வியாழன், 14 நவம்பர், 2024

சேலத்தில் அனைத்து இந்திய தொழிலாளர் கட்சியின் நிர்வாக குழு கூட்டம்

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தில் அனைத்து இந்திய தொழிலாளர் கட்சியின் நிர்வாக குழு கூட்டம் 

சேலத்தில் அனைத்து இந்திய தொழிலாளர் கட்சியின் நிர்வாக குழு கூட்டம் மற்றும் பொறுப்பாளர்களுக்கான நியமனச் சான்றிதழ் வழங்கும் விழா குரங்கு சாவடி அருகில் உள்ள சேலம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் தேசிய பொதுச்செயலாளர்.கே.எஸ். பொங்காளியார், தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பேசிய அவர் அனைத்து இந்திய தொழிலாளர் கட்சியின் விவசாயம் மேம்படுத்துதல் நெசவுத்தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் அனைத்து தொழிலாளர்கள் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் ஆகியோர் கல்வி பொருளாதாரம் மேம்படுத்துதல் இந்திய இறையாண்மைக்கு கட்டுப்பட்டு இந்திய நாட்டு ஒற்றுமையை பேணிக் காத்தல் சாதி மத இன பாகுபாடு இன்றி அனைத்து மக்களின் மேம்பாட்டுக்காக பாடுபடவேண்டும் என்றும் இது தவிர முக்கிய 10 முக்கிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சேலம் மாவட்ட செயலாளர். மணிகண்டன், மற்றும் குமார், கலந்து கொண்டனர்.
உடன் தேசிய துணைத் தலைவர்.எஸ். ஏகாம்பரம், வரவேற்புரை ஆற்றினார், முன்னதாக தேசிய அவைத் தலைவர். நேதாஜி  கே.நடேச கவுண்டர், கட்சியின் கொடியை  ஏற்றி வைத்தார் கட்சியின் தேசிய தலைவர்.பி. சிவக்குமார் மற்றும் தேசிய பொருளாளர் எஸ் மனோகரன், ஆகியோர் இக்கூட்டத்துக்கு முன்னிலை வகித்தனர், இக்கூட்டத்துக்கு தேசிய இணைச் செயலாளர்.காஞ்சி சி.குப்புசாமி,மற்றும் மாநில துணைத்தலைவர். நடராஜன், சிறப்புரையாற்றினர்  கூட்டத்தின் இறுதியில் மாநிலத் துணைச் செயலாளர்.ஈ.பி.ராஜ்,நன்றி உரையாற்றினார், இக்கூட்டத்திற்கு ஏராளமான மாநில மாவட்ட பிரதிநிதிகள் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: