புதன், 13 டிசம்பர், 2023

சத்தியமங்கலம் மனுநீதி நாள் முகாமில் ரூ.1.99 கோடியில் நலத்திட்ட உதவிகள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள திங்களூர் கேர்மாளம் ஊராட்சியில் ஐடேருத்ரசாமி கோவில் வளாகத்தில் மனுநீதி நாள் முகாம்  நடைபெற்றது. முகாமில் 236 பயனாளிகளுக்கு ரூ.1.99 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார். 
இம்முகாமில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சாந்தாமணி, தனித்துணை ஆட்சியர் ராஜகோபால், வேளாண்மை இணை இயக்குநர் வெங்கடாசலம், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் பழனிவேல், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கோதை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதைசெல்வி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தர்மராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் குமரேஷ், சத்தியமங்கலம் வட்டாட்சியர் மாரிமுத்து உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: