சனி, 17 ஆகஸ்ட், 2024

சேலம் மாவட்ட வனத்துறையில் எழுந்துள்ள சாதிய வன்கொடுமைகள் குறித்து முதன்மை வன பாதுகாப்பு அதிகாரி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

 
சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் மாவட்டம்- வன துறையில் எழந்துள்ள சாதிய வன் கொடுமைகளை தடுக்க வேண்டும், அதிகார துஷ்பிரயோகத்தை முதன்மை வன பாதுகாப்பு அதிகாரி ( Principal Chief Conservator of Forest - Cjennai ,) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.*....... *தமிழ்நாடு மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை SC / ST ஊழியர்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு வலியுறுத்தல்.

தமிழ்நாடு மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை SC / ST ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சரஸ்ராம் ரவி வனத்துறை அதிகாரிகளுக்கு எதிராக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில், 
சேலம் வன துறையில் பணியாற்றும் SC/ ST ஊழியர்களுக்கு பதுகாப்பு இல்லை. குறிப்பாக பட்டியலின பெண் ஊழியர்களுக்கு கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருவது ஏற்புடையதல்ல. இங்கு பணியாற்றி வரும் பெண் ஊழியர் திருமதி. விழியரசி என்கிற பட்டியலின பெண் ஊழியருக்கு இங்கு பணியாற்றி வரும் மீனா ( Forester) மற்றும் இதர சாதி இந்து காவலர்கள் , அதிகாரிகள் கடந்த ஒரு வருடமாக மிகுந்த தொல்லை கொடுத்தும், சாதிய  வன்கொடுமையும் செய்து வருவதாக புகார் அளித்துள்ளார். இந்த பெண் ஊழியர்  வன்கொடுமை  குறித்து மேல் நிலை அதிகாரிகள் அறிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஆச்சரியபட வைக்கின்றது. பணி புரியும் இடத்தில் பெண் ஊரியர்களுக்கு பாதிப்பு, வன்கொடுமை, தொல்லை கொடுப்பது சட்டபடி  குற்றம். மாநில பெண்கள் ஆணையம் விசாரணைக்கு உட்பட்டது.இதைவிட பெரிய கொடுமை.
பாதிக்கபட்ட பெண் பட்டியலின ஊழியர் திருமதி . விழியரசி ( காவலர் ) நமது உழியர்கள் கூட்டமைப்பில் புகார் அளித்த வகையில் இந்த பெண் வன்கொடுமை, சாதிய வன்கொடுமை குறித்து கடந்த 14-08-2024 நாளில் சம்மந்தபட்ட உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு புகார் கடிதம் அளிக்கபட்டது. முதற்கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில்  பாதிக்கபட்ட பெண் பட்டியலின ஊழியர் கயல்விழிக்கு இடம் மாற்றம் அளிக்கபட்டுள்ளது என்பது கொடுமை. குற்றம் சாட்டபட்ட அதிகாரிகள், ஊழியர்கள் மீது இதுவரை நடவடிக்கைகள் இல்லை என்பது உயர் அதிகாரிகளின்( DFO/ CF) மீது நம்பிக்கை இழக்கபடுகின்றது. சேலம் மாவட்டம்- வன துறையில் எழந்துள்ள சாதிய வன் கொடுமைகளை தடுக்க வேண்டும், அதிகார துஷ்பிரயோகத்தை முதன்மை வன பாதுகாப்பு அதிகாரி ( Principal Chief Conservator of Forest - Cjennai ,) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பாதிக்கபட்ட பட்டியலின ஊழியர்  திருமதி. விழியரசிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இதனை கண்டிக்கும் விதமாக இந்த குற்றச்சாட்டில் ஈடுபட்ட அனைத்து சேலம்  வன துறை அதிகாரிகள்,/  ஊழியர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அனைவரையும் உடனடியாக இடம் மாற்றம் அல்லது தற்காலிக பணி நீக்கம் செய்து பிறகு விசாரணை செய்யபட வேண்டும். விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வன துறை மாவட்ட அலுவலகம் முன்பு நமது கூட்டமைப்பு  சார்பாகவும்   பல்வேறு கூட்டு நடவடிக்கை குழவும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட தீர்மானிக்கபட்டுள்ளது என்றும் சரஸ்ராம் ரவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: