ஞாயிறு, 30 ஜூன், 2024

சேலம் கன்ஸ்யூமர் வாய்ஸ் பவுண்டேஷன் சார்பில் முப்பெரும் விழா.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

நுகர்வோர் உரிமைகள் இயக்கம் மற்றும் பாரதி உரிமைகள் அறக்கட்டளை, CONSUMER VOICE FOUNDATION சார்பில் முப்பெரும் விழா நிகழ்ச்சி நடந்தது...

நிகழ்ச்சிக்கு அமைப்புகளின் நிறுவனர் பூபதி தலைமை வகித்தார்...
வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார்.. பாஸ்கரன் தீர்மானங்கள் வாசித்தார்...
சண்முக சுந்தரம் சேவை திட்டங்கள் குறித்து பேசினார்.. துணைத் தலைவர் செல்வம் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்...
ஹில் சிட்டி ரோட்டரி தலைவர்
 வழக்கறிஞர் அருள்விக்னேஷ்..
கவுரவா சிமெண்ட் நிர்வாக இயக்குனர் ஜெகன் மோகன்...கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தானம் தலைவர் வேணுகோபால் செட்டியார் முன்னிலை வகித்தனர்...
கீழடி அகழ்வாராய்ச்சி முன்ன்று நடத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் 
திரு அமர்நாத் ராமகிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஏற்படுத்த மஞ்சள் துணிப்பை வெளியிட்டார்...
அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு 40 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது...
நிகழ்ச்சியில் தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் பேசும் போது கடமையை செய்தால் முன்னேற்றம் கிடைக்கும்..ஊர் கூடி தேர் இழுப்பது போல அனைவரும் சேர்ந்தால் மட்டுமே பொதுச்சேவை செய்ய முடியும்..
விலங்குகள் மட்டுமே தனியாக வாழும்.. மனிதர்கள் சமூகமாக வாழ்கிறார்கள்..
குழந்தைகளை சுதந்திரமாக படிக்க வையுங்கள்...
முன்னோர்கள் விட்டு சென்றதை வரலாற்றாக பார்ப்பது தொல்லியல்....
தொல்லியல் என்பது மனிதன் விட்டுச்சென்ற வரலாற்றை ஆராய்வது..
இன்று கீழடி பேசப்படுகிறது மூத்த குடி தமிழ் தமிழர்கள் தான் என் என்பதற்கு ஆதாரம் கண்டனர் அதற்கு கீழடி பதில் சொல்லி உள்ளது..
இரும்பை கண்டுபிடித்தவன் தமிழர்கள் தான்..
மாணவர்கள் பெற்றோர்கள் சொல்பட்டி கேட்டு படித்து சிறந்த தலைமுறை உருவாக்க வேண்டும் 
ஏன் பேசினார்..
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..
தமிழகத்தில் சேவை பெரும் உரிமை சட்டத்தை அமல்படுத்தி அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்கள் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்..
பத்து ரூபாய் நாணயங்களை பெரும்பாலான கடைகளில் வாங்குவதில்லை அதை வாங்க வலியுறுத்த வேண்டும்....
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்...
சேலம் சீலநாயக்கன்பட்டியில் காலை மாலை நேரங்களில் இருக்கும் கடும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய வேண்டும்..
ஆடிட்டர் ராஜ பாலு நன்றி கூறினார்..
நிகழ்ச்சியில் அமைப்பு நிர்வாகிகள் பூபதி... மாதவன்...குழந்தைவேல்...மாது... மாதவன்.. மெய்யப்பன்..
அப்துல் சலாம்....
ஆடிட்டர் சரவணன்.. முருகவேல்.. திருமுருகன் பத்மநாபன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்..


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: