வியாழன், 28 டிசம்பர், 2023

தாளவாடி அருகே பட்டப்பகலில் கூட்டமாக உலா வரும் யானைகளால் விவசாயிகள் பீதி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இதில் குறிப்பாக யானைகள் அடிக்கடி உணவு, தண்ணீர் தேடி வனப்பகுதியையொட்டி வெளியேறி அருகே உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. இது தொடர் கதையாகி வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

இந்த நிலையில் ஜீர்கள்ளி வனச்சரகத்திக்கு உட்பட்ட தமிழக - கர்நாடக எல்லையில் அமைந்துள்ள அருள்வாடி கிராமத்திற்குள் நுழைந்த 17 யானைகள் அங்குள்ள விவசாய நிலங்களில் உலா வந்தன.

இதனால், அப்பகுதியை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விவசாயிகள் ஒன்று சேர்ந்து யானைகள் ஊருக்குள் புகாதவாறு 3 மணி நேரமாக போராடி மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

மேலும், கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம் அருள்வாடி கிராமத்தின் அருகே முகாமிட்டு சுற்றி வருவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: