சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
அரசு பள்ளிகளில் 100 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியரை தமிழக அரசு நியமிக்க வேண்டும் .....
உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர் சங்கம்கண்டன ஆர்ப்பாட்டம்.
அரசு பள்ளிகளில் 100 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியரை தமிழக அரசு நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை மைதானத்தில் சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் இளங்கோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் இலவச உடற்கல்வி பாட புத்தகம் விளையாட்டு சீருடை வழங்க வேண்டும்.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் தகுதி வாய்ந்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு உடற்கல்வி இயக்குனர் பணி வழங்க வேண்டும்.
உடற்கல்வி நிதியை தொடக்கப் பள்ளிகளுக்கு 25 ஆயிரம் உயர்நிலைப் பள்ளிகளுக்கு 50,000 மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஒரு லட்சம் என ஒதுக்கீடு செய்து தனி நிதியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயலாளர் எம். மாயகிருஷ்ணன் உள்ளிட்டு சேலம் நாமக்கல் ஈரோடு தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கங்கள் பங்கேற்றனர்.
0 coment rios: