திங்கள், 8 ஜூலை, 2024

ஈரோட்டில் ஓடும் பேருந்தில் செல்போன், ஐபேடு திருடிய இளைஞர் கைது

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த சிவகிரி பட்டேல் வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 36). பெங்களூரு கல்லூரி பேராசிரியர். இவர் நேற்று காலை சிவகிரியில் இருந்து ஈரோட்டிற்கு தனியார் நகர பேருந்தில் வந்தார்.

ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் இறங்கியபோது அவர் வைத்திருந்த கைப்பையை காணவில்லை. அதில், செல்போன், ஐபேடு ஆகியவை வைத்திருந்தார். பின்னர், இதுகுறித்து கிருஷ்ணகுமார் கொடுத்த புகாரின்பேரில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கொடுமுடி கறிக்கடை வீதியை சேர்ந்த ரங்கராவின் மகன் ராமசந்திரன் (வயது 20) என்பவர் ஓடும் பேருந்தில் இருந்து அந்த பையை திருடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, ராமசந்திரனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து செல்போன், ஐபேடு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

பின்னர், ராமசந்திரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: