அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, நான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளராக உள்ளேன். கடந்த 26.11.2023-ம் தேதி அம்மாபேட்டை விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நடிகை குஷ்பு பத்திரிக்கையாளரின் சந்திப்பின் போது, “சேரி பிகேவியர்” எனக் குறிப்பிட்டு நடிகை மன்சூர் அலிகானை பேசியுள்ளார் என்று என்னிடம் கூறினார். அதன் சமூக ஊடகங்களை பார்த்த போது நடிகை குஷ்புவிடம் பத்திரிக்கையாளர் மன்சூர் அலிகானை பற்றி கேட்கும் போது, அவர் சேரிக்காரர் போல் பேசுகிறார் என்று பேசியுள்ளார்.
சேரி என்றால் பொதுவாக தலித் மக்கள் வாழும் பகுதியை குறிக்கும். அதன் அடிப்படையில் நடிகை குஷ்பு தலித் மக்களை ஏதோ தவறானவர்கள் போல் மேற்கோள் காட்டி பேசியுள்ளார். இவர் ஒட்டு மொத்த தலித் சமூகத்தை இழிவாக குறிப்பிட்டுள்ளார். பொது வெளியில் இப்படி பேசுவது ஒரு சாதியை இழிவாக சுட்டிக்காட்டுவது ஏற்புடையதல்ல. மேலும், நடிகை குஷ்புவின் செயலால் சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக சாதிய மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவே, நடிகை குஷ்பு மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நிகழ்வில் தெற்கு மாவட்ட செயலாளர் வி. கமலநாதன், மாநகர மாவட்ட செயலாளர் எஸ்எம்.சாதிக், ஆகியோர் முன்னிலை வகித்தனர் மற்றும் இளையராஜா,ரஞ்சித், ஆனந்தன், அரசாங்கம், மகிமை ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
0 coment rios: