சேலம்.
S.K.சுரேஷ்பாபு.
சேலம் கஞ்சமலையை பசுமை சோலையாக மாற்றவும், தமிழகத்தில் பெய்து வரும் கனமழை வெள்ளத்தில் இருந்து சேலம் மாவட்டம் உட்பட தமிழக மக்களை காத்திடவும், சேலம் சித்தர் கோவிலில் மேல் சித்தர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் விதைப்பந்துகள் விதைக்கும் நிகழ்ச்சி. சில மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் பங்கேற்பு.
சேலம் சித்தர் கோவில் என்பது பழமையான மற்றும் சித்தர்கள் வாழ்ந்து வரும் பகுதியாகும். கஞ்சமலையின் அடிவாரத்தில் சித்தேஸ்வர ஸ்வாமியின் திருக்கோவில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் அதிகபட்சமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள். இந்தத் திருக்கோவிலை அமாவாசை திருக்கோவில் என்றும் அழைப்பார்கள். கஞ்சமலையில் மூலிகை மரங்கள் வாசனை மரங்கள் அதிக அளவில் வளர்கின்றது. மேலும் கஞ்சமலையை இன்னும் பசுமையாக மாற்றும் வகையில், சில மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் முயற்சியில், 5000 நாட்டு விதை பந்துகள் தயார் செய்து, நடவு செய்து மேலும் கஞ்சமலையை பசுமையாக்கும் முயற்சியில் சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் ஈடுபட்டதுடன் தமிழகத்தில் தற்பொழுது பெய்து வரும் கனமழை வெள்ளத்திலிருந்து சேலம் மாவட்டம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்களை காத்திட வேண்டி, சேலம் கஞ்சமலை மேல் சித்தர் கோவிலில் சிறப்பு பூஜை மேற்கொள்ளப்பட்டது.
சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சேலம் வடக்கு தொகுதி பாமக நிர்வாகிகள், முருகேசன் அசோக்குமார் அறிவழகன் குணசேகரன் சுசீந்திரன் பழனிச்சாமி மோகன்ராஜ் பிரவீன் தமிழரசன் விஜி பூபதி உள்ளிட்ட நூல்50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் டார்ச் லைட் மற்றும் ஜெர்கின் எடுத்து வர அறிவுறுத்தப்பட்டு அனைவரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 coment rios: