வியாழன், 23 மே, 2024

ஈரோடு மாநகராட்சி பகுதியில் நாளை (மே.25) குடிநீர் விநியோகம் நிறுத்தம்

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் வ.சிவகிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஈரோடு மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் வரதநல்லூர் ஊராட்சிக்கோட்டை தலைமை நீரேற்று நிலையத்தில் 25ம் தேதி (நாளை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே பணி நடைபெறும் சனிக்கிழமை ஒரு நாள் முழுவதும் குடிநீர் விநியோகம் செய்ய இயலாத நிலை உள்ளது. இந்த அசவுகரிய நிலையை ஈரோடு மாநகராட்சி பொதுமக்கள் பொறுத்துக்கொண்டு குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: