செவ்வாய், 23 ஜனவரி, 2024

ஈரோட்டில் குளிர் காலத்திலும் இளநீர் விற்பனை ஜோர்: குடிநீர் விலையில் இளநீர்..!

ஈரோடு எல்லப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வேல்மணி. இளநீர் வியாபாரியான இவர், ஈரோடு மாவட்டத்தில் சத்தி, கோபி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் குத்தகைக்கு எடுத்துள்ள தென்னை தோப்பிலிருந்து இளநீர்களை இறக்கி தினமும் ஈரோடு - சத்தியமங்கலம் சாலையில் கனிராவுத்தர் குளம் பேருந்து நிறுத்தத்திற்கு முன்பே ரூ.10 ரூபாய், ரூ.15 ரூபாய் மற்றும் ரூ.20 என்ற விலைகளில் இளநீரை விற்பனை செய்து வருகிறார்.

உடலுக்கு ஆரோக்கியமான இளநீர் குடிநீர் பாட்டில்கள் விற்பனையாகும் விலைக்கு அதாவது, 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் ஆர்வத்துடன் அங்கேயே வாங்கி அருந்தியும், தண்ணீர் பாட்டில்களில் பார்சலாகவும் வாங்கி செல்கின்றனர்.  


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: