புதன், 6 டிசம்பர், 2023

பாபர் மசூதி இடிப்பு தினம்: ஈரோட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6ம் தேதி ஆண்டுதோறும் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் சார்பில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை பாசிச எதிர்ப்பு தினமாக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கடைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் முஹம்மது லுக்மானுல் ஹக்கீம் தலைமை வகித்து, பாபர் மசூதி தகர்க்கப்பட்டதை கண்டித்தும், அயோத்தியில் பாபர் மசூதி இடித்துத் தள்ளப்பட்ட 1992 டிச.6 அன்று கறுப்பு தினத்தை நினைவுகூர்ந்து பேசினார். தொடர்ந்து, பாபர் மசூதியின் இடம் எங்கள் இடம் எனவும், தற்போது அயோத்தியில் ராமர் கோவிலை கட்டி வரும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயலாளர் அபூபக்கர் சித்திக், காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன், திக, திமுக, விடுதலை சிறுத்தை கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: