ஜேசிஐ ஈரோடு எக்ஸெல் சார்பில் நடைபெற்ற ஈரோடு அமைதி மாரத்தான் போட்டியில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்று உற்சாகமாக ஓடினர்.
ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியில் உள்ள வேளாளர் பொறியியல் கல்லூரியிலிருந்து, ஈரோடு ஜேசிஐ சார்பில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள், குழந்தைகள் பங்கேற்ற ஈரோடு அமைதி மாராத்தான் நடைபெற்றது.
இம்மாரத்தான் போட்டியில், பள்ளி மாணவ மாணவிகளுக்கும், குழந்தைகளுக்கும், மன அழத்ததை குறைத்து மன அமைதியை வலியுறுத்தும் விதமாகவும், உடற்பயிற்சியின்மை காரணமாக, உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது, உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த மாரத்தான் போட்டியில் பள்ளி குழந்தைகள் மூன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 2000த்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள், குழந்தைகள் என உற்சாகமாக பங்கேற்று ஓடினர்.
இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்று முதல் இடம், இரண்டாம் இடம், மூன்றாம் இடங்களை பிடித்த, பள்ளி மாணவ மாணவிகள், குழந்தைகளுக்கு சுழல் கோப்பை பதக்கங்கள் சான்றிதழ்கள் என வழங்கப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக, வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் எஸ் டி சந்திரசேகர், கொங்கு கல்வி நிலையம், மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் செல்வராஜ் போட்டிகளை கொடியசைத்து துவக்கி வைத்தனர், ஜேசிஐ ஈரோடு எக்ஸெல் தலைவர் ராஜேந்திர பிரசாத் உட்பட ஜேசிஐ ஈரோடு எக்செல் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இம்மாராத்தான் நிகழ்ச்சியை ஜேசிஐ முருகானந்தம் ஒருங்கிணைத்தார்.
0 coment rios: