அவரை அருகில் உள்ள முட்புதரில் தூக்கி சென்று வாயில் துணியை வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது ஆறுமுகம் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஆத்திரத்தில் அப்பகுதி மக்கள் ஆறுமுகத்துக்கு தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர், இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆறுமுகத்தை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பாதிக்கப்பட்ட அந்தப் பெண் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 coment rios: