புதன், 9 அக்டோபர், 2024

ஈரோடு கூட்டுறவு சங்கங்களில் விற்பனையாளர், கட்டுநர் பணி: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளில் 90 விற்பனையாளர், 9 கட்டுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம், நியமிக்கப்பட உள்ளன.

மாவட்ட ஆள் சேர்ப்பு மையம், அதற்கான அறிவிப்பை இன்று (9ம் தேதி) வெளியிட்டுள்ள நிலையில், விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து https://drberd.in/ என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலமாக வரும் நவம்பர் 7ம் தேதி 5.45 மணி வரை பதிவு செய்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனையாளர், கட்டுநர் பணி முறையே, பொதுப் பிரிவில் 27,3 பிற்படுத்தப்பட்டோர் 23,2, இஸ்லாமியர் 3,0, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 19,2, ஆதிதிராவிடர் 14,2, அருந்ததியர் 3,0, பழங்குடியினர்‌ 1,0 என்ற அளவில் தேர்வு செய்யப்படுகின்றனர். பொதுப் பிரிவு வயது 32க்குள், மற்ற பிரிவுக்கு வயது வரம்பு கிடையாது.

மேலும், கல்வி தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு, விண்ணப்பக் கட்டணம் மற்றும் விண்ணப்பித்தல் தொடர்பான விவரங்களுக்கு https://drberd.in/ என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: