திங்கள், 12 பிப்ரவரி, 2024

தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக பெண் புகார்: நடவடிக்கை கோரி ஈரோடு ஆட்சியரிடம் மனு

ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் குமார். அவரது மனைவி அனுபல்லவி. இவர்களுக்கு திருமணமாகி 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதியன்று தாளவாடி அரசு மருத்துவமனையில், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்கிற முகாம் அரசு மருத்துவர்களால் நடத்தப்பட்டது.

என்னுடன் சேர்த்து எட்டு பேர் அன்று குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கபட்டிருந்தோம். அன்று மதிய நேரத்தில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சுய நினைவின்றி இருந்தேன். பின்னர் சுயநினைவு திரும்பி வந்தபோது கோவை தனியார் மருத்துவமனை அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டு, 25 நாள் தீவிர சிகிச்சை பிரிவு இருந்துள்ளதாகவும், பிறகுதான் அங்கிருந்து மருத்துவர்கள் எனக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்வதற்கு பதிலாக என்னுடைய இருதயத்துக்கு ரத்தம் செல்லும் குழாயை  துண்டித்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனால் எனக்கு அடிக்கடி ஜன்னி, மயக்கம் தொடர்ந்து வருவதுடன், இருதய நோய் பிரச்சனை ஏற்பட்டு தற்போது மருத்துவர்கள் எனது உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் பிரச்சனை ஏற்படலாம் என்று கூறியுள்ளனர். இதனால் தினமும் உடல் உறுப்புகளை சிதைத்து தினமும் உடல் உபாதைகளுடன் போராடிக் கொண்டு வருகிறேன்.

எனவே, தவறான அறுவை சிகிச்சை செய்த அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு எனக்கும் எனது குழந்தைகளுக்கும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தனது குடும்பத்துடன் இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் முகாமில், மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் மனு அளித்துள்ளார்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: