அப்போது, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து ஆம்புலன்ஸ் மூலம் தலைமை காவலர் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர். விபத்தில், உயிரிழந்த தலைமை காவலர் குமாருக்கு பவித்ரா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
0 coment rios: