ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே உள்ள கருக்குப்பாளையத்தைச் சேர்ந்தவர் 26 வயது பொறியியல் பட்டதாரி வாலிபர். இவர் வேலை கிடைக்காததால், தனது தந்தையுடன் சேர்ந்து தறிப்பட்டறை வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் ஆனது.
இவர், கடந்த 2021ம் ஆண்டு சென்னையில் தங்கியிருந்தபோது, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், அவர் சொந்த ஊருக்கு வந்துவிட்ட நிலையில், செல்போன் செயலி மூலமாக ஓரினச் சேர்க்கையாளர் ஒருவர் விஜயமங்கலம் பகுதியில் இருப்பதாக தகவல் வந்துள்ளது.
அதன்பேரில், விஜயமங்கலம் - கோவை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் அந்த நபர் காத்திருப்பதாக செயலி மூலம் 26 வயது வாலிபருக்கு லொக்கேஷன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்பேரில், கடந்த 22ம் தேதி மாலை அந்த பெட்ரோல் பங்க் அருகில் நின்றிருந்த காரில் காத்திருந்த நபரை 26 வயது வாலிபரை தொடர்பு கொண்டுள்ளார்.
அவர் காருக்குள் ஏறியதும், மேலும் 3 பேர் அதே காருக்குள் ஏறியுள்ளனர். இதனால், சந்தேகமடைந்த 26 வயது வாலிபர் காரில் இருந்து இறங்க முயற்சித்துள்ளார். அப்போது, காரில் இருந்த நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி, 26 வயது வாலிபர் வைத்திருந்த பணத்தை கொடுக்குமாறு கூறியதையடுத்து, அவர் அணிந்திருந்த 3 பவுன் செயின், 1 பவுன் மோதிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டனர்.
மேலும், இதுகுறித்து யாரிடமாவது கூறினால், நீ ஓரினச் சேர்க்கைக்கு எங்களை அழைத்தாய் என வெளியில் கூறி அசிங்கப்படுத்தி விடுவோம் என மிரட்டிவிட்டு, 26 வயது வாலிபரை இறக்கிவிட்டு சென்றுவிட்டனர். இதுகுறித்து, 26 வயது வாலிபர் அளித்த புகாரின் பேரில், பெருந்துறை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
இதில், திருப்பூர் டி.டி.பி. மில் ரோடு பகுதியைச் சேர்ந்த தினேஷ் (வயது 21), திருப்பூர் 15 வேலம்பாளையம், வினாயகர் கோயில் வீதியைச் சேர்ந்த நந்தகுமார் (வயது 21), 15 வேலம்பாளையம், நேரு வீதியைச் சேர்ந்த அங்குகுமார் (வயது 21), சேலம் மாவட்டம், தாரமங்கலம், வண்ணார் சந்து பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 28) ஆகிய 4 பேரும் 26 வயது வாலிபரிடம் நகையை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.
0 coment rios: