திங்கள், 1 ஜூலை, 2024

முப்பெரும் குற்றவியல் சட்டங்கள் விவகாரம். இன்று முதல் ஐந்து நாட்களுக்கு நீதிமன்ற பணிகளில் இருந்து விலகப் போவதாக சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர whatsapp செயற்குழு கான்பரன்ஸ் கூட்டத்தில் முடிவு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

முப்பெரும் குற்றவியல் சட்டத்திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி இன்று முதல் 5  நாட்களுக்கு சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளில் இருந்து விலகல்.

இந்திய அரசு கொண்டுவந்துள்ள முப்பெரும் குற்றவியல் சட்டங்களில் சில மாற்றங்கள் செய்து இந்தி திணிப்பையும் மேற்கொண்டுள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதும் ஆங்காங்கே வழக்கறிஞர்கள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தில் உள்ள நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் மற்றும்  உறுப்பினர்கள் அனைவரும் நீதிமன்ற பணிகளில் இருந்து கடந்த ஜூன் 27ம் தேதிவிலகிக் கொள்ளலாம் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த ஜூன் 26ம் தேதி இரவு ஆல் இந்தியா பார் கவுன்சில் ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்திய அரசு கொண்டுவந்துள்ள முப்பெரும் குற்றவியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்ட திருத்தங்களை திரும்பப் பெறுவதற்கு உண்டான முன் முயற்சியை ஆல் இந்தியா பார் கவுன்சில் முன்னெடுக்கும் என்ற என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில், சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க அவசர செயற்குழு கூட்டம் அந்த சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் இமயவரம்பன் தலைமையில் கூடிய அவசர பொதுக்குழு கூட்ட முடிவின்படி, சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் நீதிமன்ற பணிகளுக்கு கடந்த 27-6-24 பணிக்கு திரும்பினார்.
 
இந்த நிலையில், சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க அவசர செயற்குழு வாட்ஸ் அப் கான்ப்ரன்ஸ் வாயிலாக நேற்று 1-7-24 இரவு 10 மணிக்கு நடைபெற்றது. சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் இமயவரம்பன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் 11 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கான்பரன்ஸ் கூட்டத்தில்  2-7-24 ம் தேதி முதல் 6-7-24 ம் தேதி வரை நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்கிற கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் 2-7-24 முதல் 6-7-24 ம் தேதி வரை நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி இருக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும்,  அனைத்து உறுப்பினர்களும் 2-7-24 முதல் 6-7-24ம் தேதி வரை  நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி இருக்க வேண்டுகிறோம் என அந்த சங்கத்தின் தலைவர் இமயவரம்பன் கேட்டுக் கொண்டுள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: