சனி, 9 நவம்பர், 2024

பெருந்துறை, கோபியில் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் ஆய்வு

பெருந்துறை மற்றும் கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் செயல்பட்டு வரும் உணவு, பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் லால்வேனா இன்று (நவ.9) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் செயல்பட்டு வரும் உணவு, பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களில், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் மாநில ஆணையாளர் லால்வேனா இன்று (சனிக்கிழமை) நேரில் சென்று, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, பெருந்துறை பகுதியில் செயல்பட்டு வரும் பால் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு நிறுவனம், மற்றும் மருந்து சாதனங்கள் (மருத்துவ கையுறைகள்) தொடர்பான தயாரிப்பு நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, கோபிசெட்டிபாளையம், கொளப்பலூரில் செயல்பட்டு வரும் மருந்து சாதனங்கள் (மருந்து ஊசிகள்) தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றில் ஆய்வு கொண்டார். இதனையடுத்து, ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை, மற்றும் உதவி இயக்குநர் மருந்து கட்டுப்பாட்டு துறை அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டு, பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது, இணை இயக்குநர் (மருந்து கட்டுப்பாடுத் துறை) கார்த்திகேயன், உதவி இயக்குநர் ராம்பிரபு, மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.தங்க விக்னேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: