சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் தினம்... சேலத்தைச் சேர்ந்த சமூக சேவகர் விழிப்புணர்வு பிரச்சாரம்...
ஆண்டுதோறும் ஜூன் 26 சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி சேலத்தில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
குறிப்பாக சேலத்தைச் சேர்ந்த சமூக சேவகர் பார்த்தசாரதி என்கின்ற தனிநபரும் UTKARSH SMALL FINANCE BANK ஆகியோர் இணைந்து நடத்திய போதையில்லா இளைய தலைமுறையை உருவாக்கிடுவோம் என்ற நோக்கில் விழிப்புணர்வு பிரச்சார பயணம் சேலம் கோரிமேடு அருகே உள்ள அரசு மகளிர் கலைக்கல்லூரி அருகே தொடங்கியது. சேலத்தை சேர்ந்து சமூக சேவகர் பார்த்தசாரதி கொடிய செய்து துவக்கி வைத்து இந்த விழிப்புணர்வு வாகன பேரணியானது சேலம் மாநகரின் ஐந்து முக்கிய இடங்களில் அதாவது பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு வாகனம் நிறுத்தப்பட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கி போதைப் பொருட்களின் பயன்பாட்டை 100% முற்றிலும் ஒழித்திடுவோம் நம் ஆரோக்கியத்தையும் நம் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தையும் பேணி காப்போம் என பாதசாரிகள் அனைவருக்கும் துண்டு பிரசவங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்
.இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் குறித்து சமூக சேவகன் பார்த்தசாரதி நம்மிடையே கூறுகையில், சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமான இன்று இந்த பிரச்சார பயணத்தை துவக்கி உள்ளதாகவும், இது குறித்து பல்வேறு அமைப்புகளின் சார்பில் அறக்கட்ட விழிப்புணர்வு போராட்டங்கள் ஏற்பட்டு பட்டிருந்தாலுமே கூட ஒரு முயற்சியாக தங்களால் இதில் ஓரளவுக்கு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் இந்த பயணத்தை துவக்கி உள்ளதாகவும் போதை வஸ்துக்களை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் கூட ஆங்காங்கே வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி தமிழகத்திற்கு கொண்டுவரும் போதைப் பொருட்கள் ஆங்காங்கே அவ்வப்பொழுது பறிமுதல் செய்யப்பட்டு தான் வருகிறது என்றும் தமிழக அரசு முழு முனைப்புடன் செயல்பட்டு தமிழகத்தில் நூறு சதவிகிதம் போதை பொருள் பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
0 coment rios: