வெள்ளி, 4 அக்டோபர், 2024

ஈரோட்டில் சிறுமியை கர்ப்பமாக்கிய பூக்கடை உரிமையாளர் போக்சோவில் கைது

ஈரோடு மரப்பாலம், வள்ளுவர் வீதியைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (32). பூக்கடைக்காரர். அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. 
இந்நிலையில் ரகுமான் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்றனர். அப்போது பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. 

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி அப்துல் ரகுமான் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அப்துல் ரகுமான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: