வெள்ளி, 21 ஜூன், 2024

தமிழக பாரத ரத்னா Dr. அம்பேத்கர் கட்டிட தொழிலாளர் நலச் சங்கத்திற்கு கிடைத்த வெற்றி.....

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தமிழக பாரத ரத்னா Dr. அம்பேத்கர் கட்டிடத் தொழிலாளர் நலச் சங்கத்திற்கு கிடைத்த வெற்றி. பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு இரண்டு மின் கம்பங்கள் அமைப்பு.. ஆதிதிராவிடர் பகுதி மக்கள் மகிழ்ச்சி...
 
சேலம் மாவட்டம் அயோத்தியபட்டினம் ஒன்றியம் பள்ளிப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட  ஆதிதிராவிடர் பகுதி கடைசி வீதியில், தெரு விளக்கு வசதி இல்லாமல் அப்பகுதி மக்கள் மூன்று நான்கு வருட காலமாக  வசித்து வசித்து வருகின்றனர்.
இந்த பிரச்சனை குறித்து  பஞ்சாயத்து தலைவர், செயலாளர் ( கிளர்க் ) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் மாவட்ட துணை ஆட்சியரிடமும்,  மின் கம்பம் அமைத்து தரக்கோரி பலமுறை மனு அளித்தோம்,  ஆனால் எந்த  நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
இந்த நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தித்து நீங்கள் எங்கள் புகார் மனு மீது நடவடிக்கை  எடுக்கப்படாமல் காலம் தாழ்த்த நினைத்தால்  உங்கள் அலுவலகத்தை விட்டு நான் வெளியேற  மாட்டேன் அன்று  அலுவலகத்துக்கு உள்ளேயே  தமிழக பாரத ரத்னா Dr. அம்பேத்கர் கட்டிட தொழிலாளர் நல சங்கத்தின் தலைவர் ராம்ஜி மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுடன் அமர்ந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். 
பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள், பள்ளிப்பட்டி பஞ்சாயத்து தலைவரிடம் தொலைபேசில் தொடர்பு கொண்டு  உடனடியாக  மின் கம்பங்களை அப் பகுதியில் நீங்கள் அமைத்து தர வேண்டும், இல்லையென்றால் உங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதின் அடிப்படையில், அவர்கள் ஒரு மாதம் இடைவெளி பின்  இன்று (21/06/24 ) காலை 11:00 மணிக்கு இரண்டு கம்பங்கள் பள்ளிப்பட்டி பஞ்சாயத்து ஆதிதிராவிடர் அப்பகுதியில் அமைத்துக் கொடுத்தனர். 
இது ஒரு தொடர் முயற்சிக்கு  கிடைத்த வெற்றி  
தமிழக பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர் கட்டிட 
தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் ராம்ஜி பெருமிதம் தெரிவித்தார். இதற்கு சம்பந்தப்பட்ட பகுதி ஆதிதிராவிடர் நல மக்கள் தங்களது நன்றியினையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: