திங்கள், 8 ஜூலை, 2024

பவானி அருகே லட்சுமிநகரில் மேம்பாலம் அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

பவானி அருகே தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமிநகரில் மேம்பாலம் அமைக்க வேண்டும் பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் 
தேசிய நெடுஞ்சாலையில், ஈரோடு மாவட்டம் லட்சுமிநகர் அருகே மேம்பாலம் அமைக்க வேண்டும் என விஜயகுமார் தலைமையில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைகளில் பதாதைகளை ஏந்தியவாறு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் முதல் கோவை தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமிநகர் பகுதியில் மேம்பாலம் அமைப்பது தொடர்பாக நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாவதோடு, விபத்துக்களும் அதிக அளவில் நடந்துவருகிறது.

ஆகவே பொதுமக்கள் ஆகிய நாம் நம் உயிர் காக்க மத்திய மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பொதுமக்கள் விவசாயிகள் பல்வேறு அமைப்பினர் என 500க்கும் மேற்ப்பட்டோர் திரண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கைகளில் பலதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அந்தப் பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். இதனால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: