மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 20ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திமுகவினர் மற்றும் ஏராளமானோர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று ஈரோடு தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் நினைவஞ்சலி செலுத்தும் விதமாக அவர் திருவுருவ படத்திற்கு திமுகவினர் ஏற்பாடு செய்திருந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு முரசொலி மாறன் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், ஈரோடு மாநகராட்சி துணை செல்வராஜ், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் கந்தசாமி, மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், மாவட்ட அவைத்தலைவர் குமார் முருகேஷ், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பிரகாஷ், மாவட்ட துணைச் செயலாளர் சின்னையன், மாவட்ட பொருளாளர் பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: