செவ்வாய், 18 ஜூன், 2024

தமிழகம் முழுவதும் விரைவில் அரசு போக்குவரத்து கழக அலுவலகங்கள் முன்பு போராட்டம்..

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

அரசுப் போக்குவரத்து என்பது தமிழக அரசு துறை பொது நிறுவனமே என்பதை வலியுறுத்தி தமிழக முழுவதும் விரைவில் அரசு போக்குவரத்துக் கழக அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்..

இது குறித்து தமிழ்நாடு தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணை செயலாளர் சரசுராம் ரவி கூறுகையில்,  தமிழகத்தில் அரசுப் போக்குவரத்து என்பது தமிழக அரசு பொது துறை நிறுவனமே என்றும், தனியார் பேருந்துகளை அரசுடமை ஆக்கியது பொது  மக்களின் நலன் கருதி மேற்கொள்ளப்பட்டது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், பேருந்து மக்களின் அத்யாவசிய தேவை என்று கூறியவர், தமிழக அரசு போக்குவரத்தில் பலாயிரம் நிரந்தர  ஊழியர்கள் , தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் என்றும் இந்த அரசு போக்குவரத்து  தற்சமயம் ஒப்பந்த தொழிலாளர்களை குறைந்த  ஊதியத்திற்கு  பணி  அமர்த்த  தனியார் நிருவனத்திடம் ஒப்பந்த புள்ளி  கோரி உள்ளது கன்டிக்கதக்கது என்றார்.
மேலும் இதனால்  புதிய  நிரந்தர  ஊழியர்கள தேர்வு இனி இல்லை என்றும் அரசு போக்குவரத்து தனியார் வசப்படும் என்றதோடு, இவற்றை தமிழக அரசு மறு பரிசீலணை செய்ய வேண்டும் என்றார்.
அது மட்டுமல்லாமல் அரசுப் போக்குவரத்து  பொது துறையாகவே தொடர வேண்டும் என்று கூறியவர், தவறும் பட்சத்தில் தமிழக முழுவதும் அரசு  போக்குவரத்துக் கழக அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தமிழ்நாடு தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணை செயலாளர் சரசுராம் ரவி தெரிவித்தார்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: