சனி, 28 ஜனவரி, 2023

பவானிசாகர் அருகே கிரஷரில் படுத்துக் கொண்டிருந்த நாயை, சிறுத்தை தாக்கும் காட்சி சிசிடிவி யில் வெளியாகி உள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானை, கரடி, புலி, சிறுத்தை என ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் புலி, சிறுத்தைகள் விவசாய தோட்டத்தில் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டையாடி வருகின்றன. மேலும், சிறுத்தைகள் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராங்களில் புகுந்து கால்நடைகளை அடித்துக் கொல்வது தொடர்ந்து நடந்து வருகிறது. அதனைத்தொடர்ந்து, பவானிசாகர் வனப்பகுதியை ஒட்டி 10-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த குவாரிகள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் அவ்வப்போது கல்குவாரி உரிமையாளர்கள் வளர்த்து வரும் காவலுக்காக வளர்த்து வரும் நாயை வேட்டையாடி வருவதும், வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில், பவானிசாகர்-மேட்டுபாளையம் சாலையில் உள்ள அம்மாபாளையம் பகுதியில் இயங்கி வரும் தனியார் கிரஷரில் நேற்று இரவு 9.45 மணியளவில் சிறுத்தை ஒன்று நுழைந்தது. அப்போது அங்கு படுத்திருந்த நாயை பிடிப்பதற்காக சிறுத்தை துரத்தியது. சிறுத்தையை கண்ட நாய் வேகமாக ஓடி மயிரிழையில் உயிர் தப்பியது. சிறுத்தை நாயை துரத்திய காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்த இக்காட்சி அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: