வெள்ளி, 27 ஜனவரி, 2023

ஈரோடு வில்லரசம்பட்டியில் நள்ளிரவில் கோயிலிலுள்ள பொருட்களை மர்மநபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதனால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஈரோடு அடுத்த வில்லரசம்பட்டி பகுதியில் பழமை வாய்ந்த கருப்பண்ண சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தினமும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோயிலில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நுழைந்த மர்மநபர் ஒருவர் கோயிலின் முன்பு இருந்த வேல், ஊஞ்சல் உள்ளிட்ட உள்ளிட்ட கோயிலின் பொருட்களை சேதப்படுத்தியுள்ளார். இதனையடுத்து, அடுத்த நாள் அதிகாலையில் கோயிலுக்கு வந்த பூசாரி மற்றும் பொதுமக்கள் கோயிலின் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவே ஏராளமானோர் கோவில் முன்பு குவிந்தனர். அதனைத்தொடர்ந்து, வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கோயிலில் பொருத்திருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், கால்டாக்சியில் காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கோயிலின் பொருட்களை சேதப்படுத்திய காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனையடுத்து, சிசிடிவி காட்சிகளை வைத்து வேல் , ஊஞ்சல் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்திய மர்மநபர்கள் குறித்து, வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து கோயில் சிலையை சேதப்படுத்தியது யார்? என விசாரித்து வருகின்றனர். கோயில் பொருட்களை சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: