ஈரோட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தந்தை, தாய் மற்றும் தாயின் கள்ளக்காதலன் ஆகிய மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் சோழசிராமணி அருகே உள்ள சித்தம்பூண்டி பகுதியை சேர்ந்தவ ரிக் வண்டி தொழிலாளி. இவருக்கும். ஈரோடு பகுதியை சேர்ந்த 36 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. அந்த பெண்ணுக்கு 16 வயதில் மகள் உள்ளார்.
அந்த பெண்ணின் வீட்டிற்கு செல்லும்போது மகளிடம் பழகி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதை அந்த பெண்ணும், அவரது கணவரும் கண்டிக்கவில்லை. மாறாக சிறுமியின் தந்தையும் பெற்ற மகள் என்றுகூட பாராமல் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இவர்களின் பாலியல் தொல்லையை தாங்க முடியாத சிறுமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஈரோடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, சிறுமியின் தந்தை, தாயின் கள்ளக்காதலன் உடந்தையாக இருந்த தாய் ஆகிய 3 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி மீட்கப்பட்டு, ஈரோடு கொள்ளுக்காட்டு மேட்டில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
0 coment rios: