வெள்ளி, 27 ஜனவரி, 2023

பவானி நகராட்சியில் ரூபாய் 24.6 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டு திட்ட பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

ஈரோடு வடக்கு மாவட்டம் பவானி நகராட்சி 27 வார்டுகளிலும் அனைத்து வீடுகளுக்கும் சீரான குடிநீர் இணைப்பு வழங்கும் வகையிலும் நகர விரிவாக்கத்தை கருத்தில் கொண்டும் அம்ருத் 2.0 குடிநீர் மேம்பாட்டு திட்ட பணிகள் 24.6 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. குடிநீர் மேம்பாட்டு திட்ட பணிகளுக்கு என்.நல்லசிவம் அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில், பவானி நகர மன்ற தலைவர் சிந்தூரிஇளங்கோவன், நகர செயலாளர் நாகராஜன்‌, பவானி தெற்கு ஒன்றிய செயலாளர் துரைராஜ், நகர மன்ற துணைத்தலைவர், உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் மாதேஸ்வரன், பாலமுருகன், தங்கராஜ் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: