செவ்வாய், 11 ஜூன், 2024

கொடிவேரி தடுப்பணைக்கு 2 மாதங்களில் 1.90 லட்சம் பேர் வருகை

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த கொடிவேரியில் பவானி ஆற்றில் குறுக்கே கட்டப்பட்டுள்ளது கொடிவேரி தடுப்பணை. இந்த தடுப்பணையில் 15 அடி உயரத்தில் இருந்து அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், அதனை ரசிப்பதற்கும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
மேலும், இங்கு குளித்து மகிழ்வதோடு, அணையின் மேல் பகுதியில் பரிசல் பயணம் செய்தும், பூங்காவில் உற்சாகமாக விளையாடியும், கடற்கரை போன்ற மணற்பரப்பில் அமர்ந்து சுவையான மீன் வகைகளை சாப்பிடவும் உள்ளூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

கடந்த 2014 நவம்பர் முதல் தடுப்பணையில் குளிக்கவும், பூங்காவுக்கு செல்லவும், நீர்வளத்துறை சார்பில், ஒருவருக்கு ரூ.5 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் , கோடை விடுமுறையால் கடந்த 60 நாட்களில் சுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் தடுப்பணைக்கு வருகை தந்துள்ளனர். 

ஏப்ரல் மாதத்தில் 73 ஆயிரம் பேரும், மே மாதத்தில் 1 லட்சத்து 17 ஆயிரம் பேரும் வருகை புரிந்துள்ளனர். கடந்த 2 மாதங்களில் கொடிவேரி தடுப்பணைக்கு மொத்தம் 1.90 லட்சம் பேர் வருகை புரிந்ததால் ரூ.9 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: