புதன், 20 மார்ச், 2024

ஈரோடு அருகே போர்வெல் லாரி உரிமையாளரிடம் ரூ.16.50 லட்சம் ரொக்கம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை

ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி பகுதியை சேர்ந்த கிருஷ்ணப்பாவின் மகன் சுரேந்தர் ( 51 ). போர்வெல் உரிமையாளர். இந்த நிலையில், இவர் இன்று காலை ஈரோடு மாவட்டம் லட்சுமிநகர் பேருந்து நிறுத்தம் அருகே தனது பொலிரோ காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, செந்தில்குமார் என்ற பறக்கும் படை அதிகாரி தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். தொடர்ந்து, சுரேந்தர் வாகனத்தையும் சோதனை செய்ததில், அவரது லாரி கட்டுமான பணிக்காக கொண்டுவரப்பட்ட 16 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: