பேருந்து நிறுத்தம், தெரு விளக்கு, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை ஏற்படுத்தி தர வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்த கிராம மக்கள்
ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்கராவிடம், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இச்சிப்பாளையம் திட்டப்பகுதி குடியிருப்போர் நலச்சங்க தலைவர் தீபா பொம்முராஜ், செலயாளர் ரங்கராஜ் மற்றும் பலர் மனு வழங்கி கூறுகையில்,
இச்சிப்பாளையம் பஞ்சாயத்தில், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டத்தில், 276 குடியிருப்புகள் கட்டப்பட்டது. அங்கு முழுமையாக வசிக்கிறோம்.
இக்குடியிருப்புக்கு பஞ்சாயத்தில் இருந்து தண்ணீர் வழங்கவில்லை. காவிரி ஆற்று குடிநீர், எங்களது குடியிருப்பில் இருந்து, 50 அடி துாரத்தில் செல்கிறது. அதில் இருந்து எங்கள் பகுதிக்கு இணைப்பு வழங்காமல் உள்ளனர். இக்குடியிருப்புக்கு பஸ் நிறுத்தம் இல்லாததால், க.ஒத்தகடைக்கு சென்று பஸ் ஏற வேண்டும். 2 கி.மீ., துாரம் சாலையில் நடந்து செல்ல வேண்டி உள்ளது. சிவகிரி செல்லும் கே–4, கே–1 ஆகியவை, எங்கள் குடியிருப்பு வழியாக செல்ல வசதி செய்து தர வேண்டும். பள்ளி, கல்லுாரிக்கு செல்வோர், வேலைக்கு செல்வோர் பாதிக்கின்றனர்.
பஸ் நிறுத்தம், மின் விளக்கு வசதி, குடிநீர் வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
0 coment rios: