வெள்ளி, 28 ஜூன், 2024

பவானிசாகர் அணை நீர்மட்டம் 64 அடியாக உயர்வு

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் முக்கிய நீராதாரங்களாக நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், மாயாறும் உள்ளன.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதனால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள காரணத்தால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது.

நேற்று (ஜூன்.28) வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 5,894 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (ஜூன்.29) சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 7,149 கன அடியாக அதிகரித்துள்ளது.

அதேபோல், அணையின் நீர்மட்டம் நேற்று காலை 62.44 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 64 அடியாக உயர்ந்தது. அதாவது, கடந்த 4 நாட்களில் 5.37 அடி வரை உயர்ந்துள்ளது. இதனால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும், அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 205 அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: