இந்நிலையில், நேற்று (27ம் தேதி) இரவு தனது வீட்டின் அருகே உள்ள ஆட்டுப்பட்டியில் ஆடுகளை கட்டி வைத்திருந்தார். இன்று (28ம் தேதி) காலை சென்று பார்த்தபோது, ஆடுகள் அனைத்தும் கழுத்துப் பகுதியில் காயத்துடன் உயிரிழந்து கிடந்தன.
மேலும், அருகில் உள்ள விஜயகுமார், பாப்பாத்தி ஆகியோரின் 2 ஆடுகளும் கழுத்துப் பகுதியில் காயத்துடன் உயிரிழந்து கிடந்தது. இதனால், அந்த பகுதி பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதுகுறித்து சிறுவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த போலீசார், கிராம நிர்வாக அலுவலர் சக்திவேலுக்கும், கொளப்பலூர் கால்நடை மருத்துவர் மணிவண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
தொடர்ந்து, இதுகுறித்து டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 coment rios: