசாரம் 25-ந் தேதி மாலை 5 மணிக்கு ஓய்கிறது. இதை முன்னிட்டு அனைத்துக்கட்சி தலைவர்களும் ஈரோட்டில் சூறாவளி பிரசாரத்தை நடத்தி வருகிறார்கள். உச்சகட்ட பரபரப்பை எட்டி இருக்கும் கிழக்கு இடைத்தேர்தலில் நேற்று தி.மு.க. மற்றும் நாம்தமிழர் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் திடீர் கலவராமாக மாறியதால் பெருமு் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தி.மு.க.வினர் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஆங்காங்கே தேர்தல் பணிமனைகள் வைத்து அந்தந்த பகுதி மக்களிடம் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.வும் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடுமையான தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை உழைத்து வருகிறார்கள்.
இங்கு 2 பெரிய கூட்டணிகளுடன் தே.மு.தி.க. மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் போட்டியில் இருக்கிறார்கள். இவர்களுடன் சேர்த்து மொத்தம் 77 வேட்பாளர்கள் இந்த போட்டியில் உள்ளனர்.
இதனால் தேர்தல் களம் அனல் பறக்கும் நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரிக்க பல்வேறு வீதிகள் வழியாக சென்று வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதற்காக அவர் நேற்று இரவு 7.30 மணி அளவில் வீரப்பன்சத்திரம் தெப்பக்குளம் அருகே காவிரி ரோடு பகுதியில் சீமான் வந்த வழித்தடத்தில், அவருக்கு முன்பாக கட்சியினரின் வாகனங்கள் அணிவகுத்து வந்தன. அப்போது அங்கு தி.மு.க.வை சேர்ந்த தொண்டர்கள் சிலர் குமு்பலாக நின்று கொண்டிருந்தனர். அவர்கள் நாம்தமிழர் கட்சியினரை பார்த்து எதிர்ப்பு கோஷம் எழுப்பினார்கள். அதற்கு பதிலடியாக நாம் தமிழர் கட்சியினரும் கோஷம் எழுப்பினார்கள். வாகனங்களில் சென்றவர்கள் அங்கேயே இறங்கி, நின்று கொண்டிருந்த தி.மு.க.வினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் 2 தரப்பினருக்கும் இடையே கைகலப்பு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் தாக்கியதில் தி.மு.க. தொண்டர் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த தி.மு.க.வினர் கையில் வைத்திருந்த கட்சிக்கொடி கட்டி இருந்த இரும்பு குழாய்களை வைத்து சரமாரியாக தாக்கத்தொடங்கினார்கள். அவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியினரும் தங்கள் கட்சிக்கொடி கட்டி இருந்த கம்பி குழாய்களை எடுத்து வீசினார்கள். இந்த தாக்குதலில் 2 தரப்பை சேர்ந்தவர்களும் மண்டை உடைக்கப்பட்டு காயம் அடைந்தனர். இந்த திடீர் கலவரத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் 2 தரப்பினரையும் சாமாதானம் செய்ய முயன்றனர். ஆனால், அதிரடியாக தாக்கிக்கொண்ட 2 தரப்பினரும் சமாதானம் செய்ய வந்த போலீசார் மீதும் தாக்குதல் நடத்தினார்கள். இதற்கிடையே போலீசார் சம்பவ இடத்தில் குவிந்தனர். போலீசார் அதிகம் பேர் குவிந்ததால் சற்று தாக்குதல் குறைந்தாலும் வாக்குவாதம் தொடர்ந்தது. அப்போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 2 தொண்டர்களை தி.மு.க.வினர் இழுத்துச்சென்று விட்டதாகவும், அவர்களை மீட்டுத்தரவும் வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். ஆனால் தி.மு.க.வினர் அப்படி யாரையும் நாங்கள் இழுத்துச்செல்லவில்லை என்று பதில் அளித்தனர், இந்த வாக்குவாதம் மீண்டும் மற்றி மோதல் ஏற்படும் வாய்ப்பு வந்தது.
இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்தபோதே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வேட்பாளர் மேனகா நவநீதன் ஆகியோர் திறந்த ஜீப்பில் பிரசாரம் செய்து கொண்டே வந்தனர். அவர்கள் அங்கு கைகலப்பு நடப்பதை பார்த்துக்கொண்டே, பிரசாரம் செய்து கொண்டு வந்தவர், இங்கே போலீசார் விரைந்து வாருங்கள். தி.மு.க. குண்டர்கள் கலவரம் செய்கிறார்கள். போலீசார் வாகனங்களுக்கு முன்னால் வரவும். அன்பு மக்களே பாருங்கள். இதுதான் திராவிட அரசியல். திராவிட கட்சிகள் செய்த சாதனை. இந்த குண்டர்களை ஏவி, ஒரு தூய அரசியலலை சாக்கடை ஆக்கியது. நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் விவசாயி என்று கலவரத்தை தங்களுக்கு சாதகமாக பிரசாரம் செய்து கொண்டே அந்த பகுதியை கடந்து சென்றனர். இங்கே கலவரம் செய்பவர்களை போலீசார் பார்த்துக்கொள்வார்கள் என்று கூறியபடி பொதுக்கூட்டம் நடந்த பகுதிக்கு சென்றனர்.
இதற்கிடையே தகவல் அறிந்த ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி, டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார், மாவட்ட குற்ற ஆவண பாதுகாப்பக துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் மற்றும் போலீசார் வந்தனர். அத்துடன் துணை ராணுவப்படையினர், ஆயுதப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதற்கிடையே இந்த கலவரத்தில் மண்டை உடைக்கப்பட்டவர்களை போலீசார் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அதுமட்டுமின்றி, மாவட்ட காவல் துறை ண்காணிப்பாளர் சசிமோகன், 2 தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து பேசிய தி.மு.க. பொறுப்பாளர் ஒருவர், தேர்திலில் தி.மு.க. வெற்றி 100 சதவீதம் உறுதி செய்து விட்டதால், சீமான் போன்றவர்கள் தேர்தலை நிறுத்த சதி செய்கிறார்கள். இதில் நமது தோழர்கள் காயம் அடைந்து உள்ளனர். ஆனால், தேர்தலை கருத்தில் கொண்டு நாம் அமைதியாக கலைந்து செல்வோம் என்று பேசினார். அதைத்தொடர்ந்து தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பின்னர் அந்த பகுதியில் போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் இருந்தனர். பொதுக்கூட்டம் முடிந்ததும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈரோடு அரசு ஆஸ்பத்திரி சென்று காயம்பட்ட கட்சியினரை பார்த்து ஆறுதல் கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.
இந்த திடீர் மோதலில் தி.மு.க. கட்சியின் மேட்டுப்பாளையம் நகர செயலாளர் முகமது யூனுஸ்(வயது 56) உள்பட 6பேரும், நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சென்னையை சேர்ந்த ரவிக்குமார், புதுக்கோட்டையை சேர்ந்த மதன் (22), விழுப்புரம் மாவட்டம் வளையபட்டு பகுதியை சேர்ந்த முத்துக்குமரன்(40), ஈரோட்டை சேர்ந்த இம்மானுவேல்(31) உள்பட 5 பேரும், தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் பணியாற்றும் திருவண்ணாமலை மாவட்டம் போலூர் பகுதியைசேர்ந்த போலீஸ் பிரபுதேவா(24), வேலூர் மாவட்டம் புத்தூர் பகுதியை சேர்ந்த போலீஸ் அன்புமணி(40), காட்பாடி லத்தேரி பகுதியை சேர்ந்த போலீஸ் நிஷாந்த்குமார் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். தி.மு.க - நாம்தமிழர்கள் தொண்டர்கள் 11 பேரும், போலீசார் 3 பேரும் உயிருக்கு ஆபத்து இன்றி நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த திடீர் கலவரம் ஈரோடு தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திங்கள், 20 பிப்ரவரி, 2023
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000..! எப்போது வழங்கப்படும் என முக்கிய அறிவிப்பை வெளியிட்ட உதயநிதி..!
ஜெயலலிதாவுக்கோ, உங்களை முதலமைச்சர் ஆக்கிய சசிகலாவிற்கோ, மக்களுக்கோ நீங்கள் உண்மையாக இல்லை. உங்கள் எஜமானர்கள் மோடி, அமித்ஷாவுக்கு மட்டுமே உண்மையாக இருக்கிறீர்கள் என எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார்.
எடப்பாடி பழனிசாமி அவர்களே 7 நாட்கள் ஷேவ் பண்ணாம இருந்தா எல்லாருக்கும்தான் மீசை வரும். பெரியார் மண்ணில் நின்று கொண்டு ஆண் பிள்ளையா? என்று கேட்கிறீர்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என பேசியுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, உதயநிதி பேசுகையில் அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக உங்களை சந்திக்க வந்திருக்கிறேன். கலைஞரின் பேரன், பெரியாரின் பேரனுக்கு வாக்கு கேட்டு வந்திருக்கின்றேன்.
கடந்த முறை 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகனை வெற்றி பெறச் செய்தீர்கள். இந்த முறை அவரது தந்தையை 1லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி மீசை வைத்த ஆம்பளயா, வேட்டி கட்டிய ஆண் பிள்ளையா என கேட்டார், 2016ம் ஆண்டு தலைமை செயலகத்தில் சிபிஐ சோதனை செய்தபோது, அவரது வாய்க்கு ஜிப்பாக அவரது மீசை மாறியது. கொடநாடு என்ற பேரைக் கேட்டாலே அவரது மீசை காதுகளை மூடிக்கொள்கிறது.
தூத்துக்குடியில் அப்பாவிகள் 13 பேரின் கழுத்தை நெரிக்க கயிறாக அவரது மீசை இருந்தது. இரு பெண்களின் கால் செருப்பிற்கு பாலீஸ் போடும் பிரஸ்ஸாக அவரது மீசை இருந்தது. எந்த பயனும் இல்லாத அந்த மீசையைத்தான் தமிழக மக்கள் மழுங்கடித்தனர்.
மேலும் திமுகவின் பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடர்பாக முக்கிய தகவலை வெளியிட்டார். பெண்கள் மனதில் உள்ள கோரிக்கை என்னவென்று எனக்கு தெரியும். குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் எப்போது வழங்கப்படும் என்பது தான். பெண்களுக்கான உரிமைத்தொகை அதிகபட்சமாக 5 மாதங்களுக்குள் வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுத்துள்ளாதக தெரிவித்தார்.
முழுமையான கிளிக் செய்யவும் ...
https://youtu.be/xka-bX4AOg4