வெள்ளி, 21 ஜூன், 2024

ஈரோடு மாவட்டத்தில் சாராய விற்பனை கட்டுபடுத்தப்பட்டு உள்ளது: எஸ்பி ஜவகர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கோட்டை மேட்டில் விஷ சாராயம் குடித்த 50 பேர் உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தை அடுத்து மாநிலம் முழுவதும் சாராய ஒழிப்பு நடவடிக்கை அரசு முடுக்கி விட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் சாராய வேட்டையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். தொடர்ந்து, சாராய தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் சாராய விற்பனை என்பது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த காலங்களில் எந்தெந்த பகுதிகளில் சாராயம் தொடர்பாக புகார்கள் எழுந்த பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், டாஸ்மாக் மதுக்கடைகளில் மொத்தமாக மது வாங்கி அதை சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு வெளியிடங்களில் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், கள்ளக்குறிச்சி சம்பவத்தை படுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: