ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் தொழில் பேட்டையில் வெளியேற்று தொழிற்சாலைகளின் கழிவுகளை தடுப்பதற்காக கடந்த நான்கு மாதங்களாக சுற்றுவட்டார கிராமத்தின் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், பெருந்துறை சிப்காட் தொழில் பேட்டையில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலை எட்டு அடி ஆழத்தில் மண்ணில் குழாய் அமைத்து கழிவு நீரை வெளியேற்றியதை கடந்த 9ம் தேதி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கண்டுபிடித்தனர். அந்தக் கழிவு நீரை பரிசோதனை செய்தலில் உப்புத்தன்மை 1200 டிடிஎஸ் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து புகார் அளித்தும், சம்பந்தப்பட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து 9ம் தேதி இரவு சிப்காட் திட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, தொழிற்சாலையின் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக பெருந்துறை சிப்காட் கழிவு நீரால் பாதிக் கப்பட்டோர் மக்கள் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் அறிவித்து இருந்த நிலையில், குழாய் அமைத்து கழிவு நீரை வெளியேற்றிய தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், காவேரி குடிநீர் இணைப்பும் துண்டித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
0 coment rios: