புதன், 21 டிசம்பர், 2022

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்த வட இந்தியர்களுக்கு சொந்தமான இரு குடோனுகளுக்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டி நடவடிக்கை ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி ..!

ஈரோடு மாநகராட்சி 2-வது மண்டலத்திற்குட்பட்ட கந்தசாமி 2வது வீதியில் வட இந்தியர்களுக்கு சொந்தமான இரண்டு குடோன்களில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பொதுமக்கள் தினந்தோறும் பயன்படுத்தும் அத்தியவசிய பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகள், சம்பந்தப்பட்ட குடோன்களுக்கு நேரில் ஆய்வு செய்வதற்காக சென்றனர். அப்போது அந்த குடோன்கள் பூட்டப்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் முன்னிலையில், குடோன்களை திறக்க வேண்டும் என்றுக்கூறி அந்த குடோன்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
மேலும், அறிவிப்பை மீறி குடோன்களை திறந்தால் கோர்ட்டு மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கை நோட்டீசும் குடோன்களின் கதவில் ஒட்டப்பட்டது. இந்த இரண்டு குடோன்களில் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குடோனுக்கு சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் வந்தவுடன் இந்தப் பொருட்களை பறிமுதல் செய்து அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: