திங்கள், 24 ஜூன், 2024

பெருந்துறை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கத்திக்குத்து; தலைமறைவான கொலையாளியை தேடும் போலீஸ்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சீனாபுரம் அருகேயுள்ள பட்டக்காரன்பாளையம் இந்திராநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 30). இவரது மனைவியின் சகோதரர் விக்னேஷ் (வயது 25). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த திருமணமான கெளசல்யா (வயது 25) என்பவருக்கும் திருமணம் மீறிய தகாத உறவு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு விக்னேஷ் மற்றும் கெளசல்யா இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். இதனால், விக்னேஷ் மாமாவான கருப்புசாமிக்கும், கெளசல்யாவின் கணவர் தமிழ்ச்செல்வனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், தமிழ்ச்செல்வன் கருப்புசாமியை கத்தியால் மார்பு, தலையில் குத்தியுள்ளார்.

இதில், படுகாயமடைந்த கருப்புசாமியை சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அப்போது, அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர், இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பெருந்துறை போலீசார் உயிரிழந்த கருப்புசாமி உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்து விட்டு தப்பியோடிய தமிழ்ச்செல்வனை போலீசார் தேடி வருகின்றனர்

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: