திங்கள், 8 ஏப்ரல், 2024

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.4.63 கோடி பணம், பரிசு பொருட்கள் பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.4 கோடியே 63 லட்சத்து 93 ஆயிரத்து 140 ரூபாயை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர் ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன. தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்டறிந்து தடுப்பதற்காக தொகுதிக்கு தலா 3 பறக்கும்படை வீதம் 24 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு மட்டும் கூடுதலாக ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு மூன்று ஷிப்ட் வீதம், பறக்கும்படை, நிலை கண்காணிப்புக் குழுக்கள் முழு நேரமும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு, உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கைப்பற்றி வருகின்றனர்.

கடந்த மார்ச் 17ம் தேதி முதல் இன்று (ஏப்.8) திங்கட்கிழமை காலை வரை ஈரோடு கிழக்கு தொகுதியில் ரூ.80 லட்சத்து 45 ஆயிரத்து 407ம், ஈரோடு மேற்கு தொகுதியில் ரூ.84 லட்சத்து 19 ஆயிரத்து 890ம், மொடக்குறிச்சி தொகுதியில் ரூ.7 லட்சத்து 82 ஆயிரத்து 670ம், பெருந்துறை தொகுதியில் ரூ.28 லட்சத்து 7 ஆயிரத்து 880ம், பவானி தொகுதியில் ரூ.23 லட்சத்து 44 ஆயிரத்து 300ம், அந்தியூர் தொகுதியில் ரூ.7 லட்சத்து 74 ஆயிரத்து 350ம் பறிமுதல் செய்துள்ளனர்.

இதேபோல், கோபி தொகுதியில் ரூ.30 லட்சத்து 91 ஆயிரத்து 930ம், பவானிசாகர் தொகுதியில் ரூ.86 லட்சத்து 11 ஆயிரத்து 886ம் என 8 சட்டமன்ற தொகுதிகளில் 225 பேரிடம் ரொக்கப் பணமாக மொத்தம் ரூ.3 கோடியே 48 லட்சத்து 78 ஆயிரத்து 313 மற்றும் பொருட்களாக ரூ.1 கோடியே 15 லட்சத்து 14 ஆயிரத்து 827 ரூபாய் மதிப்பில் பறிமுதல் செய்துள்ளனர்.

இதில், 183 பேர் ரொக்கப் பணம் ரூ.2 கோடியே 21 லட்சத்து 57 ஆயிரத்து 955 ரூபாயை உரிய ஆவணங்களை காண்பித்து பெற்று சென்றனர். மீதமுள்ள 42 பேரின் ரூ.1 கோடியே 27 லட்சத்து 20 ஆயிரத்து 358 ரூபாய் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: